Jump to content

ஒடியல் கூழ்


Recommended Posts

சுட்டு தின்று பாரும், இங்கு என்னுடன் வேலை பார்ப்பவர் தினமும் வீட்டில் இருந்து எடுத்து வர கேட்டுக்கொண்டுள்ளேன். சந்தையில் 15 கிழங்கு 20 ரூபாய்.

இப்ப பனங்கிழங்குக் காலமா

அப்ப கண்டிப்பா கடையளில காணலாம். என்ன இங்கு உங்கள் இடம் போல 15 கிழங்கு 20ரூபாய்க்குத் தரமாட்டார்கள் :D

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

வாங்கி அனுப்பினா உதவியா இருக்கும். அனுப்பும் போது நிறைய அனுப்புங்க வெறும் 15 அனுப்பாமல். :P :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று சொன்னால் தான் ஓடுவன் :evil:

ஆனா எனக்கு மூன்று தெரியாது :wink: :oops:

ஆமாம். மூன்றை உமக்குத் தெரியாதது தான்!!

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஆகா இது வேற நடக்குதா எனக்கு சரியான சலிபிடிச்சிற்று மருந்துகள் எல்லாம் குடித்து நிக்கவில்லை ? ஒடியல் Üழ் குடித்தால் சலி பறந்திடுமாம் ? யாரும் காச்சி தனி மடல்முலம் அனுப்புங்களன் இந்:த புறா பாவம் தானே :P

Link to comment
Share on other sites

வாங்கி அனுப்பினா உதவியா இருக்கும். அனுப்பும் போது நிறைய அனுப்புங்க வெறும் 15 அனுப்பாமல். :P :P :wink:

அதானே வெறும் 15 அனுப்பிஎதுக்க கானும் ? இல்லையயா அருவி

அப்படியேஎனக்கும் ஒரு 10 பனங்கிழங்கை நல்லமனசாக அனுப்பி விடுங்கள் கிழங்கை கண்டு கன வருசமாச்சு :cry:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒடியல்மாக் கூழ்

squash_soup.jpg

தேவையான பொருட்கள்

ஒடியல்மா : 1 சுண்டு

பயிற்றங்காய்: 100 கிராம்

மரவள்ளிக்கிழங்கு: 100 கிராம்

கத்தரிக்காய்: 100 கிராம்

பலாக்கொட்டை: 100 கிராம்

கடலை: 100 கிராம்

செத்தல்மிளகாய்: 20 உங்கள் அளவிற்க்கு

மிளகு: 1 தே.கரண்டி

மஞ்சள்: 1 தே,கரண்டி

உள்ளி: 6 பல்லு

பழப்புளி: சிறு உருண்டை

புழுங்கலரிசி: ஒரு பிடி விரும்பினால்

முள்ளில்லாத மீன்வகை: 200 கிராம்

றால்: 100 கிராம்

கணவாய்: 100 கிராம்

நண்டு : 1 அல்லது 2 விருப்பிய அளவு

முருங்கை இலை / முசுட்டை இலை/ பசலி இலை - அளவாக 20 கிராம்

பல்லுப்போல வெட்டப்பட்ட தேங்காய்ச் சொட்டு - 15 அளவாக

உப்பு : அளவிற்க்கு

செய்முறை

- கடலையைக்கழுவி மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். செத்தல்மிள்காய், மிளகு, உள்ளி, மஞ்சள் என்பவற்றிற்கு ஓரளவு நீர் சேர்த்துப் பசுந்தையாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்

- மீன்வகைகளைத் துப்பரவாக்கி கழுவிவைத்துக் கொள்க.

- நண்டைத் துப்பரவுசெய்து இயலுமானவரை கோதை நீக்கி சதைப்பகுதியை எடுத்துக் கொள்க.

-மரவள்ளிக்கிழங்கு, பயிற்றங்காய், கத்தரிக்காய், பாலக்கொட்டை என்பவற்றைத் துப்பரவாக்கி சிறுதுண்டுகளாக வெட்டிக் கழுவி வைத்துக் கொள்க.

- பாத்திரத்தில் பழப்புளியையிட்டு ஒரு தம்ளர் தண்ணீரைச் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்க.

- ஒடியல்மாவைப் வேறு ஒர் பாத்திரத்தில் இட்டு, அளவிற்கு நீர் சேர்த்துக் கூழ்ப்பதமாகக் கரைத்து அரைமணிநேரம் வைத்த பின் எடுத்து ஒரு துணியில் இட்டுப்ப்ழிந்து எடுத்து பிறிதொரு பாத்திரத்தில் போட்டு, அரைத்த கூட்டையும் சேர்த்து, கரைத்துவைத்துள்ள 1 தம்ளர் பழப்புளியையும் விட்டு, அளவிற்கு தண்ணீரும் விட்டு நீர்ப்பதமாக கரைத்து வைக்க்குக.

-சோஸ்பானில் (அளவாக அவியக் கூடிய பாத்திரம்) அதன் அரைவாசிக்கு தண்ணீரைவிட்டுக் கொதிக்கவைத்து, கழுவிவைத்துள்ள மரக்கறிவகைகளை இட்டு அவியவிடவும், 3/4 பதம் அவிந்த பின்பு கடல் உணவு வகைகளை இடவும் ( மீன், இறால்........)

-இரண்டும் நன்றாக அவிந்த பின்பு ஒடியல்மாக்கரைசலை ஊற்றி நன்றாக கரண்டியால்க் கலக்கி

அளவிற்கு உப்பு சேர்த்து தேங்காய்ச் சொட்டும் கலந்து இறக்கவும் ( 8 பேருக்கு இந்த அளவு)

Link to comment
Share on other sites

  • 11 years later...

 ருசியான ஒடியல் கூழ் செய்வது எப்படி?

 

இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒடியல் கூழ் உடலுக்கு வலு சேர்க்கும் உணவாகும்.

இந்த ஒடியல் கூழை அசைவ உணவாகவும் சைவ உணவாகவும் தயாரிக்கலாம்.

ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாகக் காயவைத்துக் கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவைக் (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு. கூழ் பதம் வருவதற்கும், பிரத்தியேகமான கூழ் வாசனைக்கும் ஒடியல் மா கட்டாயம் தேவை.

ஒடியல் கூழை தயாரிக்க தேவையான பொருட்கள்

ஒடியல் மாவு - ஒரு கப்
பயிற்றங்காய் (காராமணி) 100 கிராம்
மரவள்ளி கிழங்கு 100 கிராம்
பலா (கொட்டை) விதை - 100 கிராம்
காய்ந்த மிளாகாய் - 20
மிளகு ஒரு தேனீர் கரண்டி அளவு
மஞ்சள் ஒரு துண்டு
பெரிய வெள்ளைபூண்டு 5 பற்கள்
புளி போதுமான அளவு
புழுங்கல் அரிசி ஒரு பிடி
சிறிதாக வெட்டப்பட்ட தேங்காய் அரை கப்
முருங்கை இலை 10 நெட்டு
உப்பு போதுமான அளவு
சைவ கூழ் தயாரிக்க தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் 100 கிராம்
கடலை 100 கிராம்
பெரிய வாழைக்காய் ஒன்று
அசைவ கூழ் தயாரிக்க
இறால் அல்லது நெத்தலி மீன் 500 கிராம்
இரண்டு நண்டு
பாரை மீன் தலை ஒன்று
சிறிய கருவாடு 50 கிராம்
செய்முறை

காய்ந்த மிளகாய், மிளவு, வெள்ளை பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை நன்கு மிருவதாக அரைத்து கொள்ள வேண்டும்.

மீன், கருவாடு ஆகியவற்றை கழுவி துப்பரவு செய்து வைத்து கொள்ள வேண்டும்.

மரவள்ளி கிழங்கு, பயிற்றங்காய், பலா விதை ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கழுவி வைக்க வேண்டும்.

பாத்திரத்தில் புளியை இட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.

ஒடியல் மாவை பாத்திரத்தில் இட்டு அளவுக்கு தண்ணீர் சேர்த்து கூழ் பதத்திற்கு கரைத்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் ஒரு துணியில் இட்டு பிழிந்து மற்றுமொரு பாத்திரத்தில் போட்டு அரைத்தை கூட்டை சேர்த்து, ஒரு கப் புளி கரைசலை இட்டு அளவாக தண்ணீர் கரைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கப் அளவான அரிசி வேக கூடிய பானையில் அரைவாசி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த பின்னர், கழுவி வைத்துள்ள காய்கறி, முருங்கை இலை, கழுவிய அரிசி ஆகியவற்றை போட்டு அவிய விட வேண்டும்.

இவை முக்கால் பதமாக அவிந்த பின்னர், மீன்,நண்டு, கருவாடு ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விட வேண்டும்.

காய்கறி நன்றாக அவிந்த பின்னர், ஒடியல் மா கரைசலை ஊற்றி நன்றாக அகப்பையால் கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து, வெட்டி வைத்த தேங்காய் கலந்து இறக்கி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

ஒடியல் கூழ் சூடாக இருக்கும்போது குடித்தால் நன்றாக இருக்கும்.

ஒடியல் கூழை சைவமாக தயாரிக்க வேண்டுமாயின் மீன், நண்டு, கருவாடு ஆகியவற்றை தவிர்த்து விட்டு, கடலை, கத்தரிக்காய், வெட்டிய வாழைக்காய், ஏனைய காய்கறிகளுடன் சேர்த்து அவித்து ஒடியல் கூழ் செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். அதாவது கூழில் சேர்க்கப்படும் பொருட்கள், அவை பின் வருமாறு :

முக்கிய குறிப்பு: நீங்கள் கூழ் வைப்பதற்காக தேவைப் படும் பொருள்கள் 1 கி.கிராம் மாவுக்கு, இரண்டு லிட்டர் தண்ணீர் தேவை. இப்படி சரியான அளவில் இரண்டும் இருந்தால்தான் கூழ் சரியான பதத்துக்கு வரும்.

ஒடியல் கூழ் அருந்தும் முறை:

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் பிளா தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும்.

அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும். கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்

 

.Kein automatischer Alternativtext verfügbar.

 
Bild könnte enthalten: Essen
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

 ருசியான ஒடியல் கூழ் செய்வது எப்படி?

 

இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒடியல் கூழ் உடலுக்கு வலு சேர்க்கும் உணவாகும்.

இந்த ஒடியல் கூழை அசைவ உணவாகவும் சைவ உணவாகவும் தயாரிக்கலாம்.

ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாகக் காயவைத்துக் கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவைக் (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு. கூழ் பதம் வருவதற்கும், பிரத்தியேகமான கூழ் வாசனைக்கும் ஒடியல் மா கட்டாயம் தேவை.

ஒடியல் கூழை தயாரிக்க தேவையான பொருட்கள்

ஒடியல் மாவு - ஒரு கப்
பயிற்றங்காய் (காராமணி) 100 கிராம்
மரவள்ளி கிழங்கு 100 கிராம்
பலா (கொட்டை) விதை - 100 கிராம்
காய்ந்த மிளாகாய் - 20
மிளகு ஒரு தேனீர் கரண்டி அளவு
மஞ்சள் ஒரு துண்டு
பெரிய வெள்ளைபூண்டு 5 பற்கள்
புளி போதுமான அளவு
புழுங்கல் அரிசி ஒரு பிடி
சிறிதாக வெட்டப்பட்ட தேங்காய் அரை கப்
முருங்கை இலை 10 நெட்டு
உப்பு போதுமான அளவு
சைவ கூழ் தயாரிக்க தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் 100 கிராம்
கடலை 100 கிராம்
பெரிய வாழைக்காய் ஒன்று
அசைவ கூழ் தயாரிக்க
இறால் அல்லது நெத்தலி மீன் 500 கிராம்
இரண்டு நண்டு
பாரை மீன் தலை ஒன்று
சிறிய கருவாடு 50 கிராம்
செய்முறை

காய்ந்த மிளகாய், மிளவு, வெள்ளை பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை நன்கு மிருவதாக அரைத்து கொள்ள வேண்டும்.

மீன், கருவாடு ஆகியவற்றை கழுவி துப்பரவு செய்து வைத்து கொள்ள வேண்டும்.

மரவள்ளி கிழங்கு, பயிற்றங்காய், பலா விதை ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கழுவி வைக்க வேண்டும்.

பாத்திரத்தில் புளியை இட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.

ஒடியல் மாவை பாத்திரத்தில் இட்டு அளவுக்கு தண்ணீர் சேர்த்து கூழ் பதத்திற்கு கரைத்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் ஒரு துணியில் இட்டு பிழிந்து மற்றுமொரு பாத்திரத்தில் போட்டு அரைத்தை கூட்டை சேர்த்து, ஒரு கப் புளி கரைசலை இட்டு அளவாக தண்ணீர் கரைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கப் அளவான அரிசி வேக கூடிய பானையில் அரைவாசி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த பின்னர், கழுவி வைத்துள்ள காய்கறி, முருங்கை இலை, கழுவிய அரிசி ஆகியவற்றை போட்டு அவிய விட வேண்டும்.

இவை முக்கால் பதமாக அவிந்த பின்னர், மீன்,நண்டு, கருவாடு ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விட வேண்டும்.

காய்கறி நன்றாக அவிந்த பின்னர், ஒடியல் மா கரைசலை ஊற்றி நன்றாக அகப்பையால் கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து, வெட்டி வைத்த தேங்காய் கலந்து இறக்கி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

ஒடியல் கூழ் சூடாக இருக்கும்போது குடித்தால் நன்றாக இருக்கும்.

ஒடியல் கூழை சைவமாக தயாரிக்க வேண்டுமாயின் மீன், நண்டு, கருவாடு ஆகியவற்றை தவிர்த்து விட்டு, கடலை, கத்தரிக்காய், வெட்டிய வாழைக்காய், ஏனைய காய்கறிகளுடன் சேர்த்து அவித்து ஒடியல் கூழ் செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். அதாவது கூழில் சேர்க்கப்படும் பொருட்கள், அவை பின் வருமாறு :

முக்கிய குறிப்பு: நீங்கள் கூழ் வைப்பதற்காக தேவைப் படும் பொருள்கள் 1 கி.கிராம் மாவுக்கு, இரண்டு லிட்டர் தண்ணீர் தேவை. இப்படி சரியான அளவில் இரண்டும் இருந்தால்தான் கூழ் சரியான பதத்துக்கு வரும்.

ஒடியல் கூழ் அருந்தும் முறை:

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் பிளா தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும்.

அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும். கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்

 

.Kein automatischer Alternativtext verfügbar.

 
Bild könnte enthalten: Essen

உண்மையான ஒழுங்கான ஒடியல்கூழ் குடிக்கோணுமெண்டால் கிராமத்தான் வீட்டிலைதான் குடிக்கலாம். ஏனெண்டால் அவனிட்டை தான் எல்லாமரக்கறியளும் தட்டுமுட்டு சாமான் எல்லாம் இருக்கும்.
ஆபீசர்மாருக்கு கூழுக்கு தேள்வையான எல்லா சில்லறைச்சாமான்களும் வாங்க வெளிக்கிட்டால் அவ்வளவுதான் :grin:

சாப்பாட்டு விசயத்திலை கிராமத்தான் அனுபவிக்கிற சந்தோசம் இருக்கெல்லே....சொல்லி வேலையில்லை.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உண்மையான ஒழுங்கான ஒடியல்கூழ் குடிக்கோணுமெண்டால் கிராமத்தான் வீட்டிலைதான் குடிக்கலாம். ஏனெண்டால் அவனிட்டை தான் எல்லாமரக்கறியளும் தட்டுமுட்டு சாமான் எல்லாம் இருக்கும்.
ஆபீசர்மாருக்கு கூழுக்கு தேள்வையான எல்லா சில்லறைச்சாமான்களும் வாங்க வெளிக்கிட்டால் அவ்வளவுதான் :grin:

சாப்பாட்டு விசயத்திலை கிராமத்தான் அனுபவிக்கிற சந்தோசம் இருக்கெல்லே....சொல்லி வேலையில்லை.:cool:

முல்லை இலையும், முசிட்டை இலையும் போடாத....கூழெல்லாம் ஒரு கூழா?:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.