Jump to content

ஈழம் பற்றி பரி. வேதாகமத்தில்....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலாம் என்று இங்கே குறிப்பிட்டுள்ளது, ஆங்கிலத்தில் Elam என்றிருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்டா இப்ப நடக்கிற விசயங்களெல்லாம் கர்த்தருடைய கித்தத்pனாலதான் நடக்குது எண்டு சொல்லுங்கோ. கடைசி நாடகளில அதாவது நியாயத்தீர்ப்பு நாள் வரக்கிட்டவாத்தான் எங்கட சிறையிருப்பும் திரும்புமெண்டு சொல்லியிருக்கிற படியா விரைவில ஈழமும் கிடைக்கப்போறதால கர்த்தரையும் அவருடைய வலது பாரிசத்தில இருக்கிற யேசுக் கிறிஸ்துவையும் தரிசிக்கிற வாய்ப்பு எங்களுக்கு விரைவில கிடைக்கப் போகுது எண்டு எண்ணுறன் என்ன சரியே

Link to comment
Share on other sites

என்னென்ன புதிய வடிவத்தில் வந்து ஆராய்ச்சி செய்கிறாங்களப்போ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டுமில்லப் பாருங்கோ தேவகுமாரன் பிறந்த நேரத்தில வழிகாட்டின நட்சத்திரத்pன்ர உதவியோட அவரைப்போய்ச் சந்திச்சு அருள் பெற்ற மூன்று கீழைத்தேய யாத்திரீகர்களில ஒருவர் நம்மட ஈழத்தைச் சேர்ந்தவர் எண்டுகூட ஆராய்ச்சி மூலம் கண்டறிஞசிருக்கிறாங்க. இன்னுமொரு விசயத்தையும் சொல்லிவைக்கிறன் என்னண்டால் நியாயத் தீர்ப்பு நாளக் கெதியா வரப்பண்ணுறது நம்மட கையிலதான் இருக்குது. சத்திவார்த்தையின்படி ஈழத்திர சிறையிருப்புத் திரும்புறது கடைசிநாளில வருமெண்ட படியா நாம எல்லாரும் சேர்ந்து ஈழம் விடுதலையடையப் பாடுபட்டாக் கர்த்தரையும் தேவகுமாரனையும் விரைவில நியாயத் தீர்ப்புல பிரத்தியடசமாச் சந்திக்கலாம் ஆமென்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னென்ன புதிய வடிவத்தில் வந்து ஆராய்ச்சி செய்கிறாங்களப்போ.....

எங்கட Eelam எல்லோ Elam இல்லை.

:P :P :lol::lol:

பைபிளில் சொல்லியிருக்கிற எங்கட ஈழம் இல்லை. அது கிறிஸ்துவுக்கு முன் 2700 இல் இன்றைய ஈரான் பகுதியிலிருந்த Elam province. :lol:

Elam (Persian: ایلام) is one of the most ancient civilizations on record. Elam was centered in the far west and southwest of modern day Iran (in the Ilam Province and the lowlands of Khuzestan). It lasted from around 2700 BC to 539 BC, coming after what is known as the Proto-Elamite period, which began around 3200 BC when Susa, the later capital of the Elamites began to receive influence from the cultures of the Iranian plateau to the east.

Ancient Elam lay to the east of Sumer and Akkad (modern-day Iraq). In the Old Elamite period, it consisted of kingdoms on the Iranian plateau, centered in Anshan, and from the mid-2nd millennium BC, it centered in Susa in the Khuzestan lowlands. Its culture played a crucial role in the Persian Empire, especially during the Achaemenid dynasty that succeeded it, when the Elamite language remained in official use. The Elamite period is considered a starting point for the history of Iran (although there were older civilizations in Iranian plateau like Mannaeans kingdom in Iranian Azarbaijan and Shahr-i Sokhta (Burned City) in Zabol and other indigenous civilizations such as Jiroft Kingdom who lived in Iranian plateau but weren't as established as Elamites).

http://en.wikipedia.org/wiki/Elam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளில் சொல்லப்படும் ஒரு வசனம் மற்ற இனங்களை யேசு எப்படி அவமதிக்கின்றார் என்பதை வெளிப்படையாகச் சுட்டிக் காட்டுகின்றது!

மத்தேயு:

அதிகாரம் 15

வசனம்: 21இல் இருந்து- 28வரை

21. பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.

22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

25. அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.

26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயேசு தான் வந்ததற்கான நோக்கம் இஸ்ரவேலைத் தேடித்தானே தவிர, மற்றவர்களுக்காக அல்ல என்கின்றார். இதில் இருந்து புரிவது என்ன? அவரின் ஆசி மற்ற இனங்களுக்கு கிட்டும் என்ற நினைக்கின்றீர்களா??

பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுவது நல்லதல்ல என்கின்றார். இது சுட்டி நிற்பது என்ன? மற்றவர்களை நாயிற்கு இணையாக ஒப்பிடுகின்றார்.

அதை விட அப்பெண் தம்மை தாழ்த்தி எஜமான் மேசையில்.... என்கின்றார். எவ்வளவு அவமானமான வசனம். கேவலம்!! அப்போதே மற்ற இனங்களை அடிமை இனமாக வளர்க்க முயன்றிருக்கின்றார்கள். அதாவது இந்தியாவின் பாப்பாண சக்திகள் போல!

கடைசியாக அவர் வந்ததைச் சாதிக்க அவரால் முடியவில்லை. கடைசியில் உங்கள் பாவங்களைச் சுமக்கின்றேன் என்றபடி மாண்டு போனதைத் தவிர!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதித்தீர்ப்பு நாள் உலகம் அழியேக்கயெல்லோ வருது?

அப்ப எங்கட ஈழமும் உலகம் அழியேக்கதான் கிடைக்குமெண்டு சொல்ல வாறியளோ?

சின்னக்குட்டியர் சொன்னதுபோல 'எங்கயிருந்தப்பா உந்த ஆராய்ச்சியாளர் வருகினம்?"

Link to comment
Share on other sites

எல்லாம் சரி பைபிள கதையின படி ,ஈரானக்கு பக்கத்திலை இருந்த ஈழத்தை யார் கொண்டு போய் இந்தியாக்கு பக்கத்திலை வைச்சது சைவ சமயத்திலை பல சாமி பல புத்தகங்கள்ஆனா ஒரே யொரு மதம் இ;ங்கை ஒரோயொரு கரத்தர் ஒரோயாரு வேதாகமம் பலமதத்தை தொடங்கி ஆழாளுக்கு பல விழக்கம் தாங்க முடியலை .பாவம் யேசு நாதர் இப்பிடியெல்லாம் நடக்குமெண்டு தெரிந்துதான் அப்பவே கர்த்தரிட்டை தந்தையே இவர்கள் தங்கள் பாவங்களை அறியாமலேயே செய்கிறார்கள் அதனானல் அவர்களை மன்னியும் என்றார்

Link to comment
Share on other sites

கலேலுயாக்காரருக்கும் தங்கட வியாபாரத்தை நடத்த இப்ப ஈழமும் புலிகளும் தான் கிடச்சிருக்கு.இன்னும் கொஞ்சம் ஆராச்சி செய்தா புலிகளும் பைபிளில வருவினம்,பிறகு யேசுவின் மறு அவதாரம் தான் தலைவர் எண்டும் கதை விடுவினம்.வீட்டத்தட்டி தான் அலுப்புக் குடுத்தவை இப்ப இப்படிக் கதை விட்டும் மதம் பரப்புகினம்.

கலேலுயா....

Link to comment
Share on other sites

சாத்திரி பறைஞ்சது:

எல்லாம் சரி பைபிள கதையின படி இஈரானக்கு பக்கத்திலை இருந்த ஈழத்தை யார் கொண்டு போய் இந்தியாக்கு பக்கத்திலை வைச்சது

யோவ் சாத்திரி என்ன கேள்வி இது. எலம் என்பது ஈழம் ஆகியது போல் பல நு}ற்றாண்டுகளுக்கு முன் பலமாக அடித்த சுனாமியால் ஈழம் இடம் மாறி விட்டது.

அலிகா யார்?? அறிமுகம் கூட செய்யாமல் அவசர அவசரமாக வந்த அகிலத்தின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலேலுயாக்காரருக்கும் தங்கட வியாபாரத்தை நடத்த இப்ப ஈழமும் புலிகளும் தான் கிடச்சிருக்கு.இன்னும் கொஞ்சம் ஆராச்சி செய்தா புலிகளும் பைபிளில வருவினம்,பிறகு யேசுவின் மறு அவதாரம் தான் தலைவர் எண்டும் கதை விடுவினம்.வீட்டத்தட்டி தான் அலுப்புக் குடுத்தவை இப்ப இப்படிக் கதை விட்டும் மதம் பரப்புகினம்.

கலேலுயா....

சரியத்தான் சொன்னாய் நாரதரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:?: மேற்படி தலைப்பில் என் கருத்து ஒன்றை எழுதியிருந்தேன். ஒரு சில மணி நேரங்கள் இக்களப்பிரிவில் இருந்தது. அதன் பின் காணவில்லையே. :cry: ஏன்?

அல்லிகா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் யேசுவின் மகிமை.பரோலகத்தில் இருக்கும் எங்கள் பிதா உம்மை இரட்சிப்பாராக.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலாம் என்று இங்கே குறிப்பிட்டுள்ளது, ஆங்கிலத்தில் Elam என்றிருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிப்பு கோருகிறேன். அவசரப் புத்தி எனக்கு!

அல்லிகா :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துகள் தான் காதில பூ சுற்றுறாங்கள் என்று பார்த்தால் இப்போ கிறிஸ்தவர்களும் காதில பூ சுற்றுறாங்க டோய்......

எப்ப தான் நீங்க எல்லாம் மதங்களின் உண்மையை உணர்வீர்களோ தெரியவில்லை.....

மேற்கத்தேயர் இப்படியான பூசுத்தலை விட்ட படியால் தான் முன்னேறி கொண்டு போகிறார்கள் சில தேவாலயங்களை கூட பிற மதத்தவர்கள் தங்கள் கோயிலாகவோ மசுதியாகவோ வழிபட விட்டு கொடுக்கிறார்கள் நாங்கள் இப்ப தான் ஈழம் பற்றி பரி வேதகாமத்தில் ஆராய்ச்சி பண்ணுகிறோம் விட்டால் யேசுநாதரின் மறுபிறவி தான் தேசிய தலைவர் என்று பூ சுற்றினாலும் சுற்றுவிங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஆரம்ப நிலை காரணமாக அக்களப்பிரிவில் என் பதில்களை எழுத முடியாத காரணத்தினால், இங்கே என் பதில்களை தருகிறேன். வசம்பாரே, அக்களப்பிரிவுக்கு என் பதில்களை மாற்றுவீரா? நன்றி

அல்லிகா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஈழம், தற்போதைய ஈரானின் தென்கிழக்கில், இருந்தது.

David McAlpin's Elamo-Dravidian hypothesis postulates a genetic relation between Elamite and Dravidian languages, which then would have been carried from Elam to India by eastward migration

http://en.wikipedia.org/wiki/Elamite_langu...Elamite_scripts

இந்து நதி பள்ளத்தாக்கு அகழ்வுகள் (ஹரப்பா, மொஹென்சதாரோ) நாம், ஈழத்தவர், கி.மு. 5000 வருடங்களுக்கு முன்பே இடம் பெயர்ந்ததிற்கு உதாரணம். ஆரியப்படையெடுப்புகளினால் தெற்கு நோக்கி புலம் பெயர்ந்து, மலைஈழ (தற்போதைய கேரளம்) மூலமாக இன்றைய ஈழத்திற்கு இடம் பெயர்ந்தோம். திராவிட (இச்சொல் தமிழ் அல்ல என நான் எண்ணுகிறேன்) குடும்பத்தில் ஈழத்தவர் ஒரு தனித்துவத்தை கொண்டவர்கள் என்பது என் கருத்து.

இங்கே, மற்றைய சரித்திர ஆய்வாளர்கள் எழுதியதை ஒட்டி ஓர் சரித்திர ஆய்வேயன்றி, மத நோக்கு ஒன்றுமில்லை.

ஆரூரான், ஆங்கில சொற்மொழி ஆக்கத்தை வைத்து இதுதான் ஈழம் என்று கொள்வது முறையல்ல. நான் கூறுவது, ஈழம் என்பதும், ஈழத்தவர் என்பதும், ஆய்வாளரின் கருத்துபடி அப்போதய ஈரானின் ஈழத்திற்கும் இப்போதய ஈழ்த்திற்கும் இருக்கும் தொடர்பினால் எமது ஆதியை கண்டறிய ஒரு சந்தர்ப்பமல்லவா.

ஆங்கில ஆய்வாளர் David McAlpin அவரின் ஆய்வின்படி genetic relation between Elamite and Dravidian languages, which then would have been carried from Elam to India by eastward migration

திராவிட மொழிகளுக்கும் பண்டைய ஈழ மொழிக்கும் உள்ள தொடர்பையும், பண்டைய ஈழ்த்திலிருந்து கிழக்கு நோக்கி புலம் பெயர்ந்ததையும் அவர் தனது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது 1975ல் அவர் வெளியிட்டது.

தூயவன், நீங்க குறிப்பிட்டதுபோல் யேசு கூறியது, அந்நாட்டில் அப்போதிருந்த (தற்போதும்தான்) பிற நாட்டவரை தூற்றும் முறையை குத்திக் காண்பித்து, இசிரயேல் நாட்டவரன்றி எவரும் தன் "விசுவாசத்தினால்" மேன்மை அடைகிறான் என்பதை உணர்த்தவே ஒரு சாதாரண மனிதன்போல் தன் சொற்நடையில் உணர்த்துக்கிறார். தன் தாயையே நாங்கள் நினைப்பதுபோல் அவமதிப்பது போன்றும் சில சொற்களை பாவிக்கிறார், அல்லவா? அவரை ஒரு சமூக சீர்திருத்தவாதி என நான் கருதுகிறேன் அன்றி, மதவாதியாக கருதவில்லை.

Link to comment
Share on other sites

alika wrote:

எனது ஆரம்ப நிலை காரணமாக அக்களப்பிரிவில் என் பதில்களை எழுத முடியாத காரணத்தினால், இங்கே என் பதில்களை தருகிறேன். வசம்பாரே, அக்களப்பிரிவுக்கு என் பதில்களை மாற்றுவீரா?

அவதார புருஷருக்கு அருள் பாலிக்கும் அளவிற்கு எனக்கு சக்தியில்லை. உங்களுக்கு அருள் பாலிக்கும் சக்தி நிர்வாகத்திற்கே உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் இதே யாழ்களத்தில் இன்னொரு இடத்தில் எழுதியது..

எங்கள் தலைவன் பிரபாகரன் அவன் அந்த முருகனுக்கே இணையானவன் அவன் வேல் எடுத்தான் இவன் துவக்கு எடுத்தான்.........

இப்போ புத்தன் எழுதியது..

விட்டால் யேசுநாதரின் மறுபிறவி தான் தேசிய தலைவர் என்று பூ சுற்றினாலும் சுற்றுவிங்க.

ஏனுங்க.. முருகனுக்கு இணையாக இருக்க முடியுமென்றால் யேசுவிற்கு மறுபிறவியாக இருக்கட்டுமே..

Link to comment
Share on other sites

காவடி wrote:

ஏனுங்க.. முருகனுக்கு இணையாக இருக்க முடியுமென்றால் யேசுவிற்கு மறுபிறவியாக இருக்கட்டுமே..

பிறகு புத்தர் கோபிப்பார். அதனால் அவரின் மறுபிறவியாகவும் ஏற்றுக் கொள்வோம். :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி காவடி, புத்தர் அறிவுமதியின்ர பாட்டைத்தான் சொல்லயிருக்கிறாரெண்டு நினைக்கிறன்.

அப்பிடித்தான் அவர் சொல்லயிருந்தா கடவுள் முருகனை உதுக்குள்ள கொண்டு வந்து செருகிற உம்மட புத்திசாலித்தனததை என்னெண்டு புகழ?

அறிவுமதி சொன்ன வேலெடுத்த முருகனுக்கும் அந்த சுப்பிரமணி எண்டுற முருகனுக்கும் என்னப்பா சம்பந்தம்?

பிறகெதுக்கு முருகனைக் கடவுளாக்கி, அதுக்குள்ளால யேசுவையும் கொண்டு வந்து செருகிறீர்?

(கவனிக்க: புத்தர் சொன்னது அறிவுமதியின்ர பாட்டை வச்சுத்தான் எண்டு கருதி இந்தக் கருத்து. புததர் உண்மையிலயே கடவுள் முருகனைததான் சொன்னாரெண்டால் நான் காவடியின்ர பக்கம்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.