Jump to content

நான் வே**.. அவள்..??!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

facebook-front_1796837b1.jpg

மாலை வேளை

மூளை ஓய்வுக்காய்..

முகம் கழுவிக் குந்துகிறேன்

முகநூலின் முன் பக்கம்..!

முக்கி எழுகிறது

முகநூல் "சாட்" யன்னல்...

Hi

ASL pls...

முகமறியா ஒன்று

கதை கேட்க..

நானும் ஏதோ பதில் போட

தொடர்கிறது...

Foto pls...

பதிலுக்கு நான்..

L8R

podi vesai....

திட்டிக் கொண்டே

மறுமுனை

யன்னல் மூடுகிறது..!

யோசிச்சுப் பார்க்கிறேன்..

புரோபைலில்

நடிகையின் முகம் காட்டும்..

என் முகவரிக்கே

இக் கதி என்றால்

உண்மையில்..

அவள்

கணக்கிற்கு...???!

:icon_idea: :)

Link to comment
Share on other sites

Foto pls...

பதிலுக்கு நான்..

L8R

podi vesai....

யோசிச்சுப் பார்க்கிறேன்..

புரோபைலில்

நடிகையின் முகம் காட்டும்..

என் முகவரிக்கே

இக் கதி என்றால்

உண்மையில்..

அவள்

கணக்கிற்கு...???!

உங்கள் பெரும்பாலான கவிதைகள், கவிதை தலைப்புக்கள் ஒரு மாதிரி தான் இருக்கு.... :unsure::icon_mrgreen: :icon_mrgreen:

அந்த முகம் தெரியாத நபருடனான உரையாடல் மூலம் அது ஒரு ஆண் என்று ஏன் சிந்திக்கவில்லை? :D(உங்களை பெண் என்று நினைத்து கதைத்திருக்கிறார்)...

ஆனால் அவரை இறுதியிலும் அவள் என்று போட்டிருக்கிறீர்கள். அதுதான் கேட்கிறேன். :)

பொதுவாக அனைவரும் முகம் தெரியாத நபர்களுடன் chat பண்ணுவதை தவிர்ப்பது நல்லது... :) யாழ் கள உறவுகளுடன் அதிலும் ஓரளவு நம்பிக்கைக்குரியவர்களுடன் chat பண்ணலாம். அவர்களும் தவறாக கதைப்பின் அவர்களுடனான chat ஐ கைவிடலாம். :wub:

ஆனால் வெளி நபர்களுடன் chat பண்ணாமல் இருப்பது தான் நல்லது... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தலைப்பு இது நீங்கள் கூட தற்பொழுது வியாபார ரீதியான தலைப்புகள் வைக்கத் தொடங்கி விட்டீர்கள்...சகிக்க முடியாத மாற்றம்...மெம் மேலும் இப்படிப்பட்ட தலைப்புகளை வைத்து கவிதை,கதை,கட்டுரை எழுத வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கண்டவங்கள் எல்லாம் வந்து சாட்டிங் பண்ண ஏன் கதவைத் திறந்து வச்சிருக்கிறீங்கள்? :rolleyes: காற்று வரட்டும் என்றா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெரும்பாலான கவிதைகள், கவிதை தலைப்புக்கள் ஒரு மாதிரி தான் இருக்கு.... :unsure:

அந்த முகம் தெரியாத நபருடனான உரையாடல் மூலம் அது ஒரு ஆண் என்று ஏன் சிந்திக்கவில்லை? :D(உங்களை பெண் என்று நினைத்து கதைத்திருக்கிறார்)...

ஆனால் அவரை இறுதியிலும் அவள் என்று போட்டிருக்கிறீர்கள். அதுதான் கேட்கிறேன்.

பொதுவாக அனைவரும் முகம் தெரியாத நபர்களுடன் chat பண்ணுவதை தவிர்ப்பது நல்லது... யாழ் கள உறவுகளுடன் அதிலும் ஓரளவு நம்பிக்கைக்குரியவர்களுடன் chat பண்ணலாம். அவர்களும் தவறாக கதைப்பின் அவர்களுடனான chat ஐ கைவிடலாம். :wub:

ஆனால் வெளி நபர்களுடன் chat பண்ணாமல் இருப்பது தான் நல்லது... :)

இணையச் சமூகத்தில் கண்மூடித்தனமாக உலாவும் நடந்து கொள்ளும் ஜீவன்களை எப்படியான தலைப்பில் விபரிக்க முடியும்.. சகோதரி..!

ஒரு படத்தைப் பார்த்தவுடன்.. அதுவும் பெண்ணென்று பார்த்தவுடன்.. அவளோடு.. வலிந்து கதைக்க முண்டியடிக்கும் கூட்டங்கள் மத்தியில்.. உண்மையான அந்தப் படங்களுக்குரிய பெண்கள் சிக்கிக் கொண்டால் என்னாகும்.. என்பதை தான்.. "அவள்" என்பதால் விளித்துள்ளேன்..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தலைப்பு இது நீங்கள் கூட தற்பொழுது வியாபார ரீதியான தலைப்புகள் வைக்கத் தொடங்கி விட்டீர்கள்...சகிக்க முடியாத மாற்றம்...மெம் மேலும் இப்படிப்பட்ட தலைப்புகளை வைத்து கவிதை,கதை,கட்டுரை எழுத வாழ்த்துக்கள்

அக்கா.. சமூகத்தில் இப்படி அநாகரிகமாக நடக்கின்ற ஆக்கள் உள்ள போது.. அதை ஏன் நாகரிகமாக ஒளிச்சு வைச்சு அவங்க தப்புப் பண்ண அனுமதிக்கனும். அதைவிட.. அவங்கட அநாகரிகத்தை இனங்காட்டி மக்களை உசார்ப்படுத்துவது மேல் அல்லவா..!! மற்றும்படி.. இந்தத் தலைப்பில் வேறு எந்த வியாபார எண்ணமோ.. விளம்பர எண்ணமோ இல்லை..! :icon_idea:

கண்டவங்கள் எல்லாம் வந்து சாட்டிங் பண்ண ஏன் கதவைத் திறந்து வச்சிருக்கிறீங்கள்? :rolleyes: காற்று வரட்டும் என்றா? :icon_idea:

கதவு திறந்திருக்கு என்பதற்காக கண்ட வீட்டுக்குள்ளும் நுழையனும் என்றது என்ன இணையத்தின் எழுதாத சட்டமா...! உள்ள நுழையவிட்ட படியால் தான்.. என்ன பண்ணினம் என்று அறிய முடியுது..! இல்ல இதனை எல்லாம் எப்படி அறிஞ்சு கொள்ள முடியும். எப்படி தான்.. இந்த ஜென்மங்களை எல்லாம்.. இந்தப் பொண்ணுங்க சமாளிக்கிறாய்களோ..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

ஒரு படத்தைப் பார்த்தவுடன்.. அதுவும் பெண்ணென்று பார்த்தவுடன்.. அவளோடு.. வலிந்து கதைக்க முண்டியடிக்கும் கூட்டங்கள் மத்தியில்.. உண்மையான அந்தப் படங்களுக்குரிய பெண்கள் சிக்கிக் கொண்டால் என்னாகும்.. என்பதை தான்.. "அவள்" என்பதால் விளித்துள்ளேன்..! :):lol:

ஆம். தவறு என்னுடையது தான். நீங்கள் சுட்டிக்காட்டிய பின்னர் தான் கவனித்தேன். மீண்டும் வாசிக்கும் போது புரிந்தது... நன்றி உங்கள் விளக்கத்திற்கு. :)

கண்டவங்கள் எல்லாம் வந்து சாட்டிங் பண்ண ஏன் கதவைத் திறந்து வச்சிருக்கிறீங்கள்? :rolleyes: காற்று வரட்டும் என்றா? :icon_idea:

:lol::D:lol:

chat பண்ணினாலும் தப்பான நோக்கத்தில் தான் கதைக்க வேண்டுமேன்றில்லையே... :) ஆனால் இப்பொழுது சமூகத்தில் ஒருபகுதியினர் அவ்வாறு அவ்வாறு மாறிவிட்டார்கள். :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு பெண்களை வம்புக்கு இழுக்கிறது என்றால் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணா சற்றில் ஆண் என்று தெரியாத மற்றும் ஒரு ஆணிடம் அம்பிட்டவர் என்றால் என்னால் அதை முற்று முழுதாக நம்பிக் கொள்ள முடியாது இருக்கிறது..நெடுக் அண்ணாவுக்கு தெரியாத விசயங்களையா நாங்கள் புதுசா சொல்லப் போறம்..நல்ல வேளை நான் பல காலமாக சற் பக்கமே வாறது இல்லை..யாராவது கதைக்க வேணும் என்று கேட்டால் கூட மெயில் மூலம் என்ன கதைக்க வேணும் என்று முதலில் அறியத் தந்தால் மட்டுமே அதன் பின் என் கதை தொடரும்..ஓரளவுக்கு இப்படியான பிரச்சனைகளை தவிர்க்க வேணும் என்றால் எங்கள் அனுமதி இன்றி எங்கள் முகநூலில் விரும்பத்தகாத படங்களையோ இல்லை இன்ன பிற விசயங்களை போஸ்ற் பண்ணுவதை உடனடியாகவே நீக்குவதில் இருந்து அனைத்தையும் கொஞ்சம் கடுமையாக்கி விட்டோம் என்றால் நன்று...பெரியவர்கள் வாயிலயே இலகுவில் வராத,பேச விரும்பாத வார்த்தைகளை எல்லாம் தற்போது மிக,மிக இளம் வயதினர் பேசிக் கொள்கிறார்கள்...அவர்களின் உருவங்களை தேடிப் பார்த்தால் ரொம்ப சிரிப்பாக இருக்கும் ஆனால் பேசும் வார்த்தைகள் அசிங்கமாக இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் ASL கேட்டா chatting தொடங்குகின்றார்கள்? ^_^

ஒரு காலத்தில் IRC (Internet Relay Chat) இல் மணிக்கணக்காக நேரத்தைச் செலவழித்த trolls தற்போது இணையத்தின் சகல அதல பாதாளத்திலும் குடியிருக்கின்றார்கள்!

main-troll.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் ASL கேட்டா chatting தொடங்குகின்றார்கள்? ^_^

ஒரு காலத்தில் IRC (Internet Relay Chat) இல் மணிக்கணக்காக நேரத்தைச் செலவழித்த trolls தற்போது இணையத்தின் சகல அதல பாதாளத்திலும் குடியிருக்கின்றார்கள்!

main-troll.jpg

கிருபண்ணா.. இவ்வாறான செயல்களின் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஈடுபடுவதோடு.. ஆண்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் பெண்களின் செயற்பாடுகளும்.. இணைய உலகில்.. குறிப்பாக.. சமூக வலையில்.. பேஸ் புக்.. எம் எஸ் என்னில் அதிகரித்து வருகிறது. அதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு பெண்களை வம்புக்கு இழுக்கிறது என்றால் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி?

உங்களுக்கு எப்பவுமே அருண்ட கண் தானா..??! இதில் இணையத்தில்.. பெண்களின் இடர் தொடர்பில்.. தானே கருப்பொருளை உருவகித்து தந்திருக்கிறேன். இதில் எங்கே வம்புக்கு இழுத்தேன் என்று சொல்ல முடியுமா அக்கா..??! :):lol:

Link to comment
Share on other sites

முகம் தெரியாமல் முக்காடு போட்டு கதைக்கையில் ,

'சாட்' யன்னலில் முகம் காட்டியது ஆணாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ.. பெண்ணோ.. ஒரு நாகரிகமான மனித சமூகத்தை பிரதிநிதிப்படுத்த இணையம் தடையா..??! என்பது தான் கேள்வியே தப்பிலி..???! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணா சற்றில் ஆண் என்று தெரியாத மற்றும் ஒரு ஆணிடம் அம்பிட்டவர் என்றால் என்னால் அதை முற்று முழுதாக நம்பிக் கொள்ள முடியாது இருக்கிறது..நெடுக் அண்ணாவுக்கு தெரியாத விசயங்களையா நாங்கள் புதுசா சொல்லப் போறம்..நல்ல வேளை நான் பல காலமாக சற் பக்கமே வாறது இல்லை..யாராவது கதைக்க வேணும் என்று கேட்டால் கூட மெயில் மூலம் என்ன கதைக்க வேணும் என்று முதலில் அறியத் தந்தால் மட்டுமே அதன் பின் என் கதை தொடரும்..ஓரளவுக்கு இப்படியான பிரச்சனைகளை தவிர்க்க வேணும் என்றால் எங்கள் அனுமதி இன்றி எங்கள் முகநூலில் விரும்பத்தகாத படங்களையோ இல்லை இன்ன பிற விசயங்களை போஸ்ற் பண்ணுவதை உடனடியாகவே நீக்குவதில் இருந்து அனைத்தையும் கொஞ்சம் கடுமையாக்கி விட்டோம் என்றால் நன்று...பெரியவர்கள் வாயிலயே இலகுவில் வராத,பேச விரும்பாத வார்த்தைகளை எல்லாம் தற்போது மிக,மிக இளம் வயதினர் பேசிக் கொள்கிறார்கள்...அவர்களின் உருவங்களை தேடிப் பார்த்தால் ரொம்ப சிரிப்பாக இருக்கும் ஆனால் பேசும் வார்த்தைகள் அசிங்கமாக இருக்கும்..

என்னவோ சொல்லுங்க.. நாட்டில நடக்கிறதை தான் நாங்க சொல்லுறம். அதற்காக இணைய உலகில் எல்லோரும் அநாகரிமானவர்கள் என்பதல்ல பொருள். குறிப்பிட்ட ஒரு தொகை அநாகரிகமாக நடந்து கொள்ள சந்தர்ப்பத்தைப் பாவிக்கிறது என்பதையே நாங்க சொல்ல வாறம் தங்கச்சி.

மற்றும்படி.. இந்த நிலையை சமாளிக்கிறதுக்கு நீங்க சொன்ன ஐடியாக்கள்.. உதவலாம். சிலர் அதைக் கூட தங்களின் அநாகரிகத்துக்குப் பயன்படுத்தலாம்..! இணையத்தில் இப்படித்தான் நடக்கனும் என்று யாரையும் கட்டுப்படுத்த முடியாது இது தான் சேவ் என்றும் இல்லை. இவற்றை உணரச் செய்து சுயகட்டுப்பாட்டை வளர்த்துத் தான் அங்கு பிள்ளைகளை.. வளர்ந்தோரை.. பெற்றோர் கூட உலவ விட வேண்டும். பெற்றோரும் உலவ வேண்டும். இன்றேல்.. விளைவு விபரீதமாகக் கூட இருக்கலாம். :):icon_idea:

Link to comment
Share on other sites

உங்களுக்கு எப்பவுமே அருண்ட கண் தானா..??! இதில் இணையத்தில்.. பெண்களின் இடர் தொடர்பில்.. தானே கருப்பொருளை உருவகித்து தந்திருக்கிறேன். இதில் எங்கே வம்புக்கு இழுத்தேன் என்று சொல்ல முடியுமா அக்கா..??! :):lol:

உங்கள் தலைப்பிலும் "அவள்" என்று போட்டிருக்கிறீர்கள்... உங்கள் கூற்றுப்படி உங்களையே அப்படி கூறிய அந்த ஆண் உண்மையில் அந்த படத்திற்குரிய பெண் சிக்கினால் அவரை எப்படி கூறியிருப்பார் என்று நினைத்து போட்டிருக்கலாம்.

ஆனால் ஒரு ஆணின் தவறை சுட்டிக்காட்டி எழுதிய கவிதையின் தலைப்பில் "அவள்" என்பதற்கு பதிலாக "அவன் செயல்" என்பதை போட்டால் இக்குழப்பம் தீரும் என்று நான் நினைக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தலைப்பிலும் "அவள்" என்று போட்டிருக்கிறீர்கள்... உங்கள் கூற்றுப்படி உங்களையே அப்படி கூறிய அந்த ஆண் உண்மையில் அந்த படத்திற்குரிய பெண் சிக்கினால் அவரை எப்படி கூறியிருப்பார் என்று நினைத்து போட்டிருக்கலாம்.

ஆனால் ஒரு ஆணின் தவறை சுட்டிக்காட்டி எழுதிய கவிதையின் தலைப்பில் "அவள்" என்பதற்கு பதிலாக "அவன் செயல்" என்பதை போட்டால் இக்குழப்பம் தீரும் என்று நான் நினைக்கிறேன். :)

"நான்" இருந்த இடத்தில் ஒரு பெண் இருந்து.. அவள் அப்பாவியாக இருந்திருந்தால்.. நிலை என்னவாக இருக்கும்.. என்பதுதான்.. தலைப்பின் வினவலே..!

இது இணைய உலகில் அநாகரிகம் செய்யத் தயங்காது அலைபவர்களை நோக்கி அல்ல.. அவர்களிடம் அப்பாவிகள் சிக்காமல் இருக்க எழுதப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தான் தலைப்பை அப்படி இட்டேன்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

"நான்" இருந்த இடத்தில் ஒரு பெண் இருந்து.. அவள் அப்பாவியாக இருந்திருந்தால்.. நிலை என்னவாக இருக்கும்.. என்பதுதான்.. தலைப்பின் வினவலே..!

ஆம். அது எனக்கு புரிகிறது. :) பலருக்கு இன்னும் புரியாததால் அப்படி கூறியிருந்தேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது போக.. யாழ் கவிதாயினிக்கே.. தலைப்புப் புரியல்ல என்பது தான்.. ஆச்சரியமா இருக்குது..??! :lol::D

Link to comment
Share on other sites

முகப்புத்தகம்

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும்

அனுமதி வழங்கும் புத்தகம்! ^_^

முகப்புத்தகமா அல்லது முகப்புத்தகத்திலுள்ள chat ஆ? :unsure:

ஏனென்றால் ஒருவரின் கொள்கை பிடித்திருந்தால் அவர்களை add பண்ணுவதில் தவறில்லை. ஆனால் chat பண்ணுவது தான் தவறு. :icon_mrgreen:

என் முகப்புத்தகத்தில் நான் நண்பராக இணைத்துள்ள எவரையும் ஒருநாளும் நான் சந்தித்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் நான் அவர்களின் ரசிகையாக இருப்பதால் இணைத்துள்ளேன். எனவே சில பிரபலங்களை நண்பராக இணைப்பதற்கும் facebook தான் வழி.

அவர்கள் போக்கு தவறாக சென்றால் block பண்ண வழியிருக்கிறது. :D(பிறகும் விட்டிட்டிருந்தால் எம்மில் தான் பிழை :icon_mrgreen::D)

அதற்காக கண்டவர்களையும் add பண்ண கூடாது. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகம்

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும்

அனுமதி வழங்கும் புத்தகம்! ^_^

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் முகப் புத்தகம் என்ற நிலை இல்லை. முகப் புத்தகம்.. சமூக வலை அமைப்பிற்கு என்றும் அமைக்கப்பட்ட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதற்காகவே தான் முகப்புத்தகம் வைத்துள்ளேன். முகம் தெரிந்தவர்களோடு.. போனில் கதைத்துக் கொண்டாலே.. பிரச்சனை வராதே..!

சமூக வலை என்பது.. எங்கள் கருத்தை.. நிகழ்வுகளை மற்றைய சூழலில் வாழும் சமூக அங்கத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதேவேளை.. அவர்களின் விடயங்களையும் பொதுவான நட்புறவோடு.. அறிந்து கொள்ளுதல். இது உலக அறிதலை விரிவாக்கும்.

இப்படியான சமூக வலையில்.. உள்நுழையும்.. கிருமிகளாகவே தான்.. இந்த அநாகரிக விசமிகள் உள்ளனர். அவர்களை அவர்களின் அணுகுமுறைகள் தொடர்பில் இனங்காட்டி.. மக்களை விழிப்புணர்வு படுத்துவதன் மூலம் சமூக வலை.. விசமிகள் குறைக்கப்பட்ட ஒரு காத்திரமான வலைப்பின்னலாக பேணப்பட வாய்ப்பு உருவாகும் இல்லையா..??!

ஆனால் ஒன்று விசமிகளை பூரணமாக கட்டுப்படுத்த முடியாது. காரணம்.. விசமிகள்.. சந்தர்ப்பதிற்கு ஏற்ப தோன்றக் கூடியவர்கள்..! அந்த வகையில் சமூக வலையில் விழிப்புணர்வு என்பது எப்போதும் அவசியம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி நெடுக்கு

ஆனால் இதை வேறு ஒருவர் பதிந்திருந்தால்

இந்தளவுக்கு கருத்துக்களில் காரம் வந்திருக்காது என்பது எனது கருத்து.

அந்தளவுக்கு பெண்கள் பற்றிய கருத்துக்களில் நெடுக்கு தாழ்வடைந்துள்ளது தெரிகிறது.

ஆனாலும் அவரது கருத்துக்கள் சமூக நன்மை கருதி எழுதப்படுவதால் சிலவற்றை சகிக்க முடியாவிட்டாலும் ஏற்கவேண்டியுள்ளது.

எனக்கும் அம்மம்மா

அம்மா

அக்கா

தங்கை

மனைவி

மருமக்ககள்

பிள்ளைகள்......... என்று இருப்பதால் அதற்கு இருக்கும் வரம்புக்குள்தான் நானும் நிற்கமுடியும். எழுதமுடியும்.

அந்த வகையில் நெடுக்கு வெளியில் நிற்கிறார். அவ்வளவுதான்.

அது அவரது சுதந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையதளங்களில், 'சாட்' என்ற ஆபத்தான வலையில், சில விபத்துக்களும், அதிர்ச்சிகளும் அடிக்கடி ஏற்படுவதை கேள்விப்பட்டுள்ளேன்...

அவற்றில் கீழே இணைத்துள்ள காணொளி மாதிரியும் அமைய சந்தர்ப்பங்கள் உண்டு..! :icon_idea:

கவனம்!...கவனம்!! :lol:

.

Link to comment
Share on other sites

முகப்புத்தகமா அல்லது முகப்புத்தகத்திலுள்ள chat ஆ? :unsure:

ஏனென்றால் ஒருவரின் கொள்கை பிடித்திருந்தால் அவர்களை add பண்ணுவதில் தவறில்லை. ஆனால் chat பண்ணுவது தான் தவறு. :icon_mrgreen:

என் முகப்புத்தகத்தில் நான் நண்பராக இணைத்துள்ள எவரையும் ஒருநாளும் நான் சந்தித்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் நான் அவர்களின் ரசிகையாக இருப்பதால் இணைத்துள்ளேன். எனவே சில பிரபலங்களை நண்பராக இணைப்பதற்கும் facebook தான் வழி.

அவர்கள் போக்கு தவறாக சென்றால் block பண்ண வழியிருக்கிறது. :D(பிறகும் விட்டிட்டிருந்தால் எம்மில் தான் பிழை :icon_mrgreen::D)

அதற்காக கண்டவர்களையும் add பண்ண கூடாது. :lol: :lol:

முகப்புத்தகத்தைத் தான் குறிப்பிட்டேன்...

சில பிரபல்யங்களின் பக்கங்களை like பண்ணுவது வேறு, அவர்களை add பண்ணுவது வேறு...

நீங்கள் online ல் இருப்பது உங்கள் (நீங்கள் யாரைத் தெரிவு செய்கிறீர்களோ அவர்களை மட்டும் தவிர) நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் முகப்புத்தகத்தில் option உள்ளது என நினைக்கிறேன்.

எனது இயற்பெயரிலையே முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பதாலும், தனிப்பட்ட தரவுகள், குடும்ப/ நண்பர்களின் படங்கள் இருப்பதாலும் முகம் தெரிந்தவர்களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். இது எனது பாதுகாப்பை மட்டுமன்றி அவர்களின் பாதுகாப்பையும் ஓரளவு உறுதிப் படுத்தும்.

பொதுவான ஒரு புனைபெயரில் கணக்குவைத்துக் கொண்டு பிரபல்யங்களை/ முகம் தெரியாதவர்களைச் சேர்ப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் முகப் புத்தகம் என்ற நிலை இல்லை. முகப் புத்தகம்.. சமூக வலை அமைப்பிற்கு என்றும் அமைக்கப்பட்ட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதற்காகவே தான் முகப்புத்தகம் வைத்துள்ளேன். முகம் தெரிந்தவர்களோடு.. போனில் கதைத்துக் கொண்டாலே.. பிரச்சனை வராதே..!

சமூக வலை என்பது.. எங்கள் கருத்தை.. நிகழ்வுகளை மற்றைய சூழலில் வாழும் சமூக அங்கத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதேவேளை.. அவர்களின் விடயங்களையும் பொதுவான நட்புறவோடு.. அறிந்து கொள்ளுதல். இது உலக அறிதலை விரிவாக்கும்.

இப்படியான சமூக வலையில்.. உள்நுழையும்.. கிருமிகளாகவே தான்.. இந்த அநாகரிக விசமிகள் உள்ளனர். அவர்களை அவர்களின் அணுகுமுறைகள் தொடர்பில் இனங்காட்டி.. மக்களை விழிப்புணர்வு படுத்துவதன் மூலம் சமூக வலை.. விசமிகள் குறைக்கப்பட்ட ஒரு காத்திரமான வலைப்பின்னலாக பேணப்பட வாய்ப்பு உருவாகும் இல்லையா..??!

ஆனால் ஒன்று விசமிகளை பூரணமாக கட்டுப்படுத்த முடியாது. காரணம்.. விசமிகள்.. சந்தர்ப்பதிற்கு ஏற்ப தோன்றக் கூடியவர்கள்..! அந்த வகையில் சமூக வலையில் விழிப்புணர்வு என்பது எப்போதும் அவசியம்..! :):icon_idea:

அதிகமானோர் தொலைபேசியில் பேசுவதை விட முகப்புத்தகம் மூலமே தமது நண்பர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக கடந்த வருடம் நடந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது...

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு குழுவாக சேர்ந்து பரப்புரைகளை செய்பவர்கள் விசக்கிருமிகளாக இருக்க வாய்ப்புக்கள் குறைவென்றே சொல்லலாம்.. முகம் தெரியாத தனிப்பட்டவர்களைத் தான் இங்கே நான் குறிப்பிட்டேன், அவர்களின் உள்நோக்கம் நாம் நினைப்பது போல் இருக்க முடியாதல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.