Jump to content

பால் தாக்கரே காலமானார்


akootha

Recommended Posts

கடந்த முறை பிரதீபா பாட்டில் ஜனாதிபதியாக முக்கியாமா உதவியது தாக்கரே தான் அதனால் தான் அந்த நன்றிமரவாமல் ஓடி ஓடி வந்து தாக்கரை பார்த்து விட்டு சென்றார் சோ ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட முக்கிய பதவிகளை தீர்மானிக்க கூடிய ஷக்தி

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

44 mla க்களும் பதினைந்து பாராளுமன்ற ஊப்பினர்களை இரு அவைகளிலும் கொண்டுள்ளது

3 அல்லது நான்கு மாகாண சபை உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்யலாம் என்றால் shivaeenaavum செய்யலாம்

Link to comment
Share on other sites

பார் தாக்கரே எங்களுக்கு ஏதும் செய்யவில்லை. ஆனால் தன் இனத்துக்கு நன்றே செய்தார். அதைப் பாராட்டும் பக்குவம் இருக்கின்றது...

அவரால் மகராஸ்டிரம் எந்த மாற்றமும் அடையவில்லை. மும்பாய் பிருத்தானியர் காலத்திலேயே சென்னை, கல்காதாவை விட மேலே போவிட்டது. இன்றும் மொத்த வளர்ச்சியில் மகாராஸ்ரா தான் அதிக புள்ளி விபரங்களை காட்டுகிறது. தக்கர் செய்தது இன்வேறியை வைத்து அரசியலில் மேலே வர முயன்றது. அது நடக்கவில்லை. இனவாதம் மாகாராஸ்டிராவில் மட்டுமல்ல இருக்கிறது. மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள். ஆனால் தக்கர் தான் இலங்கை மாதிரி இதை வைத்து அரசியல் செய்ய முயன்றவர். அவர் மகாராஸ்டிராவுக்கு இனவாதம் மட்டும்தான் ஊட்டினார். இந்திய குடும்ப அரசியலுக்கு தக்கரோ, சிவசேனையோ தவறவும் இல்லை.

சூடுகண்ட பூனை அடுபங்கரையை நாடாது. இலங்கையில் வகுப்புவாததால் நொந்து போன நாங்கள் வகுப்பு வாத ஆயுதத்தை எடுத்து தோற்று போன தக்கை பாராட்ட எதுவும் இல்லை. பாராடினால் சுட்டால் நெருப்பு என்று தெரிந்து கொள்ளும் பூனை அளவுக்கு தன்னும் நாம் இல்லை.

Link to comment
Share on other sites

44 mla க்களும் பதினைந்து பாராளுமன்ற ஊப்பினர்களை இரு அவைகளிலும் கொண்டுள்ளது

3 அல்லது நான்கு மாகாண சபை உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்யலாம் என்றால் shivaeenaavum செய்யலாம்

யாரும் இரண்டில் ஒன்றும் அரசியலுக்கு உகந்த கட்சிகள் என்று சொல்லவில்லை. ஒன்றின் தலைமைகள் அடிவருடிகள், மற்றயது வெறிக்கட்சி.

முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் செய்கிறது என்று யாரும் சொல்லலாம். ஆனால் உண்மையில் அதனால் இலங்கையில் என்ன செய்ய முடிகிறது என்பது வேறு ஆராச்சி. உதாரணம் எப்போதும் ஒப்பிடப்படுவதைவிட மேலாக இருப்பது வழக்கம்.

எனவே அஸ்சிரப்பின் மு.கா கழுதை தேய்ந்து காக்கீமின் மு.கா வானது போல்த்தான் சிவசேனயும் என்றால் அது இப்போதைக்கு எமக்கு திருப்த்தியான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய கருத்தைப் பார்த்தால், மகாராஸ்ரர் கன்னடர்களை அடிப்பதால் தான் அவர்கள் தமிழரை அடிப்பது போன்றும், ம்றறும்படி கன்னடனர்கள் ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் போன்றல்லவா இருக்கின்றது. என்றைக்கு முட்டள்தனமாக மொழீவாரியாகத் தமிழகம் பிரிக்கப்பட்டதோ, அன்றிருந்து பிரச்சனை. அதைத் தெளிவான சிந்தனையோ பிரிக்க அந்தப் பகுத்தறிவாளர்களுக்குப் பகுத்தறிவு இல்லை.

உங்களுடைய அனைத்துக் கருத்துக்களும் பால் தாக்கரே மீது வஞ்சத்திலும், இயலாமை, ஆற்றாமை கொண்டே எழுதுவதாகத் தேன்றுவதால் அதில் பதிலளிக்க ஏதுவுமே இல்லை. அதனால் தான் பேடி, தக்கர் என்று வஞ்சகமான கருத்துக்களைப் பரப்புகின்றீர்கள்..

மும்பாய் வளர்ச்சியைக் கூட அதனால் தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வெள்ளையர் போய் 60 வருடங்களாகியும், அவர்கள் கழித்த சிறுநீர் தான் இப்போதும் ஈரமாக இருக்கின்றது என்பதற்கு என்ன விளக்கத்தைத் தரமுடியும்??

குஜராத்தின் வளர்ச்சியையும் அப்படித் தான் பலர் சொல்வார்கள். அதுவும் வெள்ளையன் கொடுத்தது என்று.. ஏனென்றால் அங்கே நரேந்திர மோடி ஆள்கின்றார் என்ற ஆற்றாமை.

சிவசேனா முன்பை விட இப்போது தான் பலமாக இருக்கின்றது என நம்புகின்றேன். பார்தாக்ரே மீது சில தடைகள் விழுந்ததை விட இப்போது அது தெளிவாகத் தான் இருக்கின்றது. தோற்றுப் போன வரலாறு எம் தேசத்துக்கும் இருப்பதால் மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் தோற்றுப் போனால் கூடச் சந்தோசப்படும் மனநிலை இல்வை!!

Link to comment
Share on other sites

பால் தக்கரே மராட்டிய மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் கேட்டு போராடியிருந்தால் அவரை ஒரு இனப்பற்று மிக்கவராக கொள்ள முடியும்.

ஆனால் அப்படியான தகவல்கள் எதுவும் அவர் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

அவர் சிங்கள பேரினவாதம் போன்ற ஒன்றைத்தான் மராட்டிய மண்ணில் செய்தார். அங்கே இருந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புக்களை வளர்த்து, அதில் குளிர் காய்ந்தார்.மராட்டிய மண்ணில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு காரணம் ஆனார்.

இவர் ஒரு பயங்கரவாதி. தண்டிக்கப்பட வேண்டியவர். அதிகாரத்தில் உள்ள நிறையப் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படாமலேயே இயற்கை எய்துவது போன்று இவரும் போய் சேர்ந்து விட்டார்.

என்னுடைய வருத்தங்களை பதிவு செய்கிறேன்.

Link to comment
Share on other sites

"பதிலளிக்க ஏதுவுமே இல்லை." என்றால் இப்படியாவது எழுதி முயற்சி பண்ணத்தான் வேண்டுமென்றும் இருக்கா?

வெள்ளையர் போய் 60 வருடங்களாகியும், அவர்கள் கழித்த சிறுநீர் தான் இப்போதும் ஈரமாக இருக்கின்றது என்பதற்கு என்ன விளக்கத்தைத் தரமுடியும்??

கருத்து விளங்காவிட்டல் கேட்டிருக்கலாம். வெள்ளையர் ஆளும் போதே அவர்கள் முன்னேறிவிடார்கள். அதாவது தக்கரின் சிறுநீரில் தான் மகாராஸ்டிரா தளிர்த்தென்பதில்லை என்பது விளங்க வேண்டும். தக்கர் 1996 இல் சிறுநீர் விடப்போகாமலும் மகராஸ்டிரா வளர்ந்தது. இன்றும் வளர்கிறதென்பதுதான் நான் எழுதிருப்பது. எதோ மூத்திரக்கதையை எழுத்திவிட்டு பெரிதாக கீழித்துவிட்டத்தாக நினைப்பது உங்களுக்கும் நீங்கள் வக்காலத்து வாங்கும் வன்முறையாளர் தக்கரும் அவமானமாக படவில்லையா. இந்த அவமானகரமான காரியங்களை செய்துவிட்டு தக்கருடன் இணையும் இனதை அறிந்துகொள்ள பெரிய சங்கடமொன்றும் இல்லை. வெறியர்கள் வெறியருடந்தான் இணையமுடியும்.

நல்ல ஒரு சொல்லு கருத்துக்களத்தில் எழுத பண்பு வரவேண்டும். அதன் பின் போதிக்கலாம்.தக்கரின் வகை போதனைகளை. அது வரை"அதைப் பாராட்டும் பக்குவம் இருக்கின்றது.." என்ற பெருந்தன்மை உங்களுடன் மட்டும் வைத்துகொள்ளுங்கள்.

உங்களுடைய கருத்தைப் பார்த்தால், மகாராஸ்ரர் கன்னடர்களை அடிப்பதால் தான் அவர்கள் தமிழரை அடிப்பது போன்றும், ம்றறும்படி கன்னடனர்கள் ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் போன்றல்லவா இருக்கின்றது.
நான் நீங்கள் அனுமானிக்கும் இதை எங்கு எழுத்தியிருக்கிறேன் என்று தந்தால் நல்லது.

இதேபோல தக்கர் என்ற வெறியனின் கொலைகாரத் தத்துவங்களை தப்பாக விளங்கிக் கொண்டுவிட்டால் அதற்கு கவலை மட்டும்தான் தெரிவிக்க முடியும். மேலே எழுத எனக்கும் ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் சொல்கின்றோம். திராவிடத் தலைவர் கருணாநிதி மண்டையைப் போட முன்பே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று.. மக்களின் சொத்துக்களை சுரண்டி தன் குடும்பத்திற்கு ஒதுக்கிய திராவிட ஊழல் பேர்வழி கருணாநிதி போன்ற அயோக்கியர்களை இந்தச் சமயத்திலேயே தண்டிக்க வேண்டும். அவனையாவது தப்பிக்க விடக்கூடாது

Link to comment
Share on other sites

அதனால் தான் சொல்கின்றோம். திராவிடத் தலைவர் கருணாநிதி மண்டையைப் போட முன்பே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று.. மக்களின் சொத்துக்களை சுரண்டி தன் குடும்பத்திற்கு ஒதுக்கிய திராவிட ஊழல் பேர்வழி கருணாநிதி போன்ற அயோக்கியர்களை இந்தச் சமயத்திலேயே தண்டிக்க வேண்டும். அவனையாவது தப்பிக்க விடக்கூடாது

முயற்சி எடுங்கள் யார் கூடாது என்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் தாக்கரோயைப் பேடி என்று எழுதுவதன் ஊடாக ஏதோ பெரிதாகக் கிழித்து விட்டதாக பூரிப்படையும் உங்களுக்கு ஏற்படும் அவமானத்தை விட சிறுநீரைப் பற்றி எழுதிச் செல்லும் அது பெரிய அவமானமாகத் தெரியவில்லை.

கன்னடர்களைப் பற்றி உங்கள் கருத்து இது தான். " மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள்."

நான் இனவாதியாகவோ, மொழிவாதியாகவோ இருக்கின்றேன் என்பதில் எனக்கு எவ்வித கூச்சமும் இல்லை. அந்த, இனம் மொழியில் கொண்டிருக்கின்ற என் அக்கறை தான் எம் சமூகம் பற்றிச் சிந்திக்க வைக்கும் விடயம் என்பதில் எனக்கு பூரண திருப்தி உண்டு. . அதில் தாக்கரேயும் விதி விலக்கல்ல.

Link to comment
Share on other sites

பால் தாக்கரோயைப் பேடி என்று எழுதுவதன் ஊடாக ஏதோ பெரிதாகக் கிழித்து விட்டதாக பூரிப்படையும் உங்களுக்கு ஏற்படும் அவமானத்தை விட சிறுநீரைப் பற்றி எழுதிச் செல்லும் அது பெரிய அவமானமாகத் தெரியவில்லை.

கன்னடர்களைப் பற்றி உங்கள் கருத்து இது தான். " மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள்."

நான் இனவாதியாகவோ, மொழிவாதியாகவோ இருக்கின்றேன் என்பதில் எனக்கு எவ்வித கூச்சமும் இல்லை. அந்த, இனம் மொழியில் கொண்டிருக்கின்ற என் அக்கறை தான் எம் சமூகம் பற்றிச் சிந்திக்க வைக்கும் விடயம் என்பதில் எனக்கு பூரண திருப்தி உண்டு. . அதில் தாக்கரேயும் விதி விலக்கல்ல.

ஜனநாயகத்தில் ஊடகங்கள் பிரதான பங்கை வகிக்கின்றன. இதன் மூலம்தான் மக்களுக்கு முடிவு எடுக வேண்டிய தரவு கிடைக்கிறது. தான் தனது விவாதத்தை சோடித்து எந்த கோட்டிலும் வாழக்கை நடத்த முடியாது குறுக்கு விசாரணைக்கும் முகம் கொடுத்த்த்தானாக வேண்டும். ஊடகவியலார் ஜனநாயக அரசுகளால் பிரத்தியேக தொழிலளார்கள அங்கீகரிக்கப்படிருக்கிறார்கள். உண்மையை மக்கள் தெரிந்து கொள்வது அவர்களின் மூலம்தான். தக்கர் தான் தன் பத்திரிகையில் எழுதும் விளம்பரக்கட்டுரைகளில் இருந்து அல்ல. ஊடகங்களுக்கு முகம் கொடுக்கதாரில்லாமல் ஒழித்திருந்து தன் பத்திரிகையில் தக்கர் விளம்பரம் எழுதுவது பேடித்தனம்.

"tit for tat ஆக எழுத்திவிட்டேன் ஆனல் நான் எழுத்துவதில் கருத்திருக்கவில்லை பார்தீர்காளா?" என்பது போல நினைத்து எழுதிக் கிழிப்பது ஜனநாயக ஊடகங்களை கண்டு மிரண்டு ஓடும் பேடியை வீரனாக்காது. இதையேதான் இலங்கை ஊடகங்களை நசுக்கி மகிந்தாவின் அரசு இலங்கையிலும் செய்வது.

எத்தனை முறை தொடந்து நியாயப்படுத்தியும் வெள்ளையர் சிறுநீர்கழிப்பது பற்றி எழுத்திக்கிழிக்க முயல்வது வெறுமனே பால் தக்கரின் பாணியில் வெறிதனத்தை காட்டமட்டும்தான் உதவும். அதுதான் நாம் பேடி தக்கர் வெறியன் மட்டும்தான் என்று ஏற்கனவே எழுதினோம்.

" மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள்." என்பதனோடு தொடர்ந்துவரும் மற்றய வசனகளையும் படித்தீர்களானல், இது மாகாணகங்களுக்கிடையான இனவன்முறைகளின் சுழற்சிமுறையை குறிக்கிறதென்பதைதான் சொல்கிறதென்பது விளங்க்கும். தெளிவாக, குறிக்கபட்ட மாநிலங்கள் சுழற்சி முறையில் வரும் மானிலங்களுக்கு உதாரணம்தான் என்பது தொடரும் வசனங்களால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வாசிக்கவும்.

இலங்கையின் அதி கூடிய இனத்துவேச கட்சி JVP யும், SLFP க்கு அதரவு கொடுத்து கொண்டு தான் அரசில் பங்கெடாதிருந்தது. இந்த அதி தீவிரவாதகட்சிகள் தாம் மேலே வரும் வரையும், ஒரு திவிரவாத கட்சியை மரமாக நினைத்து ஏற முயல்வதுண்டு. ஆனால் தீவிரவாதகட்சிகள் தாம் பதவியைப் பிடித்தவுடன் அதி தீவிரவாதகட்சிகளை கைவிட்டுவிடுவதுண்டு. இதுதான் இந்த இரண்டுகட்சிகளுக்கும் நடந்தது. பொருளாதாரம் முன்னேற முன்னேற சிவசேனையை மக்கள் மெல்ல மெல்ல கைவிடுவார்கள்.

உங்களின் பெருமைகளையும் மதவேறி தக்கரின் பெருமைகளையும் கண்டு நாம் ஏன் அசந்து போகவேண்டும்? நீங்கள் எதையும் நினைக்கலாம் ஆனால் சிவசேனயின் சரித்திரம் மலை அடிவாரத்தை நோக்கி உருளத்தொடங்கிவிட்டது.

Link to comment
Share on other sites

ஆமா ஆமா மலையில இருந்து எங்கட மல்லை அண்ணா தள்ளி விட்டு இருக்கார் அது இப்ப அடிவரத்திக்கு வருது தோடா.... ஆசை தோசை .......

மலை ஏன்டா ஒண்டில ஏறினா தொடர்ந்தும் அங்க நிக்க முடியுமா? கீழ இறங்கி தான் ஆகணும் இந்த சிம்பிள் தியரி கூட தெரியல்ல ஐயோ பாவம்..........,

அப்பிடி இறங்கினாலும் மூச்சு வாங்கிட்டு நிக்க சிவ சேனா ஒன்றும் முதியோர் கட்சி அல்ல

இளமை இளமை முற்றிலும் இளமை இளைஞர்கள் நிறைந்த கட்சி சோ don't வொர்ரி.

மற்றது அரசிய கட்சி தொடங்கினா ஆட்சிக்கு வந்து தான் அரசியல் நடத்தனும் என்ற அவசியம் இல்லை தான் சார்ந்திருக்கும் மக்களுக்கு குரல் கொடுத்தாலே போதும் உதாரணம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் சோ சின்ன பிள்ளையளுக்கு நிலா காட்டி சோறு ஊட்டுற கதை எல்லாம் நம்ம கிட்ட வேணாம்

அது சரி நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லெல்லா ஒவொரு திரியிலும் ஹகீமையும் பௌதினையும் திட்டோ திட்டு எண்டு திட்டிட்டு இருக்கிங்க அது ஏன்?

Link to comment
Share on other sites

நாந்தான் பத்து திரியிலை ஒரு பெயரிலை வந்து திட்டுகிறன். நீங்கள் பத்து திரியிலை 20 பெயரிலை வந்து புகழ் பாடுகிறீர்கள் அது ஏன்?

யாழுக்கு விளம்பர வருமானம் இது வரையில் வரவில்லை. யாழ் இனி சந்தாபணம் அறவிடதொடங்கினால், உங்களை மாதிரி பல பெயர்களில் வந்து பத்து திரியில் எழுதுபவர்களிடம் இருந்து நல்ல வருமானம் வரும். யாழ் சந்தா பணதை ஆரம்பிக்க நீங்க நல்ல முதல்.

அப்போ திண்ணையும் தடைப்பாடமல் நடக்கும்.

Link to comment
Share on other sites

அவர் சிங்கள பேரினவாதம் போன்ற ஒன்றைத்தான் மராட்டிய மண்ணில் செய்தார். அங்கே இருந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புக்களை வளர்த்து, அதில் குளிர் காய்ந்தார்.மராட்டிய மண்ணில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு காரணம் ஆனார்.

இவர் ஒரு பயங்கரவாதி. தண்டிக்கப்பட வேண்டியவர். அதிகாரத்தில் உள்ள நிறையப் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படாமலேயே இயற்கை எய்துவது போன்று இவரும் போய் சேர்ந்து விட்டார்.

சிலரின் சாவு, அவர்கள் எனக்கு தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பாதிப்பை ஏற்படுத்துவது. சிலரின் மரணம் சந்தோசம், சிலரின் கவலை. அண்மையில் நான் கவலைப்பட்ட மரணம் Steve Jobs இனது, சந்தோசப்பட்டது பின்லாடனினது. இப்போது சந்தோசப்படுவது இந்த பால் தக்கரேயினது சாவு. சிவ சேனை போன்ற தீவிரவாத கடும்போக்கு அமைப்புக்கள் விரைவில் ஒழிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சரி என்னுடைய பெயர்கள் யாவன என்று பட்டியல் இடுங்கள் பபாம் நெஞ்சில உரம் இருந்தா நேர்மைத்திறன் இருந்தா பட்டியல் இடுங்கள் இது உங்களுக்கான பகிரங்க சவால் கோழை மாதிரி ஓடாமல் பேர்களை சொல்லிப்போட்டு போகவும்

யாழுக்கு முதலாய் இருப்பதில் என்றும் எனக்கு பெருமையே

Link to comment
Share on other sites

அது நான் பலமுறை உங்களுக்கு சொல்லிவிட்டேன். இனி பயப்பட அதில் ஒன்றும் இல்லை. அது சொல்லி முடியவில்லை. இடம் கிடைக்கும் போது அதை மேலும் சொல்ல ஒருவகை தைரியமும் தேவை இல்லை. என் மேல் சென்ற பதிவை கண்டவுடன் கரை மாறி எழுதுவதுதான் பயந்தோடித்தனம். சொல்ல வந்தை எல்ல பெயரிலும் ஒரே மாதிரி சொல்லப் பயந்தவர்கள், சொல்ல முடியாதவர்கள் எதற்கு 20 பெயர் வைத்திருந்து?.

யாழ் ஒருநாளைக்கு சந்தாபணம் நல்ல வருமானம் தரும் என்றதை கண்டுதான் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

தொடர்ந்தும் நான் பல பெயர்களில் வருவதாக குற்றம் சாட்டும் மல்லை அண்ணாவிற்கு யாழ் கள நிர்வாகம் என்னுடைய பெயர்களை அவர் பகிரங்க படுத்த ஒரு சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டும்

Link to comment
Share on other sites

[size=2]இத்தனை லட்சம் பேர் இந்த தாக்கரே க்கு" ஆதரவா!!!!!?[/size]

[size=2]நான் பால் தாக்கரேக்கு வீர வணக்கம் சொன்னது மிக சரியானதே, தாக்கரே வேற்று மாநிலத்தவரை எதிர்த்தார், வேறு மதப்பிரிவினரை எதிர்த்தா, உண்மைதான் அது கண்டிக்க தக்கதுதான் உங்கள் சனநாயக மரபுப்படி, அப்படியாயின், உங்கள் கரம் சந் மோகன்தாஸ் சாதிய வெறிகொண்டு ,அம்பேத்கரை எப்பாடு படுத்தினார் என்பதை நீங்கள் அறியவில்லையா? அன்னை இந்திரா சீக்கியர்[/size][size=2]

களை கொன்று குவிக்கவில்லையா?, இந்துரா கொலைக்காக , காங்கிரசார் சீக்கியர்களை கொன்று குவிக்கவில்லையா? ராசீவ் தனது சுயநலத்திற்காக அப்பாவி ஈழமக்களை கொன்று குவிக்கவில்லையா? வேற்று மதத்தை எதிர்த்த வாஜ்பாயை நீங்கள் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்க வில்லையா?, பாபர் மசூதியை இடித்த அத்வானி உங்கள் துணை பிரதமர், எதிர்கட்சி தலைவர், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த வேட்ப்பாளர் இவரை எப்படி ஏற்று கொண்டீர்கள்? நரேந்திர மோடி முஸ்லீம்களை கூண்டோடு கொளுத்தவில்லையா?செயலலிதா மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவில்லையா?, அப்பாவி ஈழமக்களை சிங்களவன் கொன்று குவிக்கும் போது போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன செயலலிதாவை முதலமைச்சர் ஆக்கவில்லையா?, ஒரு லச்சத்துக்கு மேற்ப்பட்ட அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரி சோனியா இந்தியாவை ஆளவில்லையா?, பதவி, பண ஆசைக்காக தன் இனத்தையே காட்டி கொடுத்த துரோகி கருணாநிதியை மக்கள் இன்னும் நம்பவில்லையா?,

தேசிய ஒற்றுமைன்னு சொல்வாங்களே. அதுக்குள்ளும் வரல. இன ஒற்றுமைன்னு சொல்வாங்க. அதற்குள்ளும் இல்ல. மதப்பற்றுன்னு சொல்றதுக்குள்ளாகவும் இல்ல. மனம்போன போக்கில் சுற்றியலைந்த ஒரு பக்கா ரவுடியை மாதிரிதான் இவர்களும் நடந்தது கொண்டார்கள். அனால் இவர்களை விட கொஞ்சூண்டு ரவுடியாகத்தான் இவர் இருந்தார், அப்படியாயின் அந்த ரவுடிகளுக்கேல்லாம் தேசபிதா, தேசியக்கொடி என போற்றப்படும் போது இந்த ரவுடிக்கும் போற்றி பாராட்டினால் என்ன?, இன்று தமிழ்நாடு திராவிடத்தை ஏற்று கொண்டாதால் என் இனம் மாற்றானுக்கு விக்கப்பட்டு நான் அடிமையாக நிக்குறேன், தமிழ்நாட்டை ஆண்டவன் எல்லாம், பார்ப்பனன், மலையாளி, தெலுங்கன், கன்னடன் தான் , உண்மையான இனப்பற்றுள்ள தமிழன் ஆண்டிருந்தால் நான் என் தாய்நாட்டுக்காக போராடிக்கொண்டு இருக்கமாட்டேன், இந்திய சுதந்திரத்துக்கு பின்னரான பத்தாண்டுகளில் அதாவது 1960 களில் தன் இனத்தை முன்னுறுத்தி போராட தொடங்கிய மராட்டிய மாநிலம் தானே இன்றளவும் இந்தியாவின் வியாபார மாநிலம்!, அப்படியான மாநிலத்தில் தானே உலக பணக்காரர்கள் எல்லாம் இருக்குறார்கள்!, இந்திய சினீமா துறையில் ஆதிக்கம் செலுத்தும் இசுலாமியர்கள் இப்பவரை இங்குதானே இருக்குறார்கள்?, இவர்கள் எல்லாம் கொலைசெயயப்படவோ ? , இல்லை துரத்தப்படவோ இல்லையே இன்னும்! அப்படியாயின் இந்த ரவுடி நல்லவரா கெட்டவரா? , பிரித்தானியா உலகம் முழுதும் செய்ததைத்தான் கிட்லரும் செய்தான், பிரித்தானியாவின் தலைக்கு ஆப்பு வரும் போதுதான் கிட்லர் உலகிற்கு பயன்கரவாதியானான், ஆனால் அந்த மாவீரன் இறுதிவரை தான் கொண்ட கொள்கையில் விளகாதிருந்த்து வீர மரணம் அடைந்தான். நான் நினைப்பது போல என் தேசம், என் தாய்நாடு, என் இன மக்கள், நாமே நம்மை ஆளவேணும் என்று நினைப்பது போல அந்த ரவுடி தாக்கரே நினைத்ததில் எந்த தவறும் இல்லை. என் விடுதலை போராட்ட அமைப்பையும், என் இனவிடுதலையும் ஏற்றுகொண்ட ஒரே ஒரு காரணத்துக்காகவது என்றாலும் நான் இந்த ரவுடிக்கு வீரவணக்கம் சொல்ல கடமைப்பட்டிருக்குறேன். அவர் ரவுடியாக இருந்ததினால் தானோ என்னமோ இதனைலச்சம் பேர் இவரி ஆதரவாளர்களாக இருக்குறார்கள். ஒரு மாநிலத்தின் எந்த அரசியல் அதிகாரமும், எந்த அரசியல் வாதியின் ஆதரவும் இலாத ஒரு ரவுடிக்கு இந்திய அரசும், உலக பணக்காரர்களும் உலக புகழ் விளையாட்டு வீரர்களும்,சினீமா நட்ச்சத்திரங்கள் , இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் , ஏன் அரச மரியாதையும் வழங்குவது, பயத்தின் காரனாமாகவா? இல்லை வேறு எதற்க்காக?.

என் தமிழின விடுதலயா ஆதரிப்பது பேயாக இருப்பினும் நான் அதனுடன் கூட்டு வைக்க தயார்.

[/size]

Link to comment
Share on other sites

பால் தாக்கரே முதன்முதலில் எனக்கு அறிமுகமானது கையில் நுரை ததும்பும் பீர் கோப்பையுடன் குளிர் கண்ணாடி அணிந்த ஒரு புகைப்படத்தில். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில், மேடையில் அனாயசமாக பைப்பில் புகைபிடிப்பார். இந்தியாவின் நவீனக் கலாசார நுழைவாயிலான மும்பையில் இருப்பவர்களை பால் தாக்கரேவின் இந்தத் தோற்றம் ஈர்த்தது இயல்பானது.

Thackeray%20samas.jpg

தாக்கரேவின் ஆரம்ப கால நண்பர்கள் இளவயதில் இருந்தே அவர் நவீன அடையாளத்துடன் இருந்ததாகச் சொல்கிறார்கள்.ஆனால், மெட்ரோபாலிடன் கலாசாரத்துக்கு முன்மாதிரியாகச் சொல்லப்படும் மும்பை,வேற்று மாநிலத்தவர்களை ஓட ஓடத் துரத்தும் கலாசாரத்துக்கும் முன்மாதிரியானது தாக்கரேவால்தான்.

"இது சுதந்திர நாடு; நான் சுதந்திரமானவன்; யாருக்கு நான் பயப்பட வேண்டும்?"என்று கேட்பவர் தாக்கரே.பேச்சு - பாவனையில் மட்டும் அல்ல; அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் சுதந்திரத்தின் உச்சத்தை அவர் அனுபவித்தார்.அதேசமயம், அவருடைய சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான மக்களின் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது.

தென்னிந்தியாவில் இருந்து செல்லும் ரயில்களைச் "சுருக்கெழுத்தாளர்களின் ரயில்கள்" என்று அழைத்ததில் தொடங்கி, கடைசிக் காலத்தில் "ஒரு பீகாரி நூறு நோய்களுக்குச் சமம்" என்பது வரை அவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளும் உயிர்களை விலையாகக் கேட்டன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, "கரசேவையில் பங்கேற்றதற்காக கர்வம் கொள்கிறேன்" என்றார். மும்பையில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களின்போது அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன.எதையும் பெற மறுத்த போலீஸார் ஊடகங்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, வெறும் ஏழு புகார்களை மட்டும் பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தார்கள்.

பின்னாளில் பா.ஜ.க.- சிவசேனா ஆட்சிக்கு வந்தபோது அவையும் காணாமல் அடிக்கப்பட்டன.மும்பை கலவரங்களில் சிவசேனையின் கொலைக்கரங்களை ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அம்பலப்படுத்தியது. ஆனால், தாக்கரேவுக்கு எதிராக அரசால் கண்ணை அசைக்கக்கூட முடியவில்லை.

பல முறை அவருடைய சர்ச்சைக்குரிய எழுத்துகள்,பேச்சுகள் சார்ந்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனைகூட விதித்தது.ஆனால், மேல் முறையீடுகள்,அரசியல் தலையீடுகள் காரணமாக அனைத்திலிருந்தும் அவர் தப்பினார்.

பால் தாக்கரே மாதிரி வேறு யாராவது நடந்துகொண்டிருந்தால்,அவர் தன் வாழ்வின் பெரும் பகுதியைச் சிறையில் செலவிட வேண்டி இருந்திருக்கும்.ஆனால், சட்டத்தால் அவரை நெருங்கவே முடியவில்லை.1950-களில் அவருடைய அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்த ‘ஒன்றுபட்ட மகாராஷ்டிரம் இயக்கம்’ உச்சத்துக்குப் போனபோது, 105 பேர் உயிரிழந்தனர்.

அரசாங்கம் தாக்கரேவைக் கைது செய்து புனே எரவாடா சிறையில் அடைத்தபோது,மும்பை வீதிகள் தீப்பற்றி எரிந்தன.ஒருகட்டத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தாக்கரே கோரிக்கை விடும்படி அரசாங்கம் சிறையில் இருந்த தாக்கரேவிடம் கெஞ்சியது.அரசாங்கத்திடம் அன்றைக்கு ஏற்படுத்திய பயத்தை,தான் சாகும் வரை அப்படியே இருக்குமாறு பார்த்துக்கொண்டார் தாக்கரே.

அடிப்படையில் பால் தாக்கரே ஒரு தீவிரமான தேசியவாதி.ஆரம்ப நாட்களில் அவர் எந்த அளவுக்கு தேசியவாதியாக இருந்தாரோ,பின்னாளில் அதே அளவுக்கு இனவாதியாகவும் மாறினார்.ஒரு தேசியவாதியை இனவெறியை நோக்கித் தள்ளியது எது? இந்தக் கேள்விக்கான பதில்தான் பால் தாக்கரேவிடம் இருந்து இந்திய ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை.

பால் தாக்கரேவுக்கு ஹிட்லரை ரொம்பப் பிடிக்கும்."ஹிட்லரின் எல்லா நடவடிக்கைகளையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அவர் ஓர் அற்புதமான ஆளுமை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயுமே ஒரு ஹிட்லர் இருக்கிறார்.எனக்கும் ஹிட்லருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்" என்று சொல்வார் தாக்கரே.

உண்மைதான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஹிட்லர் மட்டும் இல்லை.இங்கே தாக்கரேவும்கூட இருக்கிறார்.தெலங்கானா,ஹரித்பிரதேசம்,பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், மிதிலாஞ்சல், போடோலாந்து, கூர்காலாந்து, கட்ச், விதர்பா என்று இன்றைக்கு இந்தியாவில் தனி மாநிலக் கோரிக்கைகளோடு நிற்கும் ஒவ்வொருவரின் அரசியலிலும் தாக்கரேவின் அரசியல் இருக்கிறது.

தமிழ்நாடு வரை ஊடுருவிவிட்ட மண்ணின் மைந்தன் அரசியலில் தாக்கரே இருக்கிறார்.அவர் வெற்றி பெற்று காட்டிய இனவாத அரசியல் சம கால இந்திய அரசியல் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உருவெடுத்து நிற்கிறது.மறுக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளில் இருந்தும் உணர்வுகளில் இருந்தும் தாக்கரேக்கள் உத்வேகம் பெறுகிறார்கள்.

பழக்கதோஷத்தின் காரணமாக, ‘இவருடைய மரணம் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது’ என்று பால் தாக்கரேவுக்கும் பலர் இரங்கல் உரை எழுதலாம். ஆனால், ஒரு பால் தாக்கரே ஓராயிரம் பால் தாக்கரேக்களை உருவாக்கிவிட்டுப் போய் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இந்தியாவின் பிரச்னையும் அதுதான்!

http://news.vikatan.com/?nid=11285#cmt241

Link to comment
Share on other sites

மல்லை அண்ணா உங்கள் பெயர் பட்டியலுக்காக still waiting

[size=4]ஒவொரு திரியிலும் ஹகீமையும் பௌதினையும் திட்டோ திட்டு எண்டு திட்டிட்டு இருக்கிங்க அது ஏன்?[/size]

இதுக்கு என்னிடம் மன்னிப்பு கேடகவேண்டும்.

இந்த கதைகளை வர வர எல்லாம் வரும். களதிலை என்னுடைய திட்டுகிற உரிமை மட்டுப்படுத்த நினைக்கிறவர்களுக்கு கிடைக்கிற இடமெல்லாம கொடுக்கப்படும். 20 பேரிலை திறந்து நாங்கள் எழுத்துகிறவைகளை சேட்டை காட்ட முடியாது.

யாழை சந்த பணத்தை நோக்கி தொடந்து இனி தள்ளத்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

தென்னிந்தியாவில் இருந்து செல்லும் ரயில்களைச் "சுருக்கெழுத்தாளர்களின் ரயில்கள்" என்று அழைத்ததில் தொடங்கி,

என்னோடு 2 வருடங்களுக்கு முன்னர் ஒரு மகாராஸ்டிர குஜராத்தியர் தொழில் செய்தார். அவர் இதை தமிழர்களுக்காகத்தான் அப்படி அழைப்பது என்று சொன்னார்(அதாவது சென்னையிலிருந்து வரும் ரயில்களைத்தான் தாம் அப்படி அழைப்பது என்று சொன்னர்). MMTCI இல் வேலை செய்வது எல்லாம் தமிழர்களும், மலையாளிகளும் என்றும் அதை மகாராஸ்டிராவில் தாம், மலையாளி, மதராசி ரேடிங்க் காப்பிரேசன் என்றும் அழைப்போம் என்று நகைசுவையாக சொன்னார்.

Link to comment
Share on other sites

அதற்க்காக தாக்ரே பீகாருக்கு போய் தாக்குதல் செய்யவில்லை. குயராத் போய் தாக்குதல் செய்யவில்லை. தங்கள் மாநிலத்தை சுரண்டுபவர்களையே தாக்கினார். தேசிய தலைவருக்கும் கிட்லரை ரொம்ப பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். கிட்லரும் இஸ்ரேல் சென்று யூதரை அழிக்கவில்லை. ஐரோப்பாவின் அனைத்து இனங்களும் அனைத்து நாடுகளும் பிரித்தானியா,போர்த்துக்கல்,ஹோலந்த்,பிரான்ஸ்,இத்தாலி,இஸ்பானியா போன்ற முக்கிய நாடுகள் உலகம் பூராவும் ஆபிரிக்கா,ஆசியா, வட,தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி அங்குள்ள பூர்வீகக் குடிகளை அழித்து அவர்கள் ஆட்சிய ஆட்சி செய்தவர்களை அழித்து மதமாற்றம் இனமாற்றம் மொழிமாற்றம் செய்தது பெரும் கொள்ளைகளை அடித்தவர்கள். ஆனால் யேர்மனியர் மட்டுமே இந்த கீள்த்த்ரமான வேலைய செய்யவில்லை. கிட்லர் கூட தன் நாட்டை சுரண்டியவர்களையும் தன் நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தியவர்களையுமே அழித்து ஆதிக்கம் செலுத்தினார். கிட்லர் இல்லை என்றால் இப்போதைய ஜேர்மன் பக்கத்து நாட்டவரால் விழுங்கப் பட்டிருக்கும் மொழி அழிந்திருக்கும். அது போல பால்தாக்கரே இல்லை எண்டால் கிந்திய குயராத்திய பீகாரியரால் அந்த மாநிலம் அழிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இனத்தவனும் தங்கள் தங்கள் மொழி வாரி மாநிலத்தில் இருக்க வேண்டியதுதானே. தமிழ் நாட்டில தெலுங்கன் மலையாளி ஆதிக்கம் ஏன்? வந்தேருகளுக்கு என்ன வேலை அங்கு?

Link to comment
Share on other sites

சிவ சேனாவ மலையில இருந்து தள்ளியாச்சு இப்ப யாழ சந்தாவ நோக்கி தள்ள போறிங்க போங்க மல்லை அண்ணா கிச்சு கிச்சு மூட்டாதிங்க. ......

By the way பெயர்பட்டியல் plz

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.