Jump to content

சர்ச்சை: ஆபாசமா?? இலக்கியமா???


Recommended Posts

ஆபாசமாக எழுதுகிறார் என்று கவிஞர் குட்டி ரேவதி மீது விமர்சனம் வைக்கப்படுவது புதிதல்ல. ஆனால் சமீபத்தில் நீட்சி இதழில் வெளியான இவரது “மாமத யோனி” என்ற கவிதை (!) மிக அதிக அளவில் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறது.

kutti-revati-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF.jpg

மாமத யோனி….

தன்னையே காவு கொள்ளும் மாமத யானையென

உடல் வெறித்திருக்கும் யோனி எனது

திசையெங்கும் எழுச்சியுற்று

காமம் கிளர்ந்திருக்கும் பேருயுயிரும் அது

தன் மதச்சாறு பொழிந்த காட்டை

சேற்று நிலத்தை துவம்சம் செய்து திரிகிறது

ஒரு காமக்கிழத்தியைப் போல

சேரிப்பரத்தையர் போல…..

விடலைகளின் புல்வெளிகளை அறுத்துச் சுவைக்கிறது

இந்த ஒற்றை யானையின் மதம் போதும்…

என் மாமத யோனியினுள்ளே

ஒரு யானையைக் கொண்டிருக்கிறேன்

தறிகெட்டோடும் அதன் இச்சைக்கு

இந்த இரவுகள் போதாது… “

-இப்படிப் போகிறது அந்தக் கவிதை.

இது போன்ற தனது கவிதை மீதான விமர்சனங்களுக்கு, “என் உடல், என் கவிதை, என் விருப்பம்” என்கிற ரீதியில் பதில் சொல்வார் குட்டி ரேவதி. அதே நேரத்தில் “அமைப்பு” ரீதியான சிலரிடம் இந்தக் கவிதை குறித்து கருத்து கேட்டு, விவகாரம் ஆக்க நாம் விரும்பவில்லை. சக பெண் கவிஞர்களில் ஒருவரான தமிழரசியிடம், “பெண் கவிஞர்கள் சிலர் மீது ஆபாசமாக எழுதுவதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே” என்று கேட்டோம்.

அவர், “ ஆண் கவிஞர்கள் எழுதுவதை யாரும் கண்டிப்பதில்லை. இதை கவிஞர்கள் என்பதை நீக்கிவிட்டும் சொல்லலாம். ஆண் என்பவன் முதன்மையானவன் என்ற கூற்றையும் முரடன் என்ற எண்ணமும் முதலில் வளர்வது வீட்டுக்குள் இருந்து தான். மணமானதும் பெண் “அவர் திட்டுவார், அவரை கேட்கனும்” என்பதில் தொடங்கி அவள் தாயான பின் “அப்பா திட்டுவார், அப்பாகிட்ட சொல்லாதம்மா,” இப்படி ஆரம்பிக்கிறது ஆணுக்கான முக்கியத்துவம் இதுவே சமூகத்துக்கும் பரவி ஆண் எதை செய்தாலும் சரியாக இருக்கும் ஆண் கோவிப்பான், திட்டுவான், அடிப்பான், மிரட்டுவான் என்ற எண்ணங்களின் தொடர்ச்சி தான்.

%E0%AE%95%E0%AE%B5_%E0%AE%9E%E0%AE%B0_-%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A_.jpg

இதற்கு முழுக்க காரணம் ஆண் அல்ல.தொன்மையான முறைகளும் அதன் தொடர்ச்சியும் தான்.பதவி வகையில் பேசப்படும் போது கலெக்டர், ஆசிரியர், ஓட்டுனர், முதல்வர் என்ற வார்த்தைகள் பொதுவாய் பதவியை குறிக்கும் ஆனால் இதை ஒரு ஆண் தான் வகிக்கும் என்பது மனதின் நிர்ணயம். அல்லாது போனால் பெண் கலெக்டர், பெண் ஆசிரியர் இப்படி பதவிக்கு முன் இனம் குறிப்பிட்டு பெண்ணை தனித்துவப்படுத்தியும் வருவதாலும் ஆண் எதை செய்தாலும் அனுமதிக்கபடுகிறான்.

அவனுக்கு எல்லாம் தெரியும், அவனால் மட்டும் எல்லாம் முடியும் என்ற கருத்தில் ஆழ்ந்து போய் விட்டதாலோ என்னமோ இங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு இணங்க ஆண் கவிஞர்கள் எழுதுவதை யாரும் கண்டிப்பதில்லை. கண்டிக்கலாம் இதை ஆண்கள் எதிர்க்க போவதில்லை., நாம் முன்வருவதில்லை. குறிப்பாக பெண் கவிஞர்கள் சிலர் உடல் சார்ந்து எழுதுவதையும், ஆண் பெண் உறவுகள் குறித்து எழுதுவதையும் கடுமையாக கண்டிக்கிறார்கள் பலர்.

பெண்களை ஒரு கட்டுக்குள் வைத்து வரையறுத்த நம் சமுதாய கட்டமைப்புக்குள் இருந்து இன்னும் பெரும்பாலான ஆண்கள் தங்களை வெளிக்கொணர தயாராக இல்லை .இது ஒரு பரம்பரை குணாதிசயம் போலவே ஆகிவிட்டது. எல்லா ஆண்களும் இந்த வரிசையில் இல்லை.எழுத்துக்களிலும் பாலினத்தை நுகரும் தன்மை இன்றைய காலகட்டதிலும் என்பது வியப்பாய் இருக்கிறது.

Modern-Art-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.jpg

ஆணாகிய நீங்கள் சொல்லும் போது விரசமாய் இல்லாத ஒன்று பெண் ஒருவர் எழுதும் போது அது ஏன் விமர்சனத்துக்கும் கண்டிப்புக்கு உட்படுகிறது?பெண் என்பவள் இப்படி தான் இருக்கவேண்டும் இந்த விதங்களில் செயல் பட்டால் மட்டுமே நீ அழகானவள், இலக்கணமானவள் என்ற எண்ணமும் அவளுக்கு என்று மனதளவில் ஒரு எல்லை வகுத்ததன் விளைவே இது.

இதையெல்லாம் எதிர்த்து துணிந்து பெண் என்பவள் எழுதினால் இந்த குறிப்பிட்ட ஆண்வர்க்கம் உடனே அந்த பெண்ணின் குணம், நடத்தை, என அவளை கீழ்தரமாய் விமர்ச்சிக்கவும் தொடங்கிவிடுகிறது, இங்கு எழுத்துக்கு தேவை என்ன? வாசிப்பவர்களுக்கு பயன்பாடு பொழுது போக்கு, க்ருத்துக்களை அளித்தல், இதில் தேவைக்கு ஏற்ப காதலையும் காமத்தையும் இணைப்பதில் தவறில்லை. உள்ளங்கை நெல்லிக்கனியாய் அல்லாது இலைமறைவு காய் மறைவாய் தருவதும் பெருவதும் தான் யாவர்க்கும் நலம்.

இன்றைய நாகரீக உலகிலும் ஆண் பெண் என்ற பிரிவினை பேத களத்தில் இருப்பது வருந்ததக்கதே.எல்லாவற்றையும் கடந்து விந்தையாய் வியப்பாய் இருப்பது ஆண் பெண் உறவு உடல் சார்ந்த தகவல்கள் எழுதி தான் அறியவேண்டும் என்ற காலகட்டத்தை நாம் என்றோ கடந்துவிட்டோம்.

இதை கண்டிப்பதாயின் முடிவே இருக்காது. அவரவர் உணரவேண்டும் தன் எல்லையை ஒருவர் செய்கிறார் என்று நாம் செய்வதில் இருக்கும் சமூக அக்கறை என்ன? இது ஏதும் அற்ற நிலையில் எல்லாம் அவசியமில்லாததே. ஆண் ஒருவர் எழுதுவாராயின் அது பத்தோடு பதினொன்றாகவும் பெண் எழுதினால் கடும் கண்டனம் விமர்ச்சனம் போராட்டம் ஏன்? அதில் நன்மை என்ன? இதில் தீமை என்ன? பெண்ணாய் அவரவர் தம் இயல்புக்கும் தேவைக்கும் கற்பனை செய்து கொண்டு இப்படி தான் இவ்வளவு தான் என்று எல்லையை வரையறுக்க எவருக்கும் உரிமையில்லை,

துணிந்து எழுதும் பெண் எழுத்தாளர்கள் அதற்குண்டான பாதிப்பை கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பது மறுப்பதற்கில்லை. ஒருவேளை இந்த குறிப்பிட்ட ஆண் வர்க்கம் எப்படி பெண்ணுக்கு ஒரு வரைமுறை வகுத்து அதற்கு மேல் எழுதினால் கண்டிப்பதும் குரல் எழுப்புவதுமாய் இருக்கிறதோ அப்படியே அத்தகைய எழுத்துக்களை ஆண் ஒருவர் எழுதும் போது நாமும் எதிர்த்தே ஆகவேண்டும்.

ஆண் அவன் என்னவேண்டுமானாலும் செய்வான், அவன் ஆம்பிளை நீ பொண்ணு தனியா வரும் போது ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சின்னான்னு இப்படி பெண்ணுக்கு பெண்ணே கூட ஒடுக்கும் நடைமுறை இன்னும் இருக்கிறது.நாம் (ஆண் பெண்)எழுதி தான் பட்டவர்த்தனம் செய்து தான் ஆரோக்கியமற்ற ஒரு நிகழ்வு அறியபடும் என்பதில்லை.ஆண், பெண் என்ற பிரிவினை ஒதுக்கி இருபாலரும் நலிந்து வரும் வாழ்வியலின் அழகை ஆரோக்கியமாக்கலாமே..

இன்று நானும் பலராலும் அறியப்பட்டிருக்கிறேன் என்றால் என் நண்பர்களே காரணம். என்னை பெண் என்று அவர்களோ அவர்களை ஆண் என்று நானோ இனம் பிரிக்கவில்லை. நட்பால் இணைந்தோம், திருத்தம், வடிவமைப்பு, கற்பித்தல் என பல சொல்லி என்னை மேம்படுத்தியதும் அவர்களே..அன்பால் இணைவோம், தேவையிருப்பின் அறிவுறுத்துவோம், இருக்கும் இரு இனத்திற்கு பேதமைகள் தேவையற்றது” என்றார் கவிஞர் தமிழரசி.

வாசகர்களே… உங்கள் கருத்து என்ன.. எழுதுங்களேன்.

- தஞ்சை சுந்தரர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு அருமையான கவிதை, உணர்ச்சிகளை கொட்டி எழுதியுள்ளார், நன்றி மகாராஜா பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரேவதியின் கவிதை நன்றாக இருக்கிறது!

ஆனால், அதற்கும் காட்டையழிக்கும் மதம் கொண்ட ஆண்யானையே உவமையாகின்றது!

பெண் யான,மதம் கொள்வதில்லையா?

அந்த யோனி, ஆக்கத்திற்குப் பயன்படுமாயின், அது கவிதைக்கு வெற்றியே!

இணைப்புக்கு நன்றிகள்,மகாராஜா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரியல் எல்லாம் இப்படியான கவிஞர்களின் புகழீட்டலுக்காக ஆபாசமாகக் காட்டப்படும் விபரீதத்தைத் தவிர.. வேறெந்த ஆபாசமும் இதில் இல்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

ஒரு பெண்ணின் உணர்சிகளை இயல்பாக வடித்திருக்கும் ஒரு அழகான கவிதை.

ஆபாசம் என்பது பார்பவர்களின் மனசை பொறுத்தது.

சத்திர சிகிச்சையில் ஒரு பெண்ணின் நிர்வாண உடம்பை பார்த்து ஒரு நல்ல வைத்தியன் ஆபாசம் கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

ஒரு பெண்ணின் உணர்சிகளை இயல்பாக வடித்திருக்கும் ஒரு அழகான கவிதை.

ஆபாசம் என்பது பார்பவர்களின் மனசை பொறுத்தது.

சத்திர சிகிச்சையில் ஒரு பெண்ணின் நிர்வாண உடம்பை பார்த்து ஒரு நல்ல வைத்தியன் ஆபாசம் கொள்வதில்லை.

[size=5]இதை எழுதியது ஒரு பெண் என்பதைத்தான் ஜீரணிக்கக் கஸ்டப் படுகின்றார்கள் என்று நினைக்கின்றேன்...[/size]. [size=5]ஆணாதிக்கவாதிகள்[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.