Jump to content

பால் தாக்கரே காலமானார்


akootha

Recommended Posts

கடந்த முறை பிரதீபா பாட்டில் ஜனாதிபதியாக முக்கியாமா உதவியது தாக்கரே தான் அதனால் தான் அந்த நன்றிமரவாமல் ஓடி ஓடி வந்து தாக்கரை பார்த்து விட்டு சென்றார் சோ ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட முக்கிய பதவிகளை தீர்மானிக்க கூடிய ஷக்தி

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

44 mla க்களும் பதினைந்து பாராளுமன்ற ஊப்பினர்களை இரு அவைகளிலும் கொண்டுள்ளது

3 அல்லது நான்கு மாகாண சபை உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்யலாம் என்றால் shivaeenaavum செய்யலாம்

Link to comment
Share on other sites

பார் தாக்கரே எங்களுக்கு ஏதும் செய்யவில்லை. ஆனால் தன் இனத்துக்கு நன்றே செய்தார். அதைப் பாராட்டும் பக்குவம் இருக்கின்றது...

அவரால் மகராஸ்டிரம் எந்த மாற்றமும் அடையவில்லை. மும்பாய் பிருத்தானியர் காலத்திலேயே சென்னை, கல்காதாவை விட மேலே போவிட்டது. இன்றும் மொத்த வளர்ச்சியில் மகாராஸ்ரா தான் அதிக புள்ளி விபரங்களை காட்டுகிறது. தக்கர் செய்தது இன்வேறியை வைத்து அரசியலில் மேலே வர முயன்றது. அது நடக்கவில்லை. இனவாதம் மாகாராஸ்டிராவில் மட்டுமல்ல இருக்கிறது. மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள். ஆனால் தக்கர் தான் இலங்கை மாதிரி இதை வைத்து அரசியல் செய்ய முயன்றவர். அவர் மகாராஸ்டிராவுக்கு இனவாதம் மட்டும்தான் ஊட்டினார். இந்திய குடும்ப அரசியலுக்கு தக்கரோ, சிவசேனையோ தவறவும் இல்லை.

சூடுகண்ட பூனை அடுபங்கரையை நாடாது. இலங்கையில் வகுப்புவாததால் நொந்து போன நாங்கள் வகுப்பு வாத ஆயுதத்தை எடுத்து தோற்று போன தக்கை பாராட்ட எதுவும் இல்லை. பாராடினால் சுட்டால் நெருப்பு என்று தெரிந்து கொள்ளும் பூனை அளவுக்கு தன்னும் நாம் இல்லை.

Link to comment
Share on other sites

44 mla க்களும் பதினைந்து பாராளுமன்ற ஊப்பினர்களை இரு அவைகளிலும் கொண்டுள்ளது

3 அல்லது நான்கு மாகாண சபை உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்யலாம் என்றால் shivaeenaavum செய்யலாம்

யாரும் இரண்டில் ஒன்றும் அரசியலுக்கு உகந்த கட்சிகள் என்று சொல்லவில்லை. ஒன்றின் தலைமைகள் அடிவருடிகள், மற்றயது வெறிக்கட்சி.

முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் செய்கிறது என்று யாரும் சொல்லலாம். ஆனால் உண்மையில் அதனால் இலங்கையில் என்ன செய்ய முடிகிறது என்பது வேறு ஆராச்சி. உதாரணம் எப்போதும் ஒப்பிடப்படுவதைவிட மேலாக இருப்பது வழக்கம்.

எனவே அஸ்சிரப்பின் மு.கா கழுதை தேய்ந்து காக்கீமின் மு.கா வானது போல்த்தான் சிவசேனயும் என்றால் அது இப்போதைக்கு எமக்கு திருப்த்தியான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய கருத்தைப் பார்த்தால், மகாராஸ்ரர் கன்னடர்களை அடிப்பதால் தான் அவர்கள் தமிழரை அடிப்பது போன்றும், ம்றறும்படி கன்னடனர்கள் ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் போன்றல்லவா இருக்கின்றது. என்றைக்கு முட்டள்தனமாக மொழீவாரியாகத் தமிழகம் பிரிக்கப்பட்டதோ, அன்றிருந்து பிரச்சனை. அதைத் தெளிவான சிந்தனையோ பிரிக்க அந்தப் பகுத்தறிவாளர்களுக்குப் பகுத்தறிவு இல்லை.

உங்களுடைய அனைத்துக் கருத்துக்களும் பால் தாக்கரே மீது வஞ்சத்திலும், இயலாமை, ஆற்றாமை கொண்டே எழுதுவதாகத் தேன்றுவதால் அதில் பதிலளிக்க ஏதுவுமே இல்லை. அதனால் தான் பேடி, தக்கர் என்று வஞ்சகமான கருத்துக்களைப் பரப்புகின்றீர்கள்..

மும்பாய் வளர்ச்சியைக் கூட அதனால் தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வெள்ளையர் போய் 60 வருடங்களாகியும், அவர்கள் கழித்த சிறுநீர் தான் இப்போதும் ஈரமாக இருக்கின்றது என்பதற்கு என்ன விளக்கத்தைத் தரமுடியும்??

குஜராத்தின் வளர்ச்சியையும் அப்படித் தான் பலர் சொல்வார்கள். அதுவும் வெள்ளையன் கொடுத்தது என்று.. ஏனென்றால் அங்கே நரேந்திர மோடி ஆள்கின்றார் என்ற ஆற்றாமை.

சிவசேனா முன்பை விட இப்போது தான் பலமாக இருக்கின்றது என நம்புகின்றேன். பார்தாக்ரே மீது சில தடைகள் விழுந்ததை விட இப்போது அது தெளிவாகத் தான் இருக்கின்றது. தோற்றுப் போன வரலாறு எம் தேசத்துக்கும் இருப்பதால் மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் தோற்றுப் போனால் கூடச் சந்தோசப்படும் மனநிலை இல்வை!!

Link to comment
Share on other sites

பால் தக்கரே மராட்டிய மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் கேட்டு போராடியிருந்தால் அவரை ஒரு இனப்பற்று மிக்கவராக கொள்ள முடியும்.

ஆனால் அப்படியான தகவல்கள் எதுவும் அவர் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

அவர் சிங்கள பேரினவாதம் போன்ற ஒன்றைத்தான் மராட்டிய மண்ணில் செய்தார். அங்கே இருந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புக்களை வளர்த்து, அதில் குளிர் காய்ந்தார்.மராட்டிய மண்ணில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு காரணம் ஆனார்.

இவர் ஒரு பயங்கரவாதி. தண்டிக்கப்பட வேண்டியவர். அதிகாரத்தில் உள்ள நிறையப் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படாமலேயே இயற்கை எய்துவது போன்று இவரும் போய் சேர்ந்து விட்டார்.

என்னுடைய வருத்தங்களை பதிவு செய்கிறேன்.

Link to comment
Share on other sites

"பதிலளிக்க ஏதுவுமே இல்லை." என்றால் இப்படியாவது எழுதி முயற்சி பண்ணத்தான் வேண்டுமென்றும் இருக்கா?

வெள்ளையர் போய் 60 வருடங்களாகியும், அவர்கள் கழித்த சிறுநீர் தான் இப்போதும் ஈரமாக இருக்கின்றது என்பதற்கு என்ன விளக்கத்தைத் தரமுடியும்??

கருத்து விளங்காவிட்டல் கேட்டிருக்கலாம். வெள்ளையர் ஆளும் போதே அவர்கள் முன்னேறிவிடார்கள். அதாவது தக்கரின் சிறுநீரில் தான் மகாராஸ்டிரா தளிர்த்தென்பதில்லை என்பது விளங்க வேண்டும். தக்கர் 1996 இல் சிறுநீர் விடப்போகாமலும் மகராஸ்டிரா வளர்ந்தது. இன்றும் வளர்கிறதென்பதுதான் நான் எழுதிருப்பது. எதோ மூத்திரக்கதையை எழுத்திவிட்டு பெரிதாக கீழித்துவிட்டத்தாக நினைப்பது உங்களுக்கும் நீங்கள் வக்காலத்து வாங்கும் வன்முறையாளர் தக்கரும் அவமானமாக படவில்லையா. இந்த அவமானகரமான காரியங்களை செய்துவிட்டு தக்கருடன் இணையும் இனதை அறிந்துகொள்ள பெரிய சங்கடமொன்றும் இல்லை. வெறியர்கள் வெறியருடந்தான் இணையமுடியும்.

நல்ல ஒரு சொல்லு கருத்துக்களத்தில் எழுத பண்பு வரவேண்டும். அதன் பின் போதிக்கலாம்.தக்கரின் வகை போதனைகளை. அது வரை"அதைப் பாராட்டும் பக்குவம் இருக்கின்றது.." என்ற பெருந்தன்மை உங்களுடன் மட்டும் வைத்துகொள்ளுங்கள்.

உங்களுடைய கருத்தைப் பார்த்தால், மகாராஸ்ரர் கன்னடர்களை அடிப்பதால் தான் அவர்கள் தமிழரை அடிப்பது போன்றும், ம்றறும்படி கன்னடனர்கள் ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் போன்றல்லவா இருக்கின்றது.
நான் நீங்கள் அனுமானிக்கும் இதை எங்கு எழுத்தியிருக்கிறேன் என்று தந்தால் நல்லது.

இதேபோல தக்கர் என்ற வெறியனின் கொலைகாரத் தத்துவங்களை தப்பாக விளங்கிக் கொண்டுவிட்டால் அதற்கு கவலை மட்டும்தான் தெரிவிக்க முடியும். மேலே எழுத எனக்கும் ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் சொல்கின்றோம். திராவிடத் தலைவர் கருணாநிதி மண்டையைப் போட முன்பே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று.. மக்களின் சொத்துக்களை சுரண்டி தன் குடும்பத்திற்கு ஒதுக்கிய திராவிட ஊழல் பேர்வழி கருணாநிதி போன்ற அயோக்கியர்களை இந்தச் சமயத்திலேயே தண்டிக்க வேண்டும். அவனையாவது தப்பிக்க விடக்கூடாது

Link to comment
Share on other sites

அதனால் தான் சொல்கின்றோம். திராவிடத் தலைவர் கருணாநிதி மண்டையைப் போட முன்பே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று.. மக்களின் சொத்துக்களை சுரண்டி தன் குடும்பத்திற்கு ஒதுக்கிய திராவிட ஊழல் பேர்வழி கருணாநிதி போன்ற அயோக்கியர்களை இந்தச் சமயத்திலேயே தண்டிக்க வேண்டும். அவனையாவது தப்பிக்க விடக்கூடாது

முயற்சி எடுங்கள் யார் கூடாது என்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் தாக்கரோயைப் பேடி என்று எழுதுவதன் ஊடாக ஏதோ பெரிதாகக் கிழித்து விட்டதாக பூரிப்படையும் உங்களுக்கு ஏற்படும் அவமானத்தை விட சிறுநீரைப் பற்றி எழுதிச் செல்லும் அது பெரிய அவமானமாகத் தெரியவில்லை.

கன்னடர்களைப் பற்றி உங்கள் கருத்து இது தான். " மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள்."

நான் இனவாதியாகவோ, மொழிவாதியாகவோ இருக்கின்றேன் என்பதில் எனக்கு எவ்வித கூச்சமும் இல்லை. அந்த, இனம் மொழியில் கொண்டிருக்கின்ற என் அக்கறை தான் எம் சமூகம் பற்றிச் சிந்திக்க வைக்கும் விடயம் என்பதில் எனக்கு பூரண திருப்தி உண்டு. . அதில் தாக்கரேயும் விதி விலக்கல்ல.

Link to comment
Share on other sites

பால் தாக்கரோயைப் பேடி என்று எழுதுவதன் ஊடாக ஏதோ பெரிதாகக் கிழித்து விட்டதாக பூரிப்படையும் உங்களுக்கு ஏற்படும் அவமானத்தை விட சிறுநீரைப் பற்றி எழுதிச் செல்லும் அது பெரிய அவமானமாகத் தெரியவில்லை.

கன்னடர்களைப் பற்றி உங்கள் கருத்து இது தான். " மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள்."

நான் இனவாதியாகவோ, மொழிவாதியாகவோ இருக்கின்றேன் என்பதில் எனக்கு எவ்வித கூச்சமும் இல்லை. அந்த, இனம் மொழியில் கொண்டிருக்கின்ற என் அக்கறை தான் எம் சமூகம் பற்றிச் சிந்திக்க வைக்கும் விடயம் என்பதில் எனக்கு பூரண திருப்தி உண்டு. . அதில் தாக்கரேயும் விதி விலக்கல்ல.

ஜனநாயகத்தில் ஊடகங்கள் பிரதான பங்கை வகிக்கின்றன. இதன் மூலம்தான் மக்களுக்கு முடிவு எடுக வேண்டிய தரவு கிடைக்கிறது. தான் தனது விவாதத்தை சோடித்து எந்த கோட்டிலும் வாழக்கை நடத்த முடியாது குறுக்கு விசாரணைக்கும் முகம் கொடுத்த்த்தானாக வேண்டும். ஊடகவியலார் ஜனநாயக அரசுகளால் பிரத்தியேக தொழிலளார்கள அங்கீகரிக்கப்படிருக்கிறார்கள். உண்மையை மக்கள் தெரிந்து கொள்வது அவர்களின் மூலம்தான். தக்கர் தான் தன் பத்திரிகையில் எழுதும் விளம்பரக்கட்டுரைகளில் இருந்து அல்ல. ஊடகங்களுக்கு முகம் கொடுக்கதாரில்லாமல் ஒழித்திருந்து தன் பத்திரிகையில் தக்கர் விளம்பரம் எழுதுவது பேடித்தனம்.

"tit for tat ஆக எழுத்திவிட்டேன் ஆனல் நான் எழுத்துவதில் கருத்திருக்கவில்லை பார்தீர்காளா?" என்பது போல நினைத்து எழுதிக் கிழிப்பது ஜனநாயக ஊடகங்களை கண்டு மிரண்டு ஓடும் பேடியை வீரனாக்காது. இதையேதான் இலங்கை ஊடகங்களை நசுக்கி மகிந்தாவின் அரசு இலங்கையிலும் செய்வது.

எத்தனை முறை தொடந்து நியாயப்படுத்தியும் வெள்ளையர் சிறுநீர்கழிப்பது பற்றி எழுத்திக்கிழிக்க முயல்வது வெறுமனே பால் தக்கரின் பாணியில் வெறிதனத்தை காட்டமட்டும்தான் உதவும். அதுதான் நாம் பேடி தக்கர் வெறியன் மட்டும்தான் என்று ஏற்கனவே எழுதினோம்.

" மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள்." என்பதனோடு தொடர்ந்துவரும் மற்றய வசனகளையும் படித்தீர்களானல், இது மாகாணகங்களுக்கிடையான இனவன்முறைகளின் சுழற்சிமுறையை குறிக்கிறதென்பதைதான் சொல்கிறதென்பது விளங்க்கும். தெளிவாக, குறிக்கபட்ட மாநிலங்கள் சுழற்சி முறையில் வரும் மானிலங்களுக்கு உதாரணம்தான் என்பது தொடரும் வசனங்களால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வாசிக்கவும்.

இலங்கையின் அதி கூடிய இனத்துவேச கட்சி JVP யும், SLFP க்கு அதரவு கொடுத்து கொண்டு தான் அரசில் பங்கெடாதிருந்தது. இந்த அதி தீவிரவாதகட்சிகள் தாம் மேலே வரும் வரையும், ஒரு திவிரவாத கட்சியை மரமாக நினைத்து ஏற முயல்வதுண்டு. ஆனால் தீவிரவாதகட்சிகள் தாம் பதவியைப் பிடித்தவுடன் அதி தீவிரவாதகட்சிகளை கைவிட்டுவிடுவதுண்டு. இதுதான் இந்த இரண்டுகட்சிகளுக்கும் நடந்தது. பொருளாதாரம் முன்னேற முன்னேற சிவசேனையை மக்கள் மெல்ல மெல்ல கைவிடுவார்கள்.

உங்களின் பெருமைகளையும் மதவேறி தக்கரின் பெருமைகளையும் கண்டு நாம் ஏன் அசந்து போகவேண்டும்? நீங்கள் எதையும் நினைக்கலாம் ஆனால் சிவசேனயின் சரித்திரம் மலை அடிவாரத்தை நோக்கி உருளத்தொடங்கிவிட்டது.

Link to comment
Share on other sites

ஆமா ஆமா மலையில இருந்து எங்கட மல்லை அண்ணா தள்ளி விட்டு இருக்கார் அது இப்ப அடிவரத்திக்கு வருது தோடா.... ஆசை தோசை .......

மலை ஏன்டா ஒண்டில ஏறினா தொடர்ந்தும் அங்க நிக்க முடியுமா? கீழ இறங்கி தான் ஆகணும் இந்த சிம்பிள் தியரி கூட தெரியல்ல ஐயோ பாவம்..........,

அப்பிடி இறங்கினாலும் மூச்சு வாங்கிட்டு நிக்க சிவ சேனா ஒன்றும் முதியோர் கட்சி அல்ல

இளமை இளமை முற்றிலும் இளமை இளைஞர்கள் நிறைந்த கட்சி சோ don't வொர்ரி.

மற்றது அரசிய கட்சி தொடங்கினா ஆட்சிக்கு வந்து தான் அரசியல் நடத்தனும் என்ற அவசியம் இல்லை தான் சார்ந்திருக்கும் மக்களுக்கு குரல் கொடுத்தாலே போதும் உதாரணம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் சோ சின்ன பிள்ளையளுக்கு நிலா காட்டி சோறு ஊட்டுற கதை எல்லாம் நம்ம கிட்ட வேணாம்

அது சரி நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லெல்லா ஒவொரு திரியிலும் ஹகீமையும் பௌதினையும் திட்டோ திட்டு எண்டு திட்டிட்டு இருக்கிங்க அது ஏன்?

Link to comment
Share on other sites

நாந்தான் பத்து திரியிலை ஒரு பெயரிலை வந்து திட்டுகிறன். நீங்கள் பத்து திரியிலை 20 பெயரிலை வந்து புகழ் பாடுகிறீர்கள் அது ஏன்?

யாழுக்கு விளம்பர வருமானம் இது வரையில் வரவில்லை. யாழ் இனி சந்தாபணம் அறவிடதொடங்கினால், உங்களை மாதிரி பல பெயர்களில் வந்து பத்து திரியில் எழுதுபவர்களிடம் இருந்து நல்ல வருமானம் வரும். யாழ் சந்தா பணதை ஆரம்பிக்க நீங்க நல்ல முதல்.

அப்போ திண்ணையும் தடைப்பாடமல் நடக்கும்.

Link to comment
Share on other sites

அவர் சிங்கள பேரினவாதம் போன்ற ஒன்றைத்தான் மராட்டிய மண்ணில் செய்தார். அங்கே இருந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புக்களை வளர்த்து, அதில் குளிர் காய்ந்தார்.மராட்டிய மண்ணில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு காரணம் ஆனார்.

இவர் ஒரு பயங்கரவாதி. தண்டிக்கப்பட வேண்டியவர். அதிகாரத்தில் உள்ள நிறையப் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படாமலேயே இயற்கை எய்துவது போன்று இவரும் போய் சேர்ந்து விட்டார்.

சிலரின் சாவு, அவர்கள் எனக்கு தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பாதிப்பை ஏற்படுத்துவது. சிலரின் மரணம் சந்தோசம், சிலரின் கவலை. அண்மையில் நான் கவலைப்பட்ட மரணம் Steve Jobs இனது, சந்தோசப்பட்டது பின்லாடனினது. இப்போது சந்தோசப்படுவது இந்த பால் தக்கரேயினது சாவு. சிவ சேனை போன்ற தீவிரவாத கடும்போக்கு அமைப்புக்கள் விரைவில் ஒழிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சரி என்னுடைய பெயர்கள் யாவன என்று பட்டியல் இடுங்கள் பபாம் நெஞ்சில உரம் இருந்தா நேர்மைத்திறன் இருந்தா பட்டியல் இடுங்கள் இது உங்களுக்கான பகிரங்க சவால் கோழை மாதிரி ஓடாமல் பேர்களை சொல்லிப்போட்டு போகவும்

யாழுக்கு முதலாய் இருப்பதில் என்றும் எனக்கு பெருமையே

Link to comment
Share on other sites

அது நான் பலமுறை உங்களுக்கு சொல்லிவிட்டேன். இனி பயப்பட அதில் ஒன்றும் இல்லை. அது சொல்லி முடியவில்லை. இடம் கிடைக்கும் போது அதை மேலும் சொல்ல ஒருவகை தைரியமும் தேவை இல்லை. என் மேல் சென்ற பதிவை கண்டவுடன் கரை மாறி எழுதுவதுதான் பயந்தோடித்தனம். சொல்ல வந்தை எல்ல பெயரிலும் ஒரே மாதிரி சொல்லப் பயந்தவர்கள், சொல்ல முடியாதவர்கள் எதற்கு 20 பெயர் வைத்திருந்து?.

யாழ் ஒருநாளைக்கு சந்தாபணம் நல்ல வருமானம் தரும் என்றதை கண்டுதான் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

தொடர்ந்தும் நான் பல பெயர்களில் வருவதாக குற்றம் சாட்டும் மல்லை அண்ணாவிற்கு யாழ் கள நிர்வாகம் என்னுடைய பெயர்களை அவர் பகிரங்க படுத்த ஒரு சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டும்

Link to comment
Share on other sites

[size=2]இத்தனை லட்சம் பேர் இந்த தாக்கரே க்கு" ஆதரவா!!!!!?[/size]

[size=2]நான் பால் தாக்கரேக்கு வீர வணக்கம் சொன்னது மிக சரியானதே, தாக்கரே வேற்று மாநிலத்தவரை எதிர்த்தார், வேறு மதப்பிரிவினரை எதிர்த்தா, உண்மைதான் அது கண்டிக்க தக்கதுதான் உங்கள் சனநாயக மரபுப்படி, அப்படியாயின், உங்கள் கரம் சந் மோகன்தாஸ் சாதிய வெறிகொண்டு ,அம்பேத்கரை எப்பாடு படுத்தினார் என்பதை நீங்கள் அறியவில்லையா? அன்னை இந்திரா சீக்கியர்[/size][size=2]

களை கொன்று குவிக்கவில்லையா?, இந்துரா கொலைக்காக , காங்கிரசார் சீக்கியர்களை கொன்று குவிக்கவில்லையா? ராசீவ் தனது சுயநலத்திற்காக அப்பாவி ஈழமக்களை கொன்று குவிக்கவில்லையா? வேற்று மதத்தை எதிர்த்த வாஜ்பாயை நீங்கள் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்க வில்லையா?, பாபர் மசூதியை இடித்த அத்வானி உங்கள் துணை பிரதமர், எதிர்கட்சி தலைவர், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த வேட்ப்பாளர் இவரை எப்படி ஏற்று கொண்டீர்கள்? நரேந்திர மோடி முஸ்லீம்களை கூண்டோடு கொளுத்தவில்லையா?செயலலிதா மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவில்லையா?, அப்பாவி ஈழமக்களை சிங்களவன் கொன்று குவிக்கும் போது போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன செயலலிதாவை முதலமைச்சர் ஆக்கவில்லையா?, ஒரு லச்சத்துக்கு மேற்ப்பட்ட அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரி சோனியா இந்தியாவை ஆளவில்லையா?, பதவி, பண ஆசைக்காக தன் இனத்தையே காட்டி கொடுத்த துரோகி கருணாநிதியை மக்கள் இன்னும் நம்பவில்லையா?,

தேசிய ஒற்றுமைன்னு சொல்வாங்களே. அதுக்குள்ளும் வரல. இன ஒற்றுமைன்னு சொல்வாங்க. அதற்குள்ளும் இல்ல. மதப்பற்றுன்னு சொல்றதுக்குள்ளாகவும் இல்ல. மனம்போன போக்கில் சுற்றியலைந்த ஒரு பக்கா ரவுடியை மாதிரிதான் இவர்களும் நடந்தது கொண்டார்கள். அனால் இவர்களை விட கொஞ்சூண்டு ரவுடியாகத்தான் இவர் இருந்தார், அப்படியாயின் அந்த ரவுடிகளுக்கேல்லாம் தேசபிதா, தேசியக்கொடி என போற்றப்படும் போது இந்த ரவுடிக்கும் போற்றி பாராட்டினால் என்ன?, இன்று தமிழ்நாடு திராவிடத்தை ஏற்று கொண்டாதால் என் இனம் மாற்றானுக்கு விக்கப்பட்டு நான் அடிமையாக நிக்குறேன், தமிழ்நாட்டை ஆண்டவன் எல்லாம், பார்ப்பனன், மலையாளி, தெலுங்கன், கன்னடன் தான் , உண்மையான இனப்பற்றுள்ள தமிழன் ஆண்டிருந்தால் நான் என் தாய்நாட்டுக்காக போராடிக்கொண்டு இருக்கமாட்டேன், இந்திய சுதந்திரத்துக்கு பின்னரான பத்தாண்டுகளில் அதாவது 1960 களில் தன் இனத்தை முன்னுறுத்தி போராட தொடங்கிய மராட்டிய மாநிலம் தானே இன்றளவும் இந்தியாவின் வியாபார மாநிலம்!, அப்படியான மாநிலத்தில் தானே உலக பணக்காரர்கள் எல்லாம் இருக்குறார்கள்!, இந்திய சினீமா துறையில் ஆதிக்கம் செலுத்தும் இசுலாமியர்கள் இப்பவரை இங்குதானே இருக்குறார்கள்?, இவர்கள் எல்லாம் கொலைசெயயப்படவோ ? , இல்லை துரத்தப்படவோ இல்லையே இன்னும்! அப்படியாயின் இந்த ரவுடி நல்லவரா கெட்டவரா? , பிரித்தானியா உலகம் முழுதும் செய்ததைத்தான் கிட்லரும் செய்தான், பிரித்தானியாவின் தலைக்கு ஆப்பு வரும் போதுதான் கிட்லர் உலகிற்கு பயன்கரவாதியானான், ஆனால் அந்த மாவீரன் இறுதிவரை தான் கொண்ட கொள்கையில் விளகாதிருந்த்து வீர மரணம் அடைந்தான். நான் நினைப்பது போல என் தேசம், என் தாய்நாடு, என் இன மக்கள், நாமே நம்மை ஆளவேணும் என்று நினைப்பது போல அந்த ரவுடி தாக்கரே நினைத்ததில் எந்த தவறும் இல்லை. என் விடுதலை போராட்ட அமைப்பையும், என் இனவிடுதலையும் ஏற்றுகொண்ட ஒரே ஒரு காரணத்துக்காகவது என்றாலும் நான் இந்த ரவுடிக்கு வீரவணக்கம் சொல்ல கடமைப்பட்டிருக்குறேன். அவர் ரவுடியாக இருந்ததினால் தானோ என்னமோ இதனைலச்சம் பேர் இவரி ஆதரவாளர்களாக இருக்குறார்கள். ஒரு மாநிலத்தின் எந்த அரசியல் அதிகாரமும், எந்த அரசியல் வாதியின் ஆதரவும் இலாத ஒரு ரவுடிக்கு இந்திய அரசும், உலக பணக்காரர்களும் உலக புகழ் விளையாட்டு வீரர்களும்,சினீமா நட்ச்சத்திரங்கள் , இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் , ஏன் அரச மரியாதையும் வழங்குவது, பயத்தின் காரனாமாகவா? இல்லை வேறு எதற்க்காக?.

என் தமிழின விடுதலயா ஆதரிப்பது பேயாக இருப்பினும் நான் அதனுடன் கூட்டு வைக்க தயார்.

[/size]

Link to comment
Share on other sites

பால் தாக்கரே முதன்முதலில் எனக்கு அறிமுகமானது கையில் நுரை ததும்பும் பீர் கோப்பையுடன் குளிர் கண்ணாடி அணிந்த ஒரு புகைப்படத்தில். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில், மேடையில் அனாயசமாக பைப்பில் புகைபிடிப்பார். இந்தியாவின் நவீனக் கலாசார நுழைவாயிலான மும்பையில் இருப்பவர்களை பால் தாக்கரேவின் இந்தத் தோற்றம் ஈர்த்தது இயல்பானது.

Thackeray%20samas.jpg

தாக்கரேவின் ஆரம்ப கால நண்பர்கள் இளவயதில் இருந்தே அவர் நவீன அடையாளத்துடன் இருந்ததாகச் சொல்கிறார்கள்.ஆனால், மெட்ரோபாலிடன் கலாசாரத்துக்கு முன்மாதிரியாகச் சொல்லப்படும் மும்பை,வேற்று மாநிலத்தவர்களை ஓட ஓடத் துரத்தும் கலாசாரத்துக்கும் முன்மாதிரியானது தாக்கரேவால்தான்.

"இது சுதந்திர நாடு; நான் சுதந்திரமானவன்; யாருக்கு நான் பயப்பட வேண்டும்?"என்று கேட்பவர் தாக்கரே.பேச்சு - பாவனையில் மட்டும் அல்ல; அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் சுதந்திரத்தின் உச்சத்தை அவர் அனுபவித்தார்.அதேசமயம், அவருடைய சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான மக்களின் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது.

தென்னிந்தியாவில் இருந்து செல்லும் ரயில்களைச் "சுருக்கெழுத்தாளர்களின் ரயில்கள்" என்று அழைத்ததில் தொடங்கி, கடைசிக் காலத்தில் "ஒரு பீகாரி நூறு நோய்களுக்குச் சமம்" என்பது வரை அவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளும் உயிர்களை விலையாகக் கேட்டன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, "கரசேவையில் பங்கேற்றதற்காக கர்வம் கொள்கிறேன்" என்றார். மும்பையில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களின்போது அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன.எதையும் பெற மறுத்த போலீஸார் ஊடகங்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, வெறும் ஏழு புகார்களை மட்டும் பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தார்கள்.

பின்னாளில் பா.ஜ.க.- சிவசேனா ஆட்சிக்கு வந்தபோது அவையும் காணாமல் அடிக்கப்பட்டன.மும்பை கலவரங்களில் சிவசேனையின் கொலைக்கரங்களை ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அம்பலப்படுத்தியது. ஆனால், தாக்கரேவுக்கு எதிராக அரசால் கண்ணை அசைக்கக்கூட முடியவில்லை.

பல முறை அவருடைய சர்ச்சைக்குரிய எழுத்துகள்,பேச்சுகள் சார்ந்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனைகூட விதித்தது.ஆனால், மேல் முறையீடுகள்,அரசியல் தலையீடுகள் காரணமாக அனைத்திலிருந்தும் அவர் தப்பினார்.

பால் தாக்கரே மாதிரி வேறு யாராவது நடந்துகொண்டிருந்தால்,அவர் தன் வாழ்வின் பெரும் பகுதியைச் சிறையில் செலவிட வேண்டி இருந்திருக்கும்.ஆனால், சட்டத்தால் அவரை நெருங்கவே முடியவில்லை.1950-களில் அவருடைய அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்த ‘ஒன்றுபட்ட மகாராஷ்டிரம் இயக்கம்’ உச்சத்துக்குப் போனபோது, 105 பேர் உயிரிழந்தனர்.

அரசாங்கம் தாக்கரேவைக் கைது செய்து புனே எரவாடா சிறையில் அடைத்தபோது,மும்பை வீதிகள் தீப்பற்றி எரிந்தன.ஒருகட்டத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தாக்கரே கோரிக்கை விடும்படி அரசாங்கம் சிறையில் இருந்த தாக்கரேவிடம் கெஞ்சியது.அரசாங்கத்திடம் அன்றைக்கு ஏற்படுத்திய பயத்தை,தான் சாகும் வரை அப்படியே இருக்குமாறு பார்த்துக்கொண்டார் தாக்கரே.

அடிப்படையில் பால் தாக்கரே ஒரு தீவிரமான தேசியவாதி.ஆரம்ப நாட்களில் அவர் எந்த அளவுக்கு தேசியவாதியாக இருந்தாரோ,பின்னாளில் அதே அளவுக்கு இனவாதியாகவும் மாறினார்.ஒரு தேசியவாதியை இனவெறியை நோக்கித் தள்ளியது எது? இந்தக் கேள்விக்கான பதில்தான் பால் தாக்கரேவிடம் இருந்து இந்திய ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை.

பால் தாக்கரேவுக்கு ஹிட்லரை ரொம்பப் பிடிக்கும்."ஹிட்லரின் எல்லா நடவடிக்கைகளையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அவர் ஓர் அற்புதமான ஆளுமை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயுமே ஒரு ஹிட்லர் இருக்கிறார்.எனக்கும் ஹிட்லருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்" என்று சொல்வார் தாக்கரே.

உண்மைதான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஹிட்லர் மட்டும் இல்லை.இங்கே தாக்கரேவும்கூட இருக்கிறார்.தெலங்கானா,ஹரித்பிரதேசம்,பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், மிதிலாஞ்சல், போடோலாந்து, கூர்காலாந்து, கட்ச், விதர்பா என்று இன்றைக்கு இந்தியாவில் தனி மாநிலக் கோரிக்கைகளோடு நிற்கும் ஒவ்வொருவரின் அரசியலிலும் தாக்கரேவின் அரசியல் இருக்கிறது.

தமிழ்நாடு வரை ஊடுருவிவிட்ட மண்ணின் மைந்தன் அரசியலில் தாக்கரே இருக்கிறார்.அவர் வெற்றி பெற்று காட்டிய இனவாத அரசியல் சம கால இந்திய அரசியல் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உருவெடுத்து நிற்கிறது.மறுக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளில் இருந்தும் உணர்வுகளில் இருந்தும் தாக்கரேக்கள் உத்வேகம் பெறுகிறார்கள்.

பழக்கதோஷத்தின் காரணமாக, ‘இவருடைய மரணம் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது’ என்று பால் தாக்கரேவுக்கும் பலர் இரங்கல் உரை எழுதலாம். ஆனால், ஒரு பால் தாக்கரே ஓராயிரம் பால் தாக்கரேக்களை உருவாக்கிவிட்டுப் போய் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இந்தியாவின் பிரச்னையும் அதுதான்!

http://news.vikatan.com/?nid=11285#cmt241

Link to comment
Share on other sites

மல்லை அண்ணா உங்கள் பெயர் பட்டியலுக்காக still waiting

[size=4]ஒவொரு திரியிலும் ஹகீமையும் பௌதினையும் திட்டோ திட்டு எண்டு திட்டிட்டு இருக்கிங்க அது ஏன்?[/size]

இதுக்கு என்னிடம் மன்னிப்பு கேடகவேண்டும்.

இந்த கதைகளை வர வர எல்லாம் வரும். களதிலை என்னுடைய திட்டுகிற உரிமை மட்டுப்படுத்த நினைக்கிறவர்களுக்கு கிடைக்கிற இடமெல்லாம கொடுக்கப்படும். 20 பேரிலை திறந்து நாங்கள் எழுத்துகிறவைகளை சேட்டை காட்ட முடியாது.

யாழை சந்த பணத்தை நோக்கி தொடந்து இனி தள்ளத்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

தென்னிந்தியாவில் இருந்து செல்லும் ரயில்களைச் "சுருக்கெழுத்தாளர்களின் ரயில்கள்" என்று அழைத்ததில் தொடங்கி,

என்னோடு 2 வருடங்களுக்கு முன்னர் ஒரு மகாராஸ்டிர குஜராத்தியர் தொழில் செய்தார். அவர் இதை தமிழர்களுக்காகத்தான் அப்படி அழைப்பது என்று சொன்னார்(அதாவது சென்னையிலிருந்து வரும் ரயில்களைத்தான் தாம் அப்படி அழைப்பது என்று சொன்னர்). MMTCI இல் வேலை செய்வது எல்லாம் தமிழர்களும், மலையாளிகளும் என்றும் அதை மகாராஸ்டிராவில் தாம், மலையாளி, மதராசி ரேடிங்க் காப்பிரேசன் என்றும் அழைப்போம் என்று நகைசுவையாக சொன்னார்.

Link to comment
Share on other sites

அதற்க்காக தாக்ரே பீகாருக்கு போய் தாக்குதல் செய்யவில்லை. குயராத் போய் தாக்குதல் செய்யவில்லை. தங்கள் மாநிலத்தை சுரண்டுபவர்களையே தாக்கினார். தேசிய தலைவருக்கும் கிட்லரை ரொம்ப பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். கிட்லரும் இஸ்ரேல் சென்று யூதரை அழிக்கவில்லை. ஐரோப்பாவின் அனைத்து இனங்களும் அனைத்து நாடுகளும் பிரித்தானியா,போர்த்துக்கல்,ஹோலந்த்,பிரான்ஸ்,இத்தாலி,இஸ்பானியா போன்ற முக்கிய நாடுகள் உலகம் பூராவும் ஆபிரிக்கா,ஆசியா, வட,தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி அங்குள்ள பூர்வீகக் குடிகளை அழித்து அவர்கள் ஆட்சிய ஆட்சி செய்தவர்களை அழித்து மதமாற்றம் இனமாற்றம் மொழிமாற்றம் செய்தது பெரும் கொள்ளைகளை அடித்தவர்கள். ஆனால் யேர்மனியர் மட்டுமே இந்த கீள்த்த்ரமான வேலைய செய்யவில்லை. கிட்லர் கூட தன் நாட்டை சுரண்டியவர்களையும் தன் நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தியவர்களையுமே அழித்து ஆதிக்கம் செலுத்தினார். கிட்லர் இல்லை என்றால் இப்போதைய ஜேர்மன் பக்கத்து நாட்டவரால் விழுங்கப் பட்டிருக்கும் மொழி அழிந்திருக்கும். அது போல பால்தாக்கரே இல்லை எண்டால் கிந்திய குயராத்திய பீகாரியரால் அந்த மாநிலம் அழிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இனத்தவனும் தங்கள் தங்கள் மொழி வாரி மாநிலத்தில் இருக்க வேண்டியதுதானே. தமிழ் நாட்டில தெலுங்கன் மலையாளி ஆதிக்கம் ஏன்? வந்தேருகளுக்கு என்ன வேலை அங்கு?

Link to comment
Share on other sites

சிவ சேனாவ மலையில இருந்து தள்ளியாச்சு இப்ப யாழ சந்தாவ நோக்கி தள்ள போறிங்க போங்க மல்லை அண்ணா கிச்சு கிச்சு மூட்டாதிங்க. ......

By the way பெயர்பட்டியல் plz

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.