Jump to content

மூதூர் படுகொலை குறித்து கொழும்பு பதில்கூற வேண்டும்! ஐ.நா விசாரணையை வலியுறுத்தி மனு கையளிப்பு!!


Recommended Posts

ஜெனிவாவில் எதிர்வரும் நவம்பர் 1 ம் திகதி கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளது. ஓர் இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டு, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், மூதூரில் எமது அமைப்பைச் சேர்ந்த 17 மனித நேயப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணையை வலியுறுத்துவதற்கான கடைசிச் சந்தர்ப்பம் இதுவாகும்.

சிறிலங்கா அரசு இவ் யுத்தமீறல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்கும்படி ஐ.நா உறுப்புரிமை நாடுகளை நாம் வேண்டுகிறோம். நியாயமான ஐ.நா விசாரணையை வலியுறுத்தி நாம் முன்னெடுத்துள்ள இந்த முறையீட்டு மனுவில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.

இவ்வாறு கடந்த 2006 ம் ஆண்டு மூதூரில் சிறிலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட 17 மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை குறித்து, பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட Action against Hunger (ACF) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த முறையீட்டை எதிர்வரும் அக்டோபர் 22 ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நாம் கையளிக்க உள்ளோம். எனவே அதற்கு முன் இவ்மனுவில் கையெழுத்திடுமாறு உலக மக்களை வேண்டுகிறோம் என Action against Hunger (ACF) அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மனுவில் கையெழுத்திட இங்கே அழுத்தவும்

http://www.dailymotion.com/video/k7GI7Q0n8mUlUy3oCnj (காணொளி)

இது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ACF வெளியிட்டுள்ள மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2006 ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி, மூதூர் பகுதியில் வெடித்த யுத்தத்தில் பொதுமக்கள் பலரோடு, மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்பின் பணியாளர்களான 17 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இப்பணியாளர்கள் 17 பேரும் அவர்களது அலுவலகத்திலேயே, முழங்காலில் நிற்க வைத்து, தலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது மனிதாபிமான பணியாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான குற்றம் என்பதற்கும் அப்பால், ஒரு மோசமான போர்க்குற்றமாகவே கருதப்படக்கூடியது.

2006 ம் ஆண்டுக்குப் பின்னர், இப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட 3 விசாரணைகளும் எவ்வித பயனையும் ஏற்படுத்தவில்லை. நீதி விசாரணையில் போடப்பட்ட அரசியல் தடைகள், வெளிப்பாட்டுத்தன்மை இல்லாத நிலை போன்ற பல்வேறு அழுத்தங்கள் இந்த விசாரணைகள் பயனின்றிப் போனதற்கான காரணங்கள்.

எனவே, இப் போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டுடன் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என நாம் கருதுகிறோம். பெருமளவில் மக்களை அணிதிரட்டுவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் இவ் யுத்த மீறலுக்குப் பதில்கூறவேண்டி நிலையை ஏற்படுத்த முடியும். இதற்கான சந்தர்ப்பம் இப்போது உருவாகியுள்ளது.

ஜெனிவாவில் எதிர்வரும் நவம்பர் 1 ம் திகதி கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளது. ஒரு இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டு, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், மூதூரில் எமது 17 பணியாளர்கள்மீதும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் குறித்த விசாரணையை வலியுறுத்துவதற்கான கடைசிச் சந்தர்ப்பம் இதுவாகும்.

சிறிலங்கா அரசு இவ் யுத்தமீறல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்கும்படி ஐ.நா உறுப்புரிமை நாடுகளை நாம் வேண்டுகிறோம். நியாயமான ஐ.நா விசாரணையை வலியுறுத்தி நாம் முன்னெடுத்துள்ள இந்த முறையீட்டில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். இந்த முறையீட்டை எதிர்வரும் அக்டோபர் 22 ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நாம் கையளிக்க உள்ளோம்.

மூதூர் மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை குறித்து, சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணையை உலக மக்களாகிய நாம் வலியுறுத்துகிறோம். சக மக்களுக்காக உழைத்த எமது 17 பணியாளர்களைப் படுகொலை செய்தவர்கள் ஒரு நீதியான விசாரணையிலிருந்து தப்பிவிடுவதை நாம் ஏற்க முடியாது.

மூதூர் படுகொலை இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இது தொடர்பான தடயங்களை மறைப்பதையும் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையுமே சிறிலங்கா அரசாங்கம் செய்து வந்துள்ளது. சிறிலங்கா அரசின் இந்த போக்கிற்கு முடிவு கட்டவேண்டியது ஐ.நா வின் பொறுப்பு என நாம் கருதுகிறோம்.

மூதூரில் படுகொலையான எமது தோழர்கள் நினைவாக, இப் படுகொலைகள் மீது உலகின் கவனத்தைத் திருப்ப அனைவரும் முன்வரவேண்டும். படுகொலையாளர்கள் நீதியான ஒரு விசாரணையிலிருந்து தப்புவதை ஏற்க முடியாது என்பதே சர்வதேச சமூகம் இதுதொடர்பில் முன்வைக்கும் செய்தியாக இருக்கவேண்டும்.

இவ்வாறு பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட Action against Hunger (ACF) வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

[size=5]நன்றி, நான் கையொப்பம் இட்டுள்ளேன் :[/size]

[size=5]https://secure.avaaz.org/en/petition/Sri_Lanka_Mettez_les_criminels_de_guerre_derriere_les_barreaux/[/size]

Link to comment
Share on other sites

[size=3]

[size=5]Action Contre La faim frappe fort. Pour sa nouvelle campagne virale, l’ONG a choisi de rappeler aux internautes le massacre des 17 de ses employés il y a 6 ans au Sri Lanka. À travers une séquence sanglante, l’organisation réclame une enquête internationale de l’ONU pour faire la lumière sur les conditions de l’assassinat resté impuni.[/size][/size][size=3]

[size=5]La vidéo-pétition”Justice for Muttur” est l’oeuvre de TBWA Paris. C’est l’acteur Samuel Le Bihan qui a prêté sa voix à cette version française. Pour plus d’infos sur le combat de ACF, rendez-vous sur la page Facebook de l’organisation.[/size][/size]

http://www.minutebuzz.com/2012/10/01/justice-for-muttur-video-sanglante-action-contre-la-faim/

Link to comment
Share on other sites

நன்றி. ஆக 2003 பேர்தானா இதுவரை கையொப்பமிட்டவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையொப்பமிட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

மல்லையூரான் உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை... வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

மூதூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச படையினரால் படுகொலை செய்யப்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் 17 பேரினதும் படுகொலைகள் குறித்து மீண்டும் விசாரணை செய்யுமாறு பிரான்ஸை தளமாகமாகக் கொண்டு இயங்கும் ஏசீஎப் நிறுவனம் சிறிலங்கா அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட “எக்சன் எகெய்ன்ஸ்ட் அங்கர்“ (Action Against Hunger )அமைப்பைச் சேர்ந்த பதினேழு தொண்டர்கள் தொடர்பில் உள்ளுரில் நடத்தப்பட்ட விசாரணையானது சுயாதீனத்தன்மையைக் கொண்டதாகக் காணப்படவில்லை. இந்த விசாரணைகளில் கூட அரசியல் தலையீடுகளும் தடங்கல்களும் காணப்பட்டன.

அதேவேளை, இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் மீது சிறிலங்கா அரசு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் சரியான முறையில் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் இவ்விவகாரம் குறித்து மனித உரிமைப் பேரவையிலும் கேள்வி எழுப்பப்படும்.

மேலும், இந்தப் படுகொலைகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென சிறிலங்கா அரசைக் கோரும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மகஜர் ஒன்றும் தயாரித்து வருகிறோம். இந்த மகஜரின் பிரதி ஒன்றினை நவம்பர் மாத மனித உரிமைப் பேரவை அமர்வில் சமாப்பிக்கவுள்ளோம் என்றும் ஏசீஎப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://thaaitamil.com/?p=34431

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி , மல்லை . நானும் ஒப்பமிட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

[size=5]மண்ணோடு மண்ணாகிப் போகும் மண்டை ஓடுகளாக தமிழர்களின் மனித உரிமைகள். [/size]

[size=5]நீதி சொல்ல நாதியற்ற மனிதர்களாக உலகம்..![/size]

[size=5]மாற்றுவோம் இந்நிலையை... !!![/size]

Link to comment
Share on other sites

நானும் கைநாட்டு வைத்துவிட்டேன்.. நன்றிகள் மல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கைநாட்டு வைத்துவிட்டேன்.. நன்றிகள் மல்லை..

[size=6]2068[/size]

நன்றி சிறி

திண்ணையில் தந்ததற்கு

Link to comment
Share on other sites

நன்றி மல்லை அண்ணா, நேற்றே கையொப்பமிட்டு விட்டேன். திண்ணையில் தந்திருந்தமைக்கு நன்றி. ஒரு லட்சம் கையொப்பத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். மின்னஞ்சல், முகநூல், twitter இல் அனைவரும் share பண்ணுங்கள்....

Link to comment
Share on other sites

ஏற்கனவே மல்லை அண்ணா இந்த திரியில் தமிழில் இணைத்துள்ளார்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109278&#entry808033

Link to comment
Share on other sites

[size=5]ஆமாம், முடிந்தளவு நாம் பிரச்சாரம் செய்யவேண்டும். [/size]

Link to comment
Share on other sites

ஆர்வம் காட்டும் உறவுகளுக்கு நன்றி.

ஆரம்பத்தில் பிளேக்கும் இலங்கையிடம் கேட்டு பார்த்து அலுத்து போயிருக்கும். விசாரணை.

இந்திய நீதிபதி பகவதி கண்காணிக்க முயன்று கைவிட்ட விசாரரணை. இனி இதில் அரசு தலையிடாமல் சரவ்தேச விசாரணை ஆரம்பமாக காலம் வந்துவிட்டது.

ACF இன்னமும் முன்னல் போய் செய்ய நிறைய இருக்கு.

Link to comment
Share on other sites

நன்றி மல்லை அண்ணா, நேற்றே கையொப்பமிட்டு விட்டேன். திண்ணையில் தந்திருந்தமைக்கு நன்றி. ஒரு லட்சம் கையொப்பத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். மின்னஞ்சல், முகநூல், twitter இல் அனைவரும் share பண்ணுங்கள்....

நல்ல விடயம் .கையெழுத்து வைக்க பஞ்சி என்றால் ஒரு சீல் செய்து வைத்திருக்கவும் கேட்கும் போது குத்தி விடலாம் .இவர்கள் இதைதான் காலம் புரா செய்ய போகின்றார்கள் .

Link to comment
Share on other sites

நல்ல விடயம் .கையெழுத்து வைக்க பஞ்சி என்றால் ஒரு சீல் செய்து வைத்திருக்கவும் கேட்கும் போது குத்தி விடலாம் .இவர்கள் இதைதான் காலம் புரா செய்ய போகின்றார்கள் .

அரிசுன்: இன்று இதில் கையொப்பம் இட உங்களுக்கு கையில் வலிக்கிறதாயின், அவசரமில்லை. நாளை போட்டுவிடுங்கள். ACF நேராக ஐ.நா.வுடன் எடுத்து கொள்ள இருக்கிறது. அந்த நேரம் ஐ.நா இலங்கையை கவனத்தில் எடுக்கிறதா அல்லது ACF கவனத்தில் எடுக்கிறதா என்று பார்த்துவிடுங்களேன்.

Link to comment
Share on other sites

நல்ல விடயம் .கையெழுத்து வைக்க பஞ்சி என்றால் ஒரு சீல் செய்து வைத்திருக்கவும் கேட்கும் போது குத்தி விடலாம் .இவர்கள் இதைதான் காலம் புரா செய்ய போகின்றார்கள் .

குறைகளை மட்டுமே சொல்லி வாழ்வில் எதை சாதிக்க போகின்றீர்கள்? வேறென்ன செய்யலாம் என்று சொன்னீர்கள் என்றால் சாதாரண மனிதர்களை விட உயர்ந்து விடுவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இட்டு விட்டன்

Link to comment
Share on other sites

நல்ல விடயம் .கையெழுத்து வைக்க பஞ்சி என்றால் ஒரு சீல் செய்து வைத்திருக்கவும் கேட்கும் போது குத்தி விடலாம் .இவர்கள் இதைதான் காலம் புரா செய்ய போகின்றார்கள் .

[size=4]யார் கையெழுத்து போடு என கேட்பது? பிரான்ஸ் நாட்டு மனித நேய அமைப்பு (தமிழர்கள் அல்ல)

ஏன் கேட்கிறார்கள்? தமது உறுப்பினர்களின் படுகொலைக்கு நியாயம் கேட்டு[/size]

[size=4]ஏன் கையெழுத்து இடல் வேண்டும்? [size=5]தமிழனாக இல்லாவிட்டாலும் மனிதனாக ....[/size][/size]

Link to comment
Share on other sites

இப்பொழுது தான் 2341 கையொப்பம் சேர்ந்துள்ளது. இந்த இணைப்பில் சென்று கையொப்ப எண்ணிக்கையை பார்க்கலாம். (இடைக்கிட தான் update ஆகிறது. )

http://www.avaaz.org/en/petition/?hp

ஏனைய petition ஐ விட எம்முடையது தான் பின்தங்கிய நிலையில் உள்ளது. :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.