Jump to content

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்!!


Recommended Posts

வணக்கம் ,

கருத்துக்களத்தில் பலபகுதிகள் இருந்தாலும் சிறுவர்களை ( மழலைகள் ) கவரும் வண்ணமான பகுதிகள் இல்லாதது ஒரு குறையாக எனக்குத் தெரிகின்றது . எனவே சிறுவர்களுக்கான ஆக்கங்களுக்காக " சிறுவர் பூங்கா " என்ற பகுதியை கருத்துக்களத்தில் சேர்க்க முடியுமா ?? சிறுவர்களுக்கான சுய படைப்புகள் எந்தமொழி ஆயினும் அதன் தமிழ் மொழி பெயர்ப்புடன் வந்தால் கள உறவுகள் அவர்களை ஊக்குவிக்க இலகுவாக இருக்கும் . இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் எவ்வளவு காலத்துக்கு நாங்கள் இந்த இணையத்தை உறுட்டுவது ? நீண்டகாலநோக்கில் இளையவர்களது பங்களிப்பு இந்த இணையத்திற்கு அத்தியாவசியமாகின்றது . அதன் ஆரம்பக்கட்டமாக கள உறவு லியோ கவிதைப்பூங்காவில் ஆரம்பித்த சிறுவர் பாடல்கள் இருக்கின்றது . இதைப்போல பல மழலைகள் சுய படைப்புகள் , இணைப்புகள் வரவேண்டுமானால் சிறவர் பூங்கா என்ற பகுதி வரவேண்டும் என நினைக்கின்றேன் . உங்கள் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் பதியுங்கள் . நிர்வாகமும் கவனத்தில் எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி இதன்மூலம் எமது சிறுவர்களும் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியும் இது பற்றி நிர்வாகம் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகின்றேன் :)

உங்களின் ஆக்கபூர்வமான ஜோசனைக்கு எனது நன்றிகள் சகோதார !

Link to comment
Share on other sites

நல்லதொரு கோரிக்கை கோம்ஸ்.. :D இதை நான் வழிமொழிகிறேன்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு கோரிக்கை கோம்ஸ்.. :D இதை நான் வழிமொழிகிறேன்..!!

அதே தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில் உடன்பாடு இல்லை சிறுவர்களுக்கு என தனிப் பகுதி தொடங்கினால் யாழ் இன்னும் கட்டுப்பாடோட இயங்க வேண்டும் அது கஸ்டம்...சிறுவர்கள் பார்ப்பார்கள் என்பதற்காகவே இன்னும் கட்டுப்பாடோட நாங்கள் எழுத வேண்டி வரும்

Link to comment
Share on other sites

[size=4]அப்படியானால் இப்பொழுது உள்ள 'அடல்ஸ் ஒன்லி' பக்கங்களை முதலில் [/size][size=4] [/size]மூடவேண்டும் :D

Link to comment
Share on other sites

அப்படியானால் இப்பொழுது உள்ள 'அடல்ஸ் ஒன்லி' பக்கங்களை முதலில் மூடவேண்டும் :D

இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நீங்கள் சொல்லுற அட்லஸ் ஓன்லி பாலியல்கல்வி சமாச்சாரம் எல்லாம் சிறுவர்கள் ஏற்கனவே படித்துவிட்டார்கள் . யாழ்தான் சொல்லி கொடுக்கவேணுமெண்டில்லை .

Link to comment
Share on other sites

யாழில் சில வருடங்களிற்கு முன்னர் அப்படியொரு பகுதி தொடங்கப்பட்டது ஆனால் அதற்கு பெருமளவு வரவேற்று கிடைக்கவில்லையென நினைக்கிறேன் நிறுத்தப்பட்டுவிட்டது

Link to comment
Share on other sites

திறவுங்கள் ,திறவுங்கள் .............முக்கியமான ,தேவையான ஒன்று .எம்மை விட எம் குழந்தைகளை உற்சாகப்படுத்தி அவர்களை பக்குவமுள்ள படைப்புக்களை உருவாக்குவதற்கு இந்தப்பகுதி அவசியமானது .நன்றி கோ அண்ணா இப்படியான சிந்தனையை ,இங்கே முன்வைத்ததற்கு .............நிர்வாகத்திற்கு இதனால் என்ன என்ன சிக்கல்கள் இருக்கும் என்பதையும் என் மனதில் போட்டு ......நானும் இதை வலியுறுத்துகிறேன் ...........பல

கோணங்களிலும்

சிந்திதிதுபாருங்கள் .............சாத்தியக்கூறுகள் தென்பட்டால் முயற்சித்துப்பாருங்கள் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடருங்கோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...showtopic=12138

http://www.yarl.com/...showtopic=16371

நல்லவிடயம்...ஒருமுறை மோகன் வழியமைத்து தந்த ஞாபகம்...முன்னெடுக்கப்படவில்லை என நினைக்கின்றேன் :rolleyes:

Link to comment
Share on other sites

தனிப்பட்ட ரீதியில் எனக்கு(ம்) இதில் உடன்பாடில்லை. யாழ் களம் வயது வந்தவர்களுக்கான வயதில் பக்குவமடைந்தவர்களுக்கான ஒரு களமாகவே உணர முடிகின்றது. அரசியல், சினிமா, பேசாப்பொருள்(கள்), கவிதைகள், சிறுகதைகள், சமூகச் சாளரம் என்பன எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னரே வாசிக்க வேண்டியவை. சிறுவர் சிறுமியர்கள் பார்க்கின்ற ஒரு தளத்தில் எழுதக் கூடாத விடயங்கள் பலவற்றை பல பகுதிகளில் கொண்டிருக்கும் யாழ் களத்தில் சிறுவர் பகுதி கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பகுதியாகும்.

உறுப்பினர்களாக சேரும் போது 18 வயதுக்குட்பட்டவராக மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது. :)

Link to comment
Share on other sites

உறுப்பினர்களாக சேரும் போது [size=5]18 வயதுக்குட்பட்டவராக[/size] இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது. :)

:wub: :wub:

Link to comment
Share on other sites

:wub: :wub:

ஹி ஹி tongue slip ஆகிட்டுது... 18 வயதுக்கு மேற்பட்டவராக என்று எழுதி இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை குட்டீஸ் வரக்கூடிய இடமாக மாற்றலாம். குட்டீஸ் வந்து பெரியவங்க பண்ணுற அசிங்கப் பக்கங்களை பார்க்க முடியாத வகைக்கு லொக் பண்ணிட்டு.. அவங்க பார்க்கக் கூடிய பக்கங்களைப் பார்க்கப் படிக்க.. வகைக்கு பண்ணிக்கலாம்.

என்ன குட்டீஸ் எல்லாம் 16 வயசுக்கு உட்பட்டதுங்க என்று சொல்லியா பதியப் போகுதுங்க.. அதுகளும் 18+ என்று போட்டிட்டு.. பதிஞ்சா.. யார் கண்காணிக்கிறது..! அங்க தான் சிக்கலே..! :lol::icon_idea:

அண்மையில் ஒரு பள்ளிக்கு அருகில் உள்ள கடையில பார்த்தன்.. adult magazines வைச்சு விக்கிறாங்க. அதில 16+ என்று வேற போட்டிருக்குது. ஆனால் டிஸ்பிளேல போய் யாரும் எடுத்துப் படிக்கலாம். கடைக்கு வாற குட்டீஸ் எல்லாம் அது தான் படிக்குதுங்க..! இதில இன்னொரு வேடிக்கை என்னென்ன.. முன்னது பறுவாயில்லை.. இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!

அதுமட்டுமில்லாம இணையத்தில.. adult சமாச்சாரங்கள் குப்பை போல குவிஞ்சு கிடக்குது. அங்க கட்டுப்பாடு போடுவதே சிரமமான காரியமா இருக்குது. பள்ளிகளே இதில தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில...

யாழுக்கு வந்து தான் குட்டீஸ் கெடப் போறது என்றில்ல. அதுவும் இல்லாம.. adult விடயங்களை சரியான வகையில தெரிஞ்சு கொள்ளுறதால குட்டீஸ் கெட்டுப் போறாங்க என்றதும் சரியில்ல. adult விடயங்களை குட்டீஸ் ஒளிச்சு மறைச்சு அறிஞ்சு செய்ய விளையுறதுதான் ஆபத்தே..! :icon_idea:

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி.

முன்பு வேறு திரியில் மழலைகளுக்கும், பதின்ம வயதினர்களுக்கும் தனிப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன். வயது வந்தவர்களுக்கான பிரச்னையை தவிர்க்க, 'யாழ் குட்டீஸ்.கொம்' என்பது மாதிரி சமாந்தரமான இணையம் ஒன்றை உருவாக்கலாம். வேலைப்பளு அதிகமாகும். நிர்வாகத்திற்கு ஆள் உதவி தேவையாயிருக்கும்.

இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!

அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல. :lol:

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி.

முன்பு வேறு திரியில் மழலைகளுக்கும், பதின்ம வயதினர்களுக்கும் தனிப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன். வயது வந்தவர்களுக்கான பிரச்னையை தவிர்க்க, 'யாழ் குட்டீஸ்.கொம்' என்பது மாதிரி சமாந்தரமான இணையம் ஒன்றை உருவாக்கலாம். வேலைப்பளு அதிகமாகும். நிர்வாகத்திற்கு ஆள் உதவி தேவையாயிருக்கும்.

அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல. :lol:

Link to comment
Share on other sites

தனிப்பட்ட ரீதியில் எனக்கு(ம்) இதில் உடன்பாடில்லை. யாழ் களம் வயது வந்தவர்களுக்கான வயதில் பக்குவமடைந்தவர்களுக்கான ஒரு களமாகவே உணர முடிகின்றது. அரசியல், சினிமா, பேசாப்பொருள்(கள்), கவிதைகள், சிறுகதைகள், சமூகச் சாளரம் என்பன எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னரே வாசிக்க வேண்டியவை. சிறுவர் சிறுமியர்கள் பார்க்கின்ற ஒரு தளத்தில் எழுதக் கூடாத விடயங்கள் பலவற்றை பல பகுதிகளில் கொண்டிருக்கும் யாழ் களத்தில் சிறுவர் பகுதி கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பகுதியாகும்.

உறுப்பினர்களாக சேரும் போது 18 வயதுக்குட்பட்டவராக மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது. :)

[size=5]சுண்டல், சுபேஸ் போன்ற குட்டிப் பெடியள் ஏற்கனவே இருக்கினமே![/size]

அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல. :lol:

:lol:

Link to comment
Share on other sites

இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நீங்கள் சொல்லுற அட்லஸ் ஓன்லி பாலியல்கல்வி சமாச்சாரம் எல்லாம் சிறுவர்கள் ஏற்கனவே படித்துவிட்டார்கள் . யாழ்தான் சொல்லி கொடுக்கவேணுமெண்டில்லை .

[size=4]சரி, மேற்குலக சிறுவர்களுக்கு இது பொருந்தலாம். [/size]ஆனால், ஈழத்தில், தமிழகத்தில் இருந்து சிறுவர்கள் இணைய விரும்பினால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முயற்சி முன்புபும் பலமுறை எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததற்கு காரணம்.

தமிழ் மூலமாக புதிய சந்ததியை இந்த இணையத்துக்கு இழுத்துவரல் சாதாரண விடயமல்ல.

அவர்களது உலகே வேறு.

அதற்கே அவர்களுக்கு நேரம் போதாது.

வேண்டுமானால் ஒரு இணைப்பாலமாக வேறு இடங்களிலுள்ளதை இங்கும் இங்கு உள்ளதை வேறு பல இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்தி பரவலாக்கி சிறு அறுவடை செய்யலாம்.

Link to comment
Share on other sites

யாழை குட்டீஸ் வரக்கூடிய இடமாக மாற்றலாம். குட்டீஸ் வந்து பெரியவங்க பண்ணுற அசிங்கப் பக்கங்களை பார்க்க முடியாத வகைக்கு லொக் பண்ணிட்டு.. அவங்க பார்க்கக் கூடிய பக்கங்களைப் பார்க்கப் படிக்க.. வகைக்கு பண்ணிக்கலாம்.

என்ன குட்டீஸ் எல்லாம் 16 வயசுக்கு உட்பட்டதுங்க என்று சொல்லியா பதியப் போகுதுங்க.. அதுகளும் 18+ என்று போட்டிட்டு.. பதிஞ்சா.. யார் கண்காணிக்கிறது..! அங்க தான் சிக்கலே..! :lol::icon_idea:

அண்மையில் ஒரு பள்ளிக்கு அருகில் உள்ள கடையில பார்த்தன்.. adult magazines வைச்சு விக்கிறாங்க. அதில 16+ என்று வேற போட்டிருக்குது. ஆனால் டிஸ்பிளேல போய் யாரும் எடுத்துப் படிக்கலாம். கடைக்கு வாற குட்டீஸ் எல்லாம் அது தான் படிக்குதுங்க..! இதில இன்னொரு வேடிக்கை என்னென்ன.. முன்னது பறுவாயில்லை.. இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!

அதுமட்டுமில்லாம இணையத்தில.. adult சமாச்சாரங்கள் குப்பை போல குவிஞ்சு கிடக்குது. அங்க கட்டுப்பாடு போடுவதே சிரமமான காரியமா இருக்குது. பள்ளிகளே இதில தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில...

யாழுக்கு வந்து தான் குட்டீஸ் கெடப் போறது என்றில்ல. அதுவும் இல்லாம.. adult விடயங்களை சரியான வகையில தெரிஞ்சு கொள்ளுறதால குட்டீஸ் கெட்டுப் போறாங்க என்றதும் சரியில்ல. adult விடயங்களை குட்டீஸ் ஒளிச்சு மறைச்சு அறிஞ்சு செய்ய விளையுறதுதான் ஆபத்தே..! :icon_idea:

மிக்க நன்றிகள் நெடுக்கர் உங்கள் நேரத்திற்கும் கருத்துகளுக்கும் . உங்கள் கருத்துத் தான் எனது கருத்தும் . சிறுவர்களை அவர்கள் பகுதிக்கும் பொங்கு தமிழ் தமிழும் நயமும் பகுதிக்குள் விடுவது நல்லது . மற்றயபகுதிகளுக்கு அவர்கள் வரமுடியாது செய்வது நல்லது . யாழாலதான் சிறுவர் கெட்டு போவார்கள் என்ற கருத்துக்கள் நாம் எங்கே நிற்கின்றோம் ?? என்ற இன்னுமொரு கேள்வியையும் எழுப்புகின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் பகுதி யாழுக்குத் தேவையா என்பதை யாழ் நிர்வாகம் தீர்மானிக்கலாம்.

ஆனால் அதனால் வரும் சங்கடங்களையும் நன்றாக யோசிக்க வேண்டும்.

சிறுவர்பகுதி என உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல்

சிறுவர்களுக்கான ஆக்கங்களை முன்னோட்டமாக இணைத்து

அதன் பலன்களை அறிந்து பின்னர் செயற்படுவது நல்லது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

யாழை குட்டீஸ் வரக்கூடிய இடமாக மாற்றலாம். குட்டீஸ் வந்து பெரியவங்க பண்ணுற அசிங்கப் பக்கங்களை பார்க்க முடியாத வகைக்கு லொக் பண்ணிட்டு.. அவங்க பார்க்கக் கூடிய பக்கங்களைப் பார்க்கப் படிக்க.. வகைக்கு பண்ணிக்கலாம்.

என்ன குட்டீஸ் எல்லாம் 16 வயசுக்கு உட்பட்டதுங்க என்று சொல்லியா பதியப் போகுதுங்க.. அதுகளும் 18+ என்று போட்டிட்டு.. பதிஞ்சா.. யார் கண்காணிக்கிறது..! அங்க தான் சிக்கலே..! :lol::icon_idea:

[size=4]இது நிர்வாக சிக்கலுடன் சட்ட சிக்கலும் இருக்கலாம். இதை செய்யலாம், ஆனால் தலையிடிகள் இருக்கும். அவதானமாக செய்யாவிடின் யாழையே மூட வைத்துவிடலாம். [/size]

யாழுக்கு வந்து தான் குட்டீஸ் கெடப் போறது என்றில்ல. அதுவும் இல்லாம.. adult விடயங்களை சரியான வகையில தெரிஞ்சு கொள்ளுறதால குட்டீஸ் கெட்டுப் போறாங்க என்றதும் சரியில்ல. adult விடயங்களை குட்டீஸ் ஒளிச்சு மறைச்சு அறிஞ்சு செய்ய விளையுறதுதான் ஆபத்தே..! :icon_idea:

[size=4]இது மேற்குலகத்தில் நீண்டகாலமாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு. இந்தப்பிரச்சனைக்கு இதுதான் சரியான வழி என்று ஒன்றும் இதுவரை இல்லை. [/size]எனவே இந்தப்பிரச்சனைகளுக்கு யாழில் தீர்வு எட்டமுடியாது.

பதினாறு இல்லை பதினெட்டு வயதெல்லைகள் இருந்தாலும் இது தனிப்பட்ட ஒருவர் சம்பந்த்தப்படும்பொழுது அதன் வலி பெற்றோர்களால் மட்டுமே புரியமுடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.