Jump to content

தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டு


Recommended Posts

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்; செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். 524

ஒருவன் செல்வம் பெற்றதனால் அடையக்கூடிய நன்மை யாதெனில் தன்சுற்றத்தாரால் தான சூழப்படும் வகையில் தழுவி வாழ்தலாகும் .

எனது கருத்து :

ஒருத்தன் என்னதான் வாழ்க்கையிலை சம்பாதிச்சு வைச்சாலும் , சொந்தபந்தங்கள் ஒன்றாய் கூடிச் சீவிக்கிற சீவியம்தான் அவன் எடுத்த பெரிய கொடை எண்டு சொல்லுறியள் . ஆனால் எங்களுக்குத்தான் அந்தக் குடுப்பினை இல்லாமல் போட்டுது .

The profit gained by wealth's increase,
Is living compassed round by relatives in peace.


Celui qui donne et dit des paroles suaves sera entouré de parents empressés.

 

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். 525

உதவி செய்தும் இனிமையாகப் பேசியும் வாழ்பவனை உறவினர் சூழ்ந்து இருப்பர் .

எனது கருத்து :

இப்பிடிபட்ட சுற்றம் தேவையோ ஐயன் ?? என்னை பொறுத்தவரையிலை ஒருவித எதிர்பார்பும் இல்லாத , கஸ்ரத்திலையும் கைகொடுக்கிற சொந்தபந்தங்கள்தான் நிலைக்கும் . மிச்மெல்லாம் குளத்திலை தண்ணி வத்தின உடனை பறந்துபோற பறவையள் மாதிரித்தான் இருக்கும் .

Who knows the use of pleasant words, and liberal gifts can give,
Connections, heaps of them, surrounding him shall live.


L'utilité de la fortune acquise par quelqu'un est de vivre entouré de ses parents.

Link to comment
Share on other sites

பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குஉடையார் மாநிலத்து இல். 526

ஒருவன் கொடைக்குணம் உடையவனாகவும் , கோபம் இல்லாதவனுமாக இருந்தால் , அவனைப்போலச் சுற்றத்தாரைப் பெற்றிருப்பவர் இப்பெரிய உலகில் வேறு எவரும் இலர்.

எனது கருத்து :

ஒருத்தன் உதவி செய்யிறவனாயும் , எல்லாரோடையும் குற்றம் குறை இல்லாமல் பழகிறவனாய் இருந்தால் அவனை சொந்தபந்தமாய் வைச்சிருக்க குடுத்துவைச்சிருக்கவேணும் எண்டு சொல்லுறிங்கள் . அப்ப மற்றவையும் இப்பிடி அவனோடை நடப்பினமோ ??

Than one who gifts bestows and wrath restrains,
Through the wide world none larger following gains.


Il n'y a pas en ce vaste monde, d'homme qui ait des parents plus nombreux, que celui qui fait des largesses et qui n'aime pas la colère.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. 527

காக்கைகள் தமக்கு இரை கிடைத்தால் மறைக்காமல் தன் இனத்தையும் அழைத்து அவற்றோடு சேர்ந்துண்ணும். பல்வகை ஆக்கங்களும் அக்காக்கையைப் போன்ற இயல்புடையார்க்கே உள்ளனவாம்.

எனது கருத்து :

தனிய சாப்பாடிலை மட்டும் காகத்தை போலை இல்லாமல் , ஒற்றுமையிலையும் காகத்தைப்போலை இருந்தால்தான் அவன்ரை தேட்டங்கள் கூடிக்கொண்டு போகும் .

The crows conceal not, call their friends to come, then eat;
Increase of good such worthy ones shall meet.


Le corbeau ne cache pas la proie qu'il a trouvée à ses congénères, mais il les appelle et la partage avec eux. Ainsi la fortune n'écheoit qu'aux gens de cette qualité.

Link to comment
Share on other sites

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். 528

அரசன் எல்லோரையும் ஒரு தன்மையாகக் கருதாமல் அவரவர் தகுதியறிந்து மதித்து ஒழுகுவாயின் அம்மதிப்பைக் கருதி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலராவர்.

எனது கருத்து :

ஒருநாட்டிலை இருக்கிற குடிமக்கள் எல்லாரும் சமன் எண்டாலும் , அவையவையின்ரை தகுதி தராதரத்துக்கு ஏத்தமாதிரி அந்த அரசு பழகினால் , அந்த அரைசை சுத்தி சுற்றத்தார் அரணாக நிப்பினம் எண்டு சொன்னாலும் , இப்பிடி அரசன் பழகினால் அந்த நாட்டு மக்கள் ஒற்றுமையா இருப்பினமோ ??? எண்ட கேள்வியும் வருகிது .

Where king regards not all alike, but each in his degree,
'Neath such discerning rule many dwell happily.


Si, au lieu de traiter tous indistinctement, le Roi traite les parents selon leur mérite, nombreux seront ceux qui escompteront ce privilège et vivront de ses bienfaits.

Link to comment
Share on other sites

தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். 529

உறவினராயிருந்தவர் ஏதோ காரணத்தால் விலகிச் சென்றிருந்தால் அப்பிரிவுக் காரணம் நீங்கியபின் மீண்டும் உறவினராக வந்து சேருவர் .

எனது கருத்து :

சிலபேர் இருக்கினம் முட்டையிலை மயிர்புடுங்கிக் கொண்டு உன்ரை ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் எண்டு போடுவினம் . நாங்கள் ஒருக்காலும் அவையிட்டை போய் கெஞ்சி அவையளை பெரியமனசர் ஆக்கக் கூடாது . ஒருகாலத்திலை அவையே தங்கடை பிழையளை உணந்து திரும்பி வருவினம் .

Who once were his, and then forsook him, as before
Will come around, when cause of disagreement is no more.


Un parent séparé redevient parent, par la suppression de la cause de la séparation.

Link to comment
Share on other sites

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். 530

அரசன் தன்னிடமிருந்து பிரிந்து சென்று திரும்பி வந்த சுற்றத்தானை அவன் வந்த காரணத்தை நிறைவேற்றி அவன் குணங்களை ஆராயத் தக்கவனாயின் அவனைச் சுற்றமாகத் தழுவிக்கொள்ள வேண்டும் .

எனது கருத்து :

தங்கடை பிழையளை உணர்ந்து ஒருத்தர் திரும்பி வாறநேரம் , சென்ரிமென்ரலாய் வெளுத்ததெல்லாம் பால் எண்டு இருக்காமல் , அவையளுக்கு தேவையான உதவியளைசெய்து குடுத்து , அவையளை நீளமான கயித்திலை விட்டுத்தான் சேத்துக்கொள்ளவேணும் .

Who causeless went away, then to return, for any cause, ask leave;
The king should sift their motives well, consider, and receive!


Si un parent séparé sans motif revient par l'espoir d'obtenir un avantage, que le Roi examine 'objet de son désir et se l'attache an lui donnant satisfaction.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பொருட்பால் - அரசியல் - பொச்சாவாமை Unforgetfulness , Ne pas s’oublier. ,531 -540)

 

 

forgetfulness-800X800.jpg

 

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு. 531
 
மிகுந்த உவகையால் மகிழ்ந்து இருக்கும்பொழுது மறதியால் வரும் சோர்வு, அளவு கடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமையானதாகும் .

எனதுகருத்து:

ஒருத்தன் எந்த நிலமையிலை இருந்தாலும் செய்யவேண்டிய வேலையளை மறக்காமல் அந்தந்த நேரத்திலை செய்யவேணும் . அப்படி மறந்தால் அதாலை வாற சேதாரங்கள் கூடவாய் இருக்கும் .

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul
Bring self-forgetfulness than if transcendent wrath control .


L'oabli de soi-même qui provient d'une trop grande joie est plus nuisible (au Roi) que la colère violente.
 

Link to comment
Share on other sites

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றுஆங்கு.532

நாள்தோறும் விடாமல் வரும் வறுமை, அறிவைக் கெடுப்பது போல , மறதி ஒருவனது புகழைக் கெடுத்து விடும் .

எனதுகருத்து:
 
ஒருத்தனுக்கு வாழ்க்கை முழுக்க ஏழையாய் இருந்தால் எப்பிடி பெரிய அளவிலை படிக்கேலாதோ , அப்பிடித்தான் அவன் மறந்து போற விசையங்களாலை அவனின்ரை புகழும் கெட்டு போகும் .
 
Perpetual, poverty is death to wisdom of the wise;
When man forgets himself his glory dies!


Dé même que l'indigence excessive nuit à l'intelligence:
le faux sentiment de la sécurité tue la gloire.

Link to comment
Share on other sites

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. 533

மறதி உடயவர்களுக்குப் புகழுடன் வாழும் தன்மை இல்லை . இது உலகத்தில் உள்ள எல்லா நூல்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும் .

எனதுகருத்து:

நீங்கள் என்னதான் பெரியகொம்பனாய்இருந்தாலும் இந்த அறணைகுணம் உங்களிட்டை இருந்தால் நீங்கள் சீறோ தான் .
 
'To self-oblivious men no praise'; this rule
Decisive wisdom sums of every school.


Ceux qui s'oublient n'obtiennent pas la gloire: telle est la conclusion non seulement de ceux qui ont traité de la morale mais aussi de tous les écrivains de l'univers.
 

Link to comment
Share on other sites

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ;ஆங்குஇல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. 534

உள்ளத்தில் அச்சம் உடையவர்களுக்குப் புறத்தில் அரண் இருந்தும் பயன் இல்லை . அதேபோல மறதி உடையவர்களுக்கு நல்லநிலை வாய்க்கப் பெற்றிருந்தும் பயன் இல்லை .

எனதுகருத்து:

மனசில பயம் இருக்கிறவைக்கு நீங்கள் என்னதான் பாதுகாப்பு குடுத்தாலும் அதாலை ஒருவேலையும் இல்லை . அதைமாதிரித்தான் இந்த அறணைக்குணம் பிடிச்ச ஆக்களுக்கும் .
 
To cowards is no fort's defence'; e'en so
The self-oblivious men no blessing know.


La forteresse ne profite guère à ceux qui ont peur intérieurement, de même l'abandance des richesses ne protite pas aux Sans-soucci.

Link to comment
Share on other sites

முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும். 535

துன்பம் வருவதற்கு முன்பு தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன் , பின்பு துன்பம் வரும்பொழுது தன் பிழையை நினைத்து வருந்துவான் .

எனதுகருத்து:

சிலபேரைப் பாத்தியள் எண்டால் ஆரம்பத்தில பிரச்சனையளை தீக்கிறவேலையளை விட்டுப்போட்டு , அதுமுத்தி வெடிச்சு தலைக்குமேலை போனாப்பிறகு செரியா ஃபீல் பண்ணுவினம் கண்டியளோ .
 
To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.


L'insouciant qui ne se prémunit pas contre les malheurs,
déplorera sa négligence, une foie le désastre venu.

 

Link to comment
Share on other sites

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல். 536

மறதியில்லாத இயல்பு எவரிடத்திலும் , எக்காலத்திலும் பொருந்தியிருக்குமானால் , அதற்கு ஒப்பான நன்மை வேறு இல்லை .

எனதுகருத்து:

உங்களிட்டை இந்த அறணைக்குணம் இல்லையெண்டால் நீங்கள் முன்னுக்குவர கனக்க மினைக்கெடத் தேவையில்லை தானாகவே முன்னுக்கு வந்திடுவிங்கள் பாருங்கோ
 
Towards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.


D n'y a pas de bien pouvant égaler le non relâchement dans la vigilance, incessante en tout temps et contre tous les hommes.

Link to comment
Share on other sites

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியான் போற்றிச் செயின். 537

மறவாமை என்னும் கருவி கொண்டு கடமைகளைச் சரிவரச் செய்து வந்தால் ,செய்வதற்கு அருமையானவையென்று கைவிடும் செயல்கள் எவையும் இல்லை .

எனதுகருத்து:
 
இதிலை என்னாலை பெரியளவு உங்களோடை ஒத்துவரேலாமல் இருக்கு ஐயன் . ஒருத்தன் என்ன திறமைசாலியாய் இருந்தாலும் அவன் செய்த நல்லது கெட்டதுகளை வைச்சுத்தான் அவனுக்கு பொறுத்தநேரங்களிலை ஞாபகம் வாறதும் மறந்து போறதும் . கர்ணன் எவ்வளவு பெரிய வீரன் கடைசி நேரத்தில அவன் பரசுராமர் முனிவரின்ரை சாபத்தாலை பிரம்மஸ்திரத்தை விடுகிற மந்திரம் மறந்துபோனதை எப்பிடி எடுக்கிறது ??
 
Though things are arduous deemed, there's nought may not be won,
When work with mind's unslumbering energy and thought is done.

 

Rien d'impossible à celui qui agit avec prudence et sans s'oublier.

Link to comment
Share on other sites

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 538

அறநூலார் புகழ்ந்து கூறிய செயல்களை விடாமல் செய்ய வேண்டும் .அவ்வாறு செய்யாமல் மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மையில்லை .

எனதுகருத்து:
 
இதென்ன கதை ஐயன் ?? பெரியாக்கள் சொல்லுற விசயங்கள் எல்லாம் சரி எண்டு சொல்ல ஏலாது . ஏன் , எப்பிடி , எதுக்கு எண்ட கேள்வியள் மனிசரிட்டை வந்ததாலைதான் நாங்கள் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறம் .
 
Let things that merit praise thy watchful soul employ;
Who these despise attain through sevenfold births no joy.


Il faut faire les actes recommandés par les Sages.
Sinon on n'aura pas de bonheur dans ses sept naissances.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக ; தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துஉறும் போழ்து. 539

மகிழ்ச்சியில் கர்வம் கொள்கின்றபொழுது அம்மகிழ்ச்சியினால் கடமை மறந்து அழிந்தவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும் .

எனதுகருத்து:
 
அப்பிடி ஒரு மனநிலமை இருந்தால் ஏன்ஐயன் உலகத்திலை இவ்வளவு பிரச்சனையள் ?? அதிகாரமும் பதவியும் சும்மா கிடக்கிறவனையும் கொம்பு சீவிவிடும் . நாட்டை முன்னேத்தாமல் , தன்ரை நாட்டு மக்களையே போரிலை வெண்டு போட்டன் எண்டு சொல்லுற மகிந்தா இதுக்கு நல்ல உதாரணம் கண்டியளோ ....
 
Think on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought.


Lorsqu'on s'oublie dans une trop grande joie,
qu'on se rappelle ceux que leur insouciance a perdus.

Link to comment
Share on other sites

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். 540

ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி சோர்வில்லாமல் இருக்கப்பெற்றால் , அவன் நினைத்ததை அடைதல் எளிதாகும்.

எனதுகருத்து:
 
நீங்கள் சொல்லிறது சரியெண்டாலும் , இண்டையான் நிலமையிலை சிலபேரை பாத்தியள் எண்டால் அவையின்ரை கதையள் கூடவாய் இருக்கும் .ஆனால் செய்கையளை தேடித்தான் பிடிக்கவேணும் . இவையள் தரவளியை நம்பிற கூட்டங்கள்தான் கூடவாய்க் கிடக்கு .

'T'is easy what thou hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.


Il est aisé d'obtenir ce que l'on a désiré,
si l'on a constamment présent à la mémoire l'objet désiré.

 

Link to comment
Share on other sites

பொருட்பால் - அரசியல் - செங்கோன்மை ,540 -550 , The Right Sceptre , Manière de Gouverner 540 - 550 )

 

 

Sceptre_and_Orb_and_Imperial_Crown_of_Au

 

 

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. 541

நடுநிலை தவறாமல் யாரிடத்துதும் இரக்கம் காட்டாமல் குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும் .

எனது கருத்து :

 

இந்தக் கலி காலத்திலை இது எங்கை ஐயா நடக்குது ?? நடு நிலைமை எண்டுறதே தங்கடை வசதிக்கு எத்த மாதிரி சொல்லுறதுதானே இப்ப நடக்குது . இல்லாட்டில் ஒரு இடத்திலை தங்கடைநாட்டுக்கு விடுதலை போராடுறவங்களை பாத்து சுதந்திரப் போராளி எண்டு சொலுற அதே ஆள்தான் தனக்கு பிடிக்காத இன்னொருத்தனை பாத்து பயங்கரவாதி எண்டு சொல்லுறான் .

 

Search out, to no one favour show; with heart that justice loves
Consult, then act; this is the rule that right approves.


Connaître les infractions, les examiner sans parti pris, n'incliner ni d'un côté ni de l'autre désirer et tenir le juste milieu, délibérer avec les hommes de Loi, puis prononcer la son tence: voilà rendre la justice.

Link to comment
Share on other sites

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543

அந்தணரது மறை நூல்களுக்கும் உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடையை செங்கோலாகும்
 

எனது கருத்து :

 

" அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி " எண்டு சொல்லுவினம் . ஒரு நாட்டிலை நிர்வாகதின்ரை தலைமை பொறுப்பிலை  இருக்கிறவன் நியாயம் நீதியாய் நிர்வாகத்தை கொண்டு போனால் தான் அந்த நாட்டு சனங்களின்ரை வாழ்கை முறையும் ஒழுங்காய் இருக்கும் . ஆனால் இப்ப உள்ள நிலமையிலை கன அரசுகளிலை பேய் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கு . அதுக்கு ஒரு நல்ல உதாரணம் எங்கடை சிறிலங்கா  அரசு.

 

Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.


Le sceptre du Prince est le support de la Religion étudiée par les bhrames et aussi de la vertu qu'elle enseigne.

Link to comment
Share on other sites

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. 544

உலகம் குடிமக்களை அணைத்து நல்லாட்சி நடத்தும் தலைவனின் அடியைப் பின்பற்றி நடக்கும் .

எனது கருத்து :

 

இப்ப இருக்கிற உலகம் எங்கை தனக்கு லாபம் இருக்கோ அங்கைதான் முன்னுக்கு நிக்கும் . அறம் நீதி நேர்மை எல்லாம் அதுக்குத் தெரியாது . பெற்றொலுக்காக சதாமை போட்டதும் இந்த உலகம் தான் . அபின் பயிர் செய்கையிலை முன்னணியிலை நிக்கிற அப்கானிஸ்தானை சுடுகாடாக்கினதும் இந்த உலகம் தான் . உலகத்திலை நடந்த இரண்டாவது பெரிய இனப்படுகொலைக்குப் பின்னாலை நிண்டதும் இதே உலகம் தான்.

Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands .


Le monde embrasse les pieds du Roi qui gouverne son vaste Etat, en protégeant ses sujets et en leur rendant la justice, et qui s'y tient.



 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. 545

 

நீதிநெறியில் அரசாளும் மன்னனுடைய நாட்டில் பருவமழையும் நிறைந்த விளைவும் ஒருங்கு கூடியிருக்கும் .

எனது கருத்து :

 

எனக்கு நீங்கள் சொல்லிற விசையம் விளங்கேலை இயற்கையாய் நடக்கிற மழைக்கும் விளைச்சலுக்கும் நீதி தப்பின அரசனுக்கும் என்ன சம்பந்தம் ?? அப்பிடி பாத்தால் இண்டைக்கு இலங்கை பாலைவனமாய் எல்லோ இருக்கவேணும் ஐயன்??

Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields .


Les pluies de saison et les riches moissons fertilisent ensemble l'Etat du Prince qui tient le sceptre (gouverne) selon les prescriptions de la Loi.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். 546

அரசனுக்கு வெற்றி தருவது அவனுடைய வேல் அன்று செங்கலேயாகும் அதுவும் அச்செங்கோல் வளைவிட்டால்த்தான் வெற்றி தரும் .

எனது கருத்து :

ஆயுதங்கள் வைச்சிருக்கிறதாலை தான் இண்டைக்கு ஐஞ்சு பேர் உலக பொலிஸ்காறர் . இவையள் வைச்சது தான் சட்டம் .அதுக்கு பிறகுதான் இந்த ஆறம் , நல்ல ஆட்சி சமாச்சாரங்கள். இண்டைக்கு ஆயுதம் இல்லாத அரசரை கால் தூசிக்கும் மதிக்கிறாங்கள் இல்லை ஐயன் .

Not lance gives kings the victory,
But sceptre swayed with equity.


Ce qui procure la victoire au Prince sur le champ de bataille, ce n'est pas sa flèche, c'est plutôt son sceptre, pourvu qu'il se tienne droit et ne penche d'aucun côté.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.