Jump to content

நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தின் பெயர்ப் பலகையின் தமிழ் மொழியின் நிலை (படம்)


Recommended Posts

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

நன்றி :தமிழ்ச் செல்வன்

http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றிற்கு எல்லாம் சிங்கள அரசும் அதன் படைகளும் மட்டும் காரணமல்ல.. சிங்கள அரசின் தயவில் இயங்கும் காட்டிக்கொடுப்பு.. தமிழ் மக்கள் அழிப்பு.. தமிழ் அழிப்பு.. தமிழ்.. முஸ்லீம் கும்பல்களும்.. ஆயுதக் குழுக்களும்.. உள்ளூராட்சி மன்றங்களையும்.. மாகாண சபைகளையும் கைப்பற்றுவதும் ஒரு காரணம். இதற்கு தமிழ் பேசும் மக்கள் எனியும் இடமளிக்கக் கூடாது. தமிழ் பிரதேசங்களில் தமிழ் பற்றுள்ள தேசப்பற்றுள்ள.. கல்வி அறிவுள்ள...தமிழ் பேசுபவர்களை மக்கள் பிரதிநிதிகளாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்..! :(:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன ஆச்சரியம் அங்குள்ள மொழி மட்டுமல்ல மக்களின் நிலையும் இப்போது அப்படித்தானே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

நன்றி :தமிழ்ச் செல்வன்

http://thaaitamil.co...யில்-அமைந்துள்/

ஏன் :unsure: இதில் என்ன எழுத்து பிழை இருக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் :unsure: இதில் என்ன எழுத்து பிழை இருக்குது?

அவர்கள் போட்டிருப்பது [size=5] உனவு [/size] உணவு அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் உணவுக் களஞ்சியம் என்றே தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் உணவுக் களஞ்சியம் என்றே தெரிகிறது

இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை .

Link to comment
Share on other sites

அது மூன்று சுழி "ண" தான் - ஆனால் அதை எழுதி இருக்கும் முறை தான் பிழை போல் தெரிகிறது..

முழுதாக வட்டம் போடவில்லை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை தரவிறக்கம் செய்து அதை 10 மடங்கு பரிமாணத்திற்கு மாற்றி ஆராய்ந்து பார்த்தேன். பலகையில் ண-எழுத்தின் 3 சுழி வட்டங்களும் அருகருகே ஒன்றுடன் ஒன்று நெருங்கியிருப்பதால் பார்வைக்கு அதிலுள்ளது 2 சுழியுடன் ன-எழுத்துபோல் தெரிந்தாலும் அங்கு உணவு என்பது சரியாகத்தான் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் 100 விழுக்காடு தமிழர் பிரதேசத்திலுள்ள பெயர் பலகைகளிலும் சிங்களத்தை முதன்மைப்படுத்தி எழுதுவதுதான் எனக்கு உறுத்தலாக உள்ளது.

Link to comment
Share on other sites

அவங்களுக்கு தங்கட மொழியிலேயே ஒழுங்காய் எழுத்தத் தெரியுமோ தெரியாது, அதுக்கை நீங்கள் வேறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை இதில எழுத்துப்பிழை.. இருக்கோ இல்லையோ என்பதல்ல.. இவ்வாறான எழுத்துப் பிழைகள்.. பல இடங்களில் முன்னர் அவதானிக்கப்பட்டு உள்ளன தானே. அதேபோல் சிங்களப் பெயர்களும்.. இராணுவ பிரிவுப் பெயர்களும் ஊர்களுக்கும் தெருக்களுக்கும் நினைவிடங்களுக்கும் திணிக்கப்படுகின்றன.

கிட்டு பூங்கா இடிக்கப்பட்டு.. அங்கிருந்து இரும்புகள்.. உட்பட்ட பொருட்கள் டக்கிளஸ் தேவானந்த கும்பலால் காசுக்கு விற்கப்படுகின்றன.

இம்முறை நல்லூரில் திருவிழா அங்காடிகளை வெறும் 10,000 ரூபாக்கு ஒரு சிங்களவன் எடுத்திருக்கிறான்.

யாழ் மாநகர சபை.. மிகுந்த ஊழலும்.. குழறுபடியும் நடக்கும் இடமாக மாறியுள்ளது.

நல்லூர் உற்சவ கால வருமானம்.. டக்கிளசின் வங்கிக் கணக்கிற்கு போகிறது..! சில்லறை வியாபாரிகளின் பணம்.. மாநகர சபை ஈபிடிபி ஆட்களுக்குப் போகிறது. மாநகர சபைக்கோ.. அதன் அபிவிருத்திக்கோ அல்ல..! :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

:icon_mrgreen:

mgr%20-taklas.jpg

இந்த உனவு கலஞ்சியத்தை திரந்து வய்ததே ... மான்புமிகுவாம் ஈலத்து எம்.சி.ஆர் அத்தியடிக்குத்தி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்" இந்த செய்தியில் உண்மை இல்லாத விடத்து அதனை வடிவாக வாசிக்காமல் பதில் எழுதிப் போட்டு நொண்டி சாட்டு சொல்ல வேண்டாம்.

அங்கு தமிழ் மொழியின் நிலை கேவலமாய்த் தான் இருக்குது இல்லை என்று இல்லை ஆனால் இந்தப் படத்தில் காட்டிய பெயர்ப் பலகையில் தமிழ் சரியாகத் தான் எழுதி இருக்குது...இப்படியான பொய் செய்திகளுக்கு ஆதரவு கொடுத்தால் உண்மையான செய்திகளை யாராவது கொண்டு வந்து போட்டாலும் வாசிக்க மாட்டோம்...அவங்களும்,அவங்கட இணைய செய்தியும் ^_^

வணங்காமுடி சொல்வது மாதிரி சிங்களத்தை முதன்மைப் படுத்துவது தான் கஸ்டமாக இருக்குது

Link to comment
Share on other sites

41986173.jpg?ms=tsu&mv=m&mt=1343727602&cms_redirect=yes&redirect_counter=1

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உனவு(உணவு(க் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

41986173.jpg?ms=tsu&mv=m&mt=1343727602&cms_redirect=yes&redirect_counter=1

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உனவு(உணவு(க் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்"

ஓம் அதில் என்ன எழுத்துப் பிழை நெல்லையன்?...3 சுழி "ண்"ன்னா போட்டுத் தானே எழுதி இருக்குறார்கள்...நீங்கள் தந்த படத்தை பெரிதாக்கியும் பார்த்தேன் அதில் ஒரு பிழையும் தெரியவில்லை ஒரு வேளை என் கண்ணில் தான் கோளாறோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்" இந்த செய்தியில் உண்மை இல்லாத விடத்து அதனை வடிவாக வாசிக்காமல் பதில் எழுதிப் போட்டு நொண்டி சாட்டு சொல்ல வேண்டாம்.

அங்கு தமிழ் மொழியின் நிலை கேவலமாய்த் தான் இருக்குது இல்லை என்று இல்லை ஆனால் இந்தப் படத்தில் காட்டிய பெயர்ப் பலகையில் தமிழ் சரியாகத் தான் எழுதி இருக்குது...இப்படியான பொய் செய்திகளுக்கு ஆதரவு கொடுத்தால் உண்மையான செய்திகளை யாராவது கொண்டு வந்து போட்டாலும் வாசிக்க மாட்டோம்...அவங்களும்,அவங்கட இணைய செய்தியும் ^_^

வணங்காமுடி சொல்வது மாதிரி சிங்களத்தை முதன்மைப் படுத்துவது தான் கஸ்டமாக இருக்குது

இதில் எழுத்துப் பிழை பற்றியதாக தலைப்பு இல்லையே.

தமிழ் மொழி.. தமிழ் பிரதேசத்திலேயே அதன் முதன்மை இழந்து.. இரண்டாம் இடத்திற்கு நகர்ந்து போய் நிற்பது தான் சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன்..! அதுதான் தமிழின் நிலை அங்கு..!

தாங்கள்.. அதனை புரிந்து கொள்ளாது.. எழுதுறீங்க போல இருக்குது.

அதற்காக எழுத்துப் பிழைகள் நடக்கவே இல்லை என்றில்லை. தமிழர் பிரதேசங்களில்.. சிங்களத்தில்..ஊர்ப் பெயர் மாற்றங்களும்.. சிங்களப் படைத்துறை பெயர்களும்.. புத்த கோவில்களும் திணிக்கப்படுவது நடக்கின்றன என்பதையும் தான் குறிப்பிடுகிறார்கள்..! :icon_idea:

JaffnaLibrary.jpg

normal_JaffnaHinduCollege_2009_16.jpg

இந்த நிலை அங்கு இல்லை..!

Link to comment
Share on other sites

சிங்களமயமாக்கல் உண்மை, ஆனால்,

கமெரா பெட்டியில் அகப்படுவதையெல்லாம் ஊதிப்பெருத்து செய்தியாக்க வெளிக்கிட்டால் உருப்பட்ட மாதிரித்தான். சிறிது காலம் புதிய யாழ்ப்பாணம் (?) எனும் பெயரில் ஒரு இணையத்தளம் இங்கு குப்பை கொட்டியது. இப்போது உயர வளர்ந்துவிட்டதால் இங்கு வருவதில்லை போலும்.

மொக்கைச் செய்திகளுக்கு வியாக்கியானம் கூறுவது என்றால் கடந்த அறுபது ஆண்டுகள் மட்டும் அல்ல, அதற்கும் உள்ளாகச்சென்று இலங்கை தமிழ் அரசன் இராவணனில் இருந்து ஆதாரம் காட்டலாம். இங்கு விடயம் என்ன என்றால் இணையத்தளங்களில் செய்தியாக விடயங்களை பரப்புகின்றவர்களுக்கு எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்பதை முதலில் பகுதிபடுத்தி prioritizeசெய்யத்தெரியவேண்டும். கமெராவில் ஒரு படம் சிக்கிவிட்டது என்பதற்காக தமது தளத்திற்கு வருகின்ற வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்வகையில் பரபரப்பாக செய்தித்தலைப்புக்களையிட்டு பின்னர் சொதப்பும்வகையில் வியாக்கியானம் கொடுப்பதற்குப்பெயர் செய்தி இல்லை. அது மொக்கை.

முன்பு நாம் யாழ் ஊர்ப்புதினங்களில் செய்திகள் பதிந்தபோது, கருத்துக்களை தலைப்புச்செய்தியாகப்பதிந்தபோது ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள். இப்போது மொக்கைச்செய்திகள், அலட்டல்கள் தாராளமாக உள்ளன. கேட்பார் யாரும் இல்லை. செய்திகளைப்பதிகின்றவர்களும் இங்கு உள்ளவர்கள் உணர்வுகளைக்கிளறும்வகையில் எதைச்சொன்னாலும் தலையாட்டுவார்கள் எனும் எண்ணத்தில் பதிகின்றார்கள் போல் உள்ளது.

கொசுவைக்கொல்வதற்கு நாளும், பொழுதும் கோடாரியுடன் ஓடித்திரிந்து களைத்துவிட்டு பின்னர் பாம்புவரும்போது கடிவாங்குவதில் அர்த்தம் இல்லை. அழுத்திப்பிடிக்கவேண்டியவை எவை, விலத்தி நிற்கவேண்டியவை எவை என பரப்புரைகளில் ஈடுபடுபவர்களுக்குத்தெரியாவிட்டால் பொது விவாதத்தில் மூக்குடைபடுவதுதவிர வேறொன்றும் நடக்கப்போவது இல்லை. சர்வதேச ஊடகங்களில் சிங்களவ, தமிழர், உட்பட பல்வேறு பகுதியினரை இணைத்து செய்யப்படும் திறந்த/பொது விவாதங்களில் நம்மவர் அசடு வழிவதற்கு தர்க்கரீதியாக அடி கொடுக்கவேண்டி இடங்களில் கொடுக்காமல் கண்டதையும் முறைப்பாடு செய்து மொக்கைபோடுவது காரணம் என்பது நீண்டகாலமாக விவாதங்களை அவதானித்து வருபவர்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுண்டல்?உமக்கு தமிழே ஒழுங்காய் எழுதவராது.....அதுக்குள்ளை இரண்டுசுழிக்கும் மூண்டுசுழிக்கும் என்னெண்டு வித்தியாசம் தெரியும்? ஆஃ :lol:

Link to comment
Share on other sites

இதில் கரும்புடன் ஒத்து போவதுதான் சரிபோலத்தென்படுகிறது.

வணங்காமுடி சொலவதும் சரி. படத்தை தேவையான அளவு பெருப்பிக்கும் வரை "ண" ,"ன" பேதங்கள் தெரியவில்லை.

ஆனால் படத்தை எடுத்தவர் இந்த "ண" ,"ன" பேதங்களில் மாட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பெயர் பலகையை நேரே பார்த்திருக்கிறார்.

எனவேதான் கரும்பின் கருத்து முக்கியத்துவம் அடைகிறது.

ஆனால் தமிழின் பிழை "ண", "ன" பேதத்தில் அல்ல. நாம் ஈழத்தில் "தமிழிலும்", "ஈழத்திலும்" "ழ" கொண்டிருப்பவர்கள் என்பதால் "ழ" கூட விரும்புபவர்கள். கழஞ்சியத்தை "ழ" போட்டுத்தான் எழுதுவோம். http://www.yarl.com/...showtopic=20492

சில (மலேசியாவாக இருக்கலாம்) இணைத்தளங்கள் களஞ்சியமாக பாவிக்கின்றன. இது பிழை. தேடிய பொழுது "காமக் களஞ்சியம்" என்றும் ஒரு இணையம் அகப்பட்டது. அப்போதுமட்டும் தான் "களஞ்சியம்" என்ற பிழையான பாவனை பிரபலமாகியிருப்பதன் காரணத்தை ஊகித்தேன்.

அப்படி ஒரு பாவனையும் இருக்கும் போது "களஞ்சியத்தை" மட்டும் "பெரிதாக படம் பிடித்து இந்த அவசர நேரங்களில் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமா?" என்ற கரும்பின் கேள்வி பொருத்தமானதே.

Link to comment
Share on other sites

தம்பி சுண்டல்?உமக்கு தமிழே ஒழுங்காய் எழுதவராது.....அதுக்குள்ளை இரண்டுசுழிக்கும் மூண்டுசுழிக்கும் என்னெண்டு வித்தியாசம் தெரியும்? ஆஃ :lol:

:D முடியல்ல

Link to comment
Share on other sites

இதில் கரும்புடன் ஒத்து போவதுதான் சரிபோலத்தென்படுகிறது.

வணங்காமுடி சொலவதும் சரி. படத்தை தேவையான அளவு பெருப்பிக்கும் வரை "ண" ,"ன" பேதங்கள் தெரியவில்லை.

ஆனால் படத்தை எடுத்தவர் இந்த "ண" ,"ன" பேதங்களில் மாட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பெயர் பலகையை நேரே பார்த்திருக்கிறார்.

எனவேதான் கரும்பின் கருத்து முக்கியத்துவம் அடைகிறது.

ஆனால் தமிழின் பிழை "ண", "ன" பேதத்தில் அல்ல. நாம் ஈழத்தில் "தமிழிலும்", "ஈழத்திலும்" "ழ" கொண்டிருப்பவர்கள் என்பதால் "ழ" கூட விரும்புபவர்கள். கழஞ்சியத்தை "ழ" போட்டுத்தான் எழுதுவோம். http://www.yarl.com/...showtopic=20492

சில (மலேசியாவாக இருக்கலாம்) இணைத்தளங்கள் களஞ்சியமாக பாவிக்கின்றன. இது பிழை. தேடிய பொழுது "காமக் களஞ்சியம்" என்றும் ஒரு இணையம் அகப்பட்டது. அப்போதுமட்டும் தான் "களஞ்சியம்" என்ற பிழையான பாவனை பிரபலமாகியிருப்பதன் காரணத்தை ஊகித்தேன்.

அப்படி ஒரு பாவனையும் இருக்கும் போது "களஞ்சியத்தை" மட்டும் "பெரிதாக படம் பிடித்து இந்த அவசர நேரங்களில் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமா?" என்ற கரும்பின் கேள்வி பொருத்தமானதே.

அண்ணர் கரும்பு சொன்ன அதே மொக்கைக் கூட்டங்கள் தான். கையில கமெரா இருந்தால், கண்டதையும் படமெடுத்து போடுவாங்கள். இவங்கள் எல்லாம் ஒரு ஊடகம்? நாதாரிக் கூட்டங்கள்.

நான் இன்றுவரை களஞ்சியத்திற்கு "ள" பாவிக்கப் படுவதைத் தான் கண்டிருக்கிறேன். பாடப் புத்தகங்களிலும் "ள" தான் பயன்பட்டிருக்கு. ஈழத்தில் "ழ" இருப்பதால் "ழ" பாவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம். அகராதியில் தேடிய போதும் களஞ்சியம் தான் சரி என வருகிறது. ஆனால் பல இணையத் தளங்கள் கழஞ்சியம் எனப் பாவிப்பதைக் கண்டிருக்கிறேன். களஞ்சியம் என்று ஏற்றகனவே பாவிக்கப் பட்டிருந்தால் அதை மறைக்க கழஞ்சியம் என அவர்கள் மாற்றி பயன்படுத்தி இருக்கலாம்.

Yarl1.jpg

Yarl2.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.