Jump to content

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்..


Recommended Posts

ம்...நல்லாத்தான் போகுது... நான் நல்லபிள்ளை அடி வாங்கலை என்று இருப்பம் என்றால்...? எல்லாரும் சொல்றதை பார்க்கும் போது எனக்கும் சொல்லணும் போல இருக்கு...

அப்போது...நான் நான்காம் வகுப்பு என நினைக்கிறேன்...

ஒரே குளப்படி... அதனால் என்னை வகுப்பாசிரியர் முன் மேசையில்தான் வைத்திருப்பா...

ஒவ்வொருநாளும் மதிய இடைவேளையின் பின்னர் ஆங்கிலப் பாடம் தான் நடக்கும். வழமை போல ஆங்கிலப் பாடமெடுக்க வந்த வகுப்பாசிரியர் எங்களை படிக்கச் சொல்லிவிட்டு நாடியில் கையக் கொடுத்தபடி தூங்கி வழிய ஆரம்பித்தா....

வழமை போல் நாம் விளையாடத் தொடங்கினோம்....

அன்று றபர் பாண்டால் பூவரசம் இலைத் தண்டை வைத்து ஆளுக்காள் அடித்து விளையாடினோம்...தவறுதலாக..ஒரு பூவரசமிலைத் தண்டு தூங்கிக்கொண்டிருந்த வகுப்பாசிரியரின் கண்ணில் பட்டுவிட்டது.... துடித்துக்கொண்டு எழும்பிய வகுப்பாசிரியர் பார்த்தது முதலில் என்னைத்தான்...கையில் றபர் பாண்டுடன் அசடு வழிய நின்றேன்.. இழுத்து வைத்து நல்ல அடி ..அது மட்டும் இல்லை அதிபரிடம் ஒப்படைச்சாச்சு... தான் படிப்பிக்கும் போது நான் விளையாடி றபர் பாண்டால் அடித்ததாகச் சொல்லி.

அதிபர் மேசைக்குக் கீழே குனியச்சொல்லிப் போட்டு ...எனக்கு நல்ல அடி... அது மட்டுமில்லை என்னை கூட்ட வந்த அப்பாவிமும் சொல்ல அப்பா வீட்டை கூட்டிக்கொண்டு போய்...அடியோ அடி அப்படியொரு அடி...இரண்டு நாளா என்னால் கதிரையில் இருக்கக் கூட முடியவில்லை.

நான் பாவம் இல்லையா..?ஒரு தப்புக்கு எத்தனை பேரிடம் அடி வாங்குவது...? அதன் பின்னர் றபர் பாண்ட் கையில் தொடுவதே இல்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரியசகி என்ன றோட்ல நிண்டு பெடியனோட மல்லுக்கட்டினன் எண்டு சொல்லிப்போட்டு அதே பெடியனுக்காக வாத்தியிடம் அடியும் வாங்கியிருக்கிறீங்க...என்ன அந்த வயசிலயே லவுசா :(

வாத்தியை பற்றி கதைக்கும் போது நான் படித்த வாத்தியும் நினைவுக்கு வருகிறார்.

"கா.." என்னும் வாத்தியாருக்கு கோபம் வந்தா போதும்....கண்ணாடி, வோச் எல்லாம் கழட்டி வைச்சுட்டு, சட்டை மேல் பட்டனையும் துறந்து விட்டுட்டு, கை 'ஸ்லீவ்ஸ்'ஐ மடிச்சு விட்டுட்டு ஏறி இருந்து கும்முவான் பாவி. அம்பிட்ட ஆசாமி அண்டைய நாள் பூர மலைச்சு போய் திரிவார். :cry:

'பஞ்சுவாலிடி பஞ்சுவாலிடி' என்றே பலரது தோலை உரித்து பெயர் போன வாத்தியார் படிப்பிப்பதில் மட்டும் சூரன் தான். தமிழ் இலக்கியங்களை ரசித்து படிப்பிப்பார். நல்லா தேவாரம் பாடுவார்.

அவரின் ஆஸ்தான மாணவன் என்னும் முறையில் என் முதுகுத் தோல் அவரிடம் இருந்து உரிபடாமல் தப்பிப் பிழைத்துக் கொண்டது. :oops:

Link to comment
Share on other sites

ஆகா எல்லோருடைய அனுபவங்களும் நல்லாய் இருக்கு

இப்படியெல்லாம் எல்லோரும் அடிவாங்கியிருக்கிறோம் ஆனால் இப்ப நினைக்கும் போது சிரிப்பாகக் கூட இருக்குது அடி வாங்கினாலும் அது சந்தோசம் தான்.

நானும் அம்மாவிடம் நல்லாய் வாங்கியிருக்கிறேன். ஒரு நாள் டான்ஸ் வகுப்புக்கு என் மச்சாள் வீட்டுக்கு போய்விட்டு (அவாதான் எனது ஆசிரியர்) அங்கு வகுப்பு முடிந்து தானும் எனது நண்பி மற்றும் எனது அன்ரியின் மகள் எல்லோரும் வந்து கொண்டிருந்தோம் அப்ப எங்கள் சுட்டித் தனதில் வழியில் உள்ள கோவில் கிணற்றில் தண்ணி கிள்ளி விளையாடினோம் அந்த நேரம் பார்த்து எங்கள் மச்சாள் வந்திருக்கிறா நான் தண்ணி கிள்ளினதை கண்டுவிட்டா எனக்கு இதுவொன்றும் தெரியாது வீட்டை நல்ல பிள்ளை மாதிரி சிரித்திக்கொண்டு போய் அம்மா என்றேன் அம்மா ஏன் லேட் என்றா? எனக்கு என்ன சொல்வதென்றுதெரியாது திரு திருவென முழிசினேன் அதற்கிடையிலை அம்மா அகப்பைக் காம்போடை வந்தா சளார் சளார் என்று விழுந்திச்சு மச்சாள், அக்கா எல்லோரும் பிடிக்க பிடிக்க விழுந்திச்சு இப்ப நினைத்தால் கூட நடுங்கும். :cry: :cry: :cry: :cry:

எங்க பாடசாலை கணித பாட சேர்றென்றால் எல்லோருக்கும் சரியான பயம் அவரே 9ம் வகுப்பு படிக்கும் போது வகுப்பாசியராய் வந்தார் முதல் பாடம் அவருடையது தான் வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் ஒவ்வொருநாளும் பூசை விழும் நானும் ஒருநாள் செய்யாமல் போய் வாங்கிகட்டினே; அதுவும் பிறங்கையை திருப்பச் சொல்லிப் போட்டு மள மளவென்று அடி நடந்திச்சு (2 or :cry: 3 ஆம் பாடமாய் இருந்திருந்தால் எல்லாம் ஈ என்றாலும் அடித்திருப்பேன்) அடிச்சதும் பத்தாமல் சித்தி கிட்டையும் போட்டுக் கொடுத்தார் அன்று இரவு சித்தி என்னை 01.00க்கு தான் படுக்கவே விட்டா அது மட்டும் இருந்து எல்லாம் செய்து முடி என்று. அதுக்கப்புறம் அவரை எப்ப மாட்டலாம் என்று பார்த்து வைத்து மாட்டியும் விட்டேன். :cry: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

:P :P எல்லோரும் வாங்கி இருக்கோம் என்ன.. :P இப்ப நினைச்சால் சிரிப்பா இருக்கு..ஆனால் அப்போ..வரும் கோவத்துக்கு திருப்பி ஏதும் செய்தால் தான் ஆத்திரம் தீரும் என்றிருக்கும் இல்லையா? :P

ப்ரியசகி என்ன றோட்ல நிண்டு பெடியனோட மல்லுக்கட்டினன் எண்டு சொல்லிப்போட்டு அதே பெடியனுக்காக வாத்தியிடம் அடியும் வாங்கியிருக்கிறீங்க...என்ன அந்த வயசிலயே லவுசா :(

சீ சீ..அப்படி எதுவுமில்லை..புதிரவன்..என் கூட நேசறியில் இருந்து படிச்சவன் அவன்..தூரத்து சொந்தமும் கூட..நாங்கள் அடிச்சு பிடிச்சு என்னவும் செய்வோம்..ஆனால் வேறு யாரும்...நம்மளில ஒராளை பேசினால்..அவ்ளோ தான்..ஒண்டாக சேர்ந்திடுவோம் :P :P :lol: அப்படித்தான் அவனுக்காக கதைத்து அடி வாங்கினேன்.. :?

Link to comment
Share on other sites

ம்...நல்லாத்தான் போகுது... நான் நல்லபிள்ளை அடி வாங்கலை என்று இருப்பம் என்றால்...? எல்லாரும் சொல்றதை பார்க்கும் போது எனக்கும் சொல்லணும் போல இருக்கு...

அப்போது...நான் நான்காம் வகுப்பு என நினைக்கிறேன்...

ஒரே குளப்படி... அதனால் என்னை வகுப்பாசிரியர் முன் மேசையில்தான் வைத்திருப்பா...

ஒவ்வொருநாளும் மதிய இடைவேளையின் பின்னர் ஆங்கிலப் பாடம் தான் நடக்கும். வழமை போல ஆங்கிலப் பாடமெடுக்க வந்த வகுப்பாசிரியர் எங்களை படிக்கச் சொல்லிவிட்டு நாடியில் கையக் கொடுத்தபடி தூங்கி வழிய ஆரம்பித்தா....

வழமை போல் நாம் விளையாடத் தொடங்கினோம்....

அன்று றபர் பாண்டால் பூவரசம் இலைத் தண்டை வைத்து ஆளுக்காள் அடித்து விளையாடினோம்...தவறுதலாக..ஒரு பூவரசமிலைத் தண்டு தூங்கிக்கொண்டிருந்த வகுப்பாசிரியரின் கண்ணில் பட்டுவிட்டது.... துடித்துக்கொண்டு எழும்பிய வகுப்பாசிரியர் பார்த்தது முதலில் என்னைத்தான்...கையில் றபர் பாண்டுடன் அசடு வழிய நின்றேன்.. இழுத்து வைத்து நல்ல அடி ..அது மட்டும் இல்லை அதிபரிடம் ஒப்படைச்சாச்சு... தான் படிப்பிக்கும் போது நான் விளையாடி றபர் பாண்டால் அடித்ததாகச் சொல்லி.

அதிபர் மேசைக்குக் கீழே குனியச்சொல்லிப் போட்டு ...எனக்கு நல்ல அடி... அது மட்டுமில்லை என்னை கூட்ட வந்த அப்பாவிமும் சொல்ல அப்பா வீட்டை கூட்டிக்கொண்டு போய்...அடியோ அடி அப்படியொரு அடி...இரண்டு நாளா என்னால் கதிரையில் இருக்கக் கூட முடியவில்லை.

நான் பாவம் இல்லையா..?ஒரு தப்புக்கு எத்தனை பேரிடம் அடி வாங்குவது...? அதன் பின்னர் றபர் பாண்ட் கையில் தொடுவதே இல்லை....

:(:lol::lol: :P :P :P :lol::lol::D:lol::lol::lol:

Link to comment
Share on other sites

அம்மா: என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்?  

அம்மம்மா: அதில்லை இன்டைக்கு இரண்டும் சம்பல் இடிச்சு வைச்சிருக்குதுகள்.என்ன சம்பல் தெரியுமே? புவுண் சம்பல்.

அடடா என்ன வேலை எல்லாம் செய்திருக்குறீங்க..... :(:lol::lol: பாவம் ஆடு என்ன பாடு பட்டிச்சோ.... :wink: :lol:

எல்லாரும் நல்லாத்தான் அடி வாங்கிருக்குறீங்க... எழுதுங்க.... பார்க்க சிரிப்பாத்தான் இருக்கு... :lol::lol: 8) 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த என்னைக் கண்டதும் எனது தம்பி முற்றத்தில் அன்று பெய்த மழை வெள்ளத்துள் ஓரிடத்தைக் காட்டி "அண்ணா, அந்த இடத்திற்கு மட்டும் போகவேண்டாம். சின்னம்மாவின் தம்பி அந்த இடத்தில் சென்றபோது வழுக்கி வீழ்ந்துவிட்டான்." என்று எச்சரிக்கை செய்தான்.

அந்த இடத்திலே அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்ற ஒரு துணிச்சலில் எழுந்து மெதுவாக அவ்விடத்திற்குச் சென்றேன். மறுகணம் படார் என்று கன்னம் நிலத்தில் அடிபட வழுக்கி வீழ்ந்துவிட்டேன். வெட்கம் ஒருபுறம் துரத்த, விழுந்ததால் ஏற்பட்ட வலி ஒருபுறம் வருத்த, பீறிட்டு வந்த அழுகையை மறைத்தபடி திரும்பவும் தம்பியின் பக்கத்தில் போய் அமர்ந்தேன்.

அதனை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான்.

Link to comment
Share on other sites

ஆகா எல்லோரும் நல்லாய் தான் செல்லம் பொழிந்து வேண்டிக்கட்டி இருக்கின்றீர்கள் :( . நானும் நிறைய அடி வேண்டி இருக்கின்றேன். :cry: அந்த நேரத்தில் அகப்பை காம்பு தான் எனது எதிரி :twisted: . அந்த அடி மட்டும் தான் கையில் படும். தடி முறிக்க முதல் நாம் வீட்டை சுற்ற தொடங்கி விடுவோம். அக்காவுடன் சண்டை பிடித்து விட்டு றோட்டுக்கு ஒடி விடுவோம். ஏன்என்றால் றோட்டுக்கு அவா ஒடி வரமாட்டா என்றா நினைப்பு தான் :wink: .

ஒரு அனுபவம். இப்போதும் மறக்க முடியாது.

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இயக்க அண்ணாக்கள் இருந்தவர்கள். அவர்கள் பெரிய பங்கர் வைத்திருந்தவர்கள். நானும் பக்கத்து வீட்டு நண்பியும் அதற்குள் போய் ஒரே விளையாட்டு தான். ஒரு முறை விளையாட்டு கூடி புழுதியும் நாமும் ஒரு நிறம் ஆகிவிட்டோம். வீட்டை வந்து இருவரும் வேண்டிய அடிக்கு அளவு கணக்கு இல்லை. :cry: :cry: இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கும்.

பின்னொரு காலம் வீட்டில் புளி உப்பு மிளகாய்தூள் களவாய் எடுத்து கொண்டு வீட்டு கூட்டில் ஏறி மாங்காய் பிடுங்கி சாப்பிடுவது. யாரவது வந்தால் அப்படி படுத்து கிடப்பது. என்ன இனிமையான காலங்கள் அது :cry: :cry: .

எங்கள் பழைய நினைவுகளை மீட்டு தந்த சிநேகிதிக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

என்ன தாரணிக்கும் அனிக்கும் உங்கட குழப்படிகளை எழுதுற ஐடியா இல்லைப்போல? வாசிச்சு சிரிச்சா சரியாப்போச்சா?நீங்கள் என்ன செய்தனீங்கள் என்று எழுதுங்கோ இரண்டு பேரும்.

Link to comment
Share on other sites

செல்வமுத்து ஆசிரியர் வெள்ளத்தில விழுந்தெழும்பினத வாசிக்க எனக்கு நாங்கள் படிச்ச ஒரு பழைய பாடல் ஞாபகம் வருது : வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாட வேண்டாம் வீண் சண்டை..அங்கால என்ன? மிச்சம் தெரியேல்ல.

Link to comment
Share on other sites

றமாக்கா நீங்கள் சொல்ற விளையாட்டுத்தான் நாங்களும் விட்டிருக்கிறம்.அண்ணாமார் எங்கட ஆய்க்கினை தாங்காமல் மதிலால தூக்கி விட்டிடுவினம் வீட்ட போகச் சொல்லி.அவை கொண்டு வந்து வைச்சிருக்கிற மயிலோட விளையாடுறது எங்களுக்கு நல்ல விருப்பம். மாங்காயும் தூளும் நல்லாயிருக்கும்.வாயூறுது.பச்

Link to comment
Share on other sites

சினேகிதி - நல்லதொரு தொடக்கம் - வாங்கின அர்ச்சனைகளையும் - வஞ்சகமில்லாம சொல்லிட்டிங்க!

சரி என் பங்குக்கும் ஒண்டு எடுத்து விடுறன்!

அப்போ- அஞ்சாம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தேனா........

பள்ளிகூடம் முடிய - பக்கதில ஒரு கொன்றைமரம்...

மரத்தில பொன்வண்டு.......

பிடிச்சு நெருப்பு பெட்டியுக்க வைச்சு அடுத்தநாள் - பொடியளுக்கு பீலா காட்டலாம் என்னு ஏறினனாம்.......

அரைவாசி தூரம் ஏறிட்டு கீழபார்த்தா.....

மேயகட்டியிருந்த மாடொண்டின்ற வாயுக்க என்ர - இரண்டு 20 ஒற்றை கொப்பி! :shock:

விடுவேனா........ குதிச்சு மாடா நானா எண்டு ஒரு கை பார்த்து இழுத்தன் கொப்பியை ......

நான் யாரு ...... வந்திருச்சு ....கொப்பி இல்ல ......

கொப்பிக்கு போட்டிருந்த மட்டைகள் மட்டும்.......

அதோட விசுக்கி கொண்டு வீட்ட போனேனா......

ம்ம்... அப்புறம் நடந்ததை சொல்ல - கொள்கை விளக்கம் தேவையா?

உங்க தலைப்பே போதுமே!

அந்த வரலாற்று சோகத்துக்கு பிறகு -ஊரில எந்த மாடு அடிவாங்கினாலும்-

அல்பமா ஒரு பழிதீர்க்கிற சந்தோசம்!

அடிக்கிறவன் -மகராசன் -நல்லாயிருக்கணும்னு! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளின் சுட்டித்தனங்கள் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கின்றன. எல்லோரும் தொடருங்கள்.

சினேகிதி, இதுதான் அந்தப் பாடல்.

குடை பிடித்துச் செருப்புமிட்டு புத்தகமுங் கொண்டு

குடுகுடென நடந்துவரும் குழந்தைகளே கேளீர்

மழைகாலம் வழிவழுக்கும் மிகக்கவனம் மக்காள்

வழியருகே வெள்ளமுண்டு விலகிவர வேண்டும்

வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாட வேண்டாம்

வீண்சண்டையால் வழுக்கி விழுந்தெழும்ப வேண்டாம்

கண்மணிகாள் நீர்ச்சிரங்கு காலில்வரும் கவனம்

கண்ணுறக்கம் இல்லாமல் கதறியழ நேரும்

அம்மாசொல் தட்டாமல் ஆசிரியர்க்கு அடங்கி

ஆசையுடன் பள்ளியிலே படித்துவர வேண்டும்.

இப்படி அருமையான பல பாடல்கள் தமிழில் இருக்கின்றன.

அதற்கென ஒரு பகுதியைத் தொடங்கி அனைவருக்கும் அவைகளை அறியத்தந்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

Link to comment
Share on other sites

அந்தாநாட்களில் அம்மாட்ட பெரும்பாலும் ஒவ்வொருநாளும் அடிவேண்டிய அநுபவம் எனக்கு நிரம்பவே உண்டு. மாதத்தின் சிலநாட்களில் நான் அம்மாவின் அடியிலிருந்த தப்ப சாமியறைக்குள் அடைக்கலம் புகுவதுண்டு காரணம் 'அந்த' நாட்களில் சாமியறைக்குள் அவா வரமாட்டா 8) 8) 8)

Link to comment
Share on other sites

"அந்த வரலாற்று சோகத்துக்கு பிறகு -ஊரில எந்த மாடு அடிவாங்கினாலும்-

அல்பமா ஒரு பழிதீர்க்கிற சந்தோசம்!

அடிக்கிறவன் -மகராசன் -நல்லாயிருக்கணும்னு"

வர்ணன் சிரிக்கிறதா அழுறதா இதைப்பார்த்து.உங்கட வகுப்பில நல்லா கொப்பி புத்தகங்களை வைச்சிருக்கிற மாணவருக்குப் பரிசு தாறதில்லையா?வெறும் மட்டையை ரீச்சருக்கும் விசுக்கிக் காட்டியிருக்கலாம்:-)இந்தப் பொன்வண்டு பிடிச்சு நெருப்பட்டிக்க வைக்கிறது கூடுதலாக பெடியங்கள்தான் செய்யிறவை.ஒராளுக்குப் பொன்வண்டு என்று அடைமொழிஇருக்கு.

Link to comment
Share on other sites

மணிமாறன் ஊரில வைச்ச சில கட்டுப்பாடுகள் உங்களுக்கு நல்ல வசதியாப்போட்டுது.அடுத்தடுத்

Link to comment
Share on other sites

தமிழ் ஈழத்தில் வசிக்கும் போது ஒரு நாள் நானும், தங்கையும், மச்சாளும், என் நண்பியும் சேர்ந்து எங்கள் சின்ன தங்கையை(4 வயது) இறந்தவர்களை குளிப்பாட்டுவது போல் ஒவருவரும் அவளுக்கு சீயாக்காய் வைத்து குளிப்பாட்டி 2 கிடுகை(தென்னம் ஓலை)எடுத்து அதன் மேல் அவளை படுக்கவைத்து (அவளுக்கு மரணவீடு செய்வதாக கற்பனை பண்ணி பாடையாக கிடுகு)நாங்கள் நாலுபேரும் சேர்ந்து பெரியவர்கள் கட்டியணைத்து அழுவதைப்போல் நாங்களும் அழுதோம்.

தேவாரம் பாடினோம். வெளியால் போன அம்மா திரும்பி வர எங்கள் அழுகைச்சத்தத்தையும், கிடுகின்மேல் நித்திரையாய் படுத்திருந்த 4 வயது தங்கையையும் பார்த்து அம்மாவும் பயந்து அழுது கொண்டு கிட்ட வர என் நண்பி சிரித்துக் கொண்டு சொன்னாள் அன்ரி இவளுக்கு நாங்கள் செத்தவீடு கொண்டாடினாங்கள் என்று, அம்மாவுக்கு கோவம் வந்து தடி எடுத்துக் கொண்டு என்னையும் தங்கையையும் அடிக்க வர என் நண்பியும், மச்சாளும் ஓடிவிட்டார்கள்.

அதற்குப்புறகு அம்மா எங்கள் இருவருக்கும் அடிக்க எங்கள் சின்னத்தங்கை நித்திரையால் எழும்பி பயத்தில் அவளும் அழத்தொடங்கிவிட்டாள். நாங்கள் இருவரும் அம்மா அடித்த அடியையும், தழும்புகளையும் நினைத்து நினைத்து அழுது சாப்பிடாமல் நித்திரையாகி விட்டோம்.

இரவு போல் அம்மா எங்களை எழுப்பி சாப்பிட வைக்க நாங்கள் விக்கி விக்கி அம்மாவைக் கட்டிப்பிடித்து அழ அம்மாவுக்கும் தான் அடித்ததை நினைத்து அழுது எங்கள் இருவருக்கும் தழும்புகளுக்கு மருந்து போட்டுவிட அம்மாவில் இருந்த கோவம் போய் விட்டது. அடுத்தநாள் எங்கள் சின்னத்தங்கைக்கு காய்ச்சலும், தடிமனும் வந்து விட்டது. அவள் காய்ச்சலில் அழ நாங்களும் அவளுக்கு செய்ததை நினைத்து அழுதுவிட்டோம். அம்மாவும் புத்திமதியும் கூறினா. இப்படியான விபரிதமான செயல்களை செய்யவேண்டாம் என்று. அன்றிலிந்து இப்படியான மோசமான செயல்களை செய்யவில்லை.

(அப்போது எங்களுக்கு 11, 10, 9 11 வயது) :shock:

பிறகு நாங்கள் எல்லோரும் நல்லபிள்ளைகளாக மாறிவிட்டோம். :(:D :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு நாங்கள் எல்லோரும் நல்லபிள்ளைகளாக மாறிவிட்டோம். :(:D :P

யாருக்கு றீல் விடுகின்றியள்? நான் நம்ப மாட்டேன் :evil: :evil:

Link to comment
Share on other sites

யாருக்கு றீல் விடுகின்றியள்? நான் நம்ப மாட்டேன் :evil: :evil:

"பிறகு நாங்கள் எல்லோரும் நல்லபிள்ளைகளாக மாறிவிட்டோம். "

சின்னப்புள்ளத்தனமால்லே இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KATPUKKARASAN

யாரையப்பு சொல்கின்றீர்கள்? என்னையா?? :evil: :evil:

Link to comment
Share on other sites

தாரணி தாரணி :-) நல்லாத்தான் விளையாடியிருக்கிறீங்கள்.செத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தூயாண்ணா லொள்ளா? நீங்கள் விடுற றீலையே நாங்கள் நம்புறம் தாரணி உண்மையைச் சொன்னா றீல் என்றீங்கள் என்ன?

நான் றீல் விடுகின்றேனா? அபச்சாரம்! அபச்சாரம்!! :oops:

ஒரு நல்ல பையனின் கருத்தையா இப்படி ஏளனம் செய்வது? :wink:

Link to comment
Share on other sites

நான் றீல் விடுகின்றேனா? அபச்சாரம்! அபச்சாரம்!! :oops:

ஒரு நல்ல பையனின்

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.