Jump to content

அது கெளரவம்


Recommended Posts

எண்பது தமிழனை கொன்றுவிட்டு

நான் அவனில்லை - என்றே

சிங்களன் கால் கழுவு!

குத்தரிசி சோறு வேணாம்

ஈர பலாக்கை போதுமென்றே

அலை- அலைந்து திரிந்து

அசிங்கமாய் திரி!

அப்பனையும் ஆத்தாளையும்

ஐந்து பத்திற்காய் கொல்லு!

கொன்றபின் பன்சலைக்கு சென்று

சிங்களனுடன் சேர்ந்து ப்ரீதும் ஓது!

புலியை அழித்தால் புது வாழ்வா உனக்கு?

புலி அழிந்து போகும் ஒரு நாள் வந்தால்

உன் குரல் வளையே சிங்களனுக்கு

அடுத்த இலக்கு - இதை

நம்பினால் நீ நம்பு!

தமிழீழ விடுதலை புலியை

அழிப்பதா அவன் குறி?

அட தடுமாற்றகாரா

தமிழன் தலை எடுப்பதுதாண்டா

அவன் வெறி!

மரத்தோடு மரமாய் ஒட்டி

தேவாங்கு போல தூங்கு!

செருப்புக்கு ஆசை படுறாய்

உன் கால் மெதுவாய் அறுந்துபோகுது!

கவனி- !

நாளை - நாயை கண்டால்

சிங்களன் கல்லெடுப்பானோ இல்லையோ

உன்னை கண்டால் ---

கொல்லாமல் - உறங்கவே மாட்டான்!

மகேசன் என்ற நீ - மகிந்த என்று

மாறினாலும் - தமிழன் தமிழன் தான்

அவனுக்கு- போடா - போ!

சிங்கத்தின் வால் அழைவது

ஒரு பிழைப்பா?

செண்பகத்தின் தலையாய் இரு

அது கெளரவம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பேருக்கு இது புரியப் போகின்றது. புரிந்தாலும் அவன் காட்டும் பணம் கண்ணை மறைக்குமே!!

நல்ல கவிதை நடைகள். வாழ்த்துக்கள் வர்ணன்

Link to comment
Share on other sites

மிகவும் அருமையான வரிகளைக்கொண்ட நல்ல கவிதை. வாழ்த்துக்கள் வர்ணன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை நன்றி வர்ணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் துரோகிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் நல்ல கவிதை.

சுணை இருந்தால்தானே அவர்களுக்கு இவை உறைக்க.

Link to comment
Share on other sites

ம்ம் தூயவன் ஏன் இந்த கவிதை நான் எழுதினன் எண்டு உங்களுக்கு ஓரளவு தெரியும் -

எல்லாம் அந்த உலக புகழ் அறிவாளி இம்சையால - நன்றி!

நன்றி ஸ்வீட்-

நன்றி சுஜீந்தன் - (நீங்க தேசத்தை நேசிப்பவர் என்பதை - உங்க லோகோ - சொல்லுது)

நன்றி கீதா ( ஆமா எங்க போனிங்க இவ்ளோ நாள்? களத்தில எல்லாரும் - நீண்ட இடைவெளிக்கு பிறகு - உங்கள பார்க்கிறோம்!)

நன்றி ஆசிரியர் - இவர்களை - திருத்தவே முடியாது - திருந்தவும் மாட்டார்கள் - சும்மா - கோவத்தில ஏதும் எழுதிட்டு போறதுதான்! 8)

Link to comment
Share on other sites

மீண்டும் ஒரு நிஐ கருத்தை கவிதை வடிவினில் கொண்டு வந்திருக்கிறீர்கள் வர்ணன். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம் கவியேழுதியும் இவர் திருந்த போவதில்லை. வர்னன். உங்கள் கவித்திறன் வீச்சு சிறப்பு. ஆனாலும் எருமையில் பெய்யும் மழையேன இவர் திருந்த போவதில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்பரே

தமிழனுக்கு தலைவலியே இப்படிப்பட்ட துரோகிகள்தானே.

எதிரியை விட இவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்

துரோகிகளுக்காய் நீங்கள் எழுதிய வரிகள்

மிகவும் அருமை.

உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து தாருங்கள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் கவிவரிகள் அருமையாக உள்ளது நண்பா.....

"அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்"

தொடர்ந்து எழுதுங்கள் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களின் நன்பர்களாவது பார்த்து விட்டு அவர்களிடம் சொல்லட்டும்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.