Jump to content

நாம் தமிழர்” ஆவணம் - தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 3


Recommended Posts

வளர்மதி வெள்ளி, 22 ஜூன் 2012 20:11

emailButton.pngprintButton.pngpdf_button.png

பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star_blank.png / 3

குறைந்தஅதி சிறந்த

“நாம் தமிழர்” ஆவணம் - தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 3

சென்ற பகுதியில் விவரித்திருந்த வரையறுப்பினடியாக நோக்கும்போது ஆவணத்தின் அடிநாதமாக இருப்பது பாசிசக் கருத்தியலே என்பது உறுதியாகிறது.

பாசிசத்தின் வரையறுப்பில் முதல் அம்சமான தேசப்புத்துயிர்ப்பு (palingenesis):

‘நாம் தமிழர்’ ஆவணம் முழுவதும் ‘தேச உரிமை மீட்சி’ என்ற தொடர் பரவியிருப்பதை வாசிப்பவர்கள் கவனிக்கலாம். ‘திராவிடக்’ கருத்தியலின் ஆதிக்கத்தாலும், பிற மொழியாளர்களின் சுரண்டலாலும் தமிழ்ச் சமூகம் சிதைவுபட்டிருக்கிறது என்பதைத் தொடர்ந்து குறிப்பிடும் ஆவணம், அதிலிருந்து ‘மீட்சி’ பெறுவதற்கான வழியாகத் தமிழ் நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் வெளிப்படை. ஆனால், இழந்த உரிமைகளை மீட்பது என்ற பொருளில், அடிமைத் தளைகளில் இருந்து விடுபடுவது என்ற பொருளோடு நின்றுவிடவில்லை. அவ்வாறு இருந்திருந்தால், அது தேசிய விடுதலை நோக்கு என்ற அளவில் இருந்திருக்கும்.

மாறாக, ‘மீட்சி’ என்பதை ஆவணம் முன்மொழிவது, பாசிசத்திற்கே உரிய ‘தேசப்புத்துயிர்ப்பு’ என்ற வகையில் அமைந்திருப்பதை ‘ஆவணத்தை விளக்கிடும் உரைவீச்சுத் தெறிப்புகள்’ என்ற பகுதியில் உள்ள ‘உரைவீச்சுத் தெறிப்பு’ ஒன்று தெள்ளத் தெளிவாக உணர்த்திவிடுகிறது.

பக்கம் 48 இல்:

“நாம் தமிழர் கட்சி

ஆட்சிக்காக மட்டுமல்ல!

தமிழின மீட்சிக்காக!”

என்று தாம் தமிழின மீட்சிக்கானவர்களே என்ற விளக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த பக்கத்திலேயே:

“கட்டடத்திற்கு

வெள்ளையடிக்க வந்தவர்கள் அல்லர்!

அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டு

மறுகட்டடத்தைக்

கட்ட வந்த புரட்சியாளர்கள்!” (பக்கம்: 49)

என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

தமிழ் தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தருவது என்பதல்ல; ‘மறுகட்டடத்தை’ உருவாக்குவதே அவர்களது இலக்காம். ‘நாம் தமிழர்’ ஆவணத்தின் ‘தேசப்புத்துயிர்ப்பு’ நோக்கு, இக்குறிப்பிட்ட வகையிலானதாக – பழைய கட்டடத்தையே இடித்துவிட்டு புதிய கட்டடத்தைக் கட்டுவதாகும். (கொத்தனார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, இன்ஜினியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை! ஆனால், கட்டடத்தை இடிக்கப் போவதாகச் சொல்வது கரசேவகர்களை நினைவுபடுத்தினால் அதற்கு அவர்களே பொறுப்பு!)

noam_chomsky_281.jpgஇவ்விடத்தில் ஒரு ‘தொன்மக் கரு’வின் வெளிப்பாடே பாசிசம் என்று சென்ற பகுதியில் குறித்திருந்து விளக்காமல் விட்டிருந்ததைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். அத்தொன்மக் கரு வேறொன்றுமில்லை. ‘புத்துயிப்பு’ அல்லது ‘மறுபிறப்பு’ என்ற கருதுகோளே.

உலகின் அனைத்துப் பண்பாடுகளிலும் இந்தப் ‘புத்துயிர்ப்பு’ அல்லது ‘மறுபிறப்பு’ என்ற கருதுகோள் உறைந்திருப்பதைக் காணமுடியும். மனித ஆன்மாவிற்கு அழிவில்லை, என்ற கற்பனையில் ஊற்றெடுத்து, அந்த ஆன்மா இன்னொரு உடல் உருக்கொள்ளும் என்ற நம்பிக்கையாக உருமாறி, பின் நிறுவனமயப்பட்ட பல்வேறு மதங்களின் ஆதார சுருதியாக இப்புத்துயிர்ப்பு என்ற கருதுகோள் நிலைபெற்றதையும் காணமுடியும். மனித குலத்தின் ஆதியிலிருந்து அதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற மரணத்தின் மீதான அச்சத்தில் இருந்து பிறப்பதே இத்தொன்மக் கரு. அதை சமூகத்தின் மீது, குறிப்பாக தேசத்தின் மீது சாற்றுவதே பாசிசத்தின் தனித்தன்மை.

பல்வேறு சமூகப் பண்பாட்டுச் சூழல்களின் குறிப்பான தன்மைகளுக்கே உரிய முறையில் இத்தொன்மக் கரு பல்வேறு வடிவம் கொள்கிறது. குறிப்பான, சமூகப் பண்பாட்டுச் சூழல்களின் தனித்தன்மைகளில் தோன்றும் பாசிச இயக்கங்கள், இத்தொன்மக் கருவை தமது ஆதாரச் சுருதியாகக் கொண்டு, தமது சமூக வரலாற்றுப் பின்புலத்திற்கே உரிய, அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனமான நம்பிக்கைகளோடு இணைத்து உருக்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜெர்மானிய நாஜிக்கள், இத்தொன்மக் கருவோடு இணைத்தது, ‘தூய ஆரிய இனம்’ என்ற அறிவியலுக்கு முற்றிலும் எதிரான இனப்பெருமை சார்ந்த மூடத்தனம்.

நமது சூழலில் முளைவிட்டிருக்கும் பாசிஸ்டுகள், இப்புத்துயிர்ப்பு அல்லது மறுபிறப்பு (ஆவணம் கைக்கொண்டிருக்கும் மொழியில் ‘மறுக்கட்டடம்’) என்ற தொன்மக் கருவோடு இணைக்கும் அறிவியலுக்குப் புறம்பான அல்லது போலியான அறிவியல் மீது கட்டமைக்கப்பட்ட இரு மூடத்தனமான நம்பிக்கைகள், ‘உலகின் மொழிகளுக்கெல்லாம் ஆதி மொழியான தமிழ்’ மற்றும் ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’.

ஆவணத்தின் முதல் பத்தியே போலியான அறிவியலின் மீது கட்டப்பட்ட இந்த இரு மூடநம்பிக்கைகளில் இருந்தே தொடங்குகிறது. உலகின் முதல் மொழி தமிழ், லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என்பவற்றுக்கெல்லாம் எந்தவிதமான அறிவியில் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. இதை எத்தனை முறை கூறினாலும் விளங்கிக் கொள்ள மறுக்கிற மூட நம்பிக்கையாளர்களின் கருத்துக்களை முதல் பத்தியிலேயே தனது முற்கோளாகக் கொண்டு தொடங்கியிருக்கிறது ஆவணம்.

மேலும் ஒரு படி மேலே சென்று அதற்கான ‘அறிவியல் பூர்வமான ஆதாரமாக’ புகழ் பெற்ற மொழியியல் ஆய்வாளரான நோம் சோம்ஸ்கியின் கூற்றாக, அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறவும் தயங்கவில்லை.

அது என்ன பொய்?

இதுதான்: “அதனால்தான் புகழ் பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சோமிசிகி அவர்கள், ‘உலக மொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியில் இருந்தே பிறந்திருக்க வேண்டும்; அம் மூலமொழி தமிழாக இருக்கலாம்’, என்று கருத்துரைத்துள்ளார்.”

முதலாவதாக, நோம் சோம்ஸ்கியின் ஆய்வுகள் மொழிகளின் வரலாற்றுத் தோற்றம் என்ற புலம் சார்ந்தவையே அல்ல. மொழியைக் கற்பதற்கான திறன், மனித மூளையின் அமைப்பில் உள்ளார்ந்து இருக்கிறது என்ற கருதுகோளையே அவர் தமது ஆய்வுகள் வழியாக முன்வைத்தார். அதன் அடிப்படையில் Transformative Generative Grammar என்பதாக இன்று பரவலாக அறியப்படுவதை முன்வைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பாக, அவரது மேற்குறிப்பிட்ட மொழியியல் அடிப்படையில் அமைந்த இலக்கண நோக்குகள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையைச் சேர்ந்த மொழியியல் துறையில், உசாத்துணை நூல்களாக பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

நோம் சோம்ஸ்கி, இத்தகைய மூடத்தனமான ஒரு கருத்தை எங்குமே கூறியிருக்கவில்லை. இத்தகைய அறிவியலுக்குப் புறம்பாக ஒரு கருத்தை அவரது கூற்றாக ஆவணம் தன் முதல் பத்தியிலேயே வைத்திருப்பது ஏதோ அறியாமல் செய்த பிழை என்று கருவும் இயலாது. தமது மூடத்தனமான கருத்துக்களுக்கு வலு சேர்க்க, அப்பட்டமான ஒரு பொய்யை கூசாமல் சொல்லத் துணிந்திருக்கிறது என்பது தெள்ளெனத் தெரிகிறது.

தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக, முதல் பத்திகளிலேயே அப்பட்டமாக பொய் சொல்லத் துணிந்த ஆவணம் என்ற பெருமையையும் ‘நாம் தமிழர்’ ஆவணம் பெற்று நிற்கிறது.

இருக்கும் கட்டடத்தை இடித்துவிட்டு (கரசேவகப் பணி) ‘மறுகட்டடத்தை’ கட்டுவோம் என்ற விளக்கத்தில் ‘நாம் தமிழர்’ கட்சி ஆவணம், தனக்கே உரித்தான ‘தேசப்புத்துயிர்ப்பு’ என்ற பாசிசத்தின் மையமான அம்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இத் தொன்மக் கருவிற்கு வலுசேர்க்கும் விதமாக ‘ஆதிக் குடி’, ‘முதல் மொழி’ என்ற அறிவியல் பூர்வமற்ற மூடத்தனமான கற்பனைகளையும் அவற்றை நிறுவ ஒரு பெரும் அறிஞரின் கூற்றாக அப்பட்டமான பொய்யையும் சொல்லத் துணிந்திருக்கிறது.

அதே சமயம், இத்’தேசப்புத்துயிர்ப்பு’ வெகுவிரைவில் நிகழக்கூடிய சாத்தியமில்லை என்பதிலும் ஆவணம் தெளிந்தே இருக்கிறது. ‘தேசிய இனங்களின் சிறையாக’ அரை நூற்றாண்டுக்கும் மேலாக, வலுவாக தாக்குப் பிடித்து நிற்கும் இந்திய அரசை மீறி, அத்தனை சுலபத்தில் தமிழ் தேசப் புத்துயிர்ப்பை நிகழ்த்திவிட இயலாது என்ற தெளிவு இருப்பதாலேயே,

எம் இன எதிரிகளின் சட்டத்திற்குட்பட்ட

தேர்தல் பாதையை நாம் விரும்பி ஏற்கவில்லை.

வரலாறு நம்மீது வலிந்து திணித்துள்ளது. (பக்கம்: 53)

என்ற விளக்கத்தையும் அளிக்கிறது.

இந்திய வல்லாதிக்க அரசை மீறி தமிழ் தேச புத்துயிர்ப்பை உடனடி நிகழ்ச்சி நிரலில் வைப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்திருப்பதாலேயே, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்டு, தேர்தலில் பங்கேற்று, ஒரு நீண்ட கால நோக்கில் ‘தேசப் புத்துயிர்ப்பை’ நிகழ்த்தும் நிகழ்ச்சி நிரலை மேற்கொள்கிறது.

தற்காலத்தைய நவ – பாசிஸ்டுகள், தமது நிகழ்ச்சி நிரல்களை ஒரு பல்தேசிய மட்டத்திற்கு நகர்த்தியிருப்பதற்கு ஒப்பானது இது. நவ – பாசிசக் கும்பல்களில் ஒன்றான சிவசேனை கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்பானது.

பாசிசத்தின் இரண்டாவது முக்கிய அம்சமான அதிதீவிர தேசியவாதத்திற்கு (ultra – nationalism) இனி நகர்வோம்.

தமிழ் தேசத்திற்கான வரையறுப்பாக ஸ்டாலினின் இலக்கணத்தை ஆவணம் பக்கம் 31 – 31 ல் குறிப்பிடுகிறது. ஸ்டாலினின் வரையறுப்பை ஆவணம் எங்ஙனம் திரித்திருக்கிறது என்பதைக் காண்பதற்கு முன்பாக, அவரது வரையறுப்பை தெளிவுபடுத்திக் கொள்வது நலம்.

ஸ்டாலின் தமது தேசம் (nation) குறித்த வரையறுப்பில் இனம் (race) என்ற வகையினத்தை மிகக் கவனமாகக் குறிப்பிட்டு விலக்கினார். ‘மார்க்சியமும் தேசியப் பிரச்சினையும்’ என்ற அவரது புகழ் பெற்ற சிறு நூலின் முதல் கட்டுரையின் ஆரம்ப வரிகளிலேயே இதை தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார்:

“ஒரு தேசம் என்பது என்ன?

தேசம் என்பது முதன்மையாக ஒரு சமூகக் குழுமம். ஒரு மக்கள் தொகுதியின் உறுதியாக நிலைபெற்ற சமூகக் குழுமம்.

இச்சமூகக் குழுமம், இன ரீதியாகவோ, பழங்குடியினர் அடிப்படையிலானதோ அன்று. நவீன இத்தாலிய தேசம் ரோமர், டியூட்டானியர், எட்ருஸ்கியர், கிரேக்கர், அராபியர் இன்னும் இதுபோன்ற பல இனங்களால் உருவானது. ஃப்ரெஞ்சு தேசம் கௌல், ரோமர், பிரித்தானியர், டியூட்டானியர் இன்னும் பலரால் உருவானது. பிரிட்டிஷ், ஜெர்மன் இன்னும் இது போன்ற மற்ற தேசங்களும் இவ்வாறு பல்வேறு இனத்தினர், பழங்குடியினரின் கலப்பினால் உருவானவை என்றே சொல்ல முடியும்.

ஆக, ஒரு தேசம் என்பது, வரலாற்று ரீதியாக உருவாகி அமைந்த ஒரு மக்கள் தொகுதியின் சமூகக் குழுமமே தவிர, இன ரீதியாகவோ பழங்குடியினர் அடிப்படையிலோ அமைந்ததன்று.”

(குறிப்பு: மொழியாக்கம் எனது. Community என்பதை சமூகக் குழுமம் என்பதாகவே தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறேன். அதை social group என்று திருப்பி மொழியாக்கம் செய்து புரிந்து கொள்ள வேண்டாம் என்று கோருகிறேன்)

[What is a nation?

A nation is primarily a community, a definite community of people.

This community is not racial, nor is it tribal. The modern Italian nation was formed from Romans, Teutons, Etruscans, Greeks, Arabs, and so forth. The French nation was formed from Gauls, Romans, Britons, Teutons, and so on. The same must be said of the British, the Germans and others, who were formed into nations from people of diverse races and tribes.

Thus, a nation is not a racial or tribal, but a historically constituted community of people.

http://marxists.org/reference/archive/stalin/works/1913/03a.htm#s1]

இந்த முன்நிபந்தனையை வரையறுத்த பின்னரே ஸ்டாலின், அக்கட்டுரையின் பிற்பாதியில் தேசிய இனத்திற்கான தமது வரையறுப்பைத் தந்திருப்பார்.

அவ்வரையறுப்பு பின்வருமாறு:

“ஒரு பொதுமொழி, நிலப்பரப்பு, பொருளாதார வாழ்வு, ஒரு பொதுப்பண்பாட்டின் ஊடாக வெளிப்படும் பொதுவான உளவியல் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று ரீதியாக உருவாகி நிலைபெற்ற ஒரு மக்கள் தொகுதியின் சமூகக் குழுமமே ஒரு தேசமாகும்.”

[A nation is a historically constituted, stable community of people, formed on the basis of a common language, territory, economic life, and psychological make-up manifested in a common culture. http://marxists.org/reference/archive/stalin/works/1913/03a.htm#s1]

ஆவணம் இவ்வரையறுப்பை மிகச் சரியாக, பிசகேதும் இன்றித் தருகிறது:

தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனும் தகுதியுடைய இனம். இவ்வினத்திற்கான பொதுமொழி, தொடர்ச்சியான நிலப்பரப்புடைய பொதுவான வாழும் பகுதி, பொதுப் பொருளாதார வாழ்வு, ஓரினமென்ற மன இயல்பு ஆகிய கூறுகளுடன் வரலாற்று அடிப்படையில் உருவான நிலையான மக்களினம், தமிழ் குமுகாயமாகும். தனக்கென அரசியல் பண்பாட்டு வாழ்வியல் உரிமைகளோடும், இறையாண்மையோடும் இருந்த, இருக்க வேண்டிய ஒரு இனம், தமிழினம் ஆகும்.” (பக்கம் 31 – 32) (அழுத்தம் எனது. அழுத்தம் தராப்படாத பகுதி ஸ்டாலினின் வரையறுப்பு)

stalin_630.jpg

ஆனால், முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் சேர்த்திருக்கும் வரிகளிலும், வரையறுப்பின் முதல் சொல்லாக்கத்திலும், மிக வெளிப்படையாக, இனம் என்பதற்கே அழுத்தம் தருகிறது. ஸ்டாலினின் வரையறுப்பைச் சரியாகத் தரும் அதே போதில், அவர் விலக்கி வைத்த இனம் என்ற வகையினத்தின் அடிப்படையிலே தமிழ் தேசத்தை வரையறை செய்கிறது.

தேசத்தின் மையக்கூறாக, தூய இனம் என்ற வகையினத்தைக் கொள்வதாலேயே ஆவணம் முழுக்க இனவாதம் தலைவிரித்து ஆடுவதாக இருக்கிறது.

ஆவணம் விவரித்துச் செல்லும் சமூக வரலாற்றின்படி, இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே (பாகிஸ்தான் உட்பட) தமிழர் என்ற இனத்தால் ஆளப்பட்டது. ஆரிய இனப் படையெடுப்பிற்குப் பின் நிகழ்ந்த இனத்திரிபால் உருவானதே திராவிடம் என்ற இனம். தமிழ் மொழி திரிந்ததால் உருவானவையே இந்தியத் துணைக்கண்டம் முழுதும் பரவியிருக்கும் பிற மொழிகள்.

இத்தகைய இனத்திரிபில் இருந்து, தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் அதன் தூய நிலைக்கு மீட்பதே ஆவணம் முன்மொழியும் அரசியல். இது தேசிய வாதமன்று. தூய இனவாதம்.

இவ்வாறு, இனத்திரிபு என்று நோக்குவதாலேயே, திராவிடத்தை வேரறுக்கக் கோருகிறது ஆவணம். மொழித் திரிபு என்று நோக்குவதாலேயே தமிழ் நாட்டில் வாழும் பிற மொழியினரைத் தம் தாய் மொழி தமிழே என்று உணர்ந்து ஏற்றுக் கொள்ளுமாறு மென்மையாக மிரட்டவும் செய்கிறது:

“உங்களைப் பிறமொழியாளர் என்று சொல்லி,

உங்களைப் பிறராகப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை.

உங்கள் மூலத் தாய்மொழியாம் தமிழுக்குத் திரும்பிட

உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம்.” (பக்கம்: 50)

ஒரு தேசத்தில் சிறுபான்மையினராக வாழும் பிற மொழி பேசுவோர், தமது தாய்மொழியைக் கைக்கொள்வதற்கான முழு உரிமையை ஏற்பதுவே ஒரு ஜனநாயக அணுகுமுறையாக இருக்க முடியும். அவர்களது மூல மொழி, பெரும்பான்மையினரின் மொழியே என்று கற்பித்து அதற்குத் திரும்பிட உரிமை தருகிறோம் என்பது – இதில் முழு உரிமை வேறாம் – என்பது மிரட்டல் அல்லாமல் வேறு என்ன? இனவாத வெறியில் இருந்தல்லாமல் வேறு எதில் இருந்து இத்தகைய மிரட்டல் எழ முடியும்!

இதன் அடுத்த வரிகளிலேயே மீண்டும்:

தனி இனமாக நீங்கள் வாழ வாழ்த்துகிறோம்; ஆனால் ஒன்று;

தமிழர் தேசத்தில் தமிழர் ஆட்சியை நீங்கள் வாழ்த்துங்கள்!

எனக்கு அடங்கி, என்னை வாழ்த்தினால் நீ இங்கு வாழலாம் என்ற பெரிய அண்ணாத்தையின் (big brother attitude) மென்மையான மிரட்டல் அல்லாமல் இது வேறு என்ன!

ஸ்டாலினின் வரையறுப்பைத் தரும் ஆவணம், அவரது கருத்தில் பல்வேறு இனங்களின் கலப்பினூடாக வரலாற்று ரீதியாக நிலைபெற்ற ஒரு மக்கள் தொகுதியினரே ஒரு தேசமாக உருப்பெறுகின்றனர் என்பதைக் கவனமாகத் தவிர்க்கிறது. (ஸ்டாலினின் இவ்வரையறுப்பைக் காட்டிலும் செறிவான நோக்குகளை இங்கு விரிவஞ்சித் தவிர்க்கிறேன்). பல இனத்தவர், பல மொழி பேசுபவர் கலந்து, நெடுங்கால வரலாற்று தொடர்ச்சியில் ஊடாடி, உருப்பெற இருப்பதே நவீனத் தமிழ் தேசம் என்பதை உணராது, தூய இனவாதச் சகதியில் வீழ்ந்தமையால், இனவெறி விஷத்தைக் கக்குவதாக இருக்கிறது.

எந்தவொரு தேசமும் தூய இனக்குழுவால் நிலைபெற்றவை அல்ல. தூய இனவாதம் தேசியவாதமும் அல்ல. தூய இனவாதம், பாசிசத்தின் முக்கிய அம்சமான ultra – nationalism - அதிதீவிர தேசியவாதமே.

பாசிசத்தின் மூன்றாவது முக்கிய அம்சமான அரசியல் மதம் (political religion) ‘நாம் தமிழர்’ ஆவணத்தில் எங்ஙனம் உருக்கொண்டிருக்கிறது என்பதோடு இப்பகுதியை முடித்துக் கொள்கிறேன்.

செயற்பாட்டுக் கொள்கைகள் பகுதியில், “நாளைய தமிழர் ஆட்சியில், அரசு சமயம் சாராது. ஆனால், யாருடைய தனிப்பட்ட சமய நம்பிக்கையிலும் அரசு தலையிடாது.” (பக்கம்: 60) “நாம் தமிழர்” ஆட்சி சமயச் சார்பற்றதாக இருக்கும் என்று அறிவிக்கிறது ஆவணம்.

நல்லது. ஆட்சிக் கனவோடு, நல்ல ஆட்சியை நல்குவதாகக் கனவு காண்பது மிக நல்லது.

ஆனால், முரண்பாடுகள் பகுதியில், மூன்றாம் முரண்பாடாக “தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்குமிடையே முரண்பாடு” (பக்கம்: 37) என்று வரையறுக்கிறது ஆவணம்.

இதை விளக்குமிடத்தில் கீழ்வருமாறு விரித்துரைக்கிறது:

“3 ஆம் முரண்பாடுகளான முகமதியமும் கிறுத்தவமும் தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப்பாதுகாப்பும், சொத்துடைமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகம்மதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்று உணர்ந்தறிந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்.” (பக்கம்: 39)

சமயச்சார்பற்ற அரசமைக்கப் போவதாகக் கனவு காணும் ஒரு கொள்கை ஆவணம், எல்லாச் சமயத்தினரையும் சமமாக அணுகியிருக்க வேண்டும். குறைந்தது “எச்சரிக்கையாக அணுகப்பட வேண்டியவர்கள்” என்று பட்டியலிட்டால், அதில் அனைத்து மதத்தினரையுமாவது சேர்த்திருக்க வேண்டும். ‘நாம் தமிழர்’ ஆவணமோ இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் ‘சந்தேகப் பட்டியலில்’ சேர்த்துவிட்டு, இந்துக்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறது. ஆர். எஸ். எஸ். பி. ஜே. பி. சிவசேனா ஆகிய இந்துத்துவ சக்திகளின் ‘கொள்கைகளுக்கும்’ இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம்.

என்றாலும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக, இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் ‘சந்தேகப் பட்டியலில்’ சேர்த்த கொள்கையை அறிவித்த முதல் ஆவணம் என்ற பெருமையையும் ‘நாம் தமிழர்’ ஆவணமே தட்டிச் செல்கிறது என்பதைக் குறிப்பிடாமல் விடுவது வரலாற்றுக்கு துரோகம் செய்வதாகிவிடும்.

இத்தகைய நுட்பமான இந்துத்துவச் சார்புக் கொள்கையை அறிவித்தாலும், ஆவணம் எந்த ஒரு மதத்தையும் தனது உத்தியோகப்பூர்வமான மதமாக ஒப்புக்கொண்டுவிடவில்லை. மாறாக, பாசிசத்தின் கூறான, அரசியல் மதம் (political religion) ஒன்றையே தனது கொள்கையாக தெளிவாக அறிவிக்கிறது.

கலைச்சொல் விளக்கம் பகுதியில் ‘தமிழியம்’ என்பதாக ஆவணம் கீழ்க்கண்டவாறு வரையறை தருகிறது:

தமிழியம்: ஐந்திணை மரபுசார்ந்த இயற்கை நெறி, எண்ணியம் சார்ந்த அறிவியநெறி, பொதுமை சார்ந்த உலகியநெறி, உயிரிநேயம் சார்ந்த அருள்நெறி ஆகியவற்றை உ:ள்ளடக்கிய அறம், பொருள், இன்பம் போற்றும் விழுமிய வாழ்வியம் (வாழ்வியல் நெறி). (பக்கம்: 117)

இது ஒரு மதம் சாராத வரையறுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த வரையறுப்பின்படி வாழ்ந்தாலே ஒருவர் தமிழர் என்ற வரையறைக்குள் வருவர் என்று நிபந்தனையையும் விதிக்கிறது ஆவணம்: “தமிழியத்தை வாழ்வியல் நெறியாகவும், தமிழர் நலனை நடைமுறையாகவும் கடைப்பிடிப்பவர் வாழும் தமிழர் ஆவார்.” (பக்கம்: 116)

இந்த வரையறுப்பின்படி இன்று வாழும் தமிழரில் ஒருவரைக்கூடத் தமிழராகச் சொல்லமுடியாது (‘நாம் தமிழர்’ இயக்கத்தவரின் தலைவர் கூட இதன்படித் தமிழர் இல்லை என்றாகும்) என்பது ஒருபுறம் இருக்க, பாசிசத்தின் மூன்றாவது வரையறுக்கும் அம்சமான அரசியல் மதத்தை ‘நாம் தமிழர்’ ஆவணம் தமிழ் மக்கள் மீது திணிக்கிறது என்பதுவே இங்கு கவனத்திற்குரியது.

மதம் தொடர்பான தனது நிலைப்பாடாக ஹிட்லர் கூறியதோடு, இந்த வரையறுப்பை ஒப்பிட்டுப் பார்ப்பது நலம்:

“தேசிய சோஷலிசம், சற்று நீண்ட காலம் ஆளுகையில் இருந்துவிட்டால், நாம் வாழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுகூட சாத்திமற்றுப் போகும்.

நீண்ட கால நோக்கில், தேசிய சோஷலிசமும் மதமும் ஒத்திசைந்து இருப்பது சாத்தியப்படாத ஒன்று.

இந்த முரண்பாட்டை மதத்திற்கு எதிரான போராக அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா என்று சி. எஸ். எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக ஃப்யூரர் மேற்கொண்டு கூறியதாவது:

இல்லை. இதன் பொருள் மதத்திற்கு எதிராக நாம் போர் தொடுக்கப் போகிறோம் என்பதில்லை. சிறந்த தீர்வு என்பது, எந்தவிதமான களையெடுப்புகளும் செய்யாமலேயே, இம்மதங்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்ளும்படி விட்டுவிடுவதாகவே இருக்கும்.

[When National Socialism has ruled long enough, it will no longer be possible to conceive of a form of life different from ours.

In the long run, National Socialism and religion will no longer be able to exist together.

On a question from C. S., whether this antagonism might mean a

war, the Fuehrer continued:

No, it does not mean a war. The ideal solution would be to

leave the religions to devour themselves, without persecutions.

HITLER'S TABLE TALK 1941-1944: His Private Conversations. Translated byNorman Cameron and R.H. Stevens Introduced and with a new Preface by H.R. Trevor-Roper]

ஹிட்லர், ஆட்சியைப் பிடிக்கும் முன்பாகவும் சரி, கைக்கொண்ட பிறகும் சரி, எந்த மதத்தினர் மீதும் தாக்குதல் தொடுக்கவில்லை (யூதர்கள் மீதான தாக்குதல் இனவெறி அடிப்படையிலே இருந்தது). ஜெர்மனியில் ப்ரொட்டஸ்டண்ட் கிறித்தவர்களின் பலம் உணர்ந்து அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல், கண்டும் காணாமல் இருக்கும் நிலையையே எடுத்தான். சில வேளைகளில் ஊக்குவிக்கவும் செய்தான்.

தமிழகத்தில் முளைவிட்டிருக்கும் பாசிஸ்ட்டுகள், இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் ‘சந்தேகப் பட்டியலில்’ சேர்த்துவிட்டு, ‘இந்து’ மதத்தினர்பால் கண்டும் காணாத நிலையெடுத்திருப்பது அதற்கு ஒப்பானதே. ஹிட்லரைப் போலவே, நாஜிக் கொள்கைக்கு நிகரான, அரசியல் மதமாக ‘தமிழியம்’ என்ற அரசியல் மதத்தையும் முன்மொழிந்திருப்பதுவும் அப்பட்டமான பாசிசமே!

(தொடரும்)

- வளர்மதி

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20183:2012-06-22-14-44-52&catid=1:articles&Itemid=264

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செத்துப்போன கம்யூனிசிய கொள்கை இன்னமும் எத்தனை நாளைக்கு கூட வரும்?

தமிழனை தமிழன் ஆள நினைத்தவுடனேயே அனைவருக்கும் ஒரு பதட்டம் வருவது இயல்பே ஏனென்றால் தமிழர் அல்லாதவரின் இருப்பு தமிழகத்தில் முக்கியம் இல்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.