Jump to content

தி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி பலிக்காது: கருணாநிதி


Recommended Posts

சென்னை: தி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி பலிக்காது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்முகாமில் இருந்து இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனது மகன்கள் யாரும் இந்த செயலில் ஈடுபடவில்லை என நான் உறுதியாக நம்புகிறேன். தி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்த முயற்சி வெற்றி பெறாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர்

Link to comment
Share on other sites

முதலில் இவங்க சகோதர யுத்தத்தை நிறுத்துங்கப்பா அப்புறம் சகோதர யுத்தத்தால் தான் திமுக அழிந்தது என்று வரலாறு பழிக்கும். இதுக்குத்தான் தமிழ் முறைப் படி ஒரு மனைவி பிள்ளையள் எண்டு இருந்தால் இந்த பிரச்னை இல்லை . தெலுங்கு முறைப்படி கையுக்கு ஒண்டு காலுக்கு ஒண்டு தலைக்கு ஒண்டு என்று பலரைக் கட்டினா எப்பிடி ஒற்றுமை வரும்  :lol:

Link to comment
Share on other sites

தலைதூக்கியுள்ளதா வாரிசு யுத்தம்?!

 



திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

Link to comment
Share on other sites

எனது மகன்கள் யாரும் இந்த செயலில் ஈடுபடவில்லை என நான் உறுதியாக நம்புகிறேன். தி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்த முயற்சி வெற்றி பெறாது.

கருணாநிதியே நோயையையும் சொல்லி நோயுக்கு மருந்தையும் சொல்கிறார். இனி நாம் இதில் சொல்ல என்ன இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஸ்டாலினுக்கு எதிரான கருத்து: குஷ்பு வீடு மீது திமுகவினர் தாக்குதல்

 

மு.க.ஸ்டாலின் குறித்து வாரப் பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்திருந்த நடிகை குஷ்பு மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

வாரப் பத்திரிகையில் பேட்டி அளித்திருந்த நடிகை குஷ்பு, மு.க. ஸ்டாலின் தலைவராக இன்னும் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். இவரின் இந்தக் கருத்துக்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 

திமுகவில் இருந்தாலும், மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்மறையான கருத்து தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து, இன்று பகல் 12 மணி அளவில் குஷ்புவின் சென்னை பட்டினப்பாக்கம் வீடு மீது கல் எறிந்தனர் திமுகவினர் சிலர்.

 

வீட்டின் எதிரே திடீரெனத் திரண்ட பெண்கள் உள்ளிட்ட சிலர், குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டபடி இருந்தனர். பிறகு வீட்டின் மீது சரமாரியாகக் கல்வீசி தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.


இதில் அவர் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடி உடைந்தது. அலங்கார விளக்குகள், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

 

http://dinamani.com/latest_news/article1453812.ece

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

 

 

வீட்டின் எதிரே திடீரெனத் திரண்ட பெண்கள் உள்ளிட்ட சிலர், குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டபடி இருந்தனர். பிறகு வீட்டின் மீது சரமாரியாகக் கல்வீசி தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.

 

தானைத் தலைவரின் கமாண்டோக்கள்..! :D

 

Link to comment
Share on other sites

தானைத் தலைவரின் கமாண்டோக்கள்..! :D

 

தலைவரை விட பரவாயில்லை அவர் உண்ணாவிரதம் மட்டும் தான், இரண்டு மணி மட்டும் :D

Link to comment
Share on other sites

வன்முறையில் ராஜபக்ஷாவை விட மோசமான பேர்வழி. குடும்ப ஆட்சியில் ராஜபஷா குடும்பத்தைவிட மோசமான குடும்பம்.  சொத்து சேர்ப்பதில் ராஜபஷாகளை தாண்டிவிட்டவர்கள். திருதாள ராஜதந்திரத்தில் ராஜபக்ஷாகளுக்கு நிகர். ராஜபஷாகள் மாதிரியே ஈழத்தமிழர் நலங்களை வைத்து அரசியல் செய்கிறார். குஷ்பு அல்ல எந்த குப்பை வந்தாலும் பரவாயிலை இந்த (பொன்சேக்காவின்) கோமாளைகளை பதவியிலிருந்து துரத்திவிட.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.