Jump to content

பாம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

குறிப்பு.

 

பாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன.

 

 

 

பாம்பு

Mia_Ngoo--large-msg-114707533575.jpg

 

 

“க்வ்”………. முனகலும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஈனசுரத்தில் எழுந்து அடங்கியது குரல். அடிவயிற்றைக் கைகளால் அழுத்தியபடி இருண்ட கொட்டிலுக்குள் அவ்வுருவம் சுருண்டு விழுந்தது.

 

அந்தக்கரையில் இருந்த திடீர் தேனீர் கடையின் முன்னால் டிரம்மில் கிடந்த தண்ணீரில் சேறாகிய பஞ்சாபியைக் கழுவிக் கொண்டாள் சுபாங்கி. ஈரம் சொட்டச்சொட்ட பஞ்சாபி உடலோடு ஒட்டியது. சிறு குடிலான திடீர் தேனீர்கடையில் லாந்தர் சின்ன மின்மினியாக அந்த இருளுக்குள் ஒளிதரும் தேவதையைப்போல் சிரித்தது. அந்தத் தேவதையின் சிரிப்பை அதிகம் பரவவிடாமல் மேல்பக்கம் தடுக்கப்பட்டதில் உயிர்ப்பயம் தெரிந்தது. அக்கடையில் சுடச் சுட வாய்ப்பனும் பிளேன் ரீயும் வாங்கித் தந்த தகப்பனிடம் ஆனந்தைக் கொடுத்துவிட்டுச் சாப்பிடும் நேரத்தில்….., பேரிரைச்சலோடு சடசடவென மழை கிளம்ப…, அங்கு தற்காலிகமாக வேயப்பட்ட அரைகுறை நிலையில் தென்பட்ட குடில்களுக்குள் நின்றவர்கள் ஓடி ஒதுங்கிக் கொண்டார்கள். சுபாங்கியும் தந்தையும் கூடவே பயணம் செய்யும் சுபனும் சுபாங்கியின் மகன் ஆனந்த்தைத் தூக்கிக் கொண்டு அக்குடில் ஒன்றுக்குள் புகுந்து கொண்டனர்.

 

பேரிரைச்சலுடன் இடி முழங்கியபடி மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. வெளிச்சமற்ற குடில்களுக்குள் ஆளையால் நெருக்கியபடி நின்றவர்கள்…பயணம் எப்படி தொடர்வது என்ற அங்கலாய்த்து நிற்க, பிள்ளைக்கு மழைச்சாரல் அடிக்காது காக்க சுபாங்கி குடிலின் தாழ்ந்த முனைக்குள் சென்று நின்று கொண்டாள். குடிலின் முன் பகுதியில் தகப்பனும் சுபனும் மழை நிற்கும் நேரம் அவசரமாக தொடரவேண்டிய பயணத்திற்காக அந்தரப்பட்டனர். சுபாங்கிக்கும் அவர்களுக்கும் இடையில் வேறு சிலர் புகுந்து நிரவிக் கொண்டார்கள்.

 

இருள், தனிமை, மழை ஆனந்த் கண்களை இறுக மூடியபடி தாயை இறுக்கிகட்டிக் கொண்டான். அவன் பயத்தைப் போக்க சுபாங்கியும் அந்த மழலையின் முதுகையும் தலையையும் வருடியபடி நிற்க முதுகில் ஏதோ ஊர்ந்தது. மனம் கிலீரிட்டது. ஏற்கனவே அவ்விடத்தில் பாம்புகள் அதிகம் என்ற பயம் குளிரைத்தாண்டி நடுக்கத்தைக் கொடுத்தது. ஊர்வதும் நிற்பதுமாக சிறிது நேரம் நகர்ந்தது. அருகில் இருப்பர்களை பார்க்கமுடியில்லை அந்தகார இருள் மின்னல் அடிக்கும் இடைவெளிக்குள் பார்த்தால்தான் உண்டு. மழைக்காக ஒதுங்கியவர்கள் தன்னுடன் நிற்பதை சுபாங்கியால் உணர முடிந்தது. மனதிற்குள் இல்லாத கடவுள்களை எல்லாம் கூப்பிட்டு வேண்டுதல்களை அடுக்கிக் கொண்டேபோனாள். திரும்பிப் பார்க்க அவளுக்குப் பயமாக இருந்தது.

 

நேரம் ஆக ஆக ஊர்வதில் வித்தியாசங்கள் தோன்ற ஆரம்பித்தன. மெல்ல ஏறியும் இறங்கியும் அசையத் தொடங்கியது. இரண்டு கைகளாலும் பிள்ளையை அணைத்திருந்தவள். பாம்பு எங்கிருந்து நீள்கிறது என்பதை அந்த இருட்டுக்குள் அறிய முற்பட்டாள். இருமருங்கிலும் நெருக்கமாகப் பலர். சுபாங்கி முதுகை நெளித்து சற்று முன்னகர்ந்தாள்.. ஊர்ந்த பாம்பு சட்டென நின்றது. வெளியே மழை விட்டேனா பார் என்று விசமத்திற்கு தலை விரித்தாடியது. இடைவெளிவிட்டு மீண்டும் தொடங்கிய பாம்பு சற்று அழுத்தமாக உரச ஆரம்பித்தது. அந்த இருளுக்குள் எந்தப்பக்கத்தில்இருந்து பாம்பு ஊர்கிறது என்பதை அடையாளங் காணுவதற்காக பல்லைக் கடித்தபடி இரும்பாக நின்றாள் சுபாங்கி. இப்போது பாம்புக்கு சற்று துணிவு வந்துவிட்டதுபோல் அலையோதும் உரசலுடன் அவள் கைகளுக்கு இடையால் பட்டென நுழைந்து அவள் தனத்தை வெறித்தனமாக தொட்டுவிட்டு சட்டென மறைந்தது.

 

மழை மெதுவாக தூர ஆரம்பித்தது. முன்னுக்கு நின்ற தகப்பனும் சுபனும் குடையை விரித்துக் கொண்டு ஒரு மைல் தூரம் நடந்தால் உடனடியாக வாகனத்தைப் பிடிக்கலாம் என்று பயணவழிகாட்டி சொல்வதாக சுபாங்கியை முன்னே வரும்படி அழைத்தனர். இவர்களுடன் பயணத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களும் திபுதிபுவென தமது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர்.சுபாங்கி கால்களுக்குள் முறிந்து கிடந்த சிலாகையை குனிந்து எடுத்துக் கொண்டாள். இருளில் குனிவைத் தனக்குச் சாதகமாக எண்ணிய பாம்பு முன்னரைக்காட்டிலும் உசுனத்துடன் நெருங்கியது.

 

விறுவிறென்று ஒற்றைக்கையை உதறியபடி மற்றக்கையால் பிள்ளையை அணைத்தபடி வெளியே வந்த சுபாங்கி சுபன் விரித்துக் கொடுத்த குடையை வாங்கி பயண வழிகாட்டியை நோக்கி மற்றவர்களுடன் தந்தையோடு சேர்ந்து நடந்தாள்.  



 

Edited by வல்வை சகாறா
  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகத்தான் இருக்கிறது. முதலில் உண்மையான பாம்பின் கதைதான்
கூறப்போகிறீர்கள் என்று பயந்துவிட்டேன். எனக்கு பாம்பு என்றாலே பயம்.
மனிதரிலும் பாம்பு பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகத்தான் இருக்கிறது. முதலில் உண்மையான பாம்பின் கதைதான்

கூறப்போகிறீர்கள் என்று பயந்துவிட்டேன். எனக்கு பாம்பு என்றாலே பயம்.

மனிதரிலும் பாம்பு பரவாயில்லை.

 

பாம்புக்கதைகள் என்றால் எனக்கு கேட்க ஆசை. அதற்காகவே சின்ன வயதில் காளிங்கன் கதையை அடிக்கடி பேரனிடம் கேட்பேன் எத்தனை தடவை சொல்லியிருப்பாரோ தெரியவில்லை. நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள்.

 

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி சுமேரியர். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

 

விசுகு அண்ணா "ம்ம்ம்" என்று இழுத்திருக்கிறீங்கள். ஏன் வார்த்தைகள் வரவில்லையோ? :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா "ம்ம்ம்" என்று இழுத்திருக்கிறீங்கள். ஏன் வார்த்தைகள் வரவில்லையோ? :mellow:

 

 

கோபம் வருகுதில்ல.............

 

சகாரா படம்(பாம்பு) என்று  பார்க்க ஓடிவந்த எனக்கு எவ்வளவு கடுப்பு வரும்(நாலு வரி கதையைப்படித்ததும்.) :D

Link to comment
Share on other sites

லைட் அணைந்தால்   அனேக ஆண்கள் பாம்புகள் தான் ,
அதற்கு இடம் பொருள் காலம் இல்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபம் வருகுதில்ல.............

 

சகாரா படம்(பாம்பு) என்று  பார்க்க ஓடிவந்த எனக்கு எவ்வளவு கடுப்பு வரும்(நாலு வரி கதையைப்படித்ததும்.) :D

 

நாங்கள் பாம்புப்படமும் போடுவமெல்லோ..... :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

நாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப்  பாம்பா

எல்லாவற்றிற்கும் கொத்துவதுதான் குணம்.

Link to comment
Share on other sites

தரமான உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் . பாம்புகள் என்றும் , எதிலும் , எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கும் . நாம்தான் இந்தப் பாம்புகளில் இருந்து  அவதானமாக எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . என்னவாக இருந்தாலும் பாம்புக்குப் பால் ஊற்றுவது எமது பிழை தானே ???  அத்திபூத்த உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப்  பாம்பா

எல்லாவற்றிற்கும் கொத்துவதுதான் குணம்.

நான் நினைக்கிறேன் இந்தப்பாம்புக்கு பொத்துறது தான் குணம் போல :D

Link to comment
Share on other sites

இது ஏதோ ஈவ்டீசிங் கதை போல் உள்ளது.. :D அண்மையில் கமல் படம் வெளிவந்த பாதிப்பில் குழப்பமாக எழுதியுள்ளார் கதாசிரியர்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வரட்டுக் கவுரவங்களுக்கும், எழுதப் படாத சமூக விதிகளுக்கும், பழக்கப் பட்டுப் போன பாம்பு போல இருக்கு! :o

 

இந்த வகையான பாம்புகள், அடிக்கடி செட்டையை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவையாக இருக்கும்!  :D

 

இது என்ன தொடரா, வல்வை? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. அழகியைப் பாம்பு இறுக்கி அணைப்பது போன்று படத்தைப் போட்டுவிட்டு பாம்பை அடிக்க சிலாகையை தூக்குவது மாதிரிக் கதை போவது சரியா?

Link to comment
Share on other sites

சகாறா அக்கா, இடப்பெயர்வின் போது காடுகளுக்கூடான பயணங்களின் போது பாம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்தாலும் இதில் அந்த பெண் மேல் ஊர்ந்த பாம்பு என்று கூறியது ஆண் ஒருவரை தானே. :D

இது தொடருமா? அல்லது முடித்து விட்டீர்களா? :rolleyes:

Link to comment
Share on other sites

சகாறா அக்கா, இடப்பெயர்வின் போது காடுகளுக்கூடான பயணங்களின் போது பாம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்தாலும் இதில் அந்த பெண் மேல் ஊர்ந்த பாம்பு என்று கூறியது ஆண் ஒருவரை தானே. :D

 

இதுவரி நீங்கள் வில்லங்கமாக புகுந்து கேட்டவற்றில் அல்லது ஆலோசனை சொன்னவற்றில் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் அக்கா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இ.போ.ச. பஸ்சிற்குள்ளும் தனியார் போக்குவரத்து வாகனங்களுள்ளும் எத்தனையோ பாம்புகள் படமெடுப்பதை பார்த்திருக்கிறேன். நல்லதொரு கதையை நறுக்கென்று சொன்ன சகாராவுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

கதை நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள். கதையின் முகப்பில் வந்த சித்திரமும் முடிவில் வந்த சிலாகையும்  ஒரு குறும்படம் பார்த்த உணர்வைத் தந்தன.

 
பாம்பு, பாம்பாட்டி, மகுடி,கூடை, பார்வையாளர்கள் என்ற சீன் எப்போதுமே அகவெளியியில் உணர்வுகளின் cocktailலினைத் தோற்றுவிப்பன தான். பாம்பிற்கு மனிதனைப் போன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம் இல்லை, அல்லது பாம்பு வெளிப்படுத்தும் உணர்வுகளை மனிதனால் முற்றாகப் புரிய முடிவதில்லை. ஆனால் பாம்பாட்டிக்கு முகமுண்டு. பார்வையாளர்கள், பாம்பைப் பார்க்கும் அளவிற்குப் பாம்பாட்டியினையும் பார்ப்பார்கள். பாம்பின் விசம் அகற்றப்பட்டுவிட்டது என்று உறுதியளிக்கப்படினும் கூட எங்கே அந்தப் பாம்பு தன்னைத் கொத்திவிடுமோ என்ற தோரணையில், முதன்முதலாக வெடிகொழுத்தும் சிறுவனைப் போல, பாம்பாட்டி ஊதிக்கொண்டிருப்பதாய்ப் பார்ப்பவர்களிற்குத் தெரியும். மேலும், வயிற்றுப் பிளைப்பிற்காகப் பாம்பாட்டி ஊதிக்கொண்டிருக்கையிலும், மகுடி ஊதுவது தொழிலிற்கு அப்பால் பாம்பாட்டிக்குப் பிடித்ததொன்றோ என்றும் தோன்றும். அது போல, பாம்பு ஆடுவது மகுடி இசை அதற்குப் பிடித்ததால் நிகழ்கிறதா, அல்லது அதன் சக்தியினை மேவி அந்த இசை அதனை அவ்வாறு ஆட்டுவிக்கின்றதா என்றும் தோன்றும். மொத்தத்தில் பாம்பு, அது சிறைவைக்கப்பட்டிருக்கும் ஓலைப் பெட்டி, பாம்பாட்டி, மகுடி என்பனவெல்லாம் கட்டுப்பாடுகளாகவும், அத்துமீறல்களாகவும், இயல்பிற்கு அப்பாற்பட்டனவாகவும் பார்வையாளரிற்குத் தெரிகின்ற அதே நேரத்தில்; ஆபத்தான, இயல்பிற்குப் புறம்பான,அத்துமீறப்படும் அந்தத் தருணங்களைப் பாம்பாட்டியும் பாம்பும் ரசிக்கிறார்கள் என்றும் பார்வையாளர்களிற்கு எண்ணத்தோன்றும். மேற்படி காட்சி சார்ந்த பார்வையாளர்களின் இந்த அகவெளி முரண், சில்லறைகளைப் பெட்டிக்குள் விளச்செய்கின்றது. இருப்பினும், பார்வையாளர்களின் மனதிற்குள் வாழ்கின்ற ஒழுங்கு சார்ந்த ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, மகுடி நிறுத்தப்படின் அந்தப் பாம்பு அந்தப் பாப்பாட்டியினைக் கொத்தும், அப்படி அது கொத்தினால் பாம்பாட்டி சாவான் என்று அவர்களை நம்பச் செய்கின்றது. பாம்பு பாம்பாட்டியின் வாசிப்பை ரசிப்பது போல் தெரியினும், உண்மையில் அது கொத்துவதற்கான தருணம் பாத்துத் தான் ஆடுகிறது என்றும் பார்வையாளர் நம்புவர். ஆனால், இதெல்லாம் பாம்பிற்கும் பாப்பாட்டிக்கும் முற்றிலும் அப்பாற்பட்ட பார்வையாளரின் மனவெளி வாசிப்புக்குள் மட்டும் தான்.
 
உங்கள் கதையின் முகப்பில் வந்த அழகியினைச் சுத்திய பாம்பின் சித்திரமும், முடிவில் வந்த சிலாகையும் குறித்த காட்சி சார்ந்த பார்வையளாரின் அகவெளியினைக் காட்டிநிற்கின்றனவோ என்று தோன்றுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. அழகியைப் பாம்பு இறுக்கி அணைப்பது போன்று படத்தைப் போட்டுவிட்டு பாம்பை அடிக்க சிலாகையை தூக்குவது மாதிரிக் கதை போவது சரியா?

 

ஐக் அடிக்கும் கதையை எழுதுவதற்கு தெரிவு செய்த இடம் சரியில்லை

Link to comment
Share on other sites

இப்பொழுதெல்லாம் இப்படியான பாம்புகளிற்கு இன்னும் வாய்பளிக்கும் வண்ணம் எமது மண்ணின்  கலாச்சாரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது சகாரா . உலகெங்கும் இப்படியான பாம்புகள் உலவுகின்றன. .. பெண்கள் தான் உஷாராக வேண்டும். 

நடப்பை நகர்த்திய விதம் மிக நன்று... 
Link to comment
Share on other sites

உலகில் தைரியமற்ற பாம்புகள் தான் ஒருவரின் சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கி படர நினைக்கும். இது ஒரு கோழைப் பாம்பு.

 

இங்கு பாம்புகள் எவ்வளவு அதிகமோ அதே போன்று பற்றிப் படர்ந்து தன் வலைக்குள் சிக்க வைக்கும் சிலந்திகளும் அதிகம். பாம்புகளும் சிலந்திகளும் கொண்டது தான் இந்த சமூகம்.

 

இக் கதையில் கையாளப்பாட்ட சொற்களில் தனித்து ஒட்டாமல் நிற்கும் ஒரு சொல்லாக 'தனம்' என்று சொல்லு இருக்கு.

 

Link to comment
Share on other sites

பாம்பிற்கு போட்டியாக ஒரு சிலந்தி கதை எழுதினால் போச்சு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைட் அணைந்தால்   அனேக ஆண்கள் பாம்புகள் தான் ,

அதற்கு இடம் பொருள் காலம் இல்லை .

 

இடம் பொருள் காலம் இல்லை என்றால் லைட் அணைத்தாலும் ஒன்றுதான் விட்டாலும் ஒன்றுதான் அர்யூன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரமான உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் . பாம்புகள் என்றும் , எதிலும் , எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கும் . நாம்தான் இந்தப் பாம்புகளில் இருந்து  அவதானமாக எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . என்னவாக இருந்தாலும் பாம்புக்குப் பால் ஊற்றுவது எமது பிழை தானே ???  அத்திபூத்த உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் .

 

நன்றி கோமகன்.

சூழலை சாதகமாகப் பயன்படுத்தி விழுங்கும்  பாம்புகளிடம் அவ்வளவு சீக்கிரம் தப்பித்துவிடமுடியாது. இக்கருத்தின் மூலம் எதிர்பாலரிடம் தவறு இருக்கிறது என்று நிறுவ முயல்கிறீர்கள். இலகுவாக குற்றச்சாட்டுகள் வைத்து இரு பாலரும் வாதிடலாம். கட்டற்ற சுதந்திரம், எதனையும் எவரும் எப்படியும் ஆளலாம் என்னும் பயமற்ற தன்மையும் இப்படியான நிகழ்வுகளைத் தோற்றுவிக்கும் அதற்கு ஆண் பெண் இரு பாலரும் விதிவிலக்கல்ல. :rolleyes:

 

நாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப்  பாம்பா

எல்லாவற்றிற்கும் கொத்துவதுதான் குணம்.

 

அப்ப கொத்தாத பாம்பே இல்லை தப்பிலி? :D

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கொஞ்சம் சந்தேகமாய் உள்ளது.விரைவில் யாழ்களமாடும் தேர்தல் வருமோ என்ற கேள்வியுமுண்டு.

:rolleyes:

 

ஏன் மறுபடியும் என்னை பாம்புக்குரூப்பிற்கு தலைவியாக்கத் திட்டமா? நடக்காது நீலப்பறவை :icon_mrgreen:

நான் நினைக்கிறேன் இந்தப்பாம்புக்கு பொத்துறது தான் குணம் போல :D

 

கொத்துறதா? பொத்துறதா? :blink::unsure:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.