Jump to content

இயேசு அழைக்கிறாரும்,நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பி "இயேசு அழைக்கிறார்" என்னும் கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு மதத்தை சேர்ந்தவர்...அவர் ஒரே என்னை தன்ட சபைக்கு ஒருக்கால் வா என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார்.நான் உங்கு வந்து என்னத்தை செய்ய என்று அவரிடம் கேட்டேன் சும்மா ஒருக்கால் வந்து என்ன நடக்குது பார் எனச் சொன்னார்.நானும் இன்டைக்கு வாறன்,நாளைக்கு வாறன் என தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன்.

அண்மையில் கேரளாவில் இருந்து ஒரு பாதிரியார் வந்திருப்பதாகவும்,அவர் வந்து ஜெபித்தால் நல்லது நடக்கும் எனவும் அவர் கொஞ்ச நாள் தான் இருப்பார் என்றும்,அவர் போகும் முன் வந்து ஜெபிக்குமாறும் என்னிட‌ம் சொன்னார்.நானும் பார்த்தேன் அண்மையில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் கார‌ணமாக ஒரு சேன்ஞ் தேவைப்பட்டுது போய்ப் பார்ப்போம் அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கப் போனேன்.

எனது நண்பி தமிழாக இருந்தாலும் அவர் தமிழ் சபைக்கு போறதில்லையாம் ஏன் எனக் கேட்டதிற்கு அந்த தமிழ் சபைக்கு வருபவர்கள் விதம்,விதமாய் சாறி கட்டி நிறைய நகை போட்டுக் கொண்டு வருவார்களாம் தாங்கள் அப்படிப் போகாத படியால் தங்களை வித்தியாச‌மாய் பார்ப்பார்களாம் அதனால் தாங்கள் இந்தியர்கள் நட‌த்தும் இந்த சபைக்கு போகின்றோம் என சொன்னார்கள் ஆனால் அந்த தமிழ் சபையில் 6000 பேர் உறுப்பினர்களாக உள்ளனராம் :(

இனி குறிப்பிட்ட நாளன்று நண்பியோடு சேர்ந்து அவட‌ சபைக்கு போயாச்சு...எண்ணி 30,40 சனம் வந்திச்சுது அதில் பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்கள் அதில் வயது போனவர்கள் அதிகம் இருந்தது ஆச்சரியம் :) ...அந்த சபையின் பாஸ்ட‌ர் வந்து ஒவ்வொருவராக கதைத்து கை குலுக்கினார் அதன் பின்னர் ஆங்கிலத்தில் பிர‌ச‌ங்கம் பைபிளை வாசித்து தொட‌ங்கியது பின்னர் இயேசுவைப் பற்றிய பாட‌ல் வரிகள் திரையில் போக அதைப் பார்த்து சபையில் உள்ளோரும் கையை பெரிதாக தட்டி,தட்டி பாடினார்கள்...அதன் பின்னர் கேர‌ளாவில் இருந்து வந்திருந்த பாதிரியார் அவருக்கு ஆங்கிலம் தெரியாது அவர் மலையாளம் பேசுவார் அவர் தன்ட‌ பிர‌ச‌ங்கத்தை தொட‌ங்கினார்.

தான் மிகுந்த கட்டுப்பாடுகள் உடைய இந்துக் குடும்பத்தில் பிறந்ததாகவும்,காலை எழுந்ததும் கோயிலுக்குப் போய் விபூதி பூசாமல் விட்டால் தனக்கு காலைச் சாப்பாடு கிடைக்காது என்றும் அப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்த தன்னை இயேசு தத்தெடுத்து கொண்டார் என்று அவரைப் பற்றிய சுய புராணம் 1/2 மணித்தியாலத்திற்கு மேலாக நட‌ந்தது அதன் பின்னர் திரும்பவும் எல்லோரும் சேர்ந்து ஆங்கிலத்தில் பாட்டுப் பாட‌ இவர் அதற்கு மேலாக மலையாளத்தில் யேசுவின் நாமத்தால் என சொல்லிப் போட்டு[டிரான்சிலேட் பண்ண ஆங்கிலம் தெரிந்த ஒருவர் இருந்தார்] பின்னர் மலையாளத்தில் மந்திர‌ம் மாதிரி என்னவோ சொல்லத் தொட‌ங்கினார் அதை மொழி மாற்றம் செய்யவில்லை எனக்கு என்னவோ அவர் ஒம் முருகா,ஒம் முருகா என கூப்பிட்ட மாதிரி இருந்தது :lol:

அவர்களுடைய பிரார்த்தனை எல்லாம் முடிந்ததும் தனித் தனியே ஒவ்வொருவராய் கூப்பிட்டு ஆசிர்வதித்தார்...என்னுடைய முறை வந்ததும் நானும் போனேன் தலையில் கை ஆசிர்வதித்து கொண்டு இயேசுவின் நாம‌த்தாலே என சொல்லிக் கொண்டு தனக்குள்ளே என்னவோ முணுமுணுத்தார்.நான் முருகா,முருகா காப்பாற்று முருகா என்று என்ட‌ மனதிற்குள் சொல்லிக் கொண்டு இருந்தேன் :D அவரும் எங்கட‌ மந்திர‌ங்களை சொன்ன மாதிரித் தான் என் மனதிற்குள் பட்டது.

அந்த மாலைப் பொழுது வித்தியாச‌மான பொழுதாக அமைந்தது...கட‌வுள் எல்லோரும் ஒன்று என நினைப்பவர்கள் எங்கட‌ கட‌வுளோட‌ சேர்த்து யேசுவையும் கும்பிட்டு போறது அதற்காக ஏன் மதம் மாற வேண்டும்?...கட‌வுள் இருக்கிறாரோ,இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் சிலை வழிபாட்டை மதம் கொண்டு வந்ததிற்கு கார‌ணம் அதன் மூலம் கட்டுப்பாட்டை கொண்டு வர‌லாம் என்பதால் தான் என்று நினைக்கிறேன்.

அந்த சபையில் எனக்கு பிடித்த விட‌யங்களாக நான் நினைப்பது கூட்டுப் பிரார்த்தனை.எல்லோரும் சேர்ந்து ஒன்றுக்காக வழிபடும் போது அது கிடைக்கும் என்பது எனது கருத்து மற்றது முழங்கால் பிரார்த்தனை ஆனால் அவர்கள் முழங்காலில் இருந்து பிரார்த்தனை செய்யவில்லை அது பற்றி அந்த பாதிரியார் சொன்னார் அநேகமாக கத்தோலிக்கவர்கள் முழங்கால் பிராத்தனை தான் செய்கிறவர்கள்.

இந்த அனுபவம் போதும் இனி மேல் இப்படியான சபைக்கு போறதில்லை என்பது ர‌தியின் தீர்மானம்.

நிர்வாகத்திற்கு இந்த பதிவு மதத்தின் உணர்வை பாதிக்குமாறு இருந்தால் அதை நீக்கி விட‌வும் அதே மாதிரி இந்த சபையை சேர்ந்தவர்கள் யாழில் இருந்தால் உங்கள் மத உணர்வை புண் படுத்தி எழுதியிருக்குது என்று நினைக்காமல் ர‌தியின் அனுபவப் பகிர்வாக நினையுங்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

சந்திக்கு வரும் விடயங்களை சபையில் வைத்து பேசுவதில் தவறில்லை ரதி .எனது கசின் ஒருத்தியும் எப்படியோ உந்த அலையில் அடித்துக் கொண்டு போகப்பட்டு இப்போ உந்தக் கூட்டத்துடன் தான் இருக்கின்றா இலண்டனில்.

பூ பொட்டு நகை எதுவும் போடாது மூளிக்கோலம் தான். ஆகப் பெரிய துக்கம் என்னெண்டால் தனது 18 வயது மகனுக்கு வருத்தம் வந்த போது இயேசு காப்பாத்துவார் என்று கூடியிருந்து பிரசங்கம் செய்து செய்தே ஹாஸ்பிட்டல் கூட்டிப்போகாது மகனை இயேசுவிடம் ? அனுப்பிவிட்டு விட்டாள்.

21 ஆம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட ஆட்கள்..

டிஸ்கி: அவவிற்கு 18 வயதில் மகன் இருந்தான் என்பதற்காக என்னையும் வயது வந்தவர்கள் லிஸ்டில் சேர்த்து தலையில் நரை வைத்துப் பார்க்க வேண்டாம் :D

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி ரதி அக்கா ........இனிமேல் இப்படியான சபைகளுக்கு போவிடாதிர்கள் .......மூளைச்சலவை செய்யும் கூட்டம்

பலர் இப்போ பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் .......மதம் என்ற போர்வையில் தமக்கென்றொரு வட்டம் போட்டு

வாழும் கூட்டம்..........உண்மையில் நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் அந்த மதத்தை பற்றி அறிந்தவன் என்ற வகையில் கூறுகிறேன் ..இவர்கள் காட்டும் இயேசு அதுவல்ல,இவர்கள் காட்டும் மறை அதுவல்ல இவர்கள் காட்ட நினைப்பது சாத்தானையே..........என்னால் அடித்துச்சொல்ல முடியும் ,இவக்ர்களுடன் மதம் ,பைபிள் பற்றி விவாதிக்கவும் முடியும் .....அதில் பாண்டித்தியம் ஓரளவு என்னிடம் உள்ளது ...எனக்கு தெரியாத நான் அறியாத மதத்தை பிழை அல்லது பாவிகள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை .ஆனால் இவர்கள் சொல்வார்கள் ....அதுவே ஓர் சிறிய உதாரணம் ...........ஆனாலும் எனக்கு கவலை எம் பாரம்பரிய மதமான ,எம் கலாச்சாரமதமான இந்து மதத்தில் இருந்து இதை நோக்கி போகும்போதுதான் தாங்கமுடியவில்லை .......சில காலங்களிற்கு முன் இங்கே ஓர் ஐயர் குல பெண்மணி ஜெர்மன் நாட்டிலிருந்து அந்த மதம் சார்பாக எனக்கு போதிக்க முயன்றார் ..அது என்னால் தாங்கமுடியாத வேதனையாக இருந்தது ...

அப்புறம் அவரும் ,அவரது கூட்டமும் துண்டைக்காணோம்,துணியை காணோம் என்று என்னையும் சபித்து விட்டு ஓட்டம் எடுத்தனர்...............இறைவனின் தூதர்கள் மனிதர்களை சபிப்பார்களா ,மன்னிப்பார்களா.......ஆனால் சாத்தானின் தூத்ர்கலாலேயே மனிதனை சபிக்கமுடியும்.........இதுவே எனக்கு தெரிந்த மதம் கற்று தந்த உண்மை.........நன்றி ...........இந்தக்க்ருத்தால் யாராவது மனம் புண்பட்டால் நிச்சயம் இதை நிர்வாகம் அகற்றலாம் ................உனக்கு ஒரு கை இடைஞ்சலாய் இருந்தால் அதை வெட்டி எடுத்துவிடு.........ஏசுபிரான் .நன்றி

Link to comment
Share on other sites

நிர்வாகத்திற்கு இந்த பதிவு மதத்தின் உணர்வை பாதிக்குமாறு இருந்தால் அதை நீக்கி விட‌வும் அதே மாதிரி இந்த சபையை சேர்ந்தவர்கள் யாழில் இருந்தால் உங்கள் மத உணர்வை புண் படுத்தி எழுதியிருக்குது என்று நினைக்காமல் ர‌தியின் அனுபவப் பகிர்வாக நினையுங்கள் :icon_idea:

திரியை இனியபொழுது பகுதியில் இருந்து பேசாப்பொருள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

இந்து மதத்தை விமர்சித்து எழுத யாழில் இடம் இருப்பது போல ஏனைய மதங்களையும் விமர்சிக்கலாம். விமர்சனம்/விவாதம் ஆரோக்கியமான விதத்திலும், நாகரீகமாகவும் இருந்தால் எதையும் பற்றிக் கதைக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து,

Link to comment
Share on other sites

எனக்குத்தெரிந்த ஒரு ஈழத்து அன்ரிக்கு இரண்டு பிள்ளைகள்.. இந்தியாவில் இருந்தார். கணவன் வெளிநாட்டில். பிறகு ரதியைக் கூட்டிக்கொண்டு போனமாதிரி அவவும் போனவ. அதனால் ஈர்க்கப்பட்டு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இப்போது விவாகரத்தாகி தனியே வாழ்கிறார் எனக் கேள்வி. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அந்தக்காலத்திலிருந்தே நடக்கும் ஒன்று.

81 அல்லது 82 இருக்கும்.

எனது மைத்துணரின் கரைச்சல் தாங்கமுடியாது ஒரு நாள் போனேன். மைத்துணருக்கு பெரும் சந்தோசம். எல்லோருக்கும் கை கொடுத்து எல்லோரையும் கொஞ்சி சந்தோசமாக இருந்தேன்.

வெளியில் வந்ததும் மைத்துணர் கேட்டார் எப்படி என்று. இவ்வளவு நாளும் வராமல் விட்டது எவ்வளவு தப்பு. இனி ஒவ்வொரு கிழமையும் வருவேன் என்று சொன்னேன். அப்படியா என்றார் ஆச்சரியத்தில்.

இப்படி வடிவான காய்களை கொஞ்ச முடியுமென்று முன்பே தெரியாதே என்றேன். அடிக்க வந்தார். ஓடி விட்டேன்.

அதன் பின் என்னை அவர் கேட்பதே இல்லை. :lol::D :D

Link to comment
Share on other sites

இந்தக்கூட்டம் ஒரு கெட்ட கூட்டம்.கிட்டவும் வரவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 ம் ஆண்டு நவம்பர் கடைசியோ அல்லது டிசம்பர் தொடக்கமோ சரியாக ஞாபகம் இல்லை நான் பேருந்தில் பயணித்து கொண்டு இருக்கும் போது ஒருவர் ஏறினார்.40 வயதிற்கு மேல் அவருக்கு இருக்கும் பார்த்தாலே தமிழர் எனத் தெரிந்து விடும்...பேருந்தில் ஏறியவர் அதில் இருக்காமல் தொண்டையை செருகிக் கொண்டு உரை ஆற்ற வெளிக்கிட்டார் நான் நல்ல மனிசனனாய் இருக்கிறார் எங்கட பிரச்சனையைப் பற்றி வெள்ளையளுக்கு ஏதோ சொல்லப் போகிறாராக்கும் என்று பார்த்தால் ஆள் தங்கட மதத்தைப் பற்றிக் கதைக்குது...எப்படி இருக்கும் மூஞ்சில பிடிச்சு குத்தோனும் போல இருந்தது ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3] " மதம் பிடித்தவர்கள். " மற்றவர்களை இழுக்க்வேண்டும் . பரப்ப் வேண்டும் என்று நிற்பார்கள். தாய் நாட்டில் கத்தோலிக்கமும் சைவமும் ஒற்றுமையாக் தானே இருந்தோம். பரப்புரை .எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கு .[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் ரதி.

நான் நினைக்கிறேன் இந்து மதத்தவரின் வழிபாட்டிலுள்ள தவறுகளும்,இந்துக் கோயில்களுக்குப் போனாலே எதோ கடவுளின் அனுக்கிரகம் பெற்றவர்போல் ஒவ்வொருவரும் நடப்பதும்,மாற்றங்களை மனித மனங்கள் எதிர் பார்ப்பதால் இலகுவாகக் கிடைக்கக்கூடிய, நம்பக்கூடிய விடயங்களுக்குள் ஆழ்ந்து போகின்றனர் மன வலிமை அற்றோர்.

ஒருநாள் ஞாயிறு காலை ஒன்பதுக்கு எல்லோரும் கூடி இருந்து காலை உணவு உண்டுகொண்டிருக்க கதவு தட்டப்படும் சத்தம்.போன் செய்யாமல் யாரென்று பார்த்தால் வண்கம் நாங்கல் யேசுவிடம் இருந்து வரோம்.உங்கல் நட்டில் நிரய பிரைச்சனை என்று கொன்னைத் தமிழ் கதைத்தபடி ஒரு ஆங்கிலேயப் பெண். எண்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறி கதவைச் சாற்றிவிட்டேன்.அதன்பின் வருவதில்லை. இந்து மதத்தின் சிறப்பே எவரையும் எம்மதத்தில் சேரும்படி கேட்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்

சொல்லுங்கள் சபேசன்! நல்ல கெட்ட விடயங்கள் யார் சொன்னாலும் வரவேற்கத்தக்கதே!

இங்கே திரிகள் திசைமாறி,தடுமாறி போவதைப்பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா?.....எழுதுங்கள்.........தலைப்போடு ஒட்டியதாக இருக்க வேண்டும். :D

Link to comment
Share on other sites

நான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.

நான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது? அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.

மதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.

Link to comment
Share on other sites

எனக்கும் உறவினர்கள் நண்பர்கள் என சிலர் வேதத்தில் குதித்துவிட்டார்கள் .எனது மதிப்பிற்குரிய யாழ் இந்து ஆசிரியர் ஒருவர் உட்பட .இதில் பலர் போவது ஒரே சேர்ச்த்தான்.அந்த சேர்ச் ஆறு மில்லியன் டொலரில் ஒரு தமிழ் பாஸ்டாரால் வாங்கி நிர்வகிக்கபடுகின்றது .அதற்குள் பெரிய மண்டபம் வேறு உண்டு .

ஒரு வேதக்கார உறவினரின் கல்யாண வீட்டிற்கு அங்கு போனால் அந்த சேர்ச் பாஸ்டர் யாழ் இந்துவில் எனது வகுப்பு படித்தவர் (சாவகச்சேரி) பெயர் எழுதவில்லை .என்னை கண்டுவிட்டு உடனே வந்து கதைத்து எல்லா இடமும் வேறு சுற்றிக்காட்டினார் .நேரமிருந்தால் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரச்சொன்னார் . வந்திருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏனெனில் பாஸ்டர் அவர்களுக்கு பெரிய ஒரு ஆள் .

இவர்களுடன் ஒரு முறை பீச்சுக்கு போனேன் .அங்கு அவர்கள் உதைபந்து விளையாட நானும் கலந்து கொண்டேன் .ஒருவரின் கையில் பந்து பட கான்ட் போலென்று ஒருவர் சொல்ல மற்றவர் மறுக்க ஒரே வாக்குவாதம் .நான் கேட்டேன் "என்னப்பா வேதத்திற்கு மாறி கடவுள் நம்பிக்கையுடன் பெரிய இலட்சியவாதிகளாக இருப்பீர்கள் என்று பார்த்தல் ஒரு கான்ட் போலுக்கு இந்த சண்டை பிடித்து ஆளை ஆள் பொய்யன் ஆக்குகின்றிர்கள் என்று " எல்லோர் முகமும் மாறிவிட்டது .

எந்த மதமானாலென்ன எல்லாரும் ஆசா பாசம் உள்ள மனிதர்கள் தான் .

Link to comment
Share on other sites

நான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.

நான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது? அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.

மதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.

பிரச்சனை இவர்கள் மற்ற மதங்கள் சரியில்லை, எம் மதம் தான் மிகச் சரியானது என்று சொல்லித்தான் மத மாற்றத்துக்கு தூண்டுகின்றவர்கள். இங்கு கனடாவில் 3 முறை எம் வீட்டுக்கு வந்து மிகவும் கடுமையாக பேசி அனுப்ப வேண்டி வந்தது. மூன்றாம் தரம், security guard இனையும் கூப்பிட்டு பேச வேண்டி வந்தது (Condo என்பதால் அனுமதி இன்றி யாரும் கட்டிடத்துக்குள் நுழைவது சட்டப்படி தவறு). இவர்களின் போதனைகளில் முக்கால்வாசி மூளைச் சலவை செய்வது தான். அதுவும் ஒருவர் அல்லது ஒரு குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அதை அறிந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு தான். விட மாட்டார்கள்.

எல்லா மதங்களும் ஒன்றுதான், கடவுள் எல்லாம் ஒன்றுதான், எல்லா நம்பிக்கைகளும் மனிதனை வளப்படுத்துவன தான் என்று இவர்களிடம் சொல்லிப் பாருங்கள்...இல்லை தாங்கள் தான் உண்மையானவர்கள் என்றும் தன் நம்பிக்கை மாத்திரமே மானுட விடுதலையைத் தரும் என்றும் தொடங்கி விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் செவி மடுத்துக் கேட்டால் உண்மையாகவே நாங்கள் சாத்தான்களா என்று எமக்கே சந்தேகம் வந்துவிடும் அளவுக்கு கதைப்பார்கள்.

Link to comment
Share on other sites

எனக்கும் இதில் நிறைய அனுபவம் உண்டு அதைத்தான் எனது தொடரான க .கா.கா. வில் அடுத்ததாக எழுத முடிவெடுத்து பைபிளை மார்போடு அணைத்த போலின் என்று முடித்திருந்தேன் நேரம் கிடைக்கும் போது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவர்! தமிழர்!!!!!....ஆரம்பத்தில் ஜெகோவா. குடும்ப சூழ்நிலை காரணமாய் இப்ப யேசுஅழைக்கிறார்.மூத்தவள் கேரளாக்காரனை மாப்பிளையாக்கிட்டாள்.இனி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்!

ஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.

Link to comment
Share on other sites

எனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்!

ஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.

ஆகா.... :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்!

ஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.

நக்கல்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுடைய பிரசங்கம் என்னும் சொல்லிக் கொள்ளும் அரைவாசி நேரமும் எங்கட மதத்தை நக்கலடிக்கிறதில் தான் முடிந்தது...உலகம் அழியப் போகிறது நல்லவர்கள் தப்ப,கெட்டவர்கள் அழிவார்கள் என சொன்னால் பிழையில்லை அதை விடுத்து யேசுவை நம்பும் தங்கட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் தப்புவார்களாம்,நாங்கள் எல்லாம் அழிந்து போவோமாம் :( இது என்ன கதை

பிரச்சனை உள்ள ஆட்களைத் தேர்ந்தெடுத்து தான் மத மாற்றம் செய்வார்கள்...நிறைய தனிய இருக்கும் எங்கட பெடியங்கள் இங்கு போகிறார்களாம்...எங்கட ஆட்கள் தான் ஈசியாய் மதம் மாறுவார்கள் இதே முஸ்லீம்கள் என்டால் மாத்திப் போடுவினமே!

நான் ஊரில் இருக்கும் போது மாதா,அந்தோணியார் கோயிலுக்குப் போறது.இப்பவும் நம்பிக்கை இருக்குது ஆனால் இப்படியான சபை வைத்திருப்பவர்கள் போலி என்பது தான் எனது கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விட.........இவ்வளவுகாலமும் சைவ சமயத்திலையிருந்து தங்கடை காலத்தை வீணாக்கி போட்டினமாமெல்லே......என்ரை அண்ணா சொல்லுறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கல்....

உண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).

சமாதானம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.