Jump to content

இன்னுமா போர் அபாயம்?


Recommended Posts

இன்னுமா போர் அபாயம்?

இலங்கைத் தமிழன்!

இதோ, இந்தியக் கடற்கரைக்கு வருகிறான்...

நண்பனாக அல்ல, நாடோடியாக!

ஒவ்வொரு நாளும்

உயிரைப் பிடித்துக்கொண்டு கரையொதுங்குகிறான்...

தனியாக அல்ல, குடும்பம் குடும்பமாக!

கச்சத் தீவருகே,

கல்லெறி தூரத்திலே,

தமிழனின் கல்லறை ஓலம் கேட்கிறது...

இன்று நேற்றல்ல, தினம்தோறும்!

தனுஷ்கோடி கடற்பகுதியிலே,

தப்பியோடி வந்த தமிழனின் பிணங்கள் மிதக்கின்றன...

இன்று நேற்றல்ல, தினம்தோறும்!

இத்தனைக்குப் பிறகும்,

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு,

"இலங்கையில் போர்மூளும் அபாயம்!" என்று

சர்வ சாதாரணமாக, சர்வ சதாகாலமாக,

ஊடகங்களெல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றன...

வேதனையாக இருக்கிறது...

போர் மூண்டு எத்தனையோ காலங்கள் கடந்தான நிலையில்,

இன்னமுமா போர் அபாயம்?

தினந்தோறும் தமிழனைச் சிங்களன் வெட்டிச் சாய்க்கின்ற நிலையில்,

இன்னமுமா போர் அபாயம்?

அகிம்சா வேதத்தின் கச்சாமிக் காடையர்கள்,

அன்றாடம் ரத்த ஸ்லோகங்களை உச்சரித்துக் கொண்டே

"அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்! " என்கிறார்கள்!

குருதிக் கிடங்கில் சரிவது தமிழன் என்பதைத்

தினந்தோறும் சரித்திரம் சுட்டிக்காட்டுகின்ற போதும்,

தமிழன்தான் வன்முறையாளனாம், சமாதானச் சத்ருவாம்...

கூறுகின்றன, கௌதமனின் சாம்பல் புழுக்கள்!

நேர்நின்று பொருதிட நெஞ்சுரமற்றுப் போய்,

தரைவழித் தாக்குதலைத் தவிர்த்து

வான்வழித் தாக்குதலை மேற்கொள்ளும் வக்கற்ற பேரினவாதிகள்,

கொன்று குவித்திருக்கும் அப்பாவித்தமிழர்கள் மீதே

கொலைக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

தினம்தோறும் செத்துக்கொண்டிருக்கும் தமிழனிடம்

"அமைதிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்! " என்று

அமளிதுமளிப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்,

அகில உலக அமைதித் தூதுவர்களான அதிமேதாவிகள்!

பாவம், இலங்கைத் தமிழன்!

உதவிக்கு என்று ஒருகைகூட இல்லை அவனுக்கு!

அதனால்தானோ என்னவோ அவன்

"இலம் கை! " என்று அபயமிட்டுக் கூவுகின்றான்...

உலக நாடுகளே!

உற்றுக் கேளுங்கள், அவனது அபயக் கூக்குரலை!

கற்றுக் கொள்ளுங்கள் அவனது கண்ணீர்க் கதையை!

"போர் அபாயம் " என்பது ஒரு பொய்ப் புரளி!

புரிந்துகொள்ளுங்கள்! புரிந்துகொள்ளுங்கள்!!

மூண்டுவிட்டது போர் என்பதையும்

மாண்டுகொண்டிருப்பது தமிழ் இனம் என்பதையும்

இன்னமும் ஏன் மறைக்கின்றீர்கள்?

போர் இதோ நடந்துகொண்டிருக்கிறதய்யா...

இதற்கிடையே ஏன் பிதற்றுகின்றீர்கள்?

இன்னமுமா போர் அபாயம்?..

தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

Link to comment
Share on other sites

கவிஞர் சூசைமிக்கேல் அவர்களின் கவிதை நீண்ட காலத்தின் பின்னர் களத்தில் போட்ட ஹரி மன்னனுக்கு நன்றிகள்.

உணர்வுபூர்வமான ஓர் கவிதை.

வேதனையாக இருக்கிறது...

போர் மூண்டு எத்தனையோ

காலங்கள் கடந்தான நிலையில்,

இன்னமுமா போர் அபாயம்?

:cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை ஒன்று நடந்து 3 மாதத்துக்கு மேல் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்! இப்பதான் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்! இனி தொடர்ந்து அவரின் கவிதையை எதிர்பார்க்கலாம்!

Link to comment
Share on other sites

உணர்பூர்வமான கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றி ஹரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.