Jump to content

தெரிந்தவர்கள் கூறுங்கள்


Recommended Posts

தமிழ் ஈழத்தில் மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளதா? அல்லது இல்லையா? என்பதை படத்தை வடிவாக பார்த்து கூறுங்கள்.......

photo113jr.jpg

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply

தமிழீழப்பிரதேசத்தில் ஹெல்மேட் அணிய வேண்டும் எனும் கட்டுப்பாடு இல்லை. உங்கள் கேள்வியின் தொனி புரிகிறது.

அந்த கட்டுபாடு எனக்கு தெரிந்தவரை இன்னும் விதிக்கப்படவில்லை.வேகக்கட்டுபாடு மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இலங்கை அரசகட்டுபாட்டில் இருக்கும் யாழ்ப்பாண பகுதிகளில் கடந்த 3/4 வருடங்களுக்கு முன் கட்டயம் என கட்டுப்பாடு கொண்டுவந்தார்கள்.

Link to comment
Share on other sites

தவறாக நினைக்கவேண்டாம்...... எனக்கு உண்மை தெரியாது...... நான் முதல இந்த படத்தை பார்த்தவுடன் மிகவும் ஆச்சர்யபட்டேன்.... காரணம் தமிழீழ பொலிஸார் மிகவும் கடமை கண்னியம் கட்டுப்பாடோடு நடப்பவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்... அதனால் தான் எனக்கு இந்த படத்தை பார்த்ததும் ஒன்றுமே புரியாமல் போய்விட்டது...

Link to comment
Share on other sites

ஒருவேளை ஏற்கனவே அவர்களுக்கு தண்டனை பணத்தை அறவிட்டுவிட்டார்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

உங்க கருத்துப்படி அங்கே அந்த சட்டம் நடைமுறையில் உள்ளதா?

Link to comment
Share on other sites

வானம்பாடி, தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது இன்னமும் ஒரு போக்குவரத்து விதியாக வரவில்லை.

அங்கு காவல்துறையினால் போக்குவரத்து சம்பந்தமாக அமுலுக்கு கொண்டுவரப்பட்ட பட இருக்கும் விதிகள் அனைத்தும் அங்குள்ள களயதார்த்தத்தை கவனத்தில் எடுத்து தேவை கருதி அறிமுகப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படுகிறது.

எவை விபத்துக்களுக்கு உயிரழப்புகள் அங்கவீனங்களிற்கு அதிக காரணங்களாக இருக்கோ அவைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு விதிகளாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது படிப்படியாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம்பாடி வேடிக்கையான விடயம் என்னவென்றால் அரச கட்டுப்பாட்டு பகுதியில் கெல்மட் போட்டால் ஆமிக்காரன் அடிக்கிறான்.கெல்மட் போடாவிட்டால் பொலிசுக்காரன் தண்டம் அறவிடுகிறான்.புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் விரைவில் கட்டாயமாக்கப்படும்.அதற்தாக வேண்டியே தமிழீழ பொலிஸ் கெல்மட் இல்லாமல் மோட்டார்சைக்கிள் பாவிப்பதில்லை.

Link to comment
Share on other sites

சட்டம் இருக்குமெண்டால் பொடிப்பிள்ளையள் உப்பிடி

காவல்துறைக்கு பின்;னாலை

விசில் அடிச்சுக்கொண்டு போவினமை.

உந்தச்சேட்டையெல்லாம் எங்கடைநாட்டுப்பொலிசிட்டை

வாய்க்காது கண்டியளோ.

Link to comment
Share on other sites

சட்டம் இருக்குமெண்டால் பொடிப்பிள்ளையள் உப்பிடி

காவல்துறைக்கு பின்;னாலை

விசில் அடிச்சுக்கொண்டு போவினமை.

உந்தச்சேட்டையெல்லாம் எங்கடைநாட்டுப்பொலிசிட்டை

வாய்க்காது கண்டியளோ.

அப்படி சொல்லுங்கள் ஊர் குருவியாரே. ஊர்குருவி சொன்னால் ஊரே சொன்ன மாதிரியாம் நீங்கள் சொன்னாலும் அப்படித்தானே :?:

Link to comment
Share on other sites

சட்டத்தை மீறாதவரை பொலிசுக்கு பின்னுக்கு என்ன முன்னுக்கு விசிலடிக்கிறதுக்கும் பொதுமக்களுக்கு உரிமையிருக்கு. அந்த அடிப்படைச் சுதந்திரத்தைத்தான் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

மாமுல் கேக்கிற மாமா என்று விலகி ஓடாமல் நம்பிக்கையோடு அணுகி உதவிபெறக் கூடிய காவல்துறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி சொல்லுங்கள் ஊர் குருவியாரே. ஊர்குருவி சொன்னால் ஊரே சொன்ன மாதிரியாம் நீங்கள் சொன்னாலும் அப்படித்தானே :?:

அப்ப ஒறிஜினல் குருவியெங்கை ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகக் கட்டுப்பாடே 40km/h என்றிருக்கும் போது தலைக்கு பாதுகாப்பிற்கு கெல்மட் அணிய வேண்டிய தேவை ஏற்படாது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா நினைத்துக் கொண்டிராமல் வாகனச் சட்ட விதிகளை எழுதுங்கள்.

முன்னாலோ நம்பர் இல்லாமல் காவல்

பின்னாலோ ஹெல்மட் இல்லாமல் சுற்றல்

தயவு செய்து வாக்காலத்து வாங்காமல் பிழைகளை ஏற்று திருந்த பழகுங்கள்.

Link to comment
Share on other sites

கனடாவின் கியுபெக் மாநிலத்தில் முன்பக்கம் கட்டாயமாக இலக்கத்தகடு பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. அதைப்போன்றதோ :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவல்ல காரணம் அவர்கள் எதுவும் செய்யலாம் எப்படியும் ஓடலாம் என்பதே காரணம்.

Link to comment
Share on other sites

ராஜ் சொன்னது:

'அதுவல்ல காரணம் அவர்கள் எதுவும் செய்யலாம் எப்படியும் ஓடலாம் என்பதே காரணம்.'

பொதுவான விடயங்களை ....... சுட்டி காட்டி பிழை கண்டு பிடிப்பதே வாழ்கையாய் போச்சு நண்பா..........

ஒரு வேளை உணவு இல்லாமலே போர் செய்த மண் அது - உலக நாட்டு ரேஞ்ல - வீதி போக்குவரத்து முறைகள் ஏன் இங்க இல்லைனு கேட்க வாறீங்க ......... டமாசு.........

போற போக்கில ......... ஜப்பான் கார் தயாரிக்குது .........

ஏன் யாழ்ப்பாணம் தயாரிக்கல ........... என்னும் கேப்பிங்க போல!

உங்களூக்கு கிடைத்த ..........வசதிகளையும் வாய்ப்புகளையும் வைத்து - வன்னியை குற்றம் சொல்ல நினைக்காதீங்க ............

100 ஆண்டுகளூக்கு முன்னம் அபிவிருத்தி அடைந்த .......... நீங்க குந்தி இருந்து கொண்டு ........... சவுண்ட் விடுற ..........

ரொம்ப வசதி படைத்த நாடுகளிலையே ........ இப்பவும் பெல்ற் போடாமல் கார் ஓடுறவங்க நிறைய!

உங்களுக்கு நல்ல வாழ்வு இருந்தா ........... ஜஸ்ற் ........... என்யோய் ஃகைஸ்..........

அதுக்காக .............. அடிப்படை உயிர் வாழுதலுக்கே .........

நிறைய போராடி......... இப்பவும் ஒரு முடிவும் இல்லாம.......... கொஞ்சம் .......... மூச்சு விடுற எங்க இனத்திடம்... உங்க குறுக்கால போன அறிவு ஜீவிதம்.. வேணாமே!

சகல மனிதர்களுக்கும் உள்ள உரிமைகளோட வாழவே செத்து பிழைக்கிற அந்த மக்களிடம்........... சர்வதேச- வீதி-விதி முறைகள் ஏன் இல்லைனு - மண்டையுக்க ஒண்ணும் இல்லாத கேள்வி கேக்காதீங்க..........

செய்வாங்க .......... படிப்படியா!

8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானம் பாடி, அங்கே இந்த சட்டம் இருக்கிறது. தமிழீழ வீதி ஒழுங்கு முறையில் ஈருளிகளின் ஓட்டுனர்கள் மற்றும் பின்னால் இருப்பவர்கள் இருவரும் தலைகவசம் அணிய வேண்டும். ஆனால் அந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதற்கான காரணம் தமிழீழ பிரதேசத்தில் ஈருளி பாவனையாளர்கள் அதிகம். அதேநேரம் ஆரம்ப காலத்தில் ஈருளிகளை வாங்கியவர்களிடம் தலைகவசங்கள் இ;ல்லை. அதற்க்கு காரணம் சிறி லங்கா அரசின் தடை. இப்போது தடை நீக்கப்பட்டாலும் புதிதாய் வாங்குவது என்பது ஜீவாதாரத்துக்கே போராடும் மக்களுக்கு பெரும் செலவாக இருக்கும் எனவே குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின் இச் சட்டம் நடைமுறைக்கு வரும் என நம்புவோம். அதே நேரம் காவல் துறையினரும், தமிழீழ விடுதலைப்புலிகளும் தலைகவசம் அணிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் நானும் வன்னிக்க இருந்து தான் வந்தனான். பாடசாலையில் படிக்கும் போது 1993 காலப் பகுதியில் காவல்துறையினரால் வீதி விதிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டன நடைமுறைப்படுத்தப்பட்டன எல்லோருக்கும் இலக்கத்தகடுகள் த1 த2 என்று வழங்கப்பட்டன(பொது மக்களுக்கு).

எனது கேள்வி எப்படி இவர்கள் இலக்கத்தடின்றி பிரயாணம் செய்யலாம்?

Link to comment
Share on other sites

UKraj,

சில கிராமங்களில் மருத்துவம்,குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளே, இன்னும் ஒழுங்காக கிடைக்குதில்லை.

உங்களுக்கு தலைகவசம் இல்லாதது தான் ஒருகுறை.

தமிழீழம் இன்னமும் ஒரு போராட்டபுூமி காலக்கிரமத்தில் ஒவ்வொன்றாக அமுல்படுத்துவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடத்தெரியாதவள் மேடைகோணல் என்றாளாம்..

இலக்கத்தகடு இல்லாதமைக்கு என்ன காரணம்.?

Link to comment
Share on other sites

Raj.

இன்னும் அதற்கான அவசியம் வந்துவிடவில்லை என்று நினைக்கின்றேன்.

"எப்பவும் கேள்வி கேட்பது ரொம்பச்சுலபம்"

Link to comment
Share on other sites

புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு நிரந்தர இலக்கம் பெறும்வரை தற்காலிக இலக்கத்தை பாவிக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் இல்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப என்னத்திற்கு த1 த2 என்று இலக்கத்தகடு வழங்கினார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய வாகனம் வாங்கி பெயர் எழுத மட்டும் தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.