Jump to content

நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தின் பெயர்ப் பலகையின் தமிழ் மொழியின் நிலை (படம்)


Recommended Posts

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

நன்றி :தமிழ்ச் செல்வன்

http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றிற்கு எல்லாம் சிங்கள அரசும் அதன் படைகளும் மட்டும் காரணமல்ல.. சிங்கள அரசின் தயவில் இயங்கும் காட்டிக்கொடுப்பு.. தமிழ் மக்கள் அழிப்பு.. தமிழ் அழிப்பு.. தமிழ்.. முஸ்லீம் கும்பல்களும்.. ஆயுதக் குழுக்களும்.. உள்ளூராட்சி மன்றங்களையும்.. மாகாண சபைகளையும் கைப்பற்றுவதும் ஒரு காரணம். இதற்கு தமிழ் பேசும் மக்கள் எனியும் இடமளிக்கக் கூடாது. தமிழ் பிரதேசங்களில் தமிழ் பற்றுள்ள தேசப்பற்றுள்ள.. கல்வி அறிவுள்ள...தமிழ் பேசுபவர்களை மக்கள் பிரதிநிதிகளாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்..! :(:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன ஆச்சரியம் அங்குள்ள மொழி மட்டுமல்ல மக்களின் நிலையும் இப்போது அப்படித்தானே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

நன்றி :தமிழ்ச் செல்வன்

http://thaaitamil.co...யில்-அமைந்துள்/

ஏன் :unsure: இதில் என்ன எழுத்து பிழை இருக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் :unsure: இதில் என்ன எழுத்து பிழை இருக்குது?

அவர்கள் போட்டிருப்பது [size=5] உனவு [/size] உணவு அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் உணவுக் களஞ்சியம் என்றே தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் உணவுக் களஞ்சியம் என்றே தெரிகிறது

இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை .

Link to comment
Share on other sites

அது மூன்று சுழி "ண" தான் - ஆனால் அதை எழுதி இருக்கும் முறை தான் பிழை போல் தெரிகிறது..

முழுதாக வட்டம் போடவில்லை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை தரவிறக்கம் செய்து அதை 10 மடங்கு பரிமாணத்திற்கு மாற்றி ஆராய்ந்து பார்த்தேன். பலகையில் ண-எழுத்தின் 3 சுழி வட்டங்களும் அருகருகே ஒன்றுடன் ஒன்று நெருங்கியிருப்பதால் பார்வைக்கு அதிலுள்ளது 2 சுழியுடன் ன-எழுத்துபோல் தெரிந்தாலும் அங்கு உணவு என்பது சரியாகத்தான் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் 100 விழுக்காடு தமிழர் பிரதேசத்திலுள்ள பெயர் பலகைகளிலும் சிங்களத்தை முதன்மைப்படுத்தி எழுதுவதுதான் எனக்கு உறுத்தலாக உள்ளது.

Link to comment
Share on other sites

அவங்களுக்கு தங்கட மொழியிலேயே ஒழுங்காய் எழுத்தத் தெரியுமோ தெரியாது, அதுக்கை நீங்கள் வேறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை இதில எழுத்துப்பிழை.. இருக்கோ இல்லையோ என்பதல்ல.. இவ்வாறான எழுத்துப் பிழைகள்.. பல இடங்களில் முன்னர் அவதானிக்கப்பட்டு உள்ளன தானே. அதேபோல் சிங்களப் பெயர்களும்.. இராணுவ பிரிவுப் பெயர்களும் ஊர்களுக்கும் தெருக்களுக்கும் நினைவிடங்களுக்கும் திணிக்கப்படுகின்றன.

கிட்டு பூங்கா இடிக்கப்பட்டு.. அங்கிருந்து இரும்புகள்.. உட்பட்ட பொருட்கள் டக்கிளஸ் தேவானந்த கும்பலால் காசுக்கு விற்கப்படுகின்றன.

இம்முறை நல்லூரில் திருவிழா அங்காடிகளை வெறும் 10,000 ரூபாக்கு ஒரு சிங்களவன் எடுத்திருக்கிறான்.

யாழ் மாநகர சபை.. மிகுந்த ஊழலும்.. குழறுபடியும் நடக்கும் இடமாக மாறியுள்ளது.

நல்லூர் உற்சவ கால வருமானம்.. டக்கிளசின் வங்கிக் கணக்கிற்கு போகிறது..! சில்லறை வியாபாரிகளின் பணம்.. மாநகர சபை ஈபிடிபி ஆட்களுக்குப் போகிறது. மாநகர சபைக்கோ.. அதன் அபிவிருத்திக்கோ அல்ல..! :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

:icon_mrgreen:

mgr%20-taklas.jpg

இந்த உனவு கலஞ்சியத்தை திரந்து வய்ததே ... மான்புமிகுவாம் ஈலத்து எம்.சி.ஆர் அத்தியடிக்குத்தி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்" இந்த செய்தியில் உண்மை இல்லாத விடத்து அதனை வடிவாக வாசிக்காமல் பதில் எழுதிப் போட்டு நொண்டி சாட்டு சொல்ல வேண்டாம்.

அங்கு தமிழ் மொழியின் நிலை கேவலமாய்த் தான் இருக்குது இல்லை என்று இல்லை ஆனால் இந்தப் படத்தில் காட்டிய பெயர்ப் பலகையில் தமிழ் சரியாகத் தான் எழுதி இருக்குது...இப்படியான பொய் செய்திகளுக்கு ஆதரவு கொடுத்தால் உண்மையான செய்திகளை யாராவது கொண்டு வந்து போட்டாலும் வாசிக்க மாட்டோம்...அவங்களும்,அவங்கட இணைய செய்தியும் ^_^

வணங்காமுடி சொல்வது மாதிரி சிங்களத்தை முதன்மைப் படுத்துவது தான் கஸ்டமாக இருக்குது

Link to comment
Share on other sites

41986173.jpg?ms=tsu&mv=m&mt=1343727602&cms_redirect=yes&redirect_counter=1

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உனவு(உணவு(க் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

41986173.jpg?ms=tsu&mv=m&mt=1343727602&cms_redirect=yes&redirect_counter=1

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உனவு(உணவு(க் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்"

ஓம் அதில் என்ன எழுத்துப் பிழை நெல்லையன்?...3 சுழி "ண்"ன்னா போட்டுத் தானே எழுதி இருக்குறார்கள்...நீங்கள் தந்த படத்தை பெரிதாக்கியும் பார்த்தேன் அதில் ஒரு பிழையும் தெரியவில்லை ஒரு வேளை என் கண்ணில் தான் கோளாறோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்" இந்த செய்தியில் உண்மை இல்லாத விடத்து அதனை வடிவாக வாசிக்காமல் பதில் எழுதிப் போட்டு நொண்டி சாட்டு சொல்ல வேண்டாம்.

அங்கு தமிழ் மொழியின் நிலை கேவலமாய்த் தான் இருக்குது இல்லை என்று இல்லை ஆனால் இந்தப் படத்தில் காட்டிய பெயர்ப் பலகையில் தமிழ் சரியாகத் தான் எழுதி இருக்குது...இப்படியான பொய் செய்திகளுக்கு ஆதரவு கொடுத்தால் உண்மையான செய்திகளை யாராவது கொண்டு வந்து போட்டாலும் வாசிக்க மாட்டோம்...அவங்களும்,அவங்கட இணைய செய்தியும் ^_^

வணங்காமுடி சொல்வது மாதிரி சிங்களத்தை முதன்மைப் படுத்துவது தான் கஸ்டமாக இருக்குது

இதில் எழுத்துப் பிழை பற்றியதாக தலைப்பு இல்லையே.

தமிழ் மொழி.. தமிழ் பிரதேசத்திலேயே அதன் முதன்மை இழந்து.. இரண்டாம் இடத்திற்கு நகர்ந்து போய் நிற்பது தான் சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன்..! அதுதான் தமிழின் நிலை அங்கு..!

தாங்கள்.. அதனை புரிந்து கொள்ளாது.. எழுதுறீங்க போல இருக்குது.

அதற்காக எழுத்துப் பிழைகள் நடக்கவே இல்லை என்றில்லை. தமிழர் பிரதேசங்களில்.. சிங்களத்தில்..ஊர்ப் பெயர் மாற்றங்களும்.. சிங்களப் படைத்துறை பெயர்களும்.. புத்த கோவில்களும் திணிக்கப்படுவது நடக்கின்றன என்பதையும் தான் குறிப்பிடுகிறார்கள்..! :icon_idea:

JaffnaLibrary.jpg

normal_JaffnaHinduCollege_2009_16.jpg

இந்த நிலை அங்கு இல்லை..!

Link to comment
Share on other sites

சிங்களமயமாக்கல் உண்மை, ஆனால்,

கமெரா பெட்டியில் அகப்படுவதையெல்லாம் ஊதிப்பெருத்து செய்தியாக்க வெளிக்கிட்டால் உருப்பட்ட மாதிரித்தான். சிறிது காலம் புதிய யாழ்ப்பாணம் (?) எனும் பெயரில் ஒரு இணையத்தளம் இங்கு குப்பை கொட்டியது. இப்போது உயர வளர்ந்துவிட்டதால் இங்கு வருவதில்லை போலும்.

மொக்கைச் செய்திகளுக்கு வியாக்கியானம் கூறுவது என்றால் கடந்த அறுபது ஆண்டுகள் மட்டும் அல்ல, அதற்கும் உள்ளாகச்சென்று இலங்கை தமிழ் அரசன் இராவணனில் இருந்து ஆதாரம் காட்டலாம். இங்கு விடயம் என்ன என்றால் இணையத்தளங்களில் செய்தியாக விடயங்களை பரப்புகின்றவர்களுக்கு எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்பதை முதலில் பகுதிபடுத்தி prioritizeசெய்யத்தெரியவேண்டும். கமெராவில் ஒரு படம் சிக்கிவிட்டது என்பதற்காக தமது தளத்திற்கு வருகின்ற வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்வகையில் பரபரப்பாக செய்தித்தலைப்புக்களையிட்டு பின்னர் சொதப்பும்வகையில் வியாக்கியானம் கொடுப்பதற்குப்பெயர் செய்தி இல்லை. அது மொக்கை.

முன்பு நாம் யாழ் ஊர்ப்புதினங்களில் செய்திகள் பதிந்தபோது, கருத்துக்களை தலைப்புச்செய்தியாகப்பதிந்தபோது ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள். இப்போது மொக்கைச்செய்திகள், அலட்டல்கள் தாராளமாக உள்ளன. கேட்பார் யாரும் இல்லை. செய்திகளைப்பதிகின்றவர்களும் இங்கு உள்ளவர்கள் உணர்வுகளைக்கிளறும்வகையில் எதைச்சொன்னாலும் தலையாட்டுவார்கள் எனும் எண்ணத்தில் பதிகின்றார்கள் போல் உள்ளது.

கொசுவைக்கொல்வதற்கு நாளும், பொழுதும் கோடாரியுடன் ஓடித்திரிந்து களைத்துவிட்டு பின்னர் பாம்புவரும்போது கடிவாங்குவதில் அர்த்தம் இல்லை. அழுத்திப்பிடிக்கவேண்டியவை எவை, விலத்தி நிற்கவேண்டியவை எவை என பரப்புரைகளில் ஈடுபடுபவர்களுக்குத்தெரியாவிட்டால் பொது விவாதத்தில் மூக்குடைபடுவதுதவிர வேறொன்றும் நடக்கப்போவது இல்லை. சர்வதேச ஊடகங்களில் சிங்களவ, தமிழர், உட்பட பல்வேறு பகுதியினரை இணைத்து செய்யப்படும் திறந்த/பொது விவாதங்களில் நம்மவர் அசடு வழிவதற்கு தர்க்கரீதியாக அடி கொடுக்கவேண்டி இடங்களில் கொடுக்காமல் கண்டதையும் முறைப்பாடு செய்து மொக்கைபோடுவது காரணம் என்பது நீண்டகாலமாக விவாதங்களை அவதானித்து வருபவர்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுண்டல்?உமக்கு தமிழே ஒழுங்காய் எழுதவராது.....அதுக்குள்ளை இரண்டுசுழிக்கும் மூண்டுசுழிக்கும் என்னெண்டு வித்தியாசம் தெரியும்? ஆஃ :lol:

Link to comment
Share on other sites

இதில் கரும்புடன் ஒத்து போவதுதான் சரிபோலத்தென்படுகிறது.

வணங்காமுடி சொலவதும் சரி. படத்தை தேவையான அளவு பெருப்பிக்கும் வரை "ண" ,"ன" பேதங்கள் தெரியவில்லை.

ஆனால் படத்தை எடுத்தவர் இந்த "ண" ,"ன" பேதங்களில் மாட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பெயர் பலகையை நேரே பார்த்திருக்கிறார்.

எனவேதான் கரும்பின் கருத்து முக்கியத்துவம் அடைகிறது.

ஆனால் தமிழின் பிழை "ண", "ன" பேதத்தில் அல்ல. நாம் ஈழத்தில் "தமிழிலும்", "ஈழத்திலும்" "ழ" கொண்டிருப்பவர்கள் என்பதால் "ழ" கூட விரும்புபவர்கள். கழஞ்சியத்தை "ழ" போட்டுத்தான் எழுதுவோம். http://www.yarl.com/...showtopic=20492

சில (மலேசியாவாக இருக்கலாம்) இணைத்தளங்கள் களஞ்சியமாக பாவிக்கின்றன. இது பிழை. தேடிய பொழுது "காமக் களஞ்சியம்" என்றும் ஒரு இணையம் அகப்பட்டது. அப்போதுமட்டும் தான் "களஞ்சியம்" என்ற பிழையான பாவனை பிரபலமாகியிருப்பதன் காரணத்தை ஊகித்தேன்.

அப்படி ஒரு பாவனையும் இருக்கும் போது "களஞ்சியத்தை" மட்டும் "பெரிதாக படம் பிடித்து இந்த அவசர நேரங்களில் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமா?" என்ற கரும்பின் கேள்வி பொருத்தமானதே.

Link to comment
Share on other sites

தம்பி சுண்டல்?உமக்கு தமிழே ஒழுங்காய் எழுதவராது.....அதுக்குள்ளை இரண்டுசுழிக்கும் மூண்டுசுழிக்கும் என்னெண்டு வித்தியாசம் தெரியும்? ஆஃ :lol:

:D முடியல்ல

Link to comment
Share on other sites

இதில் கரும்புடன் ஒத்து போவதுதான் சரிபோலத்தென்படுகிறது.

வணங்காமுடி சொலவதும் சரி. படத்தை தேவையான அளவு பெருப்பிக்கும் வரை "ண" ,"ன" பேதங்கள் தெரியவில்லை.

ஆனால் படத்தை எடுத்தவர் இந்த "ண" ,"ன" பேதங்களில் மாட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பெயர் பலகையை நேரே பார்த்திருக்கிறார்.

எனவேதான் கரும்பின் கருத்து முக்கியத்துவம் அடைகிறது.

ஆனால் தமிழின் பிழை "ண", "ன" பேதத்தில் அல்ல. நாம் ஈழத்தில் "தமிழிலும்", "ஈழத்திலும்" "ழ" கொண்டிருப்பவர்கள் என்பதால் "ழ" கூட விரும்புபவர்கள். கழஞ்சியத்தை "ழ" போட்டுத்தான் எழுதுவோம். http://www.yarl.com/...showtopic=20492

சில (மலேசியாவாக இருக்கலாம்) இணைத்தளங்கள் களஞ்சியமாக பாவிக்கின்றன. இது பிழை. தேடிய பொழுது "காமக் களஞ்சியம்" என்றும் ஒரு இணையம் அகப்பட்டது. அப்போதுமட்டும் தான் "களஞ்சியம்" என்ற பிழையான பாவனை பிரபலமாகியிருப்பதன் காரணத்தை ஊகித்தேன்.

அப்படி ஒரு பாவனையும் இருக்கும் போது "களஞ்சியத்தை" மட்டும் "பெரிதாக படம் பிடித்து இந்த அவசர நேரங்களில் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமா?" என்ற கரும்பின் கேள்வி பொருத்தமானதே.

அண்ணர் கரும்பு சொன்ன அதே மொக்கைக் கூட்டங்கள் தான். கையில கமெரா இருந்தால், கண்டதையும் படமெடுத்து போடுவாங்கள். இவங்கள் எல்லாம் ஒரு ஊடகம்? நாதாரிக் கூட்டங்கள்.

நான் இன்றுவரை களஞ்சியத்திற்கு "ள" பாவிக்கப் படுவதைத் தான் கண்டிருக்கிறேன். பாடப் புத்தகங்களிலும் "ள" தான் பயன்பட்டிருக்கு. ஈழத்தில் "ழ" இருப்பதால் "ழ" பாவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம். அகராதியில் தேடிய போதும் களஞ்சியம் தான் சரி என வருகிறது. ஆனால் பல இணையத் தளங்கள் கழஞ்சியம் எனப் பாவிப்பதைக் கண்டிருக்கிறேன். களஞ்சியம் என்று ஏற்றகனவே பாவிக்கப் பட்டிருந்தால் அதை மறைக்க கழஞ்சியம் என அவர்கள் மாற்றி பயன்படுத்தி இருக்கலாம்.

Yarl1.jpg

Yarl2.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.