Jump to content

யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அவதானிப்பு நிலையம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அவதானிப்பு நிலையம்!

சிறீலங்கா | ADMIN | SEPTEMBER 12, 2012 AT 08:43

இந்தியாவின் பாதுகாப்பு நகர்வுகளை ஒட்டுக்கேட்பதற்காக பாகிஸ்தான் யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் தெ பயனீர் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளையும் தொலைதொடர்புகளையும் ஒட்டுக்கேட்பதற்காகவே இந்த நிலையத்தை பாகிஸ்தானிய படையினர் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ளதாக இ;ந்திய புலனாய்வுப்பிரிவான ரோ சந்தேகம் வெளியிட்டுள்ளது

கடந்த மூன்று நான்கு மாதங்களாக பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை அதிகப்படு;த்தியுள்ளது

இதன்போதே அந்தப்புலனாய்வுப்பிரிவு யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்கேட்டல் நிலையத்தை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வுப்பிரிவு சந்தேகம் கொண்டுள்ளது

ரோவின் இந்த விசாரணை அறிக்கையை அடுத்து நேற்று செவ்வாய்கிழமை புதுடில்லியில் கூடிய இந்திய படைத்தரப்பு உயரதிகாரிகள், இந்த விடயத்தை இலங்கையின் உயர்மட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர்

பாகிஸ்தானின் இந்த நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறி;த்து இலங்கை அதிகாரிகள் விசாரணையை நடத்தவேண்டும் என்று கோருவதென்று இந்த சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டது

அத்துடன் ஒரு நாட்டுக்கு எதிராக இன்னும் ஒருநாட்டின் எல்லையை பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது விமர்சனம் முன்வைக்கப்பட்டது

சீனா, ஏற்கனவே அந்தமான் தீவுகளின் கப்பல் நகர்வுகளை அவதானிப்பதற்காக கொக்கோ தீவுகளில் இவ்வாறான அவதானிப்பு நிலையத்தை அமைத்திருந்ததையும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

இந்தநிலையில் இந்திய படைகளின் நகர்வுகளை அவதானிப்பதற்காக பாகிஸ்தானின் புலனாய்வுப்பிரிவினர், யாழ்ப்பாணத்தி;ல் உள்ள இ;;ந்திய கரையோரப்பகுதிகளிலேயே அவதானிப்பு நிலையத்தை அமைத்துள்ளதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

இதன் மூலம், விசாகப்பட்டிணத்தில் உள்ள ரஸ்யாவின் ஐஎன்எஸ் சக்ரா அணு நீர்மூழ்கி கப்பல் மற்றும் இந்தியாவின் ஏனைய நீர்மூழ்கிக்கப்பல்களின் நகர்வுகளை அவதானிக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொள்கிறது

எனவே இதனை அதியுயர் மட்ட எச்சரிக்கையாக எடு;த்து நடவடிக்கை மேற்கொள்வது என்று இந்திய பாதுகாப்பு தரப்பினர் முடிவெடு;த்துள்ளனர்

http://thaaitamil.com/?p=31896

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலேயே... இந்தியா, ஈழத்தமிழர் பக்கம் நின்றிருந்தால்... இவ்வளவு தலையிடியும், ஏற்பட்டிருக்காது.

Link to comment
Share on other sites

புலிகனின் அருமை இப்ப ஆவது இந்தியாவிற்கு விளங்கட்டும். புலிகள் ஆட்சியில் ஒரு பாகிஸ்தானி ஆவது வந்தான வடக்கு பக்கம்?

Link to comment
Share on other sites

[size=4]அந்தமான் தீவில் இந்திய கடல்படை பெரிய அவதானிப்பு நிலையத்தை நிறுவியுள்ளது. [/size]

[size=1]

[size=4]சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து எதையாவது செய்யவேண்டிய தேவையை அது உருவாக்கி விட்டது. [/size][/size]

Link to comment
Share on other sites

ஹிந்திய - மலையாள காட்டுமிராண்டி கூட்டின் தமிழின விரோத செயற்பாடுகள் இத்தகைய சூழலை மேலும் மேலும் அதிகரிக்கும்.

பாகிஸ்தானை ஆதரிக்கிறார்களோ இல்லையோ, தமிழின படுகொலையை முன்னின்று நடாத்திய காட்டுமிராண்டிக் கூட்டினை ஆதரிக்கும் நிலையில் தமிழர் நிச்சயம் இல்லை.

வினை விதைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அறுவடை செய்தே ஆக வேண்டும்!

Link to comment
Share on other sites

பங்களாதேஷ் அடுத்த கண்காணிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழக மீனவர்களுக்கு இந்தியாவால் கொடுக்க முடியாத பாதுகாப்பை பாகிஸ்தான் கொடுக்க நினைக்குதாம்.. :D

Link to comment
Share on other sites

ISI இல் சேரும் விண்ணப்ப படிவம், யாழ்பாணத்தில் எங்கே விற்கிறது என்று கேட்டு சொல்லுங்கோப்பா. நானும் சேர வேணும்.

பூபாலசிங்கம் புத்தக கடையில கேட்டு பார்த்தனான், அவை வழக்கமா சொல்லுற மாதிரி,

இன்னும்வரவில்லை. வந்தால் எங்களுக்கு தான் முதல்ல வரும் என்று சொன்னவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்திலிருந்து இந்தியகடற்படையின் தகவல் பரிமாற்றத்தை ஒட்டுக்கேட்கும் பாகிஸ்தான் - RAW எச்சரிக்கை

13 செப்டம்பர் 2012

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவின் கிழக்குக் கடலோர கடற்படை தளமான விசாகப்பட்டினத்தை இலக்கு வைத்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ கண்காணிப்பு நிலையம் அமைக்க மகிந்த ராஜபக்ஸ அனுமதி கொடுத்திருக்கிறார்.

மத்திய அரசுக்கு அண்மையில் வெளிநாட்டுக்க்கான உளவு அமைப்பான 'ரோ' அமைப்பு அனுப்பிய சுறறிக்கையில், யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாக எச்சரித்திருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய கடற்படைத் தளமான அந்தமான் தீவுகளை ஏற்கெனவே பர்மாவின் கொக்கோ தீவில் இருந்தும் வங்கதேசத்தின் சிட்டகாங்க் துறைமுகத்தில் இருந்தும் சீனா கண்காணித்து வருகிறது.

வங்கக் கடலில் இந்தியா அமைத்திருக்கும் மற்றொரு முக்கிய கடற்படை தளம் விசாகப்பட்டினம். இங்குதான் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நடமாட்ட்ம் அதிகம். தற்போது யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைக்கும் கண்காணிப்பு நிலையம் இந்த விசாகப்பட்டினம் கடற்படை தளத்தை இலக்கு வைத்திருக்கிறது, இந்த நிலையத்தில் இருந்து இந்திய கடற்படையினரின் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து ஒட்டுக் கேட்கவும் முடியுமாம்.

டெல்லியில் நேற்று முன் தினம் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புத் துறை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக இலங்கை அரசை இந்தியா எச்சரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82897/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

தமிழ் ஈழம்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பானது என தமிழர்தரப்பு சொல்லியவடயத்தை

விளங்கிக்கொள்ளாத கிந்தியாவுக்கு ஆதாரத்துடன் விளக்கிச் சொல்கிறது பக்கத்த நாடு

Link to comment
Share on other sites

[size=4]

இலங்கையில் ஜனநாயகத்திற்கான பற்றாக்குறையை தான் காணவில்லை என பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கூறியுள்ளார்.
[/size]

[size=4]கிந்திய திருடர் கூட்டம் தமிழ்மக்களை [/size]பொறுத்தவரை நிம்மதியாக தூங்கும் பிள்ளையையும் கிள்ளிவிட்டு வந்துதான் தொட்டிலை ஆட்டுகிறார்கள்.

[size=4]

ரோவின் இந்த விசாரணை அறிக்கையை அடுத்து நேற்று செவ்வாய்கிழமை புதுடில்லியில் கூடிய இந்திய படைத்தரப்பு உயரதிகாரிகள், இந்த விடயத்தை இலங்கையின் உயர்மட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர்
[/size]

சிவசங்கர் மேனனுக்கு இன்னொரு வரவேற்பு. அவ்வளவுதானே. பல சீனா மந்திரிகள், இராணுவ அதிகாரிகள் என்று இலங்கை வரவேற்புகளை நிகழ்த்திவிட்டது. அவற்றில் மலையாளிகளுக்கு கொடுப்பதற்காக சீனாவால் கொடுக்கப்பட்டிருக்கும் லஞ்சப் பணத்தை வந்து வாங்கிக்கொண்டு போக துடிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

ஆப்பு மேல ஆப்பு வந்து எமமைச் சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் சேனியாவைச் சேரும்.

அழிக இந்தியா. எழுக தமி்ழ் ஈழம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.