Jump to content

வேப்பம் பூ வடகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேப்பம் பூ வடகம் இதுவரை செய்து பார்க்கவில்லை, இப்பதான் கஷ்டப்பட்டு ஒரு கன்று வளர்த்துவிட்டேன். பூ பூக்க தொடங்கிவிட்டது, செய்முறை தேடி பார்த்தபோது கிடைத்த து, உங்களுக்கு பாவற்றகாய், ..இப்படி ஏதாவதில் செய்யும் முறை இருந்தால் தரவும்

யாழ்ப்பாண மக்களின் உணவு வகைகளில் வேம்புக்கு முக்கியமான இடம் உண்டு. பொதுவாக இலையுதிர் காலத்தில் வேம்பின் இலைகள் முற்றாக உதிர்ந்துவிடும்.

இலை தளிர் காலத்தில் சிறிய சிறிய புதிய வேப்பம் இலைகளோடு கொஞ்சம்.. கொஞ்சமாக வேம்பம் பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது வேப்ப மரங்களைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

வேப்பங் காற்று உடலுக்கும் மனதுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மருத்துவ ரீதியாக சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது என தற்கால விஞ்ஞானிகளால் கூட நிரூபிக்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேம்பு மருத்துவ குணம் கொண்ட ஒரு மரமாகும். அதன் எல்லாப் பாகங்களும் பயன் தர வல்லன.இனி வேப்பம் பூ வடகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கொத்தாகப் பூத்திருக்கும் வேப்பம் பூக்களை பறித்து, பனை ஓலைப் பாயில் நல்ல வெய்யிலில் காய வைத்து, நன்றாக உதிர்த்து எடுக்க வேண்டும்.நல்ல பொல.. பொல…என்று பூ வரும் போது வடகம் போடலாம். தண்ணீர்ப் பதமாக இருந்தால் வடகம் சக்குக் கட்டிவிடும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

அடுத்து உழுந்து ஒரு கொத்து எடுத்து நன்றாக ஊறவைத்து, தோல் நீக்கி, கழுவி, வடைப் பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

நன்றாக காய்ந்த வேம்பம் பூவை எடுத்துக் கழுவி, வெள்ளைத் துணியால் தண்ணீர் வடித்து வைக்கவும். உழுந்துக்கு சரிக்குச் சரி வேப்பம் பூ எடுக்கவும்.

அரைத்த உழுந்துடன் தேவையான அளவு உப்பு, கழுவி வடித்து வைத்த வேம்பம் பூ, பெருஞ்சீரகம், சிறிதாக வெட்டிய வெங்காயம் – பச்சை மிளகாய் – கருவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

பின்னர் கைகளால் சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வடைக்குத் தட்டுவது போல தட்டி ( பூவரசம் இலையிலும் வைத்துத் தட்டலாம்) பனை ஓலைப்பாய் அல்லது சுளகில் நிரைக்கு அடுக்கி வைத்து, நல்ல வெய்யிலில் காய வைக்க வேண்டும். நன்றாக திருப்பித் திருப்பிக் காய வைத்தால் வடகம் பழுதடையாது.

04102011kaipakkuvam2.jpg?w=630

குறிப்பு – வெய்யில் காலங்களில் செய்து மண் பானையில் சேமித்து வைத்த வடகங்களை வருடம் முழுவதும் பயன்படுத்துவார்கள். குறிப்பாக மாரி காலங்களில் வடகம், உப்பு மிளகாய், ஊறுகாய் போன்றவற்றின் பயன்பாடு மிகவும் அத்தியாவசியமானதாகும்

http://newpungudutivu.wordpress.com/2011/10/04/வேப்பம்-பூ-வடகம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகம், என்னும் போது... வாயூறுது.

இங்கு... வடகம் என்றால்.. என்ன?

என்று... கேட்டால்...

வட், ஆர்.. யூ ஆஸ்கிங்?

என்று... கேட்கும், காலமிது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், எங்கை தான் இதுகளைத் தேடித் பிடிக்கிறீங்களோ?

அடுத்தது,' பினாட்டு' செய்முறையோ? :D

நானும் ஒரு வேம்பு வளத்தன்! வருசத்துக்கு மூண்டு இல்லை மட்டும்!

அடுத்த வருசத்துக்கு, முதல் மூண்டு இலையையும் கொட்டிப் போட்டு, இன்னொரு மூண்டு இலை!

தகவலுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், எங்கை தான் இதுகளைத் தேடித் பிடிக்கிறீங்களோ?

அடுத்தது,' பினாட்டு' செய்முறையோ? :D

நானும் ஒரு வேம்பு வளத்தன்! வருசத்துக்கு மூண்டு இல்லை மட்டும்!

அடுத்த வருசத்துக்கு, முதல் மூண்டு இலையையும் கொட்டிப் போட்டு, இன்னொரு மூண்டு இலை!

தகவலுக்கு நன்றிகள்!

நன்றி தமிழ்சிறி & புங்கையூரன்.

பனம் பழம் பினைத்து & பினாட்டு ஊரில் சாப்பிட்டனாங்கள் தேங்காய் சொட்டுடன், நாவுறுது, நீங்க ஞாபகப்படுத்த.

புங்கையூரன், குளிர் காலத்தில் பொலித்தீன் சீற்றால் மூடி கட்டிவிடுங்கள், நன்றாக வளரும்.

Link to comment
Share on other sites

நானும் ஒரு வேம்பு வளத்தன்! வருசத்துக்கு மூண்டு இல்லை மட்டும்!

அடுத்த வருசத்துக்கு, முதல் மூண்டு இலையையும் கொட்டிப் போட்டு, இன்னொரு மூண்டு இலை!

வெளிநாட்டில வேம்பு வளர்த்து வடகம் செய்யிறது.. ஊரில பனை வளர்த்து கள்ளுக்குடிக்கிற மாதிரி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், எங்கை தான் இதுகளைத் தேடித் பிடிக்கிறீங்களோ?

அடுத்தது,' பினாட்டு' செய்முறையோ? :D

நானும் ஒரு வேம்பு வளத்தன்! வருசத்துக்கு மூண்டு இல்லை மட்டும்!

அடுத்த வருசத்துக்கு, முதல் மூண்டு இலையையும் கொட்டிப் போட்டு, இன்னொரு மூண்டு இலை!

தகவலுக்கு நன்றிகள்!

தலைமுடியா! :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

என்ன அவுஸ்திரேலியாவில் வேம்பா?! வடகம் வேற..

எங்க வீட்டில் இன்னமும் வேம்புக்கு காலம் வரவில்லை.

ஒவ்வொரு பனியோடும் போய்விடுகிறது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ன அவுஸ்திரேலியாவில் வேம்பா?! வடகம் வேற..

எங்க வீட்டில் இன்னமும் வேம்புக்கு காலம் வரவில்லை.

ஒவ்வொரு பனியோடும் போய்விடுகிறது :(

 

தூயாவை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.

 

தூயா, Karratha, WA இல் வேலைக்கு போன இடத்தில் வேப்பமரம், புளியமரம், தேக்கமரம், அருளிமரம், தென்னைமரம்...எல்லாம் நிற்பதைக் கண்டேன்.

 

ஒருநாள் போய் வேப்பமரத்துக்கு கீழிருந்து விழுந்த விதைகளை அள்ளி பொறுக்க வெள்ளைகள் என்னை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு போனார்கள், 3 மணித்தியலத்திற்க்கு மேல் ஆறுதலாக மரத்துடன் பழைய நினைவுகளை சாய்ந்திருந்து மீண்டுவிட்டு, போகிற வழியில் புளியம்பழங்கள் கேட்பாரற்று தொங்கிகொண்டிருக்க அதையும் இன்னுமொரு சொப்பிங் பையில் பிடுங்கிகொண்டு வீடு கொண்டு வந்தேன், அந்த கொட்டைகளில் முளைக்க போட்டு ஒன்று நன்றாக வளர்ந்துவிட்டது இப்ப.

 

Brisbane இலும் இவையிருக்கு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடகம் மிகவும் சுவையானது மட்டுமல்ல தேக ஆரோக்கியத்திற்கு உகந்ததும்.அண்மையில் ஒருவர் தான் வேப்பம் பு+வை இலங்கையில் இருந்து பொதியில் வரவைத்து இங்கு வடகமாக்குவதாக சொன்னார்.எனக்கு மிகவும் பிடித்தமானது வடகம்.

 இணைப்பிற்கு நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • 5 years later...

இலங்கை ஸ்டைலில் வேப்பம் பூ வடகம் செய்வது எப்படி?

இயற்கையின் வரப்பிரசாதமாக கருதப்படும் மரங்களின் ஒன்று தான் வேப்பமரம்.

இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை.

அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவகுணம் அதிகமாகவே உள்ளது.

வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூ அருமருந்தாகும்.

இதனை வடகம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் உகந்தது.

தற்போது இலங்கை ஸ்டைலில் வேப்பம் பூ வடகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

 

 

 

http://news.lankasri.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2012 at 12:04 PM, உடையார் said:

3 மணித்தியலத்திற்க்கு மேல் ஆறுதலாக மரத்துடன் பழைய நினைவுகளை சாய்ந்திருந்து மீண்டுவிட்டு,

ம்ம்ம் ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.