Jump to content

'செல்வி'க்கு சன் நீட்டிப்பு நிம்மதியில் ராதிகா


Recommended Posts

'செல்வி'க்கு சன் நீட்டிப்பு நிம்மதியில் ராதிகா

'மேற்படி' விஷயத்துக்காக சரத்குமாருடன் அதிமுகவுக்குத் தாவிய ராதிகாவின் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்வி மெகா சீரியலுக்கு மேலும் 3 மாத கால நீட்டிப்பை சன் டிவி நிர்வாகம் வழங்கியுள்ளதாம். இதனால் ராதிகா நிம்மதி அடைந்துள்ளார்.

சில கட்டாயங்களுக்காக அதிமுகவில் இணைந்தாலும் திமுகவுக்கு எதிராகவோ அல்லது அதிமுகவுக்காகவோ பிரச்சாரத்தில் ஈடுபட மறுத்துவிட்டார் ராதிகா.

அவரை பிரச்சாரத்துக்கு இழுக்க அதிமுக தரப்பு தந்த நெருக்கடிகள் பலனளிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு நோ என்று சாலிடாக சொல்லிவிட்டார் ராதிகா.

சரத்குமாரின் கட்டாயம் பிளஸ் விவாகரத்து மிரட்டலால் அவருடன் ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக உறுப்பினர் அட்டையை (கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்) வாங்கிக் கொண்டார் ராதிகா என்கிறார்கள்.

அதன் பிறகு வெளியே தலை காட்டவே இல்லை.

சன் டிவியை நம்பி மிகப் பெரிய அளவில் மெகா தொடர்களை தயாரித்து வரும் ராதிகா, இனிமேல் என்ன ஆவார் என்பதுதான் திரையுலகம் மற்றும் சின்னத் திரை வட்டாரத்தில் நிலவி வரும் மிகப் பெரிய கேள்வி.

அவரை ஜெயா டிவியில் முக்கிய போஸ்டில் அமர்த்தப் போகிறார்கள் என்று கூறப்பட்டது.

தனது ரேடான் டிவி நிகழ்ச்சிகளை ஜெயா டிவிக்கு மாற்றிக் கொள்வார் என்றார்கள்.

இந் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ராதிகாவின் நிகழ்ச்சிகளுக்கு தடை போடாமல் ஒளிபரப்பியது சன். மேலும் இப்போது அவரது செல்வி தொடருக்கு மேலும் 3 மாத கால நீட்டிப்பும் கொடுத்து விட்டது.

இதுதொடர்பான கடிதம் ராதிகாவுக்கு அனுப்பப்பட்டு விட்டதாம்.

சன் டிவியின் இந்த முடிவு ராதிகாவுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், நிம்மதியைக் கொடுக்கும் விதமாகவும் உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தனது நிகழ்ச்சிகளை முற்றிலும் நிறுத்திக் கொள்வதில் ராதிகாவுக்கு உடன்பாடு இல்லையாம். அப்படியே ஜெயா டிவிக்குக் கொண்டு போகவும் அவர் விரும்பவில்லையாம்.

கணவரின் கட்டாயத்திற்காகத்தான் ஜெயலலிதாவைப் போய் பார்த்ததாகவும், உண்மையில் சன் டிவியை விட்டு வெளியேற அவர் தயாராக இல்லையாம்.

இதேபோல ராதிகாவின் இன்னொரு நிகழ்ச்சியான தங்க வேட்டையை இன்னும் பிரமாண்டமாக எடுக்குமாறும் ரேடான் டிவியை சன் டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாம்.

விரைவில் புதிய பொலிவுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்கிறார்கள் சின்னத்திரை வட்டாரத்தில்.

முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் மீது ராதிகா காட்டி வந்த தனிப்பட்ட பாசம், அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யாமல் அமைதி காத்து நட்பை கெடாமல் பாதுகாத்தது ஆகியவற்றுக்காக ராதிகாவுக்கு சன் இந்தப் பரிசை தந்துள்ளதாம்.

இந்த பாச வலையைப் பிய்த்துக் கொண்டு ராதிகா வெளியே போவாரா (கொண்டு செல்லப்படுவாரா) அல்லது வலைக்குள்ளேயே இருப்பாரா என்பது போகப் போகத் தெரியும்.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

ராடானை விட்டா சண்டீவிக்கு ஏது கதி, செல்விக்காகத்தான் சனம் சண்டீவியை கூடுதலாக பாக்குதுகள்.

Link to comment
Share on other sites

அப்ப பேசாமல் ராடன் ஒப்பந்தத்தை தொடராமல் ஜெயா தொலைக்காட்சியில் செல்வியைத் தொடரலாமே??

Link to comment
Share on other sites

ராடானை விட்டா சண்டீவிக்கு ஏது கதி, செல்விக்காகத்தான் சனம் சண்டீவியை கூடுதலாக பாக்குதுகள்.

தத்துவம் நெம்பர் 10008.....

சன் டிவியில் இரவு 9.30க்கு செல்வி ஒளிபரப்பப்பட்டு சன் டிவி தரும் தொல்லையால் தான் நான் தினமும் 10 மணிக்கு மேல் வீட்டுக்குப் போகிறேன்....

இதற்கு முன் தங்களால் தான் சன் டிவிக்கு பெருமை என்று கூறி சன் டிவியோடு முறைத்துக்கொண்டு வெளியேறிய ரபி பெர்னார்ட், பாலச்சந்தர், குட்டி பத்மினி, அப்துல் அமீது போன்றவர்கள் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பப்பு வேகாமல் அனாதை ஆனந்தன்களாய் நின்று கொண்டிருக்கிறார்கள்....

பிருந்தன் உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.