Jump to content

சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.


Recommended Posts

எம்.பி.பதவி ராஜினாமா: ஜெயலலிதாவுடன் சரத்குமார்- ராதிகா `திடீர்' சந்திப்பு: அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

17sarathkumar.jpg

சரத்குமார் - ஜெயலலிதா - ராதிகா

டெல்லி மேல்-சபை எம்.பி.யும், நடிகருமான சரத்குமார் கடந்த 1998-ம் ஆண்டு தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அதன் பின்பு சரத்குமார் கட்சியில் ஓரம் கட்டப்படுவதாக புகார்கள் எழுந்தது. அவரது ரசிகர்களும் தங்களுக்கு கட்சியில் உரிய மரியாதை தரப்படவில்லை என்று வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் சரத்குமார் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது என்று அவரது ரசிகர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். ரசிகர் மன்றத்தினர் எடுத்த முடிவு தி.மு.க.வினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு சரத்குமார் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சரத்குமார் திடீரென ராஜினாமா செய்தார்.

இதுபற்றி அவர் கருணாநிதிக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், `கட்சியில் தங்களை சார்ந்த சிலரே எங்களை அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அதனை தங்களுக்காகவும், இயக்கத்திற்காகவும், என் மனைவி ராதிகாவுக்காகவும் சில காலம் தாங்கி கொண்டேன்.

தங்களது இயக்கத்தில் தற்போது வாய் பேசாத அடிமைகளே தேவைப்படுகிறார்கள். எனவே நான் இந்த இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன்' என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சரத்குமாரின் முடிவுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தென்மாவட்டங்களில் பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி வாழ்த்தினர். மேலும் தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்ட சரத்குமார் நடைபெறும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், இன்னும் சிலர் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர்.

இதனால் சரத்குமார் அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்ற பரபரப்பு அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியது.

இந்த நிலையில் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் திடீரென சிங்கப்பூர் சென்றனர். அங்கு ராதிகா நடத்தி வந்த ராடன் டி.வி. அலுவலக தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அவர்கள் இன்று காலை சென்னை திரும்பினார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதாக அவரது ரசிகர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தென்மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கார், வேன்களில் இன்று காலையிலேயே மதுரை விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.

அவர்கள் `சுப்ரீம் ஸ்டார் வாழ்க.. அண்ணன் நாட்டாமை வாழ்க...' என்று வாழ்த்து கோஷம் எழுப்பியபடி விமான நிலையத்தை சுற்றி சுற்றி வந்தனர்.

காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வரும் விமானம் வந்தது. அது மதுரை மண்ணை தொட்டதும் ரசிகர்களின் வாழ்த்து கோஷம் விண்ணை எட்டியது. அப்போது சரத்குமாரும், ராதிகாவும் விமானத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை ரசிகர்கள் தயாராக இருந்த காரில் ஏற்றி மதுரை சங்கம் ஓட்டலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

சங்கம் ஓட்டலுக்கு வந்ததும் மன்ற நிர்வாகிகளுடன் சரத்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். அரை மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. அதன் பின்பு சரத்குமாரும், ராதிகாவும் `பச்சை நிற உடை' அணிந்தபடி வெளியே வந்தனர்.

அப்போது ஓட்டலுக்குள் இருந்த நிருபர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ரசிகர் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்றும், அ.தி.மு.க.வில் சேரப் போகிறீர்களா? என்றும் கேட்டனர்.

அதற்கு சரத்குமார், `தேனியில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதாவை சந்திக்க செல்கிறேன். சந்திப்பு முடிந்த பின்பு உங்களை சந்திப்பேன்' என்று கூறி விட்டு விறுவிறு வென வெளியே வந்தார். அவருடன் ராதிகாவும் சென்றார்.

இருவரும் அங்கிருந்து ஒரு தனி காரில் தேனி நோக்கி புறப்பட்டனர். காரை சரத்குமாரே ஓட்டி சென்றார். அவரது கார் வெளியே சென்றதும் ரசிகர்களும் தாங்கள் வந்த வேன், கார்களில் ஏறி அவரை பின் தொடர்ந்தபடி சென்றனர்.

1.20 மணிக்கு அவர்கள்ப தேனி சென்றடைந்தனர். தேனி என்.ஆர்.டி. நகரில் தங்கி உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவர்கள் சந்தித்தனர். அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சரத்குமாரும், ராதிகாவும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். பிறகு மூவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே டெல்லி மேல்சபை எம்.பி. பதவியை சரத்குமார் ராஜினாமா செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்தார்.

எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ள நடிகர் சரத்குமார் அதை கடிதம் வாயிலாக கருணாநிதிக்கு தெரிவித்துள்ளார்.

maalaimalar.com & Viduppu.com

Link to comment
Share on other sites

சரத்குமாருக்கு 20 கோடி கடனாம். அதைக் கட்சி தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பினார். நடக்கவில்லை. தீர்த்து வைத்தவர்களிடம் சரனடைந்துள்ளார். அதிமுக நிச்சயமாக தனது கடனை அடைக்க உதவும் என்பது தெரிந்த பின் தான் தனது திமுக எம்பி பதவியையும் தற்பேர்து இராஜினாமாச் செய்துள்ளார். ஏன் திமுகவிலிருந்து விலகும் போதே அதைச் செய்திருக்கலாமே?? எதற்காக காத்திருந்தார் என்பது தெரியாதோ?? தனது அரசியல் நடவடிக்கைகளில் தனக்கு சாதகமாக நடக்காது விட்டால் தன்னை விவாகரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என சரத்குமார் சொன்னதாக ராதிகாவே சொல்லியுள்ளார். இந்நிலையில் அவர் என்ன முடிவு எடுப்பார்.

Link to comment
Share on other sites

என்ன சொல்ல வாறீங்கள் வசம்பு திமுகவில் இருந்த சரத்துக்கு 20 கோடி கடனா..??? என்ன கட்ச்சிக்காறர் சுறண்டி போட்டினமா..???

அதில்லை கட்ச்சிக்காறனையே வாழவைக்க முடியாதைவை சனத்தை வாள வைச்ச மாதிரித்தான்...!

ராடன் TV பெரிய தயாரிப்பு நிறுவனம் சண் TV க்கு நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனம் அதன் இயக்குனருக்கு 20 கோடி கடன் எண்றால்... சண் TV யின் நிலமை என்னப்பா...???

நல்லா பூ சுத்துறீங்கள் வசம்பு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாம் 20 கோடி கடனையும் எம் யாழ்கள நண்பரிடம் தான் பெற்றாராம். எமது யாழ்கள நண்பன் எவ்வளவு கஸ்டப்பட்டு அடிவருடி பெற்ற பணத்தை சரத்குமாரிடம் கொடுத்து திருப்பி தராதபோது தனது பின் புலத்தை காட்டினார். இதனால் பயந்து போன சரத்குமார் ஜெயாவிடம் பணம் வாங்கி தன் கடனை அடைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

ஓம் தூயவன் 20 கோடி கடன் பெற வசம்பும் அவர் நண்பர் ஒருவரும்தான் சாட்ச்சி கையொப்பம் போட்டவர்களாம்...!

கடனை அடைக்கும் படி கட்ச்சிய சரத்கேட்க்க அதிமுகவில் வாங்கச்சொல்லி சொல்லீட்டார்களாம் இல்லையா...??

இதுக்குள் சரத் ஒரு மக்களவை உறுப்பினர் வேறையாம்..!

Link to comment
Share on other sites

ஆனாம் 20 கோடி கடனையும் எம் யாழ்கள நண்பரிடம் தான் பெற்றாராம். எமது யாழ்கள நண்பன் எவ்வளவு கஸ்டப்பட்டு அடிவருடி பெற்ற பணத்தை சரத்குமாரிடம் கொடுத்து திருப்பி தராதபோது தனது பின் புலத்தை காட்டினார். இதனால் பயந்து போன சரத்குமார் ஜெயாவிடம் பணம் வாங்கி தன் கடனை அடைத்துள்ளார்.

மதுரையில் இருக்கும் ஒரு (திமுக தலைவரின் மகன்) கட்ட பஞ்சாயத்து கூட்டம் பஞ்சாயத்து செய்தால்தான் சரத் பயந்தாராம்... :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தூயவன் 20 கோடி கடன் பெற வசம்பும் அவர் நண்பர் ஒருவரும்தான் சாட்ச்சி கையொப்பம் போட்டவர்களாம்...!

கடனை அடைக்கும் படி கட்ச்சிய சரத்கேட்க்க அதிமுகவில் வாங்கச்சொல்லி சொல்லீட்டார்களாம் இல்லையா...??

இதுக்குள் சரத் ஒரு மக்களவை உறுப்பினர் வேறையாம்..!

பிறகென்ன உங்களுக்கும் தெரிந்து போச்சு!! நேரே பார்த்த மாதிரி சொல்லும்போதே தெரியவில்லையா சாட்சிக் கையெழுத்து போட்டிருப்பினம் என்று. ஆனால் கொமிசன் உண்டு :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரையில் இருக்கும் ஒரு (திமுக தலைவரின் மகன்) கட்ட பஞ்சாயத்து கூட்டம் பஞ்சாயத்து செய்தால்தான் சரத் பயந்தாராம்... :P :P :P

சீசீ!!

மதுரைத் தலைவர் பஞ்சாயத்து எல்லாம் செய்யமாட்டார். நேரே கழுத்தில் கத்தி தான். கிர்ஷ்ணனை எப்படி போட்டுத் தள்ளீனார் பாருங்கள். அந்த அழகே தனி!! :wink: :P

என்ன அப்பன் காரன் ஆள் வைச்சுப் போட்டுத் தள்ளுவார். அண்ணல் நேரே களத்தில் இறங்குவார். அப்படி வீரம்!! :wink:

Link to comment
Share on other sites

பிறகென்ன உங்களுக்கும் தெரிந்து போச்சு!! நேரே பார்த்த மாதிரி சொல்லும்போதே தெரியவில்லையா சாட்சிக் கையெழுத்து போட்டிருப்பினம் என்று. ஆனால் கொமிசன் உண்டு :wink: :P

ஓண்றும் தெரியாதமாதிரி வந்து ஆதாரம் கேட்ப்பார் பாருங்கோ....!

சரத் 20 கோடி கடன் வாங்கினார் ஆனால் நான் அங்கு இருந்தனான்... ஆனால் நான் கையெழுத்து போட இல்லை.. உங்களால் நிறுபிக்க முடியுமா... எண்டு கேக்கப்போறார் சொல்லீட்டன்.... :P :P :P

Link to comment
Share on other sites

சீசீ!!

மதுரைத் தலைவர் பஞ்சாயத்து எல்லாம் செய்யமாட்டார். நேரே கழுத்தில் கத்தி தான். கிர்ஷ்ணனை எப்படி போட்டுத் தள்ளீனார் பாருங்கள். அந்த அழகே தனி!! :wink: :P

என்ன அப்பன் காரன் ஆள் வைச்சுப் போட்டுத் தள்ளுவார். அண்ணல் நேரே களத்தில் இறங்குவார். அப்படி வீரம்!! :wink:

அப்பிடியா...??

முரடன் முத்து எண்று ஒரு படம் வந்துதாமே தெரியுமா...???

அந்த முத்து தீநகரில் படும் பாடு என்ன அவரின் கோலம் என்ன..?? அவர் தலைவரின் மகனாமில்ல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓண்றும் தெரியாதமாதிரி வந்து ஆதாரம் கேட்ப்பார் பாருங்கோ....!

சரத் 20 கோடி கடன் வாங்கினார் ஆனால் நான் அங்கு இருந்தனான்... ஆனால் நான் கையெழுத்து போட இல்லை.. உங்களால் நிறுபிக்க முடியுமா... எண்டு கேக்கப்போறார் சொல்லீட்டன்.... :P :P :P

நானும் கேட்பனே?? நீர் முதலில் ஆதாரம் கொண்டுவரச் சொல்லி!! இது என்ன அந்தக் காலமோ? பாலும்தேனும் கொட்டும் அறிக்கைகளை போய் நக்கிப் பார்ப்பதற்கு? :wink:

Link to comment
Share on other sites

ஆமா வந்துட்டாங்க புலம்ப ஏதோ சரத்குமாரை தாங்க தான் கையைப் பிடிச்சுக் கொண்டு போய் ஜெயலலிதாவிடம் விட்ட மாதிரிப் புலம்புவது எந்த ஆதாரத்துடனோ அது மாதிரி தான் நான் சொல்வதும். சரத்குமார் கட்சி மாறியதை சொன்ன அதே பத்திரிகைகள் தான் சரத்குமாரின் 20 கோடி விடயத்தையும் உடைத்திருக்கின்றன. ராடன் நிறுவனத்தின் இயக்குனர் யார் என்று கூடத் தெரியாதவர்கள் புலம்ப வந்து விட்டார்கள். அதன் இயக்குனர் ராதிகா அந்த நிறுவனம் 100 கோடிகளுக்கு மேல் சொத்துள்ள நிறுவனமாக வளர்ந்து விட்டது. சரத்குமாருக்கு கடன் பிரைச்சினையென்றால் மனைவியே அதைத் தீர்த்து வைக்கலாமே. அப்படி அவருக்கு என்ன 20 கோடி கடன். எல்லாம் பணத்தாசைதான். தேர்தலை வைத்தே அவரும் பணம் பண்ண நினைக்கின்றார். இதிலை வக்காலத்து வேறை.
Link to comment
Share on other sites

வந்திட்டார் சரச் 20 கோடி கடன் வாங்கியதை பாத்தவர்... வாங்கோ வாங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத்குமாருக்கு 20 கோடி கடனாம். அதைக் கட்சி தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பினார். நடக்கவில்லை. தீர்த்து வைத்தவர்களிடம் சரனடைந்துள்ளார். அதிமுக நிச்சயமாக தனது கடனை அடைக்க உதவும் என்பது தெரிந்த பின் தான் தனது திமுக எம்பி பதவியையும் தற்பேர்து இராஜினாமாச் செய்துள்ளார். ஏன் திமுகவிலிருந்து விலகும் போதே அதைச் செய்திருக்கலாமே?? எதற்காக காத்திருந்தார் என்பது தெரியாதோ?? தனது அரசியல் நடவடிக்கைகளில் தனக்கு சாதகமாக நடக்காது விட்டால் தன்னை விவாகரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என சரத்குமார் சொன்னதாக ராதிகாவே சொல்லியுள்ளார். இந்நிலையில் அவர் என்ன முடிவு எடுப்பார்.

ஆமா வந்துட்டாங்க புலம்ப ஏதோ சரத்குமாரை தாங்க தான் கையைப் பிடிச்சுக் கொண்டு போய் ஜெயலலிதாவிடம் விட்ட மாதிரிப் புலம்புவது எந்த ஆதாரத்தடனோ அது மாதிரி தான் நான் சொல்வதும். சரத்குமார் கட்சி மாறியதை சொன்ன அதே பத்திரிகைகள் தான் சரத்குமாரின் 20 கோடி விடயத்தையும் உடைத்திருக்கின்றன. ராடன் நிறுவனத்தின் இயக்குனர் யார் என்று கூடத் தெரியாதவர்கள் புலம்ப வந்து விட்டார்கள். அதன் இயக்குனர் ராதிகா அந்த நிறுவனம் 100 கோடிகளுக்கு மேல் சொத்துள்ள நிறுவனமாக வளர்ந்து விட்டது. சரத்குமாருக்கு கடன் பிரைச்சினையென்றால் மனைவியே அதைத் தீர்த்து வைக்கலாமே. அப்படி அவருக்கு என்ன 20 கோடி கடன். எல்லாம் பணத்தாசைதான். தேர்தலை வைத்தே அவரும் பணம் பண்ண நினைக்கின்றார். இதிலை வக்காலத்து வேறை.

அடடா!!

எப்படித் தான் கொப்பியைத் தூக்கிப் போடுகின்றார்கள். அதுவும் இண்டைக்கே, பக்கம் கூட மாறவில்லை. அதுக்குள்ள கொப்பி மாற்றப்படுகின்றது!! அதுக்குள்ள வக்களத்து என்று எல்லாம் நாகரீகமான வார்த்தைகள்.

முதலில் கடனால் தான் மாறியதாகச் சொல்லிப் போட்டு இப்ப பணத்தாசையாம். எனி என்னசெய்வது விலத்திப் போனால் இப்படிப் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தானே!! 4 கிழவிகளைப் பிடிச்சு ஒப்பாரி வைக்க வேண்டியது தானே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு தல. நமக்கு 3 தடவை. உமக்கு 2 தடவை பதி பட்டிருக்கின்றது. என்ன இருந்தாலும் அண்ணரின் விண்ணாணத்தை உரைக்க இவ்வளவு அவசரம் கூடாது :wink: :P

Link to comment
Share on other sites

ஆகா வந்துட்டார் சரத் 20 கோடி வாங்கியதை பாத்தவர்... வாங்கோ வாங்கோ..

Link to comment
Share on other sites

அடடா!!

எப்படித் தான் கொப்பியைத் தூக்கிப் போடுகின்றார்கள். அதுவும் இண்டைக்கே, பக்கம் கூட மாறவில்லை. அதுக்குள்ள கொப்பி மாற்றப்படுகின்றது!! அதுக்குள்ள வக்களத்து என்று எல்லாம் நாகரீகமான வார்த்தைகள்.

முதலில் கடனால் தான் மாறியதாகச் சொல்லிப் போட்டு இப்ப பணத்தாசையாம். எனி என்னசெய்வது விலத்திப் போனால் இப்படிப் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தானே!! 4 கிழவிகளைப் பிடிச்சு ஒப்பாரி வைக்க வேண்டியது தானே!!

:lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

சேந்த்து இருக்கும் மட்டும் சரத்குமார் தெய்வம் இப்ப அவர் கடன் காறம் முள்ளமாரி, ஏமாற்றுக்காறன்...

நமக்கு சலாம் போடுரவன் மட்டும்தான் நல்லவன் கடன் இல்லாத செளிப்பானவன்... நல்ல விளக்கம்...

Link to comment
Share on other sites

சேந்த்து இருக்கும் மட்டும் சரத்குமார் தெய்வம் இப்ப அவர் கடன் காறம் முள்ளமாரி, ஏமாற்றுக்காறன்...

நமக்கு சலாம் போடுரவன் மட்டும்தான் நல்லவன் கடன் இல்லாத செளிப்பானவன்... நல்ல விளக்கம்...

அதுசரி கடன் காரனுக்கா திமுக மக்களைவை உறுப்பினர் பதவி குடுத்து வச்சிருந்தவை. :roll:

முள்ளமாரிக்கு கீரிடம் போட்டு வச்சிருந்தவை எண்டு சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

விஜய ராஜேந்தர் தி.மு.க விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தீர்மானித்து இருக்கின்றார்.. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து கருணாநிதி குடும்ப அரசியல் செய்வதாகச் சொல்லி ஒதுங்கிப் போனவர் தானே. தனிக்கட்சி ஆரம்பித்துச் சுறுண்டு போனவரை கூப்பிடுகினம்.

ஆலையில்ல ஊருக்கு இலுப்பம்புூச் சக்கரையாம். :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.