Jump to content

தின மலரில் வந்த செய்தி......................


Recommended Posts

லுங்கியால் கட்டி அகதி சித்ரவதை சலுகைகளில் கைவைக்கும் அதிகாரிகள்* நடவடிக்கை எடுக்குமா புதிய அரசு?

தமிழகத்துக்கு வரும் இலங்கை அகதிகளிடம் நடக்கும்மனித உரிமை மீறல் அவலங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1983 க்கு பிறகு இலங்கையில் மீண்டும் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையில் சண்டை துவங்கும் என்பதால் உயிரை பாதுகாத்துக்கொள்ள அகதிகளாக தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகம் வரும் இவர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை சந்திக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். தனுஷ்கோடி வந்த அகதிகளிடம் கடற்படை வீரர் ஒருவர் வரம்பு மீறி நடந்ததோடு அமெரிக்க டாலர்களையும் பறித்து கொண்டார். அகதி ,புலனாய்வுதுறை அதிகாரிகளிடம் தெரிவிக்க சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்த கடற்படை அதிகாரிகள் அகதியிடம் டாலர்களை ஒப்படைத்து மன்னிப்பு கோரிய சம்பவமும் நடந்துள்ளது. அகதிகளுடன் வந்த ஒருவர் போலீசை கண்டதும் பயத்தினால் ஓட, துரத்தி பிடித்த போலீசார் அவரின் லுங்கியினால் புறம்கையை கட்டி அரைகுறை ஆடையுடன் சித்ரவதை செய்த சம்பவமும் அரங்கேறியது.

மண்டபம் முகாம் செல்லும் அகதிகளின் உடமைகளை அங்குள்ள உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை எடுத்துக்கொண்டுஅவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளிலும் கைவைக் கின்றனர்.முகாமில் பலர் இன்னும் பசைபோல் ஒட்டிக்கொண்டிருப்பதால் அகதிகள் வருகை இவர்களுக்கு பணம் கொட்டும் வியாபாரமாகிவிட்டது. முகாமில் உள்ள கிணறுகளில் பெண்கள் குளிக்கும் காட்சியை டூட்டி போட்டு ரசித்து பார்க்கும் பணியில் போலீசார் ஈடுபடுவதால் பயத்தில் பெண்கள் குளிக்ககூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அகதிகள் முகாமில் நடைபெறும் இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் ,அதிகாரிகள் நடவடிக்கைகள் குறித்தும் புலனாய்வு துறையினர் முழுமையான அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி

உள்ளனர்.

Link to comment
Share on other sites

ஐயா இது ஒண்ற்ம் புதிது அல்ல. சமாதான காலத்திலேயே அங்கு 70 ஆயிரம் அகதிகள் 102 முகாம் களில் இருந்தார்கள். இவர்கள் தினமும் அதிகாரிகளிடம் படும் அவலம் சொல்ல முடியாத்து. நான் இதில் பல முகாம்களுக்கு விசிட் போய் இருக்கிரேன். கியூ ப்பிரான்ச் பொலிஸ்காரன் தொல்லை இந்த முகாம்களில் பெரும் தொல்லை. பின் விளைவுகளுக்குப் பயந்து யாரும் முறைப்பாடு செய்வதில்லை. அகதிகளின் கொஞ்ச உடமைகளை கொள்ளை அடிப்பதற்கு இந்த நாய்கள் செய்யும் அனியாயம் மிகவும் மோசம். சிங்களவன் எவ்வளவோ பரவாயில்ல.

Link to comment
Share on other sites

வந்தாரை வாழவைக்குமா? அங்க உள்ளவனே அஞ்சுக்கும் பத்துக்கும் அடிசுக்கொண்டு சாவுரான்.

கருமம்.

Link to comment
Share on other sites

ஆமாம் ஈழத்தில் தான் பாலாறும் தேனாறும் ஒடுகிறதாம்.. யாரு என்ன பேசுறதுண்ணே விவஸ்தை இல்லாமல் போச்சுடா சாமி

Link to comment
Share on other sites

மேற்கோள்:

ஆமாம் ஈழத்தில் தான் பாலாறும் தேனாறும் ஒடுகிறதாம்.. யாரு என்ன பேசுறதுண்ணே விவஸ்தை இல்லாமல் போச்சுடா சாமி

என்னடா ....... கொஞ்சகாலமா - களம் எந்த வெட்டு கொத்தும் இல்லாம - அமைதியா இருக்கு என்னு பார்த்தம் -

ஆகா - வந்திட்டார் ல - மகராசன்!

இனி நடத்துங்க! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தேவை இல்லாமல் ஈழ தமிழ்ர்களை கேலியாக எழுதும் படி செய்ய வேண்டாம்

_________________

ராஜாதிராஜா எழுதியது......

நீர் எழுதின கருத்தில் எல்லாம் கேலியாகதான் எழுத்யிருக்கிறீர். இப்பஎன்ன புதுசாக மீரட்டுகிரீர்....நாங்கள் ஜனநயகவாதிக்ள் என்றபடியால் தான் நீர் இப்படி எல்லாம் எழ்துவதற்கு விட்டுட்டு இருக்கிறொம்........

Link to comment
Share on other sites

சிலர் செய்யும் தவறுகளுக்காக நாம் எல்லோருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து இது சம்பந்தமாக ஏதாவது ஆக்கபுூர்வமாகச் செய்யலாம்.

தயவுசெய்து தமிழகத்தின் அகதிகள் புனர்வாழ்வு சம்பந்தமான அமைச்சரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தபால் முகவரி போன்றவற்றை ராஜாதிராஜா அல்லது லக்கிலுக் யாராவது இங்கு இணைத்தால் இது விடயமாக நாங்கள் அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதங்கள் அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டுக்கு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் நிலவரங்களை நேரில் பார்வையிட்ட தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி, இந்த முகாமில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட அகதிகள் இருப்பதாகவும், ஆனால் முகாமில் உள்ள நிலைமகள் திருப்திகரமாக இல்லை என்றும் தெரிவித்தார்.

'முகாமில் குளிக்க தனியறை இல்லை'

முகாமில் உள்ள பெண் அகதிகளுக்கு தனியாக குளியலறை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குடியிருப்புகளில் மின்சார வயர்கள் கூட அறுந்து தொங்குவதாகவும், பெண் அகதிகளுக்கு ஆண் போலிசார் பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அகதிகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவி அதிகரிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். இது குறித்து தான் அரசுக்கு மனு ஒன்றை அளிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

b.b.c thamil

Link to comment
Share on other sites

பிச்சைகாரர்களிடமே புடுங்கித்தின்னும் பிச்சைக்கரனுடன் எமக்கு என்ன பேச்சு. என்ன செய்வது. சில சமயங்களில் சாக்கடைகளையும் கடந்துதான் போகவேண்டியுள்ளது.

அணால் எல்ல இந்தியர்களுமே அப்படி அல்ல. பல தூய உள்ளம் படைத்தவர்கள் உள்ளார்கள். அணால் அவர்களையும் இந்த ரஜாதிராஜ மாதிரியான பிணம் தின்னிகள் நிம்மதியாக வாழவிடுவதில்லை. இப்படியான் தூய இந்தியர்கள் சாக்கடையில் கல் எறிந்தால் நமக்குத்தான் அசிங்கம் என அரசியல், பொது வாழ்வில் இருந்து ஒதுங்கி தம்மால் முடிந்தவரை வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கின்றனர். எனக்கு பல நண்பர்கள் உள்ளனர். உண்மையிலேயே மிக சிறந்த மனிதர்கள்.

தமிழகத்த்ல் உள்ள இந்த 70 ஆயிரம் ஈழ அகதிகள் போதுமடா சாமி உங்கள் சாக்கடை நாத்தம் தாங்க முடியல என திரும்பி ஈழத்திற்குப் போவதெண்றாலும், கியூ பிரான்ச் பொலிஸ் நாய்களும், பினம் தின்னி அதிகாரிகளும் அவர்களை போக விடுவதிலை. நான் இது சம்பந்தமாக பல தடவைகள் பலருக்கு திரும்பி போவதர்க்கு உதவி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் முகாம் மற்றும் நலன் குறித்து முதல்வர் கலைஞருக்கு அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம் மற்றும் அகதிகளின் நலன் ஆகியவை குறித்து தமிழக முதல்வர் கலைஞருக்கு ஆய்வறிக்கை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

அகதிகள் நிலை குறித்து ஆய்வு செய்ய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான குணசேகரன் மற்றும் இராமசாமி ஆகியோரை நியமித்திருந்தது.

இருவரும் மண்டபம் அகதிகள் முகாமில் அகதிகளைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் இராமதநாதபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் இருவரும் கூறியதாவது:

தமிழகத்திற்கு அகதிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் உயிருக்கு பயந்து வாழ்வாதாரம் தேடி அகதிகளாக தமிழகம் வருகின்றனர்.

மண்டபம் முகாமில் எவ்வளவு அகதிகள் வந்தாலும் தங்குவதற்கு போதுமான இருப்பிட வசதிகள் உள்ளது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் முகாமில் அகதிகளுக்கு காவல்துறையினரால் எந்த தொந்தரவும் இல்லை.

பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் அகதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முகாமில் போதுமானதாக இல்லை.

குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் குறைவாகவே உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனியாக கழிப்பறை வசதி இல்லை. முகாமில் உள்ள பல குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. அவற்றை மராமத்து செய்ய வேண்டும்.

அகதிகளாக வருபவர்களின் குழந்தைகள் கல்வி பயில பள்ளிகளில் உடனடி சேர்க்கை வழங்க நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்.

மேலும் அகதிகளுக்கு அரசு வழங்கி வரும் அரிசி உள்பட உணவு பொருட்கள், நிதி உதவி போன்றவை ஏற்கனவே உள்ள விகிதப்படியே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் கடந்த பல வருடங்களில் இலங்கையில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த படகுதாரர்களும், இங்குள்ள படகு முகவர்களும் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான விசாரணையை துரிதப்படுத்தி தவறு செய்தவர்களை தண்டித்து மற்றவர்களை விடுவிக்க வேண்டும்.

இது குறித்து எங்கள் கட்சி தலைமைக்கு விரிவான அறிக்கை சமர்பிப்போம்.

கட்சி தலைமை இந்த அறிக்கையை முதல் அமைச்சர் கருணாநிதியிடம் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றார் அவர்.

-புதினம்

Link to comment
Share on other sites

இப்ப மட்டும் எங்க இருக்கிறாரு.... இவரு வீரம் எல்லாம் வெளிநாட்டுலே கம்ப்யூட்டர் முன்னாடி தான்.... பாவம் அங்கே துப்பாக்கி ஏந்தி சாகறவன் வேறக் கூட்டம்....

தலை சார்... நீங்க வேளாளரா? :lol:

திமுக காறன் ஜாதி அரசியல் ஆரம்பிச்சிட்டான்.....

:wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.