Jump to content

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்


Recommended Posts

இனம் என்பதை உலகம் இப்படி பொதுவாக வரையறுக்கிறது: ஒரு தனித்துவமான மொழியை பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட, தனித்துவமான ஒரு மக்கள் கூட்டத்தை "இனம்" என்று சொல்கின்றது.

குறிப்பிட்ட இனம் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியமான நிலப் பரப்பையும் கொண்டிருந்தால், அது ஒரு தேசிய இனம் என்கின்ற அங்கீகாரத்தை பெறுவதற்கான தகமைகளை கொண்டிருக்கும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழியை பேசாது, பல மொழிகளைப் பேசுகின்ற தேசியங்களும் உலகில் இருக்கின்றன. இவர்களை ஒரே விதமான பிரச்சனையும், ஒன்றாய் கூடியதன் பயனாய் உருவாகும் தனித்துவம் மிக்க பண்பாடும் ஓரே தேசியமாக மிளிரச் செய்யும். உ-ம்: அமெரிக்க தேசியம்.

Link to comment
Share on other sites

  • Replies 153
  • Created
  • Last Reply

அதே போன்று ஒரு மொழியைப் பேசுகின்ற ஒரு இனம் வௌ;வேறு பண்பாடுகளைக் கொண்டிருப்பதாலும், வௌ;வேறு பிரச்சனைகளைக் கொண்டிருப்பதாலும் தனித் தனித் தேசியங்களாக பிரிந்து செல்லும்.

அரேபிய மொழியைப் பேசுவதோடு, தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்டிருந்தும், ஒரு அரேபிய தேசியம் உருவாக முடியவில்லை. இருபதிற்கும் மேற்பட்ட தேசியங்களாக அந்த இனம் திகழ்கின்றது.

ஜேர்மனியில் வாழ்கின்ற ஜேர்மன் மொழிபேசுபவனே தன்னை ஒரு ஜேர்மனியன் என்று அறிமுகம் செய்கின்றான். அவன் சுவிஸில் வாழ்ந்தாலோ, அல்லது அவுஸ்ரியாவில் வாழ்ந்தாலோ தன்னை தனித்துவமான தேசியமாகவே உணர்கின்றான்.

வரலாறும், பிரச்சனைகளும், பண்பாடுகளும் ஒரு மக்கள் கூட்டத்தை அதே மொழியைப் பேசுகின்ற மக்கள் கூட்டத்தில் இருந்து தனித்துவமாக பிரித்துக் காட்டுகின்றன.

Link to comment
Share on other sites

அதே போன்று ஈழத்தில் வாழுகின்ற தமிழ் மொழியைப் பேசுகின்ற முஸ்லீம்களும் தனித்துவமான பண்பாட்டையும், பிரச்சனைகளையும் கொண்டிருக்கின்றார்கள்.

அதை விட மிக முக்கியாமாக தமது நிலப்பரப்பின் அயலில் வாழ்கின்ற தமிழர்கள் பற்றிய அச்சத்தையும் கொண்டிருக்கின்றனர். தமிழர்களும் முஸ்லீம்கள் பற்றிய தவறான எண்ணங்களையும், அச்சங்களையும் அத்தோடு அவர்கள் தமக்கு கீழ் வாழ வேண்டும் என்கின்ற மேலாதிக்க மனப்பாங்கையும் கொண்டிருக்கின்றனர்.

இது தமிழீழத்தில் முஸ்லீம்கள் தனியான அலகைப் பெற்று தம்மைத் தாமே நிர்வாகிப்பதற்கான தகமைகளை தானாகவே வழங்கி விடுகின்றது.

ஐக்கிய இலங்கையில் கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைய முடியாது ஒரு நிலையையும் ஏற்படுத்தி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் சபேசன் ....சிறிலங்கா முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்று சொல்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

முஸ்லிம்கள் தேசிய இனமென்றால் தமிழ்பேசும் கிறீஸ்துவர்களும் ஒரு தேசிய இனம்.. எனென்றால் அவர்களும் பல இடங்களில் பல்லாண்டுகளாக பூர்வகுடிகளாக வாழ்கிறார்கள்.. :rolleyes:

அடுத்ததாக, வெள்ளாளர்கள் ஒரு தேசிய இனம்.. அவர்களும் ஒரு நிலப்பரப்பில், மொழி அலகைக்கொண்டு பூர்வீகமாக வாழ்ந்து வருகிறார்கள்.. :lol:

Link to comment
Share on other sites

ஒரு தேசியமாக உருவாக முடியாத அளவிற்கு அவர்களுக்கு நிலப்பரப்புச் சார்ந்த சிக்கல் இருக்கின்றது. கிழக்கில் ஒரு கிராமத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்தால், அடுத்த கிராமத்தில் தமிழர்கள் வாழ்கின்றார்கள். அதற்கு அடுத்த கிராமத்தில் முஸ்லீம்கள். இதைத்தான் தேங்காய்ப்பூவும், பிட்டும் போல என்று சொல்வார்கள்.

ஆயினும் இலங்கைத் தேசியத்திலோ, அல்லது தமிழீழத் தேசியத்திலோ வாழக்கூடிய ஒரு தனித்துவம் மிக்க சமூகமான முஸ்லீம்களால் தமது கிராமங்களை நிர்வாகிக்கின்ற ஒரு அலகினை பெறுவதற்கான தேவை அவர்களுக்கு இருப்பதாக அவர்கள் கருதினால், அதை அடக்கப்படும் இனத்தை சேர்ந்த ஒருவனான என்னால் புரிந்து கொள்ளவும், ஆதரிக்கவும் முடியும்.

Link to comment
Share on other sites

தனித்துவமான பண்பாடுகளையும் நிலப்பரப்புக்களையும் கொண்டிருக்கும் இனங்களும், சமூகங்களும் இணைந்து ஒரு தேசியமாக திகழ்வதை இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

தனித்துவமான பண்பாடும், தொடர்ச்சியான பாரம்பரிய நிலப்பரப்பு இருப்பதனாலோ அந்த மக்கள் கூட்டம் ஒரு தேசியமாக உருவெடுக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

அந்த மக்கள் கூட்டம் தற்போது உள்ளடக்கப்பட்டிருக்கும் தேசியத்தில் பாதுகாப்பாக உணர்கின்றதா என்பது இங்கே முக்கியம்.

இலங்கைத் தேசியத்தில் தமிழினம் பாதுகாப்பாக உணரவில்லை. அது தனித் தேசியமாக உருவாவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசியத்தில் உள்ள தனித்துவம் மிக்க சமூகமான முஸ்லீம்கள் அங்கே தம்மை பாதுகாப்பாக உணரவில்லை. அவர்கள் அதற்காக தனி அலகு போன்ற ஏற்பாடுகளை கோருகின்றார்கள்.

Link to comment
Share on other sites

முஸ்லிம்கள் தனித்துவமாக வாழும் நிலப்பரப்பை சிங்களத்துடன் இணைத்துவிடுவதுதான் தமிழீழத்திற்கான சரியான தீர்வாக அமையமுடியும்..

தமிழர் போராட்டத்தில் அவர்கள் அரசியல்ரீதியில் சிங்களத்துடனேயே தம்மை இனங்காட்டிக் கொண்டனர்.. பிற்பாடு சிங்களுத்துடன் பேசி அவர்கள் தமக்கான தீர்வைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்..

Link to comment
Share on other sites

தமிழீழம் உருவாகக்கூடிய நேரத்தில், முஸ்லீம்கள் தாம் பாரம்பரியமாகவும், பெரும்பான்மையாகவும் வாழ்கின்ற நிலப்பரபு;புக்கள் தொடர்ந்தும் சிறிலங்காவுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பினால், அது சிக்கல் மிகுந்ததாக இருந்தாலும் கூட, அதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டே ஆக வேண்டும். எமது முடிவை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.

தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கம் அச்சத்தையும், தவறான எண்ணங்களையும் நீக்கி, நட்பும், சகோதரத்துவமும் மிக்க மக்களாக அவர்களை மாற்றுவதே சிறந்த மாற்றுவழியாக இருக்க முடியும். அதற்கான காலமும் சந்தர்ப்பமும் இன்னமும் இருக்கின்றதா என்பதே என்னுடைய அச்சம் மிகுந்த கேள்வியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நீங்கள் என்ன முஸ்லிம்களின் பிரதிநிதியா ? :rolleyes:

Link to comment
Share on other sites

அது எப்படி நான் அவர்களின் பிரதிநிதயாக முடியும்? ஆனால் என்னுடைய இனத்திற்கு உரிமைகள் வேண்டும் என்று கேட்கின்ற நான், இன்னொரு சமூகமும் அப்படிக் கேட்பதை புரிந்து கொள்வது இயல்பான ஒன்று அல்லவா?

அவர்களுடைய பிரதிநிதிகளை அவர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி நாடு தமிழர்களுக்கு கிடைச்சிட்டுது இனி மேல் முஸ்லீம்களுக்காக போராடுவோம்

Link to comment
Share on other sites

தமிழீழம் உருவாகக்கூடிய நேரத்தில், முஸ்லீம்கள் தாம் பாரம்பரியமாகவும், பெரும்பான்மையாகவும் வாழ்கின்ற நிலப்பரபு;புக்கள் தொடர்ந்தும் சிறிலங்காவுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பினால், அது சிக்கல் மிகுந்ததாக இருந்தாலும் கூட, அதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டே ஆக வேண்டும். எமது முடிவை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.

தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கம் அச்சத்தையும், தவறான எண்ணங்களையும் நீக்கி, நட்பும், சகோதரத்துவமும் மிக்க மக்களாக அவர்களை மாற்றுவதே சிறந்த மாற்றுவழியாக இருக்க முடியும். அதற்கான காலமும் சந்தர்ப்பமும் இன்னமும் இருக்கின்றதா என்பதே என்னுடைய அச்சம் மிகுந்த கேள்வியாகும்.

தமிழீழம் அமைந்தால் அவர்கள் எங்களுடன் இருக்க முடியுமா என்பதற்கான விடை அவர்களிடம் இல்லை.. அது எங்களிடமே உண்டு..

போராட்டகாலத்தில் எங்கே அவர்களின் ஆதரவு இருந்தது என்பதைப் போறுத்ததே அவர்களது உரிமைக்கான அளவுகோலும் ஆகும்.. சிங்களத்துடன் இணைந்து நின்றவர்கள் தமிழீழம் அமையும் பட்சத்தில் எங்கே சேருவது என்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கமுடியாது..

அவர்கள் ஏற்கனவே தமது முடிவை எடுத்து சிங்களத்துடன் இணைந்து நிற்கிறார்கள்.. முள்ளிவாய்க்கால் அவலத்தை ஐநாவில் இல்லையென்று சாதித்தவர்கள் முஸ்லிம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்.. அவர்கள் தம் முடிவை எடுத்துவிட்டார்கள்.. உங்களுக்கு மட்டுமே குழப்பமாக இருக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு பிரச்சனை என்று முஸ்லிம்கள் கவலை கொள்வதுண்டா ? தமிழர்கள்தான் ஓடியோடி அவர்களுக்கு உதவுகின்றார்கள் . :(

தனி நாடு தமிழர்களுக்கு கிடைச்சிட்டுது இனி மேல் முஸ்லீம்களுக்காக போராடுவோம்

:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

எனக்கு குழப்பம் இல்லை. அவர்கள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இங்கும் நீங்களோ நானோ உத்தரவு போட முடியாது.

தன்னுடைய மொழியைப் பேசுகின்ற ஒரு மக்கள் கூட்டத்தையும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும், பொருளாதார வளத்தையும் இழப்பது தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் தோல்வி.

அந்த மக்களை வென்றெடுக்க முடியாமல் போனது எமது அரசியல் வங்குரோத்துத்தனம். முஸ்லீம்கள் பற்றிய விரோத எண்ணங்களை வளர்க்கின்ற அரசியலையும், ஊடகங்களையும் ஆதரிப்பதன் ஊடாக தமிழர்கள் தமது தோல்வியை தேடிக் கொள்கிறார்கள்.

தமிழர்கள் கடந்து நூறு ஆண்டுகளாக முஸ்லீம்கள் பற்றி இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இன்றைக்கு இன்னும் மோசம் அடைந்திருக்கிறது. இது அவர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவையை இன்னும் அதிகப்படுத்துகிறது.

Link to comment
Share on other sites

ஆழமான பார்வை. நன்றி

.

அதே போல கிறிஸ்தவர்களுக்கும் தனி அலகு வேண்டும். மன்னாரை கத்தோலிக்கர்களும், மற்றும் யாழ்ப்பாண / மட்டக்களப்பு நகரப் பகுதியை மெத்தடிஷ் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பிரித்துத் தர வேண்டும்.

சைவ சமய உறவுகளின் கோரிக்கைகளைப் பற்றி, அவர்கள்தான் கருத்துக் கூறவேண்டும்.

Link to comment
Share on other sites

எனக்கு குழப்பம் இல்லை. அவர்கள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இங்கும் நீங்களோ நானோ உத்தரவு போட முடியாது.

தவறு.. அவர்கள் தம் நிலப்பரப்பை சிங்களத்துடன் இணைத்தோ, தனிநாடாகவோ கொண்டு இயங்கவேண்டியதுதான்.. இதைச் சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.. உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்..

அரசியல் ரீதியாக சிங்களத்தின்பக்கம் அவர்கள் நிற்பதை ஒத்துக்கொள்கிறீர்களா இல்லையா? பிறகெப்படி எங்களுடன் இருக்க முடியும்?

தன்னுடைய மொழியைப் பேசுகின்ற ஒரு மக்கள் கூட்டத்தையும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும், பொருளாதார வளத்தையும் இழப்பது தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் தோல்வி.

அதுசரி.. எங்கள் மொழியைப் பேசிக்கொண்டு சிங்களத்துடன் இணைந்து செயற்படுவது எந்த வகையில் சேர்த்தி..? இதற்கென ஒரு சிறப்புச்சொல் உண்டு.. ஆனால் அது தற்போது தடைசெய்யப்பட்ட சொற்றொடர் ஆகும்.. :D

அந்த மக்களை வென்றெடுக்க முடியாமல் போனது எமது அரசியல் வங்குரோத்துத்தனம். முஸ்லீம்கள் பற்றிய விரோத எண்ணங்களை வளர்க்கின்ற அரசியலையும், ஊடகங்களையும் ஆதரிப்பதன் ஊடாக தமிழர்கள் தமது தோல்வியை தேடிக் கொள்கிறார்கள்.

அவர்களின் அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளாதது வேதனை.. பலமுள்ளவர் பக்கம் என் அரசியல் என்பது அவர்களது அரசியல்.. நீங்கள் என்னதான் அரவணைத்தாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை.

தமிழர்கள் கடந்து நூறு ஆண்டுகளாக முஸ்லீம்கள் பற்றி இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இன்றைக்கு இன்னும் மோசம் அடைந்திருக்கிறது. இது அவர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவையை இன்னும் அதிகப்படுத்துகிறது.

தமிழர்களுக்கு எந்தக்காலத்தில் பலம் இருந்திருக்கிறது எதையாவது செய்வதற்கு? பலமென்பது ஆயுத பலமல்ல.. அரச பரிபாலனம்.. சிங்களவன் வைத்திருக்கிறான். அதனால் அங்கே ஒட்டிக்கொண்டுள்ளார்கள்.

நாளை தமிழர்களுக்கு ஒரு தேசம் விடியுமாயின், இவர்களது அரசியலும் மாறும் என்பதை விளங்கிக் கொண்டுள்ளேன்.. ஆனால் அந்த மாற்றத்தை வரவேற்பது நல்லதல்ல..

இன்று அவர்கள் மாறிக் காண்பிக்கட்டும்.. எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்

நாம் யார்?

எமக்கு ஏதாவது பிரச்சினைகள் உண்டா?

அதற்கு தீர்வு என்ன?

அதற்கு பின்னர்தான்

பக்கத்து அப்துல்லாவுக்கு என்ன பிரச்சினை?

அவன் எனக்கு ஏன் வணக்கம் சொல்வதில்லை?

அது பற்றி ஏன் அவர் என்னுடன் பேசாமல் இருக்கிறார்?

அவர் என்னுடன் பேசவேண்டுமென்றால் எதை எதை நான் அவருக்கு விட்டுக்கொடுக்கணும்?

அடிபட்டாலும் குத்துப்பட்டாலும் அடுத்தவீட்டு வீரசிங்கவுடன் எப்படி சிரித்து சிரித்து பழகி மகிழ்கிறார்?

என்பதெல்லாம்??????

வந்திட்டினம்

ஏதோ நாங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வது போல்???

தலைவர் எத்தனை முறை கூப்பிட்டார்?

எத்தனை வி;டுக்கொடுப்புக்களைச்செய்தார்?

எத்தனை ஒப்பந்தங்களைளப்போட்டார்???????????

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம்களை விட ஏனைய மாகாணங்களில் அதிக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.அத்தோடு அவர்களுக்கு தமிழர்களுடன் சேர்ந்து வாழ விருப்பமும் இல்லை. சிங்களவர்கள் அடித்தாலும் அவர்கள் நல்லவர்கள் என்கிறார்கள்.தமிழர்கள் அடித்தால் தமிழர்கள் கிராமத்தையே இல்லாமல் செய்து விடுகிறார்கள்.

அவர்களுக்கு என சரியான தலைமை இல்லை.அவர்களுக்கு என்ன தேவை என்று சொல்ல கூட அவர்களுக்கு சரியான தலைமை இல்லை.அவர்களுக்கான தனி அலகோ,மாகாண சுயாட்சியோ எதுவோ சிங்களவர்களுடன் தான் என்பது நடைமுறை சாத்தியமானது.

அவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தமிழகளுடன் இணைய வேண்டுமென்பதில்லை.

Link to comment
Share on other sites

ஆழமான பார்வை. நன்றி

.

அதே போல கிறிஸ்தவர்களுக்கும் தனி அலகு வேண்டும். மன்னாரை கத்தோலிக்கர்களும், மற்றும் யாழ்ப்பாண / மட்டக்களப்பு நகரப் பகுதியை மெத்தடிஷ் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பிரித்துத் தர வேண்டும்.

சைவ சமய உறவுகளின் கோரிக்கைகளைப் பற்றி, அவர்கள்தான் கருத்துக் கூறவேண்டும்.

:D

அப்படி பார்த்தால் சைவ சமயத்தவர் எங்களுக்கும் தனிநாடு வேணும் தப்பிலி அண்ணா. ஆனால் கிடைத்த பிறகு நாங்களும் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்திருப்போம். ஏனென்றால் எங்கள தலைவன் ஒன்று. அவர் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் நாம் ஒற்றுமையாக உள்ளோம். :)

தனி நாடு தமிழர்களுக்கு கிடைச்சிட்டுது இனி மேல் முஸ்லீம்களுக்காக போராடுவோம்

:lol: :lol:

தன்னுடைய மொழியைப் பேசுகின்ற ஒரு மக்கள் கூட்டத்தையும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும், பொருளாதார வளத்தையும் இழப்பது தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் தோல்வி.

இன்று இவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் எம்மொழியை மறந்து சிங்களத்தை தான் பேசுகிறார்கள். அதாவது பெற்றோர் தமிழ் பேசும் முஸ்லிம், பிள்ளைகள் சிங்களம் பேசும் முஸ்லிம்.

அந்த மக்களை வென்றெடுக்க முடியாமல் போனது எமது அரசியல் வங்குரோத்துத்தனம். முஸ்லீம்கள் பற்றிய விரோத எண்ணங்களை வளர்க்கின்ற அரசியலையும், ஊடகங்களையும் ஆதரிப்பதன் ஊடாக தமிழர்கள் தமது தோல்வியை தேடிக் கொள்கிறார்கள்.

தமிழர்கள் கடந்து நூறு ஆண்டுகளாக முஸ்லீம்கள் பற்றி இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இன்றைக்கு இன்னும் மோசம் அடைந்திருக்கிறது. இது அவர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவையை இன்னும் அதிகப்படுத்துகிறது.

தமிழர்களுடன் பிரச்சினையை வளர்த்துக்கொள்வதற்கு மூலகாரணமாக அமைந்தது முஸ்லிம்களின் செயற்பாடுகள் தான். ஆனால் அதன் பின்னும் தலைவர் அவர்களை எம்முடன் சேர்க்கும் பணியை மேற்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் தான் எமக்கு விரோதமாக நடக்கிறார்கள்.

எம்மக்களாவது வார்த்தையால் மட்டும் தான் எம் விரோதம் பற்றி கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வல்லுறவு, மக்களை அடித்தல், காட்டிக்கொடுத்தல் போன்று செயல்முறை மூலம் தம் விரோதத்தை இன்னும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இலங்கைத் தேசியத்தில் தமிழினம் பாதுகாப்பாக உணரவில்லை. அது தனித் தேசியமாக உருவாவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசியத்தில் உள்ள தனித்துவம் மிக்க சமூகமான முஸ்லீம்கள் அங்கே தம்மை பாதுகாப்பாக உணரவில்லை. அவர்கள் அதற்காக தனி அலகு போன்ற ஏற்பாடுகளை கோருகின்றார்கள்.

தமிழர்களுக்கு தனிநாடு கிடைக்க வேண்டுமென்று தமிழர்கள் போராடுகிறார்கள். அத்தேசியத்தில் முஸ்லிம்களும் இருக்க வேண்டுமென்றால் எமது போராட்டத்தில் அவர்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும். அவர்கள் பங்களிப்பு எமக்காக இல்லாமல் சிங்களவர்களுக்காக உள்ள போது அவர்களை எப்படி தமிழ் தேசியத்தில் உள்ள தனித்துவம் மிக்க சமூகம் என்று கூறுவது? அவர்கள் எப்படி தமக்கான தனி அலகை எம்மிடம் கேட்க முடியும்? சிங்களவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வளவு நாள் (ஆயுத போராட்ட காலத்தில்) தான் எம்முடன் சேராமல் கிழக்கில் எம்மக்களை காட்டிக்கொடுத்தார்கள். (ஒரு சிலர் இணைந்திருந்தால் அவர்களை குற்றம் சாட்டவில்லை). இனி எம் போராட்டத்தில் உயிரைகொடுக்கும் படி யாரும் கேட்க மாட்டார்கள். இப்பொழுது நடப்பது அகிம்சை வழி போராட்டம். இனியாவது தமது பிழைகளை உணர்ந்து சிங்களவர்களை கைவிட்டு தமிழர்களுக்காக குரல் கொடுப்பார்களா? கொடுப்பார்கள் என்றால் தமிழ் முஸ்லிம் சமூகம் இணைந்தே இருக்கும். ஆனால் இப்பொழுது சிங்களவர்களுக்கு ஆதரவளித்து விட்டு தமிழீழம் கிடைத்த பின் தமக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டால் முடிவு அவர்கள் கையில் இல்லை.

எமக்கே இன்னும் நாடு கிடைக்கவில்லை. முதலில் எமக்கு நாடு கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.

Link to comment
Share on other sites

மூஞ்சூறு தான் போக வழியைக்காணவில்லை, துடைப்பங்கட்டையையும் தூக்கிகொண்டு போனது என்பதுபோல் உள்ளது.

யதார்த்தத்தில் பார்க்கும்போது காலங்காலமாக முஸ்லீம்களில் நிலைப்பாடு என்ன என்றால், தமிழர்களுக்கு தனி அலகு என்றால் தமக்கும் தனி அலகு வேண்டும், தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழச்சம்மதம் என்றால் தமக்கும் ஐக்கிய இலங்கையே போதும் என்பதாகும்.

அதாவது, முஸ்லீம்களின் தூரநோக்கு அரசியல் தமிழர்கள் சார்ந்தநிலையில் தமிழருக்கு போட்டியானதான ஒன்றாக உள்ளதொழிய பெருன்பான்மை இனமான சிங்களவரின் தான்தோன்றித்தனமான போக்குபற்றி அலட்டிக்கொள்ளாமல் மெத்தனமாக உள்ளது.

அடிப்படையில் சிறீ லங்காவில் பிரச்சனை தோன்றியதன் பிரதான காரணம் மொழிப்பிரச்சனையே. ஒன்று தமிழ், மற்றையது சிங்களம். முக்கியமாக தனிச்சிங்கள மொழி அமுலாக்கமே ஐக்கிய இலங்கையை கூறுபோட்டது. ஆனால், மூஸ்லீம்களுக்கு மொழி எந்தக்காலத்திலும் ஒரு பிரச்சனையாக அமையவில்லை.

அடிப்படையில் குறிப்பாக மொழியின் பின்னாலேயே பிரச்சனைகள் தோன்றின, தோன்றுகின்றன. தமிழருக்கு தமிழர் தாயகம் வேண்டும் என்றால் அங்கு பிரதான மொழியாக தமிழ் உள்ளது. இதேபோல் சிங்களருக்கு சிங்களம் உள்ளது.

சபேசனின் அணுகுமுறை முற்றிலும் தவறானது. தப்பிலி சொல்வதுபோல் சபேசனின் அணுகுமுறைப்படி பார்த்தால் கிறீஸ்தவர்களுக்கும் தனி அலகு வேண்டும் என்பதே நியாயமானது. தவிர, பிரதேசவாத அடிப்படையில் உதாரணமாக வலிகாமம், வடமாராட்சி, தென்மாராட்சி, தீவுப்பகுதி, வன்னிப்பகுதி என வெவ்வேறு தனி அலகுகள் உருவாக்கப்படவேண்டிய தேவையும் ஏற்படும். ஏனென்றால் ஒவ்வொரு பிரதேச மக்களின் வாழ்வியல், பழக்கவழக்கங்கள், மற்றும் இன்னோரன்ன அம்சங்களில் வேறுபாடுகள் உள்ளன.

Link to comment
Share on other sites

முஸ்லீம்களையும் கிறிஸ்தவத் தமிழர்களையும் ஒப்பிடுவது அர்த்தமற்றது. வரலாறு, பண்பாடு, அரசியல் இவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு பேசுகின்ற குழந்தைத்தனமான வாதம்.

இங்கே தெளிவாக ஒன்றைக் குறிப்பிடுகின்றேன். ஒரு மக்கள் கூட்டம் இன்னொரு மக்கள் கூட்டத்தால் மேலாதிக்கம் செய்யப்படுதாகவும், தமது உரிமைகள் பறிபோவதாகும், பாதுகாப்பு அற்ற சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் உணர்கின்ற நிலை வருகின்ற போது, அந்த மக்கள் கூட்டத்திற்கு தன்னை பாதுகாப்பதற்கான அலகுகளை (தனி நாடு, தனி மாகாணம், தனி அலகு) உருவாக்கும் தேவை உருவாகும்.

சைவத் தமிழர்கள் தொடர்ச்சியாக கிறிஸ்தவத் தமிழர்களுடன் நட்புறவை வரலாற்றுரீதியாக பேணி வந்திருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களுடன் அரச உத்தியோகத்தில் வீற்றிருந்த சைவ வேளாளத் தமிழர்கள் கிறிஸ்தவ சமயத்துடன் மிகவும் அனுசரணையாக நடந்து கொண்டார்கள். பின்பு போராட்ட காலத்திலும கிறிஸ்தவ மதகுருமாருடனும் சிறந்த உறவை போராட்டத் தலைமை பேணி வந்தது.

ஆனால் துன்பியல் நிகழ்வாக முஸ்லீம்களுடம் தமிழர்கள் அப்படியான ஒரு உறவை பேணவில்லை. விரோதமான நிலைப்பாட்டையே எடுத்திருந்தார்கள்

Link to comment
Share on other sites

கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை முஸ்லீம்களும் தமிழர்கள் மீது வைக்கின்றார்கள். இவற்றை மாறி மாறி சொல்லிக் கொண்டிருப்பது இன்றைக்கு பிரயோசனம் அற்றது.

சிங்களவர்கள் தமிழர்கள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழர்கள் முஸ்லீம்கள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படியே மாறி மாறி எதிர்பார்க்க வேண்டியதுதான்.

யதார்த்தத்தை உணர்ந்து அதற்கு ஊடாக எப்படி பயணிப்பது என்பதை தமிழினம் சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.