Jump to content

11 அதிகாரிகளுடன் தகாத உறவு


Recommended Posts

11 அதிகாரிகளுடன் தகாத உறவு எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டிருக்கும் பெண்

கணவனும் ஆஸ்பத்திரியில் அனுமதி

தனியார் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றி வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது 11 அதிகாரிகளுடன் பாலுறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் எச்.ஐ.வி. தொற்று நோய்க்கு ஆளாகி இருப்பதாக எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, இப்பெண்ணின் கணவர் இதே நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் சுகவீனமுற்ற இந்தப் பெண்ணின் கணவர் கொழும்பு மாவட்ட அரசினர் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இவர் எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த இப்பெண்ணிடம் வைத்தியர்கள் இதுபற்றி கேட்டுள்ளனர். அவர் தான் தனது கணவரைத் தவிர்ந்த யாருடனும் தொடர்பு வைத்திருக்கவில்லையென கூறியுள்ளார்.

இறுதியில் இதுபற்றி உறுதியான முடிவொன்றை மேற்கொள்ளும் நோக்கில் வைத்தியர்கள் இப்பெண்ணினதும் இரத்தத்தை பரிசோதனைக்கு உட்படுத்தி இரகசியங்களை வெளிவரச் செய்துள்ளதுடன் அவருக்கும் எச்.ஐ.வி. தொற்றி இருப்பதை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, தான் வேலை செய்யும் நிறுவனத்தினதும் கடமைக்காக பணிக்கப்பட்டிருந்த நிறுவனங்களினதும் 11 அதிகாரிகளுடன் தான் இரகசிய உறவில் ஈடுபட்டு வந்துள்ளதை பெயர் விபரங்களுடன் அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இப்பெண்ணின் தகாத உறவு மூலமே அவரின் கணவருக்கும் இந்த நோய் தொற்றி இருப்பதும் அது முற்றிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும் வெளிவந்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, இப்பெண் வேலை செய்த நிறுவனத்தில் கடமையாற்றும் அதிகாரிகளின் மனைவிமார் குறிப்பிட்ட அந்த பெயர்ப் பட்டியலில் தங்களது கணவர்மாரின் பெயர்கள் வந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ள கொழும்பிற்கு படையெடுத்து வந்துள்ளதாகவும் பெயர் குறிப்பிடவிரும்பாத அந்த வைத்தியர் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2006/6/14/...ws_page4403.htm

Link to comment
Share on other sites

:roll: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால்இ அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது :roll:

Link to comment
Share on other sites

:wink: எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்.

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல்இ பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வதுஇ எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

:roll:

Link to comment
Share on other sites

உந்த செய்தி எல்லாம் எதுக்கு இஞ்ச. ஒழுக்கம் கெட்டவர்க்கு உதுவும் வேணும் இன்னமும் வேணும். அதுகள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். ஆனால் அதுகளுக்கு பிறக்கிற பிள்ளைகள்தான் பாவம். பிறக்கும் போதே சாபத்துடன் பிறக்குதுகள்.

.

Link to comment
Share on other sites

40000 சிறுவர்களை பாலியியல் தொழிலில் ஈடுபடுத்தி அந்நிய செலாவாணி பெற்று தமிழர்களுடன் போர் புரியும் சிங்களஇனத்திற்கு இது ஒன்றும் வெட்கம் கெட்ட செயல் இல்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.