Jump to content

பலதும்,பத்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குத்தரிசி சோறு எனக்கும் பிடிக்கிறேல்ல...இசையும்,நானும் சேம் பிளட் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 584
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரு சிறிலங்காவிற்கு சென்றிருந்தபோதும் ஊருக்குப் போகவில்லை. அங்கு போனால் மரக்கறி சாப்பாடுதான் சாப்பிடுவேன். மச்சம் எல்லாம் முன்னர் அங்கு இருந்தபோது சாப்பிடவில்லை என்பதாலும், இறைச்சி மென்மையாக இல்லாததாலும் (ஓடித் திரியும் கோழிகளில் எங்கே தசை இருக்கின்றது, எல்லாமே எலும்புதானே!), தேங்காய்ப்பால் விட்ட மச்சக்கறிகள் பிடிக்காததாலும் மரக்கறிதான்!

குத்தரிசியையும் கண்ணில் காட்டக்கூடாது.. ஆனால் ஊரில் இருக்கும்போது தகரத்தில் புழுக்கிய அரிசியை சுறங்கை சுறங்கையாக சாப்பிட்டிருக்கின்றேன். அதுதானே அப்போது நொறுக்குத் தீனி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த கடவுள் பாட்டுக்களில் லிங்க புராணம் முதன்மையானது...வட மொழி எதிர்ப்பாளார்களும்,கடவுள் எதிர்ப்பாளர்களும் மன்னிக்க;

ப்ரம்ம முராரி ஸூ(சு)ரார்சித லிங்கம்

நிர்மல பாஹித சோபித லிங்கம்

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ முனி ப்ரவார்சித லிங்கம்

காமதகம் கருணாகர‌ லிங்கம்

ராவணதர்ப விநாச‌ன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸர்வ ஸீ(சு)கந்தி ஸீ(சு)லேபித லிங்கம்

புத்து விவர்த்தன கார‌ண லிங்கம்

ஸீ(சி)த்த ஸீ(சு)ர‌ஸீ(சு)ர‌ வந்தித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஜித லிங்கம்

பணிபதி வேஸ்டித சோபித லிங்கம்

தகூஸ யஜ்ஞ விநாச‌ன லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்

பங்கஜ ஹார‌ ஸீ(சு)சோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாச‌ன லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ கணார்சித ஸேவித லிங்கம்

பாவையர் பக்தி பிரேவச‌ லிங்கம்

தினகர‌ கோடி ப்ர‌பாகர‌ லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

அஸ்ட‌ தலோபரி வேஸ்டித லிங்கம்

ஸர்வ ஸமுத் பவ கார‌ண லிங்கம்

அஸ்ட‌ தரித்ர‌ விநாச‌க லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸீ(சு)ர‌ குரு ஸீ(சு)ர‌வர‌ பூஜித லிங்கம்

ஸீ(சு)ர‌வன புஸ்ப ஸதார்ச்சித லிங்கம்

பர‌மபதம் பர‌மாத்மக லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஸ்ட‌கம் மிதம் புண்யம்

யஹ்படேத் சிவ ஸந்திதேள!

சிவலோக மவாப் நோதி

சிவேந ஸஹ மோததே!!

[இந்தப் பாட்டின் அர்த்தம் எனக்குப் பெரிதாய் புரியவில்லை ஆனால் இனம் புரியாத ஒன்று இந்தப் பாட்டில் இருக்குது என்பது தான் எனது கருத்து]

பாட்டை எதாவது பிழையாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

வெகு நாட்களாக

நிரப்பப்படாமலிருக்கிறது பிரியத்தால் வேயப்பட்ட

என் எதிர் இருக்கை

பருகப்படாமல் வீணாகிறது

உன் வருகையை எதிர்பார்த்து

பகிர்ந்து வைக்கப்படும்

ஒரு கோப்பை தேனீர்

ஒரு கோப்பை மது

[நஞ்சு எப்போதும் பகிந்தளிக்க முடியாததாகவே இருக்கிறது]

நீண்ட‌ என் அழைப்புகள்

ஒரு காத்திருப்பை முன்னிருத்தி

விசும்பலாகி

மெல்லக் கரைகின்றன.

கிழக்கிலிருந்து புறப்பட்டு

மேற்கில் சென்று ஒடுங்குகின்றன

பகல்கள்

ஒரு வயோதிபனைப் போல,

அனேக இர‌வுகளில்

பெரும் புயலென

உருக்கொள்கிறது

தனித்து விட‌ப்பட்டதன்

துக்கம்.

பிர‌ளயத்திற்கு

பிறகான ஓர் அந்தியில்

நீ வந்து அமர்கிறாய்

வசிய பூங்கொத்துட‌ன்

இனி எப்போதுமே

நிர‌ப்பமுடியாதபடிக்கு

காலியாகிவிட்ட

என் இருக்கையை உணராது.

(பிரியத்திற்கு...)

நல்லதொரு கவிதை, பகிர்வுக்கு நன்றி ரதி...

இனி எப்போதுமே

நிர‌ப்பமுடியாதபடிக்கு

காலியாகிவிட்ட

என் இருக்கையை உணராது.

காலியாகிப் போன பின்பும் கூட நிரப்ப முடியாததுதான் தனித்து விடப்பட்டதால் வரும் மனநிலையும் அதனூடான வாழ்வும். மிகவும் அருமையான வரிகள்.

Link to comment
Share on other sites

என்னுடைய சந்தேகம் என்ன என்டால் வந்து 20 வருட‌த்திற்கு மேற்பட்டவர்களது உட‌ம்பு இங்கத்தைய நாடுகளுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்திடுமோ?...எது எப்படி இருந்தாலும் எமது மண்,எமது தண்ணீருக்கு என ஒரு சுவை இருக்குது அல்லவா அது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை :unsure:

எனக்கு ஊர்ச் சாப்பாடுதான் பிடித்துக் கொண்டது. நல்ல சுவை.

இங்கு சுப்பர் மார்கெட்டில் மலிவு விலையில் கிடைக்கும் இரசாயனங்கள் ஊட்டப்பட்டு வளர்ந்த கால்நடைகளின் (battery chickens...) இறைச்சி / மரக்கறி ஐ நீண்ட காலம் சாப்பிட்டவர்களுக்கு, அங்குள்ள இயற்கை உணவுகளை உண்ண சுவை தெரியாது. விலை அதிகம் காரணமாக இங்குள்ளவர்கள் அதிகம் இயற்கையாக வளர்க்கப்பட்ட உணவுகளை (Organic food ) உண்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது இடத்தில் இருந்து கொண்டு கொஞ்ச பொம்பிளையள் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்கள் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.தாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் விசேடமாக என்ன எல்லாம் சாப்பிட்டோம்,எப்படி எல்லாம் சாப்பிட்டோம் என்டெல்லாம் பழைய நினைவுகளில் மூழ்கி கதைத்தார்கள் :)...அதற்கு பிறகு திடிரென ஒரு அன்ரி சொன்னார் தான் அண்மையில் ஊருக்குப் போய் வந்ததாகவும் அங்கே போய் தன்னால அங்கத்தைய சாப்பாட்டை சாப்பிட‌ முடியவில்லை என்றும்,சாப்பாடு சுவையே இல்லை என்றும்,ஒன்றுமே தன்னால் பழங்கள் கூட‌ சாப்பிட‌ சுவையாக இல்லை என்றும் சொன்னார் :(.அதை அங்கிருந்த மற்ற பெண்கள் ஆமோதித்தார்கள்.அங்க இறைச்சி எல்லாம் கடி படாமல் காட‌க[hard] இருக்குமாம்.இங்கத்தைய சாப்பாடு பழகின பிறகு அங்கத்தைய சாப்பாடு எதுவுமே சுவையில்லாமல் இருக்குதாம் என தங்களுக்குள் கதைத்தார்கள்...நான் இர‌ண்டு வருட‌த்திற்கு முந்தி அம்மாவின் செத்த வீட்டுக்கு போய் வந்தனான் எனக்கு அங்க தனிய பருப்பும் சோறும் தந்தாலே சாப்பிடுவேன் அவ்வளவு சுவையாக இருக்கும் :D

என்னுடைய சந்தேகம் என்ன என்டால் வந்து 20 வருட‌த்திற்கு மேற்பட்டவர்களது உட‌ம்பு இங்கத்தைய நாடுகளுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்திடுமோ?...எது எப்படி இருந்தாலும் எமது மண்,எமது தண்ணீருக்கு என ஒரு சுவை இருக்குது அல்லவா அது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை :unsure:

வெண்டிக்காய், கத்தரிக்காய், பாகற்காய், முருங்கைக் காய், போன்றவை, அன்று போல இன்றும் நல்லாத்தான் இருக்கின்றன! இஞ்சத்தையான்கள் கிட்டவும் நிக்கேலாது!

மீன், கோழி, ஆடு எல்லாம் அங்கு நல்லாத் தானே இருக்குது!

பல்லு, ஆடத் துவங்கின, பொம்பிளையலா, இருக்கும், ரதி!

கருவாட்டுக் குழம்பும், அரிசிமாப் புட்டும்,......சொர்க்கம்! :D

Link to comment
Share on other sites

.

அன்றும் இன்றும் என்றும் நமக்குப் பிடிச்சது சிவத்தப் புட்டும் முறுங்கக்காய் குழம்பும் தான். முறுங்கக்காய்க் குழம்பு நல்ல திக்காக இருக்க வேண்டும்.

என்னுடைய சின்னம்மா சமைச்சால்.. சிவத்தப் புட்டும் வெந்தயக் குழம்பும். என்ன கைவண்ணமோ..

*****************************************************************

பலதும் பத்தும்..

ஸோ தி இஸ் ரதி ஸ்பெஷல் சாங்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் மருத்துவ குணம் கொண்ட‌ மகத்தான பழம். மனம் கவலையோடும்,உட‌ல் சோர்வோடும் இருந்தால் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உட‌ம்பும்,மனசும் அடுத்த 2 நிமிட‌த்தில் புத்துணர்ச்சி பெறும். ஒரு அளவான வாழைப்பழத்தில் 14 கிராம் சர்க்கரையும் 105 கலோரிகளும் இருக்கும்.வாழைப்பழம் ர‌த்தத்தில் சர்க்கரையின் அளவை சிறிது மட்டுமே அதிகரிக்கின்றது.மேலும் உட‌ம்பின் ஒரு நாளுக்கான விற்றமின் 6 தேவையில் 30% அளிக்கிறது.இது மூளையில் செர‌டோனின் என்ற ஹர்மோனை சுர‌க்க செய்கிறது. நமது மனதை செர‌டோனின் ஹர்மோன் அமைதிப்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்க உதவி செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு போயிருக்கிறேன்.. ஊருக்கு இடையில் போனதில்லை.. :blink:

குத்தரிசி சோறு எனக்கு இப்ப பிடிக்கிறேல்ல.. மற்றபடி மீதி எல்லாம் நல்லாத்தான் இருந்தது.. :rolleyes:

குத்தரிசி சோறு எனக்கும் பிடிக்கிறேல்ல...இசையும்,நானும் சேம் பிளட் :lol:

இரு சிறிலங்காவிற்கு சென்றிருந்தபோதும் ஊருக்குப் போகவில்லை. அங்கு போனால் மரக்கறி சாப்பாடுதான் சாப்பிடுவேன். மச்சம் எல்லாம் முன்னர் அங்கு இருந்தபோது சாப்பிடவில்லை என்பதாலும், இறைச்சி மென்மையாக இல்லாததாலும் (ஓடித் திரியும் கோழிகளில் எங்கே தசை இருக்கின்றது, எல்லாமே எலும்புதானே!), தேங்காய்ப்பால் விட்ட மச்சக்கறிகள் பிடிக்காததாலும் மரக்கறிதான்!

குத்தரிசியையும் கண்ணில் காட்டக்கூடாது.. ஆனால் ஊரில் இருக்கும்போது தகரத்தில் புழுக்கிய அரிசியை சுறங்கை சுறங்கையாக சாப்பிட்டிருக்கின்றேன். அதுதானே அப்போது நொறுக்குத் தீனி!

காலம் செய்தகோலம் எல்லாம் :( ....பசுமதி கொம்பனிக்கு மாறீட்டாங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இல்லாதவர்களின் அளவற்ற கனவு[/size]

அவர்கள் பெருங்கனவுட‌னே

மர‌ணத்தை முத்தமிட்டனர்.

கடைசியில்

அவர்களின் ஞாபகம் நிர‌ப்பிவிட‌ப்பட்ட

கல்லறைகளும் இல்லை.

தாய்மார்கள் தீப்பந்தங்களையும்

தமது பிள்ளைகளுட‌ன் இழந்து விட்டனர்.

மனைவிமார்கள் தங்கள் புன்னகையுட‌ன்

கல்லறைமீதான

தமது சொற்களையும் இழந்து விட்டனர்.

அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிட‌க்கிறது.

இம்முறை எந்த பூக்களும் இல்லை.

இலைகளில் குருதி ஒழுக

பூமர‌ங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

தலைகளை மின் கம்பத்தில் மோதி

இல்லாதவர்களைக் கூப்பிடுகிறது நம்பிக்கையற்ற மனம்.

அவர்களை என்றோ அழித்து விட்டனர்.

கனவை உறிஞ்சி

அவர்களை தின்று முடித்துவிட்டது காலம்.

அவர்கள் மீதெழுதப்பட்ட மர‌ணப்பாட‌ல்

நெருப்பில் கிட‌ந்து பொசுங்குகிறது.

அப்பாவுக்காகத் தீப்பந்தம் ஏந்தி வருகிற குழந்தை

மண்ணைக் கிண்டி

கல்லறையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

ஞாபகத்தின் கடைசி சொத்தையும் அழித்தனர்.

அழுகையின் இருந்த

உரிமையையும் பறித்து எடுத்தனர்.

மனங்களில் கல்லறைகள் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

எங்கோ ஒரு மூலையில் கனவு எரிந்து

கொண்டிருக்கிறது

யாருமற்ற தனித்த நிலத்தில்

வர‌லாற்றின் துயர‌ம் நிர‌ம்பிய எலும்புக்கூடுகள்

எழும்பிச் செல்லுகின்றன.

மண்ணைப் பிர‌ட்டி

சுவர்களை ஆழத்தில் புதைக்கிறார்கள்.

கல்லறைகளின் போர் நட‌ந்து முடிந்துவிட்டது.

சனங்களுட‌ன் அவர்கள்

கல்லறைகளைத் துடைத்தெறிந்து விட்டார்கள்.

நம்பிக்கையின் உறைவிட‌த்தில்

சனங்களை இணைத்து வைத்திருந்த மண்ணில்

இப்பொழுதுதான் இனம் படுகொலை செய்யப்பட்ட

சுட‌லையின் வாச‌னை பெருமெடுப்பில் வீசுகிறது

இந்த கவிதையை யார் எழுதியவர் என்று வாசித்தவர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.வாசிக்காதவர்கள் ஊகியூங்கள் பார்ப்போம்

Link to comment
Share on other sites

யார் எழுதினார்களோ தெரியாது. கண்ணீர்க் கவிதை

Link to comment
Share on other sites

இல்லாதவர்களின் அளவற்ற கனவு

அவர்கள் பெருங்கனவுட‌னே

மர‌ணத்தை முத்தமிட்டனர்.

கடைசியில்

அவர்களின் ஞாபகம் நிர‌ப்பிவிட‌ப்பட்ட

கல்லறைகளும் இல்லை.

தாய்மார்கள் தீப்பந்தங்களையும்

தமது பிள்ளைகளுட‌ன் இழந்து விட்டனர்.

மனைவிமார்கள் தங்கள் புன்னகையுட‌ன்

கல்லறைமீதான

தமது சொற்களையும் இழந்து விட்டனர்.

அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிட‌க்கிறது.

இம்முறை எந்த பூக்களும் இல்லை.

இலைகளில் குருதி ஒழுக

பூமர‌ங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

தலைகளை மின் கம்பத்தில் மோதி

இல்லாதவர்களைக் கூப்பிடுகிறது நம்பிக்கையற்ற மனம்.

அவர்களை என்றோ அழித்து விட்டனர்.

கனவை உறிஞ்சி

அவர்களை தின்று முடித்துவிட்டது காலம்.

அவர்கள் மீதெழுதப்பட்ட மர‌ணப்பாட‌ல்

நெருப்பில் கிட‌ந்து பொசுங்குகிறது.

அப்பாவுக்காகத் தீப்பந்தம் ஏந்தி வருகிற குழந்தை

மண்ணைக் கிண்டி

கல்லறையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

ஞாபகத்தின் கடைசி சொத்தையும் அழித்தனர்.

அழுகையின் இருந்த

உரிமையையும் பறித்து எடுத்தனர்.

மனங்களில் கல்லறைகள் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

எங்கோ ஒரு மூலையில் கனவு எரிந்து

கொண்டிருக்கிறது

யாருமற்ற தனித்த நிலத்தில்

வர‌லாற்றின் துயர‌ம் நிர‌ம்பிய எலும்புக்கூடுகள்

எழும்பிச் செல்லுகின்றன.

மண்ணைப் பிர‌ட்டி

சுவர்களை ஆழத்தில் புதைக்கிறார்கள்.

கல்லறைகளின் போர் நட‌ந்து முடிந்துவிட்டது.

சனங்களுட‌ன் அவர்கள்

கல்லறைகளைத் துடைத்தெறிந்து விட்டார்கள்.

நம்பிக்கையின் உறைவிட‌த்தில்

சனங்களை இணைத்து வைத்திருந்த மண்ணில்

இப்பொழுதுதான் இனம் படுகொலை செய்யப்பட்ட

சுட‌லையின் வாச‌னை பெருமெடுப்பில் வீசுகிறது

இந்த கவிதையை யார் எழுதியவர் என்று வாசித்தவர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.வாசிக்காதவர்கள் ஊகியூங்கள் பார்ப்போம்

இதனை எழுதியவர் தீபச்செல்வன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை எழுதியவர் தீபச்செல்வன்.

ஆம் தீபச்செல்வனால் 22/6/2009 எழுதப்பட்டது...முள்ளி வாய்க்கால் ஞாபகார்த்தமாக எழுதியிருப்பார் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

Link to comment
Share on other sites

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

You are sadly mistaken! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

ட்ரிங்ஸ் எடுக்கிறதற்கு முத்தாய்ப்பு மாதிரி இருக்கு. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qLSICRYOJyo&feature=related

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் பழகி கிட்டால் அது காதலாகுமா?

அது ஆயுள் முழுக்க தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நட‌க்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது

நட்புக்கு ஆண்,பெண் தெரியாது

நட்பு என்னும் நூல் எடுத்து பூமியைக் கட்டி நீ இருத்து

நட்பு நட்பு தான்,காதல் காதல் தான்

காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை

காதலின்றி மனிதனும் இல்லை

நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லியதில்லை

நீயும்,நானும் பழகுறமே காதலாகுமா?

இது ஆயுள் முழுக்க தொட‌ர்ந்தாலும் நட்பு மாறுமா?

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நீயும்,நானும் வெகு நேர‌ம் மனம் விட்டு பேசிச் சிரித்தாலும்

பிரியும் பொழுது சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி?

புரிதலில் காதல் இல்லையடி,பிரிதலில் காதலை சொல்லி முடி

காதல் காதல் தான்...நட்பு நட்பு தான்

நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதையினை சொல்லும்

பிரியமான காதல் கூட‌ பிரிந்த பின் கணமாய் கொல்லும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா கனவுத் தோழா

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

உண்மையிலேயே ஆணும்,பெண்ணும் வயசு வித்தியாச‌ம் இல்லாமல் ஆயுள் பூரா நட்பாக இருக்கலாமா?...அந்த நட்பு அவர்கள்,அவர்களது திருமணத்திற்கு முன் உருவானதாக இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் வெவ்வேறு இட‌த்தில் திருமணம் முடித்தாலும் அந்த நட்புத் தொட‌ர‌ வேண்டும் இது சாத்தியமா?

Link to comment
Share on other sites

மற்றவர்களுக்காக வாழப் பழகிவிட்டவர்கள் நாங்கள்.. :rolleyes: அதனால் நட்பைத் தொடர வேண்டுமானால் தூரத்தையும் தக்கவைக்க வேண்டும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

என்ன அக்காச்சி இப்படிச்சொல்லிப்போட்டியள்.

நீங்கள் தான் யாருடனும் கதைப்பதில்லையே.. :(

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

என்ன அக்காச்சி இப்படிச்சொல்லிப்போட்டியள்.

நீங்கள் தான் யாருடனும் கதைப்பதில்லையே.. :(

எங்களுடைய காதல் கதையே சுவாரசியமானது, பிரியா யாழில் அறிமுகமான போது பிரியா என்ற பேரில் எனக்கு யாரும் நண்பி இல்லை என்று சொல்லி அறிமுகமாகி பேசி நட்பாகி,காதலாகி,இப்போது என் மனைவி. :)

பழகுங்கள் நல்ல நட்புக்கள் கிடைக்கலாம். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அக்காச்சி இப்படிச்சொல்லிப்போட்டியள்.

நீங்கள் தான் யாருடனும் கதைப்பதில்லையே.. :(

என்ன அக்காச்சி இப்படிச்சொல்லிப்போட்டியள்.

நீங்கள் தான் யாருடனும் கதைப்பதில்லையே.. :(

எங்களுடைய காதல் கதையே சுவாரசியமானது, பிரியா யாழில் அறிமுகமான போது பிரியா என்ற பேரில் எனக்கு யாரும் நண்பி இல்லை என்று சொல்லி அறிமுகமாகி பேசி நட்பாகி,காதலாகி,இப்போது என் மனைவி. :)

பழகுங்கள் நல்ல நட்புக்கள் கிடைக்கலாம். :):icon_idea:

ரூட்டுப் போட்டுக் குடுக்கிரியல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரூட்டுப் போட்டுக் குடுக்கிரியல்

ஏதோ என்னாலை முடிஞ்சது நந்து அங்கிள்.. :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன செய்தாலும் இறுதியில் என்னை மட்டும் குற்றவாளி ஆக்கிப் போட்டு தாங்கள் தப்பித்து கொள்கிறார்கள்...இதற்கு என்ன கார‌ணம் நான் ஏமாளியா?...உலகம் என்னை புரிந்து கொள்ளவில்லை என்பதை விட‌ உலகத்தை நான் இன்னும் புரிந்து கொள்ளவில்லையாக்கும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மூன்றெழுத்தில் வாழ்க்கை[/size]

உலகில் உள்ள உயிர் மூன்றெழுத்து

உயிரை இயக்கும் சக்தி மூன்றெழுத்து

சக்தியின் வடிவம் அன்னை மூன்றெழுத்து

அன்னை காட்டும் அன்பு மூன்றெழுத்து

அறிவை வளர்க்கும் பள்ளி மூன்றெழுத்து

பள்ளியிற் கற்கும் கல்வி மூன்றெழுத்து

கல்வியால் கிடைக்கும் பதவி மூன்றெழுத்து

பதவியை சிறப்பிக்கும் இளமை மூன்றெழுத்து

இளமை தரும் மணம் மூன்றெழுத்து

மணத்தால் இணையும் மனைவி மூன்றெழுத்து

மனைவியால் உறவாகும் மழலை மூன்றெழுத்து

மழலைக்கு செலவாகும் பணம் மூன்றெழுத்து

பணத்தினை தேடும் உட‌ல் மூன்றெழுத்து

உட‌ல் சோரும் முதுமை மூன்றெழுத்து

முதுமையின் பின் முடிவு மூன்றெழுத்து

முடிவின் பின் தேவைப்படும் பெட்டி மூன்றெழுத்து

பெட்டியில் அட‌ங்கும் பிணம் மூன்றெழுத்து

பிணம் எடுத்துச் செல்லும் ஊர்தி மூன்றெழுத்து

ஊர்தி செல்லும் இட‌ம் சுட‌லை மூன்றெழுத்து

சுட‌லையில் வைக்கும் கொள்ளி மூன்றெழுத்து

கொள்ளியில் எரித்த அஸ்தி மூன்றெழுத்து

அஸ்தி கரையும் கட‌ல் மூன்றெழுத்து

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில் வாழ்க்கை

உலகில் உள்ள உயிர் மூன்றெழுத்து

உயிரை இயக்கும் சக்தி மூன்றெழுத்து

சக்தியின் வடிவம் அன்னை மூன்றெழுத்து

அன்னை காட்டும் அன்பு மூன்றெழுத்து

அறிவை வளர்க்கும் பள்ளி மூன்றெழுத்து

பள்ளியிற் கற்கும் கல்வி மூன்றெழுத்து

கல்வியால் கிடைக்கும் பதவி மூன்றெழுத்து

பதவியை சிறப்பிக்கும் இளமை மூன்றெழுத்து

இளமை தரும் மணம் மூன்றெழுத்து

மணத்தால் இணையும் மனைவி மூன்றெழுத்து

மனைவியால் உறவாகும் மழலை மூன்றெழுத்து

மழலைக்கு செலவாகும் பணம் மூன்றெழுத்து

பணத்தினை தேடும் உட‌ல் மூன்றெழுத்து

உட‌ல் சோரும் முதுமை மூன்றெழுத்து

முதுமையின் பின் முடிவு மூன்றெழுத்து

முடிவின் பின் தேவைப்படும் பெட்டி மூன்றெழுத்து

பெட்டியில் அட‌ங்கும் பிணம் மூன்றெழுத்து

பிணம் எடுத்துச் செல்லும் ஊர்தி மூன்றெழுத்து

ஊர்தி செல்லும் இட‌ம் சுட‌லை மூன்றெழுத்து

சுட‌லையில் வைக்கும் கொள்ளி மூன்றெழுத்து

கொள்ளியில் எரித்த அஸ்தி மூன்றெழுத்து

அஸ்தி கரையும் கட‌ல் மூன்றெழுத்து

உடல்கள் கலக்கும் கலவி மூன்றெழுத்து

அதனை தூண்டும் காமம் மூன்றெழுத்து

இவற்றை உருவாக்கும் காதல் மூன்றெழுத்து

உயிரைக் காவும் விந்து மூன்றெழுத்து

அதை தாங்கும் பெண்மை மூன்றெழுத்து

இன்னும் எழுதலாம் ஆனால் ரதியிடம் அடிவாங்கத் தயார் இல்லை.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.