Jump to content

அகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்


Recommended Posts

என் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும்

நான்

யாரென்பது தெரியும்.........

நீங்கள் கேட்டவை சரியாக இருக்கலாம்?

யாருக்குத் தெரியும்? :P

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வைக் கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

விடியலுக் கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னுமேன் பாரம்

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னுமேன் ஈரம்

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வைக் கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா

விடியலுக் கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னுமேன் பாரம்

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னுமேன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும்

இரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா

இரத்தத்தின் வெட்பத்தில்

அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வைக் கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும்

இரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா

இரத்தத்தின் வெட்பத்தில்

அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா

இந்தப் பாடலுக்கும்

எனக்கும்

தமிழீழ விடுதலை விரும்பிகளுக்கும் நிறையவே

ஒற்றுமையுண்டு.

ஆபாவாணன் (சின்னா = சின்னசாமி)

மற்றும்

அவர்களது நண்பர்களையும் எம்மோடு இணைக்க வைத்த காலம் அது.

ஒருவன் சிங்கப்பூரிலிருந்து

தமிழீழ விடுதலைக்காக போராட வந்த

காலம் மட்டுமல்ல.........

வேண்டாம்.............................

நன்றி........................

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா!

ஒரு விடயத்தைச் சொல்லவந்தால் முழுமையாக முடியுங்களேன். நீங்களும் மனதிற்குள் வைத்துப் புூட்டியபடி, எம்மையும் குழப்பமாக்கி.............. சொல்லவிரும்பினால் அது பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன்!

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா!

ஒரு விடயத்தைச் சொல்லவந்தால் முழுமையாக முடியுங்களேன். நீங்களும் மனதிற்குள் வைத்துப் புூட்டியபடி, எம்மையும் குழப்பமாக்கி.............. சொல்லவிரும்பினால் அது பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன்!

:wink:

இதுதானே வேணாம்கிறது..............

இருந்தாலும் தூயவனின் லொல்லு எனக்கு பிடிக்கும்.

நானும் முன்ன இப்படித்தான் :lol:

ஆரம்ப காலத்தில்

தமிழீழத்தின் குரல் என்று ஒரு வானோலியை மக்கள்

கேட்டார்கள்.............

அதனுடன் சிங்களப் பகுதி வானோலி ஒன்றும்

தொலைக் காட்சிப் பகுதியொன்றும்

இருந்தது.

அதில் என் குரல் மட்டுமல்ல உழைப்பும்

வான் அலைகளில்

வலம் வந்தது............. :oops:

என்னுடன் இருந்தவர்களில்

இப்போது பிரான்சிலிருந்து ஒளிபரப்பாகும்

டீடீஎன் தொலைக் காட்சியில் ஒருவரும்

ஐபீசியில் ஒருவரும் இருக்கிறார்கள்.

பலரை தெரியவில்லை.

நான் அதிகம் பேசுவேன். :P

சரியென்று பட்டதற்காக வாதாடுவேன்.

இதனால் பலருக்கு என்னைப் பிடிக்கும்

சிலருக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது. :lol:

எனக்கு அப்போது பயம் என்றது என்னவென்று தெரியாது.

இதனாலேயே எனக்கு தெரியாமலே

உள்ளே ஆபத்து நிறைவே காத்து இருந்தது.

(இதனால்தான் அரசியலுக்கு டாட்டா காட்டி விட்டு

படம் செய்கிறேன்.........காட்டவில்லை :P )

என்னை காவு கொள்ள வந்தவர்களே

எனக்கு காவலானார்கள்!

அப்போது ஒரு நாடகம் எழுதி

கே.கே.நகர் அம்மன்கோவில்

சத்துணவு திட்ட அரங்கில் நடத்தினேன்.

அதன் பெயர்

"கோலங்கள்"

ஏகப்பட்ட பிரபலங்கள் வந்திருந்தார்கள்.

ஒரு குடும்பத்தில் அனைவரும்

ஒற்றுமையில்லாமல் இருப்பதால்

வெளியே இருந்து வரும் எதிரிகள்

அனைவரையும் அழிப்பதும்.

நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் போராடி வெல்ல முடியும்

............

நாடகம் முடிந்ததும்

என்னை வம்பில் மாட்டி விட

சுத்துமாத்தான ஒரு பேர்வழி

"உமது நாடகம்

ஒரு குடும்பத்தை பற்றியா?

அல்லது இயக்க உள் முரண்பாடு பற்றியா?

அல்லது தமிழீழ விடுதலை இயக்கங்களுக்குள் உள்ள முரண்பாடு பற்றியா?

அதை தெளிவாக்குங்கள்........."என்று அனைவர் முன்னாலும் என்னிடம் கேட்டார்.

நான் சொன்னேன்......

"விளங்க வேண்டியவர்களுக்கு விளக்கியிருக்கிறது.

சந்தோசம்............. :!:

தொப்பி அளவாயிருந்தால்............

ஏதோ செய்யச் சொல்வார்களே?......." என்று விடை பெற்றேன். :wink:

எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

இப்போதும் - அந்த

குணம் மாறவேயில்லை என்பதில்

எனக்கு வருத்தமே.

சொல்லி விட்டே வெளியேறினேன்.

அந்த தைரியம் எப்படி என

வியப்பதுண்டு.

அக்காலத்தில்தான்

எனக்கு அடையாறு திரைப்படக் கல்லூரியில்

சிறப்பு பயிற்சி பெற எம்.ஜீ.ஆர்.அவர்கள் வழி

வகுத்துத் தந்தார்கள்.

அதனால் திரைப்பட மாணவர்களைத் தெரியும்.

கனடாவில் என் நண்பனே

கள நண்பர்கள் சந்திப்பின் போது

யாழ்கள நண்பர்களிடம் சொன்னான்.

இவன் செத்திருப்பான் என்றுதான் நினைத்தேன்.

உயிரோட இருக்கிறதை பார்க்க வியப்பாயிருக்கு என்று? :lol:

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா

விடியலுக் கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னுமேன் பாரம்

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னுமேன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும்

இரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் அஜீவன் அண்ணா!

ஒற்றுமையே எமக்குப் பலம். ஆனால் சிலர் குறுக்குவழியில் சம்பாதிக்கவும், ஒரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் இருந்து விடுதலை பெற்று, அதை பிறிதொரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் கையளிப்பது என்ற எண்ணத்தால் தான் இத்தனை பிளவுகள் எமக்குள் வந்தன என நினைக்கின்றேன்.

எல்லாத்தையும் அவன் உபகண்டம் பார்த்துக் கொள்ளும். எம்மை நாமே பார்த்துக் கொள்ளுவோம் என்ற கணக்கில் தான் முன்பு போராட வெளிக்கிட்ட மாற்று இயக்கங்கள் இருந்தன. அதனால் உமாமகேஸ்வரன் போன்ற கோடிஸ்வரர்களும் உருவாக வழியாகியது.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இப்படிப்பட்ட இயகக்ங்கள் தொடர்ந்தும் இருந்திருந்தால், தமிழருக்குள்ளேயே அடிபட்டு, நாமே அழிந்திருப்போம். சிங்களவனுக்கு வேலை இருந்திருக்காது. உண்மையில் அப்போது மற்ற இயக்கங்களைத் தடை செய்ய தலைவர் எடுத்த முடிவு சரியானது தான்!

Link to comment
Share on other sites

உண்மை தான் அஜீவன் அண்ணா!

ஒற்றுமையே எமக்குப் பலம். ஆனால் சிலர் குறுக்குவழியில் சம்பாதிக்கவும், ஒரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் இருந்து விடுதலை பெற்று, அதை பிறிதொரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் கையளிப்பது என்ற எண்ணத்தால் தான் இத்தனை பிளவுகள் எமக்குள் வந்தன என நினைக்கின்றேன்.

எல்லாத்தையும் அவன் உபகண்டம் பார்த்துக் கொள்ளும். எம்மை நாமே பார்த்துக் கொள்ளுவோம் என்ற கணக்கில் தான் முன்பு போராட வெளிக்கிட்ட மாற்று இயக்கங்கள் இருந்தன. அதனால் உமாமகேஸ்வரன் போன்ற கோடிஸ்வரர்களும் உருவாக வழியாகியது.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இப்படிப்பட்ட இயகக்ங்கள் தொடர்ந்தும் இருந்திருந்தால், தமிழருக்குள்ளேயே அடிபட்டு, நாமே அழிந்திருப்போம். சிங்களவனுக்கு வேலை இருந்திருக்காது. உண்மையில் அப்போது மற்ற இயக்கங்களைத் தடை செய்ய தலைவர் எடுத்த முடிவு சரியானது தான்!

அச்சம் விட்டது சுதந்தரம் ;

அன்பு விடாதது சுதந்தரம் ;

இச்சைப் படிசெயல் சுதந்தரம் ;

இடர்செய் யாதது சுதந்தரம் ;

பிச்சை கொள்ள விரும்பாது

பிறருக் கீய வருந்தாது

கொச்சை மொழிகளைச் சொல்லாது

கோணல் வழிகளிற் செல்லாது.

மடமை விட்டது சுதந்தரம் ;

மானம் விடாதது சுதந்தரம் ;

கடமை கற்றது சுதந்தரம் ;

கபடம் அற்றது சுதந்தரம் ;

கொடுமை கண்டு பொறுக்காது

கொடியர் தமையும் வெறுக்காது

அடிமை செய்து சுகிக்காது

யாரையும் அடிமை வகிக்காது.

கொல்லக் கூசும் சுதந்தரம்

கொள்கைக் குயிர்தரும் சுதந்தரம்

எல்லை விட்டு நடக்காது

எதிரியை ஒண்டி மடக்காது

வெல்லற் கேனும் பொய்யாது

வேற்றுமைக் காரரை வையாது

பல்லைக் கெஞ்சிப் பிழைக்காது

பட்டதன் தோல்வி ஒளிக்காது.

தன்சோ றுண்பது சுதந்தரம்

தன்துணி யணிவது சுதந்தரம்

என்னே வறுமை வந்தாலும்

எத்தனை துன்பம் தந்தாலும்

தன்னேர் செம்மை பிரியாது

தன்குறை சொல்லித் திரியாது

பொன்சேர் போகம் மதிக்காது

பொய்ப்புகழ் பாடித் துதிக்காது.

போராடுவது மட்டுமல்ல - மனதால்

அந்த வெற்றிக்காய் எண்ணுவதும்

வேண்டுவதும்

இப்போதைய காலத்தில் மேன்மையானதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலைஞனுக்கு உள்ள தகுதியே, மற்றவர்களைப் போட்டுக் மீண்டும்மீண்டும் குழப்புவது தான். அஜீவன் அண்ணா ஒரு சிறந்த கலைஞன் என்று ஒத்துக் கொள்கின்றேன்!

:wink: :P :P :P

Link to comment
Share on other sites

அப்ப அஜீவன் அண்ணா,

'புதிய பாதயில' போகாம , 'உளன்றியில' ஏத்துப்படாம

எப்படித் தப்பினீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை வைத்து ஏமாறுகின்ற பழக்கமா? அது "புதிய பாதை என்று போட் போட்டாலும், கடைசி வேறை எங்கு போய்த் தானே நிற்குமாம்.

Link to comment
Share on other sites

உள் முரண்பாடுகளைத் தீர்த்த வழி தானே புதிய பாதை,

இன்றும் சிலர் இணயத்தில் மக்கள் போராட்டம், ஜன நாயகம் என்று சொல்வதைப் பார்த்தால் எனக்கு நினவில் வருவது ,உப்படி எண்பதுகளில் சொல்லித் தெரிந்த உந்தத் தோழர்கள் தான்.உந்தா படை வருகுது எல்லாரும் மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில நடுங்கோ, நாங்கள் வந்து விரட்டப் போறம் எண்டிச்சினம்.

கடைசியில சனம் சோத்துப் பாசல் குடுத்து ஏமாந்தது தான் மிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிஆர்எல்எவ் காரைநகர் தாக்துல் என்று கதை விடுவதையும், புளோட் சண்டைக்குப் போகின்றேன் என்று சாப்பாட்டுப் பாசல் வாங்குவதையும் நக்கலடித்து ஒரு பாட்டு வந்ததாமே!

ஒரு தடவை ஒருவர் பாடும்போது கேட்டேன். ஆனால் வரிகள் மறந்து விட்டது. யாருக்காவது தெரியும் என்றால் தாங்கப்பா! நல்ல நக்கலாக இருக்கும்! :wink: :P

Link to comment
Share on other sites

ஈபிஆர்எல்எவ் காரைநகர் தாக்துல் என்று கதை விடுவதையும், புளோட் சண்டைக்குப் போகின்றேன் என்று சாப்பாட்டுப் பாசல் வாங்குவதையும் நக்கலடித்து ஒரு பாட்டு வந்ததாமே!

ஒரு தடவை ஒருவர் பாடும்போது கேட்டேன். ஆனால் வரிகள் மறந்து விட்டது. யாருக்காவது தெரியும் என்றால் தாங்கப்பா! நல்ல நக்கலாக இருக்கும்! :wink: :P

"காத்தடிக்குது புயல் அடிக்குது

காரை நகரில EP அடிக்குது.

சோத்து பாசலை PLOT அடிக்குது.

சீனி மூட்டையை tela அடிக்குது."

இப்பிடி வருமே அந்தப்பாட்டா.....???? எனக்கு தெரியவே தெரியாதப்பா....! :wink: :P :P

Link to comment
Share on other sites

அப்ப அஜீவன் அண்ணா,

'புதிய பாதயில' போகாம , 'உளன்றியில' ஏத்துப்படாம

எப்படித் தப்பினீர்கள்?

நான் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தும்

அவர்களோடு வாழ்ந்தும்

அவர்களது துன்பங்களை பகிர்ந்து கொண்டும் இருக்கிறேன்.

என் மனம் விரும்பாத ஒன்றை

என்னால் தொடர முடியாது.............

அவர்கள் சிதற முன்னமே

நான் வெளியேறினேன்.

ஆபத்துதான்...........அதிலிருக்கும் திரில் :P

இப்போ எல்லாம்

அவற்றை மறந்தே விட்டேன். :P

நாரதர் கலகம் நன்மையில் முடிய :lol: ஒத்துழைத்திருக்கிறேன். :P

நன்றி.........வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பேசாமல் இருப்பவர்கள் அனைவரும் எதிரிகளுமல்ல.

பேசுபவர்கள் அனைவரும் சார்பாளர்களுமல்ல........"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா என்ன இப்படி சிரிக்கிறீங்க. ஒண்டுமே புரியல. சொல்லிட்டு சிரிச்சா நானும் சேந்து சிரிக்கலாமெல்லா :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே.... அதே தான்! :):lol:

இந்தப்பாடல் ஒலி வடிவில் எங்கு பெறமுடியும்? இணையத்தில் உண்டா? இவ்வாறன பழையபாடல்கள் வேறு இருந்தாலும் நல்லா இருக்கும்! :wink:

Link to comment
Share on other sites

உள் முரண்பாடுகளைத் தீர்த்த வழி தானே புதிய பாதை,

இன்றும் சிலர் இணயத்தில் மக்கள் போராட்டம், ஜன நாயகம் என்று சொல்வதைப் பார்த்தால் எனக்கு நினவில் வருவது ,உப்படி எண்பதுகளில் சொல்லித் தெரிந்த உந்தத் தோழர்கள் தான்.உந்தா படை வருகுது எல்லாரும் மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில நடுங்கோ, நாங்கள் வந்து விரட்டப் போறம் எண்டிச்சினம்.

கடைசியில சனம் சோத்துப் பாசல் குடுத்து ஏமாந்தது தான் மிச்சம்.

±øÄ¡Õõ ¬ÃõÀò¾¢ø §À¡Ã¡¼ ±ýÚ ¦º¡øĢ즸¡ñξ¡ý ¦ÅǢ츢ð¼¨Å. 83 ¬õ ¬ñÎ

þÉôÀΦ¸¡¨ÄìÌôÀ¢ýɧà þÂì¸í¸Ç¢ø «¾¢¸

«ÇÅ¢ø Áì¸û ¾í¸¨Ç þ½òÐ즸¡ñ¼É÷.

²¾¡ÅÐ ´Õ þÂì¸ò¾¢ø þ¨½óÐ

§À¡Ã¡¼§ÅñÎõ ±ýÈ ¯óоĢø þ¨½ó¾¡÷¸§ÇÂýÈ¢

þó¾ þÂì¸ò¾¢ø þ¨½óо¡ý §À¡Ã¡¼§ÅϦÁýÈ

¯Ú¾¢Ô¼ý þÕì¸Å¢ø¨Ä.

þÂì¸í¸¨Ç Àü颃 ¦¾Ç¢×õ «ó¾¿¡ð¸Ç¢ø

þÕó¾¾¢ø¨Ä.

þÂì¸í¸Ç¢ý ¾¨ÄÅ÷¸û, §ÁøÁð¼ ¯ÚôÀ¢É÷¸û

Ţ𼠾ÅÚ¸ÙìÌ. «ÊÁð¼ ¯ÚôÀ¢É÷¸û À¡Åõ

±ýÉ ¦ºöÅ¡÷¸û.

Link to comment
Share on other sites

ஓம் அது சரி தான் பலரது வாழ்க்கை இந்த மோசடித் தலைவர்களால் சீரழிக்கப்பட்டது, ஆனால் இந்தத் துயரம் இன்றும் தொடர்வது தான் கவலை அழிக்கும் விடயம்.என்று இவர்கள் சரியான பாதயைத் தேர்ந்து எடுக்கப் போகிறார்கள்?

மோசடியான தலமையை இனங்கண்டு கொள்ளாததில் இவர்களின்

பங்கும் உண்டு அல்லவா?தாங்களாகவே விலகி ,போராட்டத்தின் சரியான தலமையின் கீழ் ஒன்று இணயலாமே?

தொண்டர்கள் இருப்பதால் தான் தலைவர்கள் உருவாகிறார்கள்.தொண்டர்கள் இல்லாது விடின் தலமை இல்லை.ஆகவே என்று இந்த தொண்டர்கள் தங்கள் பிழையை உணர்ந்து விலகுகிறார்களோ அன்றே இந்த மோசடித் தலமைகள் தனித்து விடப்படும்.இன்றய டக்கிளசு,வரதர் அணி,கருணா குழு இஎன்டிஎலெf எல்லாம் தொண்டர்கள் இன்றி இயங்க முடியாது.

Link to comment
Share on other sites

கேக்கிறதுக்கு நல்லாயிருக்கிற விடயங்கள்

செயல்படுத்தும் போதுதான்...................:?: ஆகின்றன.

கமியூனிசம் பேசுறதை கேட்கும் போது

ஆகா என்று வாய் பிளக்க வைக்கும்.

ஆனால் நடைமுறையில்

சாத்தியக் குறைவுகள் அதிகம்.

நாம்

ஒன்றுபட வேண்டும் என்று சொல்லுகின்ற நண்பர்களே

நமக்குள் பிரிவுகள் அதிகரிக்கக் கூடிய

விடயங்களை தூக்கிப் பிடித்து பேசுகிறோம்.

தலைவர்களாக இருப்போர் கூட

இப்படிப் பேசாதீர்கள் - நாம்

பழைய பிரச்சனைகளை மறந்து

இப்போதாவது ஒன்றுபட வேண்டும் என்று

மனம் திறந்து சொல்வதில்லை.

பிரிவுபட்டு இருப்பது என்னவோ

தற்காலிகமாக வெற்றியாகத் தெரியலாம்.

அது தொடர் வெற்றியாக வாய்ப்பே இல்லை.

சிந்திக்க வேண்டியோர் சிந்திப்பார்களா?

நாமே

நமக்குள் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு நின்றால்

நாம் எப்போது ஒன்றுபடுவது?

உலகமே நம்மை எதிர்த்தாலும்

நாம் மனதாலாவது இணைந்து நின்றால் - அதுவே

ஒரு பாரிய சக்தியை உருவாக்கும்.

நேற்றைய மாலை நான் எனது சுவிஸ் நண்பர்களோடு கழித்தேன்.

காரணம் சுவிசின் உதைபந்தாட்ட விழா ஒருங்கிணைப்புக்காக..........

அவர்களது தேசப்பற்று மட்டுமல்ல அவர்களோடு வாழும்

வேற்று இனத்தவர்களையும் மதிக்கும் குணத்தைக் கண்டு

நெகிழ்வாக இருந்தது.

ஒரு சுவிஸ் நண்பன்

முதல் நடந்த குரவேசியா விளையாட்டைப் பற்றிய பேச்சோடு

"யுகோகள்.......அவர்கள் கிரிமினல்கள்" என்றான்.

பக்கத்திலிருந்தவன் சொன்னான்

"நீ றேசிசமாக (இனவாதமாக) பேசுகிறாய்

அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.

இப்படிப் பேசாதே" என்றான்.

முதலில் பேசியவன் மெளனமானான்.

உதைபந்தாட்டத்தை அகன்ற திரையில் பார்த்துக் கொண்டிருந்தோம்.

சுவிஸ் வீரர்களுக்காக மட்டுமல்ல.

கொரிய வீரர்களது அபாரத்துக்காகவும்

அவர்கள் கரகோசம் செய்தார்கள்.

:?: :?: :?: :?:

இரவு முழுதும் நானும்

நான் வாழும் தேச வெற்றிக் கழிப்பில்

என் நண்பர்களோடு கலந்தேன்.

pr1556030ge.jpg

இது போல்

நம் மனங்களும் ஒன்றுபடுமானால் எதிர்காலத்தில்

நாமும் ஒன்று பட்டு நிற்போம்.

என்று எனக்குள் தோன்றியது.

அதை இங்கு உள்ள யாழ் கள நண்பர்களான நாமாவது செய்வோமா?

நீ வழிகாட்டியாய் இரு

அடுத்தவன் அதைத் தொடர்வான்.-யாரோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதிக்கும் நீதிக்கும் வித்தியாசம் தெறியாதவர்கள் இங்கே கதைக்க கூடாது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா! நான் கூட நீங்கள் போட்ட படத்தைப் பார்த்த பிறகு நான் கூட சுவிசுக்குத் தான் சப்போட்! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.