Jump to content

ஏக்கம் :(


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

naamlooswarekleuren015fa.jpg

காதல் நினைவினிலே

காதலி உன்னை பிரிகையிலே :lol:

கவிதை ஒன்று எழுதிவிட்டு

கன்னி உன் கண்படவே

காகிதத்தில் மறைத்துவிட்டு

காத்திருந்தேன் உன் பதில்க்காய் :?

கண்டு விட்ட கவிதையினை

கடைசிவரை படிக்கு முன்னே

கன்னியவள் என்னிடத்தில்

கேள்வி ஒன்றை கேட்டு விட்டாள்

"கவி படைத்தாய் நம் காதலுக்கா?? - ஏன்

காட்டவில்லை என்னிடத்தில்??" :oops:

உயிர் கலந்த காதலியே

உண்மையினை உரைத்திடுவேன்

உனக்காய் இக்கவி படைத்தேன் - நம்

உறவில் உறுதி ஊட்டுதற்காய் :lol::lol:

படித்து அவள் முடிக்கும்வரை

பார்த்திருந்தேன் பாவி இவன் :?

பாவை என்ன பறைவாளென்று ! ! !

பார்வை ஒன்று பார்த்துவிட்டு

பிடித்திருக்கு என்று சொன்னாள்

பாதியிலே முடித்துவிட்டாள் :lol:

பகல் பொழுது பிரிந்த பின்னே

பரிசு எனக்கு தந்திடுவாள்

ஃபண்ணாய் ஏதும் பண்ணிடுவாள்

பார்த்திருந்தேன் பாவி இவன் :?

ஏக்கத்துடன் நானிருக்க

தூக்கம் என்று சொல்லிவிட்டு

தூங்க இப்போ சென்று விட்டாள் - என்

துடிப்பறியா துணைவி இவள் :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஸ்ணு தூங்காமல் காத்திருங்க.. அவங்க தூங்கி எழுந்து வந்து பரிசு தருவாங்க.. வர வர இந்த காதல் பண்ணிற இளசுகளின்ர லொள்ளுத்தாங்கல.. :wink: :P

Link to comment
Share on other sites

விஷ்ணு! பாவம் நீங்கள் :lol::lol:

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்றாவது ஒருநாள் புரிந்து கொள்வாள்.

Link to comment
Share on other sites

ஏக்கத்துடன் நானிருக்க

துக்கம் என்று சொல்லிவிட்டு

தூங்க இப்போ சென்று விட்டாள் - என்

துடிப்பறியா துணைவி இவள்

அடடா ... சரி சரி அழாதீங்க நீங்கள் அழுகிறத பாத்திட்டு வந்தாலும் வந்திருவாங்க... :P

கவிதை அருமை... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஷ்ணு

ஏக்கம் கவிதை நன்று ஆனால் அதிலே சோகம் அதிகமுண்டு.

இறுதியில் "துக்கம்" என்றா "தூக்கம்" என்றா செல்லிவிட்டு

தூங்கச்சென்றார்?

சிறு சந்தேகம் அதுதான் அப்படிக் கேட்டேன்.

Link to comment
Share on other sites

தூக்கம் கொள்ளப் போனவள்

ஏக்கத்தோடு எழுந்திடுவாள்

பாதி படித்த கவியதனை

மீதி கொள்ள வந்திடுவாள்

துக்கம் வேண்டாம்

தூக்கம் வேண்டாம்-உங்கள்

துணைவியவள் வந்திடுவாள்

காத்திருங்கள்(ஏன் என்றால் நானே 5 முறை பார்த்துவிட்டேன் உங்கள் கவியதனை வாழ்த்துக்கள்) :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி விஷ்ணு கவி மிக அருமை

Link to comment
Share on other sites

என்ன விஸ்ணு கவிதையில அடி பின்னுகிறீர்ங்கள்..... வாழ்த்துக்கள் அப்பு... நல்லாப்பட்டு நொந்து போனியள் போலகிடக்கு....

நான் ஏதாவது உதவி செய்ய வேணும் எண்டால் சொல்லுங்கோ... ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு கிண்டல கருத்துக்கள் சொன்னவர்கள் உட்பட எல்லா கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள்.

செல்வமுத்து அங்கிள், எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு ரொம்ப நன்றி. இப்போது திருத்தி இருக்கிறேன் பாருங்கள். ஏனோ எழுதும் போது எழுத்துப்பிழை வருகின்றது. திரும்ப பார்க்கும்போதும் தெரிவதில்லை. இனி முடிதவரை கவனத்தில் கொள்கிறேன்.

படத்தில் இருப்பது நான் இல்லை. :roll: கவிதையுடன் எனது உணர்வை வெளிக்காட்ட அப்படத்தினை இணைத்தேன். அது உங்கள் இளவயதுப்படம் போல ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.

தலா... உதவி வேணாம்ப்பா... உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். அதுதான் வேணாம் என்றேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஸ்ணு தூங்காமல் காத்திருங்க.. அவங்க தூங்கி எழுந்து வந்து பரிசு தருவாங்க.. வர வர இந்த காதல் பண்ணிற இளசுகளின்ர லொள்ளுத்தாங்கல.. :wink: :P

:D:D:D உண்மையாவொ.. இனி அடக்கி வாசிக்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூக்கம் கொள்ளப் போனவள்

ஏக்கத்தோடு எழுந்திடுவாள்

பாதி படித்த கவியதனை

மீதி கொள்ள வந்திடுவாள்

துக்கம் வேண்டாம்

தூக்கம் வேண்டாம்-உங்கள்

துணைவியவள் வந்திடுவாள்

காத்திருங்கள்

பதில் கவிதைக்கு நன்றி பாலன்.. எதோ நினைக்கிறன் சொல்ல முடியல.. :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி அடக்கி வாசிக்கிறம்.

சே சே பகிடிக்கு.. உங்கட திறமையை அடக்கி முடக்காதீங்க.. தொடர்ந்து எழுதுங்க.. :P

Link to comment
Share on other sites

விஸ்னு அண்ணா தங்கள் கவி அருமை வாழ்த்துக்கள்

உங்கள் இனியவள் கட்டாயமாக வருவாங்கள் அந்தளவுக்கு உங்கள் கவி இருக்கின்றது.

பாதி தூக்கத்திலை என்றாலும் எழும்பி வருவாங்கள் :D:D:D:lol::lol:

Link to comment
Share on other sites

விஷ்ணு கவலைப்படதீர்கள். அவர்களின் தூக்கம் கலைய உங்களுக்கு நல்லா பரிசு தந்துவிடுவா. உங்கள் மனைவியின் தூக்கம் கலையும் வரை நீங்கள் தூங்கமால் இருங்கள்.

அழகான கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

விஷ்ணு கவலைப்படதீர்கள். அவர்களின் தூக்கம் கலைய உங்களுக்கு நல்லா பரிசு தந்துவிடுவா. உங்கள் மனைவியின் தூக்கம் கலையும் வரை நீங்கள் தூங்கமால் இருங்கள்.

அழகான கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்

சொன்னது போல தூங்காம இருந்து பார்க்கிறேன்... நீங்கள் சொன்னதை பார்த்திட்டு யாரும் நான் திருமணமான ஆள் என்று நினைக்கப்போறாங்க.. அப்படி எல்லாம் இல்லைப்பா.. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா கவிதை சூப்பர்...வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.