Jump to content

' ஆதரவற்றவர்கள் என்றழைக்கப்படும் கைவிடப்பட்டவர்கள் '


Recommended Posts

நண்பனுக்காக ஒரு மதிய வேளையில் செல்போன் Recharge கடையில் நின்றிருந்தேன் .. கடைக்காரர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததால் சிறிது நேரம் கடை வெளியே காத்திருக்க வேண்டியதாகி விட்டது . 1-2 மணியென்பதால் , பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

[size=4]வெயில் வேறு கொளுத்தியது..[/size]

[size=4]அப்போது .......[/size]

[size=4]45 - 50 வயதிருக்கும் ஒரு பெண்மணி அந்த கடையின் வாயிலைப் பார்த்தவாறே கடையின் நிழலில் நின்றார் . [/size]

[size=4]சரி கடைக்கு வந்திருக்கிறார் என்று [/size]நானும் நண்பனும் தள்ளி வேறு பக்கம் போய் நின்றோம் . அவரோ முகத்தில் எவ்வித சலனமுமின்றி எங்களைப் பார்த்தவாறே நின்றிருந்தார் . சரி ஏதோ கேட்க வருகிறார் என்றால் அதுவும் இல்லை , உதவி கேட்க நிற்கிறாரா என்றால் தோற்றமும் அப்படி இல்லை.

[size=4]நல்ல ஆனால் சாயம் போன நூல் சேலை , கனகாம்பரம் பூ , கையில் பழையத் துணிப்பை , தேய்ந்த நாப்பது ரூவாய் செருப்பு .........[/size]

[size=4]அவரின் கண்களில் , முக வாட்டத்தில் ஏதோ ஒன்று மட்டும் என் மனதுக்கு நன்றாக தெரிந்தது .

அடுத்த சில நொடிகளில் அவரின் சூழ்நிலையைப் புரிந்துக்கொண்டு , நண்பனின் கையிலிருந்த பத்து ரூபாய் தாட்களை அவரது கையில் திணித்து விட்டு எதுவும் பேசாமல் கடைக்குள் சென்று விட்டோம் ..

மனம் கேட்காமல் மேலும் சில காசை தேடி சேர்த்து அவரிடம் கொடுக்க திரும்பி வந்த நேரத்தில் அவர் அங்கில்லை.

கையில் ஒரு துணிப்பையுடன் தளர்ந்த நடையுடன் சாலையோர நடைபாதையில் வெகு தூரம் நடந்துபோய்க்கொண்டிருந்தார்.........

இவர் யாரென்று நினைக்கிறீர்கள் ?????????????

நிச்சயமாய் பிச்சைக்காரர் இல்லை .[/size]

[size=4]வேறு யார் ?????

அதை விடினும் கொடுமையான ' ஆதரவற்றவர்கள் என்றழைக்கப்படும் கைவிடப்பட்டவர்கள் ' ......

பிச்சையெடுக்க மனமும் மானமும் இடம் தராமல் , தன்னைத்தானே நொந்துக்கொண்டு வாழ்நாளைக் கடத்திக்கொண்டிருக்கும் மனித இனத்தின் பரிதாப ஜீவன்களில் ஒரு பிரிவினர் . தன் நிலையை விளக்கி உதவி கேட்கவும் முடியாமல் , அடைக்கலம் தர யாரும் இல்லாமல் , பசியுடனும் பிணியுடனும் வாழ்க்கை போகும் பாதையில் தங்கள் நாளை கடத்திக்கொண்டிருப்பவர்கள் ...

இவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது ..

ஆம் ...

முதுமையை , சொத்து பிரச்னையை காரணம் காட்டி , உடலில் தெம்பில்லாததால் , கேட்க யாருமில்லாததால் , கௌரவ பிச்சைக்காரர்களால் தன் இருப்பிடங்களை விட்டு துரத்தப்படும் முன்னாள் நடுத்தர , பணக்கார ஆதரவற்ற முதியோர் .

உலகிற்கு தான் இவர்கள் அனாதைகள் [/size]

[size=4]ஆனால் நிஜத்தில் ................

[size=5]தன் கை காய்க்க உழைத்து வளர்த்த மகன் கை நிறைய சம்பாதித்தாலும் முதுமையை , குடும்ப சுமையை , [/size][/size][size=5]கடன் சுமையை காரணம் காட்டி வீட்டிலிருந்து மிக மரியாதையுடன் வெளியே அனுப்பப்பட்ட ' தலைசிறந்த சுயமரியாதைக்கார்கள் '[/size]

மனமெங்கும் தன்னைத் துரத்திய மக்களுக்காக அளவில்லா அன்பினை சேர்த்து வைத்திருக்கும் ' அழியாத வற்றாத செல்வமுள்ள செல்வந்தர்கள் '

[size=4]பத்து மாத சுமை சுமந்த கடனைக் கூட திருப்ப நினைக்காமல் , அதை மறந்து கூட்டை விட்டு வெளியேறிய ' பெருந்தன்மைக்காரர்கள் '

வாழ்க்கையே வெறுமையாகி , பூங்கா நடைப்பாதைக் கூட பாலைவனமாக தோன்றி , கடந்தக் கால நினைவுகளுடன் , நிகழ் கால துன்பங்களுடன் உழன்றுக்கொண்டிருக்கும் ' உயிருள்ள தூக்கி எறியப்பட்ட விலைமதிக்க முடியா இயந்திரங்கள் .... '

[size=5]அவ்வப்பொழுது வெகு சில நண்பர்கள் நேரடியாக தமிழ் கூடு - Thamizh Koodu Society மூலம் உதவி செய்து வந்தாலும் , ஏற்கனவே இதற்காக எனது ஒரு நல்ல மனதுள்ள நண்பரால் உருவாக்கப்பட்ட Pondicherry Destitute Welfare Societyயோ , புதுவையில் ஏற்கனவே சொந்த வீட்டுடன் பல இலட்சம் வறிய மக்கள் வாழ்வதால் போதிய நிதியில்லாமல் சுருண்டு இருக்கிறது .[/size][/size]

[size=4]நண்பரோ தனது உழைப்பில் வந்த காசில் தனது பெரிய குடும்பத்தையும் காப்பாற்றி , இவர்களுக்கும் உதவி செய்துக்கொண்டிருக்கிறார் . முடிந்தால் நாமும் ஒன்றிணைந்து உதவி செய்வோம் .

மருத்துவமனை , பூங்கா , கடற்கரை , சாலையோரம் என இவர்களை அதிகம் காணலாம் . பெரும்பாலும் தனியே ஒதுங்கி ஒடுங்கி இருப்பார்கள் . புதுவையிலோ Jipmer, கோரிமேடு , GH , Bharathi பூங்கா ஆகியன இவர்களது இருப்பிடமாகிப் போனது . இவர்கள் நிலையை சிறிய காட்சியாக படம் பிடித்து , தனது தொலைக்காட்சிகளில் மக்களுக்கு நல்ல கருத்தினை சொன்ன அல்லது சொன்ன மாதிரி நடித்த எங்கூரு பிரபல கேபிள் டிவி புள்ளி கூட ஒன்னையும் செய்யவில்லை .

இவர்களை எங்கேனும் கண்டால் சரியாக அடையாளம் கண்டு தங்களாலான உதவிகளை செய்யுங்கள் .

குடும்பத்துடன் , குழந்தைக் குட்டிகளுடன் K F C க்கும் , MayaJaal லுக்கும் , Express Avenue வுக்கும் செலவிடும் அர்த்தமற்ற பணத்தை இவர்களுக்கு கணக்கின்றி தாருங்கள் ...[/size]

[size=4]அந்த நிலையற்ற பொருட்கள் தரும் தற்காலிக இன்பத்தை விட்டுவிட்டு உங்கள் மகிழ்ச்சியை அர்த்தமுள்ளதாக்குங்கள் , நிலையான அமைதியை பெறுங்கள் ....[/size]

[size=1](முக நூல் ஊடாக) [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.