Jump to content

இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை!


Recommended Posts

koththurotti.jpg


ஒரு உலோகத்தட்டை அடுப்பின் மீது வைத்து தேவையான பொருட்களை கொட்டி இரண்டு சிறிய உலோகத்தகடுகளால் அவற்றை கொத்தி, ட்ரம்ஸ் அடிப்பது போல நல்ல சத்தம் எழுப்பிச் செய்வதுதான் வழக்கமான கொத்து ரொட்டி செய்யும் முறை. அந்த வசதியில்லாதவர்கள் இந்த முறையில் இலகுவாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்

இறைச்சி கறி (ஆடு அல்லது மாடு) - அரை கப்
முட்டை - 1

பின்வரும் பொருட்களை தனித் தனியே சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.

வீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி - 2
லீக்ஸ் (பச்சை இலை) - கைப்பிடியளவு
மஞ்சள் கோவா - கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக
சிறிய தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை - ஒரு இணுங்கு

(கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு அரியலாம். ஆனால் கவனமாக வெட்ட வேண்டும். கூட நேரம் விட்டால் தூளாக்கி விடும்.)

செய்முறை

ஒரு தவாவை (Non Stick Pan) அடுப்பில் வைத்து அது சூடாகியபின் ஒரு மேசைக் கரண்டி எண்ணை விடவும். எண்ணை சூடாகியபின் தக்காளி துண்டங்களை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
பின் கோவாவைப் போட்டு 2 -3 நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின் பச்சை மிளகாயை / லீக்சை கொட்டி 1 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பு தூள் தூவவும். பின் முட்டையை உடைத்து தாளித்த கலவைமேல் ஊற்றி பிரட்டவும். உடனடியாக ரொட்டித் துண்டங்களையும் இறைச்சிக் கறியையும் மாறி மாறி போட்டு பிரட்டி அதன்பின் தீயை மிதமாக்கி
3-4 நிமிடங்களுக்கு பிரட்டி இறக்கவும். இறக்கும் முன் முட்டை அவிந்து விட்டதா என பார்க்கவும். இல்லாவிட்டால் பச்சை முட்டை வாசனை வரும்.


வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை உங்களின் விருப்பத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஒருதரம் செய்து பார்த்தால் பொருட்களின் அளவையும் அவை வேக வேண்டிய நேரத்தையும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். இதில் முக்கியமானது அடிக்கடி பிரட்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.
ஊரில் இந்த மரக்கறிகள் தான் போடுவார்கள். புலத்தில் வேறு மரக்கறிகளும் சேர்க்கிறார்கள்.
நேரம் கிடைக்கும்பொழுது அடிக்கடி செய்வேன். சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Link to comment
Share on other sites

முட்டை சாப்பிடவிட்டாலும் உங்கள் கொத்திரட்டியைப்பார்க்க இப்பவே சாப்பிடவேண்டும்போல் இருக்கின்றது... செய்முறைக்கு நன்றி தப்பிலி அண்ணா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த சாப்பாட்டில் கொத்து ரொட்டிக்கு முதலாவது இடம்.smiley-eatdrink022.gif

தப்பிலியின் செய் முறை இலகுவானது போல் உள்ளது.

இவ்வளவு நாளும் செய்த கொத்து ரொட்டிக்கு கோவா போடவில்லை.

இனிச் செய்யும் போது.... கோவா போட்டால் சுவை அதிகமாக இருக்கும் போல் உள்ளது.smiley-eatdrink026.gif

இங்கு வெட்டிய கொத்து ரொட்டியை பைகளில் அடைத்து விற்கிறார்கள்.

ரொட்டி சுட்டு மினக்கெடாமல், வெட்டிய கொத்து ரொட்டியை போட்டு கிளறினால்..... நேரம் மிச்சம்.

இணைப்புக்கு நன்றி தப்பிலி. :)

Link to comment
Share on other sites

ஆஹா... :wub: கொத்து ரொட்டி.... ஒரு நாளைக்கு செய்தது பார்த்திட வேண்டியது தான்! இணைப்பிற்கு நன்றி தப்பிலி :) (ஆசைக்கு தமிழ் கடைகளில் கொத்து ரொட்டி வாங்கினால் அநியாயத்துக்கு செத்தல் மிளகாயை அரைச்சுப் போட்டு வாய்ல வைக்க ஏலாத அளவுக்கு உறைப்பாய் சில நேரங்களில் இருக்கும் :blink: மட்டன் கொத்து என்று லேபில் இருக்கும் ஆனால் கோழி இறைச்சியும் சேர்த்து கொத்தி இருப்பார்கள் ...<_< )

Link to comment
Share on other sites

முட்டை சாப்பிடவிட்டாலும் உங்கள் கொத்திரட்டியைப்பார்க்க இப்பவே சாப்பிடவேண்டும்போல் இருக்கின்றது... செய்முறைக்கு நன்றி தப்பிலி அண்ணா :D

முட்டை போடாமலும் இதைச் செய்து சாப்பிடலாம் சுஜி. :)

எனக்குப் பிடித்த சாப்பாட்டில் கொத்து ரொட்டிக்கு முதலாவது இடம்.smiley-eatdrink022.gif

தப்பிலியின் செய் முறை இலகுவானது போல் உள்ளது.

இவ்வளவு நாளும் செய்த கொத்து ரொட்டிக்கு கோவா போடவில்லை.

இனிச் செய்யும் போது.... கோவா போட்டால் சுவை அதிகமாக இருக்கும் போல் உள்ளது.smiley-eatdrink026.gif

இங்கு வெட்டிய கொத்து ரொட்டியை பைகளில் அடைத்து விற்கிறார்கள்.

ரொட்டி சுட்டு மினக்கெடாமல், வெட்டிய கொத்து ரொட்டியை போட்டு கிளறினால்..... நேரம் மிச்சம்.

இணைப்புக்கு நன்றி தப்பிலி. :)

எனக்கும் பிடித்த உணவும் கொத்து ரொட்டிதான் சிறி. கொத்து ரொட்டி செய்வதில் நேரமெடுக்கும் காரியம் இந்த ரொட்டி சுட்டு வெட்டுவது. வெட்டிய ரொட்டியை வாங்கிக் கொத்தினால் வேலை இலகுவாக முடிந்துவிடும்.

ஆஹா... :wub: கொத்து ரொட்டி.... ஒரு நாளைக்கு செய்தது பார்த்திட வேண்டியது தான்! இணைப்பிற்கு நன்றி தப்பிலி :) (ஆசைக்கு தமிழ் கடைகளில் கொத்து ரொட்டி வாங்கினால் அநியாயத்துக்கு செத்தல் மிளகாயை அரைச்சுப் போட்டு வாய்ல வைக்க ஏலாத அளவுக்கு உறைப்பாய் சில நேரங்களில் இருக்கும் :blink: மட்டன் கொத்து என்று லேபில் இருக்கும் ஆனால் கோழி இறைச்சியும் சேர்த்து கொத்தி இருப்பார்கள் ...<_< )

நானும் அலுப்பாக இருந்தால் சிலவேளை கடைகளை வாங்கிச் சாப்பிடுவதுண்டு. நன்றாக இராது. நாங்களே செய்தால் எங்களின் ருசிக்கேற்ப தயாரித்துக் கொள்ளலாம். வெட்டிய ரொட்டி இருந்தால் மிக இலகுவாகச் செய்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தப்பிலி!

கொத்து ரொட்டி சைவமாக வேணுமெண்டால் முட்டையை தவிர்த்து இறைச்சிக்கு பதில் சோயா அல்லது காளான் போட்டுச் செய்தாலும் ருசியாக இருக்கும்! :)

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி தப்பிலி!

கொத்து ரொட்டி சைவமாக வேணுமெண்டால் முட்டையை தவிர்த்து இறைச்சிக்கு பதில் சோயா அல்லது காளான் போட்டுச் செய்தாலும் ருசியாக இருக்கும்! :)

நன்றி சுவி. காளான் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். செய்து பார்க்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தப்பிலி!

கொத்து ரொட்டி சைவமாக வேணுமெண்டால் முட்டையை தவிர்த்து இறைச்சிக்கு பதில் சோயா அல்லது காளான் போட்டுச் செய்தாலும் ருசியாக இருக்கும்! :)

சுவி, கொத்து ரொட்டியை மச்சமாக சாப்பிடுவதே சுவையானது.

சைவமாக சாப்பிட வேணுமென்றால்.... இட்டலி, தோசை, உப்பு மா சாப்பிடுவதே பொருத்தமானது.

அந்தந்த சாப்பாட்டுக்கு... என்ன, என்ன கூட்டுச் சேரவேணுமென்று ஒரு விதி முறை இருக்கு. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொத்து புரோட்டா பதிவுக்கு நன்றி தோழர்.. தப்பிலி.. :)

Link to comment
Share on other sites

கொத்து புரோட்டா பதிவுக்கு நன்றி தோழர்.. தப்பிலி.. :)

நன்றி தோழர்.

முன்பெல்லாம் நிறைய சமையல் குறிப்புகள் இணைப்பீர்கள். இப்ப கலியாணக் கனவுளில் மூழ்கித் திளைக்கிறீர்கள் போல. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்.

முன்பெல்லாம் நிறைய சமையல் குறிப்புகள் இணைப்பீர்கள். இப்ப கலியாணக் கனவுளில் மூழ்கித் திளைக்கிறீர்கள் போல. :D

ரொம்ப சரி தோழர் ..:D அவளுக்கு சமையல் துறை அவ்வளாவாக தெரியாது.. இந்த துறையில் கூடுமானவரை பயிற்சிகள் அளிக்க உத்தேசித்துள்ளேன் :D

டிஸ்கி

சில மாதங்கள் மட்டும் தான்...மேலதிக விபரங்களுக்கு எனது திருமணத்திற்கு வருதாக இருந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்க தோழர்

Link to comment
Share on other sites

தப்பிலி, கொத்து ரொட்டி செய்முறைக்கு நன்றி. கோவா போடும் முறை இப்போ தான் அறிகிறேன்.

Link to comment
Share on other sites

தப்பிலி, கொத்து ரொட்டி செய்முறைக்கு நன்றி. கோவா போடும் முறை இப்போ தான் அறிகிறேன்.

நன்றி நுணா.

ஊரில் கடைகளில் செய்யும் பொழுது பார்த்த முறையைத்தான் எழுதினேன். கோவா தாளிக்கப்பட்டு மற்றைய பொருட்களுடன் கலந்து விடுவதால் வெளியே அதிகம் தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த சாப்பாட்டில், முதலிடத்தை பிடித்திருப்பது கொத்து ரொட்டிதான்.
ஆனால் அந்த ரொட்டி செய்யும் முறை மட்டும், எங்களுக்கு சரி வருவதில்லை.
அதனால் கடையில்... கொத்து ரொட்டியை வெட்டிய படி, குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.
அதனை, வாங்கிச் செய்வோம். இணைப்பிற்கு, நன்றி அலை.

Link to comment
Share on other sites

 

கொத்துரொட்டி நன்றாகத் தான் இருக்கும்.. என்ன  தகரம் உரசும் உரசலில் 'தகரச் சத்து 'தான் கூடப்போகின்றது :huh:

 

Link to comment
Share on other sites

எனக்குப் பிடித்த சாப்பாட்டில், முதலிடத்தை பிடித்திருப்பது கொத்து ரொட்டிதான்.

ஆனால் அந்த ரொட்டி செய்யும் முறை மட்டும், எங்களுக்கு சரி வருவதில்லை.

அதனால் கடையில்... கொத்து ரொட்டியை வெட்டிய படி, குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.

அதனை, வாங்கிச் செய்வோம். இணைப்பிற்கு, நன்றி அலை.

 

கொத்து ரொட்டிக்குப் பாவிக்கும் ரொட்டி செய்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. நிறைய எண்ணெய் விட்டுக் குழைத்து, ரொட்டி தட்டும் பொழுதும் நிறைய எண்ணெய் விட்டு பிரட்டிப் பிரட்டி வீச வேண்டும். காற்றில் வீசாமல் மேசையில் வைத்தே இலகுவாக வீசலாம்.

 

 நிறைய எண்ணெய் போடுவதால் அந்த ரொட்டி உடலிற்கு நல்லதல்ல.  அதனால் நான் சாதாரண ரொட்டி செய்து மெல்லியதாக வெட்டிப் பாவிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வீட்டில் கொத்துரொட்டி செய்யும் போது கடைசியில் எல்லாத்தையும் சேர்த்து எப்படி கொத்துறனீங்கள்?
Link to comment
Share on other sites

வீட்டில் கொத்துரொட்டி செய்யும் போது கடைசியில் எல்லாத்தையும் சேர்த்து எப்படி கொத்துறனீங்கள்?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=82595

Link to comment
Share on other sites

இன்னொரு திரியில் இணைப்பு போட்டிருந்தமைக்கு நன்றி. அதனால் தான் பார்க்க முடிந்தது. தப்பிலி அண்ணாவின் சமையல் குறிப்புகள் நன்றாக இருக்கிறது. :)

நானும் சாதாரண ரொட்டியை சிறு துண்டுகளாக வெட்டி மரக்கறி கொத்து ரொட்டி செய்திருக்கிறேன்.

எனக்கு சைவ உணவுகள் தான் சமைக்க தெரியும். அதுகூட சுவையாக செய்ய தெரியாது. யாழிலுள்ள பல சமையல் இணைப்புகளை சேமித்து வைத்து சிறிது காலத்தின் பின் செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். :)


 

Link to comment
Share on other sites

கொத்து ரொட்டிக்குப் பாவிக்கும் ரொட்டி செய்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. நிறைய எண்ணெய் விட்டுக் குழைத்து, ரொட்டி தட்டும் பொழுதும் நிறைய எண்ணெய் விட்டு பிரட்டிப் பிரட்டி வீச வேண்டும். காற்றில் வீசாமல் மேசையில் வைத்தே இலகுவாக வீசலாம்.

 

 நிறைய எண்ணெய் போடுவதால் அந்த ரொட்டி உடலிற்கு நல்லதல்ல.  அதனால் நான் சாதாரண ரொட்டி செய்து மெல்லியதாக வெட்டிப் பாவிப்பேன்.

நீங்கள் முன்பு restaurant இல் வேலை செய்துள்ளீர்கள் போலிருக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அலைமகள்

 



எனக்குப் பிடித்த சாப்பாட்டில், முதலிடத்தை பிடித்திருப்பது கொத்து ரொட்டிதான்.
ஆனால் அந்த ரொட்டி செய்யும் முறை மட்டும், எங்களுக்கு சரி வருவதில்லை.
அதனால் கடையில்... கொத்து ரொட்டியை வெட்டிய படி, குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.
அதனை, வாங்கிச் செய்வோம். .

கொத்துரொட்டி தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்.


தமிழ்சிறி அண்ணை  பக்கத்திலை  இத்தாலி உணவகம் இருந்தால் 

அவர்களிடம் சென்று கொஞ்சம் பிசா செய்யும் மாவைக் கேட்டு வாங்குங்கள் 

அந்த மாவும் ரொட்டிக்கு நல்லது. சிலர் ஈஸ்ரைக் குறைத்துப் பாவிப்பார்கள் 

அப்படியானால் நீங்கள் கொஞ்சம் ஈஸ்ரைச்சேர்ந்து இன்னொருதரம் பிசைந்து விடுங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடைகளில் வாங்கும் ரொட்டி எத்தனை நாட்களுக்கு முன்
செய்ததோ.பழுதாகாமல் இருக்க என்ன மருந்து  போட்டு அடைத்தார்களோ என்று
தெரியுமா எமக்கு. அதனால் நாமே ரொட்டி செய்வது சுகாதாரமானது. அதைவிட நாமே
செய்யும் ரொட்டி கடைகளில் வாங்குவதைவிட இருமடங்கு சுவையாக இருக்கும். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.