Jump to content

'தமிழ்நாடு' எல்லைப் போராட்டம் - சோக வரலாறு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ma.po.si..jpg

[size=3]ம.பொ.சிவஞானம்(ம.பொ.சி)[/size]

'தமிழ்நாடு எல்லைப் போராட்டம்' என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு.

வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதரங்கள் உண்டு.

தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது. எல்லைப்போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், தளபதி விநாயகம், மங்களம்கிழார், ரஷத் போன்றவர்களெல்லாம் வெகுண்டெழுந்து போராடினார்கள். ஏராளமான தமிழரசுக் கழகத் தோழர்கள் சிறைப்பட்டார்கள். இரண்டு பேர் உயிர் இழந்தார்கள். அது ஒரு நெடிய வரலாறு.

"யானை வாயில் போன கரும்பு திரும்பி வருமா...?" என்றால், "வராது" என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் வந்தது.

திருத்தணியும் சேர்ந்து ஆந்திராவிற்கு போய்விட்டது. மொழி வாரி ஆணையம், சர்தார் கே.எம்.பனிக்கர் தலைமையிலே மத்திய அரசு அமைத்த ஆணையம், சித்தூர் மாவட்டம் முழுவதையுமே ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட காலகட்டத்தில் ம.பொ.சி மட்டும் அதை ஏற்கவில்லை.

அவர் சொன்னார், "மாலவன் குன்றம் போனால் என்ன..? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டுமென்று". அதற்காக போராடினார். பெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டு அது கடைசியாக திருத்தணி தாலுகாவை தமிழ்நாட்டிற்குத் திருப்பிக்கொடுத்தது. யானைவாயில் போன கரும்பை மீட்டு வந்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி என்றால் அது மிகையாகாது. அவர் பேராடியிருக்காவிட்டால் திருத்தணி இன்று நம்மோடு இல்லை.ஆந்திராவோடுதான் இருந்திருக்கும்.

சோகவடிவமான தெற்கெல்லைப் போராட்டம்:

அதேபோல், தெற்கெல்லையில் நடந்த போராட்டமென்பது மிகவும் சோகவடிவமானது. நேசமணி, நத்தானியல் பி.எல்.மணி, காந்திராமன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து போராடினார்கள்.

"திருவிதாங்கூர்" சமஸ்தானத்தில் இருந்த நாஞ்சில் நாட்டுப் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று அவர்கள் போராடினார்களே தவிர, தமிழ் நாட்டுத் தலைவர்கள் யாரும் அதற்காக போராடவில்லை. ஏறத்தாழ 12 பேருக்கும் மேலே அன்றைக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை, பிரஜா சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர். அவரும் காங்கிரசும் சேர்ந்து அங்கே ஆட்சியமைத்தார்கள். குமரி மாவட்டத் தமிழர்கள், நாங்கள் தமிழ்நாட்டோடுதான் இருப்போம் என்று போராடியபோது, பட்டம் தாணுப் பிள்ளை போராடியவர்களை சுட்டுத்தள்ளச் சொல்லி வெறித்தனமாக உத்தரவிட்டார். ஆனால் அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த டாக்டர் லோகியா கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டார்.

ஒரு சோசலிஸ்ட்டு ஆட்சியில், ஜனநாயக முறையில் போராடிய மக்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அதைவிட மோசம், கொடுமை அங்கே 12 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக பட்டம் தாணுப் பிள்ளை தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு டாக்டர் லோகியா அறிக்கை வெளியிட்டார். இதெல்லாம் வரலாறு.

நேசமணி போன்றவர்கள் போராடியதன் விளைவாக குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாவது நம்மோடு சேர்ந்தது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியன எல்லாம் பறிபோனாலும் குமரி மாவட்டம் நம்மோடு சேர்ந்தது. இதற்கு குமரி மாவட்ட மக்களின் போராட்டமும், தியாகமும்தான் காரணம். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நேசமணி, ம.பொ.சி போன்றவர்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் இந்த பகுதிகளை எல்லாம் இழந்திருக்கமாட்டோம்.

‘மதராஸ் மனதே’ ஆந்திரர்களின் ஒற்றுமை - முறியடித்த ம.பொ.சி :

‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் போராடினார்கள். ஆந்திரர்களின் ஒற்றுமைக்குக் காரணம் என்ன?

ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும், அதாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிரஜா, சோசலிஸ்ட் என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் "ஆந்திர மகாசபை" என்ற குடையின் கீழ் ஒன்றாக நிற்கிறார்கள். விசால ஆந்திராவில் எந்தெந்தப் பகுதிகள் இருக்கவேண்டும் என்பதை அவர்கள் கட்சி சார்பில் போராடவில்லை. ஆந்திரர் என்ற ஒரே உணர்வுடன் ஆந்திர மகாசபையை அமைத்துப் போராடினார்கள். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு குடையின் கீழ் இணைந்து போராடவில்லை என்று ம.பொ.சி தனது நூலில் மிகவும் துயரத்துடன் எழுதியுள்ளார்.

ஆந்திரர்கள் எந்த அளவிற்கு ஒன்றுபட்டிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக இருந்த அனந்த சயனம் ஐயங்காரும் விசால ஆந்திராவிற்கு ஆதரவு கொடுத்ததை கூறலாம். இவர்களின் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவிகள். ஆனால், ராதாகிருஷ்ணனும், அனந்த சயனமும் மத்திய அரசியலில் அங்கம் வகித்த ஆந்திரர்களுடன் ஒன்று சேர்ந்து விசால ஆந்திரத்தில் சித்தூரும், சென்னையும் சேர்க்கப்படவேண்டும் என்று பிரதமர் நேருவுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் ம.பொ.சி சென்னை நகரசபையில் ஆல்டர் மேனாக இருக்கிறார். சென்னை மேயராக இருந்தவர் செல்வராயன். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ம.பொ.சியும், செல்வராயனும் சேர்ந்து, உறுப்பினர்களின் ஆதரவையெல்லாம் ஒன்று திரட்டி, சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமென்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். மிகப் பெரும்பான்மையான ஆதரவுடன் தீர்மானத்தை கொண்டுவந்தார்கள் அந்தத் தீர்மானம்தான் அன்றைக்கு நேரு மனதை மாற்றியது.

அதற்குமுன் நேரு என்ன செய்தார்... ? ஆந்திரர்கள் 'மதராஸ் மனதே' என்கிறார்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன், அனந்த சயனம் ஐயங்கார் போன்றவர்களும் வற்புறுத்துகிறார்கள், ஆகவே நேரு ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்திற்கு ஆளாகி, அவர் என்ன சொன்னார் என்றால்... இரண்டு மாநிலங்களுக்கும் சேர்ந்து சென்னை பொதுத் தலைநகரமாக இருக்கும் என்று சொன்னார். பஞ்சாப்பிற்கும், ஹரியானாவிற்கும் பொதுத் தலைநகரமாக சட்டீஸ்கர் இருப்பதைப் போல். சட்டீஸ்கர் யாருக்கு சொந்தமென்று அன்றைக்கு முடிவு செய்யாத காரணத்தால் இன்றைக்கும் சண்டை நடக்கிறது. இதைப்போல நேரு ஒரு முடிவு சொன்னார். அப்போது ம.பொ.சி வெகுண்டெழுந்து செல்வராயன் துணையுடன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அதுமட்டுமல்ல, அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு, காமராசர் தலைமையில் கூடி சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்று தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி நேருவுக்கு கடிதம் எழுதினார்.

சென்னை நகரம், தமிழர்களுக்கு சொந்தமானது. ஆந்திரர்கள் தனி மாநிலம் வேண்டுமென்று கேட்டப்பிறகு அவர்கள் பிரிந்துபோய் தனித் தலைநகரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டுமே அல்லாமல், சென்னை நகரத்தை உரிமைக்கொண்டாட அவர்களுக்கு உரிமை கிடையாது. சென்னை நகரம் தமிழர்களுக்கு சொந்தமானது. ஆனால் சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு சொல்வீர்களேயானால், இந்தக் கடித்தத்தையே எனது ராஜினாமாவாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதியிருந்தார். அப்படி எழுதுவதற்கான துணிவு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு இருந்தது. அதன் பின்னணியில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி இருந்தார் என்பது மறுக்கமுடியாத வரலாறு.

அதேபோல், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று கேரளர்கள் போராடிக்கொண்டிருந்த போது, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஏ.கே.கோபாலன் தேவி குளம், பீர்மேடு எங்களுக்குதான் சொந்தமென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஜீவானந்தம் கொதித்தெழுந்தார்.

உண்மையான கம்யூனிஸ்ட்டு இப்படி பேசமாட்டான். ஏ.கே.கோபாலனின் இந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். தேவிகுளம், பீர்மேடு சர்ச்சைக்குரிய பகுதி. எங்களுக்கும் அதிலே உரிமையிருக்கிறது ஆகவே, ஏ.கே.கோபாலன் கருத்தை தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லும் துணிவு ஜீவானந்தத்திற்கு இருந்தது. அதன் காரணமாக அவர் கட்சிக்குள்ளே பிரச்சனைகள் எல்லாம் வந்தன. ஜீவானந்தம் அதையெல்லாம் சந்தித்தார்.

இப்படி தமிழ் நாட்டு எல்லைப் பகுதிக்காக இவர்கள் எல்லோரும் போராடினார்கள்.

[size=4]-பழ.நெடுமாறன்[/size],நக்கீரன் இதழில்.

[size=4][size=3]http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=102 [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]'மதராஸ் மனதே' கோஷமும், தமிழர் தலைநகர் மீட்பு போராட்டமும்![/size]

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி 'மெட்ராஸ் பிரசிடென்சி' செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய "மெட்ராஸ் ஸ்டேட்" உருவானது.

துவக்கத்தில், மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. பின்னர்தான் தற்போதைய பெயர்கள் இடப்பட்டன. 1968ல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டது.

முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் மதராசைத் தலைமையிடமாகக் கொண்டு, ஆந்திரப் பிரிவினையைக் கோரினார். 1952 அக்டோபர் 14ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். ஆந்திரத் தலைவர்கள் பிரகாசம், சாம்பமூர்த்தி ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவை, ம.பொ.சிவஞானம் சந்தித்தார். அப்போது, பிரகாசம், ம.பொ.சி.,யிடம், "ராமுலுவின் உயிரைக்காக்க உதவுங்கள்' எனக்கோரிக்கை விடுத்தார்.

ஆனால், மெட்ராசை விட்டு விட்டு, ஆந்திராவை மட்டும் பிரிக்கக் கோரினால் தாமும், தமிழரசுக் கழகமும் உதவுவதாக மா.பொ.சி., உறுதியாகத் தெரிவித்து விட்டார். "ஆந்திர அரசு தற்காலிகமாக சென்னையில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும், விசால ஆந்திரம் அமையும் போது, ஹைதராபாத் கிடைத்து விட்டால் அங்கு போய்விடுவோம். நீங்கள் சம்மதித்தால் மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்' என்று அவர்கள் தந்திரமாகக் கேட்ட போதும், ம.பொ.சி., தன் நிலையில் இருந்து பின்வாங்கவில்லை.

1952, டிசம்பர் 15ல் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தின் போதே உயிர் துறந்தார். ஆந்திராவில் கலவரம் வெடித்து, மூன்று நாட்கள் நீடித்தது. நேரு, ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க சம்மதித்து வெளியிட்ட தன் அறிக்கையில், "சென்னை நகரம் அல்லாத, தகராறுக்கு இடமல்லாத, தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும். தலைநகர் பின்னர் அறிவிக்கப்படும்' எனக் குறிப்பிட்டார்.

சித்தூர் மாவட்டத்தின் தென் பகுதிகள் தமிழகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழரசுக் கழகம் வலியுறுத்தி வந்தது. இதனால், ஆந்திராவுடன் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியது.

"கூவத்தை அடிப்படையாகக் கொண்டு, தென்சென்னை தமிழகத்தின் தலைநகராகவும், வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும் செயல்படலாம். அல்லது சென்னை நகரம் இரு மாநிலங்களுக்கும் பொதுநகராக இருக்க வேண்டும்', என்ற கோரிக்கையை பிரகாசம் வலுவாக முன்வைத்தார்.

அப்போது சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மேனாக இருந்த ம.பொ.சி., இதற்குச் சம்மதிக்காததோடு, கடும் எதிர்ப்பையும் தெரிவித்தார். "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் துவக்கினார். அப்போதைய மேயர் செங்கல்வராயனின் உதவியுடனும், முதல்வர் ராஜாஜியின் ஆதரவுடனும், திருவல்லிக்கேணி கடற்கரையில், எஸ்.எஸ்.,கரையாளர், பக்தவத்சலம், ராஜாஜி, ஈ.வே.ரா., போன்ற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார்.இவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, "ஆந்திர தலைநகர், ஆந்திராவுக்குள்ளேயே இருக்கும்" என, நேரு அறிவித்தார்.

ம.பொ.சி., ஆல்டர்மேனாக இருந்த போதுதான், ஆங்கிலேயேர்கள் சென்னை மாநகராட்சிக்கு வடிவமைத்திருந்த கொடியை மாற்றி, மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்களுடன் கூடிய தற்போதைய இலச்சினையைப் பொறித்தார். மாநகராட்சியின் வரவு செலவுக் கணக்கை முதன்முதலில் தமிழிலேயே தாக்கல் செய்தார்.

'மதராஸ் மனதே' கோஷத்தை முன்வைத்து பொட்டி ஸ்ரீராமுலு நடத்திய "மிஷன் மெட்ராஸ்" படுதோல்வி அடையக் காரணம் ம.பொ.சி.,யும், ராஜாஜியும்தான். ராஜாஜிக்கு எதிராக தெலுங்கர்கள் "ராஜாஜி சாவாலி, ஆந்திர ராஷ்ட்ரம் ராவாலி" எனக் கோஷம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

" உரிமைக்கு எல்லை, வேங்கடம்(திருப்பதி), உறவுக்கு எல்லை இமயம்' என, ம.பொ.சி., எல்லைப் போராட்டம் திருப்பதியை மீட்டுத்தர இயலாவிட்டாலும், திருத்தணியைத் தக்கவைக்க உதவியது.

முதலில், 1953ல் கர்நூலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. 1956ல் தெலங்கானா ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட பின்னரே, ஹைதராபாத் தலைநகராக மாற்றப்பட்டது.

[size=3]மூலம்: தினமலரில் "சென்னை நாள்" மலர்.[/size]

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது பெருந்தன்மையாலேயே அடுத்தவனுக்கு விட்டுக்கொடுத்து தானே அழிந்தவன் தமிழன்.

1950-களில், மொழிவழி மாநிலப் பிரிவினை சமயத்தில், தேவிகுளமும் பீர்மேடும் தமிழகத்துடன்தான் இணைக்கப்படவேண்டும் என்று ம.பொ.சிவஞானம். குரல்கொடுத்தார். ஆனால், "குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளதானே இருக்குண்ணேன்" என்று நக்கலாக பெருந்தன்மையோடு(?) பேசியுள்ளார் காமராஜர்.

"அங்கு மலையாளிகள்தான் அதிகம், கேரளத்தோடுதான் சேர்க்கணும்னு பணிக்கர் சொன்னார். சரின்னுட்டேன்'" என்று விட்டுக்கொடுத்துள்ளார் பெரியார்.

மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக் கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, "ஜஸ்டிஸ் சையத் பசல் அலி" என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் நேரு. இக்குழுவில் "சர்தார் கே.எம்.பணிக்கர்" மற்றும் "பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு" ஆகியோர் உறுப்பினர்கள்.

தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம், பீர்மேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார் பணிக்கர்.

kmpanikkar.jpg

[size=3]மலையாளி கே.எம்.பணிக்கர்[/size]

ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளார்:

"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.

அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.

தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம்,பீர்மேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும்? என்றும் கேட்டார்.

அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார். "

[size=3]மூலம்:http://maposi.blogspot.com/[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1917ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சி மொழிவாரி மாநில காங்கிரஸ் அமைக்க ஒப்புக் கொண்டுவிட்டது என்பதுதான், மொழிவழி மாநிலம் பிறந்ததற்கு ‘கரு’ப்பருவம். மொழிவாரி காங்கிரஸ் சீரமைப்பை அண்ணல் காந்தி ஊக்குவித்தார், ஆதரித்தார்.

1937ல் நேருவின் கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. ஆனால் 1947ல்அவர் வேறு சிந்தனை கொண்டிருந்தார். நாடு அப்போதுதான் இந்தியா-பாகிஸ்தான் என மத அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும், அதை மொழிவாரியாகப் பிரிப்பது, இந்திய யூனியன் சிதறுவதை ஊக்குவிப்பதாகாதா? என்று நேரு அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

1947 நவம்பரில் “மொழிவாரி மாநில சீரமைப்பு ஒத்திப் போடப்படுவது தற்போது உள்ள சூழ்நிலையில் ஓரளவு நியாயமானதே” என்று அண்ணல் காந்தியடிகளும் நேருவின் கருத்தை வழிமொழிந்து எழுதினார். தற்காலிகமாக மொழிவாரி மாநிலப் பிரிவினை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு மராத்திய மொழி பேசும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தனி மராத்திய மாநிலத்தை வற்புறுத்தினர். குஜராத்தியைத் தாய்மொழியாகக்கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், அதேபோல அவர்களுக்கு ஒரு சொந்த மாநிலம் கோரினர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது ஒரியா மொழி பேசுபவர்களின் லட்சியமும் அவ்வாறே இருந்தது.

இக்கூக்குரலை அமைதிப்படுத்த ஒரு புதிய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் பிரதமராக இருந்த நேரு, உள்துறை அமைச்சராக இருந்த வல்லபபாய் படேல், காங்கிரஸ் கட்சியின் வரலாறு எழுதிவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான பட்டாபி சீதாராமைய்யா மூவரும் இருந்தனர். இதை ஜே.வி.பி. குழு என்று அழைக்கப்பட்டது.

இக்குழு மொழிவாரி மாநிலக் கொள்கைக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தது. “மொழி ஒன்றிணைக்கும் சக்தி மட்டுமல்ல, பிரிக்கும் சக்தியும்கூட” என்று வாதிட்டது. ஆனால் காலம் ஜே.வி.பி. குழுவின் கருத்தை நிராகரித்தது.

1952ல் ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திர மாநிலப் பிரிவினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். 58 நாள் உண்ணாவிரதத்தில் பொட்டி ஸ்ரீராமுலு டிசம்பர் 15ம் நாள் இறந்தார். அவருடைய மரணச்செய்தி கலவரத்தை விளைத்தது. இதனால் மேலும் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியாத கிளர்ச்சிகள் ஏற்படலாம் என்ற அச்சத்தால் நேருவும் வழிக்கு வந்தார். ஸ்ரீராமுலு மறைவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு “ஆந்திர மாநிலம் அமையும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆந்திரப் பிரதேசம் பிரதமர் நேருவின் விருப்பமின்றியே உருவானது.

மொழிவாரி மாநில கோரிக்கைகள் வலுவடைந்தது. இந்த மொழிவாரி சிக்கலைத் தீர்ப்பதற்கான பரவலான கொள்கை குறித்து பரிந்துரை செய்ய, “மாநிலச் சீரமைப்பு ஆணையம்” ஒன்றை அமைத்தது மத்திய அரசு. அந்தக் குழுவில் நீதிபதியான எஸ். பசல் அலி தலைவராகவும், வரலாற்றாசிரியரும், ஐ.சி.எஸ். அதிகாரியுமான கே.எம்.பணிக்கர் மற்றும் சமூகத் தொண்டர் எச்.என்.குன்ஸ்ரு இருவரும் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்த ஆணையம் 1954, 1955 ஆண்டுகளில் இந்தியா எங்கும் பயணம் செய்தது. பதினெட்டு மாதக் கடுமையான பயிற்சிக்குப் பிறகு 1955 அக்டோபர் மாதம் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். 1956 நவம்பர் முதல் தேதியன்று 21 மொழி வாரி மாநிலங்கள் நடைமுறைக்கு வந்தன.

ஆந்திரப் பிரிவினையின்போதே, "சென்னை நகரம்" ஆந்திராவிற்கு இல்லை, சென்னை மாகாணத்திற்கே என முடிவாகிவிட்டது. வடக்கு எல்லை கிளர்ச்சியின்போது, அதுபற்றி விசாரணை நடத்தத் தனியாக எல்லைக் கமிஷன் நியமிப்பதாக பிரதமர் நேரு உறுதி கூறிவிட்டதால், அந்தப் பிரச்சினையும் பசல் அலி கமிஷன் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

ஆகவே அகில இந்திய ரீதியில் மொழிவாரி மாகாணங்கள் அமைப்பது பற்றியும், தமிழக அளவில் திருவாங்கூர் – கொச்சி சமஸ்தானங்களிலுள்ள தமிழ் தாலுக்காக்கள் பற்றியுமே பசல் அலி கமிஷன் சென்னையில் விசாரணை நடத்தியது.

திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் உள்ள கொச்சின், சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை, நெய்யாற்றின் கரை, விளவங்கோடு, கல்குளம், அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய ஒன்பது தாலுக்காக்களை தமிழ் மாநிலத்தில் அதாவது சென்னை மாகாணத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை மாகாண அரசு கோரியது.

ஆனால், கேரள அரசு வேறு மாதிரியான கோரிக்கையை வலியுறுத்தியது. "சென்னை மாகாண அரசு சொல்வதுபோல செய்தால், கேரள ராஜ்யத்திற்குப் பெரும் கேடு (?) ஏற்படும். அந்தத் தாலுக்காக்களில் வாழும் மக்களின் நலன்களுக்குத் தீங்கு ஏற்படும். இதற்கு மொழி ஒரு ஆதாரமாக இருந்தாலும், அதையே ஒரே ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. பூகோள, சரித்திர, நிர்வாக, பொருளாதாரக் காரணங்களும், புதிய மாநிலங்கள் அமைக்கும் விஷயத்திலும் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டும். இந்த நிலைகளைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால், தமிழ்த் தாலுக்காக்களைத் திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் இருந்து பிரிப்பதற்குக் காரணமே இராது. எனவே அவை கேரள மாநிலத்திலேயே இருக்க வேண்டும்.”

“தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களில் தோட்டத் தொழிலே அதிகம். இந்தத் தாலுக்காக்களில் நிலையான குடிமக்கள் கிடையாது. தோட்டக் காடுகளில் ஒரு வாரத்திற்கு வேலை இல்லையென்றால், இந்தப் பகுதியில் 100க்கு ஒருவர்கூட தங்கியிருக்க மாட்டார்கள். பீர்மேடு, தேவிகுளம் தாலுக்காக்களில் தமிழ் பேசுகிறவர்களும் மலையாளம் பேசுகிறவர்களும் சரிசமமான எண்ணிக்கையில் இருக்கிறார். (இது கேரள அரசு தந்த தவறான தகவல். அப்போது, இந்தத் தாலுக்காக்களில் தமிழர்கள் 82 சதவிகிதம் பேர் இருந்தனர்.) தேவிகுளம், பீர்மேடும்தான் கேரள மாநிலத்திற்கு மலைவாசப் பகுதிகளை அளிக்கவல்லன. மாநிலத்தின் எல்லா முக்கிய நதிகளும் இவ்விரு தாலுக்காக்களில்தான் உற்பத்தி ஆகின்றன. இவற்றில்தான் இந்த மாநிலத்தின் ஹைடிரோ மின்சார அலுவலகமும் பவர் ஸ்டேஷன்களும் இருக்கின்றன.”

“தோவாளை, அகஸ்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தமிழ்த் தாலுக்காக்களும் மிகவும் செல்வம் பொருந்திய பகுதிகளாதலால் இவை கேரளத்திற்குத் தேவைப்படுகின்றன. மேலும், இவைகள் மீன்பிடிக்கும் இடங்களைக் கொண்டிருக்கின்றன. இங்கே முக்கியமான உலோகங்களும், நெல் வயல்களும் உள்ளன.”

கேரளத்தவர்கள் தமிழகத்திலிருந்து கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், உதகமண்டலம் (ஊட்டி) ஆகியவற்றைப் பிரித்தெடுத்து, ஐக்கிய கேரளத்துடன் இணைக்கவேண்டும் என்று விண்ணப்பித்தனர். திருவாங்கூர், கொச்சி ராஜ்யத்தில் உள்ள ஒன்பது தாலுக்காக்களையும் ஐக்கிய கேரளத்திற்கே உரிமையாக்கிவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு வெறியை அன்றைக்கே கேரளத்தினர் வெளிப்படுத்தினர்.

சுருங்கச் சொன்னால், “மலையாள மொழி வழங்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு அங்குலம் விடாமல் – மலையாளிகளுக்கே! இது மொழி அடிப்படையில்! இத்துடன் மலையாள மொழி வழங்கும் கேரள நாட்டின் எல்லையில் உள்ள தமிழ்த் தாலுக்காக்களும் மலையாளிகளுக்கே! இது தேவையின் அடிப்படையில்!” என்பதே கேரளாவின் கோரிக்கையாக இருந்தது.

இவர்கள் இப்படி கேட்கும் அளவிற்குத் துணிவு வந்ததற்குக் காரணம், மலையாளியான கே.எம்.பணிக்கர் குழுவில் அங்கம் வகித்ததாகும். மலையாளி எங்கிருந்தாலும் மலையாளிதானே!

பசல்அலி கமிஷன் (மொழிவாரி மாநிலச் சீரமைப்புக் கமிஷன்) தென்னிந்தியா வந்து விசாரணை நடத்தியபோது மலையாளிகளின் மனப்போக்கு எப்படி இருந்தது? என்பதற்கு, பிரபல கேரள வழக்கறிஞர் மன்னார் திரு. கோவிந்தப்பிள்ளை என்ற மலையாளி "கொல்ல கொளத்தூர்" என்ற ஊரில் கூடிய நாயர் சமுதாய சங்கக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் உதாரணம்.

“இந்தியாவில் எங்கெங்கும் மலையாளிகள் செல்வாக்குப் பெற்றுள்ள காலம் இது. சர்தார் கே.எம்.பணிக்கர் கூறுவதுதான் பிரதமர் நேருவுக்கு வேதவாக்காகும். பணிக்கரும் அவரது கூட்டத்தினரும் நினைத்தது போலவே காரியங்கள் நடக்கின்றன.”

“சர்வதேச நெருக்கடிகளுக்குப் பரிகாரம் காணும் அதிகாரப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பவர் ஒரு மலையாளி.”

“பிரதமரின் வெளிநாட்டுக் கொள்கைகளை அமலாக்குபவர் ஒரு மலையாளி.”

“பீஜிங்கிலும், மாஸ்கோவிலும், வாஷிங்டனிலும், இன்று பாரத நாட்டின் சார்பில் பிரதிநிதித்துவம் வகிப்பவர்கள் மலையாளிகளே.”

இந்திய ஜனாதிபதியின் மூன்று மெய்க்காப்பாளர்களில் இருவர் மலையாளிகளே.”

“நேருவின் அந்தரங்கச் செயலாளரும் ஒரு மலையாளிதானே!”

- (தினமலர் – 15-9-1955)

இந்தப் பின்னணி பலத்தால்தான் கேரளத்தவர்கள் ‘ஐக்கிய கேரளம்’ என்ற பெயரில் தமிழகத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு ‘ஆதிக்க கேரளம்’ அமைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பசல் அலி கமிஷன் (மொழிவாரி மாநிலச் சீர்திருத்த கமிஷன்) பரிந்துரை வருமாறு :

“சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தை கன்னடத்தோடும் சேர்த்துவிட வேண்டும்.”

“திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு, அகஸ்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் வழங்கும் தாலுக்காக்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து தனி ராஜ்யம் அமைக்க வேண்டும். அதன் பெயர் ‘சென்னை ராஜ்யம்’ என்றே இருக்க வேண்டும்.”

“சென்னை நகரம் தமிழ் மாநிலத்திற்குரியதாய் அதன் தலைநகரமாகச் செய்யப்பட வேண்டும்.”

“சென்னை மாநில - ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை அதற்கென நியமிக்கப்படவிருக்கும் ‘எல்லைக் கமிஷன்’ கிராம அடிப்படையில் திருத்தி அமைப்பதை கமிஷன் ஏற்றுக்கொள்கிறது.”

இதுதான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பசல் அலி கமிஷன் தீர்ப்பாக இருந்தது.

தேவிகுளம் - பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்திற்குத் தரமுடியாது என்பதற்கு கமிஷன் கூறியிருந்த காரணங்கள் எல்லாம் போலித்தனமானவை. ஒருதலைபட்சமானவை. நடுவு நிலையில் இருந்து பிறழ்ந்தவை. மாநிலங்களை மொழி அடிப்படையில் திருத்தி அமைக்க ஒப்புக்கொண்ட பசல் அலி கமிஷன் தமிழக – கேரள எல்லைகளைத் திருத்தி அமைப்பதில் மொழி அடிப்படையை ஏற்க மறுத்திவிட்டது.

“தேவிகுளம் – பீர்மேடு தாலுக்காக்கள் விஷயத்தில் மொழிவாரி கொள்கையை கமிஷன் முக்கியமாகக் கருதமுடியாது.”

“பல்வேறு பொருளாதார காரணங்களையும், மற்ற காரணங்களையும் உத்தேசித்து தேவிகுளம் – பீர்மேடு தாலுக்காக்கள் திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்திற்குத் தேவையானவை.” என்பது கமிஷனின் வாதமாக இருந்தது.

தேவிகுளம் – பீர்மேடு போன்ற தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் கொள்ளைபோனது மட்டுமின்றி ‘தமிழ்நாடு’ என்கிற தன்மானப் பெயர் கோரிக்கையை ஏற்க மறுத்து ‘சென்னை ராஜ்யம்’ என்று அன்னியர் வைத்த அவமானப் பெயரே நீடிக்க வேண்டுமென்று கமிஷன் தந்த பரிந்துரையை இந்திய அரசும் தனது பிரகடனத்திலே உறுதிப்படுத்தியது.

இந்த நேரத்தில் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப் பிள்ளை, ஒரு காரியம் செய்தார்.

  • தேவிகுளம், பீர்மேடு பகுதியில் தமிழர்களின் பெரும்பான்மையைக் குறைக்க புதிதாக மலையாளிகளைக் குடியேற்றினார். கொச்சின் – திருவாங்கூர் சிறைச்சாலைகளில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளையும், மற்ற கைதிகளையும் விடுதலை செய்தார்.

  • அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஏக்கர் விவசாய நிலம், கூட்டுறவுக் கடன் வசதி, ரொக்கப்பணமாக 5000 ரூபாய் கொடுத்து, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் குடியேறச் செய்தார்.

  • அப்படிக் குடியேறிய பகுதிகள்தான் இப்போது கேரளாவில் இருக்கிற கம்பம்மெட்டு, தூக்குப்பாலம், ஆனவிலாசம், உடும்பன்சோலை, பாரத்தோடு போன்ற பகுதிகள்.

மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கு மாறாக நேரு அவர்கள் திடீர் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். இந்தியாவை ஐந்து ராஜ்யங்களாகச் செய்யும் ‘தட்சிண ராஜ்யம்’ என்பது அது.

அவை தட்சிண (தெற்கு) ராஜ்யம், உத்திர (வடக்கு) ராஜ்யம், மேற்கு ராஜ்யம், கிழக்கு ராஜ்யம், மத்திய ராஜ்யம் என்பனவாகும்.

தட்சிண ராஜ்யம் என்பது தமிழகத்தின் எல்லைப் பகுதிகளை இழந்திருந்த தமிழகத்திற்கு, தீப்பிடித்த வீட்டில் இடியும் விழுந்ததைப் போன்று வேதனையைத் தந்தது.

தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், கிளர்ச்சிகள், கடையடைப்புகள், பந்த் போன்ற போராட்டங்கள் வெடித்தன.போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசியல் கட்சியினர் கூடிப்பேசி, கூட்டணி கண்டனர். 27-1-1956ம் நாளன்று சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள திரு. ஜி. உமாபதி என்பவரது இல்லத்தில் கூட்டம் நடந்தது.

ஆளும் காங்கிரஸ் சார்பில் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தி.மு.கழகம் சார்பில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஜஸ்டிஸ் கட்சி சார்பில் சர் பி.டி.ராஜன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப.ஜீவானந்தம், மணலி கந்தசாமி, தமிழரசு கழகம் சார்பில் ம.பொ.சிவஞானம், ஜி. உமாபதி, தி.க.சண்முகம், மேலும் பாவேந்தர் பாரதிதாசன், சி.பா.ஆதித்தனார், நாரண.துரைக்கண்ணன், பன்மொழிப்புலவர் க. அப்பாதுரை மற்றும் சில சிறிய அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவிற்குத் தலைவராக பி.டி.ராஜன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

ஹர்த்தால் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. ஹர்த்தால் வெற்றிபெற பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அண்ணா அவர்கள் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் பேசி மக்கள் ஆதரவைத் திரட்டினார். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டியிலும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சியிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுவிட்டது.

நேரு கொண்டுவந்த தட்சிணப் பிரதேசத் திட்டம் அவராலேயே திரும்பப் பெறப்பட்டது. தமிழ் மாநிலம் அமைவது உறுதியாகிவிட்டது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்திற்குப் பெறமுடியாமலேயே போய்விட்டது.

தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததன் வலியை முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் இப்போது அனுபவிக்கிறோம். முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாட்டில் சேர்ந்திருந்தால் முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டில் இருந்திருக்கும். இடுக்கி அணையும் தமிழ்நாட்டில் இருந்திருக்கும்.

[size=3]நன்றி : முரசொலி (20-1-2012) நாளிதழ்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது உம் கொட்டுங்கப்பா... :)

"ஈழ வரலாறே படுசோகம்..இதில் தமிழர்நாட்டு மறக்கப்பட்ட சோகமுமா?" எனக் கேட்பீர்கள்...அப்படித்தானே? :lol:

Link to comment
Share on other sites

[size=4]ம.பொ.சி [/size]சிறந்த மனிதர் போல.

[size=4]“இந்தியாவில் எங்கெங்கும் மலையாளிகள் செல்வாக்குப் பெற்றுள்ள காலம் இது. சர்தார் கே.எம்.பணிக்கர் கூறுவதுதான் பிரதமர் நேருவுக்கு வேதவாக்காகும். பணிக்கரும் அவரது கூட்டத்தினரும் நினைத்தது போலவே காரியங்கள் நடக்கின்றன.”[/size]

[size=4]“சர்வதேச நெருக்கடிகளுக்குப் பரிகாரம் காணும் அதிகாரப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பவர் ஒரு மலையாளி.”[/size]

[size=4]“பிரதமரின் வெளிநாட்டுக் கொள்கைகளை அமலாக்குபவர் ஒரு மலையாளி.”[/size]

[size=4]“பீஜிங்கிலும், மாஸ்கோவிலும், வாஷிங்டனிலும், இன்று பாரத நாட்டின் சார்பில் பிரதிநிதித்துவம் வகிப்பவர்கள் மலையாளிகளே.”[/size]

[size=4]இந்திய ஜனாதிபதியின் மூன்று மெய்க்காப்பாளர்களில் இருவர் மலையாளிகளே.”

“நேருவின் அந்தரங்கச் செயலாளரும் ஒரு மலையாளிதானே!” [/size][size=4]

[/size]

இப்பவும் என்னவாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சோகம் என்னவெனில் பக்கத்து மாநிலத்தவ்ன் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன், இன உணர்வோடு தங்கள் மாநிலத்திற்கு சார்பாக போராடுகையில், அது அநியாயமாகவே இருந்தாலும், தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாய் காலத்தில் போராடாமல் தங்களை தாங்களே பெரும் மன்னர்கள் என்ற மனப்பான்மையில் அடுத்தவனிடம் ஏமாந்து போய் நிற்பது இன்றளவும் தொடர்கிறது... :o

ஈழத்தில் நிலைமை இதைவிட மோசம் போல... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் படம் போட்டால் தான் பார்ப்பம்.. :rolleyes::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி கோவிலின் கல்வெட்டுக்கள் தமிழிலேயெ இருக்கின்றதாம்.

தமிழகத்தின் நிலத்தை மட்டுமின்றி இயற்கை வளங்களையும்

பங்கு போட்டவர்களே தமிழகத்திற்குத் தண்ணி காட்டுவது தான் வேடிக்கை

Link to comment
Share on other sites

ஏனைய்யா வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்க? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனே ஆண்ட இந்தியாவில் தமிழனுக்கு எல்லையா ?????

Link to comment
Share on other sites

ஒற்றுமை இன்மையால் தமிழன் இழந்தது அதிகம்.

இதில் சோகம் என்னவெனில் பக்கத்து மாநிலத்தவ்ன் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன், இன உணர்வோடு தங்கள் மாநிலத்திற்கு சார்பாக போராடுகையில், அது அநியாயமாகவே இருந்தாலும், தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாய் காலத்தில் போராடாமல் தங்களை தாங்களே பெரும் மன்னர்கள் என்ற மனப்பான்மையில் அடுத்தவனிடம் ஏமாந்து போய் நிற்பது இன்றளவும் தொடர்கிறது... :o

ஈழத்தில் நிலைமை இதைவிட மோசம் போல... :wub:

நீங்களாவது பரவாயில்லை. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக் கொன்று கொண்டே தனிநாடு கேட்டுப் போராடியது பெரும் சோகம். :(

Link to comment
Share on other sites

நானும் இந்த துன்பக் கதைகளை நெடுமாறன் ஐயா எழுதிய தமிழன் இழந்த மண் என்ற புத்தகத்தில் வாசித்திருக்குறேன். தமிழன் என்றாலே இளிச்ச வாயன் தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.