Jump to content

'நா' ஊறும் ஆலு-65!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]'நா' ஊறும் ஆலு-65!!![/size]

[size=4]13-aloo-300.jpg[/size]

[size=4]உருளைக் கிழங்கின் விலை மலிவாக கிடைக்கும் நேரத்தில் நாம் அந்த உருளைக்கிழங்கை வைத்து நிறைய ரெசிபி செய்திருப்போம். அதில் நாக்கு ஊற வைக்கும் அளவு ஒரு ரெசிபி செய்து வீட்டிலுள்ளோரை அசத்த வேண்டுமென்றால், அதுக்கு ஆலு-65 தான் சிறந்தது. சரி, அதை செய்யலாமா!!![/size]

[size=4]தேவையான பொருட்கள் :[/size]

[size=4]உருளைக்கிழங்கு - 5

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 3

தயிர் - 1 1/2 கப்

அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்

பேக்கிங் பௌடர் - 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்

கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு[/size]

[size=4]செய்முறை :[/size]

[size=4]1. முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக விடவும். பின் அதன் தோலை உரித்து, அதனை சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.[/size]

[size=4]2. பிறகு கடலை மாவோடு உப்பு, பேக்கிங் பௌடர் ஆகியவற்றைப் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.[/size]

[size=4]3. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கை அந்த கலவையில் போட்டு பிரட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.[/size]

[size=4]4. பின் தயிரை ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடிந்ததும், அந்த தயிர் சீசை நன்கு கடைந்து கொள்ளவும்.[/size]

[size=4]5. பிறகு வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீள நீளமாக அரிந்து கொள்ளவும்.[/size]

[size=4]6. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு மிளகாய், வெங்காயம், அஜினோமோட்டோ போட்டு வதக்கவும்.[/size]

[size=4]7. பின் அதில் கடைந்து வைத்த தயிரை போட்டு, உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள் தூவி வதக்கவும்.[/size]

[size=4]8. அதிலுள்ள பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கியப் பின், பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும். வேண்டுமென்றால் தண்ணீர் ஊற்றி வதக்கலாம்.[/size]

[size=4]9. மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்ததும் சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.[/size]

[size=4]இப்போது சுவையான ஆலு-65 ரெடி!!![/size]

[size=4]http://tamil.boldsky.com/recipes/veg/delicious-aloo-65-001340.html[/size]

Link to comment
Share on other sites

[size=5]இணைப்புக்கு நன்றி. மட்டின் என்று இல்லாததால் ஒருவரும் இந்தப்பக்கம் வரவில்லைப் போலும். ஆரோக்கியமான செய்முறைகளை இணைத்தால் மிக நன்று.[/size] [size=5]எண்ணைப் பொரியல் இல்லாமல்[/size].

Link to comment
Share on other sites

உருளைக்கிழங்கை சும்மா சாப்பிடுவதே வேண்டாத் வேலை. இதுக்குள்ள தயிர், என்னை எல்லாம் சேர்த்து சாப்பிட்டால் கதி? சும்மா, பகிடிக்கு..

இணைப்புக்கு நன்றி தமிழரசு! கூடிய சீக்கிரம் எல்லாருக்கும் ஒரு விருந்து வையுங்கோ. நல்லா சமைக்கப் பழகுறீங்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இணைப்புக்கு நன்றி. மட்டின் என்று இல்லாததால் ஒருவரும் இந்தப்பக்கம் வரவில்லைப் போலும். ஆரோக்கியமான செய்முறைகளை இணைத்தால் மிக நன்று.[/size] [size=5]எண்ணைப் பொரியல் இல்லாமல்[/size].

[size=5]தொடர்ந்து உங்களின் கருத்துக்களை எழுதுங்கள் ,கருத்துக்களுக்கு நன்றி அலைமகள் . :) [/size]

உருளைக்கிழங்கை சும்மா சாப்பிடுவதே வேண்டாத் வேலை. இதுக்குள்ள தயிர், என்னை எல்லாம் சேர்த்து சாப்பிட்டால் கதி? சும்மா, பகிடிக்கு..

இணைப்புக்கு நன்றி தமிழரசு! கூடிய சீக்கிரம் எல்லாருக்கும் ஒரு விருந்து வையுங்கோ. நல்லா சமைக்கப் பழகுறீங்க...

நிச்சயமாக சந்தர்ப்பம் கிடைத்தால் விருந்து வைப்பேன் , :) நீங்களும் உங்களின் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள் .

கருத்துக்களுக்கு நன்றி ஈஸ் .

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி தமிழரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தமிழரசு

இன்று செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன்....

யாராவது ஆலு சாப்பிட ஆசைப்பட்டால் என் வீட்டுக்கு வரவும்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தமிழரசு

இன்று செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன்....

யாராவது ஆலு சாப்பிட ஆசைப்பட்டால் என் வீட்டுக்கு வரவும்... :D

நான் லண்டனில் இருந்து வரமுடியாது , பார்சல் செய்து கொரியர் மூலம்

அனுப்பினால் சாப்பிடலாம் ,ஆலு-65 வந்து சேரும்போது எப்படி இருக்கும்

என்பதுதான் எனது ஜோசனை , :D

தொடர்ந்து கருத்துகளை எழுதுங்கள் :)

கருத்துக்கு நன்றி வல்வை சகாறா .

பி;கு:எனது பங்கை சாப்பாட்டு ராமன் நிழலிக்கு கொடுக்குமாறு வேண்டுகின்றேன் . :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.