Jump to content

உலக கோப்பை கால்பந்து 2006


Recommended Posts

  • Replies 618
  • Created
  • Last Reply

மக்கிரச்சி உலக புகழ் பெற்ற கெட்ட பையன். இவரின் குறும்பால் எல்லோராலும் விரும்ப்பட்ட சிடான் அவமானம்மாக வெளியேறினார் என்பதை சகித்து கொள்ள முடியவில்லை. இத்தாலி இவ் உலக கோப்பையை போக்கிரித்தன்மாக தான் வென்றார்களா?

Link to comment
Share on other sites

மக்கிரச்சி உலக புகழ் பெற்ற கெட்ட பையன். இவரின் குறும்பால் எல்லோராலும் விரும்ப்பட்ட சிடான் அவமானம்மாக வெளியேறினார் என்பதை சகித்து கொள்ள முடியவில்லை. இத்தாலி இவ் உலக கோப்பையை போக்கிரித்தன்மாக தான் வென்றார்களா?

சிடான்

இத்தாலியின் ஜுவென்ரஸ், ஸ்பானியாவின் ரியால் மாட்றிட் ஆகிய கழகங்களுக்காக 306 போட்டிகளில்

6 வருடங்கள் விளையாடியவர்.

சிடானுக்கு இத்தாலி மொழி தெரிந்ததால்

வந்த விபரீதம்..............

ita6.jpg

தாக்குவதை கமரா கழுகு கண்களினாலும்

லைன்ஸ்மெனாக இருந்தவராலும் கவனிக்கப் பட்டு விட்டது.

3372527424.jpg

இனி என்ன செய்ய?

101684902.jpg

வெற்றி பெற்ற இத்தாலிக்கு வாழ்த்துகள்.........

இன்று மாலை 6.00 மணிக்கு ரோம் நகரில்

வீரர்கள் வந்திறங்குகிறார்கள்...............

Link to comment
Share on other sites

zidane_02_800.jpg

உலககிண்ணப்போட்டி 2006 ஜேர்மனி - யின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்துவிருது GOLDEN BALL பிரான்சின் அணித்தலைவர் சிடானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் இவ்விருதினை உலகம் முழுவதிலுமிருந்து ஊடகவிலாளர்கள் வாக்களித்து தேர்வு செய்கின்றனர். அவ்வகையில் 2012 வாக்குகளை வென்ற அவர் இவ்விருதுக்குத் தேர்வானார். அடுத்து இத்தாலியின் அணித்தலைவர் கன்னவாரோ 1977 வாக்குகளும் மும்முறை ஆட்டநாயகன் விருது பெற்றவரான இத்தாலியின் பிர்லோ 715 வாக்குகளும் பெற்றனர்.

மிகச்சிறப்பாக தன் அணியினரை வழிநடாத்திய, சிறப்புற விளையாடிய சிடான் இவ்விருதினை நிச்சயம் வெல்வார் என எதிர்பார்ப்புகள் மேலோங்கியிருந்த வேளையில் அந்நிலைமை கேள்விக்குறியானது. இறுதி ஆட்டத்தில் இத்தாலிவீரரை தலையால் மோதி விழுத்தியதற்காக சிகப்பு அட்டைபெற்று வெளியேற்றப்பட்டமை பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியது.

ஆனால் இப்போது வெளியான வாக்களிப்பு விவரம் சிடானுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

கடைசிநேர நடத்தைவழு ஒன்றைவிட போட்டியில் அவரது முன்னைய சிறப்பு அம்சங்களைச் சீர்தூக்கிப்பார்த்து ஊடகவியலாளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கு வித்தியாசம் (35)குறைந்தமைக்கு அவரது நடத்தை நிச்சயமான காரணமாகிறது. மிகபெரு வித்தியாசத்தில் வெல்வார் எனகிற எதிர்பார்ப்பு முன்பு நிலவியது.

பிரான்சின் தென்புல கடலோர நகர் மார்சயிலில் 23.06.1972 ல் பிறந்தவர் சிடான். பெற்றார் அல்ஜீரியாவிலிருந்து வந்து குடியேறிய இசுலாமிய மதத்தவர். 1994 முதல் பிரான்சின் தேசிய அணியில் பங்கு கொண்டு விளையாடியவர். 1998பிரான்சு உலககிண்ணப் போட்டியில் தன் நாடு உலககிண்னத்தை கைப்பற்றுவதற்கு இவரது விளையாட்டுத்திறன் பிரதான காரணியாகியது. அன்றிலிருந்து அவர் பெரும் கதாநாயகனாக மதிப்பளிக்கப்பட்டு வந்தார். பிரான்சு நாட்டுக்காக 107 போட்டிகளில் விளயாடி 37 கோல்களை அடித்துள்ளார். இத்தாலியின் ஜுவென்ரஸ், ஸ்பானியாவின் ரியால் மாட்றிட் ஆகிய கழகங்களுக்காக 306 போட்டிகளிலும் அதற்கு முன்பதாக பிரான்சின் இரு கழகங்களுக்காக 200 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

நன்றி:

http://ulagakinnam.blogspot.com/2006/07/bl...6815175508.html

wc6.jpg

உலக கிண்ணத்தை இத்தாலி பெற்றது தொடர்பான பார்வை...........

Link to comment
Share on other sites

மரியாதைஇல்லாமலும்... இனத்துவேசமாகவும்.... பயங்கரவாதியெனவும்.... கூறினால் யாருக்குத்தான் கோபம் வராது.... :lol: :idea: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்திற்கு வந்த நாள் தொடக்கம் பல உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இம்முறைபோல் தரமற்ற போட்டிகளை ஒருபோதும் பார்க்கவில்லை.

முக்கியமாக தான் கொண்டுசெல்லும் பந்தை எதிர் தரப்பினர் பறித்துவிட்டால் இவர் உடனே நிலத்தில் விழுந்துவிடுவார். இதிலே போத்துக்கல் வீரர்கள்(?) தான் நன்றாக நடிக்கக்கூடியவர்கள். இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் வீரர்களில் பலரும் இப்படித்தான். திறமையாக விளையாடி வெற்றிபெற முயற்சிப்பதைவிட நடுவர்களையும், மற்றயவர்களையும் ஏமாற்றி வெற்றிபெற முயற்சித்தவர்களே ஏராளம். உடலாலும், உளவியலாலும் எதிர்தரப்பினரை பாதிப்பிற்குள் ஏற்படுத்தியும்தான் பல நாடுகள் போட்டிகளில் இம்முறை வெற்றிபெற்றிருக்கிறன. சிடானுக்கும் இதே நிலமைதான். இனத்துவேசத்தை இல்லாதொழிக்கவேண்டும் என்று பலர் முயற்சித்தபோதிலும் இரகசியமாக இதன் தாக்கம் ஆங்காங்கே பலமாகவும் இருந்திருக்கின்றது. சில நடுவர்களும் நகைப்புக்கிடமான முறையில் போட்டிகளை நடாத்தினார்கள்.

கடந்த ஒருமாத காலமாக எங்கு சென்றாலும் தவறாது அனேகமான போட்டிகளைப் பார்த்திருந்தாலும் இறுதியில் முன்னையவற்றைவிட இம்முறை இவை தரத்தில் குறைந்தவையாகவும், நேர்மையற்றவையாகவும் இருப்பதோடு ஏமாற்றமாகவும்தான் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

இனத்துவேசம் கூடாது (Say no to racism) என்பது தான் உலக கோப்பை போட்டிகளின் போது முக்கிய கோசமாக முன்வைக்கப்பட்டு போட்டிக்கு முன்பு உறுதி மொழிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியோ இத்தாலி வீரர் இனத்துவேசமாக பேசினார் என்ற சர்ச்சையுடன் முடிவுக்கு வந்திருக்கின்றது. :lol:

சிடான் செய்தது நிச்சயமாக தவறு தான் அதற்கு அவர் சிகப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டிருக்கின்றா

Link to comment
Share on other sites

15_2.jpg

நன்றி: "மணி"

ஜிடானே இத்தாலிய விளையாட்டாளரான மேட்டராஸியை தன் தலையால் முட்டியதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்,

உண்மையில் மேட்டராஸி அவரை தகாத வார்த்தையால் திட்டினார்.

இப்போது தான் திட்டவில்லை என்கிறார்.

இதுகுறித்து வாயசைப்பை வைத்து கண்டுபிடிக்கும் நிறுவனம் ஒன்று மேட்டராஸி ஜிடானேயின் சகோதரியைப் பற்றி தகாத வார்த்தையை இத்தாலி மொழியில் திட்டியதாகவும்,

இத்தாலி மொழி தெரிந்த ஜிடானே அதனால் கோபமுற்று முட்டியதாகவும் கண்டுபிடித்து இருக்கிறது.

-மூர்த்தி

செல்வமுத்து கூறுவது போல்

இத்தாலியர்கள் எதிர்தரப்புக்கு

மனோ நிலையான பாதிப்பை ஏற்படுத்தி

அவர்களை திசை திருப்பும் நோக்கத்துடனே

நடந்ததாக இங்கு வாழும்

என் சில இத்தாலிய நண்பர்களே கூறுகிறார்கள்.

இது வரவேற்கக் கூடியதல்ல எனவும் மனம் வருந்துகின்றனர்.

வேலைத்தளங்களில் கூட ஐரோப்பியர் மொப்பிங் எனும் இப்படியான தந்திரத்தை பாவிப்பதைக் காணலாம்.

இனவாதத்தை உருவாக்கி விட்டு

அதை Say no to racism என எழுதி

மாற்ற முடியாது.

ஒருவனை மிருகமாக்குவது இலகு.

மீண்டும்

அவனை மனிதனாக்குவது வெகு கடினம்.......

Link to comment
Share on other sites

ஓய்வு பெறும் பிரபல வீரர்கள்

[11 - July - 2006] [Font Size - A - A - A]

சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் கப்டன் பிகோ அறிவித்துள்ளார்.

ஜேர்மனியில் நடந்த உலக கிண்ணப் போட்டியில் போர்த்துக்கல் அணி 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியிடம் தோல்வி கண்டது. இந்தப் போட்டியில் பிகோ மாற்று ஆட்டக்காரராக இறங்கி ஆடினார்.

இந்தப் போட்டி முடிந்ததும் பிகோ சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். போர்த்துக்கல் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது ஓய்வு முடிவை அவர் வௌயிட்டார்.

33 வயதான பிகோ 127 போட்டிகளில் விளையாடி 32 கோல்கள் அடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டில் உலகின் தலை சிறந்த வீரர் விருது பெற்ற பிகோ 2004 ஐரோப்பிய சாம்பியன் போட்டியோடு ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். பின்னர் தனது முடிவை கைவிட்டு உலக கிண்ண போட்டிக்காக அணிக்கு திரும்பினார்.

ஒலிவர் கான்

இதேபோல் போர்த்துக்கல் அணியின் மற்றொரு வீரரான பாலேட்டாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதான இவர் 87 போட்டிகளில் ஆடி 47 கோல்கள் அடித்துள்ளார்.

ஜேர்மனியின் மூத்த கோல் கீப்பரான ஒலிவர் கானும் போர்த்துக்கலுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இது தான் தனது கடைசிப் போட்டி என்று அறிவித்த படி வெளியேறினார்.

இந்த உலக கிண்ணப் போட்டியில் 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மட்டும் ஒலிவர்கான் ஆடினார். மற்ற ஆட்டங்களில் அவர் ஆடவில்லை.

இந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறுவதாக பிரான்ஸ் கப்டன் ஜிடேன் ஏற்கனவே அறிவிந்திருந்ததும் தெரிந்ததே.

http://www.thinakkural.com/news/2006/7/11/...ws_page6152.htm

இவர்களுடன் சின்னப்புவும் ஒய்வு பெறுகிறார் :P :P

Link to comment
Share on other sites

ஜிடானே இத்தாலிய விளையாட்டாளரான மேட்டராஸியை தன் தலையால் முட்டியதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்,

உண்மையில் மேட்டராஸி அவரை தகாத வார்த்தையால் திட்டினார்.

இப்போது தான் திட்டவில்லை என்கிறார்.

இதுகுறித்து வாயசைப்பை வைத்து கண்டுபிடிக்கும் நிறுவனம் ஒன்று மேட்டராஸி ஜிடானேயின் சகோதரியைப் பற்றி தகாத வார்த்தையை இத்தாலி மொழியில் திட்டியதாகவும்,

இத்தாலி மொழி தெரிந்த ஜிடானே அதனால் கோபமுற்று முட்டியதாகவும் கண்டுபிடித்து இருக்கிறது

.

RIO DE JANEIRO - Brazilian liplezers think to know what Marco Materazzi Sunday in Berlin against Zinedine Zidane has said in the WORLD CHAMPIONSHIPS-final. After extensive study of the images came these specialists till the conclusion that the Italian defenders the sister of Zidane for prostitute had constituted.,.

Link to comment
Share on other sites

ஓய்வு பெறும் பிரபல வீரர்கள்

[11 - July - 2006] [Font Size - A - A - A]

சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் கப்டன் பிகோ அறிவித்துள்ளார்.

ஜேர்மனியில் நடந்த உலக கிண்ணப் போட்டியில் போர்த்துக்கல் அணி 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியிடம் தோல்வி கண்டது. இந்தப் போட்டியில் பிகோ மாற்று ஆட்டக்காரராக இறங்கி ஆடினார்.

இந்தப் போட்டி முடிந்ததும் பிகோ சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். போர்த்துக்கல் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது ஓய்வு முடிவை அவர் வௌயிட்டார்.

33 வயதான பிகோ 127 போட்டிகளில் விளையாடி 32 கோல்கள் அடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டில் உலகின் தலை சிறந்த வீரர் விருது பெற்ற பிகோ 2004 ஐரோப்பிய சாம்பியன் போட்டியோடு ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். பின்னர் தனது முடிவை கைவிட்டு உலக கிண்ண போட்டிக்காக அணிக்கு திரும்பினார்.

ஒலிவர் கான்

இதேபோல் போர்த்துக்கல் அணியின் மற்றொரு வீரரான பாலேட்டாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதான இவர் 87 போட்டிகளில் ஆடி 47 கோல்கள் அடித்துள்ளார்.

ஜேர்மனியின் மூத்த கோல் கீப்பரான ஒலிவர் கானும் போர்த்துக்கலுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இது தான் தனது கடைசிப் போட்டி என்று அறிவித்த படி வெளியேறினார்.

இந்த உலக கிண்ணப் போட்டியில் 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மட்டும் ஒலிவர்கான் ஆடினார். மற்ற ஆட்டங்களில் அவர் ஆடவில்லை.

இந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறுவதாக பிரான்ஸ் கப்டன் ஜிடேன் ஏற்கனவே அறிவிந்திருந்ததும் தெரிந்ததே.

http://www.thinakkural.com/news/2006/7/11/...ws_page6152.htm

இவர்களுடன் சின்னப்புவும் ஒய்வு பெறுகிறார்

ஓய் வினித்து நம்ம ஆள் சிடானே போறார் பிறகு நான் எதுக்கு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

பாத்தீரே குறுக்கால போன சிங்கலீ (சுவிசில இத்தாலிக்காறறை அப்படித்தான் சொல்லுறது )

ம் சும்மா இருந்த சிடானை தூண்டி விட்டு அடிவாங்கி

ஓய் சிடானை பிரான்சு அதிபர் நேரடியாக சந்தித்து வாழ்த்துச்சொல்லி இருக்கிறார்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

இங்கிலாந்திற்கு வந்த நாள் தொடக்கம் பல உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இம்முறைபோல் தரமற்ற போட்டிகளை ஒருபோதும் பார்க்கவில்லை.

முக்கியமாக தான் கொண்டுசெல்லும் பந்தை எதிர் தரப்பினர் பறித்துவிட்டால் இவர் உடனே நிலத்தில் விழுந்துவிடுவார். இதிலே போத்துக்கல் வீரர்கள்(?) தான் நன்றாக நடிக்கக்கூடியவர்கள். இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் வீரர்களில் பலரும் இப்படித்தான். திறமையாக விளையாடி வெற்றிபெற முயற்சிப்பதைவிட நடுவர்களையும், மற்றயவர்களையும் ஏமாற்றி வெற்றிபெற முயற்சித்தவர்களே ஏராளம். உடலாலும், உளவியலாலும் எதிர்தரப்பினரை பாதிப்பிற்குள் ஏற்படுத்தியும்தான் பல நாடுகள் போட்டிகளில் இம்முறை வெற்றிபெற்றிருக்கிறன. சிடானுக்கும் இதே நிலமைதான். இனத்துவேசத்தை இல்லாதொழிக்கவேண்டும் என்று பலர் முயற்சித்தபோதிலும் இரகசியமாக இதன் தாக்கம் ஆங்காங்கே பலமாகவும் இருந்திருக்கின்றது. சில நடுவர்களும் நகைப்புக்கிடமான முறையில் போட்டிகளை நடாத்தினார்கள்.

கடந்த ஒருமாத காலமாக எங்கு சென்றாலும் தவறாது அனேகமான போட்டிகளைப் பார்த்திருந்தாலும் இறுதியில் முன்னையவற்றைவிட இம்முறை இவை தரத்தில் குறைந்தவையாகவும், நேர்மையற்றவையாகவும் இருப்பதோடு ஏமாற்றமாகவும்தான் இருக்கின்றது.

:P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
showletter3wz.gif
Link to comment
Share on other sites

ஸிடேனை ஆத்திரமூட்டியதாக ஒப்புக்கொண்டார் மேட்டராசி

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணித் தலைவர் ஸினடின் ஸிடேனை அவமானப்படுத்தும் வகையில் திட்டியது உண்மைதான் என்று இத்தாலி வீரர் மேட்டராசி ஒப்புக்கொண்டுள்ளார்.

இறுதி ஆட்டத்தின் போது மேட்டராசியின் மார்பின் மீது ஸிடேன் தலையால் முட்டிய சம்பவம் கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த செயலுக்காக ஸிடேனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஸிடேனை ஆத்திரப்படுத்தும் வகையில் தீவிரவாதி என்று திட்டியதாகவும் அவரது தாய் குறித்து இழிவாக பேசியதாகவும் செய்தி வெளியானது. இதை மேட்டராசி மறுத்துள்ளார்.

இது குறித்து இத்தாலி பத்திரிகைக்கு அவர் தெரிவித்ததாவது:

ஸிடேனை நான் அவமானப்படுத்தும் வகையில் திட்டியது உண்மைதான். தீவிரவாதி என்றோ அவரது தாயை இழிவுபடுத்தும் வகையிலோ எதுவும் கூறவில்லை.

எனக்குத் தெரிந்த ஒரே தீவிரவாதி எனது 10 மாத செல்ல மகள்தான். ஸிடேனின் தாய் பற்றியும் எதுவும் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை தாய் என்பவர் தெய்வத்தை போன்றவராவார்.

நான் அவரது சட்டையை சிறிது நேரம் பிடித்திருந்தேன். படுகோபமாக திரும்பிய அவர், உனக்கு உண்மையிலேயே இந்த சட்டை வேண்டுமென்றால் பிறகு தருகிறேன் என்றார். நானும் பதிலுக்கு அவமானப்படுத்தும் வகையில் வார்த்தைகளைக் கூறினேன் என்றார்.

ஸிடேன் மேட்டராசி மோதல் சம்பவத்தின் போது பதிவாகியுள்ள காட்சியில் இருவரின் வாயசைப்பை வைத்து என்ன பேசினார்கள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் செய்தி நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஒருவரின் வாயசைப்பை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கணிக்கும் பிரபல "லிப் ரீடர்' ஜெவ் சிகா என்பவரை இதற்காக பி.பி.சி. செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதன்மூலம் அவர் அப்படியே உச்சரிக்க, இத்தாலி மொழி பெயர்ப்பாளர் அதன் அர்த்தம் என்னவென்பதை தெரிவித்துள்ளார்.

"நீ ஒரு தீவிரவாதி மகன்' என்று மேட்டராசி திட்டியதாக இந்த முயற்சியில் தெரியவந்து. மற்றொரு குழுவினர் நடத்திய ஆய்வில் "நீ ஒரு பொய்யன். உனக்கும் உனது குடும்பத்துக்கு அசிங்கமான இரவுதான்' என்பது உட்பட தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸிடேன் விரைவில் உண்மையை வெளிப்படுத்துவார் என்று அவரது இணைப்பாளர் அலயன் கூறியுள்ள நிலையில் இந்தப் பிரச்சினை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை, இந்த பிரச்சினை தொடர்பாக மார்கோ மேட்டராசியின் தந்தை கிஸிபி மேட்டராசி பி.பி.சி. க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: என்னுடைய மகன் அப்பாவி. இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவனே அவன்தான். இறுதி ஆட்டம் முடிந்ததும் எனது மகனுடன் பேசினேன். சில நிமிடங்கள் மட்டுமே பேசினான். அவனை சீண்டியதாக கூறினான். அவனுக்கு எதிராக அவர்களுக்கு ஏதோ பகைமை இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. கால்பந்து விளையாட்டிற்குள் நுழைந்த அவனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சோதனைகள்தான். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் அவன் காயங்களுடன் திரும்பி வருவதே இதற்கு சாட்சி. சர்ச்சைகளில் சிக்க நான் விரும்பவில்லை. அதேசமயம் யாரையும் பலிகடா ஆக்குவதை விரும்பாமல் இதை கூறுகிறேன் என்று அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) ஒழுங்கு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

சர்வதேச போட்டிகளில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஒருவர் வெளியேற்றப்படும் போது அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கமாக விசாரணை நடத்தப்படும். தவறு செய்த வீரரை கண்டறிந்து தண்டனை வழங்கப்படும். இதேபோன்று ஸிடேனின் நடத்தை குறித்தும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது. இவர் மேட்டராசி நெஞ்சில் முட்டிய போது நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணி பற்றியும் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் மேட்டராசி மீது விசாரணை நடத்தப்படுமா என்பது பற்றி கருத்து தெரிவிக்க பிஃபா மறுத்துவிட்டது.

Lankasri Sports : jega

Link to comment
Share on other sites

இத்தாலி வீரரை தாக்கியதற்கு ஷிடேன் மன்னிப்பு கேட்டார் அவரது தங்கையை விபச்சாரி என்று மெட்டராசி திட்டினார்.என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தின் போது பிரான்சு கேப்டன் ஷிடேன், இத்தாலின் மெட்ராசியை தலையால் முட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு நடுவர் ரெட்கார்டு கொடுத்து வெளி யேற்றினார்.

இதனால் பெனால்டி ஷூட்டின் போது ஷிடேன் இல்லாதது பிரான்சு அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இதுவே பிரான்சு தோல்வி அடைய ஒரு காரணமாகவும் அமைந்து விட்டது.

இந்த சம்பவத்தால் தலைசிறந்த வீரர் என்ற பேசப்பட்ட ஷிடேன் மிகவும் அவனமாத்திற்கு ஆளாகி உள்ளார். எந்த ஒரு வீரரும் வேண்டுமென்றே எதிர் அணி வீரரை தாக்குவது கிடையாது. ஷீடேன் கோபப்படும் அளவுக்கு மெட்டராசி ஏதோ கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்க வேண்டும் என பலரும் கருதுகின்றனர்.

மெட்டராசி, ஷிடேனை மோசமான தீவிரவாதி என்று திட்டியதால் தான் ஷிடேன் கோபம் அடைந்து இந்த தகாத செயலில் ஈடுபட்டார் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன. எனினும் இது தொடர்பாக ஷிடேன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பிரேசிலில் உள்ள டி.வி. நிறுவனம் ஒன்று ஷிடேனின் தங்கையை மெட்டராசி தரக்குறைவாக பேசினார். ஆதாவது அவரது தங்கையை விபச்சாரி என்று மெட்டராசி திட்டினார்.

இதன் காரணமாகவே ஷிடேன் கோபத்தின் உச்சிக்கே சென்று மெட்டராசியை தாக்கி உள்ளார். என செய்திகள் வெளியிட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மேலும் சுறுசுறுப்பை அடைந்துள்ளது. ஷிடேன் ஏன்ப அவ்வாறு நடந்து கொண்டார் என்று தெரியாத நிலையில் தனது அணியின் சக வீரர்களிடம் ஷிடேன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கோபத்தில் என்ன செய்வது என்பதை அறியாமல் செய்து விட்டேன். அணியின் வெற்றி வாய்ப்பை கெடுத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என சக வீரர்களிடமும் அவர் உடை மாற்றும் அறையில் கூறியுள்ளார்.

Lankasri Sports : Viduppu.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜிடேனின் சகோதரியை மாட்டராஸி விபசாரியெனத் திட்டினார் வாயசைவு நிபுணர்களின் உதவியுடன் கண்டுபிடிப்பு

உலகக் கிண்ண கால்பந்து இறுதி ஆட்டத்தின்போது சகோதரியை விபசாரி என்று திட்டியதால்தான் இத்தாலி வீரர் மாட்டராஸியை, ஜிடேன் தலையால் முட்டி வீழ்த்தினார் என்று பிரேஸில் தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

கால்பந்து உலகின் முன்னணி வீரர்களில் ஒருவர் பிரான்ஸ் அணி கப்டன் ஜிடேன். 34 வயதான ஜிடேன் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தவர். இத்தாலி அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் 110 ஆவது நிமிடத்தில் (கூடுதல் நேரம்) முரட்டுத்தனத்தில் ஈடுபட்டார்.

அதாவது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மலை ஆடுகள் ஒன்றோடொன்று மோதினால் எவ்வளவு வேகமாக மோதுமோ, அதேபோல் இத்தாலி வீரர் மாட்டராஸியின் நெஞ்சில் அசுரவேகத்தில் ஜிடேன் தனது தலையால் முட்டினார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத மாட்டராஸி அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.

ரசிகர்கள் மத்தியில் கதாநாயகனாக விளங்கிய ஜிடேனின் இந்த திடீர் தாக்குதலால் பிரான்ஸ் அணி வீரர்களே திக்கித்திணறிப்போயினர். என்ன நடந்தது என்றே அவர்களால் ஊகிக்க முடியவில்லை. வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினர். பொதுவாக பரம சாதுவாக காணப்படும் ஜிடேன், ஏன் இப்படி திடீரென்று எரிமலையாக வெடித்தார் என்பது புரியாத புதிராக இருந்தது. தனது கடைசி ஆட்டத்தில் ஏன் அவர் இப்படி நடந்து கொண்டார் என்ற பேச்சு எழுந்தது.

இந்நிலையில் பிரேஸில் நாட்டை சேர்ந்த குளோபோ என்ற டெலிவிஷன் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

இத்தாலி வீரர் மாட்டராஸி, ஜிடேனின் சகோதரியை கேவலமான வார்த்தைகளால் திட்டி புண்படுத்தியுள்ளார். அதாவது ஜிடேனின் சகோதரி ஒரு விபசாரி என்று மாட்டராஸி கூறியுள்ளார்.

மாட்டராஸியின் வாய் அசைவை (லிப்-ரீடிங்) வைத்து அவர் என்ன கூறினார் என்பதை அந்த டெலிவிஷன், நிபுணர்களை வைத்து கண்டுபிடித்துள்ளது. விபசாரி என்று ஒரு முறை அல்ல இருமுறை மாட்டராஸி கூறியுள்ளார்.

இதனால்தான் ஜிடேன் சிங்கமாய்ச் சிலிர்த்தெழுந்துள்ளார் என்று அந்த டெலிவிஷன் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது மாட்டராஸி ஜிடேனின் சகோதரியை விபசாரி என்று திட்டவில்லை. மாறாக அவரது தாயாரை விபசாரி எனத் திட்டினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மாட்டராஸி, ஜிடேனை மோசமான தீவிரவாதி என்று திட்டியதால்தான் அவர் தாக்கினார் என்றும் மற்றொரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் அணி வீரர் வில்லியம் காலஸ் இந்த பிரச்சினை குறித்து கூறுகையில்,

`இறுதி ஆட்டத்தில் ஜிடேனை தவறு செய்ய வைக்க இத்தாலி அணியினர் பல வழிகளை கையாண்டனர். முதல் கோலை அடிக்கும் முன்பு கூட மாட்டராஸி, ஜிடேனின் சட்டையை பிடித்து இழுத்தார். இத்தாலி வீரர்கள் பலமுறை அவரை திட்டினர்' என்றார். குற்றச்சாட்டை மறுக்காத மாட்டராஸி

ஜிடேன் - மாட்டராஸி பிரச்சினை இப்படி புகைந்து கொண்டு இருக்க, இந்த விவகாரத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கண்டுகொண்டது போல் தெரியவில்லை. இது குறித்து நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை என்று அது கூறியுள்ளது. இந்நிலையில் தாக்கப்பட்ட மாட்டராஸி, சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் நான் `ஜிடேனை மோசமான வார்த்தைகளால் திட்டவில்லை' என்று இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஜிடேனை, மாட்டராஸி மோசமாக திட்டியது உண்மை என்று ஜிடேனின் உதவியாளர் அலைன் மிக்லியசியோ கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

`மாட்டராஸி, ஜிடேனை கேவலப்படுத்தியது உண்மை. மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் தான் ஜிடேன் அப்படி நடந்து கொண்டார். ஆனால், என்ன வார்த்தையால் திட்டினார் என்பதை என்னிடம் கூற அவர் மறுத்துவிட்டார்.

மேலும், இது குறித்து ஜிடேன் பேச விரும்பவில்லை. ஆனாலும், ஒரு சில நாட்களில் அவர் இதுகுறித்து பேசுவார். பொதுவாக ஜிடேன் எதையும் கண்டு கொள்ளவே மாட்டார். ஆனால், அதை மட்டும் அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை' என்றார்.

இது குறித்து மாட்டராஸியின் தந்தை கிளிசெப்பே மாட்டராஸி கூறுகையில், `கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது மகன் பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளான். இதில் அவனுக்கு அதிக அளவில் காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரி பிரச்சினைகளால் எனது மகன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளான்' என்றார்.

-தினக்குரல்

Link to comment
Share on other sites

442006071212092815klins.JPG

ஜேர்மனியின் பயிற்சியாளர் Jurgen Klinsmann பதவி விலகுகின்றார். அவரது உதவியாளராக இருந்த Joachim Loew பொறுப்பை ஏற்கின்றார்.

Link to comment
Share on other sites

மெட்டராசி, ஷிடேனை மோசமாக திட்டியதால் தான் ஷிடேன் கோபம் அடைந்து இந்த செயலில் ஈடுபட்டார் ...........

அந்த நிகழ்வு ஒளிபதிவாக..........

http://video.google.com/videoplay?docid=43...126824948183847

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.