Jump to content

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

SLMC அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு TNAயை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா? இணைப்பு 2

Tna%20meeting._CI.png

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு இரத்தாகியுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் பம்பலப்பிடியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் காரியலயத்தில் நடைபெற ஏற்பாடகியிருந்தது.

இந்த பேச்சுவார்தைக்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் மாவை சேனாதிராஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்களநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இன்றைய கூட்டம் 7 மணியளிவல் ஆரம்பமாகவிருந்த நிலையில் 7 மணிக்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தந்திருந்தனர்.

எனினும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் எவரும் சென்றிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளா ஹசன் அலியுடன் தொடர்பு கொண்ட போது தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், தாங்களும் அவரின் வருகைக்காக காத்திருப்பதாகவும், தலைவர் வந்தவுடன் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலும் அரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்பு கொண்ட போது அவர்களின் தொலைபேசிகள் செயல் இழக்கச் செய்யப்பட்டிருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தாமும் பேச்சுவார்த்தையை கைவிட்டு மீண்டும் தமது இல்லங்களுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியவில்லையாயின் அறிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பின் முக்கியஸ்த்தர்கள் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு தமிழ்க் கூட்டமைப்பை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா? அல்லது தமிழ்க் கூட்டமைப்பை காத்திருக்க வைத்து கழுத்தறுத்ததா? அல்லது மகிந்த சகோதரர்களி ன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் இருந்தார்களா? என விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக தான் மரியாதை வைத்திருக்கும் வயதிலும் அரசியலிலும் மூத்தவரான இரா சம்பந்தனை காத்திருக்க வைத்து அமைச்சர் ஹக்கீம் அவமதித்தாரா என்ற கேள்விகள் பலரிடையே எழுப்பப்பட்டுள்ளன.

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு?

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்தையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு ஆதரவைக் கோருவதுடன், முதலமைச்சர் பதவி உட்பட மேலும் பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரசின் இறுதி முடிவு நாளைய தினம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் வெளியிடப்படவுள்ளது.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் அங்கு ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சியும் பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு ஆசனத்தையும் சேர்த்து 15 ஆசனங்களை வெற்றிக்கொண்டுள்ளது.

11 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் மொத்தமாக 15 ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ளன.

இந்த நிலையில் 7 ஆசனங்களை வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இரு தரப்புக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

எனினும் முதலமைச்சர் பதவி தமக்கு தேவை என்ற நிலைப்பாட்டுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தமது யோசனையை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் நேற்று இலங்கை அரசதரப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் புதியதொரு ஆட்சியை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அமையவுள்ள கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பொறுப்பொன்றும் மு.காவுக்கு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் வெளிவராத நிiலியல் கூட்டமைப்பினருடனான முஸ்லிம் காங்கிரஸின் இந்த சந்திப்பானது வெறும் கண்துடைப்பு நாடகம் என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82947/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

இன்றைய கூட்டம் 7 மணியளிவல் ஆரம்பமாகவிருந்த நிலையில் 7 மணிக்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தந்திருந்தனர்.

எனினும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் எவரும் சென்றிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளா ஹசன் அலியுடன் தொடர்பு கொண்ட போது தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், தாங்களும் அவரின் வருகைக்காக காத்திருப்பதாகவும், தலைவர் வந்தவுடன் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலும் அரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்பு கொண்ட போது அவர்களின் தொலைபேசிகள் செயல் இழக்கச் செய்யப்பட்டிருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியவில்லையாயின் அறிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்கள் இரத்தத்தில் ஓடும் ஈனப் புத்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்படிப்பட்டவர்களுக்கும் துதிபாட ஒருசில "தமிழர்" உள்ளனர்!

Link to comment
Share on other sites

முஸ்லீம் காங்கிரஸ்; கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய துரோகம் செய்துள்ளது, முஸ்லீம்; மக்களனினதும் தமிழ் மக்களினதும் ஒற்றுமையை உலகுக்கு காட்ட வேண்டிய காலத்தில் முஸ்லீம் காங்கிரஸ் தனது துரோகத்தனத்தை உலகுக்குக் காட்டியுள்ளது, கிழக்கு மாகாணத்தில் அரச எதிர்பு உச்ச நிலையில் இருப்பதை அறிந்து, தான் அரசுக்கு எதிரனவன் என நாடகமாடி, தமிழ் முஸலீம் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்று வென்றபின் வேதாளக் கதைபோல் அரசில் இணைகிறார் இவர் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் வருவதை விரும்பாத ஒரு சுயநலவாதி. தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டுமென்று பேச்சு வந்தால் தனி அலகு கேட்பார். பின்னர் அரச தரப்புக்கு தாவி விடுவார். அமைதியாக இருப்பார். வேதாளத்துக்கும் முருங்கை மரத்துக்கும் என்ன தொடர்போ அதுபோல்தான் ; ரவூப் ஹக்கீமுக்கும் அரசாங்கத்துக்கும் உளன்ள தொடர்பு.

Link to comment
Share on other sites

முசிலிம் காங்கிரசு கிழக்கிலங்கை இசுலாமிய மக்களுக்கு இழைக்கும் துரோகம் அவர்களை கிழக்கில் இருந்தும் வெளியேற்றும்.

Link to comment
Share on other sites

[size=4]சம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை[/size]

பி.பி.சி

[size=3]கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்று தமக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தாங்கள் காத்திருந்தும் தமக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்று தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தனர். இந்தப் பின்னணியிலேயே இரண்டு தரப்பினருக்கும் இடையில் இன்று இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது. நேற்று சனிக்கிழமையும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ்க் கூட்டமைப்பினர், தாம் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக அழைப்பு விடுத்தால் அதுபற்றி ஆராய்ந்து பார்க்கலாம் என்றும் கூட்டமைப்பு கூறியது. கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை கருத்தில்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுக்கவேண்டும் என்று தாங்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு இன்றைய சந்திப்பின்போது சுட்டிக்காட்டியதாக சம்பந்தன் பிபிசியிடம் கூறினார். தமது கருத்துக்களை மிக அவதானமாக ஆராய்ந்துவருவதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறியதாகவும் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாகவும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார். இன்னும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் முஸ்லிம் காங்கிரஸ் முடிவொன்றை எடுக்கும்வரை கால அவகாசம் வழங்குவதே பொருத்தமானது என்று தான் கருதுவதாகவும் சம்பந்தன் மேலும் கூறினார்.[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.