Jump to content

என் இனத்தின் சில மனிதங்கள்.....


Recommended Posts

புகழ்வது என்பது எங்கேயும் கிடையாது.

-2009 வரை புலிகள் மக்களுக்காக போராடினார்கள் அதனடிப்படையில் அவர்களை ஆதரித்து எழுதினேன்.

- மோசமான அழிவுகளும் அடிமை வாழ்வும் மிஞ்சிய பின் எமக்குள் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது குறித்து எழுதுகின்றேன்

-தற்போதைய நிலையில் மக்கள் இருப்பு ஒன்றே போராட்டம் என்னும் போது மக்கள் அபிவிருத்திகள் பால் யார் முன்னிலையோ அவர்கள் செயல்களை ஆதரித்து எழுதுகின்றேன்

-நாளை இன் நிலையிலும் கருத்திலும் மாற்றம் ஏற்படலாம். காலம் மாறுகின்றது அரசியல் சூழல் மாறுகின்றது எனது கருத்தும் ஆதரவு நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். இது தவிர்க்க முடியாதது. இதில் தவறு என்று எதுவும் நான் உணரவில்லை. கருணா பிள்ளையான் டக்களஸ் போன்ற பல்வேறு முரண்ட்டவகளையும் தமிழர் என்ற வரையறைக்குள் அணுகும் எனக்கு இந்த இனத்துக்காக தியாகம் செய்தவர்கள் குறித்த அணுகுமுறையில் தனித்துவமாக இருக்க முடியும். எதிர்மறைக்கருத்துக்களுக்கும் முரண்பாடுகளுக்கும் எல்லா நேரமும் ஒரே அர்த்தம் இருப்பதில்லை. நோக்கங்கள் சார்ந்து அது வேறுபடும்.

சரி.புலிகளின் குறைபாடுகளை அடிக்கடி கூறும் நீங்கள் காலத்துக்கு ஏற்றால் போல் மாற வேண்டும் என கூறும் நீங்கள் டக்ளஸ் , ஏனியோர் செய்ய்யும் தவறுகள் பற்றி ஒரு வரி கூட எழுதுவதில்லை, விமர்சிப்பதில்லை.இது தான் உங்களின் காலத்துக்கு ஏற்ற விமர்சனமா??

Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply

தாயாக மக்கள் அன்றாட வாழ்விற்கே கடினப்படும் நிலை இன்றும் உள்ளது என்றால் அதற்கும் புலம்பெயர் மக்களின் பணம் தான் தேவை என்றால் முதலில் டக்ளசையும் மகிந்தாவையும் அகற்றி கூட்டமைப்பு சுதந்திர மக்களாட்சியை நடாத்தட்டும்.

 

என்ன இளவு இது?

உளது என்றால் ? அப்படித்தான் உள்ளது இது தெரியாதா?

பணம் தேவை என்றால்? தேவையில்லையா?

கூட்டமைப்பு மக்களாட்சியை நடத்தட்டும் என்றால் ஏதோ கூட்டமைப்பு வேண்டுமென்று அப்படிச் செய்யாமல் இருப்பது போல் அல்லவா உங்கள் கருத்து இருக்கின்றது. கட்சி வேறுபாடின்றி இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் சிங்கத்தின் பிடிக்குள் இருக்கும் முயல்கள். உங்கள் கருத்து எப்படி இருக்கின்றது என்றால் முயல் எப்படியாவது சிங்கத்தை பேக்காட்டி கிணற்றுக்குள் தள்ளிவிடவேண்டும் என்பது போல் உள்ளது. இந்த மனநிலைக்காகத்தான் சிங்களவன் மோட்டுச் சிங்களவன் அல்ல மாறாக ராஜதந்திரம் மிக்கவன் என்று எழுதுகின்றேன்.

 

தற்போதைய சூழ்நிலையில் சிங்களவனை முற்றாக நிராகரித்து தமிழர்களை அணுக முடியாது. அதேநேரம் சிங்களவர்களின் அடக்குமுறையை ஏற்கவும் முடியாது. முதன்மையானது மக்கள் அபிவிருத்திக்கு உதவுவது இரண்டாவது சிங்களவர்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடுவது. இது இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும் திறன் தமிழர்களிடம் அறவே இல்லை.

 

அரசின் பிடிக்குள் இருப்பவர்கள் ஊடாக மக்களுக்கு உதவினால் அவர் துரோகியாக்கப்படுகின்றார். மக்களுக்கு சென்றடையும் உதவியை விட துரோகியக்கி மக்கள் உதவியை தடுப்பதில் குறியாய் நிற்கின்றனர்.

 

கூட்டமைப்பு அரசுக்கு அப்பற்பட்டு புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்தால் அவர்கள் இலங்கை அரசுக்கு துரோகியாகி இல்லாமல் போகும் அபாயம்.

 

எப்படிப்பார்த்தாலும் அமைச்சர் தேவானந்தா சூழ்நிலை சார்ந்து முக்கியமாகின்றார். வேறு எந்த தெரிவையும் அதி தேசீயவாதிகள் விட்டுவைப்பதாக இல்லை.

Link to comment
Share on other sites

என்ன இளவு இது?

உளது என்றால் ? அப்படித்தான் உள்ளது இது தெரியாதா?

பணம் தேவை என்றால்? தேவையில்லையா?

கூட்டமைப்பு மக்களாட்சியை நடத்தட்டும் என்றால் ஏதோ கூட்டமைப்பு வேண்டுமென்று அப்படிச் செய்யாமல் இருப்பது போல் அல்லவா உங்கள் கருத்து இருக்கின்றது. கட்சி வேறுபாடின்றி இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் சிங்கத்தின் பிடிக்குள் இருக்கும் முயல்கள். உங்கள் கருத்து எப்படி இருக்கின்றது என்றால் முயல் எப்படியாவது சிங்கத்தை பேக்காட்டி கிணற்றுக்குள் தள்ளிவிடவேண்டும் என்பது போல் உள்ளது. இந்த மனநிலைக்காகத்தான் சிங்களவன் மோட்டுச் சிங்களவன் அல்ல மாறாக ராஜதந்திரம் மிக்கவன் என்று எழுதுகின்றேன்.

 

தற்போதைய சூழ்நிலையில் சிங்களவனை முற்றாக நிராகரித்து தமிழர்களை அணுக முடியாது. அதேநேரம் சிங்களவர்களின் அடக்குமுறையை ஏற்கவும் முடியாது. முதன்மையானது மக்கள் அபிவிருத்திக்கு உதவுவது இரண்டாவது சிங்களவர்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடுவது. இது இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும் திறன் தமிழர்களிடம் அறவே இல்லை.

 

அரசின் பிடிக்குள் இருப்பவர்கள் ஊடாக மக்களுக்கு உதவினால் அவர் துரோகியாக்கப்படுகின்றார். மக்களுக்கு சென்றடையும் உதவியை விட துரோகியக்கி மக்கள் உதவியை தடுப்பதில் குறியாய் நிற்கின்றனர்.

 

கூட்டமைப்பு அரசுக்கு அப்பற்பட்டு புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்தால் அவர்கள் இலங்கை அரசுக்கு துரோகியாகி இல்லாமல் போகும் அபாயம்.

 

எப்படிப்பார்த்தாலும் அமைச்சர் தேவானந்தா சூழ்நிலை சார்ந்து முக்கியமாகின்றார். வேறு எந்த தெரிவையும் அதி தேசீயவாதிகள் விட்டுவைப்பதாக இல்லை.

 

எமது மக்கள் என்னத்தை கேட்கிறார்கள், நீச்சல் தடாகத்தையா? இல்லை இரயில் சேவையையா? இல்லை புது புது வீதிகளையா?

 

கேட்பது அடிப்படை சுதந்திரம். சொந்த மண்ணில் வீட்டில் நிம்மதியாக இருக்க, சொந்த நிலத்தில் தொழில் செய்ய, சுதந்திரமாக திரிய.

 

ஏன் இந்த அவலத்தை வெளியில் ஆதாரத்துடன் சொல்லியும் எதிர்பார்த்த வெற்றிகள் இல்லை?

 

ஒரு காரணம் டக்ளஸ் போன்ற ஒட்டுண்ணிகள் அவர்கள் வால்கள். அவர்கள், தமிழர்கள், அங்கே எல்லாம் நன்றாக இருக்கின்றது என கூறும்பொழுது தாயகத்தில் நடக்கும் அவலங்களை பட்டியல் இடுபவர்கள் மட்டுமல்ல தாயக  மக்களும் ஏமாற்றப்படுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும்  டக்லசு  அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டவரல்ல.

வெறுக்கப்படுபவர்.

 

7 வோட்டில் மந்திரியாகி உலக அதிசயத்தில் இடம் பிடித்தவர்

அவர் ஆளும் ஊரின் மைந்தன் நான்.

ஒரு நத்தை கூட நகரமுடியாது அவர் அனுமதியின்றி.

Link to comment
Share on other sites

சண்டமாருதன்,

தமிழர் பகுதிகளில் தமிழர் ஏற்காத டக்ளஸ் + மகிந்தா ஆட்சி தான் நடக்கவேண்டும் என்றால் நீங்களும் அதற்காக பணம் சேர்க்கலாம் தானே?

Link to comment
Share on other sites

சண்டமாருதன்,

உண்மையில் தாயக மக்களுக்கு தேவை பணம்தான் என்றால் நீங்கள் கேட்காமலேயே மக்கள் தர மாட்டார்களா?

 

அவ்வாறு நீங்கள் பணம் சேர்த்து உதவும் பொழுது அந்த மக்கள் மத்தியில் நீங்கள் கடவுளாக,

தேசியவாதியாக தெரிவீர்கள். டக்ளசும் மகிந்தாவும் உங்களை அழைத்து படம் எடுப்பார்கள்.

 

இல்லை அப்படி பணம் கேட்டு போனால் அடிதான் விழும் என எண்ணினால் டகிளாஸ் + மகிந்தா ஆட்சியை போற்ற வேண்டாம்.

Link to comment
Share on other sites

சண்டமாருதன் / அர்யுன்,

 

நீங்கள் தொடர்ச்சியாக புலம்பெயர் மக்களை வசை பாடுகின்றீர்கள். சிங்கள அரசுடன் சேர்ந்து வாழ்வதே வழி என்கிறீர்கள்.

 

அதேவேளை ஐநா, மனித உரிமை அமைப்புக்கள், அரசுகள், பொதுநலவாய அமைப்பு என பலரும் அங்கு நியாயமான அரசாட்சி நடக்கவில்லை என கூறுகின்றது.

 

எனவே உங்களின் நோக்கம் சிங்கள இனவழிப்பை மூடி மறைப்பதா?

 

சிங்கள அரசை பாதுகாப்பதே புலம்பெயர் அமைப்புகள். புலம்பெயர் மக்கள் என்பது வேறு அவர்களை வளிநடத்தமுற்படும் அமைப்புகள் என்பது வேறு.

 

பெரும்பாலான புலம்பெயர் மக்களுக்கு இனவழிப்பு குறித்த வேதனையும் ஆத்திரமும் உள்ளது. ஏதாவது ஒருவகையில் செயற்படவேண்டும் என்ற நோக்கம் இருக்கின்றது. ஒன்றுபட்டு வீதியில் இறங்கியவர்கள் என்றைக்கும் இறங்கக் கூடியவர்கள்- இதுதான் புலம்பெயர் மக்கள்.

 

இந்த நிலை எவ்வாறு சிதைக்கப்படுகின்றது?

முன்னாளைய அமைப்புகள் நபர்கள் தங்களுக்குள் போட்டிபோடுகின்றார்கள். பணத்தை குறிவைக்கின்றார்கள். நிகழ்வுகள் மாவீரர் ஏற்படுகளை வியாபாரமாக்குகின்றார்கள். மக்கள் வெறுப்படைகின்றார்கள்.

 

தாங்களே எல்லாம் செய்துகொள்வோம் என்று மக்களை மெளனியாக்கிவிட்ட சாதுர்யமான செயல்பாடுள். இவற்றுக்குள் தான் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு நாடகம் மற்றும் நாடுகடந்த அரசு உருவாக்கம் பிறகு அவற்றில் பிளவை ஏற்படுத்தி மக்கள் நம்பிக்கையை சாதூர்ய்யமாக சிதைத்தனர்.

 

இந்த அமைப்புகள் எல்லாம் ஆளையாள் குற்றம் சொல்வது ஆளையாள் மீது பழியை போடுவது. கொலைவரை சென்றது. தவிர என்றாவது போர்குற்றம் அபிவிருத்தி என்ற கருத்துடன் மக்களை அணுகியுள்ளதா?

 

சனல் 4 தான் போர்குற்றத்தை கையில் எடுத்ததே தவிர புலம்பெயர் அமைப்புகள் இல்லை

ந க அரசுகள் ஒன்றிரண்டு அறிக்கையும் யாகமும் செய்ததே தவிர போர்க்குற்றம் புனர்வாழ்வு முன்னாள் போராளிகள் என்பதை கையில் எடுத்ததில்லை

 

இவர்களே பேரினவாதத்தின் நண்பர்கள்.

 

தேசீயம் என்ற கருத்தியலை மக்களுக்காக மக்களுடன் இணைந்தை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக மக்களிடம் இருந்து பிரித்து சிதைத்து பங்குபோட்டு சுயலாபம் தேடும் அதே வேளை சிங்களக் கனவை நனவாக்குபவர்கள்.

 

அடிப்படையில் செயற்பாட்டில் நீங்களே சிங்களத்தின் மிக நெருங்கிய நண்பர்கள். அதை தூக்கி எவன் தலையிலாவது கட்டிவிடமுனைந்தால் அது நடமுறைச்சாத்தியமில்லை. எல்லாம் போய் கடசியில் இந்தக் களத்தில் பழிபோடும் வேலையை செய்ய முற்படுகின்றீர்கள். இதுவும் அதிகநாள் நீடிக்கப்போவதில்லை.

Link to comment
Share on other sites

அடிப்படையில் செயற்பாட்டில் நீங்களே சிங்களத்தின் மிக நெருங்கிய நண்பர்கள். அதை தூக்கி எவன் தலையிலாவது கட்டிவிடமுனைந்தால் அது நடமுறைச்சாத்தியமில்லை. எல்லாம் போய் கடசியில் இந்தக் களத்தில் பழிபோடும் வேலையை செய்ய முற்படுகின்றீர்கள். இதுவும் அதிகநாள் நீடிக்கப்போவதில்லை.

 

வழமை போன்ற ஒரு கையாலாகாத  கருத்து, அது உங்களின் கருத்துக்களில் நிறையவே பிரதி பலிக்கின்றது. 

ஆனால் உங்களுக்கே தெரியும் நீங்கள் மனச்சாட்சியை ஏமாற்றி எழுதுகின்றீர்கள் என்று.

அதற்கான காரணமும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

அகூதா ,

நான் இலங்கை அரசையோ ,டக்கிலசையோ ஆதரிப்பவன் இல்லை .அதற்காக அவர்களை எதிர்கின்றோம் என்று ஊரை கொள்ளையடிக்கும் கோஸ்டிடியையும் கண்டும் காணாமல் விட தயாரில்லை .

எனக்கு டக்கிளஸ் புலம் பெயர்ந்து கொள்ளையடிக்கும் கோஷ்டியை விட ஒரு படி மேல் .

வாயை திறக்கவிடாமல் வைத்திருந்த புலிகளை ஆதரித்தவர்கலேல்லாம் இப்போ ஜனநாயகம் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை .

"இலங்கை அரசிற்கு இவ்வளவு காட்டுமிராண்டிதனத்தை கற்று கொடுத்துவிட்டு போனவர்கள் புலிகள் .

விடுதலை புலிகள் எந்த அளவு பயங்கரவாதிகளோ அதே அளவு அரசும் பயங்கரவாதத்தை தனது நலனுக்காக பயன்படுத்துகின்றது ." லசந்தாவின் கடிதம் சண்டே லீடரில் வந்தது

கோர்டன் வைசின் கூண்டு பக்கம் -211.

சிங்கள அரசை நீங்கள் பயங்கரவாதிகள் என்பது சட்டியை பார்த்து பானை கரி என்ற கதைதான்.

Link to comment
Share on other sites

அகூதா ,

நான் இலங்கை அரசையோ ,டக்கிலசையோ ஆதரிப்பவன் இல்லை .அதற்காக அவர்களை எதிர்கின்றோம் என்று ஊரை கொள்ளையடிக்கும் கோஸ்டிடியையும் கண்டும் காணாமல் விட தயாரில்லை .

எனக்கு டக்கிளஸ் புலம் பெயர்ந்து கொள்ளையடிக்கும் கோஷ்டியை விட ஒரு படி மேல் .

வாயை திறக்கவிடாமல் வைத்திருந்த புலிகளை ஆதரித்தவர்கலேல்லாம் இப்போ ஜனநாயகம் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை .

"இலங்கை அரசிற்கு இவ்வளவு காட்டுமிராண்டிதனத்தை கற்று கொடுத்துவிட்டு போனவர்கள் புலிகள் .

விடுதலை புலிகள் எந்த அளவு பயங்கரவாதிகளோ அதே அளவு அரசும் பயங்கரவாதத்தை தனது நலனுக்காக பயன்படுத்துகின்றது ." லசந்தாவின் கடிதம் சண்டே லீடரில் வந்தது

கோர்டன் வைசின் கூண்டு பக்கம் -211.

சிங்கள அரசை நீங்கள் பயங்கரவாதிகள் என்பது சட்டியை பார்த்து பானை கரி என்ற கதைதான்.

அர்யுன்,

புலம்பெயர் மக்கள் அனேகமாக வாழுவது மேற்குலக நாடுகளில். இங்கே மக்களுக்கு சுதந்திரம் உள்ளது.

 

அந்த அடிப்படை சுதந்திரமே அங்கு இல்லை. அந்த நிலைமையை மாற்ற முடிந்தால் உதவுங்கள். மாறாக அதற்காக வேற எந்த ஒப்பீடு செய்வது அந்த மக்களை அழிக்கவே உதவும்.

Link to comment
Share on other sites

வழமை போன்ற ஒரு கையாலாகாத  கருத்து, அது உங்களின் கருத்துக்களில் நிறையவே பிரதி பலிக்கின்றது. 

ஆனால் உங்களுக்கே தெரியும் நீங்கள் மனச்சாட்சியை ஏமாற்றி எழுதுகின்றீர்கள் என்று.

அதற்கான காரணமும் இருக்கலாம்.

 

மனட்சாட்சி பற்றி கதைக்க உங்களுக்கு என்ன அடிப்படைத்தகுதி உள்ளது?

இனத்துக்காக போராடிய மாவீரர் தேசீயம் இப்படியான விசயங்களை சுயலாபத்துக்காக பயன்படுத்தி காசுபார்க்கும் கூட்டத்திற்கு (இவ்வாறான விசயங்களை முன்வைத்து இசைநிகழ்சியை குழப்பி காசுபார்த்தது) மனட்சாட்சியைப் பற்றி கதைக்க எந்த தகுதியும் கிடையாது.

 

நான் ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டேன். உங்களை விட புலத்து அமைப்புகளை விட டக்ளஸ் எவ்வளவோ மேல். இல்லை டக்ளசை விட நீங்கள்தான் மேலானவர் என்றால் உங்கள் செயற்பாட்டை நாளடைவில் அவதானித்து அவரை பின்னுக்குத் தள்ளி உங்களை முன்னுக்க வைத்து கருத்து எழுதுவேன். எல்லாம் உங்கள் உங்கள் செயற்பாட்டைப்பொறுத்தது. தற்போது ஆட்டையை போட்டாலும் அபிவிருத்திகள் சார்ந்து அமைச்சர் முதலிடம். நீங்கள் ஆட்டையை போடுவதுடன் நிற்பதால் அபிவிருத்தி மக்கள் தொடர்பு மக்களுக்கான உதவி என்பனவற்றில் கோட்டை விட்டுவிட்டதால் இரண்டாம் நிலைதான். நியாயத்துக்கு புறம்பாக என்னால் கருத்தெழுத முடியாது.

Link to comment
Share on other sites

மனட்சாட்சி பற்றி கதைக்க உங்களுக்கு என்ன அடிப்படைத்தகுதி உள்ளது?

இனத்துக்காக போராடிய மாவீரர் தேசீயம் இப்படியான விசயங்களை சுயலாபத்துக்காக பயன்படுத்தி காசுபார்க்கும் கூட்டத்திற்கு (இவ்வாறான விசயங்களை முன்வைத்து இசைநிகழ்சியை குழப்பி காசுபார்த்தது) மனட்சாட்சியைப் பற்றி கதைக்க எந்த தகுதியும் கிடையாது.

 

நான் ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டேன். உங்களை விட புலத்து அமைப்புகளை விட டக்ளஸ் எவ்வளவோ மேல். இல்லை டக்ளசை விட நீங்கள்தான் மேலானவர் என்றால் உங்கள் செயற்பாட்டை நாளடைவில் அவதானித்து அவரை பின்னுக்குத் தள்ளி உங்களை முன்னுக்க வைத்து கருத்து எழுதுவேன். எல்லாம் உங்கள் உங்கள் செயற்பாட்டைப்பொறுத்தது. தற்போது ஆட்டையை போட்டாலும் அபிவிருத்திகள் சார்ந்து அமைச்சர் முதலிடம். நீங்கள் ஆட்டையை போடுவதுடன் நிற்பதால் அபிவிருத்தி மக்கள் தொடர்பு மக்களுக்கான உதவி என்பனவற்றில் கோட்டை விட்டுவிட்டதால் இரண்டாம் நிலைதான். நியாயத்துக்கு புறம்பாக என்னால் கருத்தெழுத முடியாது.

உங்களுக்கு உள்ளதை விட கூடுதலாக உள்ளது, காரணம் நான் அநீதியை (டக்ளஸ் + மகிந்த ) ஆட்சியை ஏற்று துரோகம் செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா ,

நான் இலங்கை அரசையோ ,டக்கிலசையோ ஆதரிப்பவன் இல்லை .அதற்காக அவர்களை எதிர்கின்றோம் என்று ஊரை கொள்ளையடிக்கும் கோஸ்டிடியையும் கண்டும் காணாமல் விட தயாரில்லை .

எனக்கு டக்கிளஸ் புலம் பெயர்ந்து கொள்ளையடிக்கும் கோஷ்டியை விட ஒரு படி மேல் .

வாயை திறக்கவிடாமல் வைத்திருந்த புலிகளை ஆதரித்தவர்கலேல்லாம் இப்போ ஜனநாயகம் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை .

"இலங்கை அரசிற்கு இவ்வளவு காட்டுமிராண்டிதனத்தை கற்று கொடுத்துவிட்டு போனவர்கள் புலிகள் .

விடுதலை புலிகள் எந்த அளவு பயங்கரவாதிகளோ அதே அளவு அரசும் பயங்கரவாதத்தை தனது நலனுக்காக பயன்படுத்துகின்றது ." லசந்தாவின் கடிதம் சண்டே லீடரில் வந்தது

கோர்டன் வைசின் கூண்டு பக்கம் -211.

சிங்கள அரசை நீங்கள் பயங்கரவாதிகள் என்பது சட்டியை பார்த்து பானை கரி என்ற கதைதான்.

 

புலிகளுக்கு ஒரு குறிக்கோளீருந்தது அதனால் ஆதரித்தோம்

 

இப்பொழுது என்ன  செய்யலாம் சொல்லுங்கள்

அதைவிடுத்து தொடர்ந்து பழைய கதை பேசி  ஏன் காலத்தை கழிப்பான்???

Link to comment
Share on other sites

உங்களுக்கு உள்ளதை விட கூடுதலாக உள்ளது, காரணம் நான் அநீதியை (டக்ளஸ் + மகிந்த ) ஆட்சியை ஏற்று துரோகம் செய்யவில்லை.

 

மகிந்த ஆட்சி நிலைப்பதின் சூட்சுமமே நீங்கள்தான். உங்களைப்போன்றவர்களின் சிந்தனை இல்லை என்றால் போர்க்குற்றத்திற்கு எதிரான போராட்டக்கள அரசியல் பெட்டிச அரசியலாக மாறியிருக்காது. பேரினவாதத்தின் போரக்குற்றங்கள் அதற்கு எதிராக போராடக்கூடிய புலமபெயர்மக்கள் என்ற இந்த இரண்டு முனைப்புக்கும் இடையில் நாட்டாமயாய் நிற்பதே புலம்பெயர் அமைப்புகள் நாக அரசுகள். அந்தவகையில் இதுவரையில் மகிந்தனுக்கு டக்ளசை விட ஆயிரம்மடங்கு உதவியவர்கள் நாட்டாமைகளே.

Link to comment
Share on other sites

மகிந்த ஆட்சி நிலைப்பதின் சூட்சுமமே நீங்கள்தான். உங்களைப்போன்றவர்களின் சிந்தனை இல்லை என்றால் போர்க்குற்றத்திற்கு எதிரான போராட்டக்கள அரசியல் பெட்டிச அரசியலாக மாறியிருக்காது. பேரினவாதத்தின் போரக்குற்றங்கள் அதற்கு எதிராக போராடக்கூடிய புலமபெயர்மக்கள் என்ற இந்த இரண்டு முனைப்புக்கும் இடையில் நாட்டாமயாய் நிற்பதே புலம்பெயர் அமைப்புகள் நாக அரசுகள். அந்தவகையில் இதுவரையில் மகிந்தனுக்கு டக்ளசை விட ஆயிரம்மடங்கு உதவியவர்கள் நாட்டாமைகளே.

 

டக்ளசும் உங்களைப்போன்ற அவருக்கு ஆதரவு தரும் பிழைப்பை முதுகெலும்பில்லாத  யாரும் நடத்தலாம். இப்படி தாயக மக்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பவர்களை நசுக்க முயலும் கோழைகள் நிலைத்ததாக வரலாறு இல்லை.

 

அப்பொழுது நீங்கள் இன்னொரு அவதாரம் எடுப்பீர்கள், யாழில்.

 

உங்களுத்துக்குத்தான் கொள்கை இல்லையே.

Link to comment
Share on other sites

அகூதா ,

நான் இலங்கை அரசையோ ,டக்கிலசையோ ஆதரிப்பவன் இல்லை .அதற்காக அவர்களை எதிர்கின்றோம் என்று ஊரை கொள்ளையடிக்கும் கோஸ்டிடியையும் கண்டும் காணாமல் விட தயாரில்லை .

எனக்கு டக்கிளஸ் புலம் பெயர்ந்து கொள்ளையடிக்கும் கோஷ்டியை விட ஒரு படி மேல் .

வாயை திறக்கவிடாமல் வைத்திருந்த புலிகளை ஆதரித்தவர்கலேல்லாம் இப்போ ஜனநாயகம் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை .

"இலங்கை அரசிற்கு இவ்வளவு காட்டுமிராண்டிதனத்தை கற்று கொடுத்துவிட்டு போனவர்கள் புலிகள் .

விடுதலை புலிகள் எந்த அளவு பயங்கரவாதிகளோ அதே அளவு அரசும் பயங்கரவாதத்தை தனது நலனுக்காக பயன்படுத்துகின்றது ." லசந்தாவின் கடிதம் சண்டே லீடரில் வந்தது

கோர்டன் வைசின் கூண்டு பக்கம் -211.

சிங்கள அரசை நீங்கள் பயங்கரவாதிகள் என்பது சட்டியை பார்த்து பானை கரி என்ற கதைதான்.

 

 

உங்களின் கருத்து மகிந்தவின் பயங்கரவாத செயலுக்கு எந்த வகையிலூம் சளைததல்ல.புலிகளில் காலத்தில் யாழ்ப்பாணம் என்ன நிறம் என்று தெரியாத ஆட்கள் கருத்து தெரிவிக்க வெளிக்கிட்டால் இப்படியான யானையை பார்த்த குருடன் கதையாக தான் இருக்கும்.
 
புளட் செய்த அனியாயத்துக்கு புலிகளுக்கு உங்களை கண்ணில் காட்டக்கூடாது என்பது முற்றிலும் உண்மையே. மக்களுக்கும் உங்களை கண்ணில் காட்டக்கூடாது.2009க்கும் முன் பெட்டிப்பாம்பாக இருந்து விட்டு இப்போ விசம் கக்குபவர்களை நன்கு அறிவோம்.
Link to comment
Share on other sites

மனட்சாட்சி பற்றி கதைக்க உங்களுக்கு என்ன அடிப்படைத்தகுதி உள்ளது?

இனத்துக்காக போராடிய மாவீரர் தேசீயம் இப்படியான விசயங்களை சுயலாபத்துக்காக பயன்படுத்தி காசுபார்க்கும் கூட்டத்திற்கு (இவ்வாறான விசயங்களை முன்வைத்து இசைநிகழ்சியை குழப்பி காசுபார்த்தது) மனட்சாட்சியைப் பற்றி கதைக்க எந்த தகுதியும் கிடையாது.

 

நான் ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டேன். உங்களை விட புலத்து அமைப்புகளை விட டக்ளஸ் எவ்வளவோ மேல். இல்லை டக்ளசை விட நீங்கள்தான் மேலானவர் என்றால் உங்கள் செயற்பாட்டை நாளடைவில் அவதானித்து அவரை பின்னுக்குத் தள்ளி உங்களை முன்னுக்க வைத்து கருத்து எழுதுவேன். எல்லாம் உங்கள் உங்கள் செயற்பாட்டைப்பொறுத்தது. தற்போது ஆட்டையை போட்டாலும் அபிவிருத்திகள் சார்ந்து அமைச்சர் முதலிடம். நீங்கள் ஆட்டையை போடுவதுடன் நிற்பதால் அபிவிருத்தி மக்கள் தொடர்பு மக்களுக்கான உதவி என்பனவற்றில் கோட்டை விட்டுவிட்டதால் இரண்டாம் நிலைதான். நியாயத்துக்கு புறம்பாக என்னால் கருத்தெழுத முடியாது.

 

டக்ளஸ் கூட்டமைப்பை பின் தள்ளி மகிந்த அரச இயந்திரத்துடன் அபிவிருத்தி என படம் காட்டுவதை மக்கள் நன்கு அறிவர்.கள்ள வாக்கும் சாராயமும் சாறியும் இல்லாவிட்டால் டக்ளசை நாய் கொண்டு போய்விடும்.இப்படி ஒரு கேவலமான அரசியல் தேவையா??
 
வரும் தேர்த்தலுக்கு  கூட்டமைப்பை பிரச்சாரம் செய்ய தீவகத்துக்கு செல்ல அனுமதியுங்கள் பார்க்கலாம். விடமாட்டார்.அப்படியான ஒரு கோழை தான் டக்ளஸ்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் கூட்டமைப்பை பின் தள்ளி மகிந்த அரச இயந்திரத்துடன் அபிவிருத்தி என படம் காட்டுவதை மக்கள் நன்கு அறிவர்.கள்ள வாக்கும் சாராயமும் சாறியும் இல்லாவிட்டால் டக்ளசை நாய் கொண்டு போய்விடும்.இப்படி ஒரு கேவலமான அரசியல் தேவையா??
 
வரும் தேர்த்தலுக்கு  கூட்டமைப்பை பிரச்சாரம் செய்ய தீவகத்துக்கு செல்ல அனுமதியுங்கள் பார்க்கலாம். விடமாட்டார்.அப்படியான ஒரு கோழை தான் டக்ளஸ்.

 

 

நுணா கூட்டமைப்பு தீவுப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தால் போல தேர்தலில் வென்றிடுமாக்கும் :D ...கூட்டமைப்பு செய்கிறதை விட டக்லஸ் மக்களுக்கு ஏதோ கொஞ்சமாவது செய்கிறார்...யதார்த்தம் இது தான் நீங்கள் ஏற்க மாட்டீங்கள்.
 
டக்லசுக்கு அரசியல் தெரியும்...மக்களுக்கு கொஞ்சமாவது குடுத்து கொண்டு இருந்தால் மக்கள் போராட மாட்டார்கள் என்பதும் தெரியும்...உரிமைகளை கொஞ்சமாவது குடுத்தால் மக்கள் ஏன் போராடப் போயினம் :)
Link to comment
Share on other sites

நுணா கூட்டமைப்பு தீவுப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தால் போல தேர்தலில் வென்றிடுமாக்கும் :D ...கூட்டமைப்பு செய்கிறதை விட டக்லஸ் மக்களுக்கு ஏதோ கொஞ்சமாவது செய்கிறார்...யதார்த்தம் இது தான் நீங்கள் ஏற்க மாட்டீங்கள்.
 
டக்லசுக்கு அரசியல் தெரியும்...மக்களுக்கு கொஞ்சமாவது குடுத்து கொண்டு இருந்தால் மக்கள் போராட மாட்டார்கள் என்பதும் தெரியும்...உரிமைகளை கொஞ்சமாவது குடுத்தால் மக்கள் ஏன் போராடப் போயினம் :)

 

ஏன் யாழ்ப்பாணத்தில் மிச்ச இடங்களில் டக்ளஸ் தானோ வெண்டவர்?? :D
ஜனநாயகம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் கூட்டமைப்பையும் விடச்சொல்லி தான் சொல்கிறேன்.வெல்வதை பற்றி பிறகு யோசிக்கலாம். டக்ளசிடம் சாராயமும்,அடிதடியும்,சாறியும் இருக்கும் போது கொஞ்சம் கஸ்டம் என்று நீங்கள் ஜாடை மாடையாக சொல்வது விளங்குகிறது. :icon_mrgreen:
 
என்னத்தை கூட்டமைப்பு கொடுக்கிறது?. மகிந்த தான் மக்களுக்கு கொடுப்பது போல் கொடுக்க வேண்டும். அதே நேரம் கூட்டமைப்புக்கு பணம் ஒதுக்குவதில்லை.அதாவது கூட்டமைப்பை ஒன்றும் செய்யாமல் பண்ண வேண்டும்.இது மகிந்தவின் சிந்தனை. செயல் வடிவம் கொடுக்கிறார் ஈழத்து எம்.ஜி.ஆர்.இது தானே திரைக்கு பின்னால் நடக்கும் நாடகம். :icon_idea:
Link to comment
Share on other sites

அரசாங்கத்திற்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது? என ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117021

 


சிங்கள அரசின் பொய்களுக்கும் அதன் நாசி இனப்படுகொலைகளையும் மறைக்கும் சோரம்போன சிறுபான்மை அரசியல்வாதிகளாலும் அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் உதவும் புலம்பெயர் இலங்கையர்களாலும் தரப்பட்டது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் அமைச்சர்/செயலாளர் நாயகம் மக்கள் சேவை செய்கின்றார் என்று சொன்னாலும் அவரது சேவைகள் எல்லாம் தனது சுயநல அரசியல் லாபங்களுக்காகவே. டக்ளஸ் அமைச்சராக இருந்து வருடங்கள் பல கழிந்தும் அவரால் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை (யாழ் மாவட்டத்தில் கூட) வெல்லமுடியாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் சாதாராண மக்கள் அவரது சுயநல அரசியலைப் புரிந்துகொண்டதுதான்.

 

தமிழ்த் தேசியத்தை தன்னால் முன்னெடுக்க முடியாது என்பதை சரியாக உணர்ந்ததனால்தான் டக்ளஸ் தான் இளைஞனாக இருந்தபோது கொண்ட இலட்சியத்தையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மகிந்தவிற்கு அடிமைச் சேவக அரசியல் செய்கின்றார். சில வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஈபிடிபி ஓரளவு செல்வாக்கோடு இயங்கியது. புலிகளின் அழிவுக்குப் பின்னர் ஈபிடிபி வடக்கில் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கே.பி ஐயும் வடக்கில் இயங்க வைத்ததன் மூலம் மகிந்த தன்னை யார் கூட மகிழ்விக்கின்றவருக்கு கூடுதல் சலுகை காட்டுவதாக ஒரு பிரமையை உண்டாக்குகின்றார். இதுபோன்றே கிழக்கில் கருணாவையும் பிள்ளையானையும் ஆட்டுவிக்கின்றார்.

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மகிந்தவிற்குப் பின்னால் யார் வந்தாலும் அவர்களுக்குச் சேவை செய்து தன்னைத் தக்கவைத்துக்கொள்வார். இந்த சுயநல அரசியலைப் புரிந்துகொண்டும் அவர் உள்ள பிசாசுகளில் ஓரளவு நல்ல பிசாசு என்று சொல்வது ஏற்புடையதல்ல.

 

 

Link to comment
Share on other sites

என்னதான் அமைச்சர்/செயலாளர் நாயகம் மக்கள் சேவை செய்கின்றார் என்று சொன்னாலும் அவரது சேவைகள் எல்லாம் தனது சுயநல அரசியல் லாபங்களுக்காகவே. டக்ளஸ் அமைச்சராக இருந்து வருடங்கள் பல கழிந்தும் அவரால் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை (யாழ் மாவட்டத்தில் கூட) வெல்லமுடியாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் சாதாராண மக்கள் அவரது சுயநல அரசியலைப் புரிந்துகொண்டதுதான்.

 

தமிழ்த் தேசியத்தை தன்னால் முன்னெடுக்க முடியாது என்பதை சரியாக உணர்ந்ததனால்தான் டக்ளஸ் தான் இளைஞனாக இருந்தபோது கொண்ட இலட்சியத்தையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மகிந்தவிற்கு அடிமைச் சேவக அரசியல் செய்கின்றார். சில வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஈபிடிபி ஓரளவு செல்வாக்கோடு இயங்கியது. புலிகளின் அழிவுக்குப் பின்னர் ஈபிடிபி வடக்கில் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கே.பி ஐயும் வடக்கில் இயங்க வைத்ததன் மூலம் மகிந்த தன்னை யார் கூட மகிழ்விக்கின்றவருக்கு கூடுதல் சலுகை காட்டுவதாக ஒரு பிரமையை உண்டாக்குகின்றார். இதுபோன்றே கிழக்கில் கருணாவையும் பிள்ளையானையும் ஆட்டுவிக்கின்றார்.

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மகிந்தவிற்குப் பின்னால் யார் வந்தாலும் அவர்களுக்குச் சேவை செய்து தன்னைத் தக்கவைத்துக்கொள்வார். இந்த சுயநல அரசியலைப் புரிந்துகொண்டும் அவர் உள்ள பிசாசுகளில் ஓரளவு நல்ல பிசாசு என்று சொல்வது ஏற்புடையதல்ல.

 

 

 

வடக்கில் டக்ளஸ் கே பி கிழக்கில் கருணா பிள்ளையான். இவர்கள் வெளிப்படையான முகங்கள். தமிழ்த்தேசீயம் சரிவராது என்ற நிலைப்பாட்டில் அரசை அண்டி பிழைக்கும் அரசமானியம் பெறும் பெரும்கூட்டம் அன்றிலிருந்து இருக்கின்றது. விலாங்கு மீன்போல் தமிழ்த்தேசீயமும் பேசி சிங்களத்தை அனுசரித்து வாழ்க்கையை ஒட்டுபவர்களும் அதிகம். இந்த இரண்ட்டில் இருந்தும் நழுவிய புலம்பெயர்ந்தவர்கள். இந்த வகைக்குள் இருப்பவர்கள் தமிழ்த்தேசீயத்தை ஆதரிப்பினும் சிங்களப்பேரினவத்த்தின் கனவை நிறைவேற்றியவர்கள் என்பது மிகையில்லை. இந் நிலையில் இவர்கள் எந்தவகையிலும் தமிழ்த்தேசீயத்தை முன்னெடுத்தவர்கள் இல்லை. இவர்கள் சார்பாக வடக்கில் இரண்டுபேர் கிழக்கில் இரண்டுபேர் பழி ஏற்று மீதமுள்ளவர்கள் தேசீயத்தை முன்னெடுப்பதாக சொல்வதில் நியாயம் இல்லை. வெளிப்படையாக நான்குபேர் மறைமுகமாக லட்சம்பேர். ஒட்டுமொத்த விழைவு ஒன்றுதான்.

 

மறுபுறம் தமிழ்த்தேசீயத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்து அளப்பரிய தியாகங்களை செய்து உயிர்விட்ட மக்கள் மாவீரர்களை அவர்கள் நினைவுதினங்களை வியாபாரமாக்கி காசுபார்ப்பவர்கள் அவர்கள் நாமத்தை சுயலாபத்துக்கு பயன்படுத்துபவர்கள் மேற்குறிப்பிடும் நான்குபேரையும் துரோகியாக்கி தாங்கள் நல்லவர்களாகின்றனர். மேற்குறிப்பிட்ட நான்குபேரும் மகிந்தனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு இவர்களுக்கும் தங்களை தேசீய நாட்டாமைகள் என்று நிருபிக்க முக்கியமாகின்றனர்.

 

இங்கே நடப்பதும் தன்னை முன்னிலைப்படுத்தும் போட்டி தவிர தமிழ்த்தேசீயத்தை முன்னிலைப்படுத்துவதாக இல்லை. போட்டிக்கு அப்பாற்பட்டு வெளிப்படையாக சிங்களத்துடன் இணைந்துள்ளவர்களை விட தமிழத்தேசீயம் என்ற கருத்தியல் மற்றும் இங்கு சக்திக்குள் இருந்து அதைச் சிதைப்பவர்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்துபவர்கள் மோசமானவர்கள். சிங்கள இந்தியப் புலனாய்வுத்துறைகள் திட்டமிட்டு செய்யவேண்டிய வேலையை இயல்பாகச் செய்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நடப்பதும் தன்னை முன்னிலைப்படுத்தும் போட்டி தவிர தமிழ்த்தேசீயத்தை முன்னிலைப்படுத்துவதாக இல்லை. போட்டிக்கு அப்பாற்பட்டு வெளிப்படையாக சிங்களத்துடன் இணைந்துள்ளவர்களை விட தமிழத்தேசீயம் என்ற கருத்தியல் மற்றும் இங்கு சக்திக்குள் இருந்து அதைச் சிதைப்பவர்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்துபவர்கள் மோசமானவர்கள். சிங்கள இந்தியப் புலனாய்வுத்துறைகள் திட்டமிட்டு செய்யவேண்டிய வேலையை இயல்பாகச் செய்கின்றனர்.


விழுந்தாலும் மீசையில் மண்  ஒட்டாத எழுத்து

 

இன்னும் எத்தனை முடிச்சுக்களை  வைத்துள்ளீர்கள்

மாறி  மாறி  போடுவதற்கு.

 

ஒரு பக்கம்  பட்டம் கொடுக்க நீங்கள் யார் என்ற  கேள்வி

இன்னொரு பக்கம் சிறிலங்க மற்றும்இந்திய  அருவருடி பட்டம் கொடுப்பு

நடக்கட்டும்

நடக்கட்டும்

முகங்களை காட்டுங்கள்

மக்கள் முடிவெடுக்கட்டும்

Link to comment
Share on other sites

இங்கே நடப்பதும் தன்னை முன்னிலைப்படுத்தும் போட்டி தவிர தமிழ்த்தேசீயத்தை முன்னிலைப்படுத்துவதாக இல்லை. போட்டிக்கு அப்பாற்பட்டு வெளிப்படையாக சிங்களத்துடன் இணைந்துள்ளவர்களை விட தமிழத்தேசீயம் என்ற கருத்தியல் மற்றும் இங்கு சக்திக்குள் இருந்து அதைச் சிதைப்பவர்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்துபவர்கள் மோசமானவர்கள். சிங்கள இந்தியப் புலனாய்வுத்துறைகள் திட்டமிட்டு செய்யவேண்டிய வேலையை இயல்பாகச் செய்கின்றனர்.

விழுந்தாலும் மீசையில் மண்  ஒட்டாத எழுத்து

 

இன்னும் எத்தனை முடிச்சுக்களை  வைத்துள்ளீர்கள்

மாறி  மாறி  போடுவதற்கு.

 

ஒரு பக்கம்  பட்டம் கொடுக்க நீங்கள் யார் என்ற  கேள்வி

இன்னொரு பக்கம் சிறிலங்க மற்றும்இந்திய  அருவருடி பட்டம் கொடுப்பு

நடக்கட்டும்

நடக்கட்டும்

முகங்களை காட்டுங்கள்

மக்கள் முடிவெடுக்கட்டும்

 

என்ன செய்வது  ஒரு தமிழன் தேசீயத்தை முன்னெடுக்க என்னுமொரு தமிழன் துரோகியாகவேண்டியுள்ளது தவிர சிங்களம் இரண்டாம்பட்சமாக இருக்கின்றதே !

 

Link to comment
Share on other sites

என்ன செய்வது  ஒரு தமிழன் தேசீயத்தை முன்னெடுக்க என்னுமொரு தமிழன் துரோகியாகவேண்டியுள்ளது தவிர சிங்களம் இரண்டாம்பட்சமாக இருக்கின்றதே !

 

கருத்து எழுதுபவர்களே கால நிலைக்கு ஏற்ப மாறும் போது ஏனையோர் எம்மாத்திரம்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.