Jump to content

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன?


Recommended Posts

  Dr.M.K.Muruganandan ஆல்

>unwantedpregnancy.jpg?w=225நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.

சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி.

சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு கர்ப்பம் தங்கியிருப்பது நிச்சமாயிற்று.

கேட்கவே கோபம் வருகிறதா?

கேவலம்! ஆடாத ஆட்டம் போடும் சிறுக்கிகள் என்று ஏசத் தோன்றுகிறதா?

rape5b15d.jpg?w=225
இவை அவர்கள் தாமாக விரும்பிக் கொண்ட பாலுறுவின் விளைவா?

அல்லது வன்புணர்வின் பலனாக ஏற்பட்டதா என்பதைக் கூட கேட்கவில்லையே நீங்கள்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாலுணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது நிறைவு செய்யப்பட வேண்டியது என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.

ஆனால் இவர்களது பாலுறவுச் செயற்பாடானது சற்று மாறானது என்பது உண்மையே. அதாவது எமது சமூகத்தின் ஒழுக்க வரன்முறைகளை மீறியதாக இருக்கிறது.

சமூக, சட்ட ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்ற போதும் அதனை மீறி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

அதனைத் தீர்ப்பதற்கான மாற்று வழி என்ன?

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே எமது பண்பியல் தடத்தின் மிகக் கௌரவமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதே தமிழினத்தின் இலக்கியங்கள்தாம் பரத்தைகள், விலைமாதர்கள் ஆகியோருடன் ஆடவர்கள் கொண்ட உறவு பற்றியும் சொல்லுகிறது.

குலமாதர்களை விலைமாதர்களிடமிருந்து வேறுபடுத்தி ஒழுக்கக் கோவைகளை முன்னோடியாக இயற்றியதும் எமது பண்டைய இலக்கியங்களே.

எனவே அத்தகைய வரன் மீறிய உறவுகள் பண்டைக் காலம் முதல் இருந்து வருவது உண்மையே.

சரியோ பிழையோ அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இதனை வேறு யாரோ ஒருவரது பிரச்சனையாக அன்றி, உங்களோடு சம்பந்தப்பட்ட ஒருவரது பிரச்சனையாக எண்ணிப் பாருங்கள். உங்கள் சினேகிதி, சகோதரி, அல்லது மனைவி அல்லது அம்மா என்று எண்ணிப் பாருங்கள்.

கேட்கவே மனசு கூசுகிறது, திகில் அடைகிறது அல்லவா?

யாருக்கும் எதுவும் நடக்கக் கூடிய காலம் அல்லவா இது?

எனவே இப்பிரச்சனையை திறந்த மனத்துடன் அணுகுவது அவசியம்.

illegalabortions1.gif?w=241வேண்டப்படாத கர்ப்பம் தங்கிவிட்டால் என்ன நடக்கிறது?

கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு இங்கு சட்டபூர்வமானது அல்ல என்பதால் ஒளித்து மறைத்து செய்கிறார்கள். எந்தவிலை கொடுத்தேனும் செய்கிறார்கள்.

ஒளிவு மறைவாகச் செய்யப்படுவதால் மருத்துவர் அல்லாதவர்களால்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.

பயிற்சி அற்றவர்கள் செய்வதால் இசகுபிசகாகச் செய்யப்பட்டு பல உயிரிழப்புகள் நடக்கின்றன.

அத்தோடு இவற்றில் பல, சுகாதார முறைப்படி செய்யப்படாததால் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் இழப்புகள் தொடர்கின்றன.

தனது பிரசைகளின் நல்வாழ்க்கை, ஆரோக்கியம், உயிர் உத்திரவாதம் ஆகியவற்றை காக்கும் கடமை அரசுக்கு உண்டு.

சட்ட உருவாக்கத்தில் உள்ளவர்கள் பண்டைய வாழ்வின் பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காது கண்ணைத் திறந்து இன்றைய நடப்பைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான உணர்வுடன் அணுக வேண்டும்.

ch06_image08abortion.gif?w=225
கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.

ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

http://hainalama.wordpress.com/2009/09/13/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81/

Link to comment
Share on other sites

ஆண்கள் பலர் கர்ப்பமடைந்ததுபோல் வேண்டாத வயித்தை வைத்திருக்கார்கள்.அதுகும் ஒருவித வேண்டாத கர்ப்பம்தான்.அதுக்கும் ஒரு வழி சொல்லுங்கபா குண்டன்.

Link to comment
Share on other sites

கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.

 

ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

 

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

 

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வைத்தியர் இலங்கையில் சட்டபூர்வமானதாக்க ஏன் முடியம் உள்ளது என்பதை விளக்கவில்லை. அதை அவர் வெளிப்படையாக கூறவில்லை.

 

அதேவேளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் இந்தப்பிரச்சைனை கருத்தடை முறைகளுக்கு மாற்று முறையாகவும் உள்ளது.

 

மொத்தத்தில் இந்த சமூகப்பிரச்சனை ஒரு சிக்கலான விடயம்.

Link to comment
Share on other sites

வைத்தியர் இலங்கையில் சட்டபூர்வமானதாக்க ஏன் முடியம் உள்ளது என்பதை விளக்கவில்லை. அதை அவர் வெளிப்படையாக கூறவில்லை.

 

 

 

இலங்கை ஒரு பெளத்த நாடு. பெளத்தம் உயிர் கொலைகளை அனுமதிப்பதில்லை. எனவே தான் இலங்கையில் கருக்கலைப்பினைச் சட்டபூர்வமானதாக்கவில்லை.

 

தமிழர்களின் உயிரின் மதிப்பு இந்த வகைக்குள் அடங்க மாட்டாது என்று சிங்கள பெளத்தம் சொல்கின்றது,

Link to comment
Share on other sites

இலங்கை ஒரு பெளத்த நாடு. பெளத்தம் உயிர் கொலைகளை அனுமதிப்பதில்லை. எனவே தான் இலங்கையில் கருக்கலைப்பினைச் சட்டபூர்வமானதாக்கவில்லை.

 

தமிழர்களின் உயிரின் மதிப்பு இந்த வகைக்குள் அடங்க மாட்டாது என்று சிங்கள பெளத்தம் சொல்கின்றது,

 

ஆக இதுவும் சிங்களத்தில் தமிழர்களின் மீதான ஒரு மனித உரிமை மீறல்தான் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அயர்லாந்து அநியாயயத்தினையும் வாசியுங்கோ!!! 

 

சட்டங்களும், மதக்கோட்பாடுகளும்... சில சமயங்களில் மன்னிக்க முடியாத தவறிழைத்துவிடுகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் இந்த துர்மரணம்!

 

கர்நாடகாவைச் சேர்ந்த சவீதா, பல் மருத்துவம் படித்தவர். அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் பொறியாளராகப் பணியாற்றும் பிரவீன் என்பவரைக் கரம்பிடித்து, அங்கே குடியேறினார். சமீபத்தில் கருதரித்த சவீதா, 17 வாரங்கள் ஆன நிலையில், கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட, 'கரு இயல்பான நிலையில் இல்லை' என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, 'கருவைக் கலைத்து விடுங்கள்' என்று டாக்டர்களிடம் பிரவீன் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

 

ஆனால், 'இது கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு. மதச்சட்டப்படி கருவைக் கலைக்கக் கூடாது’ என்று மறுத்துள்ளனர், மருத்துவர்கள். இந்நிலையில் கருவிலிருந்த குழந்தை இறந்துபோக, தொப்புள் கொடி வழியாக சவீதாவின் ரத்தத்தில் நச்சு கலந்து, அக்டோபர் 28 அன்று பரிதாபமாக இறந்துபோனார்.

 

இது, அயர்லாந்தை மட்டுமல்ல... உலகையே அதிர வைத்துள்ளது. அயர்லாந்து மக்கள், வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்!

 

இதைப் பற்றி சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் பேசியபோது, ''நம் நாட்டில், கருக்கலைப்பு விஷயத்தில் 'மெடிக்கல் டெர்மினேஷன் ஆஃப் பிரக்னன்ஸி' (medical termination of pregnancy) என்கிற விதிமுறை உண்டு. கருவைச் சுமக்கும் நிலையில் தாய் இல்லை... தாய் - சேய் உயிருக்கு கருவால் ஆபத்து... பாலியல் பலாத்காரம்... இப்படி தவிர்க்க முடியாத காரணங்களால், உயிருடன் இருக்கும் கருவை கலைப்பது இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோலத்தான், உலகின் பல நாடுகளிலும் சட்டப்படியான கருக்கலைப்பு நடக்கிறது.

 

சவீதா விஷயத்தில், அவருடைய உயிரைக் காக்க அந்த மருத்துவர்கள் தொழில் தர்மத்தோடு முன்வந்திருக்க வேண்டும். ஆனால், சமய சட்டத்தைக் காரணம் காட்டி செய்ய மறுத்தது துரதிர்ஷ்டவசமானது. தற்போது, அந்நாட்டு பெண்களே போராடக் கிளம்பியிருப்பது... வரவேற்கத்தக்கதே. இனியாவது இப்படியான சம்பவங்கள் நிகழாமல் இருக்க... சவீதா விதைக்கப்பட்டிருக்கிறார் என்று ஆறுதல் அடைவதைத் தவிர, வேறென்ன சொல்ல!'' என்றார் சோகத்துடன் டாக்டர் சாதனா.

 

உயிரைப் பறிப்பதற்குப் பெயர்தான் சட்டமா..?

 

 

avl13.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவீதாவின் மரணம் சர்ச்சைக்குரியதாகி உள்ளதோடு.. சட்ட மாற்றங்களுக்கும் நீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இதில் அவர்கள் ஒன்றைச் செய்திருக்கலாம்.. அந்தப் பெண்ணை இங்கிலாந்திற்கு கூட்டி வந்து விடயத்தைச் சொல்லி காப்பாற்றி இருக்கலாம்.

 

என்ன பிரச்சனையோ.. அவ்வாறு அவர்கள் செய்ய முனையவில்லை..??!



எதிர்பாராத கர்ப்பம் அல்லது வேண்டாத கர்ப்பம் இவ்வாறான விடயங்களில் பெண்கள் இரட்டைக் கவனத்தோடு செயற்பட்டால் இயன்றவரை இவற்றைத் தவிர்க்க முடியும். ஆனால்.. பெண்கள் இன்று.. சிந்தனையற்றவர்களாக ஆண்களின் இச்சைக்கு இசையும் சராசரி விலங்குகள் போல வாழத்தலைப்பட்டுள்ளனர். என்ன இவர் ஆண்களைக் கண்டிக்காமல் பெண்களைக் கண்டிக்கிறார் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால்.. ஆண்களுக்கு கர்ப்பப் பிரச்சனையே இல்லை. அநேகம் பாதிக்கப்படுவது பெண்கள் தானே. அந்த வகையில் பாதிப்புக்குள்ளாபவர்களே தம்மில் அதிக கவனம் செலுத்தனும்..!

 

இதனால் தான் மூதாதையர் பெண்களுக்கு சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தனர். இன்று அது அவசியம் இல்லை என்று கருத்தக்க அளவிற்கு கல்வி அறிவு வளர்ந்துவிட்டாலும்.. பெண்களின் அறிவு இன்னும் அதனைப் பிரயோகிக்கும் அளவிற்கு பக்குவப்படவில்லை..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அவர்கள் ஒன்றைச் செய்திருக்கலாம்.. அந்தப் பெண்ணை இங்கிலாந்திற்கு கூட்டி வந்து விடயத்தைச் சொல்லி காப்பாற்றி இருக்கலாம்.

 

 

நெடுக்ஸ்,
 
நீங்கள் சொல்வது தவறானது. 
 
அவர்களது நோக்கம் கருக் கலைப்பு அல்ல, இங்கிலாந்து அல்லது இந்தியா போய் செய்வதற்க்கு.
 
இங்கே அந்த தீடீர் சுகவீனம் அடைந்த கர்ப்பவதிக்கு, உயிர் காக்க செய்ய வேண்டிய கருக் கலைப்பினை செய்யாமல் தவிர்த்ததே மரணத்துக்கு காரணம். 
 
மேலும் பெண்கள் தெளிவோடு தான் இருகின்றார்கள். நீங்கள் சொல்லும் இந்த கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை: சிந்தனையற்றவர்களாக ஆண்களின் இச்சைக்கு இசையும் சராசரி விலங்குகள் போல வாழத்தலைப்பட்டுள்ளனர்.
 
ஒர்-இரு பெண்களின் சில சந்தர்பவாத தவறுக்காக எல்லோரையும் அவ்வாறு நீங்கள் எவ்வாறு கூற முடியும் என புரியவில்லை.
 
எனது வேலைதத்தளத்தில் ஒரு வெள்ளை இன பெண் வேலை போய் விடும் எனும் பயத்தில் தனது 'மேனேஜர்' உடன் நெருங்கினார்.  
 
சில வாரங்களில் அந்த 'மேனேஜர்' வேலை இழந்தவுடன், தனது முட்டாள்தனம்  குறித்து நொந்து போனார்.
 
இதனை என்னென்பது? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி.. அந்தப் பெண் குறித்த சிசுவின் வளர்ச்சி தொடர்பில் உள்ள ஆபத்தை அறிந்து தானே அதனைக் கலைக்க கேட்டிருக்கிறார். அந்த நிலையில்.. அதைச் செய்ய மறுக்கும் இடத்தில் இருந்து கொண்டு எதைச் செய்ய முடியும். அதனால் மறுப்புக்குரிய காரணங்களோடு வேறு இடத்தில் மருத்துவர்களின் உதவியை நாடி இருந்தால்.. அவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்கக் கூடும். அநாவசிய உயிரிழப்பு தவர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால்... இதனை ஒரு பருமட்டாகவே தான் சொல்ல முடியும். இந்தக் case study பற்றி முழுவதும் தெரியாமல் கருத்துச் சொல்ல முடியாது தான்.

 

மேலும்..

 

உங்கள் வெள்ளைக்காரப் பெண்மணியைப் பாருங்கள்.. வேலையில் ஏற்படும் சவால்களை உடலைக் காட்டி சமாளிக்க முற்பட்டதன் விளைவு... இதுதான் புத்திசாலித்தனமற்ற ஒரு அணுகுமுறை என்கிறோம். இதே இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால்.. அவனால்.. அந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும்.. அதற்கேற்ப அவன் சூழ்நிலையைத் தெரிவு செய்து இப்போ வேறு வேலையிலும் இருப்பான். பெண்கள் எதனையும் இலகுவாக கடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு உடற்கவர்ச்சியையும் பயன்படுத்த அவர்கள் ஒருபோதும் பின்நிற்கமாட்டார்கள். சபல ஆண்களின் சபலத்தை கூட்டுவதும் பெண்களின் நடவடிக்கைகளே என்றால்.. அது மிகையல்ல..! இந்த வகையான அணுகுமுறைகளே பெண்கள் தொடர்பில் ஆண்கள் தவறான பார்வை பார்க்க நேரிடுகிறது. அதுவே அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிகிறது.

 

எனக்கு பெண்கள் மீது வெறுப்பில் இதனை எழுதவில்லை. உலகில் அவர்களின் நடத்தைகளை வைத்து எழுதுகிறேன். அதற்காக எல்லாப் பெண்களும் எல்லா ஆண்களும் கெட்டவர்கள் என்பது அல்ல அர்த்தம். தவறான வழியில் போகும் இருபாலாராலும் நல்லவர்களும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டி இருப்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டி உள்ளது. கல்வி கற்றும் அதனை சவால்களை சந்திக்க.. உருப்படியாக பாவிக்க முற்படாதவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறான கோழைகளே இவ்வாறு வழி தவறியும் போகின்றனர். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ்,
 
அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட பின்னர் தான் அவர்களுக்கு உயிர் ஆபத்து நிலைமை புரிந்திருக்கின்றது. ஆகவே அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. போதிய நேரம் இருந்திருந்தால் காப்பாத்தப்பட்டிருக்கலாம்.
 
அடுத்து, நான் சொல்லவந்த விடயம் முழு சுயநல சந்தர்பவாதம். அதனை இருவருமே பயன் படுத்தினார்கள்.
 
உங்கள் முதல் கருத்தில் இச்சை என்பது ஆணுக்கு மட்டுமே உரியது, பெண்கள் அதற்கு உபயோகப் படுத்தப்படுகின்றனர் என்பது போல் உள்ளது. அதனையே தவறு என்கிறேன்.
 
ஆணின் வசதி, வாய்ப்பு பார்த்து, வலையில் வீழ்த்தி மயக்கும் சுயநல பெண்களைப் பற்றி கேள்விபடுகிறோமே. திட்டம் இட்டு கர்ப்பம் தரித்து (கர்ப்ப தடை மாத்திரை எடுத்ததாக பொய் சொல்லி) ஆணை பின்னர்  blackmail பண்ணும் பெண்களும் இருக்கின்றனரே.
 
இது முன்னர் நான் இட்ட பதிவு: பாருங்கள்
 
 
அண்மையில் கூட பிரேசில் நாட்டின் கால் பந்தாட்ட வீரர் இப்படி ஒரு பெண்ணிடம் மாட்டி, கடைசியில் கொலை செய்யும் அளவுக்கு போனார்.
 
 
அகவே நான் சொல்வது என்னெவெனில் பாலியல் பலாத்காரம் தவிர்ந்த ஏனையவை குறித்து பொதுவான கருத்துகளை வைப்பது சரியானது அல்ல.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.