Jump to content

சகோதரரால் சுடப்பட்டார் முன்னாள் இந்திய அமைச்சர்!!!


Recommended Posts

முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியைச் சோந்த முக்கிய உறுப்பினர் சுடப்பட்டதாகக் காவற்றுறையினர் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரமோத் மகாஜனே குடும்பத்தகராறு காரணமாக தனது தம்பியினால் சுடப்பட்டார்.

56 வயதான பிரமோத் மகாஜனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியத் தொலைக்காட்சியின் தகவலின்படி, சுட்டவரான அவரது தம்பியார் பிரவீன் காவற்றுறையினரிடம் சரணடைந்துள்ளார்.

பிரவீனின் வழக்கறிஞர் கருத்துத் தெரிவிக்கையில், பிரவீன் மனநோயாளியெனவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவத்தார்.

தகவல் மூலம்

Link to comment
Share on other sites

திறமையான ஒரு தலைவாராக வர கூடிய பா.ஜ.க வை சேர்த மகாஜன் அவர்கள் குணமடையவேண்டும் என்று பிரார்திக்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் மரணம்

மே 03, 2006

மும்பை:

தனது தம்பியால் சுடப்பட்ட பாஜக மூத்த தலைவரான பிரமோத் மகாஜன் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

12 நாட்களுக்கு முன் (ஏப்ரல் 22ம் தேதி) மகாஜனை அவரது மும்பை வொர்லியில் உள்ள அவரது அபார்ட்மெண்டில் வைத்து சுட்டார் அவரது தம்பி பிரவீன் மகாஜன். இதில் மூன்று குண்டுகள் கல்லீரல், கணையம், சிறுகுடலுக்குள் புகுந்து பெருமளவில் ரத்தம் வெளியேறியது.

இதையடுத்து இந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகாஜனுக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று முறை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. ஆனாலும் அவரது உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தார்.

அவரது சிறுநீரகம் இயங்காததால் தொடர்ந்து டையலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.

குண்டுகள் தொடர்ந்து உடலிலேயே இருந்த நிலையில் நேற்று அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து சுய நினைவற்ற நிலையிலேயே இருந்த அவர் இன்று மாலை 4.10 மணிக்கு மருத்துவமனையிலேயே இறந்தார்.

56 வயதான மகாஜனுக்கு ரேகா என்ற மனைவியும், ராகுல் என்ற மகனும், பூனம் என்ற மகளும் உள்ளனர்.

மகாஜனின் உடல் இன்று மகாராஷ்டிரா பாஜக தலைமையகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அங்கு பாஜக கொ அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

மகாஜனின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.