Jump to content

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இனிய பாடல்கள்


Recommended Posts

 எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இனிய பாடல்கள். நீங்களும் உங்களுக்கு விரும்பிய எம்.எஸ்.வியின் பாடல்களை இணையுங்கள்.
 
எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
 
 இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ்.வி-யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். மனதைத் தொடும் மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றின் பெர்சனல் பக்கங்கள் இதோ.....
 
 
 
 
 
எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.
 
அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!.
 
நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி.
 
இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!.
மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!
குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!
இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான்!
 
மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம்!
சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!
 
எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!
 
மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்!
இளையராஜவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!
`புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!
 
தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!
 
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு!
 
தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!
 
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார்!
 
`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!
 
இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான் சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!
 
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறு சுறுப்பாக இருக்கிறார்!
 
பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!
சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள்!
 
வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!
 
`அத்தான்..... என்னத்தான்....’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிரிந்தது அரங்கம்!
தொகுத்து வழங்குபவர்  
திருமதி ஆனந்திராம்குமார் நன்றி 
 
ஆனந்த விகடன்
 
 
 
 


பாடல்: கண்ணிலே என்ன உண்டு
திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நானொரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

திரியை ஆரம்பித்த நுணாவுக்கு நன்றிகள்..!

 

பாடல்: கண்ணனை நினைக்காத

படம்: சீர்வரிசை

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா

 

உற்சாகமான குரல்கள் என்றால் அந்த நாளைய எஸ்.பி. பாலா, சுசீலா, ஜானகி போன்றவர்கள்தான். அரங்கில் நின்று பாடுவதுபோல் கேட்கும் சில பாடலில். தொலைவில் நின்று பாடுவதுபோல் இருக்கும் வேறு சில பாடல்களில். அந்த நாளைய ஒலிப்பதிவு மற்றும், குரல் ஏற்ற இறக்கம் மற்றும் வீச்சு காரணம் என நினைக்கிறேன்.

 

இந்தக்காலத்தில் பாடல்கள் காதுக்குள் பாடப்படுவதுபோல் ஒரு பிரமை. இதன் காரணமாக ஒரு செயற்கைத் தன்மை காணப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

எம்.எஸ்.வி யை சர்வசுந்தரத்தில் "அவளுக்கென்ன அழகிய முகம்" பாட்டில் இளமையாக காணலாம் .இசையே உலகமாக இருக்கும் எனக்கு இவரும் ஒரு கடவுள்தான்.

சாந்தி -யார் அந்த நிலவு

அபூர்வ ராகங்கள் -ஏழு ஸ்வரங்களில்

எனது மிக முதன்மையான தெரிவு .அதைவிட ஆயிரம் இருக்கு .

Link to comment
Share on other sites

நல்ல திரி. அவரின் இசையில்  நிறையப் பாடல்களைச் சொல்லலாம்.

 

இருந்தாலும் எம்எஸ்வி குரலின் ரசிகன்.

 

சொல்லத்தான் நினைக்கிறேன்

 

 

 

 

'நிலவே நீ சாட்சி' படத்தில் இருந்து

'நீ நினைத்தால் இந்நேரத்திலே' பாடலில் 'எம்எஸ்வி' யின் உணர்வுமிக்க குரல் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

எம்.எஸ்.வி யை சர்வசுந்தரத்தில் "அவளுக்கென்ன அழகிய முகம்" பாட்டில் இளமையாக காணலாம் .இசையே உலகமாக இருக்கும் எனக்கு இவரும் ஒரு கடவுள்தான்.

சாந்தி -யார் அந்த நிலவு

அபூர்வ ராகங்கள் -ஏழு ஸ்வரங்களில்

எனது மிக முதன்மையான தெரிவு .அதைவிட ஆயிரம் இருக்கு .

 

 

 

 

 

 

http://www.youtube.com/watch?v=51YPPoBKllg

Link to comment
Share on other sites

நல்ல திரி. அவரின் இசையில்  நிறையப் பாடல்களைச் சொல்லலாம்.

 

இருந்தாலும் எம்எஸ்வி குரலின் ரசிகன்.

 

 

'நிலவே நீ சாட்சி' படத்தில் இருந்து

'நீ நினைத்தால் இந்நேரத்திலே' பாடலில் 'எம்எஸ்வி' யின் உணர்வுமிக்க குரல் பிடிக்கும்.

 

http://www.youtube.com/watch?v=XtxjgHPf6qE

Link to comment
Share on other sites

பாடல்: பொட்டு வைத்த முகமோ

 

படம்: சுமதி என் சுந்தரி

 

எஸ்பிபி யின் தனிக் குரலோடு, பின்னணியில் ஹம்மிங்கில் பெண் குரல் வருவது கேட்க இனிமை.  

1:18 - 1:24 இல் வரும் இசைக் கருவியை (ஷெனாய் ?) சில பாடல்களில் பயன்படுத்தியிருப்பார். அருமையாக இருக்கும்.

 

http://www.youtube.com/watch?v=kR7_0aSuopg

Link to comment
Share on other sites

பாடல்: சிட்டுக்குருவி  முத்தம் கொடுத்து
படம் : புதிய பறவை
பாடியவர்: பி.சுசிலா

 

 

 

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே

மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே

மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா…

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே

பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே

பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே

எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே

என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஆ…ஹாஹா

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா

ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா

இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா

இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே

 

 

http://www.youtube.com/watch?v=ZzXjH9xTcbo

Link to comment
Share on other sites

பாடல்:  எங்கேயும் எப்போதும்

 

படம்: நினைத்தாலே இனிக்கும்

 

பல வருடங்கள் சென்றாலும், எம்எஸ்வி யின் இசையில் இன்றும் நிலைத்து  நிற்கும் துள்ளல் பாடல் 

 

 கடவுள் படைத்த உலகம் இது மனித சுகத்தை மறுப்பதில்லை

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: எனக்கொரு காதலி இருக்கின்றாள்
படம் : முத்தான முத்தல்லவோ
பாடியவர்கள் : spb & msv
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் -----பயணம்

பாடல்

பயணம் பயணம் பயணம்

பத்து மாத சித்திரமொன்று ஜனனம்

அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்

அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்

பயணம் பயணம் பயணம்

ஆரம்பம் பள்ளிக்கு பயணம்

பின்பு அடுத்தது ஆசையின் பயணம்

ஆரம்பம் பள்ளிக்கு பயணம்

பின்பு அடுத்தது ஆசையின் பயணம்

இளம் காதலர் கண்களில் பயணம்

அந்த கலக்கத்தில் கண்ணீரில் பயணம்

இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே

எவரை எவர் வெல்லுவாரோ

எவரை எவர் வெல்லுவாரோ

பயணம் பயணம் பயணம்

புகை வண்டி ஓட்டிட ஒருவன்

அது போகின்ற வழி சொல்ல ஒருவன்

அந்த இருவரை நம்பிய மனிதன்

அவன் இடையினில் நினைப்பவன் இறைவன்

இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே

எவரை எவர் வெல்லுவாரோ

எவரை எவர் வெல்லுவாரோ

சந்திப்பு வருவது கண்டு

பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு

அவர் சொந்தங்களாவதும் உண்டு

அது தொடர் கதை ஆவதும் உண்டு

இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே

எவரை எவர் வெல்லுவாரோ

எவரை எவர் வெல்லுவாரோ

பயணம் பயணம் பயணம்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0MC9AJW6g1k

இத் திரியை தொடக்கிய நுணாவிலானுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

மான் கண்ட சொர்க்கங்கள்.........

 

 47 நாட்கள் படத்திலிருந்து...   மெல்லிசை மன்னரின் இசையில். கவிஞரின் வரிகளில் சினிமாவின் கதையைச் சொன்ன பாடல்.

சிவமணியின் ஆரம்பகால அதிர வைக்கும் 'ட்ரம்ஸ்' , எஸ் பி பாலசுப்ரமணியத்தின் வழமையான குழைந்த குரலில் வந்த மனதை அதிர வைத்த பாடல்.

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: துள்ளுவதோ இளமை
திரைப்படம்:   குடியிருந்த கோயில்
பாடகர்கள்:   ஈஸ்வரி, TM. சௌந்தரராஜன்
பாடல் ஆசிரியர்:   வாலி
 
 
பட்டு முகத்து சுட்டி பெண்ணே
கட்டி அணைக்கும் இந்த கைகள்
வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்
பித்தம் அனைத்தும் இன்ப கதைகள்
ஆஹ்ஹ்..
 
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
அள்ளுவதே திரமை
அதனையும் புதுமை
 
மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
நீர் ஆடா ஓடிவா
நீர் ஆடா ஓடிவா
 
வேல் ஆடும் பார்வை
தாளாத பொது
வேல் ஆடும் பார்வை
தாளாத பொது
நோகாமல் ஆடவா
நோகாமல் ஆடவா
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
அள்ளுவதே திரமை
அதனையும் புதுமை
 
ஹொய்..பாப்பா
ஹொய்..பாப்பா
ஹொய்..பாப்பா
ஹொய்..பாப்பா
 
தேன் ஊரும் பாவை
பூ மேடை தேவை
தேன் ஊரும் பாவை
பூ மேடை தேவை
நானாக அள்ளவா
நானாக அள்ளவா
தீரத தாகம்
பாடாத ராகம்
தீரத தாகம்
பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவ
நாளெல்லாம் சொல்லவ
 
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
அள்ளுவதே திரமை
அதனையும் புதுமை
 
ஹொய்..பாப்பா
ஹொய்..பாப்பா
 
காணாத கோலம்
நீ காணும் நேரம்
வாய் பேச தொன்றுமா
வாய் பேச தொன்றுமா
ஆணொடு பெண்ண்மை
ஆராகும் பொது
வேர் இன்பம் வேண்டுமா
வேர் இன்பம் வேண்டுமா
 
துள்ளுவதோ இளமை
தேடுவதொ தனிமை
அள்ளுவதே திரமை
அதனையும் புதுமை
 
ஹொய்..பாப்பா
ஹொய்..பாப்பா
Link to comment
Share on other sites

தொடர்ந்து இணையுங்கள் .பார்க்க சந்தோசமாக இருக்கு .

இரவு படுக்கைக்கு முன் யுடிப்பில் நாலு பழைய பாடல்கள் கேட்டுவிட்டு போவதுதான் எனது பழக்கம்.

இணைக்கும் போது பிரச்சனை வருவதால் நான் இணைக்க முயற்சிப்பத்தையே விட்டுவிட்டேன் . 

Link to comment
Share on other sites

எம்எஸ்வி தனது இசை சகோதரர் டி கே ராமமூர்த்தியோடு சேர்ந்து இசையமைத்த பாடல்.

 

 

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் இருந்து, மனதை மெல்லியதாகக் கீறிச் செல்லும் இசை.

 

http://www.youtube.com/watch?v=TyPPUBH6otg

 

 

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

 

'பணத்தோட்டம்' படத்தில் இருந்து அருமையான 'வாழ்க்கைக்கான' பாடல்

 

http://www.youtube.com/watch?v=7i2AvTOZfCc

 

 

Link to comment
Share on other sites

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

 
பாடல்: கண்ணதாசன் 

படம்: ஆயிரத்தில் ஒருவன் 

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி 

பாடியது: T.M.சௌந்தரராஜன் குழுவினர்.

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே

கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே

போகும்போது வேறு பாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

 
Link to comment
Share on other sites

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்

 

.........

 

அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்!

 

 

 

http://www.youtube.com/watch?v=KTtv3IGHbbc

 

 

பார்த்த ஞாபகம் இல்லையோ
 
படம் : புதிய பறவை
பாடல் : பார்த்த ஞாபகம் இல்லையோ
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வனாதன்


பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ? (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)
Link to comment
Share on other sites

பாய் விரிக்கப் புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
பாய் விரிக்கப் புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
கையோடு நெய்வழிய கண்ணோடு மைவழிய
அத்தானுக்கு முத்தாடத்தான் ஆசையிருக்காதோ
ஆசையிருக்காதோ...ஓ...ஓ...

http://www.youtube.com/watch?v=97Kw3i6nJAc

 

 

பெண் :    கல்யாண வளையோசை கொண்டு

             காற்றே நீ முன்னாடி செல்லு (இசை)    

             கல்யாண வளையோசை கொண்டு

             காற்றே நீ முன்னாடி செல்லு

             பின்னாடி நான் வாரேன் என்று

             கண்ணாளன் காதோடுச் சொல்லு

             மாமன் என் மாமன் மாமன் என் மாமன்

             கஞ்சி வரக் காத்திருக்கு

             கண்ணு ரெண்டும் பூத்திருக்கு

             வஞ்சி வரும் சேதி சொல்லு

             வந்த பின்னால் மீதி சொல்லு            

             கல்யாண வளையோசை கொண்டு

             காற்றே நீ முன்னாடி செல்லு

             பின்னாடி நான் வாரேன் என்று

             கண்ணாளன் காதோடு சொல்லு

    

                         (இசை)            சரணம் - 1

பெண் :    பாய் விரிக்கப் புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க

             பாய் விரிக்கப் புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க

             கையோடு நெய்வழிய கண்ணோடு மைவழிய

             அத்தானுக்கு முத்தாடத்தான் ஆசையிருக்காதோ

             ஆசையிருக்காதோ...ஓ...ஓ...

ஆண்  :    கல்யாண வளையோசை கொண்டு

             கஸ்தூரி மான் போல இன்று

             வந்தாளே இளவாழந் தண்டு

             வாடாத வெண் முல்லை செண்டு

    

                       (இசை)            சரணம் - 2

ஆண்  :    ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க

பெண் :     ஆஹா...இடை பிடிக்க

ஆண்  :    நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க

பெண் :     நெஞ்சு நெகிழ்ந்திருக்க

ஆண்  :    ஆஹா...ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க

              நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க

              பொன்னான நெல்மணிகள் கண்ணே

             உன் கண்மணிகள் தண்ணீரிலே செவ்வாழை போல்

             தாவிச் சிரிக்காதோ தாவிச் சிரிக்காதோ...ஓ...ஓ...

                        

{பெண்  : கல்யாண வளையோசை கொண்டு

             கஸ்தூரி மான் போல இன்று        

ஆண்  :    ஓ...ஓ...ஓ...ஓ...

ஆண்  :    வந்தாளே இளவாழந் தண்டு

              வாடாத வெண்முல்லை செண்டு  

பெண்  :   ஆ...ஆ...ஆ...ஆ...}

Link to comment
Share on other sites

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்

 

 

 

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?


http://www.youtube.com/watch?v=ZDY04YUJ1uc

 

Song: maalai pozhuthin - பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
Movie: Nhagyalakshmi - திரைப்படம்: பாக்யலக்ஷ்மி
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

Year: - ஆண்டு: 1952 

 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி.இணைப'பிற்க்கு நன்றி நுனா.

Link to comment
Share on other sites

  பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

     இசை                 பல்லவி

    லாலாலா... ஆ... ஆ... ஆ...

    லலால லலாலலா... ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ...

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

    வெற்றிக்குத் தான் என என்ன வேண்டும்

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

    வெற்றிக்குத் தான் என என்ன வேண்டும்

    நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்

    சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

    நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்

    சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

    வெற்றிக்குத் தான் என என்ன வேண்டும்

    இசை                  சரணம் - 1

    ஓ... முள்ளி ஆடும் நெஞ்சம்

    கள்ளில் ஊறும் கண்கள்

    தங்கத் தட்டில் பொங்கும்

    இன்பத் தேன் போல் பெண்கள் ( இசை )

    முள்ளி ஆடும் நெஞ்சம்

    கள்ளில் ஊறும் கண்கள்

    தங்கத் தட்டில் பொங்கும்

    இன்பத் தேன் போல் பெண்கள் 

    சாட்டை கொண்டு பாடச் சொன்னால்

    எங்கே பாடும் பாடல்

    தத்தித் தத்தி ஆடச் சொன்னால்

    எங்கே ஆடும் கால்கள்

    துடித்து எழுந்ததே... கொதித்து சிவந்ததே...

    கதை முடிக்க நினைத்ததே...

    நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்

    சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

    வெற்றிக்குத் தான் என என்ன வேண்டும்

    இசை                    சரணம் - 2

    ஓ... முத்தம் சிந்தும் முத்து

    முல்லை வண்ணச் சிட்டு

    மேடை கண்டு ஆடும் பெண்மை ரோஜா மொட்டு

    வேட்டை ஆடும் மானுக்கென்ன

    வெட்கம் இந்தப் பக்கம்

    வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும்

    திட்டம் உண்டு திட்டம்

    துடித்து எழுந்ததே... கொதித்து சிவந்ததே...

    கதை முடிக்க நினைத்ததே...

    நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்

    சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

    இசை                  சரணம் - 3

    நாடு கண்ட பூங்கொடி காடு வந்த காரணம் 

    ஒரு முறை எண்ணிப் பார்

    தேடி வந்த நாடகம் கூடி வரும் வேளையில் 

    மறுபடி என்னைப் பார்

    நாடு கண்ட பூங்கொடி காடு வந்த காரணம் 

    ஒரு முறை எண்ணிப் பார்

    தேடி வந்த நாடகம் கூடி வரும் வேளையில் 

    மறுபடி என்னைப் பார்

    வலை போட்டு பிடித்தாலும் கிடைக்காது

    துடித்து எழுந்ததே... கொதித்து சிவந்ததே...

    கதை முடிக்க நினைத்ததே...

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

    வெற்றிக்குத் தான் என என்ன வேண்டும்

 

https://www.youtube.com/watch?v=3zm1tX7jxWU

Link to comment
Share on other sites

   அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ
             நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
             அடியெடுத்து கொடுத்ததோ.

 

இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
             மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
             இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
   
             இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல

 

http://www.youtube.com/watch?NR=1&v=R12D7i5PWGQ

 

   

 அழகு தெய்வம் மெல்ல மெல்ல   |   |     பாடல் தலைப்பு அழகு தெய்வம் மெல்ல மெல்ல    திரைப்படம் பேசும் தெய்வம்  கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி பத்மினி  பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் பி.சுசீலா  இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் வாலி   இயக்குநர்   ராகம்   வெளியானஆண்டு 1967  தயாரிப்பு      
             அழகு தெய்வம் மெல்ல மெல்ல

                       தொகையறா

ஆண்    ஆழியிலே பிறவாத அலை மகளோ...

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    ஏழிசையை பயிலாத கலை மகளோ... ( இசை )
             மூழி நடம் புரியாத மலை மகளோ... ( இசை )
             உலகத்தாய் பெற்றெடுத்த தலை மகளோ...

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

             அடியெடுத்து வைத்ததோ

             இசை                     பல்லவி

ஆண்    அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ
             நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
             அடியெடுத்து கொடுத்ததோ

             அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ
             நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
             அடியெடுத்து கொடுத்ததோ

             அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ

             இசை                     சரணம் - 1

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
             மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
             மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
             இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
             இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
             இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ
             நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
             அடியெடுத்து கொடுத்ததோ

             அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ

             இசை                     சரணம் - 2

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    தத்தி வரும் தளர் நடையில் 
             பிறந்தது தான் தாளமோ ( இசை )
             தாவி வரும் கை அசைவில் 
             விளைந்தது தான் பாவமோ ( இசை )
             தெய்வமகள் வாய் மலர்ந்து மொழிந்தது தான் ராகமோ

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    { இத்தனையும் சேர்ந்தது தான் இயல் இசை நாடகமோ }

பெண்    { ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... } ( இணைந்து )

 

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=tjjumYEmg04&list=PLAAD43E7E33F8047C

 
கட்டோடு குழல் ஆட ஆட

கண் என்ற மீன் ஆட ஆட

பொட்டோடு நகை ஆட ஆட

கொண்டாடும் மயிலேறி ஆடு

கட்டோடு ...

பாவாடை காத்தோடு ஆட ஆட

பருவங்கள் பந்தாட ஆட ஆட

காலோடு கால் பின்னி ஆட ஆட

கள்ளுண்ட வண்டாக ஆடு

கட்டோடு ....

முதிராத நெல் ஆட ஆட 

முளைக்காத சொல் ஆட ஆட 

உதிராத மலர் ஆட ஆட 

சதிர்ஆடு தமிழே நீ ஆடு

கட்டோடு ...

தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக 

புன்னை மரம் பூசொரிய

சின்னவளே நீ ஆடு

கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட

கண்டு கண்டு நான் ஆட

செண்டாக நீ ஆடு

கட்டோடு ....

பச்சரிசி பல ஆட பம்பரத்து நாவாட

மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு

வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட

ரெண்டு பக்கம் நான் ஆட

சொந்தமே நீ ஆடு

கட்டோடு .....

Link to comment
Share on other sites

தென்னை மரத்தோப்புக்குள்ளே துரத்தி புடிச்ச தோகை மயில்

கையை தட்டி கூப்பிட்டார் அந்த கன்னடத்து பைங்கிளியை

மலையாளத்து மச்சானுக்கு மது விக்குது முத்து  சொண்டு

மயிலோ அது கிளியோ மன்னவரை மயக்க வந்த முல்லை மலரோ!

 

http://www.youtube.com/watch?v=vvwN4Z9KRpg

 

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ...

பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்

 

சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா...
 
Link to comment
Share on other sites

சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ 
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் 

 

http://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U

 

ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ...

பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ...
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ...
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2)
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2)

(பூ மாலையில்)

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...ஆ ஆ ஆ...
மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ...
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.