Jump to content

கூடன்குளம் எழுப்பும் பிரச்சினைகள் வி.எஸ். அச்சுதானந்தன் - தமிழில் : டி.வி. பாலசுப்பிரமணியம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூடன்குளம் எழுப்பும் பிரச்சினைகள் வி.எஸ். அச்சுதானந்தன் - தமிழில் : டி.வி. பாலசுப்பிரமணியம்.

15 செப்டம்பர் 2012

lg-share-en.gif

v.s.achuthanandan_CI.jpg

கேரள மாநிலத்தைச் சேர்ந்த வி.எஸ். அச்சுதானந்தன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர். கட்சியின் கொள்கை நிலைபாட்டுக்கு எதிராகக் கூடன்குளம் மக்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை இந்தியச் சூழலில் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குளோபல் தமிழுக்கு அனுப்பப்பட்டுள்ள இக்கட்டுரையை மிகுந்த நன்றியுடன் வெளியிடுகிறோம்.

****

கேரளத்தின் எல்லையிலிருந்து 26 கிலோ மீட்டரும் நமது தலைநகரத்திலிருந்து வெறும் 79 வான்வெளித் தூரத்தில் கூடன்குளத்தில் ஒரு அணுமின் நிலையம் செயல்படப் போகிறது. நமது மின் உற்பத்திதுறைக்கு அணுமின் நிலையம் அவசியமா? அணுமின் நிலையங்களின் செயல்பாடு சுற்றுபுறவாசிகளுக்கும் சுற்றுபுறசூழலுக்கும் பாதிப்பை உண்டு பண்ணுமா? கூடன்குளத்திற்கு அணுமின் நிலையம் பொருத்தமானதா? அங்கு கட்டப்படும் மின் நிலையம் பாதுகாப்பனதா? இவற்றையெல்லாம் பரிசீலினை செய்யவேண்டியது முக்கியமான அவசியமாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் அணுசக்திக்கு மாறும் போது இந்தியாவுக்கு மட்டும் ஒதுங்கி இருக்க முடியுமா? என்கிற வாதம் யாதார்த்த நிலைமைக்கு எதிரானது. இன்று உலகத்திலுள்ள 205 நாடுகளில் 31 நாடுகள் மட்டும் தான் மின் தேவைக்கு அணுமின் நிலையங்களை சார்ந்துள்ளது. உலகத்தின் யூரேன்யம் உற்பத்தியில் 23 சதவீதம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆனால் அங்கு இது வரை அணுமின் நிலையங்கள் தொடங்கப்படவில்லை. உலகத்தின் மின்தேவையில் வெறும் 7 சதவீதம் மட்டுமே அணுசக்தி வழியாக உற்பத்தி செய்யப்படுகிறது. அணுமின் நிலையங்களை தவிர்க்க முடியாது என்கிற வாதம் அடிப்படையற்றது. மிகவும் சிக்கனமான மின்உற்பத்திகான வழிமுறை தான் அணுமின் நிலையங்கள் என்பதும் சரியல்ல. விபத்திற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமுள்ளதும் அதிகப்படியான கட்டுமான செலவுகளை ஏற்படுத்துவதுமான அணுமின் நிலையங்களுக்கு கடன் அளிப்பதில்லை என்று 2007-ல் அமெரிக்காவின் முக்கியமான ஆறு வங்கிகள் அமெரிக்காவின் எரிசக்தித் துறைக்கு தெரிவித்துள்ளன.

இது மிகவும் லாபகரமான மின் உற்பத்திக்கான அடிப்படை என்பது பன்னாட்டு அணு நிறுவனங்களுக்கு உதவிபுரிவதற்காக சொல்லப்படும் ஒரு பொய் பிரசாரமாகும். கர்நாடக மாநில கைகாவில் 230 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு ரியாக்டர்கள் செயல்படுகிறது. இவை ஒவ்வொன்றிருக்கும் அரசு அளித்த ஹெவிவாட்டர் மான்யம் மட்டும் 1450 கோடி ரூபாய் வீதமாகும் என்றாலும் மின்கட்டணம் யூனிட்டிற்கு 2.90 ரூபாயாக உள்ளது. எந்த திட்டத்திற்கும் அதை தொடங்கும்போதுள்ள கட்டுமான செலவு அவசியமான எரிபொருளும் அதன்விலையும் செயல்படும் போது ஜீவராசிகளுக்கும் சுற்றுப்புற சூழக்கும் உண்டாகும் பிரச்சனைகள் விபத்திற்கான சாத்தியங்கள் விபத்துநிவாரணம் கழிவு மேலாண்மை என்பவற்றை கணக்கிலெடுக்க வேண்டும். இவை ஒவ்வொன்றையும் பரிசீலத்தால் ஒன்றில் கூட அணுமின் நிலையங்களுக்கு பாஸ் மார்க் கொடுக்க முடியாது.

அன்றாட செயல்பாடுகளை பரிசீலனை செய்யும் போது வெளியேற்ற முடியாத ஒன்றாகும் நிலையத்தின் செயல்பாட்டிலிருந்து உண்டாகும் அணு கழிவுகள் மற்ற கழிவுகளைப்போல அல்ல அணு கழிவு. அவற்றை அழிக்க ஆக்கப்பூர்வமான முறைகள் எதுவும் நடைமுறையில் இல்லை. அமெரிக்காவிலும் பிரான்சிலும் மின் உற்பத்தி செய்து முடிந்த பல அணுமின் நிலையங்கள் இன்றும் குளிர்விப்பதற்காக வேண்டி செயல்ப்பட்டுவருகிறது. இந்த கழிவுகளை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாததனலாகும்.

அணுமின் நிலையம் செயல்படும் இடங்களில் எல்லாம் இரத்த சோகை தைராய்டு கேன்சர் முதலிய கடுமையான நோய்கள் படர்ந்து பரவுதாக பல்வேறு ஆய்வுகள் தெளிவாக்குகிறது. இந்த ஆய்வுகளை தாமதப்படுத்தும் முயற்சிகள் அணுமின் நிலைய அதிகாரிகளின் பக்கமிருந்து செய்யப்படுகிறது. பன்னாட்டு அணு சக்திநிறுவனம் உலக சுகாதார நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி ஐ.ஏ.இ.ஏ -இன் அனுமதியின்றி அணுகதிர் வீச்சு ஏற்படுத்தும் சுகாதாரப் பிரச்சனைகள் பற்றிய தகவல்களை வெளியிடக்கூடாது. இப்படி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதன் பின்னால் உள்ள நோக்கம் என்ன? புக்கஷிமா அணுவிபத்திற்கு பிறகு பன்னாட்டு கார்பரேட் ஊடகங்கள் வெளிபடுத்தும் மௌனமும் இத்துடன் சேர்த்து வாசிக்க வேண்டும். மூன்றாம் உலக நாடுகளையும் கார்பரேட் ஊடகங்களையும் உலக சுகாதார நிறுவனங்களையும் இந்த அணு நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளது என்கிற குற்றசாட்டு உறுதியானது. இந்த மௌனத்தை சான்றிதழாக மாற்றுகின்ற சில மக்கள் விரோத விஞ்ஞானிகளும் உடன் சேரும் பேரபாயங்கள் மீண்டும் நிகழ்த்தப் படுகிறது.

அணுமின் நிலையங்கள் செயல்பட மிக அதிகமான தண்ணீர் அவசியம். கூடன்குளத்தின் 1000 மெகாவாட் ரியாக்டருக்கு தினமும் 51 இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆறு ரியாக்டர்கள் செயல்பட தொடங்கினால் தினமும் 2.02 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இவ்வளவு அதிகமான தண்ணீரை

மிகவும் சக்தியாக உறிஞ்சும் போது கடலில் மீன் உட்பட உள்ள எல்லா ஜீவராசிகளும் இல்லாமல் போகும் மீன்கள் அணு உலைக்குள் செல்லாமல் இருக்க அரிப்புகள் வைக்கப்பட்டுள்ளதாக வாதம் செய்கின்றனர். இது போன்ற அரிப்புகளில் வேகமாக மோதும் பெரிய மீன்கள் கூட செத்துபோகின்றன என்பது தான் இதுவரையுள்ள அனுபவங்கள் உணர்த்;துகிறது. அணுமின் நிலையத்தின் பயன்பாட்டிற்கு பிறகு அணு கழிவுகளை உட்கொண்ட வெப்ப நீர் அன்றhடம் கடலில் திறந்துவிடப்படுகிறது. 140 டிகிரிக்கு சமீபமுள்ள கடலின் வெப்பநிலை கிட்டதட்ட 13 டிகிரி அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தொரிவிக்கின்றன. இது கடலின் உயிர் சுழற்சியை பாழாக்குகிறது. பின்பு மீன் பிடிப்புத் தொழிலை காலப்போக்கில் இல்லாமலாக்குகிறது. அணுமின் நிலையங்களில் உபயோகிக்கப்படும் எரிபொளை மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதால் அணு கழிவுகள் குறைவாகவே வரும் என்பது கண்களை மூடிக்கொண்டு இருட்டு என்பதற்கு ஒப்பாகும். மறுசுழற்சி செய்வது வெறும் 1 மட்டுமே. 1000 மெகாவாட்ட திறனுள்ள ஒரு அணுமின் நிலையம் ஒரு வருடம் குறைந்தது 30 டன் அணு கழிவுவை வெளியேற்றும் கேன்சரும் மரபு ரீதியான பிறவிக் குறைபாடுகளையும் ஏற்படுத்தும் இந்த தீய பூதத்தைதான் கடலில் தள்ளுகின்றனர்.

அணுமின் நிலையங்களின் விபத்திற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் கையாள்பவரின் கவனக்குறைவு இயந்திர கோளாறு இயற்கை சீற்றம் முதலியவற்றhல் முக்கியமாக விபத்துகள் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தாக்குதல் அபாயங்களையும் கணக்கிலெடுக்க வேண்டும். பிற விபத்துகள் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு என்றhல் அணுமின் நிலைய விபத்துகள் ஒரு தொடர்ச்சியாகும். அதை நமது தலைமுறைகள் அனுபவிக்க வேண்டியது வரும். 1986-ல் ஏப்ரல் 26 அன்று செர்நோபில் அணு விபத்து ஏற்படும் போது 1986- முதல் 2004 வரை 9,85,000- மரணங்கள் இதன் காரணமாக உண்டானதாக புள்ளிவிபரங்கள் தொரிவிக்கின்றன. மனிதனுக்கும் பிராணிகளுக்கும் ஜீவராசிகளுக்கும் நேயணுக்களுக்கும் ஜீன்களில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு பரிதாபமான விஷயம். செர்னேபில் மற்றும் அதற்கு முன் ஏற்பட்ட அயர்லாந்து உள்ள திரீமைல் விபத்தினுடையவும் பாடத்தை கற்று அதன் பிறகு கட்டப்படும் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானது என்பது தான் பின்புள்ள பிரச்சாரம். ஆனால் 2011- மார்ச் 11 அன்று உலகத்தை நடுங்க வைத்து கொண்டு ஜப்பானில் புக்காஷிமாவில் விபத்து ஏற்பட்டது. பூகம்பமும் சுனாமியும் சேர்த்து அங்குள்ள 3 ரியாக்டருகளும் உபயோகித்த அணு கழிவுவை பாதுகாத்து வைத்திருந்த 4 தொட்டிகளும் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தின் ஆழத்தை இனி தான் உலகம் அறியப்போகிறது. காற்று கடலை நோக்கி வீசியதால் 80 அணுபொருட்களும் பசிபிக் கடலில் கலந்ததின் காரணமாக ஜப்பான் என்கிற நாட்டின் மிச்சமீதி இன்று இருக்கிறது. ஆனால் அணு உலையை குளிரூட்ட உபயோகித்த கடல் நீரில் 12,000- டன் நீர் புக்கஷிமா நிலையத்தின் அஸ்திவாரத்தில் கட்டிநிற்கிறது. இதில் 6 சதவீதம் புளூட்டேனியம் அடங்கிய மோக்ஸ் எனப்படும் அணுபொருட்களாகும். ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டு விட பத்து மடங்கு அபாயமானதாகும் இந்த கட்டி நிற்கும் நீர் இதை கடலில் கலக்கும் போது இதன் அபாயம் வரும் தலைமுறைகளும் அனுபவிக்க வேண்டியது வரும்.

மே மாதம் 2012-ல் ஜப்பான் தனது 54 அணுமின் நிலையங்களையும் ஜெர்மனி தனது 17 அணுமின் நிலையங்களையும் இழுத்து மூடி விட்டது. இத்தாலி அணுமின் நிலையங்களே வேண்டாம் என்று வைத்து விட்டது. விபத்துகளிலிருந்து இவர்கள் பாடம் படித்த போது இந்தியா அதை நோக்கி நகருகிறது. அமெரிக்காவின் நலன்களுக்கு அடிபணிந்து அணு ஆயுத ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மன்மோகன்சிங் அரசு புக்காஷிமாவுக்கு பிறகும் கூடன்குளம் திட்டத்துடன் முன்னேறுகிறது. இந்த திட்டத்தில் விபத்து நேரிட்டால் தமிழகத்தின் தென்பாகம் கர்நாடகாவின் தென்பாகம் கேரளமும் இலங்ககையும் கிட்டத்தட்ட பூரணமாக அபாகரமான எல்லைக்குள் வரும். அதனால் தான் கூடன்குளம் என்கிற இடம் இந்த திட்டத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தம் என்பதை பாரிசீலனைச் செய்ய வேண்டியது நம்மை பொறுத்த வரை தவிர்க்க முடியாததாகிறது.

புக்கஷிமாவில் ஏற்பட்டது பூகம்பமும் சுனாமியாலும் ஏற்பட்டதாகும். அல்லாமல் தொழில் நுட்ப கோளாரால் ஏற்பட்டதல்ல என்று அணுமின் நிலையங்களை ஆதரிப்பவர்களை வாதம் செய்கின்றனர். உண்மையில் பூகம்பம் உண்டானதால் ஏற்பட்ட மின்சார பிரச்சனையால் தான் இந்த பேரழிவிற்கான தொடக்கம். கூடன்குளத்தில் மின்சார பிரச்சனை ஏற்பட பூகம்தான் உண்டாக வேண்டுமென்பதில்லை. இந்திய அரசு வெளியீடும் ‘வனரபிலிட்டி அட்லஸ்’ படி கூடன்குளம் பிரதேசம்-3 பூகம்பத்திற்கான சாத்தியமுள்ள பகுதி. அபூவர்மான எரிமலைகள் உள்ள இடமாகும். கூடன்குளத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் மன்னார் கடலில் பாதுகாப்பற்ற நிலையில் எரிமலைகள் உள்ளது. கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் 1998லும் 2008லும் பூமிக்கடியில் பாறைகள் உருகி வடியும் சம்பவங்கள் நடந்துள்ளது. 2004-ல் சுனாமியால் சின்னபின்னமாகப்பட்ட கன்னியாகுமாரி குளச்சல் பகுதிகளுக்கு அருகே தான் கூடன்குளம் உள்ளது. 1986-ல் அணு சக்தித்துறை வெளியீட்ட அறிக்கையின்படி இந்திய கடலோரங்களில் சுனாமிக்கான சாத்ய கூறுகள் இல்லாத்தினால் புயலை மட்டும் கணக்கில் கொண்டால் போதும் என்று சொல்கிறது. 2001-ல் கூடன்குளம் அணுமின் நிலைய கட்டுமானங்கள் தொடங்கியது 2004-ல் சுனாமி தாக்குதலை கணக்கிலெடத்து அரசு தன்னுடைய திட்டத்தை மாற்றியிருக்க வேண்டும். மத்திய அரசு இப்போது சொல்கிறது சுனாமி தாக்குதலையும் கவனத்தில் எடுத்திருந்ததும் அணுமின் நிலையமானது பாதுகாப்பானது தான் என்று இப்போது சொல்கிறது. இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது மக்களுக்கல்ல அணு ஆயுத நிறுவனங்களுக்குத்தான் என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று எதுவும் தேவையா?

கடந்த மூன்று வருடங்களில் அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் மூன்று இடங்களில் மழைநீர் பூமியை பிளந்து கிணறு வடிவத்தில் பூமிக்கடியில் போன நிகழ்வும் நடந்துள்ளது. சுருக்கமாக கூடன்குளம் பிரதேசம் எந்த காரணத்தை கொண்டும் அணுமின் நிலையத்திற்கு பொருத்தாமனதல்ல. இங்கு தான் 600 மெகாவாட் சக்தியுள்ள ஆறு ரியாக்டர்கள் தொடங்கள் உத்தேசித்துள்ளனர். 2001-ல் கட்டதொடங்கிய இரண்டு ரியாக்டர்களும் அணு ஆயுத ஒப்பந்ததிற்கு பிறகு ஒப்பந்ததில் சேர்க்கப்பட்ட நான்கு ரியாக்டர்களும் இதில் உட்படும். இப்போது கட்டுமானம் முடிந்த அணுமின் நிலையங்கள் சுற்றுபுறசூழல் ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் கட்டபட்டவையாகும். ஜெய்தாபூரில் இப்படி ஒரு சுற்றுப்புற சூழல் ஆய்வை இந்த நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதற்கு எதிராக இடதுசாரி கட்சிகள் ஒன்றhக பிரதமருக்கு புகார் அளித்திருந்தனர். அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பு நிலையத்தை நடத்தும் என்.பி.சி.எல் -லுக்குத்தான் என்று சொன்ன பிரதம மந்திரி ஒப்பந்ததில் கையெழுத்திட்ட பிறகு விபத்து உண்டானால் யார் பொறுப்பு என்பதில் சந்தேகத்தை கிளப்புகிறார். அணுமின் நிலையங்களை ஆதாpத்தவர்களுக்கெல்லாம் இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கிய அணு சக்தி ஒப்பந்ததில் பதினேழாம் பிரிவு முழு உத்திரவாதமும் அணுமின் நிலையத்தின் இந்திய ஏஜென்சிகளுக்குத்தான் பொறுப்பு என்று வரையெறுக்கப்பட்டுள்ளளது.

கூடன்குளத்தில் உபயோகிக்கப்படும் வி.வி.இ.ஆர்-100 என்கிற மாடலில் நிலையத்தில் பல தொழில் நுட்ப குறைபாடுகளும் உள்ளதாக அறிக்கையில் உள்ளது. ஆனால் கூடன்குளத்திலுள்ள அணுமின் நிலையத்தின் பிரச்சனை இதிலும் அபூர்வமானது. முக்கியமான பாகங்களில் வெல்டிங் செய்யக்கூடாது என்பது ஒப்பந்ததின் முக்கிய ஷரத்து ஆனால் 6 வெட்டிங்கள் உள்ள ரியாக்டர்கள் செயல்படப்போகிறது. கூடன்குளத்தின் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று யார் சொன்னாலும் இந்த தலைமுறைக்கு கண்முன்னால் பார்த்த பேரழிவுகளை மறக்க முடியாது. பாதுகாப்பு விஷயங்களில் இப்போதுள்ள பொறுப்பின்மையை இந்த அணு நிறுவனங்கள் தொடர்ந்தால் செர்நோபிலும் புக்கஷிமாவும் இங்கே நடக்குமென்று சி.ஏ.ஜ. தனது செயல்பாட்டு தணிக்கையில் முன் அறிவிப்பைச் கொடுக்கிறhர். அதனால் இந்த அணுஆயுத வெடிகுண்டு நமக்கு வேண்டாம். நிலைத்திற்கான செயல்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கேரளமும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய இந்த பெரும் அபாயத்தை புரிந்து கொண்டு கேரள அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும். அணுசமீப பிரதேசங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து எரிபொருளை நிரப்பி திட்டமுமாக தொடர்ந்து முன்னேறும் எண்ணத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் முன்னணியில் நிற்கும் நாடுகள் கூட விபத்து நேர்ந்த பிறகு 54 அணுமின் நிலையங்களை அடைத்து பூட்டி விட்டனர். மற்றவர்களின் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் அணுமின் நிலையங்களுக்கு கொடுக்கும் மானியத்தை சூரியசக்தி மின்சாரத்திற்கு கொடுத்திருந்தால் அது நாட்டின் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண அது போதுமானதாகும். அணுமின் நிலையங்கள் நம்மை சின்னாபின்னாமாக்கிவிடும் என்கிற பீதி அவசியமில்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82939/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.