Jump to content

இலங்கை தொடர்பில் மத்திய அரசின் நிலைப்பாடே தமிழக அரசுடையதும்


Recommended Posts

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடே தமிழக அரசின் நிலைப்பாடாகும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி கூறியுள்ளார்.

இன்று இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி.

இலங்கைப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமரிடமும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியிடமும் பேசினீர்களா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கின்ற முடிவுதான் தமிழக அரசின் முடிவு என்று கூறினார்.

இலங்கையில் இருந்து அண்மைக்காலங்களில் 2000 இற்கும் அதிகமான அகதிகள் தமிழகம் வந்துள்ளமை குறித்தும் தான் பிரதமரிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக மக்களுக்கான பல நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு உதவி வழங்க வேண்டுமென்றும் தான் பிரதமரிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

bbc.com

இணைப்பு : newstamilnet.com

Link to comment
Share on other sites

தமிழின் தலைவரும் தமிழினத்தின் தலைவரும்!

கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வர் ஆகி விட்டார். ஜெயலலிதாவின் ஆட்சியில் உளவுத்துறைக்கு பொறுப்பாக இருந்தவரும், திமுக கூட்டணியை உடைப்பதற்கு அனைத்துவிதமான வேலைகளையும் செய்தவருமான சிவனாண்டி ஓடிச் சென்று கலைஞருக்கு மலர்ச்செண்டு கொடுத்து ஆசி பெற்றுத் திரும்பினார். (ஆயினும் சிவனாண்டி சிறிதும் அதிகாரமற்ற ஒரு பதவிக்கு இறக்கப்பட்டது வேறு விடயம்). ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருந்த திரையுலகமும மலர்ச்செண்டுகளோடு கலைஞரை சந்திக்க ஓடியது.

இதே போன்று கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவரைத் திட்டிய சில ஈழத் தமிழர்களின் அமைப்புக்களும் ஊடகங்களும், அவர் ஆட்சிக்கு வந்ததும் "வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள்" என்று அசத்தி விட்டன. ஒருவர் வெற்றி பெற்றால் அவரை வாழ்த்துவதில் தவறு ஒன்றும் இல்லை. நாமும் கலைஞரை வாழ்த்துவோம். ஆனால் கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று சிலர் எதிர்பார்ப்பதுதான் மிகவும் அதிகப்படியானது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டில் இருந்த வந்த முதலாவது செய்தி "5 விடுதலைப்புலிகள் கைது" என்பதுதான். அத்துடன் ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கைதான் தனது கொள்கையும் என்று கலைஞர் தெளிவாக அறிவித்துவிட்டார். ஆயினும் எம்மவர்கள் சிலர் "உலகத் தமிழினத்தின் தலைவர் ஈழத் தமிழர்களை ஆதரிக்க வேண்டும்" என்று ஒரு படி மேலே போய் கோரிக்கை வைக்கிறார்கள்.

கலைஞரிடம் இருந்த "உலகத் தமிழினத்தின் தலைவர்" என்ற பட்டம் பறி போய் நீண்ட நாட்களாகி விட்டது. ஆரம்ப காலங்களில் கலைஞர் உலகத் தமிழர்களின் தலைவராக பார்க்கப்பட்டார் என்பது உண்மைதான். ஆனால் அவர் எப்பொழுது ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் தடுமாறத் தொடங்கினாரோ, அன்றே அவர் உலகத் தமிழர்களின் தலைவர் இல்லை என்று ஆகி விட்டார். இன்று "உலகத் தமிழர்களின் தலைவர்" என்று அழைக்கப்படக் கூடிய தகுதி உள்ள ஒருவர் உண்டென்றால், அது பல தடைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைப்பதற்கு போராடி வரும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டுமே ஆவார். கொள்கையில் உறுதியும், இன உரிமையை விட்டுக் கொடுக்காத பண்பும் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் வழிகாட்டியாக விளங்கி வருகிறார் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. கலைஞரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக அவரை சிலர் உலகத் தமிழர்களின் தலைவர் என்று அழைக்கலாம். ஆனால் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்த மூலையில் தமிழன் வாழ்ந்தாலும், அவன் அடி வாங்குகின்ற பொழுது தலைவர் பிரபாகரனைத்தான் நினைப்பான். கலைஞரை அல்ல. அதே வேளை தமிழ் மொழிக்கு கலைஞர்தான் தலைவர் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை. இதனாலேயே கலைஞர் கருணாநிதியை ஆதரிக்காத எம்மைப் போன்றவர்கள் கூட, அன்போடு "கலைஞர்" என்று அழைக்கிறார்கள்.

இதே வேளை இன்னும் ஒன்றையும் குறிப்பிட வேண்டும். எம்மவர்களில் சிலரிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தலைவர்கள் மாறுவதன் மூலம் நாடுகளின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பார்கள். "சந்திரிகா வந்தால் பிரச்சனை தீரும், ரணில் வந்தால் நல்லது என்பார்கள்". "இந்தியாவில் வாஜ்பாய் வந்தால் ஈழத் தமிழர்களை ஆதரிப்பார்" என்பார்கள். "இல்லை, சொனியா வருவதே நல்லது" என்பார்கள். தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி வந்ததும் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று பேசுவார்கள். எல்லவாற்றிற்கும் மேலாக "அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக வந்தால் ஈழத் தமிழர்களுக்கு நல்லது" என்று கூட விவாதிப்பார்கள். இதே போன்று இந்தியா வந்து பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்பார்கள். நோர்வே தீர்த்து வைக்கும் என்பார்கள்.

இவ்வாறு மற்றவர்களை எதிர்பார்ப்தை விட்டுவிட்டு, எமது பலத்திலும் உலகத் தமிழினத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலிலுமே விடுதலையைப் பெறு முடியும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

செய்திகளின் பார்வை - 21.05.06

Link to comment
Share on other sites

«Ð¾¡ý ¾Á¢Æ£Æõ ±ýÚ ´Õ ¿¡Î ¯ÕšŨ¾

þó¾¢Â¡ ´Õ§À¡Ðõ Å¢ÕõÀÅ¢ø¨Ä ±ýÚ

Áò¾¢ÂÃÍ ¾¢ð¼Åð¼Á¡¸ À¸¢Ãí¸Á¡¸ «È¢Å¢òÐÅ¢ðΧ¾..!

«ô§À¡ ¸Õ½¡¿¢¾¢Â¢ý ¿¢¨ÄôÀ¡Îõ «Ð¾¡É¡..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.