Jump to content

கல்லூரிக் கீதங்கள்


Recommended Posts

நீங்கள் படித்த பாடசாலையின் கீதங்களை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி.

எனது கல்லூரிக் கீதம்

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

பாரிலொளி வீச வேண்டும் தங்கக் கதிரிலே

மங்கிடாதன்னொளி பொங்க என்றும் வாழவே

செங்கழல் பொன்மலர் கொண்டு போற்றினோமே.

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்!

எங்கள் கலைக்கோயில் கார்மேல் பாத்திமா

உந்தன் ஒளிபரப்பி ஈழமணிநாடு மிளிரவே

எந்த நாளும் இன்புடனே இயங்குவாய்...

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்!

தூய்மை நேர்மை என்பன உன் கொள்கையே

தாயாம் ஈழம் நிறைவுறத் தன்னிகரில் சேவையே

நேயமாக ஆற்றி நீடு வாழ்கவே...

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்!

Link to comment
Share on other sites

கல்லூரிக் கீதம்

இராகம் - தர்பார்

தாளம் - ரூபகம்

பல்லவி

வாழ்க இந்துக் கல்லூரி வாழ்கவே - வாழ்கவே

வாழ்க இந்துக் கல்லூரி வாழ்கவே - வாழ்கவே

அனுபல்லவி

வாழ்க நம்திரு வாழ்க நம் கலை

நாளும் நன்மையும் உண்மையும் ஓங்கவே

(வாழ்கவே)

சரணம்

அறமும் அன்பும் அருளும் தழைக்க

ஆன்மநேய உணர்வு செழிக்க

உறவு கனிந்தே உயர்வு நிலைக்க

உலகில் புகழும் அறிவும் தரிக்க

(வாழ்கவே)

எஸ். எஸ். இரத்தினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக் கல்லூரி.

jhc_prayer_hall.jpg

வாழிய யாழ் நகர் இந்துக் கல்லூரி

வையகம் புகழ்ந்திட என்றும்

இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும்

இந்து மதத்தவர் உள்ளம்

இலங்கிடும் ஒரு பெரும் கலையகம் இதுவே

இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்

கலைபயில் கழகமும் இதுவே - பல

கலைமலி கழகமும் இதுவே - தமிழர்

தலைநிமிர் கழகமும் இதுவே!

எவ்விட மேகினும் எத்துயர் நேரினும்

எம்மன்னை நின்னலம் மறவோம்

என்றுமே என்றுமே என்றும்

இன்புற வாழிய நன்றே

இறைவன தருள்கொடு நன்றே!

ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம்

அவைபயில் கழகமும் இதுவே!

ஓங்கு நல்லறிஞர்கள் உவப்பொடு காத்திடும்

ஒருபெருங் கழகமும் இதுவே!

ஒளிர்மிகு கழகமும் இதுவே!

உயர்வுறு கழகமும் இதுவே!

உயிரன கழகமும் இதுவே!

தமிழரெம் வாழ்வினில் தாயென மிளிரும்

தனிப் பெருங் கலையகம் வாழ்க!

வாழ்க! வாழ்க! வாழ்க

தன்னியர் இன்றியே நீடு

தரணியில் வாழிய நீடு

normal_JaffnaHinduCollege_2009_16.jpg

Link to comment
Share on other sites

நான் 3 பாடசாலைகளில் படித்திருக்கிறேன்.

அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது கொக்குவில் இந்துவின் பாடசாலைக் கீதம் தான். கிடைத்தால் இணைக்கிறேன். அல்லது கல்லூரித் தோழர்கள் யாராவது இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம்

அவைபயில் கழகமும் இதுவே!

ஆரியத்தையும், சிங்களத்தையும், மென்மை எழுத்துக்களால் , காட்டிய விதம் அழகு!

ஆயினும், இங்கு ஆரியம் எனக்குறிப்பிடுவது 'சமஸ்கிருத' மொழியே!

தமிழும், சமஸ்கிருதமும், தங்களுக்குள் பல வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன!

இலங்கையின்,இன்னொரு சிங்களத் தேசியப் பாடசாலை. தமிழையும் தங்கள் கீதத்தில் இணைக்கும் வரை. சிங்களம், கல்லூரிக் கீதத்தில் இருப்பதில் எனக்கு 'உடன்பாடு' இல்லை!

நான் 3 பாடசாலைகளில் படித்திருக்கிறேன்.

அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது கொக்குவில் இந்துவின் பாடசாலைக் கீதம் தான். கிடைத்தால் இணைக்கிறேன். அல்லது கல்லூரித் தோழர்கள் யாராவது இணையுங்கள்.

உடையார் வந்து இணைப்பார்!

Link to comment
Share on other sites

ஆரியத்தையும், சிங்களத்தையும், மென்மை எழுத்துக்களால் , காட்டிய விதம் அழகு!

நான் ஒருத்தன் சிவப்பு கலர் அடிச்சிருக்கிறன்.... அது உங்கட கண்ணுக்குத் தெரியேல்ல...

ம்ம்ம்...

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி தமிழ்சிறி. நானும் இணைக்க நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருத்தன் சிவப்பு கலர் அடிச்சிருக்கிறன்.... அது உங்கட கண்ணுக்குத் தெரியேல்ல...

ம்ம்ம்...

அதுவும் அழகு!

அடுத்ததாகக் கருத்தெழுதலாமென்று இருந்தேன்! :D

Link to comment
Share on other sites

நான் ஒருத்தன் சிவப்பு கலர் அடிச்சிருக்கிறன்.... அது உங்கட கண்ணுக்குத் தெரியேல்ல...

ம்ம்ம்...

அழகு தான்.

பாத்திமாக் கல்லூரி எந்த இடத்தில் இருக்கிறது? அறியாமைக்கு வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலர் பாடசாலை

சாதாரணதரம்

உயர்தரம்

என மூன்று பாடசாலைகள்

இதில் கிடைப்பதை இணைக்கின்றேன்

Link to comment
Share on other sites

அழகு தான்.

பாத்திமாக் கல்லூரி எந்த இடத்தில் இருக்கிறது? அறியாமைக்கு வருந்துகிறேன்.

http://en.wikipedia.org/wiki/Carmel_Fatima_College

http://www.carmelfatimacollege.org

Link to comment
Share on other sites

நன்றி சனியன்.

இணையத் தளமும் நன்றாக வடிவமைத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியத்தையும், சிங்களத்தையும், மென்மை எழுத்துக்களால் , காட்டிய விதம் அழகு!

ஆயினும், இங்கு ஆரியம் எனக்குறிப்பிடுவது 'சமஸ்கிருத' மொழியே!

தமிழும், சமஸ்கிருதமும், தங்களுக்குள் பல வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன!

இலங்கையின்,இன்னொரு சிங்களத் தேசியப் பாடசாலை. தமிழையும் தங்கள் கீதத்தில் இணைக்கும் வரை. சிங்களம், கல்லூரிக் கீதத்தில் இருப்பதில் எனக்கு 'உடன்பாடு' இல்லை!

சிங்களவனும், தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொள்வதால்...

எனக்கு ஆரியம் என்ற சொல்லைக் கேட்டாலே... அலர்ஜி.

நாங்கள் படிக்கும் காலத்தில்... ஆரியம், சிங்களம் என்னும் சொற்கள் இருக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு தான்... வலிந்து திணிக்கப் பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசமே தேனார் அமுதே, சிவபுரனே!

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே!

.......

மூலம்: சிவபுராணம்

சிங்களவன் தன்னை ஆரியன் என்கிறான்!

எங்கேயோ உதைக்கின்றது! :o

புத்தன் கூட ஆரியன் அல்ல! அவர் ஒரு சத்திரியர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் கூட ஆரியன் அல்ல! அவர் ஒரு சத்திரியர்!

ஐயோ.... நான் தமிழன் .தேமிளு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் இந்துக்கல்லூரி

_____________________________________________

வாழ்க நம் நாடு வாழ்க நம் பள்ளி

வாழிய வாழிய வே

அருந்தமிழ் மொழியும் ஆங்கில கலையும்

ஆரிய மொழியுடன் வளரும்

விருந்தென போற்றும் விஞ்ஞானமும் இங்கே

வியனுற வளர்ந்தினி தோங்கும்

மானிப்பாய் இந்துக்ககல்லூரி வாழ

மாணவர் ஆவன செய்வோம்

கனவிலும் மறந்திடக் கருதோம்

வான மளந்த தமிழ் மொழி போல‌

வாழிய வழமுடனென்றும்

கலையே பெறவே

உழைப்போம் நிலையிது பெற உழைப்போம்

Link to comment
Share on other sites

காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி

Alma Mater

Let's sing this tuneful Anthem heartily

Sing it loud with heart sincere

True to Christ, our School and Country

Onwards we shall march secure

Give the utmost for the highest

Let that always be our aim

Strive to gain from life the fullest

For that real fame

Rally round our Alma Mater

Loyal, honest, faithful & kind

Men of truth and men of honour

Strong in body, spirit and in mind

Give the utmost for the highest

Let that always be our aim

Strive to gain from life the fullest

For that real fame

தமிழில் பாடியதில்லை.

Link to comment
Share on other sites

புனித மரியாள் பெண்கள் பாடசாலைக்கீதம்

மேரீஸ் பெண் சாலையை பாடுவோம் வாரீர்

தாய் மரி சேவையை போற்றுவோம் வாரீர்

மேரீஸ் பெண் சாலையை பாடுவோம் வாரீர்

அருள் மிகு தாய் மரி பெயர் புனை கூடம்

அதிபர் ஆசாராயர் அன்பு செய் மாடம்

அயராத இவர் சேவை எமக்கன்பு பாடம் (2)

அணைவரும் சமமாக வாழ்கின்ற கோட்டம்

காவலூர் கன்னியர் களங்கரை ஒளியே

கல்வியை கனிவாக காட்டருள் வழியே

கடமை செய் கனிகளை பொழியும் நல்மரமே (2)

கண்ணியம் நெஞ்சத்தில் நிறைந்திடும் அன்னையே

மேரீஸ் பெண் சாலையை பாடுவோம் வாரீர்

தாய் மரி சேவையை போற்றுவோம் வாரீர்

மேரீஸ் பெண் சாலையை பாடுவோம் வாரீர்

Link to comment
Share on other sites

  • 3 months later...

[size=5]Good Shepherd Convent - Kotahena[/size]

[size=5]Round us the chimes of St Lucy resounding

Calling her children to join her in prayer

Fill all our hearts with pure joy abounding

And banish far from us both sorrow and care.

Whilst of our school we sing, making the echoes ring

Vaunting her glory, her status, her love

Erin and Lanka dear, joining their voices clear

Beg of their Mother kind gifts from above.[/size]

[size=5]Then God save our school where our youth grows in learning

Our youth grows in virtue, in beauty and worth

Then God bless our school where our mothers discerning

Are one with their children in sorrow and mirth.

God save us young and old, fill us with joy untold

And make His dear Mother our Mother today

Make us to Mary true, wearing her white and blue

Strong and immaculate all through life's way.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இது புலம்பெயர் நாடொன்றின் தமிழ்ப்பாடசாலையின் கீதம். நான் எழுதி மெட்டமைத்த வரிகள்.ஒரேஒரு சொல் மட்டும் தணிக்கை.

நாங்கள் நாளும் கல்வி கற்போம்

எங்கள் பள்ளிக்கூடத்தில்

தமிழை நாங்கள் தரமாய்க்கற்போம்

எங்கள் பள்ளிக்கூடத்தில்

தமிழே எங்கள் தாய்மொழி

தரணி போற்றும் தேன்மொழி

சிறுவர்கள் நாங்கள் சிறப்பாய் வாழ

சீருடன் கல்விகற்கும் தமிழ்ப்பள்ளிக்கூடம்

( நாங்கள் நாளும் )

பேரெழில் கொண்டது தமிழ்மொழி

பெருமைகள் மிக்கது தாய்மொழி

செம்மொழி என்று சிறப்புடன்கூறும்

செந்தமிழ் எங்கள் தமிழ்மொழி

( நாங்கள் நாளும் )

புலம்பெயர் தமிழர் மொழிகாக்க

போற்றிடும் கலைகள் தனைக்கற்க

..................நகரில் மேன்மையுடனே

மிளிர்வது எங்கள் தமிழ்ப்பள்ளிக்கூடம்

( நாங்கள் நாளும் )

Link to comment
Share on other sites

யாழ் பரியோவான் கல்லூரி (St.John's College)

The College Song

Decked with shady palms and trees,

Fringed with rich mahoganies,

There beneath a glowing sky,

St John’s up rears her crest on high

Chorus:

Praise St. John your Patron Saint,

And lest in deed or word you taint,

Your Alma Mater’s ancient name,

Johnians ! Always play the game.

Christian lore she gives her boys,

Ever prizing heavenly joys,

Her highest pride a noble mind,

Her Greatest joy a heart that’s kind.

(Chorus)

“In the darkness shines the light”,

Johnians! With your torches bright,

Chase the gloom of night away,

Shed thro’ the word eternal day.

(Chorus)

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை

வல்வை மகளிர் மகா வித்தியாலயம்

SAM_4503.jpg

logo.png

 

watermarked-IMG_3173-120.jpg

 

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

பொழிந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே

 

 

விஞ்ஞான கலைகள் பலவிதரன இல்லூரி

எந்நாளும் முன்னோக்கி இதமுடனே தரும்

தன்மானம் தாங்கிய தாழ்வையும் சீறி

தரத்தை நிலை நிறுத்தி உரத்தைக்கொடுக்கும் - எங்கள்

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

 

இங்கிதம் பண்புடன் பேசவைத்து

எதிரியையும் இணைக்கும் வழிவகுத்து

சங்கீத நாட்டிய கலை வளர்த்து

சமயத்தை முதற்கொண்டு சரீரத்தையும் வளர்க்கும்  - எங்கள்

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

 

மனையறம் யாவினும் தெளிய வைத்து

மாந்தரின் வாழ்வினை மகிழவைத்து

அனுதினம் பொருட்பேணி அறம் வளர்த்து

ஆக்கத்தைப் பெருக்குகின்ற ஊக்கத்தைக் கொடுக்கும் - எங்கள்

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

 

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

பொழிந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.