Jump to content

குமுதம்.com


Recommended Posts

வணக்கம் நண்பர்களே,

நலமாக இருக்கிறீர்களா!

குமுதம் டாட் காம் (குமுதம்.com) இணையப்பக்கங்கள் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

1978 ஆம் ஆண்டிலிருந்து உங்களில் பலரோடு நான் உரையாடி இருக்கிறேன். என் தந்தையார் திரு.எம்.ஏ. சுவாமி மணிலா நகரில் ஆரம்பித்த "ரேடியோ வெரித்தாஸ்" என்ற வெரித்தாஸ் வானொலியில் 1978 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் செய்திகள், அரசியல் விமர்சனங்கள், பேட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக உங்களில் பலரோடு உறவாடும் வாய்ப்பு பெற்றேன். சிறப்பாக, ஈழத்திலிருந்து இன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள், இளம் பிள்ளைகளாக, ஈழமண்ணிலிருந்து எங்களுக்கு (என் தந்தையாருக்கும், எனக்கும், என் சகோதரி ப்ளோரா ராணிக்கும்) எழுதிய இலட்சக்கணக்கான கடிதங்களை இன்றும் மறக்கவில்லை. உங்களில் பலரை ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சந்தித்த போது எல்லாம் வெரித்தாஸ் நாட்களை எண்ணி, மனதில் அசைபோட்டு அளவளாவியது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

1993 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன்முறையாக சாட்டிலைட் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. "ரபிபெர்னார்ட்" ஆக தொலைக்காட்சியில் நான் முகம்காட்டி பணியாற்றத் தொடங்கிய நேரத்தில், மிகவும் தொடக்க நிலையிலேயே என் மீது பரிவும், அன்பும் கொண்டவர்களாக தமிழக மக்கள் என்னை ஆதரித்தீர்கள். தொலைக்காட்சியில் என் முதல் நிகழ்ச்சியிலிருந்தே உங்களில் பலர் என் மீது மிகுந்த அன்பு கொண்டீர்கள்.

இப்பொழுது, தாயகத்திலிருந்து பல ஆயிரம் கல் தொலைவில் வாழும் உங்களையெல்லாம் குமுதம் இணையப்பக்கங்கள் வழியாக சந்திக்க வந்துள்ளேன்.

குமுதம் எப்பொழுதுமே தமிழர்களின் ரசனைக்கு ஏற்ற இதழாக இருந்து வந்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பிலிப்பின்ஸ் நாட்டில் குடியேறி வாழ்ந்த எங்கள் குடும்பத்தினர் "குமுதம் எப்போது வருமோ?" என்று அஞ்சல் பெட்டியை ஆவலாய் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காலம். இன்று "இணையம்" என்ற இணையற்ற தொழில் நுட்பம் வந்துவிட்டது. எப்போதும் குமுதம், எல்லோருக்கும், எங்கிருந்த போதும் குமுதம். இந்த குமுதம் இணைய இதழுக்கு நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறேன்.

இறை அருளால், எண்ணற்றோரின் உழைப்பால் வளர்ந்து நிற்கும் குமுதம் இதழின் இணையப் பக்கங்கள் வழியாக இனி ஒவ்வொரு நாளும் உங்களை சந்திப்பேன்.

குமுதம் குழுமத்தின் இதழ்கள் அனைத்தையும் கொண்டதாக இதுநாள்வரை இருந்துவரும் குமுதம்.com இனி, மேலும் கூடுதலான பல அம்சங்களைக் கொண்டிருக்கும்.

உங்கள் கணிணி இனி ஒரு தமிழ் தொலைக்காட்சித் திரையாகவும் மாறிவிடும். ஆம், தொலைக்காட்சி நிகழ்ச்சிவடிவத்தில் குமுதம்.com பல நிகழ்ச்சிகளை வழங்கப்போகிறது.

1. செய்திகள் _ தமிழக மற்றும் இந்திய செய்திகளை, சூடான விமர்சனங்களோடு நான் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வழங்குவேன். உங்களுக்கு வசதிப்படும்போதெல்லாம், நினைக்கும் நேரமெல்லாம் தாயகச் செய்திகளை கேட்டு மகிழுங்கள்.

2. உலகத் தமிழர் உரையாடல் _ உலகெங்கும் வெற்றிக்கொடிகட்டி உலாவரும் சாதனைத் தமிழர்களை நான் சந்தித்து எடுக்கும் பேட்டிகள். இந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள தமிழர் அல்லாத தலைவர்களின் பேட்டியும் உண்டு.

3. உங்கள் ஊர் செய்திகள் _ தமிழகத்தின் எந்த மாவட்டத்திலிருந்து நீங்கள் சென்றிருந்தாலும் உங்கள் மாவட்டம் பற்றிய அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களை வந்து சேரும்.

4. தமிழ் சினிமா _ தமிழ் திரை உலகம் நம்மை பரவசப்படுத்தும் மந்திர புரி. கவலைமறக்க, களிப்புற தமிழ் சினிமா என்றும் வற்றாத இன்பவெள்ளம். பல வடிவங்களில், பாடல்களாக, காட்சிகளாக, நடிகர், நடிகைகள், தொழில் நுட்பத்துறையினர் பேட்டிகளாக தமிழ் திரைஉலகம் உங்களை இணையத்தில் வரவேற்கும்.

5. ஜோதிடக்கணிப்புகள் _ வானசாஸ்த்திரம் என்பது நம் முன்னோரின் அறிவாற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. அதனை எந்த அளவு அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொள்வது என்பதையும், நாம் வருமுன்காத்து செயல்பட நம் ஜாதகங்களை கணித்து தெரியவும் புகழ்பெற்ற ஜோதிட ஆசான் ஏ.எம்.ஆர். குமுதம்.comல் நமக்கு உதவுவார்.

இப்படி தொலைக்காட்சி வடிவில் நிகழ்ச்சிகளையும், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், குமுதம் சிநேகிதி, குமுதம் ஜோதிடம், குமுதம் பக்தி, குமுதம் தீராநதி ஆகிய இதழ்களையும் இனி நீங்கள் குமுதம்.com இணையப் பக்கங்களில் பெறலாம்.

காலமும், எல்லையும் இல்லா அண்டப் பெருவெளியில் மலரும் புதுமலராக குமுதம்.com புதிய பொருளடக்கத்துடன் உங்களை நாடி வருகிறது. வாஞ்சையுடன் வரவேற்பீர்கள் என்பதில் ஐயமில்லை.

மீண்டும் சந்திப்போம்,

நன்றி, வணக்கம்,

அன்பன்,

ரபி பெர்னார்ட்

குமுதம்.com

http://www.kumudam.com/Special/dotcom.php

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.