Jump to content

2000மாம் ஆண்டு என்னை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது –எரிக் சொல்ஹெய்ம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2000 மாம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தம்மைகொலை செய்ய முயற்சித்ததாக எரிக் சொல்செய்ம் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குச் சக்திகள் தமக்கு கொலை மிரட்டல்விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

2000மாம் ஆண்டு மே மாம் 22ம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கபண்டாரநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் தாம் உள்ளிட்ட நோர்வே பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தி தம்மை படுகொலை செய்ய சில தரப்பினர் முயற்சி செய்ததாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அப்டீன்போஸ்டின் என்னும் நோர்வேயிலிருந்து வெளியாகும் பத்திரிகைக்குஅளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

படுகொலை முயற்சி தொடர்பான தகவல்களை அப்போதைய பாதுகாப்புதரப்பினருக்கு தாம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடும்போக்குடைய சிங்கள மக்கள் பற்றி தெரிந்திருந்த, நோர்வேயில்வாழும் மக்களும் கொலை முயற்சி குறித்த தகவல்களை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே பிரஜைகள் என்ற ரீதியில் உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடியஒரே இடமாக இலங்கை காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெய்ப்பாதுகாவலர்கள் இன்று தாம் இலங்கையின் எந்தவொரு பகுதிக்கும்விஜயம் செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விஜயத்தை முடித்துக் கொண்டு சொல்ஹெய்ம் நாடு திரும்பிய அதேதினத்தில் இலங்கைக்கான நோர்வேத் தூதரகம் மீது கைக்குண்டுத் தாக்குதல்நடத்தப்பட்டிருந்தது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80755/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

[size=4]அப்படியானால் இந்த 'சமாதான தூதுவர் ' எவ்வாறுதான் 'சமாதானம்' எனக்கூறி இந்தக்கொலையாளிகளுடன் தமிழர்களை வாழச்சொல்லி கேட்டாரோ? கைவிட்டாரோ?[/size]

Link to comment
Share on other sites

[size=4]அப்படியானால் இந்த 'சமாதான தூதுவர் ' எவ்வாறுதான் 'சமாதானம்' எனக்கூறி இந்தக்கொலையாளிகளுடன் தமிழர்களை வாழச்சொல்லி கேட்டாரோ? கைவிட்டாரோ?[/size]

அதுதானே.................

Link to comment
Share on other sites

2000 ஆம் ஆண்டு நடந்ததை 2012 ஆம் ஆண்டு சொல்கிறார். இவ்வளவு காலம் தமிழர்கள் துன்பத்தில் இன்பம் கண்டாரோ?

Link to comment
Share on other sites

புலிகளை நலியச் செய்ததே இந்த பேச்சுவார்த்தை தான்.நோர்வேயின் பங்கு அளப்பரியது.

விதார் ஹெல்கசனுக்கு( :unsure: )பூநகரியில் ஸெல் அடித்ததும் ஒரு கொலை முயற்சி தான்.

Link to comment
Share on other sites

[size=3]

கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும்!

Rohana-Wijeweera-JVP-DYS-300x234.jpg“ ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக,எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.”

- உவிந்து குருகுலசூரிய.

“இங்கே கொள்கைகள் இருக்கின்றன இங்கேஉண்மைகளும் இருக்கின்றன. கொள்கைகள் மாறுபடலாம்ஆனால் எப்படியிருப்பினும் உண்மைகள் மறுக்கப்படமுடியாதவை. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இளையவர்கள் முதியவர்கள் என்ற பாகுபாடின்றித் தாக்கப்பட்டார்கள். இன்னும் குழந்தைகள் கூடத் தாக்கப்பட்டார்கள். தமிழர்கள் தங்களுடைய வாகனங்கள் உடமைகள் கட்டிடங்கள் வீடுகள் தொழிற்சாலைகள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டதைக் கண்ணுற்றார்கள். அவர்கள் அவமானப்பபடுத்தப்பட்டு நாதியற்றவர்களாக அகதிகளாகப் பயத்துடன் வாழவிதிக்கப்பட்டார்கள்”

இதயத்திலிருந்து வரும் ஒரு அழுகை…. 1983ம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்தது என்ன? (ஆயர் லக்ஷ்மன் விக்கிரமசிங்கவின் கடிதத்திலிருந்து

சனல் நான்கின் “கொலைக்களம்” விவரணப்படத்தின் இயக்குனர் கொலம் மக்றே சென்ற கிழமை இவ்வாறுஎழுதுகிறார்: 12 வயதுச் சிறுவன் நிலத்தில் விழுந்துகிடக்கிறான். இடுப்பிற்குமேல் நிர்வாணமாக்கப்பட்டு மார்புப் பகுதியில் அய்ந்து குண்டுத் துளைகளைக்கொண்டிருந்த அவன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வனான பாலசந்திரனாவான். அவனுக்கருகில் அவனது அய்ந்துமெய்ப்பாதுகாவலர்களின் உடல்களும் கிடந்தன. அவர்கள் நிர்வாணமாகவும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் சுடப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. மேலும் சாட்சியங்களை வைத்துப்பார்க்கும் போது இலங்கை அரசு சரணடைந்த புலிகளின் தலைவர்களையும்விடுதலைப்புலிப் போராளிகளையும் அது குழந்தைகளாக இருந்தபோதும் கூடக் கொல்வதில் ஒரு தெளிவான திட்டமிடலை அணுகுமுறையை கொண்டிருந்தது புலப்படுகிறது.

இதுவேதான் இலங்கை அரசுக்குள்ள பிரச்சினையும் ஆகும்எனேனில் இந்தக் கொலை ஒரு தற்செயலான அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவமாக இருக்கவில்லை என்பதுதான். அவ்வாறு இருந்திருந்தால் இதனை கோபம் கொண்ட இராணுவத்தினரின் எழுந்தமானமான நடவடிக்கை என்று புறந்தள்ளியிருக்கலாம். இங்கே பாலச்சந்திரன் பிரபாகரனின் மகனாக இல்லாதிருந்தால் சிலவேளை இன்றைக்கு உயிருடன் இருந்திருக்கக்கூடும் என ஒருவர் நினைப்பதற்கும் இடமுண்டு.

டெய்லிமிரரில் கடந்த புதன்கிழமை வாசகர் ஒருவர் பின்வருமாறு பின்னூட்டமிட்டிருந்தார்.

யுத்தம் ஒன்றில் நிகழும் குழந்தை ஒன்றின் மரணம் அவலமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாலச்சந்திரனின் மரணத்திற்கு தேவையில்லாமல் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கடந்த முப்பது வருடப் போரில் கொல்லப்பட்ட குழந்தை பாலச்சந்திரன் மட்டுமே என்னும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முனைகிறது. ஆனால் நடந்து முடிந்த போரில் எண்ணுக்கணக்கற்ற குழந்தைகள் இறந்து போனவர்களினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் பட்டியலில் அடையாளமற்றவர்களாக இருக்கிறார்கள்.

பிரபாகரனின் மகனைக் கொல்வது என்பது மேற்குறித்தது போல ஒரு சாதாரணமான விடையமா?

நடந்து முடிந்த இரத்தக்களரியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்;பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான் ஆனால் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டது சாதாரணமான விடையம் என நான் கருதவில்லை.

இது போர்க்குற்றம் என்ற ஒரு குற்றச்சாட்டிற்கு அப்பால் இந்தக் கொலையை இலங்கைச்சமூகத்துள் நிலவும் வன்முறையான கலாசாரக்கட்டமைப்பை வெளிப்படையாகக் காட்டும் ஒரு அசாதாரணமான சம்பவமாகக் கருதுகிறேன்.

முரண்பாடுகளைத் தீர்க்கும் வல்லுனர்கள் சொல்வது போல் இராசதந்திரிகள் சமரசப் பேச்சாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் உலகில் நிலவும் முரண்பாடுகளை கடந்த 50 வருடங்களாக ஆராய்ந்து முரண்பாடுகள் நிலவும் சமுகங்களில் நிலவும் வன்முறைகள் பற்றித் தெளிவான நுண்மையான கோட்பாட்டைஉருவாக்கியிருக்கிறார்கள்.

முரண்பாட்டுக்கும் வன்முறைக்குக்கும் உள்ள தொடர்பை விளக்கும் கோட்பாட்டைப்பற்றி முதலில் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

எல்லாவிதமான முரண்பாடுகளும் வன்முறையை வெளிப்படுத்துபவை அல்ல. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது முரண்பாடுகள் தோன்றுகின்றன. சிலர் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுவார்கள் மற்றவர்கள் எதிர்ப்பார்கள். இந்த உடன்பாடின்மை அல்லது முரண்பாடு என்பது அமைதியான முறையில் வழிநடத்தப்பட்டால் அது முன்னேற்றகரமான நடைமுறையாக இருக்கும். ஆனால் ஒரு முரண்பாடு சரியான முறையில் வழிநடாத்தப்படாவிட்டால் அது வன்முறையாக மாறுகிறது. முரண்பாடு ஒன்றில் வன்முறைகைக்கொள்ளப்படும் போது மக்கள் அச்சமடைகிறார்கள். மக்கள் தமது பாதுகாப்பிற்கு இருப்பிற்கு ஆபத்துஏற்படுவதை உணர்கிறார்கள்.

பொதுவில் முரண்பாடு என்று சொன்னாலேயே வழமையாக வன்முறை நிறைந்த முரண்பாட்டைச் சுட்டுவதாகவே ஆகிவிடுகிறது…

பௌதீக ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் வெளிப்படையானவை எல்லோராலும் அறிந்து கொள்ளப்படக்கூடியவை. தனிநபர்கள் அல்லது குழுக்கள் தம்முள் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஒருவரை ஒருவர் காயப்படுத்தவோ கொல்லவோ முயற்சி செய்கிறார்கள் இதனால் பலர் பாதிக்கப்படவும் செய்கிறார்கள்

ஆனால் இவற்றுக்கப்பால் ஒரு சமூகத்தை ஆழமாகப் பாதிக்கின்ற பல்வேறு வகையான வன்முறை வடிவங்களும் இரக்கக்கூடும். இவற்றை கண்டு கொள்வதும் ஆராய்வதும் விளங்கிக் கொள்வதும் மக்களுக்கு கடிமனாக இருக்கும். இவை மறைந்திருக்கும் வன்முறைகளாக இருக்கும். கலாச்சார ரீதியானவன்முறைகளையும் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளையுமே இங்கே குறிப்பிடுகிறேன்.

பல ஆண்டுகளாக ஒரு குழு இன்னுமொரு குழு மீது கலாச்சார ரீதியான வன்முறையைப் பிரயோகித்திருக்கக் கூடும். பௌதீக ரீதியான வன்முறையை நியாயப்படுத்துகின்ற பேச்சுக்கள் உரையாடல்களை ஒரு குழு நடத்தியிருக்கலாம். வன்முறையைத் தூண்டுகிற விம்பங்களை பரப்பி இருக்கலாம்.

வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுக்களைப் பேசுதல் தமது சமூகத்தைச் சாராதவர்கள் மீதான வெறுப்புணர்வை வளர்த்தல் போர்வீரம் பற்றிய ஜதிகங்களை பரப்புதல்வளர்த்தல் பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளை போரை நியாயப்படுத்தும் சமயக் கருத்துக்களை ஊக்குவித்தல் போன்றவை கலாச்சார ரீதியான வன்முறைகளைச் சார்ந்தவை.

ஒரு குழுவினது அல்லது சமூகத்தினது மரபுரீதியான பழக்க வழக்கங்களில் அல்லது அவர்களது சட்டங்களில்இருக்கக்கூடிய வன்முறையைக் கட்டமைக்கப்பட்ட வன்முறையாகக் கருதலாம்.

இத்தகைய வன்முறைகள் மிகவும் பாதிப்புக்களை உண்டுபண்ணக்கூடியவை. இவை இயல்பாகவேஅந்தச்சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லது கண்டும் காணாமல் விடப்பட்டிருக்கும். நிறுவனமயப்பட்ட நிறவாதம் அல்லது பாலின ஒடுக்குமுறையை இங்கேஉதாரணமாகக் குறிப்பிடலாம்.

அரச அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் வாய்ப்புக்களை வழங்கும் போது நட்புக்காக உறவுக்காக தகுதி உள்ளவர்களை புறக்கணித்தல்; ஊழல் செய்தல்;வறுமை ஏற்படுத்தல் கொடூரமான சுரண்டலைச் செய்தல்;பால் அல்லது இனரீதியான ஒடுக்குதலைச் செய்தல் குடியேற்றவாதத்திற்குத் துணைநிற்றல் போன்ற இன்னோரன்ன விடையங்களைச் செய்வதற்காக சட்டத்தைப் பேணுவதிலும் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும் பாரபட்சம் காட்டுதலைக் கட்டமைக்கப்பட்ட வன்முறையின் ஒரு பகுதியாகக் கருதலாம்.

இந்த வன்முறைகள் மிகமிக முக்கியமாக அடையாளம் காணப்பட வேண்டியவை. ஏனேனில் இவைகள்தான் பௌதிக ரீதியான வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருப்பவை.

பௌதீகரீதியான வன்முறையை அடையாளம் கண்டு நிறுத்துவது மட்டும் போதாது ஏனேனில் சமூகத்துள் மறைந்துள்ள கட்டமைக்கப்பட்ட கலாச்சார ரீதியான வன்முறைகளை களையாவிட்டால் பௌதீக ரீதியான வன்முறைகள் மீளவும் தலையெடுக்கவே செய்யும்.

போரை வென்றபின் ராஜபக்ச அமைதி வந்துவிட்டதாகக்கூறினார். உண்மையிலும் அவ்வாறு அமைதி ஏற்பட்டுவிட்டதா?

இப்போது பாலசந்திரன் கொல்லப்பட்ட நிகழ்வைஇலங்கையில் நிலவுகின்ற கட்டமைக்கப்பட்ட வன்முறைஎன்னும் கருத்தியலுடன் இணைத்துப் பார்க்க முடிகிறதா?

உங்களுக்கு அவ்வாறு முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக,எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்தது வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.

அரச வன்முறையாகட்டும்சரி அல்லது அரசு அல்லாத குழுக்களின் வன்முறையாகட்டும் சரி அது மக்களுக்கு எதிரானது என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.

அரசதலைவராகவும் அரசஇராணுவத்தின் தலைவராகவும் இருந்த இலங்கையின் எல்லா அரசியல்வாதிகளும் கொலைகளுக்கான உத்தரவை வழங்கியே இருந்தனர். அதுபோல புரட்சி அமைப்புக்களின் தலைவர்களாக இருந்த விஜயவீரவும் பிரபாகரனும் கூடக் கொலைகளுக்கான உத்தரவுகளை வழங்கியே இருந்தனர்.

தமிழ்ப்போராளிகள் கொண்டிருந்த பயங்கரவாதம் அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே ஏற்பட்டிருந்தது. இது ஒரு எதிர்விளைவாகும். 1983ம் ஆண்டு காலிமுகத்திடலில் தமிழர்களால் நடாத்தப்பட்ட அமைதியான போராட்டம் அந்நாளைய பிரதமர் பண்டாரநாயக்காவின் (S.W.R.D Banadarnaike.) உத்தரவின் பேரில் தாக்கப்பட்டு இரத்தக்களரியாக்கப்பட்டது.

அன்றைய பிரதமரினால் எவ்வாறு தாக்குதல்களுக்கான உத்தரவு வழங்கப்பட்டது என்பதை அன்றைய IGP ஆன த.சில்வா (S. W. O de Silva) 1958 ம் ஆண்டு ஜூன் மாதம் பொலிஸ் தலைமையகத்தில் நிகழ்ந்த இரகசிய கூட்டத்தில் DIG களுக்கு கூறியிருந்ததை யாவரும் அறிவர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து 20 வருடங்களின் பின்பு தமிழ்ப் போராளிகளின் பயங்கரவாதம் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப்புலிகளைத் ஸ்தாபித்ததுடன் தோன்றியது.

அரசல்லாத சிங்களப் போராளிகள் கடைப்பிடித்தபயங்கரவாதம் என்பது அரச வன்முறையின் விளைவாக வந்ததல்ல பதிலாக அரசைக் கைப்பற்றுவதற்கான வன்முறையாக அது உருவெடுத்தது.

இது றோகண விஜிய வீர JVP யை ஸ்தாபித்ததுடன் தோன்றியது.

1971ம் ஆண்டு JVP இன் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு தனது பயங்கரவாதத்தைக்கட்டவிழ்த்து விட்டது.

இன்னொரு மொழியில் சொல்வதானால் தமிழ் போராளிகளின் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் தொடங்கியதன் பின்னரே தொடங்கியது. ஆனால் சிங்களப் போராளிகளின் பயங்கரவாதம் அரசு தொடங்கமுன்னரேயே தொடங்கிவிட்டது.

இன்றைக்கு அரசு அல்லாத இரண்டு பயங்கரவாதக்குழுக்களின் தலைவர்களும் உயிருடன் இல்லை. மேலும் இவர்கள் இருவரும் அரச பயங்கரவாதத்திற்கு பலியாகியும் உள்ளனர். இருவரும் தமது நோக்கங்களை அடைய முடியாமல் எதிர்வன்முறைக்குப் பலியாகியுள்ளனர்.

றோகண விஜிய வீர கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதையும் பயங்கரமாக்கிக் கொண்டேஅரசுக்குக்கெதிராகப் போர் செய்துகொண்டிருந்தார். றோகண விஜிய வீர தனது மனைவி மக்களுடன் கைது செய்யப்பட்ட போது நாவலப்பிட்டியில் உள்ள பண்ணையொன்றின் உரிமையாளராக அத்தநாயக்க என்ற பெயரில் வசித்துக் கொண்டிருந்தார். அதே வேளை ஆயிரக்கணக்காகன ஜே.வீ.பி போராளிகள் அரசுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால் பிரபாகரன் கடைசி நேரம் வரையும் அரசாங்கத்துடன் போர்க்களத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.

விஜிய வீர எப்படிக் கொல்லப்பட்டார்? பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார்? என்பதுவெல்லாம் அரச இரகசியமாகவே உள்ளன. பொதுமக்களுக்கு இவை ஒருபோதும் தெரியப்போவதில்லை. ஆனால் இங்கே பலகேள்விகள் எழுகின்றன.

இருதலைவர்களினது குடும்பங்களின் எதிர்காலம் எப்படி இருக்கின்றது?

அரசு விஜிய வீரவின் மனைவியையும் (சித்திராங்கனி) பிள்ளைகளான உவிந்து சுபுன் சகா, தசுன் எகா மற்றும் மூன்று பிள்ளைகளையும் எவ்வாறு நடாத்தியது?

பிரபாகரனின் மனைவியான மதிவதனி மற்றும் பிள்ளைகளான சார்ஸ் அன்ரனி,( சார்ஸ் அன்ரனி போர்க்களத்தில் ஆயுததாரியாக இருந்தார் எனவே அவரை விட்டுவிடுவோம்) பாலச்சந்திரன், துவாரகா ஆகியோரை எப்படி நடாத்தியது?

விஜிய வீரவின் குடும்பம் கொல்லப்படவில்லை. அவர்கள் அரசினால் நன்றாகப் பராமரிக்கப்பட்டார்கள். அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

சித்திராங்கனி விஜிய வீர யு.என்.பி கட்சி கூட தங்களுக்குநன்கு உதவியதாக கூறி இருந்தார். 2004ம் ஆண்டு ஜூன்20 ம் திகதி சித்திராங்கனி சண்டே லீடருக்கு அளித்த பேட்டியில் மறைந்த சனாதிபதி ரணசிங்க பிரேமதாச கூட தங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்ததாகக் கூறினார். எங்களுக்கு உதவி முக்கியமாகத் தேவைப்பட்ட கணத்தில் அவர் அதனைக் கவனமெடுத்துச் செய்ததாகவும் மட்டக்களப்புப்பல்கலைக்கழகத் திறப்பு விழாவுக்கு ஜூனில் வரும்போது திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்ட தங்களைச் சந்திக்க வருவதாகக் கூறியிருந்ததாகவும் ஆனால் அவர் அந்த ஆண்டு மே மாதத்தில் கொல்லப்பட்டுவிட்டதால் அது நிகழவில்லை எனவும் கூறியிருந்தார்.

எப்படி இருப்பினும் பிரபாகரனின் மனைவி பிள்ளைகளுக்கு (சார்ஸ்சைத் தவிர) உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பது எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியாது.

தீர்க்கப்பட்ட வெடிகுண்டுகளில் முதலாவது குண்டு பிரபாகரனின் மகனை நோக்கியே இருந்திருக்கவேண்டும் என்பதாக பிரித்தானியத் தடயவியல் நிபுணரான கலாநிதி பவுண்டர் கூறுகிறார். சிறுவனின் மார்பில் உள்ள குண்டு துளைத்த அடையாளங்களைப் பார்க்கும் போது சிறுவன் இரண்டு அல்லது மூன்று அடி இடைவெளிக்குள்ளேயே சுடப்பட்டிருக்க வேண்டும் எனப் புலனாகிறது. தன்னைச் சுடவந்த துப்பாக்கியினை எட்டிக் கரங்களால் தொட்டிருக்கக்கூடிய நிலையிலேயே அவன் சுடப்பட்டிருக்கிறான்.

விஜிய வீரவின் குடும்பத்துடன் ஒப்பிடும் போதுபிரபாகரனின் குடும்பம் பாரபட்சமான முறையிலேயே நடாத்தப்பட்டிருக்கிறது.ஏன்?

இதற்கு காரணம் இலங்கையில் நிலவும் கட்டமைக்கப்பட்ட வன்முறை.

ஏனேனில் பிரபாகரன் தமிழன்.

உவிந்து குருகுலசூரிய.

uvindu@jouranalist.com

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் தேவ அபிரா[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே....

நோபல் பரிசை உலகுக்கு கொடுத்தாலும், அரச பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாடு.

நசுக்கிடாமல்... காரியம் பார்த்த, எரிக் சோல்ஹம்முக்கு...

ஒரு, நோபல் பரிசு குடுக்கவேணும்.

எல்லாம்... முடிஞ்சபிறகு, சோல்கைம் இனி... வாயைத்திறந்தால்....

உன்னைப் போல... ஒரு, நாதாரி இந்த உலகத்தில் இல்லை என.. நான் நினைப்பேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.