Jump to content

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்..


Recommended Posts

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்..

சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது.இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிற சந்தர்ப்பம் இன்று எனக்கு வாய்த்தது.அதால நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொல்லோணும் என்ன.

untitled8zr1.jpg

அப்ப எனக்கொரு மூன்று வயசிருக்கும்.அம்மாவும் அப்பாவும் வீட்ட இல்லை நானும் அக்காவும் அம்ம்மா வீட்டதான் நின்டனாங்கள்.அம்மாவும் அப்பாவும் வீட்ட வந்திட்டினம் அம்மம்மா சாய்மனைக் கட்டில்ல தடியோட இருக்க நானும் அக்காவும் ஹ_ட்வாசல்ல முழசிக் கொண்டிருக்கிறம்.அம்மா வந்ததுதான் தாமதம் அம்மம்மா போட்டுக்குடுக்கத் தொடங்கிட்டா.

அம்மம்மா: பிள்ளை இஞ்ச வந்து பார் உன்ர பெட்டையள் இரண்டும் என்ன செய்திருக்குதுகள் என்று.

அம்மா: என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்?

அம்மம்மா: அதில்லை இன்டைக்கு இரண்டும் சம்பல் இடிச்சு வைச்சிருக்குதுகள்.என்ன சம்பல் தெரியுமே? புவுண் சம்பல்.

அம்மா: என்னம்மா? புவுண் சம்பலோ?

அம்மம்மா: அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து காப்பு சிமிக்கி எல்லாத்தையும் கழட்டி உரலுக்கை போட்டு இடிச்சு வைச்சிருக்குதுகள்.;.

உரலுக்கு நசிஞ்சு போய்க் கிடந்த எல்லாத்தையும் அம்மம்மா எடுத்துக் கொண்டு வந்து காட்டினா அவ்வளவும் தான் தெரியும் அடுத்த நிமிசம் புக்கத்தில நின்ற செவ்வரத்தையை முறிச்சு இரண்டு பேருக்கும் நல்ல வெளுவை.

அடுத்த திருவிழா ஒரு புpறந்த நாள் விழாக்குப் போட்டு வந்த இரவு நடந்தது.வீட்டுக்குள்ள வரும்வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.அப்பா நல்லாத்தான் கதைச்சுக் கொண்டு வந்தவர்.வீட்டுக்குள்ள வந்த உடன கதிரைல தூக்கி இருத்தினார்.இருத்திப்போட்டு பிரம்பு எடுத்துக்கொண்டு வந்தார்.

அப்பா:இரண்டு பேரும் கையை நீட்டுங்கோ.

நானும் அக்காவும் : ஏனப்பா நாங்கள் ஒரு குழப்படியும் செய்யேல்லயே.

அப்பா: கைய நீட்டைச் சொன்னான்.

இரண்டு பேருக்கும் மூன்று மூன்றடி.

அப்பா: எத்தினாள் சொன்னான் உடைஞ்ச பலூனை வைச்சு விளையாட வேண்டாம்.முட்டை விட வேண்டாம் என்று.பிரவீனாக்கு பலூன் துண்டு தொண்டைல ஒட்டி என்ன நடந்தது என்று தெரியும் தானே.இனிம பலுனைக் கண்டாலே இந்த அடிதான் ஞாபகம் வரோணும்.

ஒரு நாள் நாங்கள் பக்கத்து வீட்டு பிள்ளையள் எல்லாரும் சேர்ந்து உக்கிப் போன மண்ணெண்ணை பரலுக்கு மேல உருண்டு விளையாடினாங்கள்.பரலில படுத்துக்கொண்டு காலால உருட்டினா இது உருளும்.எத்தின பேர் இந்த விளையாட்டு விட்டிருப்பியள்.அதில கிடந்த ஒரு உக்கின இரும்புத் துண்டு அக்காக்கு குத்தி இரத்தம் வந்திட்டுது.டாக்குத்தர் மாமாட்ட போய் மரு;ந்தெல்லாம் போட்டிட்டு வந்திட்டு இரண்டு பேருக்கும் விளாசல்; தான்.

பிறகொருநாள் அக்கா நெல்லி மரத்தில ஏறி நின்டுகொண்டு நெல்லிக்காய் ஆய்ஞ்சு போட போட நான் கீழ நின்று பொறுக்கிக் கொண்டு நிண்டனான்.அக்கா ஒருநாள் நான் அங்கர் மா களவெடுத்து சாப்பிட்டத அம்மாட்ட கோள்மூட்டிட்டா அந்தக் கோவத்தில சும்மா அவாவை வெருட்டுறதுக்காக அக்கா நீ நிக்கிற கொப்புக்குப் பின்னால கோடாலிப் பாம்பு நிக்குது என்று ஒரு பொய்யைச் சொன்னன்.அவா பயத்தில பலன்ஸ் இல்லாம தொபுக்கடீர் என்று விழுந்திட்டா.பெரிய உயரம் இல்லை நெல்லி மரம் ஆனால் விழுந்த இடத்தில இருந்த கல்லு உள்ளங்கையில குத்திட்டுது அவாக்கு.அன்டைக்கும் எனக்கு புூசைதான்.

இன்னொருநாள் உப்பிடித்தான் கோயில் திருவிழா நெரிசல்ல "அம்மா அப்பான்ர சைக்கிள் டைனமோவைக் களவெடுத்தது இந்த மாமா தான " என்று நான் கத்திட்டன்.அவருக்கு ஒரு மாதிரிப் போட்டுது.அம்மாக்கு

ஏன்தான் என்னை கோயிலுக்குக் கூட்டிக் கொண்டுவந்தம் என்று ஆயிடுச்சு. என்னைக்.கோயிலுக்குள்ள கூட்டிக்கொண்டே போய் இறுக்கி நுள்ளி விட்டா.

இன்னும் நிறைய சளார் பளார் சடீர் எல்லாம் இருக்கு.ஆனால் இனிம நீங்கள் சொல்றதைக் கேப்பம்..நான் நிப்பாட்டுறன் நீங்கள் உங்கட வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ பிளாஸ்பாக்கா!! நல்லாத்தான் இருக்கின்றது.

உந்த ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கின்ற கதை இருக்கட்டும். நீங்கள் எப்பவாவது உங்களுக்கு மினுக்கி இருக்கின்றீர்களா? :wink: :P

Link to comment
Share on other sites

சீ சீ அம்மாதான் பல்லையும் மினுக்கி கன்னத்தையும் மினுக்கி விடுறவா..உங்கட வீட்டில எப்பிடியண்ணா?

Link to comment
Share on other sites

ஏன் சில பேருக்கு வளந்தாப்பிறகும் அடி விழுந்தமாதிரி முந்தி யாரோ எழுதினமாதிரி எனக்கு நாபகம்.இங்க என்னடா எண்டா சின்ன வயசில தான் அடி விழுந்தமாதிரிச் சொல்லிக் கிடக்கு..ம்ம்ம் ஒண்டுமா விளங்கேல்ல?அப்பாட்டைக் கேட்டாத்தான் உண்மை தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:):D சினேகிதி நல்லாத்தான் வேண்டிக்கட்டி இருக்கிறீர்கள். நானும் சிறு வயதில் இடம்பெற்ற ஒரு சந்தர்ப்பத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

சிறுவயதில் பாடசாலை தண்ணிதொட்டியில் ஏறி விளையாடினேன். தண்ணியில்லாத தொட்டிலில் விழுந்து நெத்தியில் காயம். நான் அழவில்லை தையல் போடும் போது கூட. ஆனால் அப்பா வந்ததும் முறைத்துப்பார்த்தார். உடனே அழ அரம்பித்துவிட்டேன். அப்போது டொக்டர் சொன்னாரு. இப்ப இவர் விக்கி விக்கி அழுதால் கட்டு இழகிவிடும். மாறியபின்னர் தழும்பு பெரிதாக தெரியும் மறைவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும் என்று. ஆனால் நம்ம அப்பா வீட்டை போகும் வரை.. போன பிறகும் என்னை திட்ட தவறவில்லை. எதிர் காலத்தில் ஒரு வேலைக்கு இன்டவியூக்கு போகும் போது இந்த காயத்தை பார்த்து உனக்கு வேலை கிடைக்காது என்று பேசினார். சொன்னதில் உண்மை இருக்கிறது. ஆனால் சொல்லி திட்டுவதற்கான நேரம் அதில்லை என்பதும் எனது கருத்து. நாள் முழுவதும் அழுது காயம் பிரிந்து தழும்பி பெரிதாகி இன்னும் முகத்தில் இருந்து மாறவில்லை.

பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்கவேண்டும். பின்னார் அப்பா அம்மா கண்டித்த நிகழ்வுகளை ஒரு சுகமான நினைவாக எடுக்ககூடியதாக அவர்கள் பிறகு பாசத்தை காட்டுதல் சிறந்தது என்று நினைக்கிறேன். :roll:

Link to comment
Share on other sites

இங்க இன்னொரு முக்கியமான விசயத்தையும் சொல்ல வேணும். நான் புலத்தில் கற்ற இன்னொரு முக்கியமான விசயம்.புலத்தில் பெற்றோராக இருப்போர் ,ஆக இருப்போர் ஏன் ஊரிலும் தெரிச்சு கொள்ள வேண்டிய விடயம்.அதாவது எப்படி பிள்ளயளுக்கு அடிக்காம அவர்களது பிழைகளை உணரவைப்பது புத்திமதி சொல்லுறது எண்டு.

அடிப்பது என்பது பிள்ளைகளுடன் தொடர்பாட முடியாமையின் அவர்களைக் கட்டுப் படுத்துவதன் ஆற்றாமையின் வெளிப்பாடு தான்.புலத்தில் மேற்கத்தியர் குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டு எவ்வாறு அவர்களைக் கட்டுப் படுத்துகின்றனர் என்று நாம் கற்க வேண்டும்.

அடிப்பதென்பது மனதில் ஆற்றாத பாதிப்பை ஏற்படுத்தும். நாம் குழந்தைகளுக்கு விளங்கும் வண்ணம் அவர்களுடன் கதைக்க வேணும். நல்ல விடயங்களைச் செய்யும் போது அவர்களுக்கு ஊக்கமும், பரிசுகளும் வழங்க வேண்டும்.கூடாத விடயத்தைச் செய்யும் போது அவர்கள் மிகவும் விரும்பும் ஒன்றை அகற்றி விடவேண்டும்.அதாவது இண்டைக்கு விளாயட ஏலாது பேசாமப் போய் ஒரு இடத்தை இருக்க வேணும் அல்லாட்டி இண்டைக்கு டிவி பாக்கேலாது என்று சொல்ல வேண்டும்.

இவ்வாறு செய்வதால் அவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.குழந்தைகளுக்கு

Link to comment
Share on other sites

நாரதர் அண்ணா அப்பிடி எழுதினதுக்குத்தான் வளர்ந்த பிள்ளைய அடிப்பினமா என்று கேட்டார் ஒரண்ணா அதான் இப்பிடி எழுதினான்.அப்பாட்டதானே கேளுங்க கேளுங்க:-)

Link to comment
Share on other sites

விஸ்ணு அண்ணா நீங்களும் தொட்டில ஏறி நின்று விழுந்தீங்களோ..ஹா ஹா.நானும் தொட்டி விழும்பில ஏறி நின்று விழுந்து இன்னமும் இடது புருவ மத்தியில வெற்றிடம் தானிருக்கு.அதுக்கு அடியெல்லாம் விழேல்லயாம் அம்மாதான் ஒரே அழுகையாம் கண்ணுக்கு ஏதாவது நடந்துடுமோ என்று.நித்திரை கொள்ள தையல் பிரிஞ்சு திரும்பப் போட்டதாம்.இருந்தாலும் உங்கட அப்பா கொஞ்சம் மோசம் தான்.

Link to comment
Share on other sites

நாரதர் அண்ணா நீங்கள் சொல்வது மிகச்சரி.உங்கட பிள்ளைக்கு நீங்கள் அடிக்கிறேல்லதானே? றிவாட் ரெயினிங் என்று சைல்ட் சைக்கோலஜில ஒரு பகுதியிருக்கு.ஆறுதலா எழுதுவம்.

Link to comment
Share on other sites

1.ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்

2.உக்கிப் போன மண்ணெண்ணை பரலுக்கு மேல உருண்டு விளையாடினாங்கள்

3.நான் அங்கர் மா களவெடுத்து சாப்பிட்டத

À¢û¨Ç ¯í¸¨¼ «õÁ¡ «ôÀ¡ °Ã¢¨Ä þÕó¾ ´Õ측 ¦º¡øÖí§¸¡. .ºó¾¢ì¸ §ÅñÊ¢ÕìÌ (±ôÀ¢ÊÂôÀ¡ þôÀ¢Ê ´Õ Å¡¨Ä ¦ÀòÐ ÅÇò¾¢Âû ±ñÎ §¸ì¸ò¾¡ý)

Link to comment
Share on other sites

:):D:D:D:D

ம்ம் ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...அடி வாங்கிய ஞாபகம் வருதே.. :P

அங்கர் மா எடுத்தால் அடியா? நானும் நெஸ்ரமோல்ற்ற்க்கும்..புளிக்க

Link to comment
Share on other sites

வணக்கம் முகத்தார்..நலமா? திருகோணமலையிலா நிக்கிறீங்கள் இப்போ? நாரதர் அண்ணா முகம்ஸ் வேற யாரெல்லாம் வீட்ட வரப்போறீங்கள்?கெரியாச் சொல்லிடுங்க ரிக்கற் அனுப்புறன்.

Link to comment
Share on other sites

சகி சகி..வாசிச்சு வாசிச்சு சிரிக்கிறன்.நெஸ்ரமோல்ற்ற்இ..

Link to comment
Share on other sites

அட கடவுளே இப்படி எல்லாம் அடி வாங்கி இருக்கிறியளா? :cry: :cry: :cry:

வாசிக்கும் போது சிரிப்பாக இருக்கு. :P :P

அப்பா அம்மாவிடம் அடி வாங்கியதாக நினைவில்லை. ஆனால் வாத்திமாரிடம் குட்டும் அடியும் வாங்கிய நினைவுகள் ஏராளம். :evil: :cry:

"வகுப்பில் பரீட்சை வைத்து திருத்தி மார்க்ஸ் தந்த நேரம் அவர் எதிர்பார்த்த புள்ளி யாருமே எடுக்கவில்லை என்பதற்காக ஒரு பெடியனை திட்டினார் வெங்காயம் என்று. அப்போ நான் லொள்ளாக கேட்டேன். சேர் வெங்காயம் அந்த பெடியன் போல ஜீன்ஸ் அண்ட் சேர்ட் போட்டிருக்குமா? அப்படியாயின் நீங்களும் வெங்காயமா? :lol: அட சே அந்த வாத்தி எழும்படி உனக்கு ரொம்ப தான் நக்கல் கூடிட்டு எடுத்த மார்க்ஸ் க்குள் அவாக்கு என்னோடை லொள்ளு என்று 4 அடி. :cry: :cry: :cry: இப்பவும் அந்த வாத்தியை கண்டால் பயம் வாறதில்லை. வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வருவது போல தான். அழுகை தான் வரும். என்னமோ தெரியா அந்த வாத்தியின் பாடத்தில் சித்தியடைந்து விட்டேன். :P :P

Link to comment
Share on other sites

ஹா ஹா நிலா உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு.அந்த வாத்தி உங்கட லொஜிக் வாத்தியா?

Link to comment
Share on other sites

ஹா ஹா நிலா உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு.அந்த வாத்தி உங்கட லொஜிக் வாத்தியா?

லொஜிக் வாத்தி என்றால் வெங்காயம் பற்றி அதாவது அவன் வெங்காயம் எனில் தானும் வெங்காயமா என ஒருகணம் சிந்திச்சிருப்பார் எல்லோ. ஆனால் இது கணித வாத்தி :cry:

Link to comment
Share on other sites

ஆமா..நீங்கள் லொஜிக்காத்தான் கதைக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

ஆமா..நீங்கள் லொஜிக்காத்தான் கதைக்கிறீங்கள்.

அட பாவமே. நான் சாதாரணமாக கதைப்பது லொஜொக் போல தெரியுதா? விட்டால் நீங்களும் குட்டுவியள் போல இருக்கு :cry: நான் லொஜிக் பாடம் படிக்கவே இல்லை. ஆளை விடுங்கோ

Link to comment
Share on other sites

நிலா சொட்டுறதுக்கு யாழ்ல யாருமில்லையென்றுதான் அப்படி சொன்னேன் குட்ட எல்லாம் மாட்டன். :oops: :oops:

Link to comment
Share on other sites

வீட்டைச் சுத்தி ஓடிறதுதான் நாங்களும் ஆனால் பிடிபட்டா அவ்வளவும் தான்.விட்டுத்துரத்தேக்க அம்மா ஏறமாட்டாதானே என்று எப்பவாவது மதில்ல ஏறி நின்றிருக்கிறீங்களோ சகி

ம் வாலில்லாக் குறை தான்...... :lol:

Link to comment
Share on other sites

அடிப்பது என்பது பிள்ளைகளுடன் தொடர்பாட முடியாமையின் அவர்களைக் கட்டுப் படுத்துவதன் ஆற்றாமையின் வெளிப்பாடு தான்.புலத்தில் மேற்கத்தியர் குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டு எவ்வாறு அவர்களைக் கட்டுப் படுத்துகின்றனர் என்று நாம் கற்க வேண்டும்.

அடிப்பதென்பது மனதில் ஆற்றாத பாதிப்பை ஏற்படுத்தும். நாம் குழந்தைகளுக்கு விளங்கும் வண்ணம் அவர்களுடன் கதைக்க வேணும். நல்ல விடயங்களைச் செய்யும் போது அவர்களுக்கு ஊக்கமும், பரிசுகளும் வழங்க வேண்டும்.கூடாத விடயத்தைச் செய்யும் போது அவர்கள் மிகவும் விரும்பும் ஒன்றை அகற்றி விடவேண்டும்.அதாவது இண்டைக்கு விளாயட ஏலாது பேசாமப் போய் ஒரு இடத்தை இருக்க வேணும் அல்லாட்டி இண்டைக்கு டிவி பாக்கேலாது என்று சொல்ல வேண்டும்

இன்று ரொரன்ரோவில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகையில் ரொரன்ரோ சுகாதாரச் சேவையினரால் வழங்கப்பட்டிருந்த விளம்பரம் பின்வருமாறு அமைந்திருந்தது.

'பிள்ளைக்குத் தட்டுதல் அல்லது அறைதல் நீங்கள் நினைப்பதைவிட அதிக ஊறுவிளைவிக்கும்.

பிள்ளைகளைப் பேணி வளர்ப்பது எளிதான பணி அல்ல. ஆனால் பிள்ளைக்கு ஊறு விளையா வண்ணம் அதனை நீங்கள் பேணி வளர்க்க வேண்டும். பிள்ளையை ஒழுக்காற்றி வளர்ப்பது பற்றிய மேலதிக விபரங்களிற்கு சுகாதாரச் சேவையை அழைக்கவும்.'

இவ்வாறு அவ்விளம்பரம் அமைந்திருந்தது.

Link to comment
Share on other sites

நாரதர் மூதாதையார் தானே..இப்போ நம்ம அம்மம்மா போல இருக்கோம்..அப்பப்பா போல இருக்கோம் எண்டு சொல்லி பெருமை படுவதில்லையா.அது போல இப்படியான சந்தர்ப்பத்தில..மூதாதையார் போல இருப்பதில் தப்பில்லையே..இப்ப செய்தால் தான் அசிங்கம்..அப்போது இருக்காது தானே..இல்லையா சினேகிதி? :P :wink:

Link to comment
Share on other sites

நான் மதிலில் ஏறியதில்லை..ஏன் என்றால் மதில் அவ்ளோ உயரமில்லை..எப்பிடியும் காலில் அடி விழும் தானே சினேகிதி? :cry: ஓடுவதே சகிக்கு மேல்! :arrow:

நிலா சொட்டுறதுக்கு யாழ்ல யாருமில்லையென்றுதான் அப்படி சொன்னேன் குட்ட எல்லாம் மாட்டன். :oops: :oops:

ம்ம்..நானும் உடனே இந்த அடிக்குற வாத்தியார்களை நினைத்தேன்..சிலர் அடிக்கிறதை ஒரு தனி இன்றெஸ்ற் எடுத்து செய்வார்கள் இல்லையா??? :twisted:

நிலா வாத்தியாரை நக்கல் அடித்து அடி வாங்கி இருக்கிறார். எனக்கு அவ்ளோ துணிவில்லை. ஆனால்..எங்க ஊரில ஒரு வாத்தி இருக்கார். ஸ்கொலசிப்புக்கு படிப்பிப்பார்..அவரட்ட அடி வாங்காமல்..படித்து முடித்தால்..அதுக்கு அவார்டே குடுப்பார்கள்..அப்பிடி ஒரு வாத்தி. டென்சன் பார்ட்டி. எல்லாத்துக்கும் அடிப்பார். சில வேளை வீட்ட துரத்தி விட்டு..அம்மாவை அல்லது அப்பாவை கூட்டி வர வைப்பார். அப்போ அடி டபுள்..வீட்டயும் விழுமெல்லோ...ஆனால் அவர் நல்லா படிப்பிப்பார். எல்லாரும் பாஸ் பண்ணுவாங்கள். அதனால வீட்டில அடிப்பார் எண்டு தெரிஞ்சும் கொண்டு போய் விடுவார்கள் :cry:

அப்பிடி நானும் போனேன்..எங்க வீட்டில அக்காவும் அண்ணாவும் அவரட்ட அடி வாங்கல..என்னையும் வாங்க கூடாது எண்டு சொல்லி சொல்லி அம்மா விட்டாங்க. நானும் முடிஞ்சவரை படிச்சேன்..ஆனால் என் கெட்ட நேரம்..என்னோட படிக்கிற பெடியன் அவன் நல்ல பெடியன்..ஓட்ட போட்டி வைச்சதாய் சொன்னேனே அவன்..அவன் ஒரு பிழையும் செய்யல..அவர் வீட்டு கொதில வந்து..அவன் கொம்பாசை வைச்சு சத்தம் போட்டதாக..சொல்லி பேசினார்..அவனும் இல்லை இல்லை எண்ட..வீட்ட துரத்தினார்..எனக்கு ஒரே பாவமா இருந்திச்சு..நான் பின்ன.அவன் சத்தம் போடல எண்டு..அவனுக்காக கதைக்க போக..அவனை துரத்திட்டு..எனக்கு அடி. :cry:

அதுதான் வாங்கிட்டேன்..வீட்டில..வேற பேச்சு.

இப்படி வாத்தியார்கள் நிறைய அநியாயம் செய்தார்கள்.இப்பவும் செய்கிறார்கள்..தங்கட கோவம் எல்லாம் எங்க மேல காட்டிவார்கள்..எனக்கு சுத்தமாக பிடிக்காது..அருவி போட்ட நியூஸ் போல..நம்ம ஊரிலலாம் வந்திருந்தா..இவ்ளோ அடி விழுந்திருக்காது இல்லையா. :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.