Jump to content

"காய்....பேய்காய்"இறுதிப்பாகம் (1&2)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் கமல்காசனை போல் அழகு என்று சொல்லமுடியாது ஆனாலும் ரஜனியைவிட அழகானாவன்.ஒரு பக்கவாட்டில் பார்த்தால் ரஜனியின் சாயல் தெரியும் இதனால் நாங்களும் இதை சொல்லி அவனை உசுப்பேத்தி விடுவம்.அவனுக்கும் மனதில் ரஜனி என்ற நினைப்பு இருந்தது.யாழ்பல்கலைக்கழகத்தில் கணித துறையில் முதலாம் ஆண்டில் பயின்று கொண்டிருந்தான்.ஆங்கில பாடத்திற்க்கு யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஆங்கில டியுசன் வாத்தியிடம் சென்று கொண்டிருந்தான் .உயர்தரம் எடுத்தவுடன் ஆங்கிலம் பேச,எழுத டியுசனுக்கு போறதுதான் அந்த காலத்து வழமை.நானும் அவனுடன் போய் வந்து கொண்டிருந்தேன் .அவன் பல்கலைகழகத்திற்க்கு அருகாண்மையில் அறையில் வாடகைக்கு தங்கியிருந்தான்.படிப்பதற்க்கு அதிக நேரத்தை செலவிடலாம் என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தான். படிப்பதுடன் வேறு சில விடயங்களுக்கும் அது பின்பு உதவியது என்பது நான் அறிந்த உண்மை...

நான் ஆங்கில டியுசனுக்கு போகமுதல் அவனது அறைக்கு செல்வேன்.பின்பு இருவரும் ஒன்றாக டியுசன் வகுப்புக்கு செல்வோம்.ஆங்கில வகுப்புக்கு போகும் பொழுது கொஞ்சம் அதிகமாகவே இருவரும் அலங்காரத்துடன் செல்வோம்.சுரேஸ் ரஜனியின் ஸ்டைலில் தலைமயிரை குழப்பிவிட்டு பெல்போட்டம் காற்சட்டை ,மேற்சட்டையின் ஒரு பட்டனை கழற்றி விட்டிருப்பான்.கையில் 80 பக்க கொப்பியை சுருட்டி வைத்திருப்பான்.

ஆசிரியருக்கு எங்களின் படிப்பின் அக்கறையைவிட அவரின் பணத்தில் அக்கறை அதிகமாக இருந்தது .அதனால் எங்களது சேட்டைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.பெண்கள் இருக்கும் வாங்குக்கு அருகில் அதிகமாக நாங்கள் போய் இருப்போம்.சில பெண்கள் திரும்பிப் பார்ப்பார்கள் ,சிலர் பார்த்தும் பார்க்காத மாதிரியிருப்பார்கள்,சிலர் பார்க்கவே மாட்டார்கள்.புதிதாக அன்று ஒருத்தி வந்திருந்தால் பார்த்தவுடனே ஒரு இது (காதல் என நல்ல எழுத்தாளர்கள்,வர்ணிக்க கூட்டும் ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு இதுதான்)அவளும் எங்களுக்கு பக்கத்தில் இருந்த வாங்கில் வந்திருந்தாள்.

"மச்சான் காய் என்னை பார்க்குதடா"

"எந்த காய்"

"புதுசா வந்த காய்"

"என்னை பார்க்குதோ? உன்னை பார்க்குதோ?"

"என்னைட்ட நீ இப்ப அடி வாங்கப்போறாய் காய் என்னைத்தான் பார்க்குதுடா காயை மடக்கலாம் போல கிடக்குது"

நான் பார்த்தேன் காய் உடனே கீழே குனிந்து கொண்டாள்.பார்த்துகொண்டே இருந்தேன் ,எங்களை பார்ப்பதும் உடனே குனிவதாகவும் இருந்தாள். நான் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.காய் அவனை பார்த்து கொண்டேயிருந்தாள்.இந்த காய் அந்த காயை மடக்கப்போகுது என்று போட்டு நான் எனது படிப்பை கவனிக்க தொடங்கினேன்.படிப்பு எறுகிறமாதிரி தெரியவில்லை.கல்வி தோல்வியை தழுவ சபலம் வெற்றி பெற்றது.

இந்த காயை விழுத்தாமல் விடுவதில்லை என்றவன் அதற்கான முயற்ச்சியிலும் ஈடுபட தொடங்கினான். பார்ப்பதும் சைக்கிளில் பின்னால் செல்வதுமாக காலம் கடந்துகொண்டிருந்தது.

"என்னடா காயை மடக்கலாம் என்றாய் ,காய் மடங்கிறமாதிரி தெரியவில்லை "

" அடுத்த வகுப்பில் பார் "

அடுத்த வகுப்பில் மிகவும் தயக்கத்துடன் அவளது கொப்பியை கேட்டான்,இன்று வீட்டு வேலை இருக்கு அடுத்த முறை தருவதாக அவள் சொன்னாள். அந்த நாட்களில் ஒரு பெடியன் ஒரு பெட்டையுடன் வகுப்பில கதைத்தால் அது பெரிய விடயம் ,இவன் அந்த பெட்டையுடன்(காயுடன்) கதைத்தது தான் தாமதம் சிலர் விசில் அடித்தார்கள் வேறு சிலர் கைதட்டினார்கள்.மச்சான் நீ காயை மடக்கிப்போட்டாயடா என எல்லோரும் சொல்ல அவனுக்கு வெட்கம் வரதொடங்கி விட்டது.

அடுத்த கிழமை வகுப்புக்கு வந்த பொழது ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவில்லை இருவரும் படிப்பில் கவனமாக இருந்தார்கள் . நான் மட்டும் அவர்களை கவனிப்பதில் கவனமாக இருந்தேன்.நான் பார்த்த காயை இந்த காய் மடக்கிபோட்டுதே என்ற அதங்கம்தான்.வகுப்பு முடிந்தவுடன் வாட போவோம் என்று அவனை அழைத்தேன்.வழமையாக வகுப்பு முடிந்தவுடன் அவனது றூமூக்கு போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுத்தான் வீட்டை போவேன்.

"மச்சான் நீ போடாப்பா நான் லெட்டா வாரன் ,அவள் சொன்னவள் பெடியங்களுக்கு முன்னாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எல்லோரும் போன பிறகு கொப்பியை வாங்கிகொண்டு வாரன்"

"இப்ப நீ காய் வெட்டுறாய்"

"கோபிக்காதயடா"

"சரி சரி வாழ்த்துக்கள்"

என கூறியபடி நேராக வீடு சென்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து வீட்டை வந்தான் .அப்ப நாங்கள் ரோட்டில் நின்றுதான் கதைப்போம் ,சகோதரிமார் இருப்பதால் வீட்டினுள்ளே அனுமதி கிடையாது.

மச்சான் காய்யை விழுத்திப்போட்டன். எல்லோரும் போனபிறகு எனிட்ட கொப்பியை தந்து என்னோட கதைச்சது.வீட்டை கொப்பியை கொண்டு போய் பாருங்கோ என்று சொல்லிச்சுது வீட்டை போய் பார்த்தால் என்னை பிடித்திருக்கா? என்று எழுதியிருக்கு மச்சான்.நான் அடுத்த வகுப்புக்கு இதுக்கு பதில் எழுத வேணும் என்றவன் என்னை கூட்டிகொண்டு டீ வாங்கித்தந்தான்.

பின்பு நான் அவனது றூமுக்கு அடிக்கடி போய் வருவேன்.

அவனது காதல் நன்றாகவே சென்று கொன்டிருந்தது. ஒரு நாள் சொன்னான்

"மச்சான் காய் கணக்கில வீக்காம் , டியுசன் சொல்லி தரச் சொல்லி கேட்குதடா"

"சொல்லிக் கொடன்"

"இங்கிலிஸ் டியுசன் முடிந்தவுடன் அப்படியே இங்க கூட்டிக்கொண்டு வந்து டியுசன் எடுக்கப்போரன்"`

.........நாங்களும் தொடருவோமல்ல ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாப் போகுது, புத்தன் தொடருங்கள்!!

ஆனால் உங்கட காலத்து, வார்த்தைப் பிரவாகங்கள் அவ்வளவு, பிடி படுகுதில்லை, புத்தன்! :D :D

அது சரி, 'காய்' எண்டால் என்ன? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p><p>

அது சரி, 'காய்' எண்டால் என்ன? :icon_idea:

யாழ்கள பண்டிதர்கள் விளக்கமளிக்கும்படி அன்பாக கேட்டுகொள்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p><p>

யாழ்கள பண்டிதர்கள் விளக்கமளிக்கும்படி அன்பாக கேட்டுகொள்கிறேன்..

அதுக்கேன், ஏலம் போடுற மாதிரி, இரண்டு தரம் சொல்லுறீங்கள், புத்தன்? :D

Link to comment
Share on other sites

<p><p>

யாழ்கள பண்டிதர்கள் விளக்கமளிக்கும்படி அன்பாக கேட்டுகொள்கிறேன்..

புத்தனது இளமைக்காலம் சரியாக எனக்கு தெரியவில்லை :lol: . பெட்டையளைக் கூப்பிட பாவிக்கும் சங்கேதமொழி " காய் " ஆகும் :D . என்ரைகாலத்தில "சரக்கு "எண்டு சொல்லுவம் :icon_mrgreen:. இப்ப "ஃபிகர் "எண்டு சொல்லக் கேள்வி :D:icon_idea: .

Link to comment
Share on other sites

அடுத்த வகுப்பில் மிகவும் தயக்கத்துடன் அவளது கொப்பியை கேட்டான்,இன்று வீட்டு வேலை இருக்கு அடுத்த முறை தருவதாக அவள் சொன்னாள். அந்த நாட்களில் ஒரு பெடியன் ஒரு பெட்டையுடன் வகுப்பில கதைத்தால் அது பெரிய விடயம் ...........

ஆமா........... ஆமா .............உண்மையில பெரிய விசயம்தான் :lol: . அண்டு முழுக்க பெடி ஒரு மிதப்பில திரியும் :icon_idea:. அதுவும் வகுப்பிலை கெட்டிக்காற பெடியள் எண்டால் சரக்குகளுக்கை போட்டியோ போட்டி ஆர் பெடியை முதலில விழுத்திறதெண்டு . அருமையான , எழிமையான நடையில் இளமையை திருப்பிப் பாக்கவைத்த புத்துவுக்கு எவ்வளவும் பாராட்டலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாப் போகுது, புத்தன் தொடருங்கள்!!

அதுக்கேன், ஏலம் போடுற மாதிரி, இரண்டு தரம் சொல்லுறீங்கள், புத்தன்? :D

புரியலையோ தங்களுக்கு..

எத்தனை தரம் சொன்னாலும் நீங்கள் நித்திரை போல் நடிப்பதை நீறதப்போவதில்லை என்கிறார்........ :lol::D :D

நீங்கள் கேட்ட கேள்விக்குப்பதில் தெரியாது

நான் நல்ல பிள்ளையாக்கும் வகுப்பில் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அக்கா,அண்ணாட்ட கணக்கு படிச்சிட்டு அண்ணாவை கழட்டி விட்டுட்டாவோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இப்ப நீ காய் வெட்டுறாய்"

கனகாலம் உந்த வசனத்தை பாவிச்சு...... எண்டாலும் புத்தன்! நீங்கள் பேய்க்காய்தான் :D

Link to comment
Share on other sites

கதை நல்லா போகுது ,தொடருங்கோ .யார் அந்த ஆங்கில வாத்தி ? சிலவேளை நாமளும் அவரிட்டை வந்திருப்பமல்லோ ?

காய் விழுத்தவும் ஒரு கெட்டித்தனம் வேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா போகுது ,தொடருங்கோ .யார் அந்த ஆங்கில வாத்தி ? சிலவேளை நாமளும் அவரிட்டை வந்திருப்பமல்லோ ?

காய் விழுத்தவும் ஒரு கெட்டித்தனம் வேண்டும் .

காயைக் கொஞ்சம் முத்த விட்டால்த் தானா விழுமே! :D

Link to comment
Share on other sites

எந்த காய் என்று தெரியாமல், எல்லா காய், பிஞ்சுகளுக்கும எரிஞ்சுகொண்டு திரிந்த அந்த நேரத்தில், எங்க நேரம் இருந்தது, பளுதுவில மட்டும் நேரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனது இளமைக்காலம் சரியாக எனக்கு தெரியவில்லை :lol: . பெட்டையளைக் கூப்பிட பாவிக்கும் சங்கேதமொழி " காய் " ஆகும் :D . என்ரைகாலத்தில "சரக்கு "எண்டு சொல்லுவம் :icon_mrgreen:. இப்ப "ஃபிகர் "எண்டு சொல்லக் கேள்வி :D:icon_idea: .

அப்பவும் இளமை இப்பவும் இளமை.....என்ன தாடியும் மீசையும் நரைத்துவிட்டது:D நான் இப்ப தாய்குலம் என்றுதான் சொல்லுறனான்.. நன்றிகள் கோமகன்

கதை நல்லாப் போகுது

நன்றிகள் குருவிகள்..தொடரும் என்று போட்டிட்டன் எப்படி தொடர்வது என்று தெரியவில்லை :D

<p>

கதை நல்லாப் போகுது, புத்தன் தொடருங்கள்!!

நான் நல்ல பிள்ளையாக்கும் வகுப்பில் :icon_idea:

நன்றிகள் விசுகு,கருத்து பகிர்வுக்கு.தொடரும் ஆனால் இன்னும் ஒரு பந்தி மட்டும்தான்.:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

அந்த அக்கா,அண்ணாட்ட கணக்கு படிச்சிட்டு அண்ணாவை கழட்டி விட்டுட்டாவோ :D

அண்ணா அக்காவுக்கு கணக்கு காட்டி காய்வெட்டி போட்டார்? வேறு என்ன?அதுதானே முடிவு கரை சேர்ந்ததுகள் குறைவு..அடுத்த கிறுக்கலில் அக்காவின்ட கதை வரும் அது வரை பொறுமை.....பொறுமை

<p>

கனகாலம் உந்த வசனத்தை பாவிச்சு...... எண்டாலும் புத்தன்! நீங்கள் பேய்க்காய்தான் :D

எல்லா புகழும் அந்த காய்க்கே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா போகுது ,தொடருங்கோ .யார் அந்த ஆங்கில வாத்தி ? சிலவேளை நாமளும் அவரிட்டை வந்திருப்பமல்லோ ?

காய் விழுத்தவும் ஒரு கெட்டித்தனம் வேண்டும் .

நன்றிகள் அர்ஜூன்,,நல்லூரில் இருந்த பிரபல ஆங்கில வாத்தி...நீங்கள் சொன்னது போல காய் விழுத்தவும் ஒரு திறமை வேணும்தான்..:D

Link to comment
Share on other sites

,,நல்லூரில் இருந்த பிரபல ஆங்கில வாத்தி...

ஐயகோ..!

மானிப்பாயில இருந்து வைமன் ரோட்டுக்கு சைக்கிள் உழக்கின்னீங்களோ ??

முதலே எனக்குச் சந்தேகம் அவராத்தான் இருப்பார் என்டு.

"பிதுக்கி விட்டால்" என்ற வார்த்தைய அடிக்கடி பாவிச்சிருப்பாரே ? :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் யாழில் உலாவுவதாக ஒரு கேள்வி?

:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா பேக்காய் போலகிடக்கு அந்த நேரம்... :D தொடருங்கள் மிச்சத்தையும் படிக்கவேணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ..!

மானிப்பாயில இருந்து வைமன் ரோட்டுக்கு சைக்கிள் உழக்கின்னீங்களோ ??

முதலே எனக்குச் சந்தேகம் அவராத்தான் இருப்பார் என்டு.

"பிதுக்கி விட்டால்" என்ற வார்த்தைய அடிக்கடி பாவிச்சிருப்பாரே ? :lol: :lol:

படிக்க வேணும் என்ற ஒரு ஆசைதான் ....சத்தியமா "காய்" பார்க்க போகவில்லை:D

புத்தன் அண்ணா பேக்காய் போலகிடக்கு அந்த நேரம்... :D தொடருங்கள் மிச்சத்தையும் படிக்கவேணும்..

வெகுவிரைவில் முற்றும்...நன்றிகள் சுபேஸ்

Link to comment
Share on other sites

நல்ல தொடருக்கு நன்றிகள் புத்தன்.. :D ஏற்கனவே படித்துவிட்டேன். :unsure: ஆனால் அலுவலகத்தில் இருந்து திருட்டுத்தனமாக வாசித்திருந்ததால் கருத்திட முடியவில்லை..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிதந்தா மணியா படிப்பிப்பேன் என்று அடிக்கடி சொல்பவரா? அந்த ஆங்கிலவாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலம் இனிமையானது. இராணுவ அடக்குமுறை இல்லாவிட்டால் பலரது காதல்கள் கனிந்திருக்கும். சிங்கள, இந்திய இராணுவகாலங்களினால் பலர் உயிரைக் காப்பாற்ற பூமிப்பந்தின் பல்வேறு பகுதிக்கு சிதறி சென்றுவிட்டார்கள். இதனால் காதலன் எங்கே காதலி எங்கே என்று தெரியாமல் தங்களது முதல் காதலுடன் விரும்பாத வாழ்க்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடருக்கு நன்றிகள் புத்தன்.. :D ஏற்கனவே படித்துவிட்டேன். :unsure: ஆனால் அலுவலகத்தில் இருந்து திருட்டுத்தனமாக வாசித்திருந்ததால் கருத்திட முடியவில்லை..! :lol:

இசை நீங்களும் பேய்காய் போல கிடக்கு :Dஆபிசில இருந்து திருட்டுத்தனமா வாசிக்கிறீங்கள் நன்றிகள் இசை

மணிதந்தா மணியா படிப்பிப்பேன் என்று அடிக்கடி சொல்பவரா? அந்த ஆங்கிலவாத்தியார்.

நன்றிகள் நாட்டுக்கட்டை ....அந்தாள் ஒரு" மணிக்காய்"

அந்தக்காலம் இனிமையானது. இராணுவ அடக்குமுறை இல்லாவிட்டால் பலரது காதல்கள் கனிந்திருக்கும். சிங்கள, இந்திய இராணுவகாலங்களினால் பலர் உயிரைக் காப்பாற்ற பூமிப்பந்தின் பல்வேறு பகுதிக்கு சிதறி சென்றுவிட்டார்கள். இதனால் காதலன் எங்கே காதலி எங்கே என்று தெரியாமல் தங்களது முதல் காதலுடன் விரும்பாத வாழ்க்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக்கூடகாதல்,டியுசன் காதல் எல்லாம் ஒரு இது (crush)....அது கனிந்தது குறைவு.....நன்றிகள் கந்தப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.