Jump to content

என் தோழி .......!!


Recommended Posts

29803019299630071js.gif

தோல்வி எனைத் தொடும் முன்னே

தோழமையுடன் தோள் கொடுப்பாயடி.

கவலைகள், மனதை காயப்படுத்தும் முன்னே

காயத்தை ஆற்றும், மருந்தாக, வருவாயடி,,,!

ஒரு நாள் பேசாவிட்டால்

ஒரு ஜென்மம் போனதடி - என

நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி!

நினைவினில் நிஜமானவளே - என்

கனவிலும் கரைந்தாயடி..

என் தோழி என்ற உரிமையுடனே

உன் தோளில் சாய்வேனடி..

உன் சிநேகிதி என்ற உரிமையுடனே

உனை நான் அதிகாரமும் செய்வேனடி!

என் ஒற்றை விழியாக

என் தோழி ,- நீ

என்னில்,

என்றுமே வாழ்வாயாடி.. !

Link to comment
Share on other sites

ஆகா அனி தோழியை பற்றிய கவிதை அருமை அதுவும் அந்த படங்கள் இன்னும் சூப்பர். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தோல்வி எனைத் தொடும் முன்னே

தோழமையுடன் தோழ் கொடுப்பாயடி.

கவலைகள்இ மனதை காயப்படுத்தும் முன்னே

காயத்தை ஆற்றும்இ மருந்தாகஇ வருவாயடிஇஇஇ!

அழகான வரிகள். உங்களுக்கு நல்லதொரு கிடைத்திருக்கின்றா. கொடுத்து வைத்தவர்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் அனிதா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை அனித்தா.

படங்களும் பரவாயில்லை. எம்மவர் படங்களை இணைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

ஆகா..தோழிக்கு ஒரு கவி..அழகா இருக்கு அனி..படங்களும் சூப்பர் :P தொடருங்கள் :arrow:

தோழி கவிதை நல்லா இருக்கு. யாரந்த தோழி? நான் தானே

ஹிஹி..இது என்ன எதிரொலியா..இல்லை கோர்ட்டா? ஒண்டுக்கு ரண்டு தடவை கேட்கிறீங்க நிலா.. :roll: :wink:

Link to comment
Share on other sites

ஆஹா... படங்களும் கவிதையும் அருமை...தொடர்ந்து எழுதுங்கள் :lol: 8)

Link to comment
Share on other sites

ஆகா அனி தோழியை பற்றிய கவிதை அருமை அதுவும் அந்த படங்கள் இன்னும் சூப்பர். வாழ்த்துக்கள்.

நன்றி ரசி அக்கா.... :P

அழகான வரிகள். உங்களுக்கு நல்லதொரு கிடைத்திருக்கின்றா. கொடுத்து வைத்தவர்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் அனிதா.

ம்ம்... உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்,ரமா அக்கா...! :lol:

நல்ல கவிதை அனித்தா.

படங்களும் பரவாயில்லை. எம்மவர் படங்களை இணைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

நன்றி செல்வமுத்து அங்கிள்...! :P ... ம்ம் படங்கள் தேடினன் ஆனா பெருசா ஒன்னும் கிடைக்கல அதால இந்த படங்களை இணைத்தேன்...! 8)

Link to comment
Share on other sites

தோழி கவிதை நல்லா இருக்கு. யாரந்த தோழி? நான் தானே :P :P :P

:P :P :P .... ம்ம் நன்றி வெண்ணிலா....ம்ம் நீங்களும் என் தோழி தானே....! :lol:

ஆகா..தோழிக்கு ஒரு கவி..அழகா இருக்கு அனி..படங்களும் சூப்பர் தொடருங்கள் ..!

ம்ம் தோழிக்கு ஒரு கவி... :wink: நன்றி சகி ... :P

ஹிஹி..இது என்ன எதிரொலியா..இல்லை கோர்ட்டா? ஒண்டுக்கு ரண்டு தடவை கேட்கிறீங்க நிலா..

ஹிஹி சகி ... நானும் இதைத்தான் கேக்கனும் எண்டு இருந்தன் .. நிலா அடிக்கடி இப்படித்தான் இரண்டுதரம் தான் கிளிக் பண்ணுறா...என்ன ஆச்சு நிலாக்கு.... :wink: :wink: :lol:

ஆஹா... படங்களும் கவிதையும் அருமை...தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி கௌரி பாலன்....! :lol:

Link to comment
Share on other sites

மேற்கோள்:

என் ஒற்றை விழியாக

என் தோழி ,- நீ

என்னில்,

என்றுமே வாழ்வாயாடி..

மற்ற விழி நீங்கள் என்று - நட்புக்கு - நிறைய பேசாமல் -உதாரணம் !

ஆகா அனிதா - பின்னிட்டிங்களே! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அனித்தா.. உங்கள் அன்புத்தோழிக்கக நீங்கள் வரைந்த உங்கள் கவி நன்றாக இருக்கிறது. உங்கள் தோழமை வாழ வாழ்த்துக்கள். நல்ல கிரபிக்ஸும் செய்கிறிங்க... செல்வ முத்து அங்கிள் சொன்னமாதிரி நம்மவர் படங்களை இணைத்திருக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அன்புத்தோழிக்கான காட்சியும் கவிதையும்

நன்றாக உள்ளது. நட்பின் வலிமை தெரிகிறது.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மேற்கோள்:

என் ஒற்றை விழியாக

என் தோழி ,- நீ

என்னில்,

என்றுமே வாழ்வாயாடி..

மற்ற விழி நீங்கள் என்று - நட்புக்கு - நிறைய பேசாமல் -உதாரணம் !

ஆகா அனிதா - பின்னிட்டிங்களே! 8)

உங்கள் கருத்துக்கும் நன்றி வர்ணன்... :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அனித்தா.. உங்கள் அன்புத்தோழிக்கக நீங்கள் வரைந்த உங்கள் கவி நன்றாக இருக்கிறது. உங்கள் தோழமை வாழ வாழ்த்துக்கள். நல்ல கிரபிக்ஸும் செய்கிறிங்க... செல்வ முத்து அங்கிள் சொன்னமாதிரி நம்மவர் படங்களை இணைத்திருக்கலாமே.

வாழ்த்துக்களுக்கு நன்றி விஸ்ணு.. ம்ம் .. படங்கள் தேடினன்பா கிடைக்கல... :roll:

உங்கள் அன்புத்தோழிக்கான காட்சியும் கவிதையும்

நன்றாக உள்ளது. நட்பின் வலிமை தெரிகிறது.

வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்ருதி...!

Link to comment
Share on other sites

தோழி கவிதை நன்றாக இருக்கிறது. கிராபிக்ஸ் வேற செய்து கலக்குறீங்க வாழ்த்துக்கள்.

நீங்க கவிதையை குறிப்பிட்டிருக்கும் தோழி இதை படிச்சு சந்தோஷப்பட்டிருப்பார் என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழிக்காக எழுதிய கவிதை நல்லா இருக்கு..அனி...வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

தோழி கவிதை நன்றாக இருக்கிறது. கிராபிக்ஸ் வேற செய்து கலக்குறீங்க வாழ்த்துக்கள்.

நீங்க கவிதையை குறிப்பிட்டிருக்கும் தோழி இதை படிச்சு சந்தோஷப்பட்டிருப்பார் என்று நினைக்கிறன்.

நன்றி மதண்... ஹும் சும்மா செய்து பார்த்தன்.... :D

ம்ம் என் தோழி ரொம்ப சந்தோசப் பட்டவள் கவிதையை பார்த்திட்டு... :P

சரி எங்க அடிக்கடி காணாமல் போகுறீங்க மதண் ? :roll:

Link to comment
Share on other sites

தோழிக்காக எழுதிய கவிதை நல்லா இருக்கு..அனி...வாழ்த்துக்கள்....

நன்றி ஜெனனி அக்கா... :P

Link to comment
Share on other sites

அனித்தா,

தோழியைப் பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.

எங்கேயோ வாசித்த ஒரு கூற்று உங்களிடமே கருத்தக் கேட்கிறேன். திருமணத்தின் பின்னர் ஆண்களளவுக்குப் பெண்கள் நண்பிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில்லையாமே. உண்மையா? (மற்றவர்களும் கருத்துக்களைச் சொல்லலாம்.)

(அடடா! நாரதன் கலகத்தைத் தொடக்கி விட்டிட்டான்யா விட்டிட்டான்)

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

அனித்தா,  

தோழியைப் பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.  

எங்கேயோ வாசித்த ஒரு கூற்று உங்களிடமே கருத்தக் கேட்கிறேன். திருமணத்தின் பின்னர் ஆண்களளவுக்குப் பெண்கள் நண்பிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில்லையாமே. உண்மையா? (மற்றவர்களும் கருத்துக்களைச் சொல்லலாம்.)

(அடடா! நாரதன் கலகத்தைத் தொடக்கி விட்டிட்டான்யா விட்டிட்டான்)

அன்புடன்

மணிவாசகன்

முந்திய காலத்தில்தான் அப்படி இப்ப அப்படி இல்லை. இளமைக்காலத்தில் உள்ள மாதிரி தொடர்பு வைக்காவிட்டாலும் முடிந்த அளவு தொடர்பு வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அத்துடன் ஆண்களை போல வெட்டியா சுத்த பெண்களுக்கு எங்க நேரம் இருக்கும். வேலை குழந்தை குட்டி எண்டு எத்தனை பிரச்சினைகள். அவர்கள் தொடர்புகள் வைக்காவிட்டாலும். அவர்கள் மனதில் தோழியூடனான நினைவுகள் எப்பவும் பசுமையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

அனித்தா,

தோழியைப் பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது

நன்றி மணிவாசகன்..!

அத்துடன் ஆண்களை போல வெட்டியா சுத்த பெண்களுக்கு எங்க நேரம் இருக்கும். வேலை குழந்தை குட்டி எண்டு எத்தனை பிரச்சினைகள். அவர்கள் தொடர்புகள் வைக்காவிட்டாலும். அவர்கள் மனதில் தோழியூடனான நினைவுகள் எப்பவும் பசுமையாக இருக்கும்.

ஹிஹி சரியா சொன்னீங்கள் ரசி அக்கா.... :wink:

அதை விட பெண்கள் கல்யாணம் கட்டினால் பிறகு கணவன் இருக்குற இடத்தில் தானே வாழ்க்கை ,அப்படி செல்வதினாலும் ஒன்றாக படித்த நெருங்கிய தோழிகளை பிரிய நேரிடுகிறது.. அப்படி பிரிந்து சென்றாலும் டெலிபோனிலாவது கதைக்கினம் , நேரம் கிடைக்கும் போது சந்தித்துக் கொள்ளினம் எண்டுதான் நான் சொல்லுவன்.. உண்மையான நெருங்கிய தோழியாக இருந்தால் , நிச்சயம் தொடர்பு இல்லாமல் இருக்க மாட்டினம், அப்படி அந்த தோழி எங்கு இருக்குறாள் எண்று தெரியாவிட்டாலும் , அவளுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயலுவினம். எப்படி அப்படி தொடர்பே இல்லாமல் இருப்பது என்னால முடியாதுப்பா... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் தோழமை என்றும் தொடரட்டும்.. அனி ஓவியம் வரைவதில் வல்வர் என்று பாத்தால் நல்லாய் படங்களை இணைத்து அசத்திறியள்.. அது சரி என்ன மென்பொருள் பாவிக்கிறியள் (என்ர குணத்தை காட்டீட்டனா. நம்ம புழைப்பே அதுவாச்சே என்ன பண்ண.)

தோழிகளை பல காரணங்கள் பிரிச்சாலும் அவற்றை சாக்காய் வைத்து தொடர்பின்றி இருப்பதை விட.. முயற்சித்து கடித தொடர்பாவது வைத்திருக்கலாம்.. வருடங்கள் எத்தனை போனாலும் தோழமை மாறுமா என்ன..?? பசுமையான நினைவுகளில் அத்தனை சுகம் இருக்கும்.. :(

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அருமையான கவிவரிகள்

நட்பு என்ற உறவு புனிதமானது அது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் எடுப்பார்கள் சிலபேர் தங்கள் சுய நனலத்துக்காக கூட நட்பை பயன்னடுத்துவார்கள்

உங்கள் புனிதமான நட்பு என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ஒரு நாள் பேசாவிட்டால்

ஒரு ஜென்மம் போனதடி - என

நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி!

நினைவினில் நிஜமானவளே - என்

கனவிலும் கரைந்தாயடி..

தோழியைப்பற்றி வடித்த கவிதை மிகவும் அருமை நன்றிகள் அனிதா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.