Jump to content

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 1


Recommended Posts

வலைப்பதிவில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் இந்திய தமிழ் அன்பர்களுள் எமது பிரச்சனை பற்றி மிக தெளிவான அறிவோடும், ஆக்க பூர்வமாகவும் விமர்சிக்கும் ஒருவர் தமிழ்சசி.

ஈழம் குறித்தப் பதிவினை சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பொழுது, இவ்வாறு கூறியிருந்தேன்.

உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளார்

இரு நாடுகளின் ராஜதந்திர யுத்தம் பற்றி அந்தப் பதிவில் எழுதியிருந்தேன். இம் முறையும் இந்த ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோற்று தான் உள்ளனர். போர்க் களத்திற்கும், சமாதானக் கால செயல்பாடுகளுக்கும் இடையே இருக்கும் பெருத்த வேறுபாட்டினை இந்த நீண்ட சமாதானக் காலத்தில் (மறைமுக போர்க் காலம் என்று தான் சொல்ல வேண்டும்) புலிகள் உணர்ந்திருப்பார்கள். போர்க் காலங்களை விட இந்தச் சமாதானக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு நிறைய பின்னடைவுகள் நேர்திருக்கின்றன என்று சொல்லலாம்.

சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கிய காலக்கட்டத்தை நோக்கிப் பின்நோக்கி செல்லும் பொழுது சிறீலங்கா அரசு எந்த நிலையில் இருந்தது என்பதையும், தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பதையும் கவனிக்க முடியும்.

யானையிறவு போரில் அரசு படைகள் தோற்று விட்ட சூழலில் தான் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கியது. இராணுவ பலத்தில் புலிகளின் கை ஓங்கியிருந்தது. சிறீலங்கா அரசின் பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்து இருந்தது. மிகவும் வலுவாக 7% பொருளாதார வளர்ச்சியுடன் ஒரு காலத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சிறீலங்கா, 2001ல் வெறும் 1.5% பொருளாதார வளர்ச்சி என்ற நிலைக்குச் சரிவடைந்து மிகக் கடுமையான நிதி நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இருந்தது. திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வெளிநாட்டுக் கடன், மிகக் குறைந்த வருவாய், எந்த நலத்திட்டத்தையும் செய்ய முடியாத நிதி நிலை என ஒரு Bankrupt நிலைக்கு இலங்கைப் பொருளாதாரம் சென்று கொண்டிருந்தது. அன்றைய சூழலில் போர் தொடர்ந்திருந்தால் இன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கும். இலங்கை சீர்குலைந்து போய் இருக்கலாம். ( இதற்கு நேர்மாறாக உலக நாடுகள் இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம் என்று நம்புவதற்கும் இடமுள்ளது. ஆனாலும் இவை யூகங்களே ).

2001-2005க்கு இடையேயான சமாதானக் காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் ஓரளவிற்கு தன்னுடைய ப்ழைய நிலையை மீட்டு எடுத்து விட்டது. கடந்த ஆண்டின் நிலவரப் படி சுமார் 5% பொருளாதார வளர்ச்சியை இலங்கை அடைந்து இருக்கிறது. இராணுவ ரீதியிலும், ஆயுத தளவாடங்களிலும் அரசின் பலம் அதிகரித்து உள்ளது. 2005ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 8% அதிகமாக இரணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்களைத் தவிர இராணுவ வீரர்களின் பலம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக 2001ல் 10,000மாக இருந்த விமானப் படை கடந்த ஆண்டு நிலவரப் படி சுமார் 18,000மாக உயர்ந்துள்ளது.

புலிகளின் இலகு ரக விமானங்கள் குறித்து எழுந்த விமர்சனம் அளவுக்கு இலங்கை அரசின் விமானப் படையின் பலமோ, பலமாக அதிகரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலம் குறித்தோ எதுவுமே எழுதப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இலங்கை அரசு மேற்கொண்ட சில strategic நடவடிக்கைகள் புலிகளின் பலத்தை வெகுவாக குறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக இரண்டு நடவடிக்கைகளைச் சொல்லலாம்

புலிகளின் அதே கொரில்லா உத்தியைப் பின்பற்றி புலிகளை தாக்குவது. இதனைச் செய்ய கருணா பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது.

கருணா பிரச்சனை மூலம் புலிகளை வடக்கு, கிழக்கு எனப் பிளவுப் படுத்தலாம் என்பதாக முதலில் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்து, கருணா "இந்தியாவிலோ", வேறு ஏதோ "ஒரு நாட்டிலோ" பாதுகாப்பாக தஞ்சம் அடைந்து விட்டாலும் அந்தப் பிரச்சனையை அப்படியே இலங்கையின் உளவுப் பிரிவு தக்கவைத்துக் கொண்டது.

கருணா என்ற கவசத்தை அணிந்து புலிகளை திடீரென்று தாக்குவது என்ற அரசு உளவுப் பிரிவின் திட்டம் புலிகளை கடுமையாகப் பாதித்து இருக்கிறது. புலிகளின் முக்கியமான பிரமுகர்கள், இராணுவ தளபதிகள் இவர்களைக் குறிவைத்து நடந்து வரும் இந்தத் தாக்குதல் தமிழ் ஈழப் போராட்டத்தின் போர் சூழ்நிலையில் மோசமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்சல்யன் தொடங்கி, கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட ரமணன் வரை புலிகளின் பல முக்கியமான தளபதிகள் இந்த சமாதானக் காலத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இன்று ஒரு அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை புலிகளும் எதிர்கொண்டு இருக்கின்றனர். ஏனெனில் அவர்களும் ஒரு தனி அரசாங்கத்தை தமிழீழத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கொரில்லா நிலையில் இருந்து மாறுதல் பெற்று ஒரு தனி அரசாங்கத்தை அவர்கள் நிறுவி நடத்தி வரும் சூழ்நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தான் இலங்கையில் தற்பொழுது தொடர்ந்து நடந்து வரும் சண்டைகளுக்கு முக்கிய காரணம்.

மற்றொரு விடயம், புலிகளின் சார்பு நிலையில் இருந்த சில சிறந்த சிந்தனையாளர்களை அகற்றுவது, அதன் மூலம் அங்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவது.

சமாதானக் காலத்தில், பேச்சுவார்த்தை போன்ற சூழ்நிலை நிலவும் பொழுது இந்தப் பிரச்சனையை சிறந்த வகையில் வெளிப்படுத்தும் சிறந்த சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பிற சமூகத்தினரும் மதிக்கும் எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் முக்கியமான ஆயுதம் என்றே அறியப்படுகிறார்கள். அவ்வாறு ஒரு முகத்தை தமிழ் ஈழ தமிழ் சமுதாயத்தில் வெளிப்படுத்தியவர் "தாரகி" என்று அழைக்கப்படும் தருமரத்தினம் சிவராம்.

தாரகி சிறந்தப் பத்திரிக்கையாளர், இராணுவ ஆய்வாளர் மற்றும் சிந்தனையாளர். இவரை கொழும்புவில் "அதிகப் பாதுகாப்பு மிக்கப் பகுதியாக" அறியப்பட்ட ஒரு பகுதியில் "சிறீலங்கா அரசு உளவுப்பிரிவினர்" கொன்றனர். இதன் மூலம் தமிழ் ஈழ சமுதாயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திய ஒரு சிறந்த சிந்தனையாளரை அகற்றி விட்டனர்.

சமீபத்தில் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உள்ளிட்ட தினமும் கொல்லப்படும் எத்தனையோ அப்பாவி மக்கள், திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மாணவர்கள், ஜோசப் பரராஜசிங்கம், கொளசல்யன் தொடங்கி கடந்த மாதம் ரமணன் வரை சுட்டுகொல்லப்பட்ட சில முக்கியமான புலிகள் பிரமுகர்கள் எனப் பல "பயங்கரவாத" நடவடிக்கைகளை மேற்க்கொண்டிருந்த சிறீலங்கா அரசு மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் பலச் செயல்களும் இதையொட்டியே இருந்தன. லஷ்மண் கதிர்காமர் கொல்லப்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியங்களில் பயணம் செய்ய தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த இந்தத் தடைக்கு நியாயமான காரணம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. படுகொலைகள் ஒரு பயங்கரவாதச் செயல் என்ற வகையில் புலிகளின் அரசியல் படுகொலைகள் கண்டனத்திற்குரியது.

அதே நேரத்தில் "வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

"தாரகி" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் "சிலவற்றையேனும்" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது.

இந்தப் பிரச்சனைக்கு எத்தகைய தீர்வு தான் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

புகைந்துக் கொண்டிருந்த இந்தப் பிரச்சனை விஸ்ரூபம் எடுத்தது கடந்த ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றப் பிறகு தான். மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலத்தில் நிலவியச் சூழ்நிலை கவனிக்கத்தக்கது. புலிகள் "ஆதரவு", "எதிர்ப்பு" என்ற உணர்வுகளை விலக்கிப் பார்க்கும் பலருக்கும் அப்பொழுது நிலவிய சூழ்நிலை தெளிவாகப் புரியும்.

மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையில் நானும் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு எழுதிய சூழ்நிலையிலும் தமிழ் ஈழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகவே நான் நம்பினேன். முக்கியமான கட்டம் என்பது "தமிழீழம்" என்ற தனி நாட்டை நோக்கிய ஒரு முக்கியமான முன்னேற்றம், அல்லது சிறீலங்கா அரசு போர் நோக்கி நகரும் தீவிரம் இவை ஏதேனும் ஒன்று என்ற ரீதியில் தான் எனது பதிவில் அதனைக் குறிப்பிட்டிருந்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில் பல ஊடகங்களின் செய்தியை நோக்கினால், குறிப்பாக சிறீலங்காவில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" போன்ற ஆங்கில நாளிதழ்கள், சிறீலங்காவிற்கு வெளியே இருக்கும் சிறீலங்கா அரசு சார்பு ஏடுகளான "ஹிந்து" போன்ற நாளிதழ்களை கவனித்து வருபவர்களுக்கு இந் நிலை தெளிவாகப் புரிந்திருக்கும்.

புலிகளுக்கு உலக நாடுகள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் "புலிகள்" எதிர்ப்பாளர்களை கவலை கொள்ள வைத்திருந்தது. மஹிந்த ராஜபக்ஷ போன்ற சிங்கள இனவாத தலைவர்கள் பதவியேற்றிருக்கும் சூழ்நிலையில் புலிகளின் நிலைக்கு பலம் சேர்ந்திருந்தச் சூழலில்

தான் இந்தப் போக்கு தடம் மாறியது.

பல நாட்டு உளவு அமைப்புகள், Strategists போன்றவர்கள் இணைந்து அமைத்த வியூகத்தில் புலிகள் சிக்கிக் கொண்டனர். இன்று பல நாடுகளின் தடை நோக்கி அவர்கள் செல்ல காரணமாக அமைந்ததும் இந்த வியூகச் சிக்கல் தான். வழக்கம் போல தங்களுடைய வியூகத்தை தெளிவாக அமைக்காமலேயே, நிறுவனப்படுத்தப்பட்ட நாடு என்ற ஒரே முகமூடியைக் கொண்டு இந்தப் பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாக சிறீலங்கா அரசு பயன்படுத்திக் கொண்டது.

முதலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த "தமிழ் தேசம்" என்பதை கேள்விக்குள்ளாக்குவது, புலிகள் அனைத்து தமிழ் மக்களுக்குமான பிரதிநிகள் அல்ல என்று நிலை நிறுத்துவது என்ற போக்கில் தான் அரசின் உத்தி இருந்தது. அதற்கு அவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரம் தான் "கருணா". "ஹிந்து" போன்ற சிறீலங்கா அரசு சார்பு ஊடகங்களில் "கிழக்கு மக்களின்" உரிமைகள் குறித்து தொடர்ந்து எழுதப்படுவதை இங்கே கவனிக்க வேண்டும்.

இவ்வாறு சிறீலங்கா அரசுக்கும், புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக் கொண்டவர்கள் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இருக்கும் நம்முடைய அப்பாவி தமிழ்ச் சகோதர/சகோதரிகள் என்பது தான் வேதனைப்படுத்தும் உண்மை

சிறீலங்கா அரசு விளையாட தொடங்கிய இந்த சதுரங்க ஆட்டத்தில் புலிகள் எடுத்த எதிர் நிலைப்பாடு குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

நன்றி தமிழ் சசி.

http://thamizhsasi.blogspot.com/2006/06/1.html

Link to comment
Share on other sites

பின்னூட்டம் 1 டி சே தமிழன்

/அதே நேரத்தில் "வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

"தாரகி" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் "சிலவற்றையேனும்" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது./

இந்த நிலைதான் எனக்கும் அடிக்கடி வருவது. நல்லதொரு பதிவு. நன்றி சசி.

http://www.elanko.net/pathivu/

பின்னூட்டம் 2 Rose Mary

I agree with you about the current situation and the problems that LTTE has to confront. however i beg to differ on why LTTE lost in the propaganda war when GOSL won. It is partially part of LTTE's lack of efficient representatives and propagandists in the west, and the rest is due to the mere "closed eye" politics of the west (read EU, Canada and USA).

I, you as well any other observer of srilankan politics know Kausalyan's assasination preceded Kadigamar's assasination, and Pararajasingam's assasination preceeded the assisasination attempt on Army top brass Fonseka. Yet, NO governernment on the west nor india gave the equivalent improtance to loss of both sides. there is a sort of supporting 'legitimate GOSL" from the west. If you look the history, even a single state NEVER supported a rebel organization unless the particular state gains something out of the rebellion for itself. The words, "democracy", "terrorism" and the pharses in the simliar line get spawned according to 'what is the best for us.' Hence, none can completely blame LTTE for the loss of propaganda war.

Yet, LTTE has a venue that it has not fully explored till this moment. identifying the interests of these countries or at least some of the powerful people in these countries and align themselves with their interests. This helps for LTTE. At least Thirumavalavan showed it as a good move, though his party lost in number of seats seats.

LTTE also wants to have a good propaganist firm to promote them in the west. AT least keep the western born spokepersons or prominent figures who can provide the children of the soil face in the west, like Vannessa Redgrave for Chechniyans, and Richard gere for Tibetians.

canadian situation is a little complecated, as the current conservative premier buffon is more eager to mimic his god fearing gay hating conservative US counterfart for his consistuency rather than alligning with GOSL. In EU's recent actions what many did not notice in the hullabulla of banning LTTE is that tightening GOSL with withholding of funds that was already promissed.

In one way, when i look LTTE's survival in the past, I do not think LTTE will loose much finantially, as it may have alternative finantial resources or mode to flow and follow money into its strips.

http://rosemayr.blogspot.com/

பின்னூட்டம் 3 தமிழ் சசி

Rosemary,

உங்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

தமிழ் ஈழப் பிரச்சனையை உலக நாடுகளிடம் கொண்டு செல்லக் கூடிய ஒரு நபரை, உலக நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ளக் கூடிய திறமையுடைய ஒருவரை இது வரை புலிகள் உருவாக்கி கொள்ளவில்லை என்பதும் புலிகளின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம்.

]புலிகளின் ஆலோசகராக அறியப்படும் ஆண்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் போன்றோர் இந்தப் பிரச்சனையை எந்தளவுக்கு பிற நாடுகளிடம் Diplomaticஆக அணுக முடிந்திருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, தற்பொழுது இருக்கின்ற பெரிய இடைவெளி நமக்கு புரிகிறது.

சமாதானக் காலங்களில் தேவைப்படும் இத்தகைய திறமையுள்ள ஒருவரை எப்படி கண்டறியப் போகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சிலரை பயன்படுத்திக் கொள்ள முடியுமா ? என்ற கேள்விகள் எழுகின்றன.

சமாதானப் பேச்சுகளில் பங்கேற்கும் குழுவை கவனிக்கும் பொழுது கூட பலர் புலிகள் இயக்கத்தில் இருக்கும் முக்கிய தளபதிகள் தான். இதில் எந்த தவறும் இல்லை என்றாலும் இவர்களால் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை, பிற நாடுகளுடன் உறவினை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

சமாதானக் குழு என்பது சில நாட்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் குழு மட்டுமே அல்ல. தொடர்ச்சியாக பிற நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பராமரிக்க தக்க அளவிலான Logistics அந்தக் குழுவிற்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் போனது ஒரு பெரிய இடைவெளியை புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தியிருக்கிறது.

பின்னுட்டம் 4 டி சே தமிழன்

Rosemary யின் பின்னூட்டத்தை வாசிக்கும்போது வந்த எண்ணம் ஒன்று.

Rosemary கூறுவதுபோல, முற்றுமுழுதாக தமிழ்மக்கள்/புலிகள் பிரச்சாரத்தின் பலவீனமே சர்வதேசத்தின் பார்வை இப்படி கோணலாய் இருக்கின்றது என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்றே நானும் நினைக்கின்றேன்.

....

உதாரணத்துக்கு புலிகளை முன்னிலைப்படுத்தாது (இதற்கு முன்னும் சில மாணவர் போராட்டங்கள் நடந்திருந்தன) கொலைகள் நிறுத்தப்படவும், சமாதானச் செயற்பாடுகள் விரைவில் ஆக்கபூர்வமாய் ஆரம்பிக்கவேண்டும் என்று... அண்மையில் இங்கே நடந்த உரிமைக்குரல் நிகழ்வில் கிட்டத்தட்ட 10 000 மக்கள் கலந்துகொண்டிருந்தாலும், அதைப் பற்றி சிறுசெய்திகளாய்த்தானும் இங்குள்ள வெகுசன ஊடகங்கள் மூச்சுவிடவில்லை (விதிவிலக்காய் தென்னாசிய ரீவி நிகழ்ச்சி ஒன்றின் செய்தியொன்றில் மட்டும் இந்நிகழ்வு பற்றிய செய்தி வந்திருந்தது). மாணவர்கள், இப்படி ஒரு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின

Link to comment
Share on other sites

வணக்கம் சசி,

மாலனின் பின்னூட்டம் மிகவும் நகைப்புக் கிடமாகவும் கவலை அழிப்பதாகவும் இருக்கிறது.

இவர் ஜன நாயகம் என்று எதைக் கூறுகிறார் என்று விளங்கவில்லை.

சிறிலங்காவின் அரசை ஒரு ஜன நாயக அரசாக இவர் சொல்வது தான் மிகவும் கிழ்த் தரமான காழ்ப்புணர்வின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன்.எட்டப் பட்ட உடன் படிக்கைகளை உதாசீனம் செய்து தமிழ் மக்களின் ஜன நாயகப்போராட்டங்களை இராணுவப்படு கொலைகளால் நசுக்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசை இவர் நாக் கூசாமல் எவ்வாறு ஜன நாயக அரசு என்று கூறுகிறார் என்று விளங்கவில்லை.இவர்கள் உண்மயிலயே புரியாமல் எழுதுகிறார்களா அல்லது புரிந்து கொண்டே இவ்வாறு எழுதுகிறார்களா என்று விளங்கவில்லை.

மாலன் நீங்கள் விளங்காமல் எழுதுகிறீர்கள் என்று நினைத்து ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையே புலிகள் பிரதிபலிகிறார்கள்.அவர்கள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை இராணுவ வலிமை கொண்டு எட்டுவதற்காக அமைக்கப் பட்ட விடுதலை அமைப்பு. நாலு வருட பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழர்கள் பெற்றது கொலையும் ,இடம் பெயர்வும் தான்.போரைத்தொடங்கும் படி இன்று புலிகளை நிர்ப்பந்திப்பது தமிழ் மக்களே.

இன்று ஈழத்தில் பல்லாயிரம் மக்கள் தாங்களாக முன் வந்து ஆயுதப் பயிற்ச்சிகளைப் பெறுகின்றனர்.இங்கே புலத்தில் மக்கள் அலை அலயாக நிகழ்வுகளை நடத்துகின்றனர்.உண்ணாவிரதங்க

Link to comment
Share on other sites

27 மறுமொழிகள்:

வழக்கம் போல விரிவான பதிவு. தொடருங்கள் ROSAVASANTH, at 2:07 PM /அதே நேரத்தில் "வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

"தாரகி" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் "சிலவற்றையேனும்" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது./

இந்த நிலைதான் எனக்கும் அடிக்கடி வருவது. நல்லதொரு பதிவு. நன்றி சசி. டிசே தமிழன், at 2:17 PM I agree with you about the current situation and the problems that LTTE has to confront. however i beg to differ on why LTTE lost in the propaganda war when GOSL won. It is partially part of LTTE's lack of efficient representatives and propagandists in the west, and the rest is due to the mere "closed eye" politics of the west (read EU, Canada and USA).

I, you as well any other observer of srilankan politics know Kausalyan's assasination preceded Kadigamar's assasination, and Pararajasingam's assasination preceeded the assisasination attempt on Army top brass Fonseka. Yet, NO governernment on the west nor india gave the equivalent improtance to loss of both sides. there is a sort of supporting 'legitimate GOSL" from the west. If you look the history, even a single state NEVER supported a rebel organization unless the particular state gains something out of the rebellion for itself. The words, "democracy", "terrorism" and the pharses in the simliar line get spawned according to 'what is the best for us.' Hence, none can completely blame LTTE for the loss of propaganda war.

Yet, LTTE has a venue that it has not fully explored till this moment. identifying the interests of these countries or at least some of the powerful people in these countries and align themselves with their interests. This helps for LTTE. At least Thirumavalavan showed it as a good move, though his party lost in number of seats seats.

LTTE also wants to have a good propaganist firm to promote them in the west. AT least keep the western born spokepersons or prominent figures who can provide the children of the soil face in the west, like Vannessa Redgrave for Chechniyans, and Richard gere for Tibetians.

canadian situation is a little complecated, as the current conservative premier buffon is more eager to mimic his god fearing gay hating conservative US counterfart for his consistuency rather than alligning with GOSL. In EU's recent actions what many did not notice in the hullabulla of banning LTTE is that tightening GOSL with withholding of funds that was already promissed.

In one way, when i look LTTE's survival in the past, I do not think LTTE will loose much finantially, as it may have alternative finantial resources or mode to flow and follow money into its strips. Rose Mary, at 2:27 PM Rosemary,

உங்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

தமிழ் ஈழப் பிரச்சனையை உலக நாடுகளிடம் கொண்டு செல்லக் கூடிய ஒரு நபரை, உலக நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ளக் கூடிய திறமையுடைய ஒருவரை இது வரை புலிகள் உருவாக்கி கொள்ளவில்லை என்பதும் புலிகளின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம்.

புலிகளின் ஆலோசகராக அறியப்படும் ஆண்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் போன்றோர் இந்தப் பிரச்சனையை எந்தளவுக்கு பிற நாடுகளிடம் Diplomaticஆக அணுக முடிந்திருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, தற்பொழுது இருக்கின்ற பெரிய இடைவெளி நமக்கு புரிகிறது.

சமாதானக் காலங்களில் தேவைப்படும் இத்தகைய திறமையுள்ள ஒருவரை எப்படி கண்டறியப் போகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சிலரை பயன்படுத்திக் கொள்ள முடியுமா ? என்ற கேள்விகள் எழுகின்றன.

சமாதானப் பேச்சுகளில் பங்கேற்கும் குழுவை கவனிக்கும் பொழுது கூட பலர் புலிகள் இயக்கத்தில் இருக்கும் முக்கிய தளபதிகள் தான். இதில் எந்த தவறும் இல்லை என்றாலும் இவர்களால் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை, பிற நாடுகளுடன் உறவினை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

சமாதானக் குழு என்பது சில நாட்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் குழு மட்டுமே அல்ல. தொடர்ச்சியாக பிற நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பராமரிக்க தக்க அளவிலான Logistics அந்தக் குழுவிற்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் போனது ஒரு பெரிய இடைவெளியை புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சசி, at 3:47 PM Rosemary யின் பின்னூட்டத்தை வாசிக்கும்போது வந்த எண்ணம் ஒன்று.

Rosemary கூறுவதுபோல, முற்றுமுழுதாக தமிழ்மக்கள்/புலிகள் பிரச்சாரத்தின் பலவீனமே சர்வதேசத்தின் பார்வை இப்படி கோணலாய் இருக்கின்றது என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்றே நானும் நினைக்கின்றேன்.

....

உதாரணத்துக்கு புலிகளை முன்னிலைப்படுத்தாது (இதற்கு முன்னும் சில மாணவர் போராட்டங்கள் நடந்திருந்தன) கொலைகள் நிறுத்தப்படவும், சமாதானச் செயற்பாடுகள் விரைவில் ஆக்கபூர்வமாய் ஆரம்பிக்கவேண்டும் என்று... அண்மையில் இங்கே நடந்த உரிமைக்குரல் நிகழ்வில் கிட்டத்தட்ட 10 000 மக்கள் கலந்துகொண்டிருந்தாலும், அதைப் பற்றி சிறுசெய்திகளாய்த்தானும் இங்குள்ள வெகுசன ஊடகங்கள் மூச்சுவிடவில்லை (விதிவிலக்காய் தென்னாசிய ரீவி நிகழ்ச்சி ஒன்றின் செய்தியொன்றில் மட்டும் இந்நிகழ்வு பற்றிய செய்தி வந்திருந்தது). மாணவர்கள், இப்படி ஒரு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின

Link to comment
Share on other sites

வினித் ஏற்கனவே இப்படி ஒரு தலைப்பு இட்டு கருத்து வைக்கப்பட்டுள்ளது. :roll:

Link to comment
Share on other sites

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 2

கடந்த மாதம் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமணன் மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் புலிகளின் முன்னரங்க நிலைகளை (Forward Defence Line) பார்வையிட்டுக் கொண்டிருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கும், அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கும் இடையே சில நூறு மீட்டர் இடைவெளி மட்டுமே இருக்கும் அந்தப் பகுதியில் சிறீலங்கா அரசின் பலமான இராணுவ முகாமும், முன்னரங்க நிலைகளும் உள்ளன.

புலிகளின் பகுதிக்கும், இராணுவ நிலைகளுக்கும் இடையே இருக்கும் யாருக்கும் உரிமை இல்லாத பகுதியில் மறைந்திருந்து நடத்தப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதலில் கர்னல் ரமணன் சுட்டுக்கொல்லப்பட்டார். புலிகளின் பகுதி மிகவும் பலமாக பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதும், இராணுவத்தின் உதவி இல்லாமல் இராணுவ முன்னரங்க நிலையில் இருந்து யாரும் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த முடியாது என்பதும் தெளிவான நிலைமை. இந்த தாக்குதலை சிறீலங்கா இராணுவத்தின் deep penetration unit தான் செய்திருப்பார்கள் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

நிலைமை இவ்வாறு இருக்க, இந்த தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என கருணாப் பிரிவு கூறிக் கொண்டது. இராணுவம் சமாதானக் கால ஒப்பந்தத்தை மீறி இவ்வாறு செய்ததை விடுதலைப் புலிகளின் இரு குழுக்களிடையேயான சண்டையாக மாற்ற அரசு தொடர்ந்து செய்து வரும் தந்திரங்களின் ஒரு உதாரணம் தான் இந்தத் தாக்குதல்.

சமாதானக் காலக்கட்டத்தில் கருணா என்றப் பிரிவை உருவாக்கி இராணுவம் செய்து வரும் இத்தகைய தந்திரங்களை முறியடிக்க, உலகின் கவனத்தை இந்தப் பிரச்சனையின் பக்கம் திருப்ப புலிகள் அதே வகையான உத்தியினை கடைபிடிக்க தொடங்கினர். இராணுவத்திரை மக்கள் குழுக்கள் என்ற அமைப்பினர் மூலம் தாக்க தொடங்கினர். இராணுவம் மீதான இந்த தாக்குதலை நிகழ்த்த அவர்கள் உருவாக்கிய குழுக்கள் தான் மக்கள் குழுக்கள் என்றாலும் இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புலிகள் தெரிவித்தனர்.

ராஜபக்ஷ பதவியேற்றப் பிறகு குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி அவருக்கு இந்த மக்கள் குழுக்கள் மூலம் புலிகள் கடும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இதன் மூலம் சில முக்கிய விடயங்களை சாதிக்க புலிகள் எண்ணினர்.

ராஜபக்ஷ தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த அவகாசமும் வழங்காமல், இந்தப் பிரச்சனையை சர்வதேச அளவில் அதிக கவனத்தைப் பெற வைப்பது. அதன் மூலம் ராஜபக்ஷ மற்றும் சிங்கள இனவாதக் குழக்களின் பிரச்சனைகளையும், தெற்கில் இருக்கின்ற முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவது.

மக்கள் குழுக்கள் என்ற பெயரில் தொடுக்கப்படும் தாக்குதல் தங்களால் நடத்தப்படவில்லை என்று கூறிக்கொண்டு, இராணுவம் கருணா பெயரில் நடத்துவதற்கு பதில் தாக்குதல் தொடுப்பது.

மக்கள் குழுக்கள் நடத்திய தாக்குதலை நாங்கள் நடத்த வில்லை என்று புலிகள் கூறிக்கொண்டதை யாரும் நம்ப வில்லை. இந்த தாக்குதலுக்கு புலிகள் தான் ஆயுதங்கள் வழங்குகின்றனர் என்பதும், புலிகளின் சிலப் பிரிவு இதனை தொடுத்திருக்கலாம் என்பதாகவுமே அனைவருக்கும் தோன்றியது. உலக நாடுகளும் இந்த தாக்குதலுக்கு புலிகளையே கண்டனம் செய்தன. என்றாலும் இதன் மூலம் புலிகள் மீது நடந்து வரும் தாக்குதல் கருணாவால் நடத்தப்படவில்லை, இராணுவம் தான் செய்து கொண்டிருக்கிறது என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. SLMM கூட இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் கருணாப் பிரிவு என்ற பெயரில் இராணுவம் செய்து கொண்டிருக்கும் தாக்குதல் தான் என்று குற்றம்சாட்டி இருந்தது.

புலிகளின் உள்பிரச்சனை எனக் கூறிக்கொண்டிருந்தமைக்கு மாறாக இதன் பிண்ணனியில் இருப்பது இராணுவம் தான் என்பதை உலகறிய வைத்ததில் புலிகளுக்கு நிச்சயம் வெற்றி தான். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் என சமாதானத்தில் அணுசரணையாளராக இருக்கும் அனைத்து நாடுகளுமே துணைப்படைகள் என்று கூறிக் கொண்டிருக்கும் பல ஆயுதக்குழக்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கின்றன. ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கூட புலிகளின் நிலைக்கு கணிசமான வெற்றி கிடைத்தது. இந்தப் பேச்சுவார்த்தையே சமாதானக் கால உடன்படிக்கைகளை பலப்படுத்துவது குறித்து தான் நடைபெற்றது. ஜெனிவா மாநாட்டின் முக்கிய தீர்மானமான "துணை ஆயுதக் குழுக்களை" அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானமே, புலிகளின் கோரிக்கையை ஒட்டியே இருந்ததை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

இது அனைத்துமே புலிகளின் ராஜதந்திர செயல்பாடுகள் சரியான தடத்திலேயே சென்று கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது. அது மட்டுமில்லாமல் ராஜபக்ஷ போன்ற அனுபவம் இல்லாத ஒரு அரசியல்வாதி, ஜனாதிபதியாகிய பொழுது இத்தகைய சிக்கலான விடயத்தை பதவிக்கு வந்த உடனேயே எதிர்கொள்ள வேண்டி நேர்ந்த சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகவே புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். இந்தப் பிரச்சனைகளை சமாளிக்க ராஜபக்ஷ தடுமாறியதை தெளிவாக காண முடிந்தது.

ரனில் ஜனாதிபதியாகி இருந்தால் சமாதானத்திற்கு வாய்ப்பிருந்திருக்கும் என்பதான ஒரு கருத்து நிலவி வருகிறது. ரனில் பிரதமராக இருந்த பொழுது நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை, Co-chairs ஏற்படுத்தப்பட்டது குறித்து என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் புலிகளுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்ட ரனில் முயற்சி மேற்கொண்டிருந்தார். இதன் மூலம் புலிகளுக்கு ஒரு நெருக்கடியான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவரது திட்டம். அது மட்டுமில்லாமல் ரனில் வெற்றி பெற்றிருந்தால் சிறீலங்காவின் பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளில் ஒரு continuity இருந்திருக்கும். இது புலிகளுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். மாறாக ராஜபக்ஷ வெற்றி பெற்றப் பிறகு சிறீலங்கா அரசு மீண்டும் புதியதாக வெளியுறவு கொள்கைகளை புதுப்பிக்க வேண்டிய நிலைக்குச் சென்றிருந்தது. இதனால் சிறீலங்கா அரசுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு தேக்கம் நிலவியதை கவனிக்க வேண்டும்.

இவை தவிர சிறீலங்கா அரசு ராஜபக்ஷ தலைமையில் இருந்தாலும் சரி, ரனில் தலைமையில் இருந்தாலும் சரி சில விடயங்களில் (சிங்கள/புத்த இனவாத நிலைமையில்) பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சி செய்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சி செய்தாலும் சரி பொருளாதார, வெளியுறவு கொள்கைகளில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டதில்லை. இத்தகைய விடயங்களில் ஒரு தொடர்ச்சி இருக்கத் தான் செய்கிறது. அவ்வாறே பாக்கிஸ்தானில் முஷ்ரப் ஆட்சி செய்தாலும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்தாலும் சரி காஷ்மீர் போன்ற விடயங்களில் அங்கு நிலைப்பெற்றிருக்கும் ஒரு பொதுவான நிலையில் இருந்து பெரிய மாற்றத்தை காண முடியாது.

இந் நிலையில் ராஜபக்ஷவிற்கு பதிலாக ரனில் வந்திருந்தால் எப்படி ஒரு அரசாங்கத்தின் கொள்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பது எனக்குப் புரியவில்லை. இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு அதிக அதிகாரம் இருந்தாலும் தென்னிலங்கையில் இருக்கும் அரசியல் நிலைமைக்கு எதிராக ரனில் எதுவும் செய்திருக்க முடியாது. அதுவும் தவிர தென்னிலங்கையில் குறைவான ஆதரவை கொண்டிருக்கும் ரனில் எவ்வாறு தென்னிலங்கையில் இருக்கும் அரசியல் சக்திகளை புறக்கணித்து சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும் ? ரனில் வந்திருந்தால் இன்று வெளிக்கொணரப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதியின் "தென்னிலங்கை அரசியல் இனவாதம்" மறைக்கப்பட்டு ஒரு மிதவாத நிலை வெளிப்படுத்தப்பட்டிருக்கும

Link to comment
Share on other sites

3 மறுமொழிகள்:

சசி,

//புலிகளின் முக்கியமான தோல்வியாக நான் கருதுவது, அவர்கள் கூற நினைப்பதை ராஜதந்திர ரீதியில் கூறாமல் தொடர்ந்து இராணுவ வழியிலேயே கூற முற்பட்டது. இலங்கை அரசும் புலிகளின் தாக்குதலை தொடர்ந்து ஊக்குவித்து கொண்டே இருந்தது. //

இத் தாக்குதல்களுக்குப் பின்னால் பெரிய இராஜதந்திர தந்திரோபாய காரணங்கள் இருக்கின்றன. இத்

தொலை நோக்குப் பார்வையில் நாடாத்தப்பட்டவை. இத் தாக்குதல்களை நடாத்தி இருக்காவிடின்

இன்று "சர்வதேசம் " என தங்களை அழைத்துக் கொள்ளும் ஏகாதிபத்தியவாதிகளின் கை இலங்கையில் ஓங்கி இருக்கும். ஆனால் இன்றைக்குப் பார்த்தீர்களா நிலமையை? இணைத்தலமை நாடுகள் எனக் கூறிக்கொள்ளும் நாடுகள் , கைக்கெட்டாவிட்டால், ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்பது போல , தாங்கள் சமாதான முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்துள்ளன. நான் இவற்றையெல்லாம் நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.

//அது போல தற்பொழுது சர்வதேச மயமாகி விட்ட ஈழப் போராட்டத்தில் அரசியல் ரீதியிலான படுகொலைகள் பின்னடைவுகளை ஏற்படுத்துமே தவிர எந்த அனுகூலத்தையும் கொடுத்து விடாது.//

நான் இப்படி நினைக்கவில்லை. வெற்றி, at 12:14 AM வெற்றி,

இந்த தாக்குதல்களுக்கு பின் இருக்க கூடிய ராஜதந்திர நிலைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். அதனை என் பதிவிலும் குறிப்பிட்டு இருக்கிறேன். ஆனால் தாக்குதல்களையும், நாடுகளுடனான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்ற ராஜதந்திர நிலைகளையும் கொண்ட அணுகுமுறையை அமைத்து கொண்டிருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து. அவ்வாறு இல்லாமல் போனது தான் தற்போதைய பின்னடைவுக்கு காரணம்.

சர்வதேச சமூகத்தின் எண்ணத்திற்கு ஏற்ப நடக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்ச்செல்வன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்ததாக ஞாபகம். இத்தகைய அணுகுமுறையில் சில சாதகங்கள் இருந்தாலும் சர்வதேச நாடுகளை முற்றாக புறக்கணிக்கவும் முடியாது. தமிழ் சசி, at 12:41 AM This is one fork of the views that anyone who thinks Mr. Rajapakse is for peace must read

“Taming the Tigers” and “Targeting Tamils in Sri Lanka”

http://tamilweek.com/news-features/archives/409

After all, this is not from a LTTE sympathiser's blog. ஜூலியன், at 1:15 AM

Add a comment

Links to this post

Link to comment
Share on other sites

வணக்கம் சசி,

உங்கள் அடுத்த பதிவு ,இன்றைய பேச்சுவார்த்தைகளின் முடிவில் எழுதுவீர்கள் என்று நினைத்தேன்.

அவசரப் பட்டு விட்டீர்கள்.அதெற்கென்ன மேலும் பதிவுகள் தொடரும் தானே.

நான் முன்னர் சொன்னது போல் ராஜதந்திர நகர்வுகள் வலுச் சம நிலைகளில் இருந்தே மேற்கொள்ளப்படலாம்.ஒரு நிலைக்கப்பால் இன்றய கணத்தில் இருக்கும் வலுச் சம நிலையால் மேலும் நகர்வுகளை மேற்கொள்ள முடியாத , முடிவுறும் தறுவாயில், இன்னொரு வலுச் சமனிலைக்கானா போர் மூழ்கிறது. நாம் இன்றிருக்கும் காலகட்டம் அவ்வாறான காலகட்டமே.

பல சம்பவங்கள் இனி தொடராக இடம் பெறலாம்.

மேலும் நீங்கள் புலிகளின் ,அன்றில் தமிழ் ஈழ மக்களின் நிறுவனங்கள் புலத்தில் இல்லாமை பற்றிக் குறிப்பிட்டீர்கள்.இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இங்கு நிதர்சனமான நிலமை, தடையால் வெளிப்படையாக இயங்க முடியாமை ஒன்று.மற்றது போராட்டத்தின் மேல் அவாவும் ,நேர்மையும்,தியாக சிந்தை உடயவர்களையும் ,தகுதி ஆனவர்களையும் நியமிப்பது என்பது முயற்கொம்பான காரியம்.இவர்களுக்கான அங்கீகாரம் என்பது அந்த, அந்த நாடுகளின் வெளி உறவுக்கொள்கையினாலயே ஈற்றில் தீர்மானிக்கப்படுகிறது.இது ஒருவகையில் கோழியா ,முட்டையா முதலில் என்பதைப் போலான விடயம்.

இவை எல்லாவற்றையும் விட இனி விரியும் கள நிலமைகளே அடுத்த ராஜதந்திர நகர்வுகளுக்கானா அடித் தளத்தை இடப் போகின்றன.

இனித் தான் சதுரங்க ஆட்டத்தின் முன் நகர்வுகள் (opening moves) ஆரம்பம் ஆகப் போகிறது.அதற்குள்ளாகவே முடிவை எழுதிய மாலன் போன்றோர் , தமது பதிவுகளை மீள்பரீசீலனை செய்ய வேண்டிய நிலமை ஏற்படும்.

June 08, 2006 3:00 PM

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.