Jump to content

பலதும்,பத்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனைவருக்கும் இப் பதிவில் நான் வாசித்த,கேட்ட விடயங்களையும்,எம் மனதில் எழும் கேள்விகள்,சந்தேகங்கள் போன்றவற்றை எழுதப் போகிறேன்...அநேகமான விடயங்கள் புத்தகங்களில் வாசித்ததாவும்,என் மனதில் தோன்றும் சந்தேகங்களாகவும் இருக்கும்...வாசித்து விட்டு என்னைத் திட்டுக :lol:

வெகு நாட்களாக

நிரப்பப்படாமலிருக்கிறது பிரியத்தால் வேயப்பட்ட

என் எதிர் இருக்கை

பருகப்படாமல் வீணாகிறது

உன் வருகையை எதிர்பார்த்து

பகிர்ந்து வைக்கப்படும்

ஒரு கோப்பை தேனீர்

ஒரு கோப்பை மது

[நஞ்சு எப்போதும் பகிந்தளிக்க முடியாததாகவே இருக்கிறது]

நீண்ட‌ என் அழைப்புகள்

ஒரு காத்திருப்பை முன்னிருத்தி

விசும்பலாகி

மெல்லக் கரைகின்றன.

கிழக்கிலிருந்து புறப்பட்டு

மேற்கில் சென்று ஒடுங்குகின்றன

பகல்கள்

ஒரு வயோதிபனைப் போல,

அனேக இர‌வுகளில்

பெரும் புயலென

உருக்கொள்கிறது

தனித்து விட‌ப்பட்டதன்

துக்கம்.

பிர‌ளயத்திற்கு

பிறகான ஓர் அந்தியில்

நீ வந்து அமர்கிறாய்

வசிய பூங்கொத்துட‌ன்

இனி எப்போதுமே

நிர‌ப்பமுடியாதபடிக்கு

காலியாகிவிட்ட

என் இருக்கையை உணராது.

(பிரியத்திற்கு...)

Link to comment
Share on other sites

  • Replies 584
  • Created
  • Last Reply

நேரத்தோடு எதையும் செய்யவேண்டும் என்பதை தெளிவாகச் சொல்கின்றன இந்த வரிகள்..! :rolleyes: ஆனால் ஆண்களால் இலகுவில் கடைப்பிடிக்க முடியாத தகுதிகளுள் இதுவும் ஒன்று..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]எளிய தமிழில் எவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றது. நன்றாக இருக்கின்றது. நன்றி :)

[size=1]ஒரு சிறுகுறிப்பு:

"நாட்கள்" என்று எழுதுவது தவறாகும் மாறாக "நாள்கள்" என்பதே சரியான பதமாகும்.[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்காக நீண்ட காலம் காத்திருந்தால் காத்திருப்பே ஆளைக் கொல்லும். விரைவில் வரவழைக்க வழிவகைகளை ஆராய்திருந்தால் வசிய பூங்கொத்துடன் வந்தவருடன் சந்தோஷமாக இருந்திருக்கலாம்.

எல்லாம் சீராக இருக்கவேண்டும் என்றும் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்றமுடியும் என்ற கொள்கையையுடையவர்கள் (Perfectionists) பல சந்தர்ப்பங்களைத் தவற விடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி;இது ஒரு நல்ல காரியம்.இந்தக் நல்ல காரியத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்காது.ஆனால் இந்த நல்ல காரியத்தை செய்யாமல் போனால் பெரிய பாவம் வந்து சேரும்.அந்தப் பாவம் அவனுடைய வம்சத்தையே பாதிக்கும்.அந்த நல்ல காரியம் எது?

...................................................................................................................................................................................................

கூடவே

இருந்தும்

ஒருநாள் சொல்லாமல்

பிரிகிகின்றேன் என்று

கவலைப்படாதே!

நான்

பிரியும் நேர‌த்தை

சொல்லிவிட்டால்

நீ உன்னுடைய

சந்தோச‌த்தை

இழந்து இடுவாய்.

இப்படிக்கு உன் உயிர்

Link to comment
Share on other sites

முதலாவது கவிதை நெஞ்சை அழுத்தியது ரதி.

(ஒரு கவிதைக்காக ஒருத்தியை அயுளுக்கு வதைக்க வேண்டுமா ?)

**************************************************************************

தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். என்னைவிட சற்று வயது குறைந்தவள் என்று நினைக்கிறேன். சில வருடங்களிற்கு முன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்தாள். மத்தியான சாப்பாட்டு நேரம் எதையாவது பற்றிக் கதைப்போம். ஒரு நாள் மூட் அவுட்டாக்கும் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கதைக்கும் போது

"எந்தவிதமான காரணமுமின்றி நாம் சிலவேளைகளில் கவலையாக‌ இருப்போமல்லவா" என்றேன்.

அவள் இரக்கமாகப் பார்த்தபடியே சொன்னாள் "[size=4]You are feeling lonely[/size]"

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். என்னைவிட சற்று வயது குறைந்தவள் என்று நினைக்கிறேன். சில வருடங்களிற்கு முன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்தாள். மத்தியான சாப்பாட்டு நேரம் எதையாவது பற்றிக் கதைப்போம். ஒரு நாள் மூட் அவுட்டாக்கும் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கதைக்கும் போது

"எந்தவிதமான காரணமுமின்றி நாம் சிலவேளைகளில் கவலையாக‌ இருப்போமல்லவா" என்றேன்.

அவள் இரக்கமாகப் பார்த்தபடியே சொன்னாள் "[size=4]You are feeling lonely[/size]"

ஆ.. அப்புறம்? :D

Link to comment
Share on other sites

ஆ.. அப்புறம்? :D

சிரிப்புத் தாங்க முடியல்லை.

மேட்டருக்கு வராம இடையிலை நிற்பாட்டி ஆர்வத்தைத் தூண்டுகிறார் யுவர் ஆனர். :D

Link to comment
Share on other sites

ஆ.. அப்புறம்? :D

அப்புறம் என்ன ?

சினிமா டைரக்டர் சார் ரெண்டு கையையும் "[size=5]L"[/size] ஷேப்பில விரிச்சு சீன் ஓபனாகிற மாதிரி நினைச்சிட்டு உங்க உங்க கற்பனைய ஓபன் பண்ண வேண்டியது தான். :D

Link to comment
Share on other sites

அப்புறம் என்ன ?

சினிமா டைரக்டர் சார் ரெண்டு கையையும் "[size=5]L"[/size] ஷேப்பில விரிச்சு சீன் ஓபனாகிற மாதிரி நினைச்சிட்டு உங்க உங்க கற்பனைய ஓபன் பண்ண வேண்டியது தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி;இது ஒரு நல்ல காரியம்.இந்தக் நல்ல காரியத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்காது.ஆனால் இந்த நல்ல காரியத்தை செய்யாமல் போனால் பெரிய பாவம் வந்து சேரும்.அந்தப் பாவம் அவனுடைய வம்சத்தையே பாதிக்கும்.அந்த நல்ல காரியம் எது?

...................................................................................................................................................................................................

பதில்;ஒரு மகன்/மகள் தன் வயதான் பெற்றோரைப் பேணிக் காப்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக்கும்,கீரிக்கும் சண்டை வந்தால்,கீரி மட்டும் வெற்றிக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போவதற்குக் காரணம்,பாம்பின் விசம் அதை பாதிக்காதது தான்.எந்த ஒரு விலங்கையும்,பாம்பு கடித்து விட்டால் ரத்த ஓட்டம் உறைந்து நரம்பு மண்டலம் செயலிழந்து போய் உடனே மரணம் தான்.ஆனால்,கீரிக்கு அந்த மரண பயம் கிடையாது.காரணம்,கீரியின் நாக்கில் உள்ள சொர சொரப்பான பகுதியில் "அன்டி ஸ்நேக் வெனம்" என்ற மருத்துவ குணம் கொண்ட எச்சில் சுரக்கிறது.இந்த எச்சில் வீரியம் கீரியின் ரத்த ஓட்டத்திலும் இருப்பதால் பாம்பின் விசம் ரத்தத்தை உறைய வைப்பதில்லை.இது தவிர கீரிகள் பொதுவாகவே புல் பூண்டுகளுக்கு மத்தியில் மறைந்து இருக்கும் ஒரு மூலிகைத் தாவரமான "மங்கூஸ் வேயில்" எனப்படும் சித்தர் காலத்து செடியைக் கண்டு பிடித்து,அதனுடைய வேரை ருசி பார்க்கிறது.அந்த வேரில் நஞ்சு முறிக்கும் வஸ்து இருப்பதே கீரியை பாம்பின் விசம் தாக்காமல் இருப்பதற்கு காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எல்லா மதத்தவர்களும் விரதம் இருக்கிறார்கள்...விரதம் இருப்பது முக்கியமாக கடவுள் பக்திக்காகவும், மனக் கட்டுப்பாட்டுக்காகவும் ஆகும்...தொடர்ந்து விரதம் இருக்கும் போது பசிக்காது ஏனெனில் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் ஆனால் விரதம் முடிந்து அடுத்த நாளே பசிக்கும்...ஒரு விதத்தில் பார்த்தால் விரதம் மூலம் மனக் கட்டுப்பாடு வரும் என்டாலும் இன்னொரு விதத்தில் பார்த்தால் விரதம் இருப்பவர்கள் போன பிறப்பில் ஏதோ பெரிய பாவம் செய்தவர்களாக இருப்பார்கள் என்றும் நினைக்க தோன்றுகிறது...தண்ணீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு இருப்பது அவர்கள் செய்த பாவமா அல்லது மனக் கட்டுப்பாடா?

Link to comment
Share on other sites

பொதுவாக எல்லா மதத்தவர்களும் விரதம் இருக்கிறார்கள்...விரதம் இருப்பது முக்கியமாக கடவுள் பக்திக்காகவும், மனக் கட்டுப்பாட்டுக்காகவும் ஆகும்...தொடர்ந்து விரதம் இருக்கும் போது பசிக்காது ஏனெனில் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் ஆனால் விரதம் முடிந்து அடுத்த நாளே பசிக்கும்...ஒரு விதத்தில் பார்த்தால் விரதம் மூலம் மனக் கட்டுப்பாடு வரும் என்டாலும் இன்னொரு விதத்தில் பார்த்தால் விரதம் இருப்பவர்கள் போன பிறப்பில் ஏதோ பெரிய பாவம் செய்தவர்களாக இருப்பார்கள் என்றும் நினைக்க தோன்றுகிறது...தண்ணீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு இருப்பது அவர்கள் செய்த பாவமா அல்லது மனக் கட்டுப்பாடா?

போன பிறப்பு இருந்தால் தானே அதில் பாவ புண்ணியம் இருப்பதற்கு.

விரதம் உடலாரோக்கியத்துக்கு நல்லது. காரணமில்லாமல் சாப்பிடாமல் இருக்க மனம் இடம் கொடுக்காது. கடவுள் என்ற காரணத்தை முன்வைத்த அதன் பெயரில் பயத்தில் பட்டிணியாக இருந்து உடல் பருமனை குறைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன பிறப்பு இருந்தால் தானே அதில் பாவ புண்ணியம் இருப்பதற்கு.

கடவுளை நம்புவோருக்கு போன பிறப்பும் இருந்தது, மறு பிறப்பும் இருக்கும் பாவ,புண்ணியத்தைப் பொறுத்து

விரதம் உடலாரோக்கியத்துக்கு நல்லது. காரணமில்லாமல் சாப்பிடாமல் இருக்க மனம் இடம் கொடுக்காது. கடவுள் என்ற காரணத்தை முன்வைத்த அதன் பெயரில் பயத்தில் பட்டிணியாக இருந்து உடல் பருமனை குறைக்கலாம்.

இதுவும் உண்மை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்சத் தீவுகள் என்று அழைக்கப்படும் தீவில் லட்சம் தீவுகள் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.அந்தத் தீவில் 27 தீவுகள் மட்டுமே இருக்கின்றன.பிறகு ஏன் அது லட்ச‌த்தீவு என்று அழைக்கப்பட‌ வேண்டும்? 16ம் நூற்றாண்டில் இந்தத் தீவுகள் போர்த்துகீயேச‌ர் வச‌ம் இருந்தன.அதன் பின்னர் கொனார்க் மன்னன் அலிராஜனிட‌ம் இந்தத் தீவுகள் ஒப்படைக்கப்பட்டன.18ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வியாபார‌ம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தத் தீவுகளை கைப்பற்றிக் கொண்டார்கள்.பின்னர் அலிராஜா கேட்டுக் கொண்ட‌தற்கு இணங்க ரூ 1 லட்சத்திற்கு அவருக்கே இந்தத் தீவுகளை விற்றார்கள்.அதிலிருந்து இத் தீவு லட்சத்தீவுகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.

Link to comment
Share on other sites

லட்சத் தீவுகள் என்று அழைக்கப்படும் தீவில் லட்சம் தீவுகள் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.அந்தத் தீவில் 27 தீவுகள் மட்டுமே இருக்கின்றன.பிறகு ஏன் அது லட்ச‌த்தீவு என்று அழைக்கப்பட‌ வேண்டும்? 16ம் நூற்றாண்டில் இந்தத் தீவுகள் போர்த்துகீயேச‌ர் வச‌ம் இருந்தன.அதன் பின்னர் கொனார்க் மன்னன் அலிராஜனிட‌ம் இந்தத் தீவுகள் ஒப்படைக்கப்பட்டன.18ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வியாபார‌ம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தத் தீவுகளை கைப்பற்றிக் கொண்டார்கள்.பின்னர் அலிராஜா கேட்டுக் கொண்ட‌தற்கு இணங்க ரூ 1 லட்சத்திற்கு அவருக்கே இந்தத் தீவுகளை விற்றார்கள்.அதிலிருந்து இத் தீவு லட்சத்தீவுகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.

18 ஆம் நூற்றாண்டில ஒரு லட்சம் ருபாயின்னா எவ்வளவு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்குப் போனால் தான் மன அமைதி கிடைக்கும் என்று உங்களில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.அது தவறு.நீங்கள் மன அமைதியோடு இருப்பதும்,இல்லாததும் உங்கள் கைகளில் இருக்கின்றது.நீங்கள் மன அமைதியோடு,சந்தோசமாக இருக்க வேண்டுமானால் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.எவரையும் குறை கூறாதீர்கள்.குறை கூறுதல் என்பது திட்டுவதற்கு நிகர்.எது நடந்தாலும் அது கடவுளின் விருப்பத்தால் நடக்கிறது.கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவும் நடப்பது இல்லை.ஏதாவது நடந்தது என்டால் அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்று பொருள்.நீங்கள் பொறுமையோடு இருப்பதை சிலர் கையாலாதவர்கள்,கோழை என்று பேசுவார்கள்.அப்படிப் பேசுபவர்கள் பேசி விட்டுப் போகட்டும்.உங்கள் பொறுமைக்கு உரிய பரிசைக் கடவுள் தரும் போது கேலி பேசியவர்கள் புரிந்து கொள்வார்கள் [வாசித்தது]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை பெய்யும் போது ஓக் மர‌த்திற்கு கீழ் நின்டால் இடி நம்மைத் தாக்காது என சொல்லப்படுவதற்கு கார‌ணம் ஓக் மர‌த்திற்கு ஒரே ஒரு ஆணி வேர் மட்டுமே உண்டு. அந்த வேர் ஒரு நேர் கோட்டைப் போல் செங்குத்தாய் பூமிக்குள் இறங்கி இருப்பதால் அந்த மர‌த்தை இடி தாக்கினாலும் அது வேர் மூலமாகப் பூமிக்குள் சென்று வலு இழந்து விடும்

ஓக் மர‌த்தை யாராவது பார்த்து இருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

oaktree2.jpg

oaktree1.jpg

இதில் ஆணிவேர் மாதிரி தெரியவில்லையே?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

oaktree2.jpg

oaktree1.jpg

இதில் ஆணிவேர் மாதிரி தெரியவில்லையே?? :rolleyes:

இது தான் ஓக் மரமா நன்றி இசை :)

நாம் ஒரு நிமிடத்திற்கு 10 தடவை கண் சிமிட்டுகிறோம்.

நாம் ஒரு வார்த்தை பேசும் போது 72 தசைகள் அசைகின்றன.

நம் உடலில் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன.

நம் நாக்கில் 3000 சுவை அரும்புகள் உள்ளன.

மனித மூளை 100 கோடி உயிரணுக்களால் உருவாக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது இடத்தில் இருந்து கொண்டு கொஞ்ச பொம்பிளையள் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்கள் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.தாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் விசேடமாக என்ன எல்லாம் சாப்பிட்டோம்,எப்படி எல்லாம் சாப்பிட்டோம் என்டெல்லாம் பழைய நினைவுகளில் மூழ்கி கதைத்தார்கள் :)...அதற்கு பிறகு திடிரென ஒரு அன்ரி சொன்னார் தான் அண்மையில் ஊருக்குப் போய் வந்ததாகவும் அங்கே போய் தன்னால அங்கத்தைய சாப்பாட்டை சாப்பிட‌ முடியவில்லை என்றும்,சாப்பாடு சுவையே இல்லை என்றும்,ஒன்றுமே தன்னால் பழங்கள் கூட‌ சாப்பிட‌ சுவையாக இல்லை என்றும் சொன்னார் :(.அதை அங்கிருந்த மற்ற பெண்கள் ஆமோதித்தார்கள்.அங்க இறைச்சி எல்லாம் கடி படாமல் காட‌க[hard] இருக்குமாம்.இங்கத்தைய சாப்பாடு பழகின பிறகு அங்கத்தைய சாப்பாடு எதுவுமே சுவையில்லாமல் இருக்குதாம் என தங்களுக்குள் கதைத்தார்கள்...நான் இர‌ண்டு வருட‌த்திற்கு முந்தி அம்மாவின் செத்த வீட்டுக்கு போய் வந்தனான் எனக்கு அங்க தனிய பருப்பும் சோறும் தந்தாலே சாப்பிடுவேன் அவ்வளவு சுவையாக இருக்கும் :D

என்னுடைய சந்தேகம் என்ன என்டால் வந்து 20 வருட‌த்திற்கு மேற்பட்டவர்களது உட‌ம்பு இங்கத்தைய நாடுகளுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்திடுமோ?...எது எப்படி இருந்தாலும் எமது மண்,எமது தண்ணீருக்கு என ஒரு சுவை இருக்குது அல்லவா அது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை :unsure:

Link to comment
Share on other sites

கொழும்பு போயிருக்கிறேன்.. ஊருக்கு இடையில் போனதில்லை.. :blink:

குத்தரிசி சோறு எனக்கு இப்ப பிடிக்கிறேல்ல.. மற்றபடி மீதி எல்லாம் நல்லாத்தான் இருந்தது.. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.