Jump to content

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது


SUNDHAL

Recommended Posts

இந்திய பெண் எழுத்தாளர் மீனா கந்தசாமி, காஸ்மீரில் இந்திய இராணுவம் பெண்களுக்கு செய்யும் கொடுமைகள் பற்றி ஒரு கட்டுரையை இந்த நேரத்தில் எழுதி விழிப்புணர்வை கொண்டுவர முயன்றுள்ளார்:

 

http://m.outlookindia.com/story.aspx?sid=4&aid=283463

 

ஈழப்பெண்கள் இன்றைய மற்றும் கடந்த கால அவலங்களை பற்றியும் நாம் முறையாக எடுத்து கூறவேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

யாழ் மருத்துவமனைக்குள் புகுந்து இந்திய அட்டூழியப்படை மருத்துவர்களையும், தாதிமார்களையும்கூட கொலை செய்தது. இது சந்தேகத்துக்கு இடமற்ற ஆவணமாக இருக்கிறது. அண்மையில்கூட நினைவேந்தலைச் செய்தார்கள் மருத்துவமனையில்.

 

கவலைப்பட்டார்களா வட இந்தியவாலாக்கள்?

Link to comment
Share on other sites

அதற்காக மிகக்கொடுரமாக சித்ரவதை பட்டு இறந்த ஒரு மாணவியை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல

Link to comment
Share on other sites

அதற்காக மிகக்கொடுரமாக சித்ரவதை பட்டு இறந்த ஒரு மாணவியை வைத்து ஆசியால் செய்வது ஏற்புடையது அல்ல

 

நிச்சயமாக இல்லை. ஆனால் அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.

Link to comment
Share on other sites

இந்தியாவில், உலகத்தின் பெரிய ஜனநாயக ஆட்சியிலும், ஆப்கானிஸ்தானின் தலிபானின் ஆட்சியிலும்,  பெண்கள் பலவேறு கொடுமைக்கும் உள்ளாகின்றார்கள்.

 

எனவே ஆட்சி முறையில் தவறு இல்லை, ஆளுபவர்களைலேயே தவறு !

Link to comment
Share on other sites

இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே இந்த நாடகம். ஆளும் கட்சிகளின் மாணவர்கள் இத கையில் எடுத்து  போராட்டம் என்ற பேரில் குப்பை கொட்டுகிறார்கள். இதுவரை இந்தியாவில் கற்பளிப்பே  நடக்கலையா?  சமீப காலத்தில் பழங்குடிப் பெண்களை இந்திய பாது காப்பு படைகள் கற்பளித்த போது இந்த மாணவர்கள் எங்கே போனார்கள்?

Link to comment
Share on other sites

ஒரு நியாயமான நாடு என்றால் மன் மோகன் சிங்  பதவியை துறக்கவேண்டும். அது நடக்காது.

 

 பெண்கள் நியாயம் வேண்டும் என்றால், அவர்களே யாரையாவது வைத்து சோனியாவின் குடும்பத்தில் ஒருவர் மீது பாலியல் வன்புணர்வை செய்தால் உண்மையான மாற்றங்கள் நிகழலாம்  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாணவியை... பாலியல் வன்புணர்செய்து விட்டு, ஓடும் பேரூந்தில்... இருந்து தள்ளி விட்டதை... எந்த மனிதனும், செய்யத் துணியாத செயல். குற்ற வாளிகளின்... ஆணுறுப்பில், மன்மோகனையும், சோனியா குடும்பத்தினரையும் விட்டு....   யாழ்ப்பாண முறைப்படி தயாரித்த‌ மிளகாய்த்தூள் தடவுவிக்க‌ வேண்டும்.

Link to comment
Share on other sites

1. India: Petition: Pl sign the petition and pl ask your friends and family to do same:

http://www.causes.com/causes/807089-stop-gangrape-jago-re-india/actions/1716592?query=india&rank=0&utm_campaign=search


2. Sri Lanka:

 

a. 4 children under 16 are raped daily, 24 June 2012,
http://www.sundaytimes.lk/120624/news/4-children-under-16-are-raped-daily-4170.html

 

b. Colombo high-end perverts worse than touts, beach boys — foreigners, 26 October 2012,
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=64661

 

c.Pl let me know if anybody finds the following news in English:
மண்டைத்தீவில் நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87050/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த  அப்பாவி பெண் பிள்ளைக்கு அஞ்சலிகள்.

 

மற்றும்படி

இசையின் கருத்தே  எனதும்.

Link to comment
Share on other sites

புதுடில்லி: டில்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மருத்துவ மாணவி உயிரிழந்த பிறகு அவரை பற்றி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, மாணவியை சந்தித்த அவரது பெற்றோர், சகோதரனிடம், தான் வாழ விரும்புவதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர விரும்புவதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்னரா என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போது, தனது பெற்றோருடன் சைகை மூலம் பேசி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. டில்லியில் மாஜீஸ்திரேட்டிடம் இரண்டு முறை வாக்குமூலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த டாக்டர்கள், அந்த பெண்ணை தைரியசாலி என பாராட்டியுள்ளனர்.

Dinamalar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த இந்த மாணவியின், பெயரால்....
ஈழத்தில்... ராஜீவின் அமைதிப்படை செய்த குற்றங்களுக்கும், முள்ளிவாய்க்கால் போரின் போதும், அதற்குப் பின்... நேற்றும், இன்றும்... இந்திய ஆசீர்வாத்தத்தால்... தொடர்ந்து கொண்டிருக்கும்... ஈழ உறவுகளுக்கும், விடிவு கிடைக்கும் முகமாக...
மன்மோகன் சிங், சோனியா காங்கிரஸ் ஆட்சியை.. டெல்லிப் போராட்டங்கள் வெட்கம் கொள்ள வைத்து, புற முதுகிட்டு ஓட வைக்க வேண்டும்.
"அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்." இப் பழமொழி, ஈழத் தமிழன் வாழ்வில் நிஜமாக நடக்க வேண்டும். இதை... என் கண்ணால்... காணவேண்டும்.

Link to comment
Share on other sites

1. India: Petition: Pl sign the petition and pl ask your friends and family to do same:

http://www.causes.com/causes/807089-stop-gangrape-jago-re-india/actions/1716592?query=india&rank=0&utm_campaign=search

 

அதற்குள் 19, 093 பேர் கையொப்பமிட்டுள்ளார்கள். இதுவே தமிழகத்திலுள்ள மாணவிக்கு நடைபெற்றிருந்தால் அல்லது ஈழத்து மக்களுக்கான கையொப்ப வேட்டையாக இருந்திருந்தால் இவ்வளவு நேரத்துக்கும் ஒரு 1000 தாண்டியிருக்குமா?

Link to comment
Share on other sites

மக்களே தயவு செய்து இதை அரசியல் ஆக்காமல் இதை வைத்து அரசியல் செய்யாமல் இது ஒரு சக சகோதரிக்கு ஒரு பெண்ணிற்கு நடந்ததாக எடுத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்க படுகின்றீர்கள் எமக்கு அரசியல் செய்ய பல விடையங்கள் இருக்கும் போது மனிதாபினம் அற்று நடந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கின்றேன்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழந்த அனுதாபங்கள்.இது எங்கு யாரால் நடத்தப்பட்டாலும் மிக உயர்ந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.தயவு செய்து இதுக்குள்ள அரசியலை கலக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

மக்களே தயவு செய்து இதை அரசியல் ஆக்காமல் இதை வைத்து அரசியல் செய்யாமல் இது ஒரு சக சகோதரிக்கு ஒரு பெண்ணிற்கு நடந்ததாக எடுத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்க படுகின்றீர்கள் எமக்கு அரசியல் செய்ய பல விடையங்கள் இருக்கும் போது மனிதாபினம் அற்று நடந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கின்றேன்

நன்றி

 

இதை வைத்து நான் அரசியல் செய்யவில்லை. நானும் மனிதாபிமான ரீதியில் கையொப்பமிட்ட பின்னர் தான் இதை எழுதினேன்.

தமிழனாக இருந்தால் யாரும் கண்டுகொள்கிறார்கள் இல்லை. அதை நீங்கள் மறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் கிந்தியாவில் ஜகஜம் .. இந்த விடயம் இது ஏதோ கொஞ்சம்   மேல் தட்டு வர்க்கம்..இல்லையென்றால் இஞ்சி மரபா விக்கறவன் கூட போராட வரமாட்டான்.. இதெல்லாம் தினசரி நடந்திட்டுதான் இருக்கு

டிஸ்கி:

வீட்டில் புரோட்டா சாப்ப்பிட்டு தூங்குங்கப்பா..

Link to comment
Share on other sites

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.
அப்படியே ஊடகங்களின் கவனம் கிடைத்தாலும் கூட அவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைத்துவிடும் வாய்ப்புகளும் மிகக்குறைவு.
BBC .

- from fb -
 

Link to comment
Share on other sites

அந்த பெண்ணினுடைய தந்தை ஒரு கூலித்தொழிலாளி அப்பிடி இருந்தும் அவர் தனது மகளை படிக்க வைத்து மருத்துவ பீடத்திற்கு அனுப்பி இருகின்றார் ஆக மேல்வர்க்கம் என்கின்ற வாதம் இங்கு எடுபட்டு போகின்றது

கண்டிப்பாக இந்தியாவில் அதுவும் டெல்லியில் இது ஒரு தொடர்கதை இதுக்கொரு முற்றுப்புள்ளி வைக்கத்தான் போராட்டங்கள் நடைபெறுகின்றது ஆகவே அந்த போராட்டங்களுக்கு அதரவு கொடுக்க வேண்டியது எமது கடமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்ட நண்பர்  ஸ்டெடஸ் ..?  இருவரும் நண்பர்கள் .. அர்த்த ராத்திரியிலும் எங்கிட்டாவது சுத்திட்டு திரியட்டும் அது நமக்கு கவலை இல்லை.. அதை பற்றி அவர்கள் கவலை பட்டு இருக்கணும் ..  டில்லி அரசாங்கம் கவலை பட்டு இருக்கணும்  இவுங்களுக்காக நீங்க மாய்ந்து மாய்ந்து குரல் கொடுத்தாலும் ..  ஒட்டுறதுதான் ஒட்டும் (இனம்)

டிஸ்கி:

மறுபடியும் இந்திகாரங்களிடம் "டமில் இலம்" என்று ஆரம்பியுங்களேன்..  ஆக்கியுளி ...கெமிக்களி.. சைக்காலிஜிக்களி... மெண்டலி....  "ராஜிவி காந்திஜீ" ஈஸ் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கு குட்டைப் பாவாடை அணிந்து செல்வதால் பாலியல் தொந்தரவுகள் அதிகரிக்கிறது: பாஜக எம்.எல்.ஏ.


டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 

குறிப்பாக சிறுமிகளை பலாத்காரம் சமூகச் சீர்கேடுகள் பெருகி வருகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது.

 

அதேசமயம், இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது.

 

அந்த வகையில், பள்ளிகளில் மாணவிகள் குட்டைப் பாவாடையை சீருடையாக அணிந்து வருவது, பாலியல் தொந்தரவு வழக்குகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பன்வாரி லால் சிங்கால் கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

இதுதொடர்பாக அவர் மாநில தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், ‘ஆழ்வார் நகரில் உள்ள பல இடங்களில் மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர் அல்லது பள்ளி பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனர். அப்போது குறும்பு மற்றும் கேலிப்பேச்சுக்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

இந்த நகரின் பல தனியார் பள்ளிகளில் குட்டைப் பாவாடைகளே சீருடையாக உள்ளன. பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்கள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, இத்தகைய சீருடைகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்குப் பதிலாக மாணவிகளுக்கு சல்வார் கமிஸ், பேண்ட்-சட்டைகளை சீருடையாக வழங்க வேண்டும். இது தீவிர சீதோஷ்ண நிலையில் இருந்தும்மாணவிகளை பாதுகாக்கும்’ என்று கூறியுள்ளார்.

 

நன்றி நக்கீரன்.

 

பா.ஜ.க  ஆக்களையும்.. இந்திய ஆண்களையும் பிறப்பு முதலே குட்டைப் பாவாடைகள் நிறைந்த பெண் பொம்மைகள் மத்தியில் வளர்த்தெடுத்து வந்தால்.. இந்தப் பிரச்சனை வராது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம்.. ஆண் - பெண் என்ற ஆழமான பால் பிரிவினையும்.... பெண் உடற்கூற்றியலில் பலவீனமானவள்.. கவர்ச்சியானவள் என்ற கருத்தியலை விதைக்கும் சினிமாவும்.. அரசியல்வாதிகளும்.. புராணங்களும்....இந்தியாவின் பிற்போக்கான கலாசாரப் பின்னணியுமே ஆகும். அத்தோடு சட்டத்தை சரியான வகையில் அமுலாக்காத நீதி நிர்வாகத்துறைகளும்.. பாலியல் அறிவு குறைந்த மாணவர் சமூகமும்..!

 

 

293970_10152384974795198_1989367738_n.jp

 

தமிழகத்தில் அண்மையில் பாலியல் வல்லுறவின் பின் கொல்லப்பட்ட இந்த தமிழ் மாணவி.. குட்டைப் பாவாடை.. அல்லது ஆண்களின் காமக் கிளர்ச்சியை தூண்டும்.. உடை என்பதன்  காரணமாகவா கொல்லப்பட்டார்...???!

 

இந்தியாவிலும் இலங்கையிலும் அடிப்படை சமூக அறிவியல் அறிவற்ற அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் எடுக்கும் கருத்தியல் நிலைப்பாடுகளே பெண்களின் இந்த நிலைக்குக் காரணம். இந்த இரண்டு கூட்டத்திற்கும் சரியான மூளைப் புனருத்தாரனம் வழங்க வேண்டும். அத்தோடு சமூகவியலாளர்கள் சமூக ஆராய்ச்சிகள் மூலம் சமூகத்தை அறிவூட்டி வளர்க்க வேண்டும். மாறாக.. இப்படியான போலி அல்லது ஊகக் கருத்தியல்களை விதைக்க சந்தர்ப்பமளிப்பதை தடுக்க வேண்டும். இவையே பெண்கள் மீது தவறான பார்வைகளைத் தூண்ட வகை செய்கின்றன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் பாலுறவுக்காக தன் துணைப் பாலை கொல்லும் அளவிற்கு துன்புறுத்துவதில்லை. ஆனால் 6 அறிவு கொண்ட மனிதனில்.. மட்டுமே இந்த வக்கிரம் தலையெடுத்துள்ளது. அதற்குக் காரணம்.. மனித சமூகக் கட்டமைப்புக்களும் சிறு வயது முதல் பல்வேறு வடிவங்களில்..விதைக்கப்படும்  பாலியல் மற்றும் ஆண்.. பெண் பற்றிய தவறான.. மிகைப்படுத்திய.. அதீத பாலுணர்வைத் தூண்டக் கூடிய.. கருத்தியல் சித்தாந்தங்களுமே..!

Link to comment
Share on other sites

இந்தியா எங்களுக்கு 1000 செய்திருக்கட்டும் தலைவர் சொன்னது போல இந்திய எங்களினுடைய தந்தை நாடு அதை நாங்கள் இன்றும் என்றும் ஆழமாக நேசிப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த டெல்லி மாணவியின் உயிரிழப்பு மிகத் துயர் மிக்கதே. அது கடும் தொனியில் கண்டிக்கப்படத்தக்கது மட்டுமன்றி தடுக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் இதே காரணங்களோடு ஈழத்தில் சிங்கள இனவெறி அரசாலும்.. இந்திய அமைதிப்படையாலும்.. தமிழ் பெண்கள் திட்டமிட்டு பாலியல் ஆயுதம் கொண்டு.. அதுவும் கோத்தபாய போன்றவர்களின் பகிரங்க முழக்கத்துடன்.. அழிக்கப்பட்ட போது.. ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை..???!

 

இன்று இந்த மாணவிக்கு இரங்கும் கருணாநிதி.. பிரணாப் முகர்ஜி.. மன்மோகன் சிங்.. சோனியா காந்தி போன்றவர்கள்.... அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் தமிழ் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட..(கோத்தாவின் வெளிப்படையான முழக்கமான தமிழ் பெண்கள் எமது படையினருக்கு (சிங்களப் படையினருக்கு).. தமிழ் ஆண்கள்.. நந்திக் கடலுக்கு என்று சொல்லிச் சொல்லி) முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்னரும் இன்று வரையும் தொடரும்.. மிகக் கொடூர பாலியல் வன்புணர்வுக் கொலைகளையும்.. ஏனைய தமிழினப் படுகொலைகளையும்.. அன்று மட்டுமன்றி..இன்று வரை கண்டிக்காத நிலையைக் காண்கிறோம். இந்த அரசியல் பச்சோந்திகளின் அரசியல் நீலிக்கண்ணீருக்கு.. ஆதாயத்திற்கு ஒரு அப்பாவி மாணவியின் உயிரும் அவலச் சாவும் தானா கிடைத்தது..???!

 

இதே போல் இன்னொரு ஆதங்கம்... நியாயமான ஆதங்கமும் கூட... முக நூலில் இருந்து....

 

டெல்லி மாணவிக்கு தலைவர்கள் இரங்கல். தமிழ் பெண்களை பற்றி கவலையில்லை !

பாலியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டு பின்பு கொடூராமாக தாக்கப்பட்ட டெல்லி மாணவி இன்று இறந்த செய்தி இந்தியாவையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. உலுக்கி உள்ளது .

இந்திய ஊடகங்களில் இது குறித்து விவாதம் நடந்த வண்ணம் உள்ளது . இந்தியா மட்டுமல்ல சர்வதேச ஊடகங்களில் கூட இந்த செய்தி தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துள்ளது. டெல்லி மாணவியின் இறந்த செய்தி கேட்டதும் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். அமைதிப் பேரணியும் நடத்துகின்றனர். டெல்லி நகரின் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்று கருதி டெல்லி அரசு 144 தடை சட்டம் போட்டுள்ளது. இதனால் பத்திற்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தியா நுழைவாயில் என்று சொல்லக் கூடிய இந்தியா கேட் பகுதியில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டங்களை தவிர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய பிரமதரும் ஜனாதிபதியும் இறந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஜனாதிபதி ஒரு படி மேலே போய் இறந்த பெண்ணுக்கு வீர வணக்கம் செலுத்தி உள்ளார். வீர மங்கை என்று போற்றி உள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . திமுக தலைவர் கருணாநிதி இந்த பெண்ணுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டில் உள்ள மேல்தட்டு குடும்பங்கள் இன்று அந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவிக்க கடற்கரையில் ஒன்று கூடுகிறார்கள்.

இப்படி ஒரு நிலை இருக்க, டெல்லி நிகழ்விற்கு பிறகு தமிழகத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட பெண்கள், பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தூத்துக்குடி அருகே புனிதா என்னும் ஏழாம் வகுப்பு மாணவி வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டாள். சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (வயது 20) என்ற பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்ததோடு கடுமையாக தாக்கி சம்பவம் நடந்த 3-வது மாடியில் இருந்து வீசி இருக்கிறார்கள். இதனால் சந்தியாவுக்கு தலையில் பலத்த படுகாயத்ததால் இரத்தப்போக்கு அதிகரித்து ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் வாக்குமூலத்தில், 'தன்னை 3 பேர் பலாத்தராத்திற்கு உட்படுத்தி மாடியில் இருந்து வீசியெறிந்தாக கூறி இருக்கிறார்.' அதற்கு பின் சில மணி நேரத்தில் இறந்திருக்கிறார். ஆனால் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தன.

அடுத்ததாக காரைக்கால் பகுதியை சேர்ந்த வினோதினி என்ற பெண் மீது அமிலம் வீசி ஒரு கொடூரன் தாக்குதல் நடத்தினான். அதனால் வினோதினி தனது இரு கண்களையும் இழந்து ஒட்டு மொத்த முகமும் சிதைகப்பட்டு உள்ளது. முகம் முழுவதும் அறுவை சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் அவரும் உயிருக்கு போராடி வருகிறார். இவர் மருத்துவ செலவிற்கு நிதி உதவி கேட்டும் எந்த பெண்கள் அமைப்பும், சமூக அமைப்பும், ஆட்சியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் உதவி செய்ய முன்வரவில்லை.

அதே போல் இடிந்தகரை அணுஉலைப் போராளி ரோசலின் என்பவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது நோய்வாய்ப் பட்டார். சிறையில் அரசு அவருக்கு மருத்துவம் சரிவர பார்க்கவில்லை. அதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் இறந்து விட்டார்.

இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் தாக்கப்பட்டும், வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டும் வருகிறார்கள். இது குறித்து எந்த பெண்கள் அமைப்பும் போராட முன் வரவில்லை. தமிழக முதல்வர் பெயருக்கு கூட இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவிக்க வில்லை. கருணாநிதி போன்றவர்கள் வாய்மூடி மௌனம் சாதித்தனர். தமிழக ஊடகங்கள் டெல்லி நிகழ்விற்கு காட்டிய அக்கறை தமிழக பெண்களின் அவல நிலைக்கும் காட்டி இருந்தால் ஓரளவிற்கு இப்பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கும்.

மெரீனா கடற்கரையில் கூடிய வடஇந்திய மாணவர்கள் மற்றும் திரைப் பட நடிகைகள் தமிழக பெண்களை பற்றி கவலை படவில்லை . இன்று இந்தியாவே கொதிக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் தமிழர்கள் தொலைக் காட்சியின் முன் அமர்ந்து நிகழ்சிகளை கண்டு ரசிக்கின்றனர். தமிழ் சமூக ஆர்வலர்கள் மட்டும் இந்திய நாட்டின் இந்த போராட்டத்தை கண்டு கொந்தளிக்கின்றனர். தமிழீழத்தில் இந்திய அரசின் துணையோடு தமிழ் பெண்கள் ஆயிரம் ஆயிரம் பேர்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொன்று குவிக்கப்பட்டனர். அதற்காக தமிழ் மாணவர்கள், அமைப்புகள் கட்சிகள் போராடினர். ஆனால் இந்திய ஊடகங்கள் தமிழீழத்தில் நடைப் பெற்ற கொலைகளை நியாயப்படுத்தியது. இந்திய பிரதமரோ , ஜனாதிபதியோ ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை . தமிழகத்தின் அப்போதைய முதவ்வரோ , நடக்கின்ற போராட்டம் அனைத்தையும் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அதனால் முத்துக்குமார் போன்ற இன உணர்வாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

தற்போது தமிழ் சமூக ஆர்வலர்கள் வைக்கும் குற்றச் சாட்டு என்னவெனில் , தமிழ் பெண்களுக்கு இவ்வாறான அவல நிலை தொடரும் போது தமிழ் நாட்டில் உள்ள இந்தியர்களோ, இந்தியாவில் பிற பகுதியில் உள்ள இந்தியர்களோ ஏன் குரல் கொடுப்பதில்லை என்பது தான் . இந்திய ஆட்சியாளர்களும் தமிழ் நாட்டின் ஆட்சியாளர்களும் ஏன் தமிழ் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில்லை? தமிழகத்தை தமிழர்கள் ஆள வில்லை என்பதால் தமிழர்கள் போராட முன்வரவில்லையா அல்லது வடஇந்தியா மட்டும் தான் இந்தியாவா என்ற கேள்வி எழுப்பி உள்ளனர் தமிழ் சமூக ஆர்வலர்கள். இந்த கேள்விக்கு தமிழர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அவலத்திற்கு குரல் கொடுக்காமல் டெல்லியில் நடந்த அவலத்திற்கு தமிழக மக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருப்பது, தங்கள் வீட்டின் பிரச்னையை விட எங்கோ இருக்கும் வீட்டின் பிரச்சனைக்கு தான் தமிழர்கள் குரல் கொடுப்பார்கள் என்ற பழி தமிழ்நாட்டின் மக்களின் மேல் விழுந்துள்ளது . இந்த பழியை துடைக்க தமிழர்கள் ஒன்றாக வேண்டும் . தமிழ் இனத்திற்காக போராட முன் வரவேண்டும்.

- இராஜ்குமார் பழனிசாமி

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.